என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    மனக்குழப்பம் அகலும் நாள். மனதளவில் இருந்த காரியம் ஒன்று செயலளவில் நிறைவேறும். உத்தியோகத்தில் செய்த புது முயற்சி வெற்றி தரும். அரசியல்வாதிகளால் அனுகூலம் உண்டு.

    ரிஷபம்

    நாட்டுப்பற்று மிக்கவர்களின் நல்லாதரவு கிடைக்கும் நாள். நண்பர்களின் ஒத்துழைப்போடு நல்ல காரியம் நடைபெறும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் மனதில் இடம்பெறுவீர்கள்.

    மிதுனம்

    விருப்பங்கள் நிறைவேறும் நாள். சாமர்த்தியமாகப் பேசி சமாளிப்பீர்கள். சில காரியங்கள் நினைத்ததற்கு மாறாக நடைபெறும். அலுவலகப் பணிக்காக அலைச்சல் ஏற்படலாம்.

    கடகம்

    எதிர்பாராத உதவி எளிதில் கிடைக்கும் நாள். அக்கம் பக்கத்து வீட்டாரின் பாச மழையில் நனையும் வாய்ப்பு உண்டு. புதிய உத்தியோக வாய்ப்புகள் கைகூடும். தொழில் சீராக நடைபெறும்.

    சிம்மம்

    தேசப்பற்று மிக்கவர்களின் நட்பு கிட்டும் நாள். சமுதாயப் பணிகளில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். பொருளாதார நிலை உயரும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கூடும்.

    கன்னி

    நல்ல சம்பவம் இல்லத்தில் நடைபெறும் நாள். பிள்ளைகளால் பெருமையான செய்திகள் வந்து சேரும். தொழில் வளர்ச்சிக்கு அனுபவமிக்கவர்களிகளிடம் ஆலோசனை கேட்பீர்கள்.

    துலாம்

    பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். புதிய முயற்சிகளில் வெற்றி உண்டு. அரசியல்வாதிகளின் ஆதரவு கிடைக்கும். நீண்ட காலப் பிரச்சனைகளுக்கு முடிவு காண்பீர்கள்.

    விருச்சிகம்

    யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். நினைத்தது நடைபெறுவதில் தாமதம் ஏற்படலாம். விரயங்கள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் மீது கோபப்படலாம்.

    தனுசு

    பிரச்சனைகள் தீரும் நாள். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். தொழில் வளர்ச்சி திருப்தி தரும்.

    மகரம்

    பிரபலமானவர்களின் சந்திப்பால் பெருமை அடையும் நாள். திருமண வாய்ப்பு கைகூடி வரும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேருவர். தொழில் முன்னேற்றம் உண்டு.

    கும்பம்

    நட்பால் நன்மை கிட்டும் நாள். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். ஆரோக்கியம் சீராகும். கடன்சுமை குறையும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு உண்டு.

    மீனம்

    குடும்பச் சுமை கூடும் நாள். புதுமுகங்களின் அறிமுகம் கிடைக்கும். பாக்கிகள் வசூலாகும். தொல்லை தந்தவர் விலகுவர். வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும்.

    • ரிஷபம் பொறுப்புடன் செயல்பட வேண்டிய வாரம்.
    • மிதுனம் சிந்தனையில் ஏற்பட்ட குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும் வாரம்.

    மேஷம்

    புதிய வளர்ச்சிக்கான பாதை உருவாகும் வாரம். ராசி அதிபதி செவ்வாய் சம சப்தம பார்வையால் ராசியை பார்க்கிறார். ராசி பலம் பெறுவதால் செயல்பாடுகளில் ஏற்பட்ட தடை தாமதங்கள் அகலும். வளர்ச்சிப் பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். பிரச்சினைகளுக்கு மத்தியில் வாழ்ந்த உங்களுக்கு புதிய நம்பிக்கை, தைரியம் கூடும்.

    புதிய வீடு கட்டுதல், வீட்டை விரிவு செய்தல், நவீன பொருட்களை சேர்த்தல் போன்ற எண்ணங்கள் அதிகரிக்கும். கூட்டாளிகளின் ஒற்றுமையற்ற செயல்களால் கூட்டுத் தொழிலில் மந்த நிலை ஏற்படும். வேலைப் பளு சற்று அதிகரிக்கும். சிலருக்கு உஷ்ண நோய் அல்லது கண் தொடர்பான மருத்துவ சிகிச்சை செய்ய நேரும். பருவ வயதினருக்கு திருமணம் நிச்சயமாகும்.

    பொருளாதாரம் சிறப்பாக அமைந்து குடும்பத் தேவைகள் நிறைவு பெறும். சொத்துக்கள் மீதான வழக்குகள் தள்ளுபடியாகும் அல்லது தீர்ப்பு சாதகமாகும். மாணவர்கள் தடைபட்ட படிப்பை மீண்டும் தொடரக்கூடிய வாய்ப்புகள் உள்ளது. மகாளய பட்ச காலத்தில் விலங்குகளுக்கு உணவிடுவதால் பொருளாதார குற்றம் நீங்கும்.

    ரிஷபம்

    பொறுப்புடன் செயல்பட வேண்டிய வாரம். ராசிக்கு செவ்வாயின் 8-ம் பார்வையும் சனியின் 3ம் பார்வையும் உள்ளது. திடீர் அதிர்ஷ்டத்திற்கான வாய்ப்புகள் உள்ளது. குடும்ப உறவினர்களின் அதிர்ஷ்ட சொத்து, பணத்தில் ஒரு பகுதி உங்களுக்கு கிடைக்கும். விவசாயிகள் ரியல் எஸ்டேட் துறையினருக்கு சாதகமான வாய்ப்புகள் உள்ளது. போட்டி பந்தயங்களைத் தவிர்ப்பது நல்லது.

    கடன் தொல்லையில் இருந்து மீள் வதற்கான வழிகள் தெரியும். சிலருக்கு வெளிநாட்டு வேலை கிடைக்கும். தந்தை வழியில் நிலவிய பிரச்சினைகள், சங்கடங்கள் விலகும். மனதாலும் உடலாலும் பட்ட வேதனைகள் தீரும். அவர்களின் நட்பு, கூட்டணி மூலம் எதிர்பார்த்த இலக்கை அடைவீர்கள். உழைப்பிற்கும், முயற்சிக்கும் உரிய பலன்கள் வந்தடையும். மாற்று முறை வைத்தியத்தியத்தில் ஆரோக்கியம் அதிகரிக்கும்.புதிய எதிர்பாலின நட்பு உங்களை தேவையற்ற திசைக்கு அழைத்துச் செல்லலாம். எனவே நிதானத்தை கடைபிடிப்பது அவசியம். மகாளய பட்ச காலங்களில் அசைவ உணவை தவிர்ப்பதால் வாழ்க்கைப் பயணம் இலகுவாகும்.

