என் மலர்tooltip icon

    வழிபாடு

    Indraya Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 4 நவம்பர் 2025: தேவக்கோட்டை ஸ்ரீ ரங்கநாதர் புறப்பாடு
    X

    Indraya Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 4 நவம்பர் 2025: தேவக்கோட்டை ஸ்ரீ ரங்கநாதர் புறப்பாடு

    • சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல்.
    • ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகர் காலை சிறப்பு அபிஷேகம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு ஐப்பசி-18 (செவ்வாய்க்கிழமை)

    பிறை : வளர்பிறை

    திதி : சதுர்த்தசி இரவு 9.42 மணி வரை பிறகு பவுர்ணமி

    நட்சத்திரம் : ரேவதி காலை 11.42 மணி வரை பிறகு அசுவினி

    யோகம் : சித்தயோகம்

    ராகுகாலம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    எமகண்டம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    சூலம் : வடக்கு

    நல்ல நேரம் : காலை 8 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை உள்ளிட்ட முருகன் கோவில்களில் அபிஷேகம்

    ஸ்ரீ நடராஜர் அபிஷேகம். சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். கோவில்பட்டி ஸ்ரீ செண்பகவல்லியம்மன் உற்சவம் ஆரம்பம். தேவக்கோட்டை ஸ்ரீ ரங்கநாதர் புறப்பாடு. ஸ்ரீ ரங்கம் ஸ்ரீநம்பெருமாள் புறப்பாடு. உத்திரமாயூரம் ஸ்ரீ வள்ளலார் சந்நிதியில் சுவாமி சந்திரசேகரர் புறப்பாடு. திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் அபிஷேகம், அலங்காரம்.

    சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். திருநறையூர் ஸ்ரீ சித்தநாதீசுவரர் கோவிலில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ரு, சம்கார அர்ச்சனை. ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகர் காலை சிறப்பு அபிஷேகம். திருநெல்வேலி சமீபம் 3-ம் நவதிருப்பதி செவ்வாய் பகவானுக்குரிய தலமான ஸ்ரீ குமுதவல்லித் தாயார் சமேத வைத்தமாநிதிப் பெருமாள் கோவிலில் திருமஞ்சன சேவை. ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் ரங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-உண்மை

    ரிஷபம்-உழைப்பு

    மிதுனம்-ஆதாயம்

    கடகம்-நிம்மதி

    சிம்மம்-யோகம்

    கன்னி-பணிவு

    துலாம்- சிந்தனை

    விருச்சிகம்-அமைதி

    தனுசு- மாற்றம்

    மகரம்-உவகை

    கும்பம்-கடமை

    மீனம்-பயணம்

    Next Story
    ×