என் மலர்
அமெரிக்கா
- அன்மோல் பிஷ்னோய் தேடப்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- சிறப்பு நீதிமன்றம் ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து இருந்தது.
பிரபல கேங்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோய் சகோதரர் அன்மோல் பிஷ்னோய் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வைத்து கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பாடகர் சித்து மூஸ்வாலா கொலை மற்றும் இந்த ஆண்டு சல்மான் கான் வீட்டிற்கு வெளியே நடந்த துப்பாக்கி சூடு உள்பட பல வழக்குகள் தொடர்பாக அன்மோல் பிஷ்னோய் தேடப்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுதவிர கடந்த மாதம் மகாராஷிடிரா முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் கொல்லப்பட்ட வழக்கில் பிஷ்னோய் தேடப்பட்டு வந்தார். கைது செய்யப்பட்டதாக கூறப்படும் அன்மோல் பிஷ்னோய் காவலில் வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
முன்னதாக இம்மாத தொடக்கத்தில், மும்பை காவல்துறையின் குற்றப்பிரிவு அவரை அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தும் பணியைத் தொடங்கியது. அவரை கைது செய்ய மகாராஷ்டிரா சிறப்பு நீதிமன்றம் ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து இருந்தது.
உலகளாவிய சட்ட அமலாக்க நிறுவனமான இன்டர்போல் மூலம் ரெட் கார்னர் நோட்டீஸ் வெளியிடப்பட்டது. முன்னதாக அன்மோல் பிஷ்னோய் கனடாவில் இருப்பதாக நம்பப்பட்டது.
இந்தியாவின் பயங்கரவாத எதிர்ப்பு அமைப்பான தேசிய புலனாய்வு அமைப்பு, கடந்த மாதம் அன்மோல் பிஷ்னோயை மிகவும் தேடப்படும் பட்டியலில் சேர்த்தது. அவரை கைது செய்ய உதவுபவர்களுக்கு ரூ. 10 லட்சம் பரிசும் அறிவிக்கப்பட்டது.
- செயற்கை கோள் சுமார் 4,700 கிலோ எடை கொண்டது.
- இஸ்ரோ மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் இடையேயான முதல் வணிக ஒத்துழைப்பு.
வாஷிங்டன்:
உலக பணக்காரரான எலான்மஸ்க் நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமமும் (இஸ்ரோ) இணைந்து விண்வெளிக்கு இந்திய வீரரை அனுப்பும் முயற்சியில் மறைமுகமாக ஈடுபட்டு வருகிறது. இந்த திட்டம் அடுத்த ஆண்டு (2025) செயல்படுத்தப்படலாம் என தெரிகிறது.
இந்த நிலையில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன ராக்கெட் மூலம் இந்தியாவின் ஜி.சாட் தகவல் தொழில் நுட்ப செயற்கைகோளை விண்ணில் செலுத்த இருக்கிறது.
அமெரிக்காவின் புளோரிடா கேப் சுனாவரலியில் இருந்து பால்கன் 9 ராக்கெட்டை பயன்படுத்தி இந்த செயற்கைகோள் விண்ணில் ஏவப்படுகிறது.
ஜி சாட் என் 2 என குறிப்பிடப்பட்ட இந்த செயற்கை கோள் சுமார் 4,700 கிலோ எடை கொண்டது. இந்தியாவின் தகவல் தொடர்பு கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த செயற்கை கோள் செயல்பாட்டுக்கு வந்ததும் நாடு முழுவதும் தனது சேவைகளை வழங்கும்.
தொலைதூர பகுதிகளுக்கான இணையசேவை இணைப்பு மற்றும் விமானத்தில் உள்ள இணைய சேவை உள்ளிட்ட நாடு முழுவதும் முக்கிய சேவைகளை இந்த செயற்கைகோள் வழங்கும்.
இது இஸ்ரோ மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் இடையேயான முதல் வணிக ஒத்துழைப்பு ஆகும்.
