என் மலர்tooltip icon

    வழிபாடு

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    சந்தோஷம் கூடும் நாள். நண்பர்கள் மூலம் நல்ல தகவல் வந்து சேரும். பணநெருக்கடிகள் அகலும். உத்தியோக முயற்சி வெற்றி பெறும்.

    ரிஷபம்

    மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். வீட்டு தகவலை மூன்றாம் நபரிடம் சொல்ல வேண்டாம். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும்.

    மிதுனம்

    மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். நேற்று நடைபெறாத காரியம் இன்று நடைபெறும். நீண்ட நாளைய எண்ணங்கள் நிறைவேறும். சகோதர வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும்.

    கடகம்

    வளர்ச்சி கூடும் நாள். உறவினர் வழியில் விரயம் ஏற்படலாம். தொலைபேசி வழித்தகவல் தொழில் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்.

    சிம்மம்

    நம்பிக்கைகள் நடைபெறும் நாள். சேமிப்பை உயர்த்தும் எண்ணம் உருவாகும். இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.

    கன்னி

    ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும் நாள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் கடமையை செவ்வனே செய்து முடிப்பீர்கள்.

    துலாம்

    திட்டமிட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும் நாள். உறவினர் வழியில் ஏற்பட்ட தகராறுகள் மாறும். உத்தியோகம் சம்பந்தமாக எதிர்பார்த்த நல்ல தகவல் வந்து சேரும்.

    விருச்சிகம்

    காரிய வெற்றி ஏற்படும் நாள். சந்தித்தவர்களால் சந்தோஷம் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். திருமணப் பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும்.

    தனுசு

    ஆசைகள் நிறைவேற ஆலய வழிபாட்டை மேற்கொள்ள வேண்டிய நாள். வந்த வரன்கள் கைநழுவி செல்லலாம். கூட்டுத்தொழிலில் பிரச்சனைகள் ஏற்படும்.

    மகரம்

    கனவுகள் நனவாகும் நாள். காசு பணப்புழக்கம் அதிகரிக்கும். தொட்ட காரியத்தில் வெற்றி கிடைக்கும். சுபகாரியப் பேச்சு நல்ல முடிவிற்கு வரும்.

    கும்பம்

    வசந்த காலத்திற்கு வழிகாட்டும் நாள். சுபச்செலவுகள் உண்டு. பேச்சுத் திறமையால் சூழ்ச்சிகளிலிருந்து விடுபடுவீர்கள்.

    மீனம்

    மகிழ்ச்சி குறையும் நாள். வாங்கல், கொடுக்கல்களில் விழிப்புணர்ச்சி தேவை. உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.

    • சோளிங்கபுரம் ஸ்ரீஅமிர்தவல்லித் தாயார் பக்நோசிகப் பெருமாளுக்கு திருக்கல்யாணம்.
    • ஆறுமுகமங்கலம் ஸ்ரீஆயிரத்தொன்று விநாயகருக்கு காலையில் சிறப்பு அபிஷேகம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு ஐப்பசி-25 (செவ்வாய்க்கிழமை)

    பிறை : தேய்பிறை

    திதி : சஷ்டி காலை 7.06 மணி வரை. பிறகு சப்தமி நாளை விடியற்காலை 4.46 மணி வரை.

    நட்சத்திரம் : பூசம் நள்ளிரவு 1.13 மணி வரை. பிறகு ஆயில்யம்.

    யோகம் : சித்தயோகம்

    ராகுகாலம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    எமகண்டம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    சூலம் : வடக்கு

    நல்ல நேரம் : காலை 8 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    இன்று முருகன் கோவில்களில் அபிஷேகம்

    சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். சோளிங்கபுரம் ஸ்ரீஅமிர்தவல்லித் தாயார் பக்நோசிகப் பெருமாளுக்கு திருக்கல்யாணம். திருமயம் ஸ்ரீசத்தியமூர்த்தி புறப்பாடு. கோவில்பட்டி ஸ்ரீசங்கரநயினார் கோவில் ஸ்ரீஅம்பாள் பவனி. திருஇந்தளூர் ஸ்ரீபரிமளரங்கநாதர் கருட வாகனத்தில் பவனி. குரங்கணி ஸ்ரீமுத்துமாலையம்மன் பவனி. மயிலாடுதுறை ஸ்ரீகவுரிமாயூரநாதர் பூதம் பூதகி வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் மயிலம்மன் புறப்பாடு. திருவட்டாறு ஸ்ரீஐடாதீஸ்வரர் கோவில் ஸ்ரீசிவபெருமானுக்கு அபிஷேகம். சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மனுக்கு வெள்ளிப் பாவாடை தரிசனம்.

    திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் அபிஷேகம். 3-ம் நவதிருப்பதி செவ்வாய் பகவானுக்குரிய தலமான ஸ்ரீகுமுதவல்லித்தாயார் சமேத வைத்தமாநிதிப் பெருமாள் கோவிலில் திருமஞ்சனம். திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி கோவிலில் ஸ்ரீஆண்டாளுக்குத் திருமஞ்சனம். திருநறையூர் ஸ்ரீசத்தநாதீஸ்வரர் கோவிலில் ஸ்ரீசண்முகருக்கு சத்ரு, சம்ஹார அர்ச்சனை. ஆறுமுகமங்கலம் ஸ்ரீஆயிரத்தொன்று விநாயகருக்கு காலையில் சிறப்பு அபிஷேகம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-நன்மை

    ரிஷபம்-நற்செயல்

    மிதுனம்-நம்பிக்கை

    கடகம்-சாதனை

    சிம்மம்-தாமதம்

    கன்னி-வெற்றி

    துலாம்- மகிழ்ச்சி

    விருச்சிகம்-மாற்றம்

    தனுசு- மேன்மை

    மகரம்-நிறைவு

    கும்பம்-ஆதாயம்

    மீனம்-புகழ்

    • ஆறு தீப்பொறிகளும் ஆறு குழந்தைகளாக உருவெடுத்து, பின்னர் பார்வதியால் ஒருவராக மாறியவரே, முருகப் பெருமான்.
    • ஐந்தாம் படைவீடு திருத்தணி. சூரபத்மனை வதம் செய்த முருகப்பெருமானுக்கு கோபம் தணிந்த இடம் இது.

    கார்த்திகை மாதத்தில் முருகப்பெருமானுக் குரிய ஆறுபடை வீடுகளுக்கும் சென்று வழிபட்டால் 16 பேறும் நமக்கு வந்து சேரும். ஆறுபடை வீட்டிற்கும் செல்ல இயலாதவர்கள் அருகில் இருக்கும் ஒரு படை வீட்டிற்காவது சென்று ஆறுமுகனை வழிபட்டு வரலாம். முருகப்பெருமான் ஆறுமுகங்களைப் பெற்றிருப்பதால் ஒரே நேரத்தில் ஆறு வகையான பிரச்சனைகளை அழிக்க வல்லவன். பன்னிரெண்டு கரங்களைப் பெற்றிருப்பதால் அள்ளிக் கொடுக்கும் ஆற்றலைப் பெற்ற வள்ளல்.

