என் மலர்
நீங்கள் தேடியது "10ம் வகுப்பு மாணவி"
- 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று பணம் வைத்து சூதாடியது தெரியவந்தது.
- போலீசார் அந்த கும்பலை சுற்றி வளைத்து பிடித்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே உள்ள ஒங்கன்புரம் மற்றும் மரூர் பகுதியில் 10 பேர் கொண்ட 2 குழுவினர் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தாளவாடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது
அதன்பேரில் போலீசார் அப்பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒங்கன்புரம் பகுதியில் 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று பணம் வைத்து சூதாடியது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அந்த கும்பலை சுற்றி வளைத்து பிடித்தனர்.
விசாரணையில் அவர்கள் தாளவாடி பகுதியை சேர்ந்த விஜய குமார் (40), பசுவராஜ் (30), சித்துராஜ் (25), அருள்ராஜ் (26), மாதேஷ் (50) என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவர்கள் 5 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.மேலும் அவர்களி டமிருந்த இருசக்கர வாகனங்கள், 52 சீட்டுகள், பணம் ரூ.1,000 ஆகியவ ற்றையும் பறிமுதல் செய்த னர்.
இதேபோல் மரூர் பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த தாளவாடி பகுதியை சேர்ந்த பசுவராஜ் (35), நசீப் (52), சிவராமு (35), சிவகுமார் (41), நந்தேஷ் (47) ஆகிய 5 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
மேலும் அவர்களிடமிருந்து 52 சீட்டுகள், பணம் ரூ.52 ஆயிரத்து 60 ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.
- அதிர்ச்சியடைந்த பெற்றோர் குளச்சல் போலீசில் புகார்
- போலீசார் வழக்கு பதிவு செய்து அபிலாஷை தேடி வருகின்றனர்.
கன்னியாகுமரி:
குளச்சல் அருகே மேற்கு நெய்யூர் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் மகன் அபிலாஷ் (வயது 15). குளச்சலில் ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.கடந்த 9-ந் தேதி மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த அபிலாஷிற்கு லேசான காய்ச்சல் இருந்த நிலையில் அறையில் படுக்க சென்றார்.
மறுநாள் காலை பெற்றோர் அறைக்கு சென்று பார்த்த போது அபிலாஷை காணவில்லை. வீட்டிலிருந்த தந்தையின் ஸ்கூட்டர் மற்றும் பீரோவி லிருந்து ரூ.7 ஆயிரம் மற்றும் துணி மணிகளையும் எடுத்துக்கொண்டு மாய மானது தெரிய வந்தது.
இதனால் அதிர்ச்சிய டைந்த பெற்றோர் அறையை சோதித்து பார்த்த னர். அப்போது அபிலாஷ் எழுதிய கடிதம் சிக்கியது.
அதில் அன்புள்ள அப்பா அம்மாவுக்கு என்னை மன்னித்து விடுங்கள். எனக்கு படிப்பதற்கு விருப்பமில்லை. வீட்டில் என்னை அடிக்கடி படிக்க வற்புறுத்துவதால் வீட்டை விட்டு நான் கண்காணாத இடத்திற்கு செல்கிறேன்.
என்னை அப்பாவும், அம்மாவும் தேட வேண்டாம். நான் கண்காணாத இடத்தில் ஓர் சிறிய கூலி வேலை செய்தாவது வாழ்கையில் முன்னேறுவேன்.அதனால் என்னை தேட வேண்டாம்.
நான் இனி இந்த கன்னி யாகுமரி மாவட்டத்திற்கு வரவே மாட்டேன். நீங்கள் என்னை போலீசில் புகார் செய்தால், போலீஸ் என்னை பிடித்தால் நான் வரும் வழியிலேயே இறந்து விடுவேன். அதை மீறி அவர்கள் வீட்டிற்கு அழைத்து வந்தார்கள் என்றால் நான் என் வீட்டிலேயே தூக்கில் தொங்குவேன். எனவே நான் கண்காணாத இடத்தில் போய் எனக்கு பிடித்த வாழ்க்கையை வாழ்வேன். சாரி என எழுதப்பட்டிருந்தது. இது குறித்து தந்தை சதீஷ்குமார் குளச்சல் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அபிலாஷை தேடி வருகின்றனர்.
- சுமித்ராவுக்கு கடந்த சில நாட்களாக உடல் நிலை சரியில்லாமல் இருந்து வந்துள்ளது.
- மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுமித்ரா மூச்சு திணறல் ஏற்பட்டு பரிதாபமாக இறந்தார்.
டி.என்.பாளையம்:
டி.என்.பாளையம் அடுத்த சதுமுகை முனியப்பன் கோவில் வீதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மனைவி சுந்தரி. இவர்களது மகள் சுமித்ரா (15). இவர் டி.என்.பாளையம் அருகே டி.ஜி.புதூரில் உள்ள சத்திரம் புதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் சுமித்ராவுக்கு கடந்த சில நாட்களாக உடல் நிலை சரியில்லாமல் இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்று காலை அரையாண்டு தேர்வு எழுத பள்ளிக்கு சென்ற சுமித்ராவின் உடல் நிலை மோசமானதால் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுமித்ரா மூச்சு திணறல் ஏற்பட்டு பரிதாபமாக இறந்தார். இது குறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தளி பகுதியில் மஞ்சுநாத் (46) ஆகியோர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
- 9ஆயிரத்து 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் போலீசார் அதிரடி சோதனை நடத்தி கஞ்சா விற்றவர்களை கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ.10,000 மதிப்பிலான கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
திம்மாபுரம் பகுதியில் மாரியப்பன் (வயது 23), ஓசூரில் மூர்த்தி (21), காவேரிபட்டணத்தில் வசந்த் (34), பேரிகையில் ஹ்ரீஷீத்தப்பா (45), பர்கூரில் வளர்மதி (50), தளி பகுதியில் மஞ்சுநாத் (46) ஆகியோர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
இதேபோல ராயக்கோட்டை பகுதியில் கோபிநாத் (46), தேன்கனிக்கோட்டை பகுதியில் செந்தில் (48), கெலமங்கலம் பகுதியில் முரளி (21), கல்லாவி பகுதியில் சார்லஸ் (23) ஆகியோரையும் கைது செய்தனர்.
இவர்களிடமிருந்து ரூ.10.000 மதிப்பிலான 9ஆயிரத்து 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
- உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை
- அவர் அடிக்கடி செல்போனில் விளையாடி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது
கன்னியாகுமரி:
ஆரல்வாய்மொழி வடக்கூர் கல்பாளைய தெருவை சேர்ந்தவர் தங்கம். இவரது கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களின் மகள் ரம்யா (வயது 15).ரம்யா அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். கணவர் இறந்த பின்பு தங்கம் அந்த பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார்.
ரம்யா பள்ளிக்கு சென்று வந்த பின்னர் தாயாருக்கு உதவி செய்து விட்டு வீட்டுக்கு சென்று விடுவார். படித்து விட்டு அவரது அறையில் தூங்க செல்வார். இன்று காலை ரம்யா நீண்ட நேரமாகியும் அறையை விட்டு வெளியே வரவில்லை. இதனால் அவரது தாயார் தங்கம், அறைக்கு சென்று கதவை தட்டினார்.
அறைக்கதவு திறக்காததால், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து திறந்தார்.
அங்கு ரம்யா, மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த தங்கம் அலறினார்.
இது பற்றி ஆரல்வாய்மொழி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து ரம்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் ரம்யா அடிக்கடி செல்போ னில் விளையாடி கொண்டிரு ந்ததாகவும், அதனை தாயார் கண்டித்ததால் மனம் உடைந்து தற்கொலை செய்தி ருப்பதாகவும் தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- பயிற்சியை முடித்துக் கொண்டு முகாமிற்கு வீரர்கள் திரும்பும் வழியில் பனிச்சரிவு.
- பனிச்சரிவில் சிக்கியுள்ள 28 பேர்களை மீட்கும் நடவடிக்கை தீவிரம்.