- உக்ரைனுக்கு அமெரிக்கா நீண்ட தூரம் சென்று தாக்குதல் ஏவுகணைகளை வழங்கியுள்ளது.
- வடகொரியா ராணுவ வீரர்கள் ரஷியாவுக்கு உதவி செய்து வருவதால் ஜோ பைடன் தற்போது ஒப்புதல்.
உக்ரைன் மீது ரஷியா படையெடுத்து இரண்டரை ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இன்னும் இரு நாடுகளுக்கு இடையிலான சண்டை முடிவுக்கு வரவில்லை. ரஷியாவை எதிர்த்து போரிட அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ராணுவ உதவி செய்து வருவதால் பதிலடி கொடுத்து வருகிறது.
அமெரிக்கா நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவகணைகளை உக்ரைனுக்கு வழங்கியுள்ளது. ஆனால் தங்களுடைய ஒப்புதல் இல்லாமல் அதை பயன்படுத்தக்கூடாது என அமெரிக்க திட்டவட்டாக தெரிவித்திருந்தது.
தற்போது ரஷியாவுக்கு ஆதரவாக வடகொரியா 10 ஆயிரம் வீரர்களை அனுப்பியுள்ளது. இந்த சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டுமென்றால் நீண்ட தூரம் சென்று தாக்கக்கூடிய ஏவுகணைகளை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்காவுக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஏவுகணைகளை பயன்படுத்த ஒப்புதல் வழங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதனைத்தொடர்ந்து வரும் நாட்களில் உக்ரைன் ரஷியாவுக்கு எதிராக நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை பயன்படுத்தலாம் எனத் தெரிகிறது.
இது தொடர்பாக வெள்ளை மாளிகை கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது.
இந்த மாதம் தொடக்கத்தில் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். அப்போது உக்ரைன்-ரஷியா இடையிலான போர் விரைவில் முடிவுக்கு கொண்டு வரப்படும் எனத் தெரிவித்தார்.
இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஒப்புதல் வழங்கியுள்ளது உக்ரைன்- ரஷியா இடையிலான போரை மேலும் தூண்டும். ஜோ பைடனின் அதிபர் ஆட்சிக்காலம் ஜனவர் 20-ந்தேதி வரை இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- ஒரு இடத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் காயம் அடைந்தனர்.
- மற்றொரு இடத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் இருவர் உயிரிழந்தனர்.
அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் உள்ள நியூ ஓர்லேன்ஸில் உள்ள செயின்ட் ரோச் (St Roch neighbourhood) நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக தனியார் கார் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த துப்பாக்கிச்சூடு நடைபெற்ற சிறிது நேரத்தில் அல்மோனாஸ்டர் அவென்யூ பிரிட்ஜ் பகுதியில் மற்றொரு துப்பாக்கிச்சூடு நடைபெற்றுள்ளது. இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொரு நபர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இருவர் காயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். யாரையும் கைது செய்யவில்லை. சந்தேகப்பட்டு நபர்கள் என்ற தகவலையும் வௌயியடவில்லை. பிரெஞ்ச் குவார்ட்டர் (French Quarter) என்ற பிரபல நகரின் அருகில்தான் செயினட் ரோச் நெய்பர்ஹூட் உள்ளது. பிரெஞ்ச் குவார்ட்டர் பிரபல சுற்றுலா பகுதியாகும்.
கடந்த 10-ந்தேதி அலபாமாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்த நிலையில், 16 பேர் காயம் அடைந்தனர்.
அணிவகுப்பு நடைபெறும் பகுதியிலும், கொண்டாட்டம் நிகழ்ச்சியிலும் துப்பாக்கிச்சூடு நடைபெற்றுள்ளதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- சுமார் 20 ஆண்டுகளுக்கு பின், மீண்டும் தொழில்முறை போட்டிக்கு டைசன் திரும்பி உள்ளார்.
