என் மலர்tooltip icon

    வழிபாடு

    • குச்சனூர் ஸ்ரீசனிபகவானுக்கு திருமஞ்சனம்.
    • உப்பூர் ஸ்ரீவெயிலுகாந்த விநாயகர் கோவில்களில் ஹோமம், அபிஷேகம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு ஐப்பசி-22 (சனிக்கிழமை)

    பிறை : தேய்பிறை

    திதி : திருதியை நண்பகல் 12.31 மணி வரை பிறகு சதுர்த்தி.

    நட்சத்திரம் : மிருகசீரிஷம் பின்னிரவு 3.56 மணி வரை பிறகு திருவாதிரை.

    யோகம் : சித்தயோகம்

    ராகுகாலம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    எமகண்டம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    சூலம் : கிழக்கு

    நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீவரதராஜ மூலவருக்கு திருமஞ்சனம்

    இன்று சங்கடஹர சதுர்த்தி. குச்சனூர் ஸ்ரீசனிபகவானுக்கு திருமஞ்சனம். மயிலாடுதுறை ஸ்ரீகவுரிமாயூரநாதர் வெள்ளிப்பட்டிச் சப்பரத்தில் அருள்மிகு பஞ்சமூர்த்திகள் புறப்பாடு. வீரவநல்லூர், பத்தமடை கோவில்களில் அம்பாள் வீதி உலா. ஆறுமுகமங்கலம் ஸ்ரீஆயிரத்தொன்று விநாயகர், தேவக்கோட்டை ஸ்ரீசிலம்பனி விநாயகருக்கு அபிஷேகம். பிள்ளையார்பட்டி ஸ்ரீகற்பக விநாயகர், திருநாறையூர் ஸ்ரீபொள்ளாப் பிள்ளையார், திருவலஞ்சுழி ஸ்ரீசுவேத விநாயகர், திருச்சி உச்சிப்பிள்ளையார், ஸ்ரீமாணிக்கவிநாயகர், மதுரை ஸ்ரீமுக்குறுணி பிள்ளையார், உப்பூர் ஸ்ரீவெயிலுகாந்த விநாயகர் கோவில்களில் ஹோமம், அபிஷேகம்.

    திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள், மன்னார்குடி ஸ்ரீராஜகோபால் சுவாமி கோவில்களில் ஸ்ரீவரதராஜ மூலவருக்கு திருமஞ்சனம். திருவட்டாறு ஸ்ரீஆதிகேசவப் பெருமாள், திருமாலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர், திருவள்ளூர் ஸ்ரீவைத்ய வீரராகவப் பெருமாள் கோவில்களில் திருமஞ்சனம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-ஜெயம்

    ரிஷபம்-வரவு

    மிதுனம்-நன்மை

    கடகம்-தாமதம்

    சிம்மம்-நலம்

    கன்னி-அன்பு

    துலாம்- நட்பு

    விருச்சிகம்-புகழ்

    தனுசு- ஆதரவு

    மகரம்-லாபம்

    கும்பம்-மேன்மை

    மீனம்-இன்பம்

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    அதிகாரப் பதவியில் உள்ளவர்களின் ஆதரவு கிடைக்கும் நாள். வீடு மாற்றங்கள் பற்றி சிந்திப்பீர்கள். பணியாளர்கள் பக்கலபமாக இருப்பர்.

    ரிஷபம்

    மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். எடுத்த செயலை இனிதே செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி கிடைக்கும்.

    மிதுனம்

    குடும்ப ஒற்றுமை கூடும் நாள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் குரலுக்கு செவிசாய்ப்பர்.

    கடகம்

    மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். விரோதங்கள் அகல விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. உத்தியோகத்தில் மேலதிகாரிகளிடம் நெருங்கிப் பழகும் வாய்ப்புக் கிட்டும்.

    சிம்மம்

    நண்பர்கள் தக்க சமயத்தில் கைகொடுத்து உதவுவர். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் ஏற்பட்ட இடையூறுகள் அகலும்.

    கன்னி

    முயற்சி கைகூடும் நாள். ஆசையாக வாங்க நினைத்த பொருளை வாங்கி மகிழ்வீர்கள். பணத்தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும்.

    துலாம்

    சிந்தித்துச் செயல்பட வேண்டிய நாள். எதிரிகளின் பலம் கூடும். கொள்கைப் பிடிப்பை தளர்த்திக் கொள்வீர்கள், விரயங்கள் அதிகரிக்கும்.

    விருச்சிகம்

    போட்டிகளை சமாளிக்க வேண்டிய நாள். புதிய ஒப்பந்தங்களை யோசித்து ஏற்றுக் கொள்ளவும். உத்தியோக முயற்சியில் குறுக்கீடுகள் உண்டு.

