என் மலர்
நீங்கள் தேடியது "2 பேர் மீது வழக்கு"
- ஊட்டி மத்திய போலீஸ் நிலையத்திற்கு சென்று வாலிபர் புகார் கொடுத்தார்.
- போலீசார் இளம்பெண்களை மீட்டு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்தவர் 36 வயது வாலிபர். விவசாயியான இவர் சம்பவத்தன்று மஞ்சனக்கொரையில் உள்ள தனது தோட்டத்திற்கு சென்றார்.
அப்போது அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி அருகே ஒரு டீக்கடையில் டீ குடித்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர், தான் ஒரு மசாஜ் சென்டர் நடத்தி வருவதாகவும், தன்னிடம் அழகிகள் இருப்பதாகவும், அவர்களுடன் நீங்கள் ஜாலியாக இருக்கலாம் எனவும் தெரிவித்தார்.
இதை கேட்டு அதிர்ச்சியான விவசாயி, வாலிபரை போலீசில் சிக்க வைக்க நினைத்தார். அவரிடம், தன்னிடம் பணம் இல்லை என்றும், ஏ.டி.எம்.மிற்கு சென்று எடுத்து வருவதாக கூறி விட்டு, நேராக ஊட்டி மத்திய போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் கொடுத்தார்.
இதையடுத்து போலீசார், அவர் கூறிய இடத்திற்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு 3 அழகிகள் இருந்தனர். இதையடுத்து போலீசார் அவர்களை மீட்டு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர். மேலும் பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய புரோக்கர்களான கூடலூர் நந்தட்டியை சேர்ந்த முஸ்தபா(48), கேரளா எர்ணாகுளத்தை சேர்ந்த ரோஸ்லின் (55) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
- 2 சிறுமிகளை, சிறுவன் ஒருவர் பின் தொடர்ந்து சென்றார்.
- மூதாட்டியை சிறுவன் தனது நண்பருடன் சேர்ந்து மிரட்டினார்.
கோவை,
கோவை கெம்பட்டி காலனியை சேர்ந்த 2 சிறுமிகள் அப்பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வருகின்றனர். சிறுமிகள் பள்ளிக்கு செல்லும் போது கெம்பட்டி காலனி வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்த 17 வயது சிறுவன் தினசரி பின்தொடர்ந்து சென்று தொல்லை கொடுத்து வந்தார். இது குறித்து சிறுமிகள் தனது பாட்டியிடம் கூறினர். அவர் சிறுவனை கண்டித்தார். சம்பவத்தன்று சிறுமிகள் தனது பாட்டியுடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர்.
அதிகாலை சிறுமியின் வீட்டுக்கு வந்த சிறுவன் உட்பட 2 பேர் வீட்டு காலிங் பெல்லை நிறுத்தாமல் அழுத்தி தொல்லை கொடுத்தனர். இந்த சத்தம் கேட்டு எழுந்து வந்த சிறுமியின் பாட்டியை 2 பேரும் தகாத வார்த்தைகளால் பேசி இரும்பு கம்பியை காட்டி மிரட்டி விட்டு அங்கு இருந்து சென்றனர். இது குறித்து சிறுமிகளின் பாட்டி பெரிய கடைவீதி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தாது. புகாரின் பேரில், போலீசார் மிரட்டல், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கெம்பட்டி காலனி பாளையம்தோட்டத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் மற்றும் உப்புமண்டி பகுதியை சேர்ந்த மீன் பிடி தொழிலாளி சிவக்குமார்(21) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். பின்னர் 2 பேரையும் போட்டியில் ஆஜர் படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
- வடசித்தூரில் பேக்கரி அருகே சிலர் கஞ்சா விற்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது.
- 380 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்யப்பட்டது.
கோவை
கோவை மாவட்டம் நெகமம் அருகே உள்ள வடசித்தூர் நால்ரோட்டில் உள்ள பேக்கரி அருகே சிலர் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து நெகமம் இன்ஸ்பெக்டர் சரவண பெருமாள் தலைமையிலான போலீசார் தகவல் வந்த இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு கஞ்சாவை பதுக்கி விற்னை செய்து கொண்டு இருந்த கிணத்துக்கடவு அருகே உள்ள பணப்பட்டியை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவரது மனைவி பேச்சியம்மாள் (வயது 49), குருநல்லி பாளையத்தை சேர்ந்த அம்மாச்சியப்பன் (69) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 380 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர் 2 பேரையும் கோட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
- போத்தனூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
- 2 பேரையும் பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.
