என் மலர்
வழிபாடு
- சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம்.
- ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீபெரியாழ்வார் புறப்பாடு.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு ஐப்பசி-28 (வெள்ளிக்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : தசமி மறுநாள் விடியற்காலை 4.55 மணி வரை. பிறகு ஏகாதசி.
நட்சத்திரம் : பூரம் நள்ளிரவு 1.51 மணி வரை பிறகு உத்திரம்.
யோகம் : சித்தயோகம்
ராகுகாலம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
எமகண்டம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
சூலம் : மேற்கு
நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை
திருத்தணி ஸ்ரீமுருகப்பெருமானுக்கு கிளி வாகன சேவை
சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம். ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் பவனி. திருத்தணி ஸ்ரீமுருகப்பெருமானுக்கு கிளி வாகன சேவை. திருஇந்தளூர் ஸ்ரீபரிமளரெங்கராஜர் திருக்கல்யாணம், இரவு சூர்ணாபிஷேகம், வெள்ளி ரதம் திருவீதி புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளுக்கு காலையில் திருமஞ்சன சேவை, மாலையில் ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு. திருமாலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர் கோவிலில் ஸ்ரீசுந்தரவல்லித் தாயார் புறப்பாடு. லால்குடி ஸ்ரீபிரவிருந்த ஸ்ரீமதி என்ற ஸ்ரீபெரு திருப்பிராட்டியார் சமேத ஸ்ரீசப்தரிஷீஸ்வரர் கோவிலில் அபிஷேகம்.
திருவிடைமருதூர் ஸ்ரீபிருகத் சுந்தரகுசாம்பிகை புறப்பாடு. கரூர் தான்தோன்றிமலை ஸ்ரீகல்யாண வெங்கடரமண சுவாமிக்கு திருமஞ்சனம். தூத்துக்குடி ஸ்ரீபாகம்பிரியாள் வீரவநல்லூர் ஸ்ரீமரகதாம்பிகை கோவில்களில் அபிஷேகம். பெருஞ்சேரி ஸ்ரீவாகீஸ்வரர், படைவீடு ஸ்ரீரேணுகாம்பாள் புறப்பாடு. இருக்கன்குடி ஸ்ரீமாரியம்மனுக்கு அபிஷேகம். ராமேஸ்வரம் ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. திருப்போரூர் ஸ்ரீமுருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம். ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீபெரியாழ்வார் புறப்பாடு.
இன்றைய ராசிபலன்
மேஷம்-விவேகம்
ரிஷபம்-மாற்றம்
மிதுனம்-விருத்தி
கடகம்-லாபம்
சிம்மம்-ஆதரவு
கன்னி-ஆசை
துலாம்- உதவி
விருச்சிகம்-உறுதி
தனுசு- நம்பிக்கை
மகரம்-உைழப்பு
கும்பம்-நற்செய்தி
மீனம்-உதவி
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
முன்னேற்றம் கூடும் நாள். முக்கிய புள்ளிகளின் சந்திப்பு கிடைக்கும். தாமதப்பட்ட காரியங்கள் இன்று துரிதமாக நடைபெறும். உத்தியோக மாற்றம் உறுதியாகலாம்.
ரிஷபம்
யோகமான நாள். இடமாற்ற சிந்தனைகள் உருவாகும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேருவர். தொல்லை தந்த எதிரிகள் தோள்கொடுத்து உதவுவர்.
மிதுனம்
சோகங்கள் மாறி சுகங்கள் கூடும் நாள். வியாபார போட்டிகள் அகலும். அன்றாட பணிகள் நன்றாக நடைபெறும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.
கடகம்
வரவு திருப்தி தரும் நாள். குடும்பத்தில் அமைதி கூடும். வாகன மாற்றச் சிந்தனை மேலோங்கும். பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள்.
சிம்மம்
நீண்ட நாளைய எண்ணம் நிறைவேறும் நாள். வரவு திருப்தி தரும். நண்பர்களின் உதவியோடு தொழிலில் முதலீடுகள் செய்ய முன்வருவீர்கள்.
கன்னி
நிதி நிலை உயர்ந்து நிம்மதி காணும் நாள். அயல்நாட்டிலிருந்து அனுகூல தகவல் வந்து சேரும். வீடு, இடம் வாங்கும் முயற்சி வெற்றி தரும்.
துலாம்
வளர்ச்சி கூடும் நாள். தொகை கேட்ட இடத்தில் கிடைக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு மறையும். சொத்துகளிலிருந்த வில்லங்கங்கள் அகலும்.