    தனுசு

    வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும் நாள். வீண் பழிகள் அகலும். மறைமுகப் போட்டிகளை சமாளிப்பீர்கள். வீடு வாங்கும் யோகம் உண்டு.

    மகரம்

    நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடிவரும். இதுவரை இருந்த பிரச்சனை நல்ல முடிவிற்கு வரும்.

    கும்பம்

    பிரபலமானவர்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாள். அலைபேசி மூலம் நல்ல செய்தியொன்று வந்து சேரும். பணவரவு திருப்தி தரும். தொழில் முயற்சி வெற்றி தரும்.

    மீனம்

    கடினமான காரியத்தைக் கூட எளிதாகச் செய்து முடிக்கும் நாள். கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும். குடியிருக்கும் வீட்டால் ஏற்பட்ட பிரச்சனை அகலும்.

    • பதிவு செய்யும் பக்தர்கள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு டோக்கன் வழங்கப்பட்டு வந்தது.
    • நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 18 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அங்க பிரதட்சணம் செய்வதற்கான இலவச டோக்கன்கள் வழங்கும் நடைமுறையில் மாற்றம் செய்யபட்டுள்ளது.

    இது குறித்து திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அங்க பிரதட்சணம் செய்வதற்கான இலவச டோக்கன்கள் பெற, 3 மாதங்களுக்கு முன்பு ஆன்லைனில் வெளியிடப்படும். இதில் பதிவு செய்யும் பக்தர்கள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு டோக்கன் வழங்கப்பட்டு வந்தது.

    தற்போது இந்த நடைமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. குறிப்பிட்ட தேதியில் தரிசனத்திற்காக முன்பதிவு செய்யும் பக்தர்களில் முதல் 750 பேருக்கு மட்டும் டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.

    இதற்கான டோக்கன்கள் 3 மாதங்களுக்கு முன்பே ஆன்லைனில் வெளியிடப்படும் என்பதால் இந்த மாற்றத்தை கவனத்தில் கொண்டு அதற்கேற்ப அங்க பிரதட்சணம் செய்ய டோக்கன்களை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    திருப்பதியில் நேற்று 61,718 பேர் தரிசனம் செய்தனர். 21,937 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.52 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 18 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    • மாயவரம் ஸ்ரீசவுரீமாயுரநாதர் உற்சவம் ஆரம்பம்.
    • கரூர் தான்தோன்றிமலை ஸ்ரீகல்யாண வெங்கடரமண சுவாமிக்கு திருமஞ்சனம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு ஐப்பசி-21 (வெள்ளிக்கிழமை)

    பிறை : தேய்பிறை

    திதி : துவிதியை பிற்பகல் 2.48 மணி வரை. பிறகு திருதியை.

    நட்சத்திரம் : கார்த்திகை காலை 6.58 மணி வரை. பிறகு ரோகிணி மறுநாள் விடியற்காலை 4.31 மணி வரை. பிறகு மிருகசீரிஷம்.

    யோகம் : சித்த, மரண, சித்தயோகம்

    ராகுகாலம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    எமகண்டம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    சூலம் : மேற்கு

    நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    திருத்தணி ஸ்ரீமுருகப்பெருமானுக்கு கிளி வாகன சேவை

    மாயவரம் ஸ்ரீசவுரீமாயுரநாதர் உற்சவம் ஆரம்பம். மகத்துவஜாரோகணம் திருக்கொடியேற்றம். சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம். கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளுக்கு காலையில் திருமஞ்சன சேவை. மாலையில் ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு. திருமாலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர் கோவிலில் ஸ்ரீசுந்தரவல்லித் தாயார் புறப்பாடு. லால்குடி ஸ்ரீபிரவிருந்த ஸ்ரீமதி என்ற ஸ்ரீபெரு திருப்பிராட்டியார் சமேத ஸ்ரீசப்தரிஷீஸ்வரர் கோவிலில் அபிஷேகம். சுந்தரகுசாம்பிகை புறப்பாடு.

    கரூர் தான்தோன்றிமலை ஸ்ரீகல்யாண வெங்கடரமண சுவாமிக்கு திருமஞ்சனம். தூத்துக்குடி ஸ்ரீபாகம்பிரியாள் வீரவநல்லூர் ஸ்ரீமரகதாம்பிகை கோவில்களில் அபிஷேகம். பெருஞ்சேரி ஸ்ரீவாகீஸ்வரர், படைவீடு ஸ்ரீரேணுகாம்பாள் புறப்பாடு. திருத்தணி ஸ்ரீமுருகப்பெருமானுக்கு கிளி வாகன சேவை. இருக்கன்குடி ஸ்ரீமாரியம்மனுக்கு அபிஷேகம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-உறுதி

    ரிஷபம்-ஆதரவு

    மிதுனம்-லாபம்

    கடகம்-செலவு

    சிம்மம்-ஆதாயம்

    கன்னி-சுபம்

    துலாம்- விருத்தி

    விருச்சிகம்-கடமை

    தனுசு- பயணம்

    மகரம்-பாசம்

    கும்பம்-உயர்வு

    மீனம்-ஆக்கம்

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    சந்தோஷத் தகவல் வந்து சேரும் நாள். தனவரவு திருப்தி தரும். அனாவசியச் செலவுகளை கட்டுப்படுத்துவதில் ஆர்வம் கூடும்.

