என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரியல் எஸ்டேட் அதிபர் கடத்தல்"

    • ராஜேஸ்வரி புளியம்பட்டி போலீஸ் நிலையத்தில் மாயமான தனது கணவரை மீட்டு தர வேண்டும் என புகார் அளித்தார்.
    • புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் பாபுவை கொடுக்கல் வாங்கல் தகராறில் 4 பேர் கொண்ட கும்பல் கடத்தி சென்றது தெரியவந்தது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த காரப்பாடி அருகே செல்லம்பாளையம், வி.கே.சி. நகர், ஐஸ்வர்யா கார்டன் பகுதியை சேர்ந்தவர் பாபு (53). ரியல் எஸ்டேட் அதிபர். இவரது மனைவி ராஜேஸ்வரி (41).

    இந்நிலையில் கடந்த 14-ந்தேதி பாபு வீட்டிலிருந்து வெளியே சென்று வருவதாக கூறி காரில் புறப்பட்டு சென்றார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை. அவருடன் காரில் 4 பேர் சென்றதாக அதே ஊரை சேர்ந்த ஒருவர் பாபு மனைவியிடம் கூறியுள்ளார்.

    2 நாட்கள் ஆகியும் பாபு வீடு திரும்பவில்லை. இதனால் அவரது மனைவி ராஜேஸ்வரி பல்வேறு இடங்களில் கணவரை தேடினார். எனினும் அவர் குறித்து தகவல் கிடைக்கவில்லை.

    இதையடுத்து ராஜேஸ்வரி புளியம்பட்டி போலீஸ் நிலையத்தில் மாயமான தனது கணவரை மீட்டு தர வேண்டும் என புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் பாபுவை கொடுக்கல் வாங்கல் தகராறில் 4 பேர் கொண்ட கும்பல் கடத்தி சென்றது தெரியவந்தது.

    இந்நிலையில் 2 நாட்களுக்கு பிறகு பாபுவை அந்த கடத்தல் கும்பல் மதுரையில் இறக்கிவிட்டு தப்பி சென்றுள்ளனர். பின்னர் பாபு அங்கிருந்து வீட்டிற்கு வந்துள்ளார்.

    அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் சம்பவத்தன்று தான் காரில் சென்ற போது அடையாளம் தெரியாத 4 பேர் திடீரென எனது காரை மறித்து காருக்குள் ஏறி தன்னை அடித்து உதைத்து கடத்தி சென்றதாகவும், ஒரு நாள் முழுவதும் தன்னை மறைவான இடத்தில் அடைத்து வைத்து பணம் கேட்டு தாக்கியதாகவும், பின்னர் அந்த கும்பல் என்னை மதுரையில் இறக்கிவிட்டு சென்று விட்டதாகவும் கூறினார்.

    இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவின் பேரில் புளியம்பட்டி இன்ஸ்பெக்டர் அன்பரசு தலைமையில் கடத்தல் கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் ரியல் எஸ்டேட் அதிபர் பாபுவை கடத்தியது ராமநாதபுரத்தைச் சேர்ந்த கும்பல் என்பது தெரியவந்து உள்ளது. இதையடுத்து அவர்களை பிடித்த போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    மாங்காடு அருகே கத்திமுனையில் மிரட்டி ரியல் எஸ்டேட் அதிபரை காரில் கடத்திய சம்பவம் குறித்து 10 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.
    சென்னை:

    மாங்காட்டை அடுத்த கோவூரில் வசித்து வருபவர் சுரேஷ்குமார். இலங்கையைச் சேர்ந்த இவர் கோவூரில் குடியேறி ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.

    இவர் கோவூரில் உள்ள தனது வீட்டை விற்பனை செய்வதற்காக ஆன்லைனில் விளம்பரம் செய்திருந்தார். இதனை பார்த்து வீடு வாங்குவது போல 10 பேர் கொண்ட கும்பல் வந்தது.

    நேற்று மதியம் 2 மணி அளவில் சுரேஷ்குமாரின் வீட்டுக்குள் புகுந்த இந்த கும்பல் வீட்டை விலை பேசியது. அப்போது திடீரென 10 பேரும் எழுந்து சுரேஷ்குமாரை மிரட்டி கைகளை பின்னால் கட்டினர். சத்தம் போடாமல் இருப்பதற்காக வாயையும் கட்டி கத்திமுனையில் காரில் கடத்தினர்.

    இதுபற்றி சுரேஷ்குமாரின் உறவினர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீஸ் படை முடுக்கி விடப்பட்டது. ஆவடி கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் துணை கமிஷனர் மகேஷ் தலைமையிலான 5 தனிப்படையினர் கடத்தப்பட்ட சுரேஷ்குமாரை மீட்க களம் இறங்கினர்.

    எஸ்.ஆர்.எம்.சி. உதவி கமிஷனர் பிரின்ஸ் ஆரோன், பூந்தமல்லி உதவி கமிஷனர் முத்துவேல்பாண்டி மற்றும் இன்ஸ்பெக்டர்கள் ராஜீவ், சந்திரசேகர், ரவிக்குமார், சிதம்பர முருகேசன், முத்துராமலிங்கம் ஆகியோர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.