விருச்சிகம்
பொருளாதார நிலை உயரும் நாள். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். தொழில் வளர்ச்சிக்கு செல்வந்தர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
தனுசு
நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும் நாள். நினைத்த காரியம் நிறைவேறும். நிம்மதிக்காக ஆலய வழிபாடு மேற்கொள்வீர்கள்.
மகரம்
சேமிப்பு கரையும் நாள். திடீர் செலவுகளால் திணறல் ஏற்படும். வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. சுதந்திரமாக எதையும் செய்ய இயலாது.
கும்பம்
பாராட்டும், புகழும் கூடும் நாள். பணியில் இருந்த தொய்வு அகலும். நட்பால் நல்ல காரியம் நடைபெறும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.
மீனம்
தடைகள் விலகும் நாள். தனவரவு திருப்தி தரும். இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும். வியாபாரப் போட்டிகள் அகலும்.
- இந்த ஆண்டுக்கான கார்த்திகை திருவிழா வருகிற 27-ந் தேதி சாயரட்சை பூஜையில் காப்பு கட்டுதலுடன் தொடங்குகிறது.
- டிசம்பர் 2-ந் தேதி மலைக்கோவிலில் பரணி தீபம் ஏற்றும் நிகழ்வு நடைபெறும்.
அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் நடைபெற்று வரும் பல்வேறு திரு விழாக்களில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா முக்கியமான தாகும்.
அதன்படி இந்த ஆண்டுக்கான கார்த்திகை திருவிழா வருகிற 27-ந் தேதி சாயரட்சை பூஜையில் காப்பு கட்டுதலுடன் தொடங்குகிறது. விழாவை முன்னிட்டு தினந்தோறும் மாலை 6.30 மணிக்கு சண்முகார்ச்சனை, சண்முகர் தீபாராதனை நடைபெறும்.
டிசம்பர் 2-ந் தேதி மலைக்கோவிலில் பரணி தீபம் ஏற்றும் நிகழ்வு நடைபெறும். அதனைத் தொடர்ந்து டிசம்பர் 3-ந் தேதி திருக்கார்த்திகை தினத்தன்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம் மற்றும் விசேஷ பூஜைகள் நடைபெறும்.
அன்று மாலை 4 மணிக்கு சாயரட்சை பூஜை நடைபெறும். மாலை 4.45 மணிக்கு சின்னக்குமாரர் தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளல் நிகழ்ச்சியும், மலைக்கோவிலில் 4 மூலைகளிலும் தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறும்.
அதன்பின் சரியாக மாலை 6 மணிக்கு திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு சொக்கப்பனை கொழுத்தப்படும். இதே போல் பழனி கோவிலின் உபகோவில்களான திருஆவினன்குடி கோவில், பெரியநாயகி அம்மன், பூம்பாறை முருகன் கோவில்களிலும் திருக்கார்த்திகை தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறும். விழாவுக்கான ஏற்பாடுகளை தேவஸ்தான அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
- துளசி மாலையில், மணியைக் கோர்த்து குழந்தையின் கழுத்தில் போட்டனர்.
- துளசி வெப்பத்தை வெளிப்படுத்தக்கூடியது.
ஐயப்பன் அவதரித்தபோது, அவரது தாயான திருமாலும், தந்தையான சிவபெருமானும் பம்பை நதிக்கரையில் விட்டுச் சென்றனர். அப்போது குளிர்காற்றில் குழந்தைக்கு எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதற்காக, துளசி மாலையில், மணியைக் கோர்த்து கழுத்தில் போட்டனர்.
இதுதவிர மகாவிஷ்ணுக்கு பிடித்தது துளசி. இதனால்தான் ஐயப்பனுக்கு மாலை போடும் பக்தர்கள், துளசி மாலையில், ஐயப்பனின் உருவம் பொறித்த டாலரை அணிகின்றனர். கார்த்திகை மாதம், மழைக்காலம். துளசி வெப்பத்தை வெளிப்படுத்தக்கூடியது என்பதால், துளசிமாலையை அணிவதாக அறிவியல் ரீதியான விளக்கமும் உள்ளது.
- சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் ஐயப்பனை தரிசிக்க 18 படிகள் வழியாக அனுமதிக்கப்படுவர்.
- ஒவ்வொரு படிகளிலும் ஒவ்வொரு தெய்ம் வசிப்பதாக கருதப்படுகிறது.
சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் ஐயப்பனை தரிசிக்க 18 படிகள் வழியாக அனுமதிக்கப்படுவர். அந்த 18 படிகளிலும் 18 தெய்வங்கள் வசிப்பதாக கருதப்படுகிறது.