குனியமுத்தூர்,
கோவை போத்தனூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போத்தனூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது மதுக்கரை-சுந்தராபுரம் ரோட்டில் 2 வாலிபர்கள் சந்தேகத்திற்கிடமாக சுற்றி திரிந்தனர். அவர்களை போலீசார் பிடித்து விசாரித்தனர்.
அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை சோதனை செய்தனர். அப்போது அவர்கள் தங்கள் இடுப்பில் கத்தியை மறைத்து வைத்திருந்தனர்.
அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து 2 பேரையும் பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.
அப்போது அவர்கள் கரும்புக்கடையை சேர்ந்த சேக் முகமது, குனியமுத்தூர் திருவள்ளுவர் நகரை சேர்ந்த நிஷாத் என்பதும் தெரியவந்தது. போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.
பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். தொடர்ந்து அவர்கள் எதற்காக கத்தியுடன் சுற்றி திரிந்தனர் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வேனை போலீசார் நிறுத்தி சோதனை நடத்தினர்.
- வேனில் அட்டைப்பெட்டி களில் டாஸ்மாக் மது பாட்டில்கள் இருந்தது தெரிய வந்தது.
பு.புளியம்படடி:
ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டியில் டாஸ்மாக் மதுபானம் கடத்தி விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் ேபாலீசார் பு.புளியம்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தீவிரமாக வாகன சோதனை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் பு.புளியம்பட்டி கோவை ேராட்டில் சந்தை ரோடு அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு ெகாண்டு இருந்தனர்.
அப்போது அந்த வழியாக ஒரு மினி சரக்கு டெம்போ வேன் வந்தது. அந்த வேனை போலீசார் நிறுத்தி சோதனை நடத்தினர்.
அப்போது அந்த சரக்கு வேனில் அட்டைப்பெட்டி களில் டாஸ்மாக் மது பாட்டில்கள் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து வேனில் வந்தவர்களிடம் ேபாலீசார் விசாரணை நடத்தினர்.
இதில் அவர்கள் ராமநாதபுரம் மாவட்டம் வஞ்சிக்கோட்டை பகுதியை சேர்ந்த காளிமுத்து (வயது 45) மற்றும் வேனை ஓட்டி வந்த கோவை மாவட்டம் அன்னூர் இந்திரா நகர் பகுதியை சேர்ந்த நாராயணன் (36) என தெரிய வந்தது. இவர்கள் மது பானங்களை அதிக விலைக்கு விற்பதற்காக கடத்தி சென்றதும் தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் வேனில் அட்டை பெட்டிகளில் இருந்த சுமார் ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் மதிப்புள்ள் 1212 மது பாட்டில்கள் மற்றும் சரக்கு வேன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
இது குறித்து பு.புளியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- பஸ் நிறுத்தம் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் கபிலா ஜாஸ்மின் ரோந்து சென்றார்.
- 1¼ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
ஊட்டி
தமிழகத்தில் கஞ்சா விற்பனை மற்றும் பயன்பாடு அதிகரித்து வந்தது. இதையடுத்து கஞ்சா, குட்கா மற்றும் தடை செய்த போதைப்பொருட்கள் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுக்குமாறு டி.ஜி.பி.சைலேந்திரபாபு உத்தரவிட்டு இருந்தார். அதன்படி போலீசார் அதிரடி சோதனை நடத்தி, நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று குன்னூர் மவுண்ட் பிளசன்ட் பஸ் நிறுத்தம் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் கபிலா ஜாஸ்மின் ரோந்து சென்றார். அப்போது அங்கு கஞ்சா விற்பனை செய்ததாக அதே பகுதியை சேர்ந்த நாகராஜ் (வயது 31) என்பவரை கைது செய்தார். அவரிடம் இருந்து 1¼ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல் தேவாலா நாடுகாணி சோதனைச்சாவடியில் கஞ்சா வைத்திருந்ததாக அனிஷ்மோன் (38) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
- பழைய குற்றவாளிகள் 2 பேர் சுற்றி கொண்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- போலீசார்அவர்கள்2 பேரையும் கைது செய்தனர்.
அந்தியூர்:
ஈரோடுமாவட்டம் அந்தியூர் பிரம்மதேசம் பாலம் அருகே பழைய குற்றவாளிகள் 2 பேர் சுற்றி கொண்டு இருப்பதாக அந்தியூர்போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர்தனபால் அந்த பகுதியில் சென்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டார்.
