பண்ருட்டியில் சாராய வியாபாரிகள் 10 பேர் கைது

பண்ருட்டி டி.எஸ்.பி. தனி படை போலீசார் இரவு முழுவதும் ரோந்து பணி.போலீசார் 10 பேரை கைது செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
பண்ருட்டியில் சாராய வியாபாரிகள் 10 பேர் கைது
Published on

கடலூர்:

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள எக்கியார் குப்பம் வம்பாமேடு பகுதியில் கள்ளச்சாராயம் குடித்த 3 பேர் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து கடலூர் மாவட்டம் பண்ருட்டி, காடாம்புலியூர், முத்தாண்டிக்குப்பம் பகுதியில் பண்ருட்டி டி.எஸ்.பி. தனி படை போலீசார் இரவு முழுவதும் நடத்திய அதிரடி வேட்டையில் காடாம்புலியூர் அடுத்த புதுப்பாளையம் சதாசிவம், கானஞ்சாவடி ஏழுமலை, வேலன்குப்பம் விக்ரமன் (25) அன்னகாரன்குப்பம் சக்திவேல்(35) எலவத்தடிகிழக்கு தெரு கட்டை என்ற சந்திரசேகர் (50)உள்ளிட்ட 10 பேரை கைது செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியில் பண்ருட்டி டி.எஸ்.பி. தனி படை போலீசார் இரவு முழுவதும் நடத்திய அதிரடி வேட்டையில் திருவள்ளுவர் நகர்முத்து (30), அம்பேத்கர் நகர்சரவணன் (37), சக்திவேல்(63),பாரதி நகர் சின்னையன் (62)ஆகியோர்கள் மதுபாட்டில் வைத்திருந்ததாக போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com