ஒன்றாம் படி - சூரியன்
இரண்டாம் படி - சிவன்
மூன்றாம் படி - சந்திரன்
நான்காம் படி - பராசக்தி
ஐந்தாம் படி - செவ்வாய்
ஆறாம் படி - ஆறுமுகப் பெருமான்
ஏழாம் படி - புதன்
எட்டாம் படி - மகாவிஷ்ணு
ஒன்பதாம் படி - குரு பகவான்
பத்தாம் படி - பிரம்மா
பதினோறாம் படி - சுக்ரன்
பன்னிரெண்டாம் படி- திருவரங்கன்
பதின்மூன்றாம் படி - சனீஸ்வரன்
பதினான்காம் படி - எமதர்மன்
பதினைந்தாம் படி - ராகு
பதினாறாம் படி - காளி
பதினேழாம் படி - கேது
பதினெட்டாம் படி - விநாயகர்
- சுவாமிமலை ஸ்ரீ முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
- ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் பவனி.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு ஐப்பசி-27 (வியாழக்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : நவமி மறுநாள் விடியற்காலை 4.38 மணி வரை பிறகு தசமி
நட்சத்திரம் : மகம் நள்ளிரவு 1.06 மணி வரை பிறகு பூரம்
யோகம் : அமிர்த, சித்தயோகம்
ராகுகாலம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
எமகண்டம் : காலை 6 மணி முதல் 7.30 மணி வரை
சூலம் : தெற்கு
நல்ல நேரம் : காலை 9 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை
திருவல்லிக்கேணி கோவிலில் ராமர் மூலவருக்கு திருமஞ்சனம், சுவாமிமலை முருகப்பெருமான் வைரவேல் தரிசனம்
சுவாமிமலை ஸ்ரீ முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருஇந்தளூர் ஸ்ரீ பரிமளரங்கநாதர் யானை வாகனத்தில் வீதி உலா. நெல்லை ஸ்ரீ காந்திமதியம்மன் ரதோற்சவம். மாயவரம் ஸ்ரீ கவுரிமாயூரநாதர் காலை யானை, யாளி வாகனங்களில் பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு. இரவு ஸ்ரீ அபயாம்பிகை ஸ்ரீ மாயூரநாத சுவாமி திருக்கல்யாண வைபவம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல்.
சோழவந்தான் அருகில் குருவித்துறை ஸ்ரீ சித்திரரத வல்லபப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ குருபகவானுக்கு திருமஞ்சனம். ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக்கடலைச் சாற்று வைபவம். திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்0திர சுவாமிக்கு குருவார திருமஞ்சன சேவை. குறுக்குத்துறை ஸ்ரீ முருகப் பெருமானுக்கு அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. திருமெய்யம் ஸ்ரீ சத்தியமூர்த்தி புறப்பாடு, திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சவுமிய நாராயணப் பெருமாள் திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் மூலவருக்குத் திருமஞ்சன சேவை. ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் புறப்பாடு. ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் பவனி.
இன்றைய ராசிபலன்
மேஷம்-சிந்தனை
ரிஷபம்-வெற்றி
மிதுனம்-பரிசு
கடகம்-நட்பு
சிம்மம்-பெருமை
கன்னி-நற்செயல்
துலாம்- இன்பம்
விருச்சிகம்-உழைப்பு
தனுசு- உண்மை
மகரம்-நன்மை
கும்பம்-பயணம்
மீனம்-திருப்பம்
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
உடன்பிறப்புகள் உறுதுணையாக இருக்கும் நாள். உத்தியோகத்தில் இழந்த பதவியை மீண்டும் பெறுவீர்கள். சொத்துகளால் ஆதாயம் கிடைக்கும்.
ரிஷபம்
கூடுதல் லாபம் கிடைத்து குதூகலம் காணும் நாள். தொழிலில் புதிய முதலீடுகள் செய்யும் எண்ணம் மேலோங்கும். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும்.
மிதுனம்
வருமானம் திருப்தி தரும் நாள். மங்கல நிகழ்ச்சிகள் மனையில் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள்.
கடகம்
சிந்தித்துச் செயல்பட வேண்டிய நாள். பணப்புழக்கம் அதிகரித்தாலும் அடுத்தடுத்த செலவுகளால் திணறுவீர்கள். உத்தியோக மாற்றம் பற்றிய சிந்தனை உருவாகும்.
சிம்மம்
முன்னேற்றம் கூடும் நாள். தொழிலில் புதிய மாற்றங்களைச் செய்யும் எண்ணம் மேலோங்கும். உடல்நலத்தில் சிறிது அக்கறை காட்டுவது நல்லது.