    மிதுனம்

    சிந்தனையில் ஏற்பட்ட குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும் வாரம். ராசி அதிபதி புதன் உச்சம் பெற்று வெற்றி ஸ்தான அதிபதி சூரியனுடன் இணைந்து சனி பார்வையில் உள்ளார். தற்போது இருக்கும் நிலையில் மாற்றங்கள் உண்டாகும். தடை, முடக்கம், நஷ்டம் என்ற நிலை மாறி அபி விருத்தி உண்டாகும். பங்குச் சந்தை வணிகத்தில் சாதனை புரிவீர்கள்.

    குடும்ப உறவுகளால் ஏற்பட்ட கவுரவ குறைபாடு சீராகி நிம்மதியான நிலை நீடிக்கும். தொழிலில் நிலவிய இழுபறிகள் விலகி சாதகமான சந்தர்ப்பம் உருவாகும். உத்தி யோகஸ்தர்கள் முன்னேற்றமான நிலையை அடைவார்கள். அசையாச் சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் வெற்றி உண்டாகும். பிள்ளைகளால் பெற்றோர்க்கும், பெற்றோர்களால் பிள்ளைகளுக்கும் நன்மை பயக்கும்.

    சுப நிகழ்விற்கான அறிகுறிகள் உண்டாகும். கணவன், மனைவிக்குள் இருந்த பனிப்போர் விலகி சந்தோஷமான நிலை ஏற்படும். பெண்களுக்கு குடும்பத்தில் செல்வாக்கு உயரும். இளம் பெண்களுக்கு திருமண தடை நீங்கும். மகாளய பட்ச காலத்தில் வசதியற்ற மாணவ மாணவியர்களின் தேவையறிந்து உதவுவது சிறப்பாகும்.

    கடகம்

    கஷ்டங்கள் விலகி நன்மையே நடக்கும் வாரம். கடக ராசிக்கு முக்கிய கிரகங்கள் சாதகமாக இருப்பதால் அறிவாற்றல் திறமை அதிகமாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் நிலவும். வாழ்க்கைத் துணைக்கு இழந்த வேலை கிடைக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்ற நல்ல செய்திகள் உண்டு. எப்படி உழைத்தாலும் லாபமில்லை என்று சங்கடப்பட்டு வந்த நிலை மாறும்.

    எதிர்பார்த்த இடங்களிலிருந்து பணம் வரும். சிலர் புதிய தொழில் கிளைகள் திறக்க வாய்ப்பு உள்ளது. உடன் பிறந்தவர்களின் ஆதரவும், ஆதாயமும் கிடைக்கும். மாமனாருடன் ஏற்பட்ட மன ஸ்தாபம் விலகும். ஆவணங்கள் தொடர்பான வம்பு, வழக்குகள் சாதகமாகும். உடல் நிலையிலிருந்த பாதிப்புகள் அகலும். அரசு வேலை முயற்சி கைகூடும்.

    கல்லூரி படிப்பு தடைபட்டவர்கள் மீண்டும் தொடர முடியும். எதிரிகள் வழியாக ஏற்பட்ட சங்கடங்கள் தீரும். அரசியல்வாதிகளுக்கு பெயர் புகழ் அதிகரிக்கும். பெண்களுக்கு தாய் வழிப் பாட்டியின் நகைகள், பணம், பட்டுப் புடவைகள் சீதனமாக கிடைக்கும். மகாளய பட்ச காலங்களில் புனித நீர் நிலைகளில் நீராடுவதால் பாவங்கள் குறைந்து புண்ணிய பலன்களை அதிகரிக்கும்.

    சிம்மம்

    பொருளாதார முன்னேற்றம் உண்டாகும் வாரம். ராசி அதிபதி சூரியன் தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தில் தனம் வாக்கு குடும்ப ஸ்தான அதிபதி புதனுடன் சேர்க்கை பெற்று இருக்கிறார். இது மிக சிறப்பான உன்னதமான கிரக அமைப்பாகும். தன வரவில் ஏற்பட்ட பற்றாக்குறைகள் அகலும். தொழிலில் முன்னேற்றம் ஏற்பட்டு எதிர்பார்த்த லாபம் உண்டாகும்.

    நினைத்ததை சாதித்துக் கொள்ளக் கூடிய சந்தர்ப்பம் உருவாகும். சிலருக்கு இடப்பெயர்ச்சி ஊர் மாற்றம், வேலை மாற்றம் செய்ய நேரும். தடைபட்ட வாடகை வருமானம் வரத் துவங்கும். அசையும், அசையாச் சொத்து தொடர்பான முயற்சிகள் கைகூடும். பொன், பொருள் சேர்க்கை அதிகரிக்கும். ஆடம்பர வீட்டைக் கட்ட திட்டமிடுவீர்கள். சிலரின் காதல் தோல்வியில் முடியும்.

    பரம்பரைச் சொத்து, முன்னோர்களின் வங்கி சேமிப்பு இவற்றை பங்கிட உற்றார் உறவினர்கள் நிர்பந்திப்பார்கள் ஆடம்பர விருந்து, விழாக்களில் கலந்து இன்பம் அடைவீர்கள். வராக்கடன்கள் வசூலாகும். மகாளய பட்ச காலங்களில் தினமும் சூரிய நமஸ்காரம் செய்வதால் முன்னோர்களின் நல்லாசிகள் கிடைக்கும்.

    கன்னி

    மனோபலத்தால் நன்மைகள் அதிகரிக்கும் வாரம். உச்சமடைந்த ராசி அதிபதி புதன் சூரியனுடன் இணைந்து புத ஆதித்ய யோகத்தை ஏற்படுத்துகிறார். வெளி நாட்டில் வாழ்பவர்கள் எதிர்பார்த்த குடியுரிமை கிடைக்கும். வரவை விட செலவு அதிகரிப்பதால் எதிர்காலம் பற்றிய அச்சம் அதிகரிக்கும். சுப விரயச் செலவுகள் மிகுதியாகும். புதிய வீடு, வாகனத்திற்கான சாத்தியக் கூறுகள் உள்ளது.

    தொழிலில் சகோதரர்களின் பங்களிப்பு அதிகமாக இருக்கும். புதிய தொழில் முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. பூர்வீகச் சொத்து சர்ச்சையில் தாய்மாமன் ஆதரவாக இருப்பார். சமுதாய அந்தஸ்து நிறைந்த நல்ல வேலை கிடைக்கும். இளம் வயதினருக்கு புத்திர பிராப்தம் கிடைக்கும். தெய்வ கடாட்சம் பெருகும். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும்.

