என் மலர்
நீங்கள் தேடியது "சாதிவாரி கணக்கெடுப்பு"
- எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் கேள்விக்கு பதிலளிக்கப்பட்டது.
- மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதி கணக்கெடுப்பும் முடிக்கப்படும்.
மத்திய அரசு 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பை இரண்டு கட்டங்களாக நடத்த திட்டமிட்டுள்ளது.
நாட்டின் 16வது மக்கள் தொகை கணக்கெடுப்பான இது 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு என்று அழைக்கப்படுகிறது. இது சுதந்திரம் பிறகு நடத்தப்படும்எட்டாவது மக்கள் தொகை கணக்கெடுப்பாகும்.
முதல் கட்டம் 2026 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலும், இரண்டாம் கட்டம் 2027 பிப்ரவரியிலும் நடைபெறும் என்று மத்திய அரசு செவ்வாய்க்கிழமை மக்களவையில் தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் எம்.பி.யும் எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியின் கேள்விக்கு பதிலளித்த மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய், மக்கள் தொகை கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களைக் கொண்டிருக்கும் என்று கூறினார்.
முதல் கட்டத்தில், வீட்டுப் பட்டியல் மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பு நடத்தப்படும். இரண்டாம் கட்டத்தில், மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும்.
முதல் கட்டம் 2026 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை நடத்தப்படும். இரண்டாம் கட்டம் பிப்ரவரி 2027 இல் தொடங்கி மார்ச் 1 இல் முடியும் என்று தெரிவித்துள்ளார்.
மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதி கணக்கெடுப்பும் முடிக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், பல்வேறு அமைச்சகங்கள், துறைகள், அமைப்புகள் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவு பயனர்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு கேள்வி படிவங்கள் இறுதி செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் கூறினார்.
இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு டிஜிட்டல் முறையில் தரவு சேகரிக்கப்பட்டு நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
- தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது.
- சாதிவாரி கணக்கெடுப்பை முன்னெடுக்காத தமிழக அரசை கண்டித்து டிச.12-ந்தேதி மாநில முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு நிறுவனர் ராமதாஸ் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் தலைவர் தீரன், பா.ம.க. பொதுச்செயலாளர் முரளி சங்கர், அருள் எம்.எல்.ஏ., தலைமை நிலைய செயலாளர், அன்பழகன், மாநில நிர்வாகிகள், கட்சி அமைப்பு ரீதியாக உள்ள 108 மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் யாருடன் கூட்டணி அமைப்பது, எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்து ராமதாஸ் கட்சி நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார்.
இந்நிலையில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் கூட்டணி தொடர்பாக அடுத்த மாதம் அறிவிக்கப்படும்.
* அடுத்த மாதம் சேலம் ஆத்தூரில் உள்ள தலைவாசலில் நடைபெற உள்ள கூட்டத்தில் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும்.
* சாதிவாரி கணக்கெடுப்பை முன்னெடுக்காத தமிழக அரசை கண்டித்து டிச.12-ந்தேதி மாநில முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சுதா மூர்த்தி மற்றும் அவரது கணவர் நாராயண மூர்த்தி இருவரும் இந்தச் சாதிவாரி கணக்கெடுப்பில் பங்கேற்க மறுத்தனர்.
- "மத்திய அரசின் கணக்கெடுப்பிலும் அவர் இதேபோல் பேசுவார் என்று நம்புகிறேன்" என்று கூறினார்.
பெங்களூருவில் வசித்து வரும் பாஜக மாநிலங்களவை எம்.பியும் இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மனைவியுமான சுதா மூர்த்தி கர்நாடக சாதி வாரி கணக்கெடுப்பில் பங்கெடுக்க மறுத்துள்ளார்.
தற்போது கர்நாடக காங்கிரஸ் அரசு சாதி மாநிலத்தில் வாரி கணக்கெடுப்பு நடத்தி வரும் நிலையில் சுதா மூர்த்தி தனது தனிப்பட்ட விருப்பமாக தனது சாதி விவரத்தைத் தெரிவிக்க மறுத்துள்ளார். அதை கர்நாடக அரசும் ஏற்றுக்கொண்டுள்ளது.