    ரிஷபம்

    செல்வாக்கு உயரும் நாள். வாழ்க்கைத் துணை வழியே வந்த பிரச்சனை அகலும். பொருளாதார முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும்.

    மிதுனம்

    வருமானம் திருப்தி தரும் நாள். தொழிலுக்காக எடுத்த முயற்சி கைகூடும். குடும்பத்திற்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

    கடகம்

    முன்னேற்றம் கூடும் நாள். முயற்சித்த செயலில் வெற்றி ஏற்படும். கொள்கைப் பிடிப்போடு செயல்படுவீர்கள். வருமானம் உயர எடுத்த புது முயற்சி கைகூடும்.

    சிம்மம்

    குழப்பங்கள் அகலும் நாள். உத்தியோக மாற்றம் உறுதியாகலாம். மங்கல ஓசை மனையில் கேட்பதற்கான அறிகுறிகள் தோன்றும். தொழில் சீராக நடைபெறும்.

    கன்னி

    கோவில் வழிபாட்டில் ஆர்வம் கூடும் நாள். கடமையில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

    துலாம்

    வீண்பழிகள் ஏற்படாதிருக்க விழிப்புணர்ச்சி தேவைப்படும் நாள். வியாபாரப் போட்டி உண்டு. உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும்.

    விருச்சிகம்

    காரிய வெற்றி ஏற்படும் நாள். தொழில் முன்னேற்றம் கருதி முக்கிய முடிவெடுப்பீர்கள். வீட்டிற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

    தனுசு

    சகோதர வழியில் சந்தோஷமான தகவல் வந்து சேரும் நாள். வாகன யோகம் உண்டு. வருமானம் இரட்டிப்பாகும். பயணம் பலன் தரும்.

    மகரம்

    பணத்தேவைகள் பூர்த்தியாகும் நாள். பாசம் மிக்கவர்களின் சந்திப்பு கிட்டும். குழந்தைகளின் கல்வி நலனில் அக்கறை காட்டுவது நல்லது.

    கும்பம்

    தனவரவு திருப்தி தரும் நாள். எண்ணிய காரியம் நிறைவேற அன்னியர் ஆதரவு கிடைக்கும். குடும்ப ரகசியங்களை வெளியில் சொல்லாதிருப்பது நல்லது.

    மீனம்

    எடுத்த காரியத்தில் எளிதில் வெற்றி கிடைக்கும் நாள். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். உடன்பிறப்புகளால் ஏற்பட்ட உபத்திரவங்கள் குறையும்.

    • ஒரு நாள் சிவபெருமான் அவர்களது பக்தியை சோதிக்க எண்ணினார்.
    • கோவில் மூன்று நிலை ராஜகோபுரத்துடன் கிழக்கு நோக்கியவாறு அமைந்துள்ளது.

    கடலூர் மாவட்டம் திருத்தினைநகர் எனும் ஊரில் அமைந்துள்ளது சிவக்கொழுந்தீஸ்வரர் திருக்கோவில். இக்கோவில் தேவாரப் பாடல் பெற்ற நடுநாட்டுத் திருத்தலமாகும். இத்தல இறைவன் சிவக்கொழுந்தீஸ்வரர் என்றும், இறைவி ஒப்பிலாநாயகி என்றும் அழைக்கப்படுகின்றனர்.

    தல வரலாறு

    முன்னொரு காலத்தில் இப்பகுதியில் மிகுந்த சிவ பக்தி கொண்ட ஒரு விவசாயத் தம்பதியினர் வாழ்ந்து வந்தனர். அவர்கள், தினமும் சிவபக்தர் ஒருவருக்காவது உணவளித்து விட்டு, அதன்பின்புதான் சாப்பிடுவதை வழக்கமாக கொண்டிருந்தனர். ஒரு நாள் சிவபெருமான் அவர்களது பக்தியை சோதிக்க எண்ணினார். அதன்படி, எந்த சிவ பக்தரையும் அவரது வீட்டுப்பக்கம் செல்லாதபடி செய்தார்.