    தேவையற்ற பயணங்களைத் தவிர்த்தால் அலைச்சல் மற்றும் அலுப்பு குறையும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். திருமண முயற்சிகள் சற்று இழுபறியாகும். வாழ்க்கையை இழந்த ஆண், பெண்களுக்கு மறுமணம் நடக்கும். மகாளய பட்ச காலத்தில் கன்னிப் பெண்களுக்கு ஆடை தானம் வழங்க கன்னிப் பெண் சாபம் விலகும்.

    துலாம்

    புதிய வளர்ச்சிக்கான பாதை தென்படும் வாரம். ராசி அதிபதி சுக்கிரன் 11-ம் இடமான லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். பணப்புழக்கம் சரளமாக இருக்கும். இன்சூரன்ஸ், சீட்டு பணம், பங்குச் சந்தை, தொழில் ஆதாயம் என பல வகைகளில் வருமானம் உண்டாகும். நீதிமன்ற வழக்குகள் ஒத்திப் போகும். சகோதர, பங்காளி கருத்து வேறுபாடு நீங்கும்.

    உறவுகளின் வருகையால் குடும்பத்தில் குதூகலம் கூடும். கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்த தம்பதிகள் மீண்டும் இணைந்து குடும்பம் நடத்துவார்கள். பெண்களுக்கு புகுந்த வீட்டினரின் ஆதரவு மகிழ்ச்சி தரும். திருமணத் தடைகள் அகலும். மனம் விரும்பிய வாழ்க்கைத் துணை அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு சொந்த தொழில் செய்யும் எண்ணம் உதயமாகும்.

    14.9.2025 அன்று இரவு 8.03க்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் சிலர் கட்டுப்படுத்த முடியாத ஈகோ மற்றும் கோப உணர்வினால் தேவையற்ற வாக்கு வாதத்தில் ஈடுபட்டு பகையை வளர்ப்பார்கள். எனவே பேச்சில் நிதானம் தேவை. மகாளய பட்ச காலங்களில் சுமங்கலி பெண்களுக்கு மங்களப் பொருள்கள் வழங்கி நல்லாசி பெற பெண் சாபங்கள் விலகும்.

    விருச்சிகம்

    தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும் வாரம். ராசி அதிபதி செவ்வாய் விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். தற்காலிக வேலையில் இருப்பவர்களுக்கு பணி நிரந்தரம் ஏற்படும். சக பணியாட்களால் ஏற்பட்ட குழப்பங்கள் அகலும். தொழிலில் நிலவும் எதிர்ப்புகளை எதிர் நீச்சலடித்து வெற்றி பெறுவீர்கள். அரசு உத்தியோகஸ்தர்கள், அரசியல்வாதிகளுக்கு மிக மிக சாதகமான நேரம்.

    உபரி வருமானத்தை அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு புதிய நிதி நிறுவனங்களில் முதலீடு செய்வதை தவிர்க்கவும். மாறாக ஸ்திர சொத்துக்களில் முதலீடு செய்யலாம். பெண்களுக்கு கணவர் மற்றும் குழந்தைகளால் நிம்மதி உண்டாகும். நிம்மதியான உறக்கம் உண்டாகும். திருமணத்திற்கு நல்ல வரன்கள் அமையும்.

    14.9.2025 அன்று இரவு 8.03 முதல் 17.9.2025 அன்று 12.28 காலை வரை சந்திராஷ்டமம் இருப்பதால் பிறரிடம் எச்சரிக்கையாக பழக வேண்டும். நம்பிக்கை துரோகங்கள், ஏமாற்றங்களை சந்திக்க வாய்ப்பு உள்ளது. நல்ல ஜீரண சக்தி நிறைந்த உணவுகளை சாப்பிடவும். மகாளய பட்ச காலங்களில் உடல் ஊனமுற்றவர்களின் தேவையறிந்து உதவ பித்ருக்கள சாபம் நீங்கும்.

    தனுசு

    புதிய வாய்ப்புகள் தேடி வரும் வாரம். 7,10-ம் அதிபதி புதன் உச்சம் பெறுகிறார். மன ரீதியான சங்கடங்கள் விலகும். ஆடம்பர, அத்தியாவசிய தேவைகள் நிறைவேறும். வெளிவட்டாரத்தில் புகழும் கவுரவமும் பாராட்டும் கிடைக்கும். தொழிலில் நல்ல விருத்தி உண்டாகும். அனைத்து தொழில் சார்ந்தோரும் ஏதாவது ஒரு வகையில் லாபமும் மன நிறைவும் பெறுவர். சிலருக்கு அரசின் மானியம் கிடைக்கும்.

    சிலர் புதிய தொழில் துவங்க வாய்ப்பு உள்ளது. கடன், நோய் எதிரிகளிடமிருந்து விடுபடுவீர்கள். பெண்களுக்கு மாங்கல்ய தோஷம் அகன்று திருமணம் நடக்கும். மறுமணத்திற்கு வரன் பார்க்க ஏற்ற நேரம். உயர் கல்வி முயற்சி சித்திக்கும். வீடு, வாகனம் மற்றும் சுப நிகழ்விற்காக விண்ணப்பித்த கடன் கிடைக்கும்.

    வாழ்க்கைத் துணையின் நலனில் அதிக அக்கறை வேண்டும். மறைமுக தொந்தரவு கொடுத்தவர்கள் பலம் இழப்பார்கள். 17.9.2025 அன்று காலை 12.28 முதல் 19.9.2025 அன்று காலை 7.06 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் மகாளய பட்ச காலத்தில் ஆன்மீக குருமார்கள் புரோகிதர்கள் ஆசிரியர்கள் போன்ற வர்களிடம் நல்லாசிகள் பெற குரு சாபம் விலகும்.

    மகரம்

    மனதாலும் உடலாலும் பட்ட வேதனைகள் தீரும் காலம். ராசியில் செவ்வாயின் நான்காம் பார்வை பதிகிறது. பூமி, நிலம், வாகன வகையில் லாபம் உண்டாகும். விவசாயம் செழிக்கும். தொழில் ஸ்தான செவ்வாயால் லாபம் பல மடங்காகும். குடும்பத்தில் நிலையான மகிழ்ச்சி உண்டாகும். தொழில் நிமித்தமான பயணங்கள் அதிகரிக்கும். வெளியூருக்கு பணி மாற்றம், பதவி உயர்வு கிடைக்கும்.

    மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் கூடும். தாய்வழி உறவுகளுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு சீராகும். திருமணம் மற்றும் குழந்தை பாக்கியத்தில் நிலவிய தடைகள் அகலும். தடைபட்ட அனைத்து பாக்கிய பலன்களும் நடக்கும். 19.9.2025 அன்று காலை 7.06க்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் புதிய நபர்களுக்கு கடன் கொடுப்பதை தவிர்க்கவும். வெளியூர் பயணத்தை ஒத்தி வைக்கவும்.