சுதா மூர்த்தி மற்றும் அவரது கணவர் நாராயண மூர்த்தி இருவரும் இந்தச் சாதிவாரி கணக்கெடுப்பில் பங்கேற்க மறுத்தனர்.
தாங்கள் இருவரும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அல்லாததால், இந்தக் குடும்பத்தின் சாதித் தகவல்களை வழங்குவது அரசுக்கு உதவாது என்று சுதா மூர்த்தி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும், தகவல்களை வழங்காததற்கு அவர் தனிப்பட்ட காரணங்களையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேட்டியளித்த மாநில தொழிலாளர்துறை அமைச்சர் சந்தோஷ் லாட், சுதா மூர்த்தி இந்தக் கணக்கெடுப்பில் பங்கேற்க மறுத்தது அவரது தனிப்பட்ட விருப்பம். அரசு என்ற முறையில், இதில் பங்கேற்க யாரையும் நாங்கள் கட்டாயப்படுத்த முடியாது" என்று தெரிவித்தார்.
சுதா மூர்த்தியின் நிலைப்பாட்டை மதிப்பதாகக் கூறிய அமைச்சர், ""மத்திய அரசின் கணக்கெடுப்பிலும் அவர் இதேபோல் பேசுவார் என்று நம்புகிறேன்," என்று கூறினார்.
துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் இது குறித்துப் பதிலளிக்கையில், "இந்தக் கணக்கெடுப்பில் பங்கேற்க நாங்கள் யாரையும் கட்டாயப்படுத்த முடியாது. இது தன்னார்வமாகச் செய்யப்பட வேண்டியது," என்று தெரிவித்தார்.
செப்டம்பர் 22-ஆம் தேதி தொடங்கிய இந்தக் சாதிவாரி கணக்கெடுப்பு, அக்டோபர் 19-ஆம் தேதி முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- கர்நாடகாவில் சாதிவாரி கணக்கெடுப்பு கடந்த மாதம் 22-ம் தேதி தொடங்கியது.
- ஆசிரியர்கள் சங்கம் விடுமுறையை நீட்டிக்க கோரிக்கை விடுத்திருந்தது.
பெங்களூரு:
கர்நாடக அரசின் சமூக நீதி ஆணையம் தலைமையில் நடைபெறும் சாதிவாரி கணக்கெடுப்பு கடந்த மாதம் 22-ம் தேதி தொடங்கப்பட்டது.
பல மாவட்டங்களில் இந்தக் கணக்கெடுப்பு முழுமையாக நிறைவேறவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், முதல் மந்திரி சித்தராமையா தலைமையில் அவசர கூட்டம் இன்று நடைபெற்றது. அதன்பின் முதல் மந்திரி சித்தராமையா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:
மாநிலத்தின் அனைத்து அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளுக்கும் அக்டோபர் 18-ம் தேதி வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்கள் சங்கம் விடுமுறையை நீட்டிக்க கோரியிருந்தது. அவர்களின் கோரிக்கையை ஏற்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்கள் தொடர்ந்து பணி புரிந்து முழுமையான கணக்கெடுப்பு தரவுகளைப் பதிவு செய்யும் வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த கணக்கெடுப்பில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான ஆசிரியர்கள் பங்கேற்று பணியாற்றி வருகின்றனர்.
மாணவர்களுக்கு தசரா விடுமுறை காலத்துடன் இணைந்த சாதி கணக்கெடுப்பு விடுமுறை கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- அனைத்து சமுதாய மக்களுக்கும் முறையான இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.
- சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுத்தால் தான் சமூக நீதி நிலைநாட்டப்படும்.
கிண்டி:
சென்னை கிண்டியில் ராமசாமி படையாட்சியாருக்கு பா.ம.க. தலைவர் அன்புமணி மரியாதை செலுத்தினார். இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-
* சமூக நீதிக்கு தி.மு.க. துரோகி மட்டுமல்ல விரோதி. தி.மு.கவுக்கும் சமூக நீதிக்கும் சம்பந்தமில்லை.