கன்னி
யோகமான நாள். ஆரோக்கியம் சீராகும். வழக்கமாக செய்யும் பணியை இன்று மாற்றியமைப்பீர்கள். தொழில் ரீதியான பயணம் உண்டு.
துலாம்
வீட்டுத் தேவைகள் பூர்த்தியாகும் நாள். வளர்ச்சிப் பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். தொழில் ரீதியாக செய்த புது முயற்சிகளில் வெற்றி பெறும்.
விருச்சிகம்
முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைக்கும் நாள். தேசப்பற்று மிக்கவர்களின் உதவி கிடைக்கும். பழைய கடன்களை வசூலிக்க எடுத்த முயற்சி வெற்றி தரும்.
தனுசு
அமைதியைக் கடைப்பிடித்து ஆனந்தம் காண வேண்டிய நாள். வேலைகள் உடனடியாக முடியாமல் இழுபறி நிலை ஏற்படும். கேட்ட இடத்தில் உதவி கிடைப்பது அரிது.
மகரம்
நிம்மதி குறையும் நாள். வரவை விட செலவு கூடும். அலுவலகப் பணிகளில் தடைகளும், தாமதங்களும் ஏற்படலாம். உத்தியோக முயற்சியில் தடை ஏற்படலாம்.
கும்பம்
எடுத்த முயற்சிகள் வெற்றி பெறும் நாள். பூர்வீக சொத்துகளில் ஏற்பட்ட வில்லங்கங்கள் அகலும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும்.
மீனம்
சொல்லும் சொற்கள் வெல்லும் சொற்களாக மாறும் நாள். குடும்பத்தில் குதூகலம் தரும் சம்பவம் ஒன்று நடைபெறும். பணத்தேவைகள் எளிதில் பூர்த்தியாகும்.
- ஐயப்பனுக்கு பிடித்தமான அபிஷேகம், நெய் அபிஷேகம்.
- சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு, கோவில் சார்பாக அரவணை பாயசமும், அப்பமும் பிரசாதமாக வழங்கப்படுகிறது.
கார்த்திகை மாதம் என்றாலே ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம் ஒலித்துக்கொண்டே இருக்கும். ஆண்டுதோறும் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து இருமுடி கட்டி 18 படிகள் ஏறி ஐயப்பனை தரிசிக்கிறார்கள்.
கேரள மாநிலம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில், பத்தனம்திட்டா என்ற இடத்திற்கு அருகே அமைந்துள்ளது, சபரிமலை. இந்த மலை மீது மிகவும் பிரசித்திப் பெற்ற ஐயப்பன் கோவில் உள்ளது. இங்கு கார்த்திகை மாதம் 1-ந் தேதியில் இருந்து ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து, விரதம் மேற்கொண்டு இருமுடிகட்டி ஐயப்பனை தரிசிக்கச் செல்வார்கள். சபரிமலை ஐயப்பன் ஆலயம், கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1535 அடி உயரத்தில் அடர்ந்த காட்டுப் பகுதியில் இருக்கிறது.
அகிலத்தைக் காக்கும் அகிலாண்டகோடி பிரமாண்ட நாயகியாக, அன்னை லலிதா திரிபுரசுந்தரி இருக்கிறார். இவரை பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரும் தவம் இருந்து வழிபட்டனர். அவர்கள் முன் தோன்றிய அம்பாளிடம், "விஸ்வரூப தரிசனம் காட்டியருள வேண்டும்" என்று வேண்டினர். அதன்படியே தன்னுடைய விஸ்வரூப தரிசனத்தை அம்பாள் காட்டினார். அப்போது அந்த தேவியின் இதயத்தில் ஒரு லட்சம் இதழ்கள் கொண்ட தாமரைப் பூவில் ஒரு சக்தி இருப்பதை மும்மூர்த்திகளும் கண்டனர். அந்த சக்தியே, 'மகா சாஸ்தா'. அந்த சக்தி தனக்கு பிள்ளையாக பிறக்க வேண்டும் என்று சிவபெருமானும், மகாவிஷ்ணுவும் மனதிற்குள் நினைத்தனர். அதன்படியே சிவனுக்கும், மோகினி அவதாரம் எடுத்த மகாவிஷ்ணுவுக்கும் ஹரிஹர அம்சமாக ஐயப்பன் என்ற பெயரில் அவதரித்தார், சாஸ்தா.