- குத்துச்சண்டை போட்டியில் மைக் டைசன் உடன் ஜேக் பால் மோதினார்.
முன்னாள் உலக 'ஹெவிவெயிட்' சாம்பியனான மைக் டைசன் (58 வயது), இதுவரை விளையாடிய 58 குத்துச்சண்டை போட்டியில், 50-ல் வெற்றி கண்டுள்ளார். இதில் 44 போட்டியில் எதிரணி வீரரை 'நாக்-அவுட்' முறையில் வீழ்த்தினார். ஆறு போட்டியில் மட்டும் தோல்வியடைந்தார். எதிரணி வீரரின் காதை கடித்தது, பாலியல் பலாத்காரம், போதை பழக்கம் என பல சர்ச்சையில் சிக்கியதால் தொடர்ந்து போட்டியில் பங்கேற்கவில்லை. சுமார் 20 ஆண்டுகளுக்கு பின், மீண்டும் தொழில்முறை போட்டிக்கு திரும்பி உள்ளார்.
இவரை அமெரிக்காவை சேர்ந்த 'யூடியூப்' பிரபலம் ஜேக் பால் (27) எதிர் கொள்கிறார். இவர் கடந்த 2013 முதல் தொழில்முறையிலான குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்று வருகிறார். இதுவரை விளையாடிய 11 போட்டியில், 10ல் வெற்றி பெற்றார். இதில் 7 முறை 'நாக்-அவுட்' முறையில் வெற்றி கண்டார்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள எர்லிங்டன் நகரில், தொழில்முறையிலான குத்துச்சண்டை போட்டியில் மைக் டைசன் உடன் ஜேக் பால் மோதினார். இப்போட்டியில் பிரபல குத்துச்சண்டை வீரரான மைக் டைசனை ஜேக் பால் தோற்கடித்தார்.
8 சுற்றுகள் கொண்ட இந்தப் போட்டியில் ஜேக்பால் 79-73 என்ற புள்ளிக் கணக்கில் மைக் டைசனை வீழ்த்தினார். தொடக்கத்தில் டைசன், வேகமாக 2 குத்துக்களை விட்டார். நேரம் செல்ல செல்ல ஜேக்பால் விட்ட சரமாரியான குத்துச்சண்டில் டைசன் நிலைகுலைந்தார். 3 நடுவர்களும் ஜேக் பாலுக்கு சாதகமாக புள்ளிகளை கொடுத்தனர். ஒருவர் 80-72 எனவும், மற்ற இருவர் 79-73 என்றும் புள்ளிகளை வழங்கி இருந்தனர்.
டைசன் கடைசியாக 2020-ம் ஆண்டு ராய் ஜோன்சுடன் கடைசி போட்டியில் விளை யாடினார். 2005-ம் ஆண் டுக்கு பிறகு அவர் பங்கேற்ற முதல் அதிகாரப்பூர்வ போட்டி இதுவாகும்.ஜேக்பால் 4 ஆண்டுகளுக்கு முன்புதான் குத்து சண்டையில் பங்கேற்க தொடங்கினார்.
58 வயதான டைசன் இளம் வீரருடன் போட்டி போடுவது தவறு என பலரும் போட்டிக்கு முன்பே கூறி வந்த நிலையில் போட்டியை பார்த்து ரசிகர்கள் வெறுத்துப் போனார்கள். வயது மூப்பின் காரணமாக டைசன் கால்களை வேகமாக நகர்த்த முடியாமல் திணறினார்.
மைக் டைசனுக்கு ரூ.170 கோடி கிடைக்கும் என்பதால் தான் அவர் இந்தப் போட்டிக்கு ஒப்புக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
போட்டிக்கு முன்னதாக போட்டோசூட்டுக்காக இருவரும் ஒரே மேடையில் தோன்றினர். அப்போது மைக் டைசன் எதிரணி வீரரான ஜேக் பால் கன்னத்தில் பலார் என அறைந்தார். ஆனால் டைசன் அறைந்ததை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் சிரித்தப்படி பால் இருந்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.