* சாதிவாரி கணக்கெடுப்பு என்ற பெயர் பிடிக்கவில்லை என்றால் சமூக நீதி கணக்கெடுப்பு என்று பெயர் வைத்துக்கொள்ளுங்கள்.
* மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த அதிகாரம் இல்லை என முதலமைச்சர் பொய் சொல்கிறார்.
* அனைத்து சமுதாய மக்களுக்கும் முறையான இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.
* சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுத்தால் தான் சமூக நீதி நிலைநாட்டப்படும் என்றார்.
- பெரியாரின் பேரன் என்று கூறிக் கொள்பவர்களின் ஆட்சியில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த இதுவரை எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை.
- கர்நாடகத்தில் பட்டியலின மக்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதற்காக தனியாகவே ஒரு கணக்கெடுப்பை 63 நாள்களில் அம்மாநில அரசு நடத்தி முடித்துள்ளது.
சென்னை:
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கர்நாடகத்தில் இரண்டாவது முறையாக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை வரும் 22-ஆம் தேதி முதல் மேற்கொள்ளவிருக்கும் அம்மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையம், அதற்கான பயிற்சிகளை நேற்று முதல் தொடங்கியிருக்கிறது. கர்நாடக மக்களுக்கு சமூகநீதி வழங்க வேண்டும் என்பதற்காக அம்மாநில அரசு காட்டும் அக்கறையும், தீவிரமும் பாராட்டத்தக்கவை.
கர்நாடகத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டில் முதல் முறையாக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன்பின் பத்தாண்டுகள் நிறைவடைந்து விட்ட நிலையில், அண்மைக்கால தரவுகளைத் திரட்டும் நோக்குடன் இரண்டாவது சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை வரும் 22-ஆம் தேதி முதல் கர்நாடக அரசு மேற்கொள்ளவுள்ளது. 7 கோடி மக்கள் தொகை கொண்ட கர்நாடகத்தில் மொத்தம் 15 நாள்களில் இந்தக் கணக்கெடுப்பு நடத்தி முடிக்கப்படவுள்ளது.
இதற்காக அதிநவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படவுள்ள நிலையில், கணக்கெடுப்புப் பணியில் மொத்தம் 1.60 லட்சம் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர். மொத்தம் 2 கோடி குடும்பங்களிடம் நடத்தப்படவுள்ள இந்தக் கணக்கெடுப்பில் 60 வினாக்கள் கேட்கப்படவுள்ளன. கர்நாடக மக்களுக்கு அனைத்து வகையான சமூகநீதியும் வழங்கப்பட வேண்டும் என்பதற்காகவே இந்தக் கணக்கெடுப்பு நடத்தப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்திருக்கிறது.
ஆனால், இங்கு தமிழ்நாட்டில்....?
பெரியாரின் பேரன் என்று கூறிக் கொள்பவர்களின் ஆட்சியில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த இதுவரை எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை. இதுகுறித்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட முறை கோரிக்கைகள் விடுக்கப்பட்ட நிலையில், அதற்கான அதிகாரம் தங்களுக்கு இல்லை என்று கூறியே காலத்தைக் கடத்திக் கொண்டிருக்கிறது திமுக அரசு. இல்லாத அதிகாரத்தைக் கூட போராடிப் பெற்று செயல்படுத்த வேண்டியது தான் மக்கள் நல அரசின் கடமை. ஆனால், திமுக அரசு இருக்கும் அதிகாரத்தைக் கூட பயன்படுத்த மறுக்கிறது. இதற்குக் காரணம்... தமிழகத்தில் யாருக்கும் சமூகநீதி கிடைத்துவிடக் கூடாது என்ற தீய எண்ணம் தான்.