அப்போது அந்த வழியாக வந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரித்த போது அவர்கள் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் மேல் ஆத்தூர் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த அபு என்கிற சிவலிங்கம் (38),
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் எலந்த கோட்டை காந்தி நகரை சேர்ந்த சுரேஷ் என்கிற சுள்ளான் சுரேஷ் (34) என்பது தெரியவந்தது.
இதையடுத்து 2 பேரையும் பிடித்து விசாரித்த போது அவர்கள் மீது பல்ேவறு வழக்குகள் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார்அவர்கள்2 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்க ளிடம் இருந்து 16 பவுன் நகையை பறிமுதல் செய்தனர்.
- கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு விற்பனை செய்வதாக ரகசிய தகவல் வந்தது.
- போலீசார் 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
கோவை,
கோவை மாநகரில் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் வலி நிவாரணி மாத்திரைகளை போதை மாத்திரையாக பயன்படுத்தும் பழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதனை தடுக்க போலீசார் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். கல்லூரிகளில் போதை பழக்கம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார்கள்.
மேலும் போதை மாத்திரைகளை பதுக்கி வைத்து விற்பனை செய்யும் கும்பலை பிடிக்க தனிப்படை போலீசார் நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறி வைத்து போதை மாத்திரைகளை விற்பனை செய்யும் கும்பலை கண்காணித்து கைது செய்து நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதுவரை மாநகரில் போதை மாத்திரைகளை பதுக்கி விற்ற 35-க்கும் மேற்பட்டவர்களை கைது செய்யப்பட்டு உள்ளனர்.
ேபாலீசார் மருந்துக்கடை உரிமையாளர்களுக்கு டாக்டர்களின் பரிந்துரை கடிதம் இல்லாமல் வலி நிவாரணி மாத்திரைகளை விற்பனை செய்ய கூடாது என அறிவுறுத்தி உள்ளனர். ஆனால் சிலர் திருட்டு தனமாக வலி நிவாரணி மாத்திரைகளை சட்ட விரோதமாக வாங்கி போதைக்காக கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறி வைத்து விற்பனை செய்து வருகிறார்கள்.
இந்தநிலையில் மாநகர போலீசாருக்கு குனியமுத்தூர் சதாம் நகரில் உள்ள காலி இடத்தில் சிலர் போதை மாத்திரைகளை பதுக்கி வைத்து கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு விற்பனை செய்வதாக ரகசிய தகவல் வந்தது.
இதனையடுத்து குனியமுத்தூர் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் தகவல் வந்த இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு போதை மாத்திரைகளை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டு இருந்த டி.ஏ.எச். காலனியை சேர்ந்த ஜியாவூதீன் (வயது 31), செந்தமிழ் நகரை சேர்ந்த பெயிண்டர் சத்தியமூர்த்தி (19) ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து விற்பனைக்காக வைத்து இருந்த 27 போதை மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் போலீசார் 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
- கடந்த 9-ந் தேதி சேலம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை அவசர சிகிச்சை வார்டு முன் நிறுத்தியிருந்த மொபட்டை திருட்டு சாவி மூலம் திருட முயன்றார்.
- அப்போது கையும், களவுமாக சிக்கிய அவரை அரசு மருத்துவமனை போலீசார் கைது செய்தனர்.
சேலம்:
திருப்பூர் மாவட்டம் அவினாசி, தெக்களூரை சேர்ந்தவர் நந்தகுமார் (வயது 26). இவர், கடந்த 9-ந் தேதி சேலம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை அவசர சிகிச்சை வார்டு முன் நிறுத்தியிருந்த மொபட்டை திருட்டு சாவி மூலம் திருட முயன்றார். அப்போது கையும், களவுமாக சிக்கிய அவரை அரசு மருத்துவமனை போலீசார் கைது செய்தனர். அவர் அளித்த வாக்குமூலத்தின் படி அவரது கூட்டாளியான நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அடுத்த சடையன்பாளையத்தை சேர்ந்த ராஜா (27) என்பவரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர்.
இருவரும் சேர்ந்து தொடர்ந்து பல்வேறு இடங்களில் வாகன திருட்டில் ஈடுபட்டுள்ளது விசாரணையில் தெரியவந்தது. அதனால் இவர்கள் 2 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க போலிசார் முடிவு செய்துள்ளனர்.
- உமாமகேஸ்வரி தேர்வு எழுதுவதற்காக பிரத்யேக இடவசதி செய்து கொடுக்கப்பட்டிருந்தது.
