search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "10 people arrested"

    • சட்ட விரோத மது விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
    • மாவட்டத்தில் போலீசார் பல்வேறு பகுதிகளில் ரோந்து சென்றனர்.

    ஈரோடு,

    ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, பவானி, கோபி, பெருந்துறை, சத்தி போன்ற 5 போலீஸ் சப்-டிவிசன் பகுதிகளில் சட்ட விரோதமாக மது விற்பனை நடந்து வருவதாக தொடர்ந்து புகார்கள் வந்தன.

    இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு சசி மோகன், சட்ட விரோத மது விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

    இதன்பேரில், மாவட்டத்தில் போலீசார் பல்வேறு பகுதிகளில் ரோந்து சென்றனர்.

    இதில், சட்ட விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததாக பெருந்துறையில் கருப்புசாமி(58), மோகன்ராஜ்(35), கடத்தூரில் மருதாசலம் (47), பொங்கியண்ணன்(35), பவானியில் பார்த்திபன்(40), வைரவேல்(39), அழகேசன் மனைவி கோமதி(38), கவுந்தப்பாடியில் பிரகாஷ்(40), கார்த்திக்(27) ஆகிய 10 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 74 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    • ஈரோடு மாவட்டத்தில் அனுமதியின்றி மது விற்பனை நடைபெறுகிறதா என்பதை கண்காணிக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் போலீசார் ரோந்து பணியை தீவிர படுத்தியுள்ளனர்.
    • இவர்களிடமிருந்து 79 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ள னர்.

    ஈரோடு

    ஈரோடு மாவட்டத்தில் அனுமதியின்றி மது விற்பனை நடைபெறுகிறதா என்பதை கண்காணிக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் போலீசார் ரோந்து பணியை தீவிர படுத்தியுள்ளனர்.

    ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமரேசன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    அப்போது கனிராவுத்தர் குளம் காந்திநகர் பகுதியில் அனுமதி இன்றி மது விற்பனையில் ஈடுபட்ட நாமக்கல் மாவட்டம் குமார பாளையம் திருவள்ளுவர் நகரை சேர்ந்த துரைசாமி (36) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    அவரிடமி–ருந்து 6 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    இதே போல் கனிராவுத்தர் குளம் பகுதியில் அரசு அனுமதி இன்றி மது விற்ற அண்ணாதுரை என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 10 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    இதேபோல் அம்மா பேட்டை, அரச்சலூர், பங்களாபுதூர், தாலுகா, சென்னிமலை, கவுந்தப்பாடி, கருங்கல்பாளையம், மொடக்குறிச்சி உள்பட மாவட்டம் முழுவதும் அனுமதி இன்றி மதுவற்ற 10 பேர் கைது செய்யப்பட்டு ள்ளனர்.

    மேலும் இவர்களிடமிருந்து 79 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ள னர்.

    • கடலூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட 9 கிலோ கஞ்சா- குட்கா பறிமுதல் செய்யப்பட்டு 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 26 பேர் மீது வழக்குபதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் உத்தரவின்பேரில் கஞ்சா, குட்கா விற்பனை செய்பவர்கள் சம்பந்தமாக கடலூர் மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கடலூர் மாவட்டத்தில் உள்ள கஞ்சா விற்பனை செய்த இடங்கள் மற்றும் குட்கா போதை பொருள் குறித்த கடைகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அதன்படி கடலூர் மாவட்டத்தில் நடந்த அதிரடி சோதனையில் கஞ்சா விற்பனை செய்த திட்டகுடி கீழ்செருவாய் சீனிவாஸ் (22), திருமாணிக்குழி பாலகிருஷ்ணன் (35), 17 வயது சிறுவன், சிதம்பரம் சிவா (24), விமல்ராஜ் (23), ஆலபாக்கம் பிரகாஷ் (28), கிஷோர் (20), புதுப்பேட்டை ரகுபதி வயது 22 , திட்டக்குடி கோழியூர் ஆனந்தராஜ் ( 20), செந்தூரை பிரவின் (19) ஆகிய 10 பேரை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்கள். குட்கா விற்பனை செய்த கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 26 பேர் மீது வழக்குபதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டனர். இவர்களிடமிருந்து 9 கிலோ கஞ்சா மற்றும் குட்கா பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது .

    ×