கர்நாடகத்தில் பட்டியலின மக்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதற்காக தனியாகவே ஒரு கணக்கெடுப்பை 63 நாள்களில் அம்மாநில அரசு நடத்தி முடித்துள்ளது. இவ்வளவையும் சுட்டிக்காட்டியும் கூட, மு.க.ஸ்டாலின் அரசு அசைந்து கொடுக்கவில்லை. தமிழ்நாட்டில் திமுக அரசு சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தாததை விட பெரிய கொடுமை என்னவென்றால், சமூகநீதியில் அக்கறை இருப்பதைப் போல நடிப்பது தான்.
தமிழ்நாட்டின் வரலாற்றில் கடந்த 37 ஆண்டுகளில் 3 முறை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தும் வாய்ப்பு கிடைத்தது. முதல் இரு வாய்ப்புகளும் பயன்படுத்தப்பட்டிருந்தால் சுதந்திர இந்தியாவில் முதன்முறையாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்திய மாநிலம் என்ற பெருமையை தமிழ்நாடு பெற்றிருக்கும். ஆனால், மூன்று வாய்ப்புகளையும் சிதைத்து சமூகநீதியை குழிதோண்டி புதைத்தது திமுக அரசு தான். அத்தகைய சமூகநீதி பாவங்களை செய்த திமுக, இனியாவது சமூகநீதி துரோகத்தையும், தூக்கத்தையும் களைந்து விட்டு சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.
- அப்பாவி மக்கள் தங்களின் கோரிக்கைகளையும், எண்ணங்களையும் அரசுக்கு தெரிவிப்பதற்கான அற்புதமான வாய்ப்பு கிராமசபைக் கூட்டங்கள் தான்.
- அத்தகையக் கூட்டங்களை கடந்த பல ஆண்டுகளாகவே நாம் சிறப்பாக பயன்படுத்தி வருகிறோம்.
அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் விடுதலை நாளையொட்டி மாநிலம் முழுவதும் வரும் ஆகஸ்ட் 15-ஆம் நாள் காலை 11.00 மணிக்கு கிராமசபைக் கூட்டங்கள் நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. கிராமங்கள் அனைத்தும் தன்னாட்சி அதிகாரம் பெற்ற அமைப்புகளாகத் திகழ வேண்டும் என்ற மகாத்மா காந்தியடிகளின் கனவை நனவாக்குவதற்கான மகத்தான ஆயுதம் தான் கிராம சபைக் கூட்டங்கள் ஆகும். நமது உரிமைகளை நிலைநாட்டுவதற்காக அவற்றை நாம் ஆக்கப்பூர்வமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
அப்பாவி மக்கள் தங்களின் கோரிக்கைகளையும், எண்ணங்களையும் அரசுக்கு தெரிவிப்பதற்கான அற்புதமான வாய்ப்பு கிராமசபைக் கூட்டங்கள் தான். அத்தகையக் கூட்டங்களை கடந்த பல ஆண்டுகளாகவே நாம் சிறப்பாக பயன்படுத்தி வருகிறோம். கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி நடைபெற்ற கிராமசபைக் கூட்டங்களில் தமிழ்நாட்டில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி ஆயிரக்கணக்கான கிராமசபைக் கூட்டங்களில் நாம் வெற்றிகரமாக தீர்மானங்களை நிறைவேற்றினோம்.
இந்த ஆக்கப்பூர்வமான பணி நடப்பாண்டிலும் தொடர வேண்டும். அதன்படி வரும் 15-ஆம் தேதி நடைபெறவிருக்கும் கிராமசபைக் கூட்டங்களில், தமிழ்நாட்டில் 69% இட ஒதுக்கீட்டுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கை எதிர்கொண்டு சமூகநீதியைப் பாதுகாக்கவும், தமிழகத்தில் உள்ள அனைத்து சமூகங்களுக்கும் அவரவர் மக்கள்தொகைக்கு இணையாகவும், சமூகப் பின் தங்கிய நிலையின் அடிப்படையிலும் இட ஒதுக்கீடு வழங்கவும் வசதியாக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்று பா.ம.க.வினர் உள்ளிட்ட பொதுமக்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்று 75 ஆண்டுகளாக முழங்கி வரும் திமுகவுக்கு உண்மையாகவே ஜனநாயகத்தில் அக்கறை இருந்தால், கிராம சபைகளுக்கு உள்ள உரிமைகளை மதித்தும், அவற்றுக்கு அளிக்கப்பட வேண்டிய மரியாதையைக் கொடுக்கும் வகையிலும் விடுதலை நாள் கிராமசபைக் கூட்டங்களில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை அங்கீகரித்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
- சாதிவாரி கணக்கெடுப்பு முன்பே நடத்தப்பட்டிருக்க வேண்டும் என்றார்.
