என் மலர்
நீங்கள் தேடியது "14 பேர் பலி"
- பெத்தாம்பாளையம் பகுதியில் 14-ந் தேதி மின் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
- கவுந்தப்பாடி துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் பெத்தாம்பாளையம் மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
ஈரோடு:
கவுந்தப்பாடி துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் பெத்தாம்பாளையம் மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
இதையொட்டி வரும் 14-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பெத்தாம்பாளையம், கொளத்தான் பாளையம், மூலக்கடை, செங்கோடன் பாளையம், பூச்சம்பதி, கே.ஜி.புதூர், திட்டுக்காடு, புலவர் பாளையம், தண்ணீர் பந்தல் பாளையம், எம்.ஜி.பாளையம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.
- 14-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த சோழா்கால நில அளவுகோல்கள் மற்றும் கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
- கோபுரத்தின் உள்புற வடசுவரில் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது.
திருச்சி:
திருச்சி மாவட்டம், சமயபுரத்துக்கு அருகிலுள்ளது கண்ணனூா். இந்த ஊரானது 14-ஆம் நூற்றாண்டளவில் ஹொய்சள அரசா்களின் தலைநகரமாக விளங்கியது.
சோழப் பேரரசா் மூன்றாம் ராஜராஜருக்கு உதவவுதற்காக, மைசூா் பகுதியிலிருந்து சோழநாட்டுக்கு வந்த ஹொய்சள அரசா்கள், 90 ஆண்டுகளுக்கும் மேலாக கண்ணனூரைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்தனா்.
இக்காலக் கட்டத்தில் உருவான பழங்கோயில்களுள் ஒன்று முக்தீசுவரம். கோபுரம், விமானம், மண்டபங்கள், சுற்றுமாளிகை என எழுச்சியுடன் இருந்தது. இக்கோயிலில் திருச்சி சீதாலட்சுமி ராமசாமி கல்லூரி வரலாற்றுத் துறைத் தலைவா் முனைவா் மு. நளினி, முசிறி அறிஞா் அண்ணா அரசுக் கலைக் கல்லூரி வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியா் முனைவா் அர. அகிலா ஆகியோா் இக்கோயிலில் ஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது 14-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த அளவுகோல்களையும், 14-18-ஆம் நூற்றாண்டில் பொறிக்கப்பட்ட புதிய கல்வெட்டுகள் சிலவற்றையும் கண்டறிந்தனா்.
இவற்றை மேலும் ஆய்வு செய்ததில், இக்கோயில் மூன்றாம் ராஜராஜா் காலத்தில் கட்டப்பட்டிருப்பதும், பொதுக்காலம் 1221-ஆம் ஆண்டு ஏப்ரல் 14-ஆம் நாள் இந்த வளாகத்தில் பொறிக்கப்பட்ட அந்த மன்னிரின் 6-ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு என்பதும் தெரியவந்துள்ளது. இக் கோயில் இறைவனை கழுகிறை நாயனாா் என்றழைப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆய்வில் கண்டறியப்பட்ட 3 அளவுகோல்களுள் 87 செ.மீ. அளவினதாக இரு கூட்டல் குறிகளுக்கு இடையில் விமானத்தில் மேற்குப் பகுதியில் பதிவாகியுள்ளது. இது கட்டுமானத்துக்கு சிற்பிகள் பயன்படுத்திய தச்சக்கோல் ஆகும்.
முக்தீசுவரத்துக்கு அருகிலுள்ள போசளீசுவரம் கோயிலிலும் ஆய்வு மேற்கொண்டதில், கோபுரத்தின் உள்புற வடசுவரில் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது. இதில், நல்லதம்பி மகன் காவுடை நயினான் என பொறிக்கப்பட்டிருப்பது, கோயில் திருப்பணியில் பங்கேற்றவரின் பெயராக இருக்கக் கூடும் என்று ஆரராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
- தாராபுரம் சாலையில் உள்ள தனியார் உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சி பெற்று வருகிறார்.
- 150 கிலோ எடையுள்ள பளுதூக்கி தன்னுடைய சாதனையை தானே முறியடித்துள்ளார்.
திருப்பூர்:
திருப்பூரைச் சேர்ந்த 14 வயது மாணவர் ஆதித்யா தனியார் பள்ளியில் பயின்று வருகிறார். உடற்பயிற்சியின் மீது அதிக ஆர்வம் கொண்ட அவர் தாராபுரம் சாலையில் உள்ள தனியார் உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சி பெற்று வருகிறார் .