- கரோலின் லீவிட் மேடையில் சிறந்து விளங்குவார் என்று எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது.
- வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் பதவியை வகிக்கும் இளம் வயது நபர் கரோலின் லீவிட் ஆவார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டிரம்ப் ஜனவரி மாதம் 20-ந்தேதி பதவியேற்கிறார். அவர் தற்போது தனது ஆட்சி நிர்வாகத்தில் இடம் பெறுபவர்களை தேர்வு செய்து வருகிறார்.
இந்த நிலையில் வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளராக கரோலின் லீவிட் என்ற 27 வயது பெண்ணை நியமனம் செய்துள்ளார். இவர் டிரம்பின் பிரசார உதவியாளராக பணியாற்றி இருந்தார்.
இதுகுறித்து டிரம்ப் கூறும்போது, கரோலின் லீவிட் மேடையில் சிறந்து விளங்குவார் என்று எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது, மேலும் அமெரிக்காவை மீண்டும் சிறந்ததாக மாற்றுவோம் என்ற செய்தியை மக்களுக்கு வழங்க உதவுவார் என்றார். வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் பதவியை வகிக்கும் இளம் வயது நபர் கரோலின் லீவிட் ஆவார். இதற்கு முன்பு 1969-ம் ஆண்டு 29 வயதான ரான் ஜீக்லர் நியமிக்கப்பட்டிருந்தார்.
- ரேசா பாங்கி தான் எக்ஸ் தளத்தின் தலைமை நிதி அதிகாரியாக நியமிக்கப்பட்ட முதல் நபர் ஆவார்.
- எக்ஸ் தளத்தில் லைவ் ஸ்ட்ரீமிங்கில் அதிக கவனம் செலுத்தவே பாங்கி பணியமர்த்தப்பட்டுள்ளார்.
எலான் மஸ்க் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பிரபல சமூக ஊடகமான டுவிட்டரை 44 பில்லியன் டாலர் விலைக்கு வாங்கினார். பின்னர் எலான் மஸ்க் டுவிட்டருக்கு எக்ஸ் என்ற பெயர் மாற்றம் செய்தார்.
இந்நிலையில், எக்ஸ் தளத்தின் தலைமை நிதி அதிகாரியாக துபி ஸ்ட்ரீமிங் தளத்தின் முன்னாள் நிதித் தலைவரான மஹ்மூத் ரேசா பாங்கி நியமிக்கப்பட்டுள்ளார்.
மஹ்மூத் ரேசா பாங்கி தான் எக்ஸ் தளத்தின் தலைமை நிதி அதிகாரியாக நியமிக்கப்பட்ட முதல் நபர் ஆவார். எக்ஸ் தளத்தில் லைவ் ஸ்ட்ரீமிங்கில் அதிக கவனம் செலுத்தவே பாங்கி பணியமர்த்தப்பட்டுள்ளார் என்று சொல்லப்படுகிறது.
2010 ஆம் ஆண்டு தவறான அறிக்கைகளை வழங்கியதற்காக பாங்கி கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் சிறையில் இருந்தார். பின்னர் 2021-ல் பாங்கியை அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மன்னித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- 54 வயதாகும் தொலைக்காட்சி பிரபலம் லாரன் சான்செஸ் உடன் அவரது திருமணம் நடக்க உள்ளது.
- The View, KTTV, Fox உள்ளிட்ட தொலைக்காட்சிகளில் பணியாற்றியுள்ளார்.
உலக பணக்காரர் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் எலான் மஸ்க்குக்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தில் 235 பில்லியன் டாலர் சொத்துடன் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் உள்ளார்.60 வயதான ஜெஃப் பெசோஸ் தனது இரண்டாம் திருமணத்துக்குத் தயாராகி வருகிறார். தனது நீண்ட நாள் காதலியான 54 வயதாகும் தொலைக்காட்சி பிரபலம் லாரன் சான்செஸ் உடன் அவரது திருமணம் நடக்க உள்ளது.