- இதில் நான் தவறிழைத்து விட்டேன் என ராகுல் காந்தி வருத்தம் தெரிவித்தார்.
புதுடெல்லி:
டெல்லியில் நடந்த ஓபிசி அமைப்பு ஒன்றின் நிகழ்ச்சியில் காங்கிரஸ் எம்.பி.யும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
நான் கடந்த 2004 முதல் அரசியலில் ஈடுபட்டு வருகிறேன். 21 வருடங்கள் ஆகிவிட்டன. திரும்பிப் பார்த்து சுயபரிசோதனை செய்து கொள்ளும்போது, நான் எங்கெல்லாம் சரியாகச் செய்தேன், எங்கெல்லாம் தவறவிட்டேன் என்பதைப் பார்க்கிறேன்.
தலித்துகள், பழங்குடியினர், சிறுபான்மையினரைப் பொறுத்தவரை நான் சரியாகச் செயல்பட்டேன். எனவே, நான் அதில் நல்ல மதிப்பெண் பெற வேண்டும்.
எனது செயல்பாடுகளைத் திரும்பிப் பார்க்கும்போது ஒரு விஷயத்தில் எனக்கு குறை இருக்கிறது. நான் தவறு செய்துள்ளேன். ஓபிசி பிரிவை பாதுகாக்க வேண்டிய விதித்தில் நான் பாதுகாக்கவில்லை என்பதை தெளிவாகக் காண்கிறேன்.
தலித் பிரச்சினைகளை சரியாகப் புரிந்துகொண்டேன். அதேபோல், பழங்குடியினரின் பிரச்சினைகளையும் ஒருவர் சரியாக புரிந்து கொள்ள முடியும். ஆனால், ஓபிசி மக்களின் பிரச்சினைகள் மறைக்கப்பட்டுள்ளன.
ஓபிசி பிரிவினர் சந்திக்கும் பிரச்சினைகள் பற்றி எனக்கு இன்னும் அதிகமாக தெரிந்திருந்தால், சாதிவாரி கணக்கெடுப்பை நானே செய்திருப்பேன். அதை நினைக்கையில் வருத்தமாக இருக்கிறது. இது என்னுடைய தவறு.
தற்போது சாதிவாரி கணக்கெடுப்புக்கு தெலங்கானா மாநிலம் ஒரு முன்னுதாரணமாக இருக்கிறது. காங்கிரஸ் ஆளும் அனைத்து மாநிலங்களிலும் நாங்கள் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவோம் என தெரிவித்தார்.
- சாதிவாரி கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது.
- இந்த பணியில் 34 லட்சத்திற்கு மேற்பட்டோர் பயன்படுத்தப்பட உள்ளனர்
சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகள் 2027ஆம் ஆண்டு மார்ச் முதல் தொடங்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
சாதிவாரி கணக்கெடுப்புடன் கூடிய மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் அரசிதழில் வெளியிட்டுள்ளது.
சாதிவாரி கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ள பணியில் 34 லட்சத்திற்கு மேற்பட்டோர் பயன்படுத்தப்பட உள்ளனர்
லடாக், ஜம்மு-காஷ்மீர், இமாச்சலப்பிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களில் இந்த ஆண்டே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. பனி சூழ்ந்த மலைப் பிரதேசம் தவிர்த்த பிற மாநிலங்களில் மார்ச் 1 முதல் கணக்கெடுப்பு தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
1931ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பின்படி 4,147 சாதிகள் இருந்ததாக புள்ளி விவரத்தில் தகவல். தற்போது வரை 1931ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பின்படி இட ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. 2011ஆம் ஆண்டில் சமூக பொருளாதார ரீதியில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆனால் புள்ளி விவரங்கள் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- மோடிக்கு சரணடையும் வரலாறு உண்டு.