    இதனால் மிகவும் மனம் வருந்திய விவசாயி, தோட்டத்தில் உள்ள பணியாளர்களுக்கு உணவு கொடுக்கலாம் என்று நினைத்து, தன் மனைவியுடன் தோட்டத்திற்கு சென்றார். ஆனால் அங்கும் பணியாளர்கள் யாரும் இல்லை. எனவே என்ன செய்வது என்று தெரியாமல் அவர்கள் அங்கேயே காத்திருந்தனர். அப்போது, அந்த வழியாக முதியவர் ஒருவர் வந்தார். விவசாயி அவரிடம், தான் கொடுக்கும் உணவை ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக்கொண்டார்.

    அதற்கு முதியவர் அவரிடம், ''நான் உழைக்காமல் எதுவும் சாப்பிட மாட்டேன். எனவே, உன் தோட்டத்தில் எனக்கு ஏதாவது ஒரு வேலை கொடு. அதற்கு கூலியாக வேண்டுமானால் நான் சாப்பிடுகிறேன்'' என்றார். இதற்கு விவசாயியும் ஒப்புக்கொண்டார். அதன்படி, தன் தோட்டத்தை உழும்படி கூறினார், விவசாயி. முதியவர் வயலில் இறங்கி உழுதார். தம்பதியர் இருவரும் வீட்டிற்கு சென்று, உணவை எடுத்துக்கொண்டு திரும்பினர்.

    அப்போது, தோட்டத்தில் விதைக்கப்பட்டிருந்த தினைப்பயிர்கள் முற்றி, அறுவடைக்கு தயார் நிலையில் தொங்கிக் கொண்டிருந்தது. இந்த அற்புதக் காட்சியைப் பார்த்த விவசாயி அதிசயித்து போனார். பின்பு சந்தேகத்துடன் அருகிலிருந்த கொன்றை மரத்தின் அடியில் முதியவருக்கு சாதம் பரிமாறினார். முதியவரும் மகிழ்ச்சியுடன் விவசாயி அளித்த உணவை சாப்பிட்டார்.

    பின்பு அவரிடம், ''ஒரே நாளில் எப்படி பயிர் விளைந்தது?'' எனத் தன் சந்தேகத்தைக் கேட்டார். முதியவர் சிரித்தபடி, சிவனாக சுயரூபம் காட்டி, அத்தம்பதியருக்கு முக்தி கொடுத்து, சிவலிங்கமாக எழுந்தருளினார். அதிசயமாக ஒரே நாளில் தினை விளைந்ததால், இத்தலத்துக்கு 'தினைநகர்' என்ற பெயர் வந்தது. அதுவே தற்போது, 'தீர்த்தனகிரி' என்று அழைக்கப்படுகிறது. வயலில் இறங்கி வேலை செய்ததால் இத்தல சிவபெருமானுக்கு 'விவசாயி' என்ற பெயரும் உண்டு.

    மகரிஷி ஒருவர் முன்வினைப் பயனால் ஜாம்பு (கரடி) வடிவம் பெற்றார். அவர் இத்தலம் வந்து இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி சிவபெருமானை வணங்கி சாபவிமோசனம் பெற்றதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே இத்தலத்தில் உள்ள தீர்த்தம் 'ஜாம்புவதடாகம்' என்று அழைக்கப்படுகிறது.

     

    கோவில் தோற்றம்

    கோவில் அமைப்பு

    கோவில் மூன்று நிலை ராஜகோபுரத்துடன் கிழக்கு நோக்கியவாறு அமைந்துள்ளது. கோபுர வாசலுக்கு முன்பாக கொடிமரம், பலிபீடம், நந்தி ஆகியவற்றை காணலாம். இத்தலத்தில் சிவபெருமான், சுயம்பு லிங்கமாக சதுர பீடத்துடன் காட்சி தருகிறார். அவர் நிலத்தை உழ பயன்படுத்திய ஏர் மற்றும் நீர் இறைக்கும் கலம் கோவிலில் வைக்கப்பட்டுள்ளன. கோவில் வெளிப்பிரகாரத்தின் வலதுபுறத்தில் ஒப்பிலாநாயகி அன்னை தனிச் சன்னிதியில் அருள்பாலிக்கிறார்.

    ஆலயத்தில் சண்டிகேஸ்வரர் மனைவியுடன் காட்சி தருகிறார். விநாயகர் புடைப்பு சிற்பமாக காணப்படுகிறார். அவரை நான்கு பூதகணங்கள் வணங்கியபடி உள்ளனர். விஷ்ணு, துர்க்கைக்கு தனிச் சன்னிதி இருக்கிறது. சுப்பிரமணியர், நால்வர், வீரசேன மன்னன் ஆகியோரது சன்னிதிகளும் உள்ளன. கோவில் தல விருட்சமாக கொன்றை மரம் விளங்குகிறது. கோஷ்ட மூர்த்திகளாக தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் காணப்படுகின்றனர்.