டேராடூன்:
உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசி மாவட்டத்தில் மலையேறுதல் பயிற்சிக்கான அரசு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தை சேர்ந்த 34 பயிற்சி மலையேறு வீரர்கள், 7 பயிற்சியாளர்கள் என மொத்தம் 41 பேர் இமயமலையின் திரவுபதி கா தண்டா-2 சிகரத்தில் இருந்து பயிற்சியை முடித்துக் கொண்டு முகாமிற்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது, திடீரென அந்த பகுதியில் பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் அவர்கள் அனைவரும் சிக்கிக் கொண்டனர். தகவலறிந்த இந்தோ-திபெத் எல்லைப் பாதுகாப்பு படையினர், தேசிய, மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் பனிச்சரிவில் சிக்கியவர்களை ஹெலிகாப்டர்கள் உதவியுடன் மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த பனிச்சரிவில் சிக்கிய சிலர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 28 பேர் இன்னும் பனிச்சரிவில் சிக்கியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த துயர நிகழ்விற்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வருத்தம் தெரிவித்துள்ளார். உத்தர்காசியில் ஏற்பட்ட பனிச்சரிவு சம்பவம் மிகவும் வருத்தமளிக்கிறது, இது தொடர்பாக அதிகாரிகளிடம் பேசினேன். உள்ளூர் நிர்வாகம், தேசிய பேரீடர் மீட்புக்குழு, இந்தோ-தீபெத் எல்லைப்பாதுகாப்பு படை மற்றும் ராணுவக் குழுக்கள் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளில் உடனடியாக ஈடுபட்டு வருகின்றன, இவ்வாறு அமித்ஷா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல் உத்தரகாண்ட் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு ராகுல்காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். உத்தரகாண்ட் மாநிலத்தில் பனிச்சரிவு ஏற்பட்டு பல உயிர்களை பலி வாங்கியுள்ளது என்ற செய்தி வருத்தமளிக்கிறது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களின் குடும்பங்களுக்கு இதயப்பூர்வமான இரங்கல், காணாமல் போனவர்கள் பாதுகாப்பாக திரும்பவும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் பிரார்த்தனை செய்கிறேன். இவ்வாறு ராகுல் தெரிவித்துள்ளார்.
- விடுமுறைக்கு ஊருக்கு வந்திருந்தபோது சோகம்
- போலீசார் திவாகரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
நாகர்கோவில்:
அஞ்சுகிராமம் அருகே வட்டக்கோட்டையைச் சேர்ந்தவர் கண்ணன், டெம்போ டிரைவர். இவரது மனைவி சித்ரா. இவர்களுக்கு திவாகர் (வயது 15) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
கண்ணன் தற்பொழுது காணி மடத்தில் வாடகை வீட்டில் குடும்பத்தோடு வசித்து வந்தார். கண்ணனின் மகன் திவாகர் கோவையில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி அங்குள்ள பள்ளி ஒன்றில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். விநாயகர் சதுர்த்தி விடுமுறையை அடுத்து திவாகர் சொந்த ஊருக்கு வந்திருந்தார்.
இதையடுத்து நேற்று வீட்டில் இருந்து திவாகர் தனது தாயார் சித்ரா மற்றும் சகோதரி உடன் அஞ்சுகிராமம் அருகே ரஸ்தாகாடு கடற்கரைக்கு சென்றனர். அவர்கள் அங்கு கடல் அலையை ரசித்து கொண்டு இருந்தனர். அப்போது திவாகர் கடலில் இறங்கி கால் நனைத்துள்ளார்.
அப்போது அங்கு வந்த ராட்சத அலை அவரை இழுத்துச்சென்றது. தாய் மற்றும் சகோதரியின் கண் எதிரே திவாகரை ராட்சத அலை இழுத்துச் சென்றதைப் பார்த்த அவர்கள் கூச்சலிட்டனர். இதையடுத்து அஞ்சுகிராமம் போலீசுக்கும், கடலோர பாதுகாப்பு போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட் டது.
அவர்கள் சம்பவ இடத் திற்கு வந்து தேடுதல் வேட் டையில் ஈடுபட்டனர். நீண்ட நேரம் தேடியும் திவாகர் பற்றி எந்த தகவலும் கிடைக்க வில்லை. இரவு நேரம் ஆகிவிட்டதால் தேடுதல் பணி நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை திவாகரை அலை இழுத்துச் சென்ற இடத்தில் இருந்து 300 மீட்டர் தொலைவில் அவரது உடல் கரை ஒதுங்கியது.
இதை பார்த்த பொது மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். கன்னியாகுமரி கடலோர காவல் படை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். திவாகரின் உறவினர்களும் அங்கு வந்தனர். அவர்கள் திவாகர் உடலை பார்த்து கதறி அழுதனர்.