- பாஜக மக்கள் தொகை கணக்கெடுப்பு மாதிரியில், அதிகாரிகள் ஒரு மூடிய அறையில் கேள்விகளை முடிவு செய்வார்கள்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி, சாதிவாரி கணக்கெடுப்பு குறித்த மோடியின் நிலைப்பாட்டை விமர்சித்துள்ளார்.
நாட்டில் சாதி இருப்பதை மறுக்கும் மோடி எப்படி ஓ.பி.சி.யாக ஆனார் என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
பிகாரில் ராஜிகிர் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, "தாம் ஒரு ஓபிசி என்று எல்லா இடங்களிலும் பிரசங்கிக்கும் மோடி, சாதி கணக்கெடுப்பு விஷயத்தில் நாட்டில் சாதி இல்லை என்று கூறுகிறார். மோடிக்கு சரணடையும் வரலாறு உண்டு. டிரம்ப் கூட நரேந்திர மோடியை பணிய வைத்ததாக 11 முறை பகிரங்கமாகக் கூறியுள்ளார்.
ஆனால் மோடி ஒரு முறை கூட அதற்கு எதிராக எதிர்வினையாற்றவில்லை. ஏனென்றால் அதில் உண்மை இருக்கிறது. அவர்கள் ஒருபோதும் சாதி கணக்கெடுப்பை உண்மையாக செயல்படுத்த மாட்டார்கள். ஏனென்றால் அப்போது அவர்களின் அரசியல் முடிவுக்கு வரும்" என்று ராகுல் கூறினார்.
மேலும் தனது எக்ஸ் பதிவில் , சாதிவாரி கணக்கெடுப்புக்கு ராகுல் காந்தி இரண்டு மாதிரிகளை முன்வைத்தார். ஒன்று பாஜக மாதிரி, மற்றொன்று தெலுங்கானா மாதிரி. சாதிவாரி கணக்கெடுப்பில் கேட்கப்படும் கேள்விகள் முக்கியமானவை.
பாஜக மக்கள் தொகை கணக்கெடுப்பு மாதிரியில், அதிகாரிகள் ஒரு மூடிய அறையில் கேள்விகளை முடிவு செய்வார்கள்.
அதே நேரத்தில், தெலுங்கானா மாதிரியில், கேள்விகள் வெளிப்படையாகக் கேட்கப்படும். சாதிவாரி கணக்கெடுப்பில் என்னென்ன கேள்விகள் கேட்கப்பட வேண்டும் என்பது குறித்து பழங்குடி குழுக்கள், சிறுபான்மையினர் மற்றும் அவர்களின் அமைப்புகளின் கருத்துக்களைக் கேட்டதாகவும், சுமார் 3 லட்சம் பேர் கேள்விகளைத் தயாரித்துள்ளதாகவும் ராகுல் தெரிவித்தார்.
2027 ஆம் ஆண்டில் சாதிவாரி கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களாக நடத்தப்படும் என்றும், அதில் சாதியும் சேர்க்கப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- 69 சதவீதம் இடஒதுக்கீட்டைப் பாதுகாக்க வேண்டும் என்றால் சாதிவாரி மக்கள் தொகை விவரங்கள் தேவையாகும்.
- மாநில அளவில் உள் இட ஒதுக்கீடு வழங்குவதற்கு இன்னும் அதிகமான தரவுகள் தேவை.
சென்னை:
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தேசிய அளவிலான சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-ம் ஆண்டு மார்ச் ஒன்றாம் தேதி முதல் நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது.