    கடத்தல் கும்பல் சேலம் மற்றும் சிதம்பரம் பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது.

    சுரேஷ்குமாரின் உறவினர் ஒருவர் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்களிடம் ரூ.5 கோடி வரையில் ஏமாற்றி இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இந்த பணத்துக்காகவே சுரேஷ்குமார் கடத்தப்பட்ட தும் விசாரணையில் தெரிய வந்தது.

    இதையடுத்து சேலம் மற்றும் சிதம்பரத்தில் அதிரடி வேட்டை நடத்திய போலீசார் ரியல் எஸ்டேட் அதிபர் சுரேஷ்குமாரை இன்று அதிகாலையில் மீட்டனர். 10 பேர் கொண்ட கடத்தல் கும்பலையும் சுற்றி வளைத்து கைது செய்தனர். சுரேஷ்குமாரின் உறவினர் ரூ. 5 கோடியை ஏமாற்றி விட்டு தலைமறைவாக உள்ளார். அவரை கண்டு பிடிப்பதற்காக கடத்தல் கும்பல் சுரேஷ்குமாருக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து அச்சுறுத்தி வந்துள்ளனர்.

    மாங்காட்டை அடுத்த கோவூரில் உள்ள சுரேஷ்குமாரின் வீட்டை எழுதி தருமாறும் கடத்தல் கும்பல் மிரட்டி வந்துள்ளது. இப்படி கடத்தல் கும்பல் தொடர்ந்து தொல்லை கொடுத்து அச்சுறுத்தி வந்ததால் சுரேஷ்குார் அவர்களுக்கு தெரியாமல் வீட்டை விற்பனை செய்ய முடிவு செய்து அதற்காக ஓ.எல்.எக்சில் விளம்பரம் செய்துள்ளார்.

    இந்த விளம்பரத்தை கடத்தல் கும்பல் பார்த்து விட்டது. தங்களுக்கு தெரியாமல் சுரேஷ்குமார் வீட்டை விற்பனை செய்ய முயற்சி செய்ததை அறிந்தது. ஆத்திரம் அடைந்த கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் வீடு வாங்குவது போல நடித்து சுரேஷ்குமாரின் வீட்டுக்கு வெளிஆட்களை அனுப்பி உள்ளனர்.

    பின்னர் குண்டு கட்டாக காரில் தூக்கி போட்டு கடத்தி உள்ளனர். போலீஸ் விசாரணையில் இது தெரிய வந்துள்ளது.

    கடத்தல் கும்பலிடமிருந்து 2 கார்கள், மிரட்டலுக்கு பயன்படுத்தப்பட்ட கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. கைதான 10 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க உள்ளனர்.
    ரியல் எஸ்டேட் அதிபரை காரில் கடத்தி சென்ற 7 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டையை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (வயது 46) ரியல் எஸ்டேட் அதிபர். இவரது மனைவி சங்கரம்மாள். முத்துகிருஷ்ணன் தொழில் செய்வதற்காக அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் என்பவரிடம் ரூ. 5 லட்சம் கடன் வாங்கியுள்ளார். இதற்காக வட்டி கட்டி வந்துள்ளார்.

    இந்நிலையில் கிருஷ்ணன் கொடுத்த பணத்தை முத்துகிருஷ்ணனிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் பின்னர் தருவதாக கூறியுள்ளார். இதையடுத்து நேற்று மாலை முத்துகிருஷ்ணன் புதுக்கோட்டையை அடுத்த கே.தளவாய்புரத்தில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்றார். பின்னர் மீண்டும் தனது வீட்டிற்கு பைக்கில் திரும்பி கொண்டிருந்தார். அவர் அல்லிகுளம் பஸ் நிறுத்தம் அருகே வந்த போது அங்கு வந்த கிருஷ்ணன், புதுக்கோட்டையை சேர்ந்த கனி உள்ளிட்ட 7 பேர் கொண்ட கும்பல் முத்துகிருஷ்ணனை காரில் கடத்தி சென்றனர்.

    பின்னர் அந்த கும்பல் முத்துக்கிருஷ்ணன் மனைவி சங்கரம்மாளுக்கு போன் செய்துள்ளனர். அப்போது நாங்கள் முத்துகிருஷ்ணனை கடத்தி சென்னைக்கு கொண்டு வந்துள்ளோம். தங்களிடம் முத்துகிருஷ்ணன் கடன் வாங்கிய பணத்தை உடனடியாக திருப்பி தந்தால் தான் அவரை விடுவோம் என கூறி போனை வைத்து விட்டனர்.

    இதனால் அதிர்ச்சியடைந்த சங்கரம்மாள் உடனடியாக இது குறித்து புதுக்கோட்டை போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் ரியல் எஸ்டேட் அதிபர் முத்துகிருஷ்ணனை அவர்கள் எங்கு கடத்தி சென்றுள்ளனர் என்று விசாரணை நடத்தி 7 பேர் கொண்ட கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.

    ×