    முருகனை 'கந்தா' என்றும், 'கடம்பா' என்றும், 'கார்த்திகேயா' என்றும், சரவணா, சண்முகா, வேலாயுதா, வெற்றிவேலா, சிவபாலா, வள்ளி மணாளா, மயில்வாகனா என்றெல்லாம் பல்வேறு பெயர்களில் அழைக்கிறோம். அந்த ஆறு முகப்பெருமான், திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழநி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகிய ஆறுபடை வீடுகளிலும் குடிகொண்டிருக்கிறார்.

    சிவபெருமானின் நெற்றிக் கண்ணில் இருந்து ஆறு தீப்பொறிகள் பறந்து வந்தது. அந்தத் தீப்பொறிகள் கங்கையில் பறந்தபோது கங்கையே வற்றியதாகப் புராணங்கள் கூறுகின்றன. எனவே ஈஸ்வரனின் ஆணைப்படி சரவணப் பொய்கையில் ஆறு தாமரை மலர்களின் மீது ஆறு தீப்பொறிகளையும் தவழ விட்டனர். அந்த ஆறு தீப்பொறிகளும் ஆறு குழந்தைகளாக உருவெடுத்து, பின்னர் பார்வதியால் ஒருவராக மாறியவரே, முருகப் பெருமான்.

    கந்தப்பெருமான் கங்கையில் தோன்றியதால் அவருக்கு 'காங்கேயன்' என்றும், சரவணப் பொய்கையில் தோன்றியதால் சரவணபவன்' என்றும், கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப் பெற்றதால் 'கார்த்திகேயன்' என்றும் திருநாமம் உண்டாயிற்று. வாய்ப்பு இருப்பவர்கள் படைவீடு அனைத்திற்கும் ஒரு முறைசென்று வந்தால் பயமின்றி வாழலாம். பணவரவும் கூடும். முதலில் திருப்பரங்குன்றம். இது தேவர்களின் துயரம் நீக்கிய முருகப்பெருமானுக்கு, நன்றி சொல்லும் வகையில் இந்திரன் தனது மகளாகிய தெய்வானையைத் திருமணம் செய்து வைத்த இடம்.

    அடுத்ததாக சூரபத்மனை சம்ஹாரம் செய்து முருகப்பெருமான் வெற்றிகண்ட இடமான, திருச்செந்தூர். மாமரமாக நின்ற சூரனை, முருகப்பெருமான் வேலாயுதத்தால் இரு கூறாகப் பிளந்தார். ஒரு பகுதி மயிலாகவும், மறு பாதி சேவலாகவும் மாறியது. மயிலை வாகனமாக அமைத்துக் கொண்ட முருகப்பெருமான், சேவலை தனது கொடியாக்கிக் கொண்டார்.

    மூன்றாவது படைவீடாக உள்ளது பழநி. ஞானப் பழத்திற்காக மயிலேறிப் பறந்து சென்று உலகைச் சுற்றினார். ஆனால் முன்னதாகவே 'அன்னையும், பிதாவும் தான் அகிலம்' என்று சொல்லி, சிவனையும், பார்வதியையும் சுற்றி வந்து பழத்தை வாங்கிக் கொண்டார், ஆனைமுகன். எனவே கோபத்தோடு முருகப்பெருமான் மலையேறி நின்ற இடம்தான் பழநி. பழத்தை வேண்டி பறந்துவந்த இடம் 'பழநி'யாயிற்று என்பர்.

    நான்காம் படைவீடுசுவாமி மலை. தந்தைக்கு பிரணவ மந்திரத்தின் பொருள் சொன்ன இடம். பொதுவாக உபதேசிப்பவர்கள் உயர்ந்த இடத்திலும், உபதேசம் பெறுபவர்கள், அதற்கு கீழும் தான் இருக்கவேண்டும். முருகப்பெருமான் சிவபெருமானின் மடியை ஆசனமாக்கிக் கொண்டு அதில் அமர்ந்து சிவன் காதில் பிரணவத்தின் பொருளை உபதேசிப்பது போல் இந்த ஆலயத்தில் சிற்பங்கள் உள்ளன. இதனால் முருகனுக்கு 'சுவாமிநாதன்' என்ற பெயர் உண்டாயிற்று.

    ஐந்தாம் படைவீடு திருத்தணி. சூரபத்மனை வதம் செய்த முருகப்பெருமானுக்கு கோபம் தணிந்த இடம் இது. 'சினம் இருந்தால் பணம் வராது' என்பார்கள். சிரித்த முகத்தோடு இருந்தால் தான் பணப்புழக்கம் அதிகரிக்கும். எனவே கோபம், படபடப்பு இருப்பவர்கள் அது நீங்க இத்திருத்தலம் சென்று வழிபாடு செய்து வந்தால் சிறப்பான பலன் கிடைக்கும்.

    ஆறாவது படைவீடு பழமுதிர் சோலை. அவ்வைப் பாட்டிக்கு அறிவுரை கூறிய இடம். 'சுட்ட பழம் வேண்டுமா, சுடாத பழம் வேண்டுமா' என்று தமிழ்ப் புலமை பெற்ற அவ்வையிடம் முருகப்பெருமான் வாதிட்ட இடம்தான் இது. இங்கு சென்று முருகப்பெருமானை வழிபட்டுவந்தால் அறிவாற்றல் பெருகும். ஆராய்ச்சி பட்டம் பெற விரும்புவர்கள் இங்கு சென்றுவந்தால் வெற்றியை வேகமாகப் பெறமுடியும்.

    • தேய்பிறை சஷ்டி விரதம். சுபமுகூர்த்த நாள்.
    • திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பன் கொலு தர்பார் காட்சி.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு ஐப்பசி-24 (திங்கள்கிழமை)

    பிறை : தேய்பிறை

    திதி : பஞ்சமி காலை 8.31 மணி வரை பிறகு சஷ்டி

    நட்சத்திரம் : புனர்பூசம் நள்ளிரவு 1.40 மணி வரை பிறகு பூசம்

    யோகம் : சித்தயோகம்

    ராகுகாலம் : காலை 7.30 மணி முதல் 9.00 மணி வரை

    எமகண்டம் : காலை 10.30 மணி முதல் 12.30 மணி வரை

    சூலம் : கிழக்கு

    நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    தேய்பிறை சஷ்டி விரதம், சுபமுகூர்த்த நாள்

    தேய்பிறை சஷ்டி விரதம். சுபமுகூர்த்த நாள். மாயவரம் ஸ்ரீ கௌரிமாயூரநாதர் காலை கற்பக விருட்சம், காமதேனு வாகனங்களில் பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு, இரவு பூதம், பூதகி வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு. திருஇந்தளூர் ஸ்ரீ பரிமள ரங்கநாதர் சேஷ வாகனத்தில் வீதியுலா. உத்திரமாயூரம் ஸ்ரீ வள்ளலார் சந்நிதியில் ஸ்ரீ பஞ்சமூர்த்திகளுடன் புறப்பாடு, பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு.

    சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப்பாவாடை தரிசனம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்குத் திருமஞ்சன சேவை. நத்தம் வரகுணவல்லித் தாயார் சமேத ஸ்ரீ விஜயாசப் பெருமாள் காலை அலங்கார திருமஞ்சன சேவை. திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் புறப்பாடு. திருமயிலை திருவான்மியூர், பெசன்ட் நகர், திருவிடைமருதூர் தலங்களில் காலை சிறப்பு சோமவார அபிஷேகம். கோவில்பட்டி, ஸ்ரீ செண்பகவல்லி அம்பாள் சமேத ஸ்ரீ பூவண்ணநாதர் காலை பால் அபிஷேகம். திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பன் கொலு தர்பார் காட்சி.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-வெற்றி

    ரிஷபம்-அன்பு

    மிதுனம்-சுகம்

    கடகம்-உயர்வு

    சிம்மம்-நட்பு

    கன்னி-அமைதி

    துலாம்- புகழ்

    விருச்சிகம்-ஆதரவு

    தனுசு- வெற்றி

    மகரம்-நிறைவு

    கும்பம்-திறமை

    மீனம்-முயற்சி

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    உதிரி வருமானங்கள் வந்து உள்ளம் மகிழும் நாள். எதை செய்தாலும் தெளிவாகச் சிந்தித்து செய்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

    ரிஷபம்

    புதுமுயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள். காரியத்திலேயே கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். பழைய கடன் தீர எடுக்கும் முயற்சி பலன் தரும்.

    மிதுனம்

    தாமதித்த காரியங்கள் தடையின்றி நடைபெறும் நாள். தொழில் சீராக நடைபெறும். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள்.

    கடகம்

    உள்ளம் மகிழும் சம்பவம் இல்லத்தில் நடைபெறும் நாள். வரவு திருப்தி தரும். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.

    சிம்மம்

    செல்வந்தர்களின் ஒத்துழைப்பால் சிறப்படையும் நாள். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் உண்டு. அதிகாலையிலேயே ஆச்சரியமான தகவல் வந்துசேரும்.

    கன்னி

    பாராட்டும், புகழும் கூடும் நாள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். கூடப்பிறந்தவர்கள் ஒத்துழைப்பு செய்வர். தொழில் ரீதியான பயணங்கள் பலன் தரும்.

    துலாம்

    திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடியே நடைபெறும் நாள். தொழிலில் இருந்த மந்தநிலை மாறும். உத்தியோகம் சம்பந்தமாக எடுத்த முயற்சி பலன் தரும்.

    விருச்சிகம்

    யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். வரவு வருவதில் தாமதம் ஏற்படும். வியாபார விரோதம் உண்டு. பயணங்களை மாற்றி அமைப்பீர்கள்.

    தனுசு

    வெளிவட்டார பழக்கவழக்கம் விரிவடையும் நாள். கையில் கணிசமான தொகை வந்துசேரும். தொழிலில் புதிய முதலீடுகள் செய்ய முன்வருவீர்கள்.

    மகரம்

    மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். சகோதர சச்சரவுகள் அகலும். திருமண முயற்சி கைகூடும். முன்னுக்குப் பின்னாகப் பேசியவர்கள் கூட இனி ஒத்துவருவர்.

    கும்பம்

    கடன் சுமை குறையும் நாள். செய்தொழிலில் மேன்மையுண்டு. உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கருத்துகளை ஏற்றுக் கொள்வர்.

    மீனம்

    சான்றோர்களின் சந்திப்பு கிட்டும் நாள். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு உண்டு.

    • கன்னி தடைபட்ட அனைத்து சுப பலன்களும் தேடிவரும் வாரம்.
    • துலாம் சீரான முன்னேற்றம் உண்டாகும் வாரம்.

    மேஷம்

    வெற்றி மேல் வெற்றி உண்டாகும் வாரம். ராசி அதிபதி செவ்வாய் அஷ்டமஸ்தானத்தில் 3,6ம் அதிபதி புதனுடன் குரு பார்வையில் சஞ்சரிக்கிறார். தைரியம் வெற்றியைத் தரும். உடல் நலம் வைத்தியத்தில் சீராகும். கடன் பெற்று வீடு கட்டுவது, வாகனம் வாங்குவது பற்றி திட்டமிடுவீர்கள்.பத்திரப் பதிவு சுமூகமாகும்.சொத்துக்களின் மதிப்பு உயரும்.இழப்புகளை ஈடு செய்யக் கூடிய நல்ல சந்தர்ப்பங்கள் கூடி வரும். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வுடன் கூடிய ஊதிய உயர்வு கிட்டும். சிலருக்கு தந்தையின் வாரிசு அரசு வேலை கிடைக்கும். திருமணம், குழந்தை பாக்கியம் போன்ற சுப நிகழ்வுகள் நல்ல முறையில் நடக்கும். வழக்குகளில் தீர்ப்பு தள்ளிப் போகும். பெண்களுக்கு வீட்டிலும், வேலை செய்யும் இடத்திலும் மதிப்பு, மரியாதை உயரும். விலை உயர்ந்த ஆபரணங்களை கவ னமாக பாதுகாக்க வேண்டும். அரசு காரியங்கள் விரைந்து முடியும். சகோதர வகையில் நல்லது நடக்கும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும்.வெற்றி மேல் வெற்றி உண்டாக விநாயகரை வழிபடவும்.

