என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "விவோ வை17"
- அரியலூர் மாவட்டத்தில் 17,388 குழந்தைகளுக்கு ஊட்டச் சத்து குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என்று ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்ட இயக்குநர் தெரிவித்தார்.
- குழந்தைகளின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு ஊட்டச்சத்தை உறுதி செய் என்ற திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதன்படி மருத்துவத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம் மற்றும் பெற்றோர் ஆகியோர் இணைந்து இத்திட்டத்தினை செயல்படுத்த வேண்டும்.
அரியலூர்:
அரியலூர் அரசு மருத்துவமனையில் உள்ள மாவட்ட ஆரம்ப நோய் கண்டறிதல் மையம் மற்றும் குழந்தைகளின் நிலையை தொடர்ந்து கண்காணிக்க மேற்பார்வையாளர்களுக்கென உருவாக்கப்பட்ட கைப்பேசி செயலியின் மாதிரி செயல்பாடு ஆகியவற்றை ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்ட இயக்குநர் வி.அமுதவள்ளி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் கூறியதாவது:
தமிழகத்திலுள்ள அங்கன்வாடி மையங்களில் உள்ள குழந்தைகளுக்கு உயரம், எடை அளக்கப்பட்டது, வயதிற்கேற்ற உயரம், வயதிற்கேற்ற எடை, உயரத்திற்கேற்ற எடை குழந்தைகள் உள்ளனரா என்பது குறித்து மூன்று வகையான சோதனை செய்யப்பட்டது.
இச்சோதனையின் மூலம் தமிழகத்தில் அங்கன்வாடி மையங்களில் உள்ள 37 இலட்சம் குழந்தைகளில் 2.50 லட்சம் குழந்தைகள் ஊட்டச்சத்து நிலையில் பின்தங்கி உள்ளனர் என கண்டறியப்பட்டுள்ளது. இதில் அரியலூர் மாவட்டத்தில் மட்டும் 17,388 குழந்தைகள் ஊட்டச்சத்து நிலையில் பின்தங்கி உள்ளனர் என கண்டறியப்பட்டுள்ளது.
இத்தகைய குழந்தைகளின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு ஊட்டச்சத்தை உறுதி செய் என்ற திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதன்படி மருத்துவத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம் மற்றும் பெற்றோர் ஆகியோர் இணைந்து இத்திட்டத்தினை செயல்படுத்த வேண்டும்.
குழந்தைகளுக்கு சத்துணவு மையத்தில் மதிய உணவு வழங்கப்படுகிறது. இதே போன்று வீட்டில் குழந்தைகளுக்கு காலை மற்றும் இரவு சத்தான உணவுகள் வழங்குவதை பெற்றோர்கள் உறுதிபடுத்த வேண்டும்.
குழந்தைகளுக்கு காய்கறிகள், பால், பருப்பு, கீரைகள், நெய் உள்ளிட்ட சத்தான உணவுகளை பெற்றோர்கள் வழங்க வேண்டும். குழந்தைகளுக்கு நமது பாரம்பரிய உணவுகளை வழங்க வேண்டும். இது குறித்து பெற்றோர்கள் தங்களது உறவினர்களிடையே உரிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
ஆரோக்கியமான குழந்தைகளை உருவாக்குவதில் அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு பெற்றோர்களும் ஒத்துழைப்பு நல்க வேண்டும். அங்கன்வாடி மையத்தில் வழங்கப்படும் சத்துமாவினை குழந்தைகளுக்கு தவறாமல் வழங்க வேண்டும். பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பால் மிகவும் அவசியமாகும்.
எனவே, குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மிக்க உணவுகளை வழங்கி, ஆரோக்கியமான குழந்தைகளை உருவாக்க அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றார்.



மதுரை:
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, மதுரையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் வேதாந்தா குழுமத்தினர் மீத்தேன் எடுக்க 2 இடங்களை ஒதுக்கீடு செய்யும் சூழ்ச்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பொதுமக்கள் வஞ்சிக்கப்படுகின்றனர். மே தின இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மீதான தேச துரோக வழக்கு மத்திய அரசின் பாசிச போக்கை காட்டுகிறது. சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் நாடார் சமூகத்தை இழிவுபடுத்தும் பாடத்தை நீக்க வேண்டும்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 7 பேர், 27 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர்.
இதனால் அவர்களது வாழ்க்கை சீரழிந்து விட்டது. அவர்களது விடுதலை தொடர்பாக கோர்ட்டு மற்றும் தமிழக அரசு உத்தரவிட்ட பிறகும், கவர்னர் தாமதம் செய்வது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
இவ்வாறு அவர் கூறினார். #vaiko #centralgovernment
And wrapped the most hectic schedule of #DEV with such a pleasant surprise on set!! Early bday celebrations begin !! Thankuuuu #karthi 😀.. nowww let the party begin 💃💃 🎂 🎁 @lakshmimanchu m… https://t.co/0Xos8abIh1
— Rakul Preet (@Rakulpreet) October 4, 2018
மனிதநேய மக்கள் கட்சித் தலைவரும், ராமநாதபுரம் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:
தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு பற்றி ஐ.நா. சபையில் பேசியதற்காக மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மீது பல பொய் வழக்குகளைப் பதிவு செய்து தமிழக அரசு சிறையில் அடைத்துள்ளது.
தனியறையில் அடக்கப்பட்டுள்ள திருமுருகன் காந்தி அந்த அறையை விட்டால், வேறெங்கும் செல்லவோ, யாருடனும் பேசவோ அனுமதிக்கப்படுவதில்லை. அவருக்கு சுகாதாரமான உணவு வழங்கப்படவில்லை, இதனால் அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு மயங்கிய நிலையில் மருத்துவ சிகிச்சை பெறும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
இது அப்பட்டமான மனித உரிமை மீறிய செயலாகும். காவல்துறையின் இந்த நடவடிக்கையை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
மக்கள் விரோத ஆட்சிக்கு எதிராகக் குரல் கொடுத்துவரும் திருமுருகன் காந்தியை மன ரீதியாக பலவீனமாக்கி விடலாம் என்று கனவு கண்டால் அது வெறும் பகல் கனவாகவே இருக்கும் என்பதை மத்திய- மாநில அரசுகளுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு அறிக்கையில் கூறி உள்ளார். #ThirumuruganGandhi
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தை கண்டித்து மே-17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ஐ.நா. சபையில் பேசினார்.
பின்னர், நாடு திரும்பிய அவர் கைது செய்யப்பட்டு கடந்த ஆகஸ்ட் 11-ந் தேதி வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் திருமுருகன் காந்திக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
வயிற்றுப்போக்கு, மயக்கம், மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டார். மருத்துவ பரிசோதனையில் அவரது உணவு குழாயில் பிரச்சனை இருப்பது தெரிந்தது.
இதையடுத்து, உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்ட திருமுருகன் காந்தி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஐ.எம்.சி.யு. பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள திருமுருகன் காந்திக்கு 3-வது நாளாக இன்றும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நேற்று திருமுருகன் காந்தியின் தந்தை, சகோதரி உள்ளிட்ட குடும்பத்தினர் சந்தித்து பார்த்தனர். மேலும் தமிழ்புலிகள் கட்சி தலைவர் நாகை திருவள்ளுவன் சந்தித்து நலம் விசாரித்தார்.
தொடர்ந்து டாக்டர்கள் திருமுருகன் காந்தி உடல் நிலையை கண்காணித்து வருகின்றனர். #ThirumuruganGandhi