    சிலர் கட்டுப்படுத்த முடியாத ஈகோ மற்றும் கோப உணர்வினால் தேவையற்ற வாக்கு வாதத்தில் ஈடுபட்டு பகையை வளர்ப்பார்கள். எனவே பேச்சில் நிதானம் தேவை. மகாளய பட்ச காலத்தில் குடிசை வாசிகளுக்கு குடை, செருப்பு, போர்வை தானம் வழங்க சுய ஜாதக ரீதியான பித்ருக்கள் தோஷம் குறையும்.

    கும்பம்

    புதிய எழுச்சியுடன் வலம் வரும் வாரம். ராசிக்கு சுக்ரன் பார்வை உள்ளது. நிம்மதி இரட்டிப்பாகும். சம்பந்தம் இல்லாத மூன்றாம் நபரால் குடும்பத்தில் நிலவிய குழப்பங்கள் தீரும். வில்லங்க சொத்திற்கு உரிய பட்டா மற்றும் முறையான ஆவணங்கள் கிடைக்கும்.தெய்வ நம்பிக்கை இல்லாதவர்கள் கூட இறைசக்தியை உணர்வார்கள். ஆன்மீகம் சம்பந்தப்பட்ட பயணங்கள் உண்டு.

    வீட்டை விரிவு செய்தல், புதிய வீடு கட்டுதல், நவீன பொருட்களை சேர்த்தல் போன்ற எண்ணங்கள் அதிகரிக்கும். வெளிநாடு செல்ல விண்ணப்பித்தவர்களுக்கு நல்ல தகவல்கள் வரும். பிள்ளைகள் தீய பழக்கத்திலிருந்து விடுபடுவார்கள். கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். தம்பதிகளிடையே நல்ல ஒற்றுமை நிலவும். போதைக்கு அடிமையானவர்கள் மருத்துவத்தால் குணமடைவார்கள்.

    அரசு உயர் அதிகாரிகளின் தனித் திறமைமிளிரும். பங்குச் சந்தை முதலீட்டில் அதிக லாபம் கிடைக்கும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். மகாளய பட்ச காலத்தில் துப்புரவு தொழிலாளிகளின் தேவையறிந்து உதவுவதால் முன்னோர்களின் நல்லாசிகள் கிடைக்கும்.

    மீனம்

    மாற்றங்கள் உண்டாகும் வாரம். தன ஸ்தான அதிபதி செவ்வாய் தன் வீட்டை தானே பார்க்கிறார். தற்பொழுது உங்கள் நிலையில் உயர்வு உண்டாகும். லாபமில்லை என்று சங்கடப்பட்டு வந்த நிலை மாறும். தடை, முடக்கம், நஷ்டம் என்ற நிலை மாறி அபிவிருத்தி உண்டாகும். வெளி வட்டாரத்தில் புகழும் கவுரவமும் பாராட்டும் கிடைக்கும்.

    திடீர் அதிர்ஷ்டத்திற்கான வாய்ப்புகள் உள்ளது. ஆடம்பர, தேவைகள் நிறைவேறும். சிலர் புதிய தொழில் கிளைகள் திறக்க வாய்ப்பு உள்ளது. பங்குச் சந்தை வணிகத்தில் சாதனை புரிவீர்கள். குடும்ப உறவுகளால் ஏற்பட்ட கவுரவ குறைபாடு சீராகி நிம்மதியான நிலை நீடிக்கும். அசையாச் சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் வெற்றி உண்டாகும். சொத்துக்கள் மீதான வழக்குகள் தள்ளு படியாகி தீர்ப்பு சாதகமாகும்.

    பெண்களின் திறமைகள் வீட்டிலும் வேலை செய்யும் இடத்திலும் பிரமிக்க வைப்பதாக இருக்கும். தந்தை வழியில் நிலவிய பிரச்சினைகள், சங்கடங்கள் விலகி ஆதரவு கிடைக்கும். மகாளய பட்ச காலத்தில் குழந்தைகளுக்கு இனிப்பு உணவுகள் வழங்க குழந்தை பாக்கியத்தில் நிலவிய தடைகள் அகலும்.

    • பம்பையில் வருகிற 20-ந் தேதி சர்வதேச ஐயப்ப பக்தர் சங்கமம் நடத்தப்படுகிறது.
    • ஆன்லைன் முன்பதிவு மூலம் 10 ஆயிரம் பேருக்கு மட்டும் அனுமதி அளித்து இருப்பது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மாதந்தோறும் குறிப்பிட்ட நாட்கள் திறக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி புரட்டாசி மாத பூஜைக்காக நாளை மறுநாள் (16-ந் தேதி) மாலை கோவில் நடை திறக்கப்படுகிறது. தொடர்ந்து 21-ந்தேதி வரை 5 நாட்கள் சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடைபெறும்.

    இதனிடையே சபரிமலை, பம்பையில் வருகிற 20-ந் தேதி சர்வதேச ஐயப்ப பக்தர் சங்கமம் நடத்தப்படுகிறது. இந்த சங்கமத்தில் வெளிநாட்டு பிரதிநிதிகள் உள்பட 3 ஆயிரம் பேர் பங்கேற்கிறார்கள். மாத பூஜையின் போது, பக்தர்களுக்கு எந்தவித இடையூறுமின்றி பக்தர் சங்க மத்தை நடத்த கேரள ஐகோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.

    வழக்கமாக, மாதபூஜை நாட்களில் ஆன்லைன் முன்பதிவு மூலம் 50 ஆயிரம் பக்தர்கள் வரை தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் தற்போது 19, 20 ஆகிய தேதிகளில் சாமி தரிசனத்திற்கு ஆன்லைன் முன்பதிவு மூலம் 10 ஆயிரம் பேருக்கு மட்டும் அனுமதி அளித்து இருப்பது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • ராமேசுவரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் ஊஞ்சலில் காட்சி.
    • ஸ்ரீ வைகுண்டபம் ஸ்ரீ வைகுண்டபதிக்கு பால் அபிஷேகம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு ஆவணி-29 (ஞாயிற்றுக்கிழமை)

    பிறை : தேய்பிறை

    திதி : சப்தமி காலை 9.15 மணி வரை பிறகு அஷ்டமி

    நட்சத்திரம் : ரோகிணி நண்பகல் 1.17 மணி வரை

    பிறகு மிருகசீரிஷம்

    யோகம் : அமிர்த, சித்தயோகம்

    ராகுகாலம் : மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை

    எமகண்டம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    சூலம் : மேற்கு

    நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    காஞ்சி காமாட்சியம்மன், இருக்கன்குடி சமயபுரம் மாரியம்மன் கோவில்களில் காலையில் பால் அபிஷேகம்