    ரிஷபம்

    மகிழ்ச்சியும் மனபலமும் கூடும் வாரம். ராசிக்கு செவ்வாய் மற்றும் வக்ர புதனின் பார்வை உள்ளது.இதுவரை உங்களை சூழ்ந்திருந்த வெறுமை அகலும். மதிப்பு மரியாதையும் அதிகரிக்கும். எடுக்கக்கூடிய அனைத்து முயற்சிகளும் வெற்றியைத் தேடித் தரும். புதிய வாய்ப்புகள் உருவாகும். திருமணம், குழந்தை பேறு, வீடு, வாகன யோகம், பொன், பொருள் சேர்க்கை என பல்வேறு பாக்கிய பலன்கள் நடக்கப் போகிறது. காதல் திருமணத்திற்கு பெற்றோர்களின் சம்மதம் கிடைக்கும்.வருமானப் பற்றாக்குறைகள் அகலும். சொத்து வாங்கும், விற்கும் முயற்சி ஈடேறும். பிரமாண்டமான வீடு, வாகனம் கிடைக்கும். தொழில் வளர்ச்சி சிறக்கும்.பொருள் வரவு அதிகமாகும். வாராக்கடன் வசூலாகும்.இனிமை தரும் இடமாற்றங்களை சந்திப்பீர்கள். கற்ற கல்விக்கு ஏற்ற வேலை கிடைக்கும். பிள்ளைகளின் சுப நிகழ்வுப் பேச்சுக்கள் முடிவாகும். தடைபட்ட பத்திரப் பதிவுகள் நடக்கும். ஸ்ரீ கிருஷ்ணரை வழிபட அனைத்து விதமான நன்மைகளும் கூடிவரும்.

    மிதுனம்

    திட்டமிட்டு வெற்றி பெற வேண்டிய வாரம்.ராசி அதிபதி புதனும் 6,11-ம் அதிபதி செவ்வாயும் இருப்பது சற்று ஏற்ற இறக்கமான பலன்களை தரக்கூடிய அமைப்பாகும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணியை சிறப்பாக செய்து முடிக்க கூடிய சூழல் உருவாகும். வேலையாட்களால் ஏற்பட்ட இன்னல்கள் குறைய துவங்கும். தொழில், உத்தியோகத்திற்காக வெளியூர், வெளிநாட்டிற்கு இடம் பெயர வாய்ப்பு உள்ளது. விண்ணப்பித்த கடன் தொகை கிடைக்கக்கூடிய அமைப்பு உள்ளது. வைத்தியம் பலன் தரும். நோய் தாக்கம் குறையும். கூட்டுத் தொழிலில் இருப்ப வர்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும். சுய ஜாதக வலிமைக்கு ஏற்ப திருமணத்திற்கு வரன் அமையும். திட்டமிட்ட காரியங்கள் வெற்றிகரமாக முடியும். சித்தப்பா, மூத்த சகோதர, சகோதரி உதவியால் சில நல்ல காரியங்கள் நடக்கும்.போட்டி பந்தயங்களில் வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது. பணம், கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்கவும். புதிய சொத்துக்கள், வாகனங்கள் வாங்கி மகிழ்வீர்கள். தினமும் கந்த சஷ்டிகவசம் கேட்கவும்.

    கடகம்

    முன்னேற்றமான வாரம்.ராசியில் அதிசார குரு பகவான் வக்ரகதியில் சஞ்சரிக்கிறார்.நல்ல முன்னேற்றம் ஏற்படும். எல்லோரும் பாராட்டக் கூடிய நல்ல புண்ணிய காரியம் செய்வீர்கள். தொழில் மூலம் நல்ல பலன்கள் தேடிவரும். வெளிநாட்டு வேலை அல்லது தொழில் மூலம் பணவரவு கிடைக்கும். புதிய தொழில் கூட்டாளிகள் இணைவார்கள். கடக ராசியினர் வாழ்க்கையில் செட்டிலாகும் காலம். திருமணம் கூடி வரும். சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கப் போகிறது. அன்றாடம் கூலி வேலை செய்து சம்பாதித்த வர்கள் சொந்த தொழில் செய்து பெரும் வருமானம் ஈட்டும் நேரம். அடமானத்தில் இருந்த நகைகள்,சொத்துக்கள் மீட்கப்படும். புதிய அணிகலன்கள் ,அழகு, ஆடம்பரப் பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். ராகு/கேதுக்களின் சஞ்சாரத்தால் சிறு மன சஞ்சலம் இருக்கும்.திருமண முயற்சி வெற்றி தரும்.சொந்த வீடு,வாகன கனவு நிறைவேறும்.ஜாமீன் கையெழுத்திடுவதை தவிர்க்க வேண்டும். நீண்ட காலமாக தடைபட்ட உயர் ஆராய்ச்சி கல்வி வாய்ப்பு சாதகமாகும்.ஆரோக்கியம் சீராகும். தீர்த்த யாத்திரை சென்று வருவதன் மூலம் ஆன்ம பலம் பெருகும்.

    சிம்மம்

    தொட்டது துலங்கும் வாரம். ராசி அதிபதி சூரியன் நீச்சபங்க ராஜயோகம் பெறுகிறார்.சிம்ம ராசிக்கு மிகப் பெரிய யோகமாகும். கடந்த சில மாதங்களாக பட்ட கஷ்டத்திற்கு விடிவு காலம் பிறக்கப்போகிறது. சுகமும், சந்தோஷமும் அதிகரிக்கும். வெளியில் சொல்ல முடியாமல் இருந்த துக்கங்களும் துயரங்களும் விலகும்.வீடு அல்லது அலுவலகம் தொடர்பான இடமாற்றம் ஏற்படும். சிலர் வெளி மாநிலம் , வெளிநாட்டிற்கும் இடம் பெயரலாம். சகோதர சகோதரி மேல் அன்பு அதிகரிக்கும். வீடு, வாகன யோகம் சிறப்பாக உள்ளது. குடும்பத்தில் அமைதியான சூழ்நிலை நிலவும். ஆரோக்கியம் சீராகும்.கடன் பிரச்சினை குறையும்.தந்தையின் அனுசரணை கூடும். பூர்வீக சொத்து தொடர்பான சர்ச்சைகள், வழக்குகள் ஏதேனும் இருந்தால் அவற்றில் சாதகமான முடிவு வரும். புத்தி சாதுர்யமான பேச்சுக்களால் காரியம் சாதிப்பீர்கள். சம்பள பாக்கிகள் வந்து சேரும்.வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். புதிய ஒப்பந்தங்கள் கைகூடி வரும்.எதிரிகளை வெல்லும் வலிமை ஏற்படும்.படுத்தவுடன் நிம்மதியான தூக்கம் வரும். கோபுர தரிசனம் செய்வதால் கோடி புண்ணியம் உண்டாகும்.