- தமிழ் மொழிப்பாட தேர்வை உமாமகேஸ்வரி ஆர்வமுடன் எழுதினார்.
திருமங்கலம்:
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள ஓ.ஆலங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன், தொழிலாளி. இவரது மனைவி தேவி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் உமாமகேஸ்வரி (வயது 17). திருமங்கலம் அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மாடியில் காய போட்டிருந்த துணியை எடுக்க உமாமகேஸ்வரி சென்றபோது எதிர்பாராத விதமாக மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் அவரது 2 கால்கள், இடது கை, குறுக்கெலும்பு உடைந்தது. இதையடுத்து உமாமகேஸ்வரி கடந்த 2 மாதங்களாக கை, கால்களில் கட்டுபோடப்பட்டு சிகிச்சையில் இருந்து வருகிறார்.
இந்த நிலையில் பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வை முன்னிட்டு சிகிச்சையில் இருக்கும்போதே தேர்வுக்கு தயாரானார். ஆசிரியைகள் மற்றும் தோழிகளிடம் பாடத்தில் உள்ள சந்தேகங்களை கேட்டு படித்து வந்தார். அரசு பொது தேர்வை எழுதும் ஆர்வத்தில் இருந்த உமா மகேஸ்வரிக்கு பள்ளி நிர்வாகம் முழு ஒத்துழைப்பு அளிக்க முன்வந்தது. அதன்படி இன்று தேர்வு தொடங்கிய நிலையில் உமாமகேஸ்வரி வீட்டில் இருந்து வேனில் தேர்வு மையத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
உதவியாளர்கள் அவரை தேர்வு அறைக்கு தூக்கிக் கொண்டு சென்றனர். அங்கு உமாமகேஸ்வரி தேர்வு எழுதுவதற்காக பிரத்யேக இடவசதி செய்து கொடுக்கப்பட்டிருந்தது. தமிழ் மொழிப்பாட தேர்வை அவர் ஆர்வமுடன் எழுதினார். இதற்கான ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர் கர்ணன், சமூக ஆர்வலர்கள் காளீஸ்வரன், இளங்கோ ஆகியோர் செய்திருந்தனர்.
இதுகுறித்து மாணவி உமாமகேஸ்வரி கூறுகையில், "கீழே விழுந்ததில் கை, கால்களில் முறிவு ஏற்பட்ட நிலையிலும் பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வு எழுத கடந்த சில வாரங்களாக தயாராகினேன். தேர்வு எழுத எனது பெற்றோரும், பள்ளி நிர்வாகமும் முழு ஒத்துழைப்பு வழங்கியது. பிளஸ்-2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று மருத்துவம் படிப்பேன்" என நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
- தேர்வறையில் மாணவர்கள், ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
- முதல் நாளான இன்று தமிழ் தாள் தேர்வு நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து ஒரு நாள் இடைவெளியில் நாளை மறுநாள் (புதன்கிழமை) ஆங்கிலத் தேர்வு நடக்க இருக்கிறது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பள்ளி மாணவர்களாக 8 லட்சத்து 51 ஆயிரத்து 303 மாணவ-மாணவிகளும், தனித் தேர்வர்களாக 23 ஆயிரத்து 747 பேரும் என மொத்தம் 8 லட்சத்து 75 ஆயிரத்து 50 பேர் எழுதுகின்றனர். சென்னை மாநகரில் மட்டும் 405 பள்ளிகளில் இருந்து 45 ஆயிரத்து 982 மாணவ-மாணவிகள் தேர்வை எழுத உள்ளனர்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 3 ஆயிரத்து 225 இடங்களில் இதற்கான தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு அறைகளில் போதிய மின்சார வசதி, குடிநீர் வசதி, இருக்கை வசதி ஆகியவை செய்து தரப்பட்டு இருக்கின்றன. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் இந்த தேர்வை கண்காணிக்க பொறுப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு இருக்கின்றனர். அவர்கள் இந்த பணிகளை உன்னிப்பாக கவனிக்கின்றனர்.
தேர்வறையில் மாணவர்கள், ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
முதல் நாளான இன்று தமிழ் தாள் தேர்வு நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து ஒரு நாள் இடைவெளியில் நாளை மறுநாள் (புதன்கிழமை) ஆங்கிலத் தேர்வு நடக்க இருக்கிறது. தொடர்ச்சியாக ஒவ்வொரு பாடப் பிரிவினருக்கும் தேர்வு நடத்தப்பட்டு, அடுத்த மாதம் (ஏப