    இன்று சுபமுகூர்த்த தினம். மத்யாஷ்டமி மகாவியதீ பாதம். மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி புறப்பாடு. சூரியனார்கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு திருமஞ்சன சேவை. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீஅனுமனுக்கு திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை. திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம். ராமேசுவரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் ஊஞ்சலில் காட்சி. காஞ்சி ஸ்ரீ காமாட்சியம்மன், இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன், சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன் கோவில்களில் காலையில் பால் அபிஷேகம். சாத்தூர் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் புறப்பாடு. வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீ அங்காரகருக்கும், ஸ்ரீ செல்வமுத்துக்குமார சுவாமிக்கும் அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. ஸ்ரீ வைகுண்டபம் ஸ்ரீ வைகுண்டபதிக்கு பால் அபிஷேகம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-உற்சாகம்

    ரிஷபம்-போட்டி

    மிதுனம்-வெற்றி

    கடகம்-லாபம்

    சிம்மம்-சாந்தம்

    கன்னி-உழைப்பு

    துலாம்- நட்பு

    விருச்சிகம்-உண்மை

    தனுசு- களிப்பு

    மகரம்-பக்தி

    கும்பம்-நம்பிக்கை

    மீனம்-துணிவு

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    வளர்ச்சிப் பாதையில் அடியெடுத்து வைக்கும் நாள். வங்கி சேமிப்பு உயரும். வீட்டுத் தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோக ரீதியாகச் செய்த புது முயற்சிகள் வெற்றி பெறும்.

    ரிஷபம்

    மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். பிறர் பாராட்டும் வகையிலான காரியமொன்று செய்வீர்கள். எதிர்பார்த்த தகவல் அலைபேசி மூலம் வந்து சேரலாம். உத்தியோகத்தில் உயர்வு உண்டு.

    மிதுனம்

    சிந்தனைகள் வெற்றி பெறும் நாள். குடும்பத்தில் குதூகலம் தரும் சம்பவமொன்று நடைபெறும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். மதியத்திற்கு மேல் மகிழ்ச்சியான தகவல் உண்டு.

    கடகம்

    வருமானம் உயரும் நாள். வசதிகளைப் பெருக்கிக்கொள்ள முன்வருவீர்கள். உடல்நலத்தில் அக்கறை காட்டுவது நல்லது. உத்தியோகத்தில் வேலைப்பளு கூடும்.

    சிம்மம்

    புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் நாள். வழக்கமாக செய்யும் பணியை இன்று மாற்றியமைப்பீர்கள். உத்தியோகத்தில் சக பணியாளர்களால் பிரச்சனைகள் அதிகரிக்கும்.

    கன்னி

    நிதானத்துடன் செயல்பட வேண்டிய நாள். பணப்புழக்கம் அதிகரித்தாலும், அடுத்தடுத்த செலவுகளால் திணறுவீர்கள். உத்தியோக மாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.

    துலாம்

    நிம்மதி கிடைக்க நிதானத்தோடு செயல்பட வேண்டிய நாள். பணிகளில் தடைகளும் தாமதங்களும் ஏற்படலாம். எந்தச் செயலையும் திட்டமிட்டபடி செய்ய இயலாது.

    விருச்சிகம்

    அலைபேசியில் வரும் செய்திகளால் ஆனந்தமடையும் நாள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். வருமானம் திருப்தி தரும். கல்யாண முயற்சி கைகூடும்.

    தனுசு

    நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும் நாள். நீண்ட நாள் ஆசை நிறைவேறும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். மதியத்திற்கு மேல் மனஅமைதி கூடும்.

    மகரம்

    மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். எதிர்பாராத விரயம் உண்டு. உத்தியோகத்தில் பணப்பொறுப்பில் உள்ளவர்கள் மிகுந்த கவனத்துடன் இருப்பது உத்தமம். எதிர்மறை எண்ணம் அதிகரிக்கும்.

    கும்பம்

    வளர்ச்சி கூடும் நாள். வருமானம் திருப்தி தரும். துணிந்து எடுத்த முடிவால் நன்மை கிடைக்கும். நண்பர்களின் ஆதரவு திருப்தி தரும். உத்தியோக முயற்சியில் வெற்றி கிட்டும்.

    மீனம்

    இனிய சம்பவம் இல்லத்தில் நடைபெறும் நாள். எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சிகள் வெற்றி பெறும். உத்தியோகத்தில் வரவேண்டிய சம்பளப் பாக்கிகள் வந்து சேரும்.

    • எனக்குத் தெரியாத எத்தனையோ ஆத்மாக்கள் இந்தப் பூவுலகத்திலிருந்து போயிருக்கின்றன.
    • அடுத்த பிறவியில் எல்லா நன்மைகளும் பெற நான் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் போது வேத விற்பன்னர்கள் சொல்லும் சுலோகங்கள், மந்திரங்கள் மற்றவர்களுக்கு புரியாமல் இருக்கலாம் எனவே தர்ப்பணம் கொடுக்கும் போது கீழ்கண்டவாறு மனதுக்குள் சொல்லிக் கொள்ளுங்கள் போதும்...

    "என் தாயார், என் தந்தை, என் சகோதரர், என் உறவினர் என்ற எந்த வகையான உறவுக்கும் உட்படாத- என் கோத்திரப் பிரிவுக்குள்ளும் வராத- எனக்குத் தெரியாத எத்தனையோ ஆத்மாக்கள் இந்தப் பூவுலகத்திலிருந்து போயிருக்கின்றன.

    எந்த விதிக்கணக்கிலோ, இயற்கையாகவோ, வியாதியாலோ, விபத்தினாலோ இந்த உலகைவிட்டுப் பிரிந்திருக்கக்கூடிய ஆத்மாக்கள் எல்லாம் நற்கதியடைய நான் பிரார்த்திக்கிறேன். மேலுலகில் எந்தவித துன்பங்களும் அனுபவிக்காமல், மீண்டும் புது உடலோடு எடுக்கும் அடுத்த பிறவியில் எல்லா நன்மைகளும் பெற நான் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    எள்ளும் தண்ணீரும் கொண்டு நான் செய்யும் இந்த தர்ப்பணத்தால் அந்த எல்லா ஆத்மாக்களும் திருப்தி அடையட்டும். நம் முன்னோர்கள் மற்றும் நமக்குத் தெரிந்தவர்கள், தெரியாதவர்கள், நண்பர்கள், நம்முடன் வாழ்ந்து அமரர் ஆனவர்கள் அனைவருக்கும் இம்மந்திர வழிபாட்டினால் நற்கதி கிட்டுமென்று சாஸ்திரம் கூறுகிறது.

    • குட்டூர் அண்ணாமலையார் கோவில் முருகப்பெருமான் சன்னதியிலும் கார்த்திகையொட்டி பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
    • வெளி மாவட்ட பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடி முருகப் பெருமானை தரிசனம் செய்தனர்.