    கன்னி

    தடைபட்ட அனைத்து சுப பலன்களும் தேடிவரும் வாரம். குரு லாப ஸ்தானத்தில் அதி சாரமாக வக்கிரகதியில் சஞ்சரிப்பதால் வாழ்க்கையில் அனைத்து வெற்றிகளையும் வழங்கக் கூடிய உப ஜெய ஸ்தானம் வலுப்பெ றுகிறது. உடன் பிறந்தவர்களால் அனுகூலம் உண்டு. எதிர்பாராத வீடு, வாகனம் போன்ற சுப செலவு மிகுதியாகும். எதையும் திட்டமிட்டுச் செய்வீர்கள். நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருந்த நிலை மாறும். மனத் தடுமாற்றம் நீங்கி காரியசித்தி உண்டாகும். புகழ், அந்தஸ்தை உயர்த்த அதிகம் உழைக்க நேரும். மனம் இலகுவாக இருக்கும். முகப் பொலிவு உண்டாகும்.பெண்களுக்கு மன உளைச்சல் நீங்கி நிம்மதி கிடைக்கும்.தாயின் அன்பும் ஆசீர்வாதமும் உங்களை மகிழ்விக்கும்.விரும்பிய கடன் தொகையை அரசுடைமை வங்கிகளில் பெறுவது உத்தமம். மந்தமாக இருக்கும் தொழில் மளமளவென வளரும்.அரசின் இலவச வீட்டு மனைத் திட்டத்தில் வீடு, மனை கிடைக்கும். பிள்ளைகளின் திருமணம்,உத்தியோகம்,தொழில், உயர்கல்வி போன்ற கவலைகள் நீங்கும்.கண்டகத்தில் சனி பகவான் நிற்பதால் ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு முடிந்த உதவிகளை வழங்க தடையில்லாத முன்னேற்றம் ஏற்படும்.

    'பிரசன்ன ஜோதிடர்' ஐ.ஆனந்தி


     

    துலாம்

    சீரான முன்னேற்றம் உண்டாகும் வாரம்.ராசி அதிபதி சுக்கிரன் ஆட்சி பலம் பெறுகிறார்.எடுத்த செயலில் இறுதிவரை போராடி வெற்றி பெறுவீர்கள். இதுவரை அனுபவித்து வந்த சங்கடங்கள் விலகி நிம்மதி பிறக்கும்.நிதானமாக சிந்தித்து திட்டமிட்டு செயல்படுவீர்கள். வாழ்நாள் லட்சியங்கள் கனவுகளை நிறைவேறக்கூடிய சந்தர்ப்பங்கள் உருவாகும்.வேலை இல்லாதவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும்.தொழிலில் ஸ்திரத்தன்மை உண்டாகும். கோட்ச்சார கிரகங்கள் சாதகமாக இருக்கும் காலங்களில் திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றி நிச்சயம். பெண்கள் குடும்பத் தகவல்களை பிறரிடம் பகிர்ந்து கொள்வதைத் தவிர்க்கவும்.கலைத்துறையினர் மற்றும் அரசியல்வாதிகளுக்கு மிகச் சாதகமான நேரம்.ஆண்களுக்கு மாமனார் மூலம் அசையும், அசையாச் சொத்துக்கள் கிடைக்கும்.உடன் பிறந்தவர்களுடன் ஏற்பட்ட மனஸ்தாபம் மாறும். பெண்களுக்கு வாழ்க்கைத் துணையின் அன்பும் ஆதரவும் கிடைக்கும்.கல்யாணக் கனவு நனவாகும்.திருமணம் புத்திர பாக்கியம் போன்றவற்றில் நிலவிய தடைகள் அகலும்.குடும்பத்துடன் குல தெய்வ கோவிலுக்கு சென்று வரவும்.

    விருச்சிகம்

    அனுகூலமான வாரம்.ராசி அதிபதி செவ்வாய் ஆட்சி பலம் பெறுகிறார். உடன் இணைந்த 8, 11-ம் அதிபதி புதன் வக்ரகதியில் சஞ்சரிக்கிறார். பணபரஸ்தான இயக்கம் வலுவாக உள்ளதால் அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும்.லாட்டரி, பங்குச் சந்தை, உயில் சொத்து, பாலிசி முதிர்வு தொகை மூலம் பெரும் பணம் கிடைக்கும்.மூத்த சகோதர வழியில் சில பொருள் வரவு ஏற்படலாம். புதிய தொழில் முயற்சிக்கு தேவையான உதவிகள் கிடைக்கும். குலத் தொழில் விருத்தியடையும். சிலர் புதிய இன்சூரன்ஸ் பாலிசி எடுப்பீர்கள். கணவன் மனைவி ஒற்றுமை சீராகும். சிலர் கூட்டுக் குடும்பத்தில் இருந்து பிரிந்து தனிக் குடித்தனம் செல்லலாம். பெண்களுக்கு பிறந்த வீட்டுச் சொத்தில் கிடைத்த பங்கு புகுந்த வீட்டில் கவுரவப்படுத்தும். 10.11.2025 அன்று பகல் 1.03 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் முக்கிய பணிகளை ஒத்தி வைக்கவும். கோபத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது.கோட்சார கிரகங்கள் சாதகமாக இல்லாத காலத்தில் மனிதனுக்கு பொறுமையும் தன்னம்பிக்கையும் மிக அவசியம். தினமும் முருகனை வழிபட வினைகள் தீரும்.

    தனுசு

    லட்சியமும், எண்ணங்களும் நிறைவேறும்.ராசியை தனம் வாக்கு குடும்பஸ்தான அதிபதி சனிப கவான் பார்க்கிறார்.லட்சியமும், எண்ணங்களும் கனவுகளும் நிறைவேறும்.மந்த தன்மை குறைந்து விரைந்து செயல்படும் தன்மை அதிகரிக்கும்.தைரியத்துடன் மனம் விரும்பும் அனைத்தையும் சாதித்து காட்டுவீர்கள். புகழ், அந்தஸ்து, கவுரவம், பொன், பொருள், செல்வம், செல்வாக்கு என எல்லாவி தமான பாக்கிய பலன்களையும் சனி பகவான் பெற்றுத் தருவார். இடமாற்றம் இருந்தாலும் பதவி உயர்வும்,ஊதிய உயர்வும் கிடைக்காது.மேலதிகாரியின் தொல்லை அதிகரிக்கும். உடன் பிறந்தவர்கள், நண்பர்களின் உதவி பக்க பலமாக இருக்கும். உடல் நிலையில் இருந்த பாதிப்புகள் அகலும். எதிர்பாலினத்தவரிடம் கவனமாக பழக வேண்டும். 10.11.2025 அன்று பகல் 1.03 முதல் 12.11.2025 அன்று மாலை 6.35 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் உறவுகளிடம் அமைதிப் போக்கினை கையாளவும். ஆரோக்கி யத்தை பேணவும்.ஆன்மீக வழிபாட்டில் கவனம் செலுத்தினால் மலை போல் வந்த துன்பம் பனி போல விலகும். தினமும் தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.