தேவர்களையும், மனிதர்களையும் துன்புறுத்தி வந்த மகிஷி என்ற அரக்கியை கொன்ற பிறகு, சுவாமி ஐயப்பன் தியானம் செய்த இடமே 'சபரிமலை' என போற்றப்படுகிறது. பதினெட்டு மலைகளுக்கு இடையே சுவாமி ஐயப்பனின் கோவில் இருக்கிறது. இந்த ஆலயத்தைச் சுற்றிலும், மாளிகைப்புறத்தம்மன், கன்னிமூல கணபதி, வாவர் சுவாமி, கடுத்தசுவாமி ஆகிய துணை தெய்வங்களும் உள்ளன.
மலை மீதுள்ள இந்த ஆலயத்தை அடைவதற்கு இரண்டு பாதைகள் இருக்கின்றன. எரிமேலி என்ற இடத்தில் இருந்து அடர்ந்த காட்டுப் பகுதி வழியாக 61 கிலோமீட்டர் நடைபயணம் செல்ல வேண்டும். மற்றொன்று பம்பை ஆற்றில் இருந்து ஐந்து கிலோமீட்டர் நடைபயணம் செல்ல வேண்டும். சபரிமலையானது, சுயம்பு லிங்க பூமி, யாக பூமி, பலி பூமி, யோக பூமி, தபோ பூமி, தேவ பூமி, சங்கமம் பூமி என்ற 7 சிறப்புகளைக் கொண்டது. இங்கு சிவனைப் போல தியான கோலத்திலும் (முக்தி அளிப்பது), விஷ்ணுவைப் போல விழித்த நிலையிலும் (காத்தல் தொழில்) ஐயப்பன் அருள்பாலிக்கிறார்.
ஐயப்பனுக்கு பிடித்தமான அபிஷேகம், நெய் அபிஷேகம். பக்தர்கள் இருமுடிகட்டி கொண்டுவரும் தேங்காய்க்குள் இருக்கும் நெய்யைக் கொண்டு ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்கிறார்கள். இறைவனுக்கு அபிஷேகத்துக்கு பக்தர்கள் அளித்த நெய் (ஜீவ ஆத்மா), பரமாத்மாவுடன் (இறைவன்) இணையும் தத்துவத்தை வெளிப்படுத்துகிறது. சபரிமலை ஐயப்பனுக்கு விபூதி, சந்தனம், பால், பன்னீர், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், 108 ஒரு ரூபாய் நாணயம் ஆகிய எட்டு பொருட்களைக் கொண்டு செய்யப்படும் அபிஷேகம் 'அஷ்டாபிஷேகம்' என்று வழங்கப்படுகிறது.
இந்த ஆலயத்திற்குள் வரும் பக்தர்கள், அங்கு எழுதப்பட்டிருக்கும் 'தத்வமஸி' என்ற வார்த்தையைப் பார்த்திருப்பார்கள். அதற்கு 'நீயும் கடவுள்' என்று பொருள். மகரசங்கராந்தி (தைப்பொங்கல்) அன்று, இத்தல இறைவனான ஐயப்பன் பொன்னம்பல மேட்டில் பக்தர்களுக்கு ஜோதி வடிவில் காட்சி தருவார். இந்த ஜோதியை அப்பாச்சிமேடு, பம்பை, பெரியானை வட்டம், புல்மேடு ஆகிய இடங்களில் இருந்து தரிசிக்க முடியும்.
சபரிமலையில் ஐயப்பன் கோவிலுக்குப் பின்புறம், மாளிகை புறத்தம்மன் தனிச் சன்னிதியில் அருள்பாலிக்கிறார். இங்கு தேங்காயை உடைத்து வழிபடக்கூடாது. மாறாக உருட்டி வழிபாடு செய்ய வேண்டும். அதோடு மஞ்சள்பொடியை அம்பாளுக்கு படைத்து வழிபாடு செய்யலாம். ஐயப்பனை புகழ்ந்து பாடும் பாடல்கள், பல பக்தர்களால் பாடப்பட்டிருந்தாலும், சபரிமலை ஆலயத்தில் நடைசாத்தப்படும் நேரத்தில் இசைக்கப்படும் 'ஹரிவராசனம்' பாடல், மிகவும் முக்கியமானது. இது ஐயப்பனுக்கான தாலாட்டு பாடலாகும்.
சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு, கோவில் சார்பாக அரவணை பாயசமும், அப்பமும் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இதில் அரிசி, நெய், சர்க்கரை, ஏலக்காய் கலந்து செய்யப்படும் அரவணை பாயசம் பலரது விருப்பமானதும், சுவைக்கு புகழ்பெற்றதும் ஆகும். சபரிமலை ஆலயத்தின் நிர்வாக உரிமை, திருவாங்கூர் தேவஸ்தானக் குழுவிடம் உள்ளது. ஆலயத்திற்குள் பூஜை செய்யும் அதிகாரம் பெற்றவர்கள், தந்திரிகள் ஆவர். திருவாங்கூர் தேவஸ்தானம், சபரிமலை ஐயப்பன் கோவிலை, சுமார் ரூ.30 கோடிக்கு காப்பீடு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு புனிதப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். சபரிமலைக்குப் புனிதப்பயணம் மேற்கொள்ளும் ஒவ்வொரு பக்தனும், ஜாதி, மத, இன வேறுபாடின்றி, ஒரே மனதுடன், ஒரே மந்திரத்தை உச்சரித்தப்படி சுவாமி ஐயப்பனின் திருவடிகளை அடைய வேண்டும் என்பதே இந்த ஆலயத்தின் அடிப்படை.
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
புது முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் நாள். வரவு திருப்தி தரும். அடிப்படை வசதிகளைப் பெருக்கிக்கொள்ள முன்வருவீர்கள்.
ரிஷபம்
உறவினர்களை சந்தித்து உள்ளம் மகிழும் நாள். உள்ளத்தில் நினைத்ததை உடனடியாக செய்து முடிப்பீர்கள். உத்தியோக மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள்.
மிதுனம்
கோவில் வழிபாட்டல் குதூகலம் காண வேண்டிய நாள். திடீர் முன்னேற்றம் உண்டு. தொலைபேசி வழித்தகவல் தொழில் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்.
கடகம்
தொட்டது துலங்கும் நாள். பணத்தேவைகள் பூர்த்தியாகும். விரதம். வழிபாடுகளில் நம்பிக்கை கூடும். உத்தியோகத்தில் இடமாறுதல் ஏற்படும்.
சிம்மம்
ஆலய வழிபாட்டில் அக்கறை செலுத்தும் நாள். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும். அன்னிய தேசத்திலிருந்து நல்ல தகவல் வரலாம்.
கன்னி
கலகலப்பான செய்தி காலை நேரத்திலேயே வந்து சேரும் நாள். கடமையில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். உத்தியோக உயர்வு பற்றிய தகவல் வரலாம்.
துலாம்
இன்பங்கள் வந்து சேரும் நாள். தொழிலுக்காக எடுத்த முயற்சி பலன் தரும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் மனதில் இடம்பெறுவீர்கள்.
விருச்சிகம்
புகழ் கூடும் நாள். புனிதப் பயணங்கள் உண்டு. நண்பர்களால் நம்பிக்கைகள் நடைபெறும். வரவு திருப்தி தரும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.
தனுசு
யோசித்து செயல்பட வேண்டிய நாள். தொழில் பங்குதாரர்களால் தொல்லை உண்டு. உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும்.
மகரம்
பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். புதிய சொத்துகள் வாங்கும் எண்ணம் உருவாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்வர்.
கும்பம்
ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய நாள். கைமாற்றாக கொடுத்த பணம் திரும்பக் கிடைக்கலாம். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.
மீனம்
குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும் நாள். வரும் வாய்ப்புகளை உபயோகப்படுத்திக் கொள்வது உங்கள் புத்திசாலித்தனமாகும். பகை ஒன்று நட்பாகலாம்.
- திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம்.
- திருப்பெருந்துறை ஸ்ரீ மாணிக்கவாசகர் புறப்பாடு.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு ஐப்பசி-26 (புதன்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : அஷ்டமி மறுநாள் விடியற்காலை 4.52 மணி வரை பிறகு நவமி
நட்சத்திரம் : ஆயில்யம் நள்ளிரவு 12.52 மணி வரை பிறகு மகம்
யோகம் : சித்தயோகம்
ராகுகாலம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
எமகண்டம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
சூலம் : வடக்கு
நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை
திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்ம மூலவருக்கு திருமஞ்சனம்
திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம், திருஇந்தளூர் ஸ்ரீ பரிமளரங்கநாதர் அனுமன் வாகனத்தில் வீதி உலா, வாடிப்பட்டி அருகே குலசேகரன் கோட்டை ஸ்ரீ மீனாட்சி கோவிலில் கால பைரவருக்கு அபிஷேகம். ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதிக்கு பால் அபிஷேகம். மாயவரம் ஸ்ரீ கவுரிமாயூரநாதர் காலை கயிலாய அன்னபட்சி வாகனங்களில் பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு, யானை, யாளி வாகனங்களில் பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு திருவீதியுலா, தூத்துக்குடி ஸ்ரீ பாகம்பிரியாள், தென்காசி ஸ்ரீ உலகம்மை, பத்தமடை ஸ்ரீ மீனாட்சியம்மன் கோவில்களில் பவனி வரும் காட்சி.
திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்ம மூலவருக்குத் திருமஞ்சனம். திருநெல்வேலி சமீபம் 4-ம் நவதிருப்பதி திருபுளிங்குடி ஸ்ரீ பூமிபாலகர், ஸ்ரீ புளியங்குடி வள்ளியம்மை தலத்தில் திருமஞ்சனம். மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமி திருமஞ்சனம். விருதுநகர் விஸ்வநாதர், வேதாரண்யம் திருமறைக்காடர் கோவில்களில் காலையில் அபிஷேகம். திருப்பெருந்துறை ஸ்ரீ மாணிக்கவாசகர் புறப்பாடு. கரூரில் அமராவதி நதியின் வடகரையில் உத்தான சயனத்தில் ஸ்ரீ அபய பிரதான ஸ்ரீ ரங்கநாதர் புறப்பாடு. ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், தேவக்கோட்டை ஸ்ரீ ரங்கநாதர், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி கோவில்களில் திருமஞ்சனம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-தனம்
ரிஷபம்-சுகம்
மிதுனம்-வெற்றி
கடகம்-முயற்சி
சிம்மம்-திறமை
கன்னி-நிம்மதி
துலாம்- தீரம்
விருச்சிகம்-உறுதி
தனுசு- ஆதரவு
மகரம்-மாற்றம்
கும்பம்-சுபம்
மீனம்-செலவு
- குலதெய்வம் என்பது அந்தக் குடும்பத்துக்கே உரியது என்பதால், திருமணமான பெண் புதிய வீட்டில் கணவரின் குலதெய்வத்தை வழிபட வேண்டும்.
- உப்பும் புளியும் சேர்த்து தயாரிப்பதனால் ஊறுகாயைக் கூட எடுத்து செல்லக் கூடாதாம்.
திருமணமான பெண்கள் பிறந்த வீட்டிற்கு சென்று வரும்போதெல்லாம் நிச்சயமாக ஏதாவது ஒன்றை எடுத்து செல்வார்கள். அது மளிகை பொருட்களாகவும் இருக்கலாம் அல்லது அவர்களது மனதிற்கு பிடித்த பொருளாகவும் இருக்கலாம் அல்லது அவர்கள் புழங்கிய பொருளாகவும் இருக்கலாம். என்ன காரணமாக இருந்தாலும் சரி குறிப்பிட்ட பொருட்களை மட்டும் பிறந்த வீட்டில் இருந்து கொண்டு செல்லக் கூடாதாம். அவை என்னென்ன என்று பார்க்கலாம் வாருங்கள்.
* உப்பு மற்றும் புளி : எந்த காரணம் கொண்டும் நிச்சயமாக கொண்டு செல்லக் கூடாதாம். அப்படி கொண்டு சென்றால் பிறந்த வீட்டில் உள்ள மகாலட்சுமி அங்கிருந்து வெளியேறி விடுவாள் என்பது நம்பிக்கை.
* உப்பும் புளியும் சேர்த்து தயாரிப்பதனால் ஊறுகாயைக் கூட எடுத்துச் செல்லக் கூடாதாம்.
* நல்லெண்ணெய்: பிறந்த வீட்டிற்கும் புகுந்த வீட்டிற்கும் இடையில் சிறு மனக்கசப்பு இருந்தாலும் அது பெரிதாகிவிடும்.
* கசப்பு தன்மையுள்ள காய்கறிகள், கீரைகள் : அகத்திக்கீரை, பாகற்காய் போன்றவற்றை பிறந்த வீட்டில் இருந்து எடுத்து செல்லக் கூடாது என்கின்றனர். இதனால் தேவையில்லாத மனக்கசப்புகள் உண்டாகும் என்பது சாஸ்திர நியதி.
* பூஜை பொருட்கள் : பிறந்த வீட்டின் குலதெய்வப் படங்கள் அல்லது சிலைகள், பூஜை பொருட்கள், விளக்கு முதலானவற்றை கொண்டு செல்லக் கூடாது. பயன்படுத்தாத பொருட்களாக இருந்தால் எடுத்துச் செல்லலாம். ஒரு வீட்டில் ஏற்றிய விளக்கை எப்போதும் மற்றொரு வீட்டிற்கு எடுத்துச் செல்லக்கூடாது. அப்படி செய்தால் லட்சுமி கடாட்சம் மங்கிவிடும்.

* குலதெய்வம் என்பது அந்தக் குடும்பத்துக்கே உரியது என்பதால், அதற்கான வழிபாடு அங்கேயே தொடர வேண்டும். திருமணமான பெண் புதிய வீட்டில் கணவரின் குலதெய்வத்தை வழிபட வேண்டும்.