    நத்தம் அருகே திருமலைக்கேணியில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி மாத கார்த்திகையையொட்டி முருகபெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்களும், அலங்காரமும், தீபாராதனைகளும் நடந்தது.

    தொடர்ந்து கோவிலை சுற்றி சுவாமி புறப்பாடு நடந்தது. இதில் சுற்று வட்டாரங்களிலிருந்தும், வெளி மாவட்ட பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடி முருகப் பெருமானை தரிசனம் செய்தனர்.

    மேலும் அருகில் உள்ள காமாட்சி மவுனகுருசாமி மடத்திலும் பக்தர்கள் விளக்கேற்றி வழிபாடுசெய்தனர். இதைப்போலவே நத்தம்-கோவில்பட்டி கைலாசநாதர் கோவில் உள்பிரகாரத்தில் அமைந்துள்ள தண்டபாணி சன்னதியிலும், குட்டூர் அண்ணாமலையார் கோவில் முருகப்பெருமான் சன்னதியிலும் கார்த்திகையொட்டி பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

    • ஆலயக் கருவறையில் வரதராஜப் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியருடன் காட்சியளிக்கிறார்.
    • ஆலயத்தின் ஏழாவது வீதியில் சித்தி விநாயகர் ஆலயம் அமைந்துள்ளது.

    இந்திரனின் சாபத்தைப் போக்க, மகாவிஷ்ணு கூர்ம அவதாரம் (ஆமை வடிவம்) எடுத்தத் தலமாக, இலங்கையின் பொன்னாலை ஆலயம் விளங்குகின்றது. இத்தலத்தில் முதன்மை பெற்று விளங்கும் வரதராஜப் பெருமாள் ஆலயத்தை முன்னோர்கள் 'பொன் ஆலயம்' என்று அழைத்து வந்ததாகவும், அப்பெயரே மருவி, தற்பொழுது 'பொன்னாலை' என அழைக்கப்பெறுவதாகவும் செவிவழிக் கதைகள் கூறுகின்றன. இத்தலத்தில் பொன் ஆமையாக திருமால் அவதாரம் எடுத்ததால், பொன் ஆமையே `பொன்னாலை' என மருவியதாகவும் கூறுகின்றனர்.

    தல புராணம்

    முற்காலத்தில் துர்வாச முனிவரால் இந்திரன் சாபம் பெற்று நீசத்தன்மையை அடைந்தான். அப்போது இந்திரன், ''நான் செய்த பிழையைப் பொறுத்து, சாபம் நீங்க அருள வேண்டும்'' என்று துர்வாச முனிவரை நோக்கி வேண்டினான்.

    இதையடுத்து மனம் இரங்கிய துர்வாச முனிவர், ''சேது சமுத்திரம் நடுவில் இருக்கும் இலங்கையில் பொன்னாலயம் என்னும் பட்டினத்தில் மீனவர் குலத்திலே நீ பிறப்பாய். அப்போது வாசுதேவர் கூர்ம அவதாரம் எடுப்பார். அக்கூர்மம் உன் வலையில் பிடிபடும். அந்த ஆமையின் உடலைத் தொட்டவுடன் உன் சாபம் நீங்கும்'' என்று துர்வாச முனிவர் கூறினார்.

     

    கல் ஆமை

    அதன்படி, இத்தலத்தில் மீனவராகப் பிறந்த இந்திரன் ஒரு நாள், தற்போது ஆலயம் அமைந்துள்ள இடத்திற்கு அருகில் உள்ள கடலில் வலை வீசினான். வலையில் ஒரு பொன்னிற ஆமை ஒன்று அகப்பட்டது. அதனை அவனால் தனித்து கரை சேர்க்க முடியவில்லை. தன் இனத்தவரின் துணையை நாடி, அவர்களை அழைத்து வந்தான். அப்போது வானத்தில் பொன்னொளி வீசும் விமானம் ஒன்று காணப்பட்டது.

    அதனைக் கண்டு அதிசயம் அடைந்தவர்களாய் ஆமையின் அருகே விரைவாகச் சென்றடைந்தார்கள். அந்த சமயத்தில் அந்த ஆமை கல்லாய் மாறி இருப்பதைக் கண்டார்கள். இது என்ன அதிசயம் என்று வியந்தார்கள். பின்பு, அவர்கள் அனைவரது மனதிலும், இந்த ஆமை லட்சுமியின் நாயகனான நாராயணரே என்றும், ஒளிவீசும் விமானமும் அவருடையதே என்றும் உணர்ந்தனர். அதனால், நாராயணரின் பிரதிஷ்டைக்குரிய இந்த இடத்திலே நல்ல நாளில், நல்ல முகூர்த்தத்தில், வைகாசன ஆகமப்படி பிரதிஷ்டை செய்ய முடிவு செய்தனர். அதன்படி, விஷ்ணுவை பிரதிஷ்டை செய்து, அவரை வரதராஜப் பெருமாள் என்ற பெயரில் வழிபட்டார்கள்.

    அவர்கள் பொன்னாலை ஆண்டவன் கருணையினால் அதிக மகிழ்ச்சி கொண்டவர்களாய் நித்திய பூஜையையும், நைமித்திய பூஜையையும் நடத்தி வந்தார்கள் என்கிறது புராணம்.

     

    கோவில் தோற்றம் - உற்சவர்

    ஆலய அமைப்பு

    இவ்வாலயம் குளக்கோட்டன் எனும் மன்னனால் பிரமாண்டமாக எழுப்பப்பட்டது. கி.பி. 16-ம் நூற்றாண்டில் ஏழு சுற்றுப் பிரகாரங்களுடன் அமைந்திருந்தது. ஆனால், இப்பெரிய கோவிலை போர்ச்சுகீசியர்கள் இடித்து அழித்தனர். இன்றுள்ள கோவில் பிற்காலத்தில் அமைக்கப்பட்டதாகும். ஆனாலும் பழைய அடையாளங்கள் இன்றும் உள்ளன. இடிக்கப்பட்ட கற்களைக் கொண்டு யாழ்ப்பாணம் கோட்டை மற்றும் சங்காணைக் கோட்டைகள் கட்டப்பட்டதை வரலாறு கூறுகின்றது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் புனரமைக்கப்பட்ட ஆலயங்களில் ஒன்றாக இந்த பொன்னாலை வரதராஜப் பெருமாள் கோவிலும் உள்ளது.

    இந்த கோவிலில் அமையப்பெற்ற 108 அடி உயரமான ராஜகோபுரமே யாழ்ப்பாணத்தில் அதிக உயரம் கொண்ட கோபுரமாக விளங்குகின்றது. ஆலயச் சுற்றில் நாகதம்பிரான், மகாலட்சுமி, சனீஸ்வரன், நவக்கிரங்கள் ஆகியோரது சன்னிதிகள் அமைந்துள்ளன. இந்த ஆலயத்தில் ராஜ கோபுரத்தின் மூன்றாம் பிரகாரத்தில் நரசிங்க பைரவர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் மிகவும் சக்தி வாய்ந்ததாகும்.