    திருவிழா

    ஆலயத்தில் வைகாசி மாதம் 13 நாள் பிரம்மோற்சவம், சிவராத்திரி, அன்னாபிஷேகம், பிரதோஷம், நவராத்திரி, ஆருத்ரா தரிசனம் ஆகியவை வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. பங்குனி மாதம் 20-ந் தேதியில் இருந்து தொடர்ந்து மூன்று நாட்கள் சுவாமி மீது சூரிய ஒளி விழுகிறது. இதைக் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள் இங்குள்ள சிவனுக்கும், அம்மனுக்கும் புது வஸ்திரம் சாத்தியும், அபிஷேகம் செய்தும் நேர்த்திக்கடன் செலுத்துக்கின்றனர்.

    கோவில், காலை 6 மணி முதல் 12 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

    அமைவிடம்

    கடலூரில் இருந்து புவனகிரி செல்லும் சாலையில் சென்றால் மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாப் வரும். அங்கிருந்து உள்ளே சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் தீர்த்தனகிரி சிவக்கொழுந்தீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது.

    • திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.
    • திருமெய்யம் ஸ்ரீ சத்தியமூர்த்தி புறப்பாடு.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு ஐப்பசி-20 (வியாழக்கிழமை)

    பிறை : தேய்பிறை

    திதி : பிரதமை மாலை 5.08 மணி வரை பிறகு துவிதியை

    நட்சத்திரம் : பரணி காலை 8.39 மணி வரை பிறகு கார்த்திகை

    யோகம் : சித்த, மரணயோகம்

    ராகுகாலம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    எமகண்டம் : காலை 6 மணி முதல் 7.30 மணி வரை

    சூலம் : தெற்கு

    நல்ல நேரம் : காலை 9 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    இன்று கார்த்திகை, சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்

    இன்று கார்த்திகை விரதம். வேலூர் மாவட்டம் ரத்தினகிரி பாலமுருகன் தங்க ரதக்காட்சி. தென்காசி, வீரவநல்லூர் கோவில்களில் ஸ்ரீ அம்பாள் வீதியுலா. கிடங்கழி நாயனார் குருபூஜை, திருநெல்வேலி ஸ்ரீகாந்திமதியம்மன் காலை வெள்ளிச் சப்பரத்திலும் இரவு கமல வாகனத்திலும் புறப்பாடு. சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.

    சோழவந்தான் அருகில் குருவித்துறை ஸ்ரீ சித்திர ரத வல்லபப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ குருபகவானுக்கு திருமஞ்சனம். ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக் கடலைச் சாற்று வைபவம். திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு குருவார திருமஞ்சனம். குறுக்குத்துறை ஸ்ரீ முருகப் பெருமான் அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. திருமெய்யம் ஸ்ரீ சத்தியமூர்த்தி புறப்பாடு. திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சவுமிய நாராயணப் பெருமாள் திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் மூலவருக்குத் திருமஞ்சனம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-வரவு

    ரிஷபம்-தாமதம்

    மிதுனம்-ஜெயம்

    கடகம்-ஆதரவு

    சிம்மம்-நற்சொல்

    கன்னி-மாற்றம்

    துலாம்- கவனம்

    விருச்சிகம்-திடம்

    தனுசு- சிந்தனை

    மகரம்-யோகம்

    கும்பம்-அமைதி

    மீனம்-சுபம்

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    வளர்ச்சி கூடும் நாள். துணிந்து எடுத்த முடிவு வெற்றி தரும். அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

    ரிஷபம்

    எதிர்பாராத தனலாபம் இல்லம் தேடி வரும் நாள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். தூரதேசத்திலிருந்து அழைப்புகள் வரலாம்.

    மிதுனம்

    நண்பர்களின் ஒத்துழைப்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். தொழில் முன்னேற்றம் உண்டு. உத்தியோகத்தில் இடையூறாக இருந்தவர்கள் விலகிச் செல்வர்.

    கடகம்

    நினைத்தது நிறைவேறும் நாள். புதிய பங்குதாரர்களால் தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் சம்பள உயர்வு பற்றிய சந்தோஷத் தகவல் உண்டு.

    சிம்மம்

    செல்வாக்கு உயரும் நாள். செயல்பாட்டில் வெற்றி கிடைக்கும். தொழிலில் பணியாளர்களால் இருந்து வந்த பிரச்சனைகள் அகலும். கல்யாணக் கனவுகள் நனவாகும்.

    கன்னி

    யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். நிதி நெருக்கடி ஏற்படும். நினைத்த நேரத்தில் எதையும் செய்ய இயலாது. குடும்பச்சுமை கூடும். எதிர்பாராத விரயம் உண்டு.