    மகரம்

    மனச் சங்கடம் குறையும் வாரம். ராசிக்கு வக்ரகதியில் உள்ள அதிசார குருவின் பார்வை உள்ளது. தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டா கும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். அதிர்ஷ்டம் நீங்கள் இருக்குமிடம் தேடி வரும். வேற்று மொழி பேசுபவர்கள், வேற்று மதத்தினரின் நட்பு மற்றும் உதவிகள் கிடைக்கும். மேலதிகாரிகளின் நன்மதிப்பை பெறுவீர்கள். வேலை மாற்றம் செய்யும் எண்ணத்தை தவிர்ப்பது புத்திசாலித்தனம். வீட்டில் மங்களகரமான சுப நிகழ்வுகள் நடக்கும்.திருமணத் தடை அகலும். உயர்கல்வி, ஆராய்ச்சி கல்வி படிக்க முயற்சிப்பவர்களுக்கு நல் வாய்ப்பு உண்டாகும். பேரன், பேத்தி யோகம் கிடைக்கும்.கணவன், மனைவி உறவில் அன்பு மிளிரும். தந்தை தொழில் அல்லது உத்தியோகம் நிமித்தமாக வெளியூர் அல்லது வெளிநாடு செல்வர். தொழிலில் பிரமாண்ட வளர்ச்சி உண்டாகும். நம்பிக்கையான, விசுவாசமான வேலை ஆட்கள் கிடைப்பார்கள். 12.11.2025 அன்று மாலை 6.35 முதல் 15.11.2025 அன்று அதிகாலை 3.51 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் அலைச்சல் மிகுந்த பயணங்கள் மற்றும் மன சஞ்சலம் அதிகமாகும். ஸ்ரீ லட்சுமி நரசிம்மரை வழிபடவும்.

    கும்பம்

    தன்னம்பிக்கையை அதிகரிக்க வேண்டிய வாரம்.ராசியில் உள்ள ராகுவிற்கு செவ்வாயின் 4-ம் பார்வை உள்ளது. கும்பத்திற்கு 3,10-ம் அதிபதியான செவ்வாய் ராசியை பார்ப்பது சுபமான பலன் அல்ல. கோபுர கலசம் போல உயர்வான எண்ணம் கொண்ட கும்ப ராசியினருக்கு இது சவாலான காலமாகும்.தைரியம் மிகுதியாக இருக்கும். மனபலம், நிம்மதி கூடும். ஞாபக சக்தி அதிகரிக்கும்.

    காது, மூக்கு, தொண்டை தொடர்பான ஆரோக்கிய கேடுகளை அறுவை சிகிச்சையால் சரி செய்ய உகந்த நேரம். சிலருக்கு பரம்பரை நோய்களான சுகர் பிரஷர் கை கால் மூட்டு வலி போன்ற உடல் உபாதைகள் அதிகமாகும்.பாகப்பிரிவினையால் மன பேதம் மிகுதியாகும். ஒரு சிலர் உயில் எழுதுவார்கள். சிலர் எழுதிய உயில், ஆவணங்களில் திருத்தம் செய்வார்கள். 15.11.2025 அன்று அதி காலை 3.51 வரை சந்திராஷ்டமம் ஆரம்பிக்கிறது. சிலர் மன அமைதி மற்றும் நிம்மதிக்காக தீர்த்த யாத்திரை செல்ல திட்டமிடுவார்கள். இல் வாழ்க்கையில் பற்று குறையும். தினமும் ராகு காலத்தில் கால பைரவரை வழிபடுவதால் ஆயுள் ஆரோக்கியம் சார்ந்த பயம் அகலும்.

    மீனம்

    மனதிற்கு நிம்மதியும் தன் நம்பிக்கையும் தரும் நிகழ்வுகள் நடக்கும் வாரம். ராசிக்கு அதிசார குருவின் ஒன்பதாம் பார்வை உள்ளது. ஆளுமை திறன் கூடும்.வெளியூர், வெளிநாட்டு வேலை வாய்ப்பை விரும்பியவர்களுக்கு பிரகாசமான எதிர்காலம் ஆரம்பமாகிவிட்டது. புதிய தொழில் முயற்சிகள் கைகூடும். உத்தியோகஸ்தர்கள் ஒப்படைக்கப்பட்ட பணிகள் அனைத்தையும் எளிதில் முடித்து நல்ல பெயர் எடுப்பீர்கள்.சிலர் தொழிலை ஒரு ஊரில் இருந்து வேறு ஊருக்கு மாற்றலாம். 3,8-ம் அதிபதி சுக்கிரன் ஆட்சி பலம் பெறுவதால் அழகு, ஆடம்பர பொருட்கள் விற்கும் சில்லறை வியாபாரிகளுக்கு வியாபாரம் அமோ கமாக இருக்கும். சிலருக்கு ஆன்மீக நாட்டம் அதிகமாகும். தொலைந்து போன, திருடு போன, கை மறதியாக வைத்த பொருட்கள் கிடைக்கும். கடன் தொகையை சமாளிக்க தேவையான பொருள் உதவி கிடைக்கும். இளைய சகோதரருக்கு திருமணம் நடக்கும். பெண்களுக்கு பொன், பொருள் சேர்க்கை உண்டாகும்.

    செல்: 98652 20406

    • தூத்துக்குடி ஸ்ரீ பாகம்பிரியாள் வீதியுலா.
    • திருப்போரூர் ஸ்ரீ முருகப்பெருமான் பால் அபிஷேகம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு ஐப்பசி-23 (ஞாயிற்றுக்கிழமை)

    பிறை : தேய்பிறை

    திதி : சதுர்த்தி காலை 10.25 மணி வரை பிறகு பஞ்சமி

    நட்சத்திரம் : திருவாதிரை பின்னிரவு 2.41 மணி வரை பிறகு புனர்பூசம்

    யோகம் : சித்தயோகம்

    ராகுகாலம் : மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை

    எமகண்டம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    சூலம் : மேற்கு

    நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    திருப்போரூர் முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம், திருவல்லிக்கேணி ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம்

    மாயவரம் ஸ்ரீ கவுரிமாயூரநாதர் காலை நாற்காலி மஞ்சத்தில் பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு. இரவு கற்பக விருட்சம் காமதேனு வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு. திருஇந்தளூர் ஸ்ரீ பரிமளரெங்கராஜர் சந்திர பிரபையில் பவனி. தூத்துக்குடி ஸ்ரீ பாகம்பிரியாள் வீதியுலா. சூரியனார்கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம். திருப்போரூர் ஸ்ரீ முருகப்பெருமான் பால் அபிஷேகம்.