    ஆலயக் கருவறையில் வரதராஜப் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியருடன் காட்சியளிக்கிறார். தனியான மண்டபத்தில் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட பள்ளிகொண்ட பெருமாளையும் தரிசிக்கலாம். இங்கு கன்னிமூலையில் மகாலட்சுமி கோவில் அமைந்துள்ளது. தன்வந்திரி பகவான், ஆஞ்சநேயர், இந்திரனால் கொண்டு வரப்பட்ட ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜர் (ஸ்ரீனிவாசன்) உற்சவ மூர்த்திகளாக விளங்குகின்றனர். ஆலயத்தின் ஏழாவது வீதியில் சித்தி விநாயகர் ஆலயம் அமைந்துள்ளது. இவரை வணங்கிய பிறகே வரதராஜப் பெருமாளை தரிசிக்க வேண்டும் என்பது மரபாகும்.

    ஆலய தல வரலாற்றுடன் தொடர்புடையதாக கூறப்படும் கல் ஆமை இன்றும் கருவறைக்குள் வைத்து பாதுகாக்கப்பட்டு, வணங்கப்பட்டு வருகின்றது. நிர்வாகத்தின் அனுமதி பெற்று இந்தக் கல் ஆமையை தரிசித்து மகிழலாம். இத்தலத்தின் தனிச் சிறப்பாக 41 அடி உயரத்தில் ஆறு சக்கரங்களைக் கொண்ட பிரமாண்ட திருத்தேர் அமைந்துள்ளது. இதில் தசாவதார காட்சிகள் உள்ளிட்ட புராண சிற்பங்கள் நிறைந்துள்ளன. இது இந்தியாவில் உள்ள மரங்களைக் கொண்டு இந்திய சிற்பிகளால் செய்யப்பட்ட தேராகும்.

    சந்தான கோபாலருக்கு அருகே ஓர் வன்னி மரமும், வடக்கு புறத்தில் மற்றொரு வன்னி மரமும் அமைந்துள்ளன. இவை கல்யாண வரத்திற்கும், குழந்தைப் பேறுக்கும் உகந்த மரங்களாக பக்தர்கள் வணங்குகின்றனர்.

    விழாக்கள்

    ஆண்டுதோறும், ஆவணி மாதத்தில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு 19 நாட்களும், மார்கழியில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு 10 நாட்களும் என இரண்டு பிரமோற்சவங்கள் நடைபெறுகின்றன. கடலில் ராமர் பாதம் வைத்த இடமான (இந்து மகாசமுத்திரம்) திருவடி நிலை எனும் மண்டபத்தில் தை அமாவாசை, மாசிமகம் ஆகிய நாட்களில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெறுகின்றன.

    இக்கோவிலில் ஐந்து கால பூஜைகள் நடைபெறுகின்றன. காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் ஆலயத்தில் இருந்து இலங்கை வந்த பரம்பரையினர் இங்கு நடைபெறும் பூஜைகளை செய்து வருகின்றனர்.

    இவ்வாலயத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்ற நேரத்தில் கருடன் வானத்தில் பறந்து இவ்வாலயத்தைச் சுற்றி வந்து செல்வது தனிச்சிறப்பாகும்.

    காலை 6 மணி முதல் 12 மணி வரையும், மாலை 3 மணி முதல் இரவு 7 மணி வரையும் ஆலய தரிசனம் செய்யலாம்.

    அமைவிடம்

    இலங்கையின் வடக்கு மாகாணம் யாழ்ப்பாண மாவட்டத்தில், யாழ்ப்பாணத்திற்கு மேற்கே சுமார் 15 கி.மீ. தொலைவில், கடலும் கடல் சார்ந்த நெய்தல் நிலத்தில் பொன்னாலை அமைந்துள்ளது.

    • மீனாட்சி அம்மன் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு திருக்கோலங்களில் எழுந்தருளி காட்சி தருவார்.
    • அக்டோபர் 1-ந் தேதி சிவபூஜை செய்யும் திருக்கோலங்களில் அம்மன் காட்சி தருகிறார்.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். இதில் மீனாட்சி அம்மனுக்கு என்று ஆடி முளைக்கொட்டு, நவராத்திரி விழா, ஐப்பசி கோலாட்ட உற்சவ விழா போன்ற திருவிழாக்கள் சிறப்பு வாய்ந்தவை. இந்த ஆண்டுக்கான நவராத்திரி உற்சவ விழா வருகிற 23-ந்தேதி தொடங்கி 2-ந்தேதி வரை நடக்கிறது.

    இது குறித்து கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நவராத்திரி திருவிழா நாட்களில் தினசரி மாலை 6 மணி முதல் மூலவர் மீனாட்சி அம்மனுக்கு திரை போட்டு அபிஷேகம், அலங்காரம் ஆகி கல்பபூஜை மற்றும் சகஸ்ரநாம பூஜை போன்ற விஷேச பூஜைகள் நடைபெறும். அந்த நேரத்தில் பக்தர்களுக்கு அர்ச்சனைகள் மூலவர் சன்னதியில் நடத்தப்படாது. கொலு மண்டபத்தில் எழுந்தருளும் அலங்கார அம்மனுக்குதான் நடைபெறும்.

    விழா நாட்களில் திருக்கல்யாண மண்டபத்தில் காலை 8 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 9.30 மணி வரையிலும் ஆன்மிக சொற்பொழிவு, பரதநாட்டியம், வீணை கச்சேரி, கர்நாடக சங்கீதம், தோற்பாவை கூத்து, பொம்மலாட்டம், வில்லுப்பாட்டு ஆகிய கலைநிகழ்ச்சிகள் நடக்கின்றன.

    கோவிலில் வைக்கப்படும் கொலுவுக்கு அலங்கார பொம்மைகள், சிவபெருமானின் 64 திருவிளையாடல் தொடர்பான பொம்மைகள், இதர பொம்மைகளை பக்தர்கள் உபயமாக உள்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வழங்கலாம்.