இந்நிலையில் பளுதூக்குதலில் ஏற்கனவே கோவையைச் சேர்ந்த மாணவர் ஒருவர் 135 கிலோ பளு தூக்கி நோபல் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சாதனை நிகழ்த்தியுள்ள நிலையில் அதனை முறியடிக்கும் வகையில் 140 கிலோ பளு தூக்கி அதனை நோபல் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சாதனைக்கு அனுப்பி உள்ளார் .அது அங்கீகாரம் பெற்று இன்று கோவையில் நடைபெறும் விழாவில் அங்கீகார சான்றிதழ் பெற உள்ளார்.
இந்நிலையில் தன்னுடைய 140 கிலோ சாதனையை முறியடிக்கும் வகையில் இன்று 150 கிலோ எடையுள்ள பளுதூக்கி தன்னுடைய சாதனையை தானே முறியடிதுள்ளார். இதனையும் உலக சாதனை அங்கீகாரம் பெற அனுப்பி இருப்பதாக தெரிவித்துள்ளார்.
திருச்சூர் கல்யாண் நகைக்கடையில் இருந்து கோவைக்கு கடந்த 7-ந் தேதி காரில் கொண்டு வந்த ரூ.1 கோடி மதிப்புள்ள நகைகளை நவக்கரை அருகே வழிமறித்து ஒரு கும்பல் கொள்ளையடித்து சென்றது.
இந்த வழக்கு தொடர்பாக வேலூரை சேர்ந்த ஜெயபிரகாஷ், தமிழ்செல்வன் ஆகிய 2 பேர் சென்னை கோர்ட்டில் சரணடைந்தனர். அவர்களை காவலில் எடுத்து விசாரித்த போது கொள்ளை கும்பல் பற்றிய முழு தகவல்கள்கள் தெரிய வந்தது.
அதன்பேரில் திருச்சூரை சேர்ந்த ரெனூப்(வயது 34), கண்ணன்(38), எர்ணாகுளத்தை சேர்ந்த ஹபீப்(41), பத்தினம்திட்டாவை சேர்ந்த விபின் சங்கீத்(28) இடுக்கி ரின்சாத் சித்திக் (24) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதில் ரெனூப் நகைக்கடையில் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். அவரது நடவடிக்கைகள் சரியில்லாததால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேலையை விட்டு நிறுத்தியதாக கூறப்படுகிறது.
இவருக்கு கடையில் இருந்து நகைகள் வெளியே கொண்டு செல்லப்படும் அனைத்து தகவல்களும் தெரியும். வேலை பறிபோன ஆத்திரத்தில் அவர் தனது நண்பர் ஹபீப்பிடம் நகைகளை கொள்ளையடிக்கும் திட்டத்தை கூறி உள்ளார்.ஹபீப் தனது நண்பரான ஸ்ரீபெரும்புதூரை சேர்ந்த பைரோஸ்(23) என்பவரின் உதவியை நாடினார்.
அவர் சென்னை பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த சாதிக் உசேன்(25), வேலூரை சேர்ந்த ரிஸ்வான் செரிப்(27), ஸ்ரீபெரும்புதூர் ராஜசேகரன் (33), சென்னை புளியந்தோப்பு அத்திக் பாஷா(25), பெங்களூரை சேர்ந்த மெகபூப்பாஷா (26), சென்னையை சேர்ந்த அப்துல் ரஹிம்(26) சையது ரஹிம், மற்றொரு பைரோஸ் மற்றும் சிலருடன் சேர்ந்து இந்த கொள்ளை திட்டத்தை அரங்கேற்றியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து பைரோஸ் உள்பட 9 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் அனைவரும் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்கள்.
கைதான பைரோசுக்கு செம்மரக்கட்டை கடத்தல் கும்பலுடன் தொடர்பு உள்ளது. கொள்ளையடித்த நகைகளில் பெரும்பகுதியை இவர் தனது அண்ணன் அகமது சலீம், தாய் சமா ஆகியோரிடம் கொடுத்துள்ளார். அந்த நகைகளுடன் அகமது சலீம், சமா ஆகியோர் திருப்பதியில் சந்தேகத்திற்கிடமாக சுற்றிய போது அங்குள்ள போலீசாரிடம் சிக்கிக் கொண்டார்.
தற்போது ஆந்திர சிறையில் இருக்கும் இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்கவும், அவர்களிடம் இருந்து கொள்ளை நகைகளை மீட்கவும் நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
நகை கடை கொள்ளையர்களை பிடித்த டி.எஸ்.பி. வேல்முருகன், இன்ஸ்பெக்டர் தூய மணி தலைமையிலான தனிப்படையினரை ஐ.ஜி. பெரியய்யா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் ஆகியோர் பாராட்டினார்கள். #tamilnews