    சாத்தூர் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் புறப்பாடு. ராமேசுவரம் ஸ்ரீ பர்வர்த்தியம்மன் ஊஞ்சலில் காட்சி. வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீ அங்காரகருக்கும், ஸ்ரீ செல்வமுத்துக்குமார சுவாமிக்கும் அபிஷேகம். காஞ்சி ஸ்ரீ காமாட்சியம்மன், இருக்கன்குடி ஸ்ரீமாரியம்மன், சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன் கோவில்களில் காலை அபிஷேகம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ பெரியாழ்வார் புறப்பாடு. ஸ்ரீ வாஞ்சியம் ஸ்ரீ வாஞ்சிநாத சுவாமி காலை சிறப்பு அபிஷேகம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-ஆதாயம்

    ரிஷபம்-சுகம்

    மிதுனம்-லாபம்

    கடகம்-வரவு

    சிம்மம்-பாராட்டு

    கன்னி-பண்பு

    துலாம்- முயற்சி

    விருச்சிகம்-சாந்தம்

    தனுசு- தெளிவு

    மகரம்-பக்தி

    கும்பம்-இன்பம்

    மீனம்-உழைப்பு

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    பணவரவு திருப்தி தரும் நாள். கண்ணியமிக்கவர்கள் கைகொடுத்து உதவுவர். உத்தியோகம் சம்பந்தமாக எடுத்த புதுமுயற்சி வெற்றி பெறும்.

    ரிஷபம்

    மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். மனதிற்கினிய தகவல் வரும். அரைகுறையாக நின்ற வீடு கட்டும் பணியைத் தொடருவீர்கள்.

    மிதுனம்

    ஆதாயம் அதிகரிக்கும் நாள். அயல்நாட்டு முயற்சி அனுகூலம் தரும். நீண்டநாட்களாக எதிர்பார்த்த காரியமொன்று நடைபெறும். தொழில் வளர்ச்சி உண்டு.

    கடகம்

    குடும்பச்சுமை கூடும் நாள். எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். குடும்பத்தினர்களிடம் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது.

    சிம்மம்

    துணிவும், தன்னம்பிக்கையும் கூடும் நாள். கூட்டுத் தொழிலைத் தனித் தொழிலாக மாற்றலாமா என்ற சிந்தனை மேலோங்கும்.

    கன்னி

    முன்யோசனையுடன் செயல்பட வேண்டிய நாள். வரவைக் காட்டிலும் செலவு கூடும். உறவினர் பகை உருவாகும். வாக்கு வாதங்களைத் தவிர்ப்பது நல்லது.

    துலாம்

    வெற்றி செய்திகள் வீடு தேடி வரும் நாள். உறவு பகை பாராமல் அனைவருக்கும் உதவி செய்வீர்கள். தடைபட்ட வருமானம் தானாகவே வந்து சேரலாம்.

    விருச்சிகம்

    மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். செல்வாக்கு மிக்கவர்களைப் பகைத்துக் கொள்ள வேண்டாம். உத்தியோகத்தில் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்காது.

    தனுசு

    மதிநுட்பத்தால் மகத்தான காரியமொன்றை செய்துமுடிக்கும் நாள். வீடு, நிலம் சம்பந்தமான முடிவு எடுக்க முக்கியப் புள்ளிகளைச் சந்திப்பீர்கள்.

    மகரம்

    அலைபேசி மூலம் அனுகூலத் தகவல் வந்து சேரும் நாள். நினைத்தது நிறைவேறி நிம்மதி காண்பீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் உதவி கிடைக்கும்.

    கும்பம்

    கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழும் நாள். இல்லத்தினர்களின் ஒத்துழைப்போடு எளிதில் பணிகளை செய்து முடிப்பீர்கள்.

    மீனம்

    திட்டமிட்ட காரியமொன்றில் திடீர் மாற்றம் ஏற்படும். தொழில் ரீதியான முயற்சி பலன் தரும். உத்தியோகத்தில் தலைமையின் நம்பிக்கைக்குப் பாத்திரமாவீர்கள்.

    • ஆதிசிவசைலம் எனப்படும் அத்திரி மலைக்கோவில் உள்ளது.
    • ஆறுபட்டை வடிவ லிங்க ரூபமாக உள்ள அம்பிகையின் நாமமும் அத்திரி பரமேஸ்வரி என்பதே ஆகும்.

    கோரக்கரின் பூர்வ ஜென்மத்தில், அத்திரி என்ற முனிவருக்கு 8 சீடர்கள் இருந்தனர். அவர்களில் கோரக்கரும் ஒருவர். கோரக்கரின் குருபக்திக்காக அத்திரி மகரிஷி தாம் தவம் செய்ய அத்தி மரத்தடியில் தண்டத்தால் தட்டி, தம் கமண்டலத்தில் உள்ள நீரை தெளித்து அங்கேயே கங்கையை உற்பத்தி செய்து அதில் கோரக்கரை நீராட செய்தார்.

    அத்திரி கங்கை

    இன்றும், அது அத்திரி கங்கை என்றே அழைக்கப்படுகிறது. திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகில் உள்ள ஆழ்வார்குறிச்சிக்கு மேற்கே சுமார் 5 கி.மீட்டர் தொலைவில் ஆதிசிவசைலம் எனப்படும் அத்திரி மலைக்கோவில் உள்ளது.

    இங்குள்ள ஆதி சிவசைல நாதரை அத்திரி முனிவர் வழிபட்டதால் 'அத்திரி பரமேஸ்வரர்' என்றும் கோரக்கரால் வழிபடப்பட்டதால் 'கோரக்க நாதர்' என்றும் பெயர்கள் கொண்டுள்ளார். இங்குள்ள ஆறுபட்டை வடிவ லிங்க ரூபமாக உள்ள அம்பிகையின் நாமமும் அத்திரி பரமேஸ்வரி என்பதே ஆகும்.

    • பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், கோவில் நிர்வாகம் நேற்று முதல் புதிய அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.
    • கோவில் பணியாளர்கள், காவல்துறையினர்கள் கடலோர பாதுகாப்பு குழுவினர்கள் ஆகியோர் இந்தப்பணியில் ஈடுபட்டனர்.

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.

    பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பதினால் சுவாமி தரிசனம் செய்ய முடியாத நிலையில் பக்தர்கள் மறுநாள் சுவாமியை தரிசனம் செய்யலாம் என கருதி இரவு நேரங்களில் கடற்கரை பகுதியில் தங்குவது வழக்கமாக இருந்தது.

    இந்த நிலையில் சமீப காலமாக கடற்கரையில் தங்கும் பக்தர்கள் உடைமைகள் திருட்டு போவதாக புகார்கள் வந்தவாறு உள்ளது.

    எனவே பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், கோவில் நிர்வாகம் நேற்று முதல் புதிய அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.

    இதன் பேரில் கடற்கரை பகுதியில் யாரும் இரவு நேரங்களில் தங்க அனுமதி இல்லை என கோவில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது. நேற்று கோவில் கடற்கரை பகுதியில் தரிசனத்திற்காக குடும்பத்துடன் தங்கி இருந்த பக்தர்களை கோவில் பணியாளர்கள், காவல்துறையினர்கள் கடலோர பாதுகாப்பு குழுவினர்கள் ஆகியோர் இந்தப்பணியில் ஈடுபட்டனர். பக்தர்கள் யாரும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை கோவில் கடற்கரையில் தங்க அனுமதி இல்லை என ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தினர்.