    நவராத்திரி திருவிழாவையொட்டி அம்மன் சன்னதி 2-ம் பிரகாரத்தில் உள்ள கொலு மண்டபத்தில் எழுந்தருளும் உற்சவர் மீனாட்சி அம்மன் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு திருக்கோலங்களில் எழுந்தருளி காட்சி தருவார். 23-ந் தேதி ராஜராஜேசுவரி, 24-ந் தேதி வளையல் விற்றது, 25-ந் தேதி ஏகபாதமூர்த்தி, 26-ந் தேதி ஊஞ்சல், 27-ந் தேதி ரசவாதம் செய்த படலம், 28-ந் தேதி ருத்ரபசுபதியார் திருக்கோலம், 29-ந் தேதி தபசுகாட்சி, 30-ந் தேதி மகிஷாசுரமர்த்தினி, அக்டோபர் 1-ந் தேதி சிவபூஜை செய்யும் திருக்கோலங்களில் அம்மன் காட்சி தருகிறார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • திருநள்ளாறு ஸ்ரீ சனிபகவான் சிறப்பு திருமஞ்சன சேவை.
    • உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் ஸ்திர வார திருமஞ்சன சேவை.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு ஆவணி-28 (சனிக்கிழமை)

    பிறை : தேய்பிறை

    திதி : சஷ்டி காலை 11.34 மணி வரை பிறகு சப்தமி

    நட்சத்திரம் : கார்த்திகை பிற்பகல் 2.49 மணி வரை பிறகு ரோகிணி

    யோகம் : அமிர்தயோகம்

    ராகுகாலம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    எமகண்டம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    சூலம் : கிழக்கு

    நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    திருத்தணி முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் வரதராஜ மூலவருக்கு திருமஞ்சனம்

    திருநள்ளாறு ஸ்ரீ சனிபகவான் சிறப்பு திருமஞ்சன சேவை. திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஆண்டவர் தங்க மயில் வாகனத்தில் புறப்பாடு. மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி, திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள், கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் கோவில்களில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை. ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள், மதுரை ஸ்ரீ கூடலழகர், திருவள்ளூர் ஸ்ரீ வைத்ய வீரராகவப் பெருமாள் கோவில்களில் திருமஞ்சன சேவை.

    உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் ஸ்திர வார திருமஞ்சன சேவை. ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி, திருமோகூர் ஸ்ரீ காளமேகப் பெருமாள் கோவில்களில் திருமஞ்சன சேவை. திருவட்டாறு ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள், திருஇந்தளூர் ஸ்ரீ பரிமள ரெங்கராஜர் புறப்பாடு. திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம். திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் புறப்பாடு.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-நன்மை

    ரிஷபம்-நட்பு

    மிதுனம்-நலம்

    கடகம்-மேன்மை

    சிம்மம்-ஆர்வம்

    கன்னி-மாற்றம்

    துலாம்- ஆதரவு

    விருச்சிகம்-சிந்தனை

    தனுசு- உயர்வு

    மகரம்-பாராட்டு

    கும்பம்-கடமை

    மீனம்-கண்ணியம்

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    பகையான உறவுகள் நட்பாகும் நாள். பாகப் பிரிவினைகள் சுமூகமாக முடியும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். குடும்பச் செலவுகளை குறைப்பது பற்றி யோசிப்பீர்கள்.

    ரிஷபம்

    வாழ்க்கைத்தரம் உயர வழிவகை செய்து கொள்ளும் நாள். கவுரவம் அந்தஸ்து உயரும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்திணைவர். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும்.

    மிதுனம்

    பொறுமையுடன் செயல்பட வேண்டிய நாள். ஒருவழியில் வந்த வரவு மற்றொரு வழியில் செலவாகும். உத்தியோகம் சம்பந்தமாக எடுத்த புது முயற்சி வெற்றி தரும்.

    கடகம்

    வரவைக் காட்டிலும் செலவு கூடும் நாள். நீண்ட நாளாக சந்திக்க நினைத்த ஒருவரைச் சந்திக்கும் வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.

    சிம்மம்

    ஆச்சரியப்படத்தக்க சம்பவங்கள் அதிகாலையிலேயே நடைபெறும் நாள். அலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் மனதில் இடம்பிடிப்பீர்கள்.

    கன்னி

    தொட்ட காரியம் துளிர் விடும் நாள். தொழில் வளர்ச்சிக்கு நண்பர்கள் தோள் கொடுத்து உதவுவர். பொன், பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்ப முன்னேற்றம் கூடும்.

    துலாம்

    யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். வருமானம் வந்த மறுநிமிடமே செலவாகும். தொழிலில் பணியாளர்களின் ஒத்துழைப்பு குறையும். மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும்.

    விருச்சிகம்

    செல்வ நிலை உயரும் நாள். மங்கல நிகழ்ச்சிகள் மனையில் நடைபெறுவதற்கான அறிகுறி தென்படும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு பற்றிய தகவல் கிடைக்கும்.

    தனுசு

    பஞ்சாயத்துகள் சாதகமாக முடியும் நாள். பணவரவு திருப்தி தரும். அன்னிய தேசத்திலிருந்து அனுகூல தகவல் கிடைக்கும். குடும்பத்தினரிடம் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது.

    மகரம்

    வீட்டுப் பராமரிப்பில் ஆர்வம் காட்டும் நாள். வருமானம் திருப்தி தரும். வாழ்க்கைத் தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். விலகிச்சென்ற நண்பர்கள் விரும்பி வந்திணைவர்.

    கும்பம்

    தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும் நாள். தனவரவு திருப்தி தரும். நேற்றைய பிரச்சனை ஒன்று இன்று நல்ல முடிவிற்கு வரும். அன்பு நண்பர்கள் ஆதாயம் தரும் தகவலை தருவர்.

    மீனம்

    யோகமான நாள். வளர்ச்சிப் பாதையில் அடியெடுத்து வைப்பீர்கள். சுபகாரியப் பேச்சுகள் கைகூடும். உத்தியோக உயர்வு உண்டு. பொதுவாழ்வில் புதிய பொறுப்புகள் கிடைக்கும்.

    • ஸ்ரீ அஷ்டபுஜ வராகி அம்மன் கோவிலில் தேய்பிறை பஞ்சமியையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
    • வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள அனைத்து வராகி அம்மன் கோவில்களிலும் தேய்பிறை பஞ்சமியையொட்டி சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது. பின்னர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த கெரகோடஅள்ளி தானப்ப கவுண்டர் பள்ளி வளாகத்தில் உள்ள அஷ்ட வராகி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி கணபதி பூஜை, வராகி ஹோமம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் அம்மனுக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வகையான வாசனை திரவியங்கள் மற்றும் பழங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து அஷ்ட வராகி அம்மனுக்கு சிறப்பு அலங்கார சேவையும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. இந்த வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    தருமபுரி அன்னசாகரம் சாலை சித்திலிங்கேஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள ஸ்ரீ அஷ்டபுஜ வராகி அம்மன் கோவிலில் தேய்பிறை பஞ்சமியையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    இந்த வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். அவர்களுக்கு சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது. இதேபோன்று தர்மபுரி அருகே இலக்கியம் பட்டி அழகாபுரியில் 21 அடி உயர ஸ்ரீ சிம்மஹாரூட வராகி அம்மன் சிலையுடன் அமைந்துள்ள கோவிலில் தேய்பிறை பஞ்சமியையொட்டி சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    ×