இவர்கள் இருவருக்கும் அடுத்த மாதம் கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி திருமணம் நடைபெற உள்ளதாக அமெரிக்க இதழான தி சன் தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் இவர்கள் விடுமுறைக்கு வழக்கமாக ஆஸ்பென் நகருக்கு அடிக்கடி சென்று வருவர்.
இந்நிலையில் அந்த ஆஸ்பென் நகரில் வைத்தே தங்கள் திருமணத்தைப் பிரமாண்டமாக நடந்த இவர்கள் திட்டமிட்டுள்ளார்களாம். இந்த திருமண விழாவில் அமெரிக்க பிரபலங்கள் பலர் கலந்துகொள்ள உள்ளதாகவும் தி சன் இதழ் தெரிவித்துள்ளது.

The View, KTTV, Fox உள்ளிட்ட பிரபல தொலைக்காட்சி நிறுவனங்களில் தொகுப்பாளராக பணியாற்றிய லாரன் சான்செஸ் உடன் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் ஜெஃப் பெசோஸ் டேட்டிங் செய்து வருகிறார்.
ஜெஃப் பெசோஸ் தனது முதல் மனைவி மெக்கன்சி ஸ்காட் - ஐ கடந்த 2018 ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார். விவாகரத்தின்மூலம் ஜெஃப் பெசோஸ் வைத்திருந்த கணிசமான பங்குகளை பெற்று மெக்கன்சி ஸ்காட் பில்லியனர் ஆனார்.
- வெள்ளை மாளிகையில் டிரம்ப் மற்றும் ஜோ பைடன் உணவு சாப்பிட்டப்படியே நடந்து முடிந்த தேர்தல் குறித்து நீண்டநாள் நண்பர்கள்போல சகஜமாக பேசுகிறார்கள்.
- வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி ஒருநாள் கூட ஆகாதநிலையில் 60 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்று வைரலாகி வருகிறது.
அமெரிக்கா ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்று அந்த நாட்டின் ஜனாதிபதியாக டிரம்ப் மீண்டும் பதவியேற்க உள்ளார். ஜனாதிபதி ஜோ பைடனை வெள்ளை மாளிகைக்கு சென்று டிரம்ப் சந்தித்துள்ளார்.
இந்தநிலையில் அரசியல் எதிரிகளாக கருதப்படும் இவர்கள் நண்பர்களாக இருந்து விடுமுறையை இணைந்து கொண்டாடுவது தொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது. வீடியோவில், வெள்ளை மாளிகையில் டிரம்ப் மற்றும் ஜோ பைடன் உணவு சாப்பிட்டப்படியே நடந்து முடிந்த தேர்தல் குறித்து நீண்டநாள் நண்பர்கள்போல சகஜமாக பேசுகிறார்கள்.
பின்னர் நாம் ஒருவேளை இந்த இடத்தில் இல்லாமல் இருந்தால் என யோசிக்கிறார்கள். அப்போது அவர்கள் இருவரும் விடுமுறையை கொண்டாடி ஐஸ்கிரீம் சுவைப்பது, குதிரை சவாரி செய்வது, கோல்ப் விளையாடுவது, இருசக்கர வாகனம் ஓட்டுவது, ஆற்றில் மீன்பிடிப்பது, பாட்டு பாடுவது, நடனம் ஆடுவது என ஈடுபடுகிறார்கள்.
ஏ.ஐ தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி ஒருநாள் கூட ஆகாதநிலையில் 60 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்று வைரலாகி வருகிறது.
- அடுத்த 4 வருடங்களுக்கு 2029 வரை ஆட்சியில் இருப்பார்.
- 4 ஆண்டுகள் பயணிக்கும் இந்த திட்டத்துக்கு "Skip Forward" என்று பெயரிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் அடுத்த அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த நவம்பர் 5 ஆம் தேதி நடந்து முடிந்தது. இதில் ஆளும் ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸை குடியரசு கட்சி வேட்பாளரான முன்னாள் அதிபர் டொனல்டு டிரம்ப் வெற்றி பெற்றார்.