    துலாம்

    மனக்கலக்கம் ஏற்படும் நாள். குடும்பத்தில் பிரச்சனை அதிகரிக்கும். இடமாற்றம் எதிர்பாராத விதத்தில் உருவாகும். மருத்துவச் செலவு உண்டு.

    விருச்சிகம்

    வாய்ப்புகள் வாயில் தேடி வரும் நாள். பிள்ளைகளின் எதிர்கால நலனில் அக்கறை காட்டுவீர்கள். தொழில் வளர்ச்சிக்குப் புதியவர்கள் வந்திணைவர்.

    தனுசு

    பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். உடன்பிறப்புகளை அனுசரித்துச் செல்வது நல்லது. உத்தியோகத்தில் எதிர்பாராத இடமாற்றம் வரலாம்.

    மகரம்

    நல்ல தகவல் இல்லம் வந்து சேரும் நாள். சகோதரர் அனுகூலம் உண்டு. கொடுக்கல், வாங்கல் ஒழுங்காகும். தொழில் போட்டிகள் அகலும்.

    கும்பம்

    புகழ்மிக்கவர்களின் ஆதரவு உண்டு. பாக்கிகளை வசூலிக்க எடுத்த முயற்சி வெற்றி பெறும். குடும்பத்திலிருந்த கருத்து வேறுபாடுகள் அகலும்.

    மீனம்

    நம்பிக்கைகள் நடைபெறும் நாள். நண்பர்களை நம்பி ஒப்படைக்கும் பொறுப்புகள் நல்லவிதம் நடைபெறும். பணவரவு திருப்தி அளிக்கும். சுபகாரிய பேச்சுகள் முடிவாகும்.

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    உயர்ந்த மனிதர்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாள். உற்சாகத்துடன் பணிபுரிவீர்கள். பொருளாதார நிலை திருப்தி தரும். பொல்லாதவர்கள் தானாகவே விலகுவர்.

    ரிஷபம்

    நட்பால் நன்மை கிடைக்கும் நாள். சுபச்செலவு உண்டு. உடல்நலம் சீராக மாற்று மருத்துவம் கைகொடுக்கும். சொத்துகளால் ஆதாயம் ஏற்படும்.

    மிதுனம்

    நல்லது நடக்கும் நாள். எண்ணங்கள் நிறைவேறுவதில் இருந்த இடையூறுகள் அகலும். தொழிலை விரிவு செய்யலாமா என்ற சிந்தனை மேலோங்கும்.

    கடகம்

    யோகமான நாள். உடல் நலம் சீராகும். சுபச்செய்திகள் வந்து சேரும். தொழில் முயற்சிகள் வெற்றி பெறும். கடன்சுமை குறையும். மனதிற்கினிய சம்பவம் நடைபெறும்.

    சிம்மம்

    பொதுப்பிரச்சனைகளில் ஆர்வம் காட்டுவீர்கள். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஒத்துழைப்பு உண்டு.

    கன்னி

    முயற்சியில் குறுக்கீடுகள் ஏற்படும் நாள். வியாபார விரோதங்கள் அதிகரிக்கும். நண்பர்களிடம் பொறுமையாகப் பழகுவது நல்லது.

    துலாம்

    எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள். எதிரிகளின் பலம் குறையும். வியாபாரம் வெற்றிநடை போடும். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.

    விருச்சிகம்

    விடியும் பொழுதே வியக்கும் செய்தி வந்து சேரும் நாள். வரவு திருப்தி தரும். வி.ஐ.பி. க்களின் சந்திப்பு கிட்டும். வியாபார முன்னேற்றம் உண்டு.

    தனுசு

    நேற்றைய பிரச்சனைகள் இன்று நல்ல முடிவிற்கு வரும் நாள். முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். வரவைக் காட்டிலும் செலவு கூடும்.

    மகரம்

    பற்றாக்குறை அகலும் நாள். பணவரவு கூடும். பால்ய நண்பர்களின் சந்திப்பு கிட்டும். வீடு மாற்றம் மற்றும் நாடு மாற்றச் சிந்தனை மேலோங்கும்.

    கும்பம்

    வரவு வரும் முன்னே செலவு காத்திருக்கும் நாள். எதையும் யோசித்துச் செய்வது நல்லது. உத்தியோகத்தில் சுதந்திரமாகச் செயல்பட இயலாது.

    மீனம்

    வளர்ச்சி கூடும் நாள். வாய்ப்புகள் வாயிற்கதவைத் தட்டும். தொழில் சம்பந்தமாக எடுத்த முயற்சிக்கு தொகை வந்து சேரும். உடன்பிறப்புகள் ஒத்துழைப்புச் செய்வர்.