* இரும்பு மற்றும் கூர்மையான பொருட்கள்: கத்தி, அரிவாள் உள்ளிட்ட இரும்பு பொருட்களையும் எடுத்துச் செல்லக் கூடாது. அப்படி எடுத்துச் சென்றால் பிறந்த வீட்டாருக்கும் புகுந்த வீட்டாருக்கும் இடையே பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாம்.
* துடைப்பம், முறம்: வீட்டை சுத்தம் செய்ய பயன்படுத்தும் துடைப்பம், மாப் மற்றும் அரிசி அளக்க பயன்படுத்தும் படி , புடைக்க முறம் போன்றவற்றை எடுத்துச் செல்லக் கூடாது. இதனால் இரு வீட்டாருக்கும் பிரச்சனை ஏற்படக்கூடும்.
* கோல மாவு : இப்போதெல்லாம் கோலம் போடுவதே குறைந்துவிட்டது எனினும் சிலர் அவ்வழக்கத்தை விடாமல் தொடர்ந்து வருகின்றனர். பிறந்த வீட்டில் இருந்து கோலமாவை இலவசமாக எடுத்து வருதல் என்பது கூடாது. வேண்டுமென்றால் இதற்கான தொகையை தாயிடம் கொடுத்துவிட்டு எடுத்து வரலாம்.
- திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை.
- திருத்தணி முருகப் பெருமான் கிளி வாகன சேவை.
இந்த வார விசேஷங்கள்
11-ந் தேதி (செவ்வாய்)
* திருஇந்தளூர் பரிமள ரெங்கநாதர் கருட வாகனத்தில் பவனி.
* திருநெல்வேலி காந்திமதியம்மன் தவழும் கண்ணன் அலங்காரம்.
* திருமயம் சத்தியமூர்த்தி புறப்பாடு.
* மேல்நோக்கு நாள்.
12-ந் தேதி (புதன்)
* திருநெல்வேலி காந்திமதியம்மன் சிவபூஜை செய்தல், இரவு சப்தா வர்ண பல்லக்கில் பவனி.
* திருவைகுண்டம் கள்ளபிரானுக்கு பால் அபிஷேகம்.
* தூத்துக்குடி பாகம்பிரியாள், தென்காசி உலகம்மை, பத்தமடை மீனாட்சி அம்மன் தலங்களில் பவனி.
* கீழ்நோக்கு நாள்.
13-ந் தேதி (வியாழன்)
* சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
* திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை.
* திருத்தணி முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்.
* கீழ்நோக்கு நாள்.
14-ந் தேதி (வெள்ளி)
* திருநெல்வேலி காந்திமதியம்மன் அதிகாலை தவசுக்கு புறப்படுதல்.
* திருவில்லிபுத்தூர் ஆண்டாள் புறப்பாடு.
* ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி தங்க பல்லக்கில் பவனி.
* திருத்தணி முருகப் பெருமான் கிளி வாகன சேவை.
* கீழ்நோக்கு நாள்.
15-ந் தேதி (சனி)
* சுமார்த்த ஏகாதசி.
* சங்கரன்கோவில் கோமதியம்மன், தூத்துக்குடி பாகம்பிரியாள், கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன், வீரவநல்லூர் மரகதாம்பிகை, தென்காசி உலகம்மை, பத்தமடை மீனாட்சி அம்மன் தலங்களில் திருக்கல்யாண வைபவம்.
* உத்திரமாயூரம் வள்ளலார் சன்னிதியில் பஞ்ச மூர்த்திகளுடன் புறப்பாடு.
* கடையம் விசுவநாதர் திருக்கல்யாணம்.
* மேல்நோக்கு நாள்.
16-ந் தேதி (ஞாயிறு)
* முகூர்த்த நாள்.
* வைஷ்ணவ ஏகாதசி.
* மாயவரம் கவுரிநாதர் கடைமுகம், உற்சவ தீர்த்தவாரி, விருட்சப சேவை.
* திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் திருவனந்தல் ஆரம்பம்.
* சமநோக்கு நாள்.
17-ந் தேதி (திங்கள்)
* பிரதோஷம்.
* முடவன் முழுக்கு.
* ஐயப்ப பக்தர்கள் மாலை அணியும் விழா.
* திருச்சானூர் பத்மாவதி தாயார் கார்த்திகை உற்சவம் ஆரம்பம்.
* திருவெண்காடு, திருக்கழுக்குன்றம், திருவாடானை, திருக்கடவூர் தலங்களில் 1008 சங்காபிஷேகம்.
* சமநோக்கு நாள்.