    நேற்று கடற்கரை பகுதியில் இருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள அய்யா வைகுண்டர் அவதாரப் பதி வரை உள்ள கடற்கரை பகுதியில் பக்தர்கள் யாரும் இல்லாதவாறு கடலோர பாதுகாப்பு குழுவினர்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் ஆகியோர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    கடற்கரையில் தங்கிய பக்தர்களை போலீசார் அவர்களுக்கு அறிவுரை வழங்கி கோவில் வளாகம் மற்றும் அங்குள்ள மண்டபங்களில் தங்கிக் கொள்ளுமாறும் கூறினர்.

    இதனால் தற்பொழுது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையானது இரவு நேரத்தில் ஆள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. 

    • திருப்பதியில் நேற்று 68,075 பேர் தரிசனம் செய்தனர்.
    • நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 18 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட துவார தரிசனம் டிசம்பர் 30-ந்தேதி முதல் ஜனவரி 8-ந் தேதி வரை 10 நாட்கள் நடைபெற உள்ளது.

    இதுகுறித்து திருப்பதி தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி வெங்கய்ய சவுத்ரி மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி அணில் குமார் சிங்கால் ஆகியோர் கூறியதாவது:-

    வைகுண்ட துவார தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைன் மற்றும் நேரடியாக வழங்குவது குறித்து ஒரு வாரத்தில் அறிவிக்கப்படும்.

    ஸ்ரீவாணி தரிசன டிக்கெட்டுகள் வழங்குதல் மற்றும் சிறப்பு தரிசன டிக்கெட் வழங்குதல், சலுகை தரிசன டிக்கெட் வழங்குவது தொடர்பாக அமைக்கப்பட்ட குழுவினர் அளித்த அறிக்கையின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    வைகுண்ட தரிசன பாதையில் உள்ள கேமராக்கள் கட்டளை கட்டுப்பாட்டு மையம் மூலம் கண்காணிக்கப்படும். இதன் மூலம் பக்தர்களை கட்டுப்படுத்தி சிரமமின்றி தரிசனத்திற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    திருப்பதியில் நேற்று 68,075 பேர் தரிசனம் செய்தனர். 26,535 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 3.80 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 18 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    • ஒருமுறை பிரம்ம தேவர், தன் பதவியை இழந்து மீண்டும் படைக்கும் பொறுப்பேற்றார்.
    • சுவாமியின் பாதம் அருகில் மூன்று வயது குழந்தையாக பிரகலாதன் காட்சி அளிக்கிறார்.

    திருச்சி அருகே திருநாராயணபுரம் எனும் ஊரில் வேதநாராயணப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இத்தல இறைவன் வேதநாராயணப் பெருமாள் எனும் திருநாமத்துடன் வேதநாயகி தாயாருடன் அருள்பாலிக்கிறார்.

    ஒருமுறை பிரம்ம தேவர், தன் பதவியை இழந்து மீண்டும் படைக்கும் பொறுப்பேற்றார். அப்போது அவர், தனக்கு வேதங்களை உபதேசிக்கும்படி பெருமாளை வேண்டினார். அவருக்கு பெருமாள், இத்தலத்தில் வேதங்களை உபதேசித்து, பின்பு இங்கேயே பள்ளிக்கொண்டார். அதன் காரணமாகவே இத்தல இறைவனுக்கு 'வேதநாராயணர்' என்ற பெயர் ஏற்பட்டது.

    பிற்காலத்தில் இங்குள்ள சுவாமியின் சிலை மண்ணால் மூடப்பட்டது. ஒரு சமயம், இவ்வூருக்கு வந்த வானவராயர் என்ற மன்னனின் கனவில் தோன்றிய பெருமாள், ''தனது சிலை மண்ணில் புதைந்திருப்பதாக'' உணர்த்தி உள்ளார். இதையடுத்து அந்த சிலையை கண்டெடுத்த மன்னர், கோவிலும் கட்டினார்.

    இரணியனை அழித்தபோது உக்கிரமாக காட்சி அளித்த நரசிம்மர், பிரகலாதனுக்கு இத்தலத்தில் சாந்த ரூபமாக காட்சி தந்ததாக கூறப்படுகிறது. இதனால் இங்குள்ள சுவாமியின் பாதம் அருகில் மூன்று வயது குழந்தையாக பிரகலாதன் காட்சி அளிக்கிறார்.

    ஆலயத்தில் அருள்பாலிக்கும் பெருமாள், நான்கு வேதங்களையும் தலையணையாகக் கொண்டு, ஆதிசேஷன்மீது பள்ளிக் கொண்டபடி, நாபிக்கமலத்தில் இருக்கும் பிரம்மதேவருக்கு வேத உபதேசம் செய்கிறார். பெருமாளின் திருவடியில் ஸ்ரீதேவியும் பூதேவியும் இருக்கிறார்கள். மூலவர் விமானம் வேதவிமானம் எனப்படுகிறது. கோவில் பிரகாரத்தில் ஆண்டாள், ராமானுஜர், நம்மாழ்வார், மணவாளமாமுனிவர், பிள்ளை லோகாச்சாரியார் ஆகியோர் உள்ளனர்.

    காவிரியின் வடகரையில் அமைந்துள்ள இக்கோவிலின் முகப்பில் உள்ள தீப ஸ்தம்பத்தில் கம்பத்தடி ஆஞ்சநேயர் இருக்கிறார். இப்பகுதி மக்களிடையே ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால், இவர் முன்பாக பேசி தீர்த்துக் கொள்கிறார்கள். யாராவது பொய் சொன்னாலோ, ஏமாற்றினாலோ இங்குள்ள கம்பத்தடி ஆஞ்சநேயர் முன்பு சத்தியம் செய்யும் வழக்கம் உள்ளது.

    திருமணத் தடை உள்ளவர்கள், கல்வியில் மேன்மை அடைய விரும்புபவர்கள் இங்குள்ள இறைவனுக்கு துளசி மாலை அணிவித்து, 27 அகல் விளக்கு ஏற்றி ஜாதகத்தை பெருமாள் திருவடியில் வைத்து வழிபட்டு செல்கின்றனர். தோஷம் உள்ளவர்கள், தங்களின் ஜென்ம நட்சத்திரமன்று இந்த வழிபாட்டை செய்வது விசேஷமாகும்.

    திருச்சி - முசிறி சாலையில் திருச்சியில் இருந்து 52 கிலோமீட்டர் தொலைவில் தொட்டியத்திற்கு அருகில் உள்ள திருநாராயணபுரத்தில் இக்கோவில் அமைந்துள்ளது.

    ×