தற்போதைய அதிபர் ஜோ பைடனின் பதவிக்காலம் வரும் ஜனவரியுடன் முடிவடையும் நிலையில் பதவியேற்பு அமைச்சகதுக்கானவர்களை தேர்வு செய்யும் வேளைகளில் டிரம்ப் ஈடுபட்டு வருகிறார். ஜனவரியில் பதவியேற்கும் டிரம்ப் அடுத்த 4 வருடங்களுக்கு 2029 வரை ஆட்சியில் இருப்பார்.
ஜோ பைடன் ஆட்சி போலல்லாது டிரம்ப் ஆட்சியில் மக்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் இருக்கும் என்ற பயம் இப்போதே பலரை தொற்றிக்கொண்டுள்ளது. இந்நிலையில் டிரம்ப் ஆட்சியில் இருந்து தப்பிக்க பிரபல சொகுசு கப்பல் நிறுவனம் புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது.
அடுத்த நான்கு ஆண்டுகள் கடலிலேயே உலகத்தைச் சுற்றி வரும் பயண திட்டத்தை Villa Vie Residences சொகுசு கப்பல் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த நிறுவனத்தின் Villa Vie Odyssey க்ரூஸ் கப்பல் மூலம் 4 ஆண்டுகள் பயணிக்கும் இந்த திட்டத்துக்கு "Skip Forward" என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்த நான்கு வருட பேக்கேஜில், டபுள் ரூமில், ஒரு நபருக்கு $159,999 மற்றும் ஒரு நபர் தங்கும் சிங்கிள் அறைகளுக்கு $255,999 கட்டணம் ஆகும். அடுத்த நான்கு ஆடுகளில் 140 நாடுகளில் உள்ள 425 துறைமுகங்களுக்குச் சென்று
7 கண்டங்களையும் அவற்றில் உள்ள 13 "உலக அதிசயங்கள்" மற்றும் 100 க்கும் மேற்பட்ட தீவுகளையும் சுற்றி வர முடியும்.
சுமார் 600 பேர் இதில் பயணிக்கலாம் இப்போது கப்பல் ஏறினால் அடுத்து 2029 ஆம் ஆண்டுதான் இவர்கள் மீண்டும் அமெரிக்கா வந்து சேர்வார்கள்
- சர்வதேச விண்வெளி நிலையத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகின.
- சுனிதாவின் உடல் மெலிந்து காணப்பட்டதால், அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
அமெரிக்க விண்வெளி வீராங்கனையும், இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த ஜூன் 6-ந்தேதி ஸ்டார்லைனர் விண்கலத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்றனர்.
ஆனால் ஸ்டார்லைனர் விண்கலத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் அவர்களால் பூமிக்கு திரும்ப முடியவில்லை. விண்வெளியில் சிக்கி உள்ள இருவரும் பிப்ரவரி மாதம் பூமிக்கு திரும்புவார்கள் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே, சர்வதேச விண்வெளி நிலையத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகின.
இதில் சுனிதாவின் உடல் மெலிந்து காணப்பட்டதால், அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் தனக்கு உடல்நல பாதிப்பு இல்லை என்று சுனிதா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.
விண்வெளி நிலையத்தில் இருந்து சுனிதா வில்லியம்ஸ் தனது உடல்நலம் குறித்து வீடியோ நேர்காணல் ஒன்றில் கூறியதாவது:-
நான் இங்கு வந்தபோது இருந்த அதே எடையுடன் தான் இருக்கிறேன். தசை மற்றும் எலும்பு அடர்த்தியில் மைக்ரோ கிராவிட்டியின் விளைவுகளை எதிர்த்துப் போராடுவதற்காக விண்வெளி வீரர்கள் பின்பற்றும் கடுமையான உடற்பயிற்சியை மேற்கொண்டு வருவதன் காரணமாகவே எனது உடலின் தோற்றம் மாறி விட்டது.