    • திருநெல்வேலி ஸ்ரீ காந்திமதியம்மன் உற்சவம் ஆரம்பம்.
    • விருதுநகர் விஸ்வநாதர், வேதாரண்யம் திருமறைக்காடர் கோவில்களில் காலை அபிஷேகம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு ஐப்பசி-19 (புதன்கிழமை)

    பிறை : வளர்பிறை

    திதி : பவுர்ணமி இரவு 7.27 மணி வரை பிறகு பிரதமை

    நட்சத்திரம் : அசுவினி காலை 10.14 மணி வரை பிறகு பரணி

    யோகம் : மரண, சித்தயோகம்

    ராகுகாலம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    எமகண்டம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    சூலம் : வடக்கு

    நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    இன்று பவுணர்மி, மதுராந்தகம் ஏரிகாத்த கோதண்டராம சுவாமி திருமஞ்சனம், நரசிம்ம மூலவருக்கு திருமஞ்சன சேவை

    இன்று பவுர்ணமி. கங்கை கொண்ட சோழபுரம் தஞ்சை ஸ்ரீ பெருவுடையார் கோவிலில் அன்னாபிஷேகம். திருநெல்வேலி ஸ்ரீ காந்திமதியம்மன் உற்சவம் ஆரம்பம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம், மைசூர் மண்டபம் எழுந்தருளல். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்ம மூலவருக்கு திருமஞ்சன சேவை. மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமி திருமஞ்சனம். பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. ஸ்ரீ ரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், தேவக்கோட்டை ஸ்ரீ ரங்கநாதர், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி கோவில்களில் திருமஞ்சனம்.

    விருதுநகர் விஸ்வநாதர், வேதாரண்யம் திருமறைக்காடர் கோவில்களில் காலை அபிஷேகம். திருநெல்வேலி சமீபம் நான்காம் நவதிருப்பதி திருபுளியங்குடி ஸ்ரீ பூமிபாலகர், ஸ்ரீபுளியங்குடி வள்ளியம்மை கோவிலில் பெருந்துறை ஸ்ரீ மாணிக்கவாசகர் புறப்பாடு. கரூரில் அமராவதி நதியின் வடகரையில் உத்தான சயனத்தில் ஸ்ரீ அபயபிரதான ஸ்ரீ ரங்கநாதர் புறப்பாடு.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-அமைதி

    ரிஷபம்-ஊக்கம்

    மிதுனம்-நட்பு

    கடகம்-உவகை

    சிம்மம்-ஈகை

    கன்னி-ஆதரவு

    துலாம்- அன்பு

    விருச்சிகம்-ஆசை

    தனுசு- சுகம்

    மகரம்-பெருமை

    கும்பம்-நற்செயல்

    மீனம்-வெற்றி

    • 13 பவுர்ணமிகள் கோரக்கரை தரிசித்தால் நினைத்த காரியம் கைகூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
    • சித்தர்கள் போற்றிய பெரும் சித்தர் கோரக்கர்.

    வடக்கு பொய்கை நல்லூரில் உள்ள கோரக்கர் சித்தர் ஆசிரமத்தை எந்த நாட்களிலும் சென்று வழிபடலாம். இங்கு ஒவ்வொரு நாளும் 3 கால பூஜைகள் நடைபெறுகின்றன. குறிப்பாக குருவாரம் எனப்படும் வியாழக்கிழமை (கோரக்கர் பிறந்த நாள் என்பர்) அன்று வழிபடுவது சிறப்பாகும்.

    வியாழக்கிழமைகளில் காலை முதல் உபவாசம் இருந்து இரவு வழிபட்டு, பிரசாதம் உண்டு, கோவில் வளாகத்தில் தங்கி உறங்கி, விடியல் நீராடி கோரக்கரை வழிபட்டு திரும்பினால் மனக்கவலைகள் அகலும்.

    மேலும், பவுர்ணமி அன்று வழிபட்டால் ஒரு மாதம் வழிபட்ட பலன் கிடைக்கும். அதிலும், ஐப்பசி மாதத்தில் வரும் பவுர்ணமி அன்று அன்னாபிஷேக வழிபாடு மிகச்சிறப்பாக நடைபெறும். அன்று கோரக்கரை தரிசிப்பது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். ஐப்பசி பரணி தினத்தன்று வழிபட்டால் ஓராண்டு வழிபட்ட பலன் கிடைக்கும். தொடர்ந்து, 13 பவுர்ணமிகள் கோரக்கரை தரிசித்தால் நினைத்த காரியம் கைகூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    அதுமட்டுமின்றி, கோரக்கரை வழிபட்டால் திருமணமாகாத இளம் பெண்களுக்கு திருமணம் கைகூடும். குழந்தைபேறு இல்லாத தம்பதிக்கு குழந்தைபேறு கிட்டும். புற்றுநோய் முதலிய அனைத்து நோய்களில் இருந்தும் விடுபடலாம். மன வளர்ச்சி குன்றியோர் இங்கு வந்து சென்றால் மனநலம் பெறுகிறார்கள்.