2027-ம் ஆண்டில் தான் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடங்கும் என்பதால், 2030-ம் ஆண்டு வரை சாதிவாரி மக்கள்தொகை விவரங்கள் வெளியாவதற்கு வாய்ப்புகள் இல்லை. மத்திய அரசின் சார்பில் மேற்கொள்ளப்படும் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பில் சமூக, கல்வி ரீதியாக பின்தங்கியுள்ள மக்களின் முழுமையான விவரங்கள் வெளிவராது என்றாலும் கூட, 69 சதவீதம் இட ஒதுக்கீட்டைப் பாதுகாப்பது உள்ளிட்ட அவசரத் தேவைகளுக்காவது அந்த விவரங்கள் பயன்படும்.
ஆனால், அந்த விவரங்கள் கூட இன்னும் ஐந்தரை ஆண்டுகளுக்கு கிடைக்க வாய்ப்பில்லை எனும் சூழலில் தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள 69 சதவீதம் இட ஒதுக்கீட்டுக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. 69 சதவீதம் இடஒதுக்கீட்டுக்கு எதிராக தொடுக்கப்பட்ட பல வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படலாம். அந்த வழக்குகளின் விசாரணையின் போது, 69 சதவீதம் இடஒதுக்கீட்டைப் பாதுகாக்க வேண்டும் என்றால் சாதிவாரி மக்கள் தொகை விவரங்கள் தேவையாகும்.
மத்திய அரசின் சார்பில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டாலும் கூட, தமிழ்நாட்டில் சமூகநீதியை நிலைநாட்டுவதற்கு மாநில அளவிலும் சாதிவாரி சர்வே எடுக்கப்பட வேண்டும் என்று நான் வலியுறுத்தி வருகிறேன். தேசிய அளவில் எடுக்கப்படும் கணக்கெடுப்பு மனித தலைகளை சாதிவாரியாக எண்ணும் நடைமுறை தான். மாநில அளவில் உள் இட ஒதுக்கீடு வழங்குவதற்கு இன்னும் அதிகமான தரவுகள் தேவை. அதனால் தான் மாநில அளவில் சாதிவாரி சர்வே நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறேன்.
இப்போது மத்திய அரசின் சார்பில் உடனடியாக சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்கான வாய்ப்புகள் இல்லை என்பது உறுதியாகி விட்ட நிலையில், தமிழக அரசு சூழலின் தீவிரத்தன்மையை புரிந்து கொண்டு, 2008-ம் ஆண்டின் புள்ளிவிவரங்கள் சேகரிப்பு சட்டத்தின்படி தமிழ்நாட்டில் சாதிவாரி சர்வே நடத்துவதற்கான அறிவிப்பை, தமிழக அரசு வெளியிட்டு கணக்கெடுப்புப் பணிகளை தொடங்க வேண்டும். அதேபோல், மத்திய அரசும் மக்களின் அச்சத்தைப் போக்கும் வகையில், மக்கள் தொகை அடிப்படையிலான மக்களவைத் தொகுதி மறு சீரமைப்பு 25 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் சமீபத்தில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது.
- தொற்றுநோய் காரணமாக 2021 மக்கள்தொகை கணக்கெடுப்பு கைவிடப்பட்டது.
புதுடெல்லி:
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் சமீபத்தில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.
அப்போது பேசிய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ், சாதிவாரி கணக்கெடுப்பை உள்ளடக்கிய, நாடு தழுவிய மக்கள்தொகை கணக்கெடுப்பை வெளிப்படையாக நடத்த மோடி அரசு உறுதி பூண்டுள்ளது என தெரிவித்தார்.
இந்நிலையில், சாதிவாரி கணக்கெடுப்புடன் கூடிய மக்கள்தொகை கணக்கெடுப்பு 2027, மார்ச் 1-ம் தேதி தொடங்கும் என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. இதை இரு கட்டமாக நடத்தவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
சமூக பொருளாதார ரீதியில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு 2011-ம் ஆண்டில் நடத்தப்பட்டது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 2021 மக்கள்தொகை கணக்கெடுப்பு கைவிடப்பட்டது. எனவே 16 ஆண்டுகளுக்கு பிறகு மக்கள்தொகை கணக்கெடுப்பு நடைபெற உள்ளது.