சைக்கிளிங்க், டிரெட் மில்லில் ஓடுதல் மற்றும் பளு தூக்குதல் உள்ளிட்ட உடற்பயிற்சிகளை வழக்கம்போல் செய்து கொண்டுதான் இருக்கிறேன். தொடர்ச்சியாக உடற்பயிற்சிகள் மேற்கொள்வதால் என உடலில் மாற்றம் ஏற்பட்டு இருக்கலாம். எனது உடல் மாறி இருந்தாலும் அதே எடையில்தான் இருக்கிறேன் என்றார்.
- அமெரிக்கர்களின் சுதந்திரத்திற்காகவும் போராடியுள்ளார்.
- துளசிக்கு முக்கிய பதவியை டிரம்ப் வழங்கி உள்ளார்.
வாஷிங்டன்:
அமெரிக்க அதிபர் தேர்தலில் 2-வது முறையாக வெற்றி பெற்றுள்ள டிரம்ப் தனது ஆட்சி நிர்வாகத்தில் இடம்பெறுபவர்களை தேர்வு செய்து வருகிறார். இதில் துளசி கபார்ட்டை தேசிய உளவுத்துறை இயக்குனராக டிரம்ப் நியமனம் செய்துள்ளார்.
இதுகுறித்து டிரம்ப் கூறும்போது, முன்னாள் எம்.பியான, லெப்டினன்ட் கர்னல் துளசி கப்பார்ட், தேசிய புலனாய்வு இயக்குநராக பணியாற்றுவார் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அவர் 2 தசாப்தங்களாக நமது நாட்டிற்காகவும், அனைத்து அமெரிக்கர்களின் சுதந்திரத்திற்காகவும் போராடியுள்ளார்.
அவர் தனது புகழ்பெற்ற வாழ்க்கையை வரையறுத்து உள்ள அச்சமற்ற உணர்வை நமது உளவுத்துறை சமூகத்திற்கு கொண்டு வருவார். நமது அரசியலமைப்பு உரிமைகளை வென்றெடுப்பார் என்பது எனக்குத் தெரியும் என்றார்.
தேர்தலில் டிரம்ப் வெற்றிக்கு உதவியவர்களில் துளசி கபார்ட் முக்கிய மானவர். பிரசாரத்தில் ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிசுக்கு எதிராக வும், அக்கட்சியின் கொள்கைகளை கடுமையாக விமர்சித்தார்.
டிரம்பின் கொள்கைகளை வாக்காளரிடம் கொண்டு சேர்த்தார். ஹவாய் மாகாணத்தில் இருந்து 4 முறை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்ட துளசி அமெரிக்காவின் முதல் இந்து எம்.பி. ஆவார்.

ஆனால் அவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் அல்ல. இவரது தாய் கரோல் கப்பார்ட் இந்துவாக மதம் மாறினார். இதனால் அவர் தனது 5 குழந்தைகளுக்கும் இந்து பெயர்களை வைத்தார்.
துளசி கபார்ட் ராணு வத்தில் பணியாற்றி லெப்டி னன்ட் கர்னல் அந்தஸ்து வரை உயர்ந்தார். ஈராக்கில் ராணுவ பணியை மேற்கொண்டார். முதலில் ஜனநாயக கட்சியில் இருந்த துளசி கடந்த 2022-ம் ஆண்டு அக்கட்சியில் இருந்து விலகினார்.
இந்த ஆண்டு தொடக்கத்தில் டிரம்பின் குடியரசு கட்சியில் சேர்ந்தார். அவரது கொள்கைகள் மற்றும் பேச்சுக்கள் டிரம்பை கவர்ந்தது. இதன்மூலம் துளசிக்கு முக்கிய பதவியை டிரம்ப் வழங்கி உள்ளார்.