     

    களவுபோன பொருட்கள் திரும்ப கிடைக்கின்றன. தொலை தூர பயணம் மேற்கொள்ளும் போது இவரை வணங்கி புறப்பட்டால் சிறப்பான பயணமாக அமைவதோடு செல்வ வளமும் கூடும் என்கின்றனர் பக்தர்கள்.

    கருவறையில் உள்ள சிவன், உமை, சித்தர் திருவடிகளுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபடுவது குடும்ப பிரச்சினைகளை நீக்குவதோடு, வெளியில் சொல்ல முடியாத கவலைகளையும் அகற்ற துணையாகிறது. நூற்றுக்கணக்கான துறவிகள் உலக நாடுகளில் இருந்து கோரக்கரை வழிபட்டு ஞான விரிவு பெறுகிறார்கள்.

    கோரக்கர் படத்தை வீடுகளில் வைத்து பூஜிப்பதும், பயண நேரங்களில் சட்டை பையில் வைத்து கொண்டு பயணிப்பதும் நன்மை தருவன. இவரை இயல், இசை, நாடக கலை வல்லுநர்கள் வழிபட்டு புதிய வாய்ப்புகளை பெற்று உயர்கிறார்கள்.

    சித்தர்கள் போற்றிய பெரும் சித்தர் கோரக்கர். அதனால் அவரை தொழுவது சித்தர் உலகையே பூஜித்து கோடி புண்ணியப்பலன் பெறுவதற்கு சமமாகும்.

    • வேத மந்திரங்கள் முழங்க அம்பாள் சன்னதி கொடிமரத்தில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது.
    • கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகமும், சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.

    தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா இன்று கொடியேற்றத்துடன் விமரிசையாக தொடங்கியது. கொடியேற்றத்தையொட்டி இன்று காலை 6 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு கஜ பூஜை, கோ பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.

    இதனை தொடர்ந்து சப்பரத்தில் காந்திமதி அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் முன்பு எழுந்தருளினார். அதனைத்தொடர்ந்து கொடிப்பட்டம் கோவில் பிரகாரத்தில் எடுத்து வரப்பட்டது.

    பின்னர் வேத மந்திரங்கள் முழங்க அம்பாள் சன்னதி கொடிமரத்தில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது.

    அப்போது அங்கிருந்த பக்தர்கள் பக்தி கோஷங்களை எழுப்பினார்கள். பெண்கள் குலவையிட்டனர்.

    இதைத்தொடர்ந்து மஞ்சள், பால், தயிர், இளநீர், தேன் உள்ளிட்ட பல்வேறு திரவியங்கள் கொண்டு கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகமும், சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    வருகிற 18-ந்தேதி வரையில் தினமும் காலையிலும், மாலையிலும் சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை மற்றும் பல்வேறு வாகனங்களில் காந்திமதி அம்பாள் எழுந்தருளி வீதி உலாவும் நடக்கிறது. வருகிற 13-ந் தேதி இரவு 1 மணிக்கு காந்திமதி அம்பாள் தங்க முலாம் சப்பரத்தில் கீழரதவீதி வழியாக கம்பாநதி காமாட்சி அம்மன் கோவிலை சென்றடைகிறார்.

    14-ந் தேதி பகல் 12 மணிக்கு கம்பாநதி அருகே உள்ள காட்சி மண்டபத்தில் காந்திமதி அம்பாளுக்கு, சுவாமி நெல்லையப்பர் காட்சி கொடுக்கும் நிகழ்ச்சியும், மாலை மாற்றும் நிகழ்ச்சியும், சிறப்பு தீபாராதனையும் நடக்கிறது. இதைத்தொடர்ந்து மாலை 4.30 மணிக்கு சுவாமி-அம்பாள் வீதி உலா நடக்கிறது.15-ந் தேதி அதிகாலை 4:30 மணி முதல் 5.30 மணிக்குள் நெல்லையப்பர் கோவில் ஆயிரங்கால் மண்டபத்தில் சுவாமி-அம்பாள் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

    இரவு 9.30 மணிக்கு சுவாமி-அம்பாள் பட்டினப்பிரவேச வீதி உலா நடக்கிறது. 15-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை ஊஞ்சல் மண்டபத்தில் ஊஞ்சல் விழா நடக்கிறது. 18-ந் தேதி சுவாமி-அம்பாள் ரிஷப வாகனத்தில் மறுவீடு பட்டினப்பிரவேச வீதி உலா நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் வெங்கடேஸ்வரன் மற்றும் ஊழியர்கள் செய்துள்ளனர். 

    ×