இதற்கிடையில் போலீ சார் திவாகரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விடுமுறைக்கு ஊருக்கு வந்தபோது ராட்சத அலையில் மாணவன் சிக்கி பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- கடலூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட 9 கிலோ கஞ்சா- குட்கா பறிமுதல் செய்யப்பட்டு 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
- கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 26 பேர் மீது வழக்குபதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் உத்தரவின்பேரில் கஞ்சா, குட்கா விற்பனை செய்பவர்கள் சம்பந்தமாக கடலூர் மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கடலூர் மாவட்டத்தில் உள்ள கஞ்சா விற்பனை செய்த இடங்கள் மற்றும் குட்கா போதை பொருள் குறித்த கடைகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அதன்படி கடலூர் மாவட்டத்தில் நடந்த அதிரடி சோதனையில் கஞ்சா விற்பனை செய்த திட்டகுடி கீழ்செருவாய் சீனிவாஸ் (22), திருமாணிக்குழி பாலகிருஷ்ணன் (35), 17 வயது சிறுவன், சிதம்பரம் சிவா (24), விமல்ராஜ் (23), ஆலபாக்கம் பிரகாஷ் (28), கிஷோர் (20), புதுப்பேட்டை ரகுபதி வயது 22 , திட்டக்குடி கோழியூர் ஆனந்தராஜ் ( 20), செந்தூரை பிரவின் (19) ஆகிய 10 பேரை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்கள். குட்கா விற்பனை செய்த கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 26 பேர் மீது வழக்குபதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டனர். இவர்களிடமிருந்து 9 கிலோ கஞ்சா மற்றும் குட்கா பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது .
- ஈரோடு மாவட்டத்தில் 10-ம் வகுப்பு துணை தேர்வு நாளை தொடங்கி வரும் 8-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
- தேர்வுக்கான ஏற்பாடுகளை பள்ளிக்கல்வித்துறையினர் மற்றம் அரசு தேர்வுகள் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
ஈரோடு:
தமிழகம் முழுவதும் பிளஸ்-2 துணை தேர்வு இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதைத்தொடர்ந்து நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் பிளஸ்-1 மற்றும் 10-ம் வகுப்பு துணை தேர்வு தொடங்க உள்ளது.
இதில் ஈரோடு மாவட்டத்தில் 10-ம் வகுப்பு துணை தேர்வு நாளை தொடங்கி வரும் 8-ம் தேதி வரை நடைபெற உள்ளது. ஈரோடு, பெருந்துறை, சத்தி, கோபி, பவானி ஆகிய 5 கல்வி மாவட்டங்களில் தலா ஒரு மையம் என 5 மையங்களில் தேர்வு நடைபெற உள்ளது. தேர்வுக்கு 2,615 பேர் எழுத உள்ளனர்.
இதேபோல் பிளஸ்-1 தேர்வு நாளை தொடங்கி வரும் 10-ம் தேதி நிறைவடைகிறது. இத்தேர்வும் 5 கல்வி மாவட்டங்களில் தலா ஒரு மையம் என 5 மையங்களில் நடக்கிறது. தேர்வினை 1,566 பேர் எழுத உள்ளனர்.
தேர்வுக்கான ஏற்பாடுகளை பள்ளிக்கல்வித்துறையினர் மற்றம் அரசு தேர்வுகள் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
- பெருந்துறையை அடுத்துள்ள விஜயமங்கலம், பாரதி இன்டர் நேஷனல் பள்ளி மாணவர்கள் இந்த ஆண்டு முதல்முறையாக சிபிஎஸ்சி 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதினர்.
- அனைவரையும், பாரதி கல்வி அறக்கட்டளையின் தாளாளர் மோகனாம்பாள், தலைவர் செந்தில்குமார் மற்றும் முதல்வர் உமாதேவி ஆகியோர் பாராட்டி வாழ்த்தினர்.
பெருந்துறை:
பெருந்துறையை அடுத்துள்ள விஜயமங்கலம், பாரதி இன்டர் நேஷனல் பள்ளி மாணவர்கள் இந்த ஆண்டு முதல்முறையாக சிபிஎஸ்சி 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதினர். தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாணவி வருணப்பிரியா 500-க்கு 470 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதல் இடத்தையும், மாணவி ஹரிப்பிரியா மற்றும் மாணவர் விக்னேஷ் 458 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தையும், மாணவர் விக்னேஷ் 450 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.
தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்த மாணவ-மாணவிகளையும், அவர்களை பயிற்றுவித்த ஆசிரியர்கள், உறுதுணையாய் இருந்த பெற்றோர்கள் உள்ளிட்ட அனைவரையும், பாரதி கல்வி அறக்கட்டளையின் தாளாளர் மோகனாம்பாள், தலைவர் செந்தில்குமார் மற்றும் முதல்வர் உமாதேவி ஆகியோர் பாராட்டி வாழ்த்தினர்.