என் மலர்
அமெரிக்கா
- 7-ந்தேதி விண்வெளி நிலையத்தை சென்றடைந்தனர்.
- சர்வதேச விண்வெளி மையத்திலேயே சிக்கி தவிக்கின்றனர்.
சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ், சக வீரர் புட்ச் வில்மோடன் ஆகியோர் கடந்த 5-ந்தேதி போயிங் நிறுவனம் உருவாக்கிய ஸ்டார்லைனர் விண்கலத்தில் புறப்பட்டனர்.
அவர்கள் இருவரும் 7-ந்தேதி விண்வெளி நிலையத்தை சென்றடைந்தனர். அவர்கள் கடந்த 14-ந்தேதி பூமிக்கு திரும்ப திட்டமிடப்பட்டது. ஆனால், ஸ்டார் லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட ஹீலியம் வாயு கசிவு மற்றும் உந்து விசை கருவியில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த பயணம் ஒரு வாரத்திற்கு தள்ளி வைக்கப்பட்டது. இதன்படி கடந்த 26-ந் தேதி அவர்கள் பூமிக்கு திரும்பியிருக்க வேண்டும்.
ஆனால் ஸ்டார் லைனரின் தொழில்நுட்ப கோளாறுகள் இன்னும் சரி செய்யப்படாததால் பூமிக்கு திரும்பாமல் சர்வதேச விண்வெளி மையத்திலேயே சிக்கி தவிக்கின்றனர். இதனையடுத்து ஜூலை 2-ந்தேதி அனைத்து தொழில்நுட்ப கோளாறுகளும் சரி செய்யப்பட்டு இரண்டு வீரர்களும் பூமிக்கு பத்திரமாக அழைத்து வரப்படுவார்கள் என போயிங் தெரிவித்தது. ஆனால் அதை நாசா உறுதி செய்யவில்லை.
இந்த நிலையில் ஸ்டார்லைனர் விண்கலத்தில் வாயு கசிவு , தொழில் நுட்ப கோளாறுகள் சரி செய்ய குறைந்தது 30 நாட்களுக்கு மேல் ஆகும் என கூறப்படுகிறது. இதனால் சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்ப இன்னும் ஒரு மாதம் ஆகலாம்.
இதற்கிடையே நாசாவின்அதிகாரியான ஸ்டீவ் ஸ்டிச் கூறும்போது, ஸ்டார்லைனரின் பயண காலத்தை 45 நாட்களில் இருந்து 90 நாட்களுக்கு நீட்டிக்க பரிசீலித்து வருகிறோம். சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோரை அழைத்து வருவதில் அவசரம் காட்டவில்லை என்றார். * * * இங்கிலாந்து பிரதர் ரிஷிசுனக், தனது மனைவி அக்ஷதா மூர்த்தியுடன் லண்டனில் உள்ள சுவாமி நாராயண் கோவிலில் வழிபட்டார்.
- நேட்டோ மாநாடு ஜூலை 9-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது.
- நேட்டோ அமைப்பு தொடங்கி 75 வருடங்கள் ஆன நிலையில் அமெரிக்கா பல்வேறு நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
நேட்டோ மாநாடு அடுத்த மாதம் 9-ந்தேதியில் இருந்து 11-ந்தேதி வரை அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் நடக்கிறது. இதில் அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் கலந்து கொள்கிறார். நேட்டோ அமைப்பின் 75-வது ஆண்டு விழாவாக இந்த மாநாடு அமைகிறது.
இதனால் அமெரிக்கா இஸ்ரேல் நாட்டின் வெளியறவுத்துறை மந்திரி கட்ஸ்-க்கு அழைப்பு விடுத்துள்ளது. அமெரிக்காவின் வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன் பிட்ஸ்-க்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இஸ்ரேலைத் தொடர்ந்து பல அரபு நாடுகளுக்கும் அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ் உள்பட 32 நாடுகள் நேட்டோவில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. உக்ரைன் நேட்டோவில் இணைய விரும்பியதால் ரஷியா அந்த நாடு மீது படையெடுத்தது குறிப்பிடத்தக்கது.
- முதல் ஆட்டத்தில் கோல் எதுவுமின்றி கோஸ்டாரிகாவுடன் டிரா செய்து இருந்தது.
- 2 தோல்வியுடன் பராகுவே வெளியேறியது.
லாஸ் வேகாஸ்:
கோபா அமெரிக்க கோப்பை கால்பந்து போட்டி அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.
இன்று காலை நடந்த 'டி' பிரிவு ஆட்டத்தில் பிரேசில் 4-1 என்ற கோல் கணக்கில் பராகுவேயை வீழ்த்தியது. பிரேசில் அணிக்காக வின்சியஸ் 2 கோலும், சவியோ, லுகாஸ் பகுடோ தலா ஒரு கோலும் அடித்தனர். பிரேசில் பெற்ற முதல் வெற்றியாகும். முதல் ஆட்டத்தில் கோல் எதுவுமின்றி கோஸ்டாரிகாவுடன் டிரா செய்து இருந்தது.
மற்றொரு போட்டியில் கொலம்பியா 3-0 என்ற கணக்கில் கோஸ்டாரிகாவை தோற்கடித்தது. 2 வெற்றியுடன் அந்த அணி கால் இறுதிக்கு தகுதி பெற்றது. 2 தோல்வியுடன் பராகுவே வெளியேறியது.
- திடீரென அசைவுகள் ஏதுமின்றி பைடன் ஸ்தம்பித்து விடுவதும் வழக்கமாக உள்ளது.
- ஜோ பைடனின் இந்த தடுமாற்றம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அமெரிக்காவில் வரும் நவம்பர் 5-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில், ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டிரம்ப் போட்டியிடுகிறார். இந்த தேர்தலின் முக்கிய அம்சமாக, வேட்பாளர்கள் பல்வேறு கட்டங்களில் நேருக்கு நேர் விவாதிப்பது வழக்கம்.
அந்த வகையில் முதலாவது நேரடி விவாத நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. மொத்தம் 90 நிமிடம் விவாதம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. ஜார்ஜியா தலைநகர் அட்லாண்டாவில் நடைபெற்ற நிகழ்வில் ஜோ பைடனும், டொனால்ட் டிரம்பும் நேருக்கு நேர் சந்தித்து விவாதித்தனர்.
பொருளாதார பிரச்சனையை மையமாக வைத்து விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தின் போது தான் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை பட்டியலிட்டு ஜோ பைடனும், டொனால்ட் டிரம்பும் வாக்காளர்களிடம் ஆதரவு கேட்டனர். தங்களின் செயல்பாடுகள் எப்படி இருக்கும்? என்பது குறித்தும் விளக்கம் அளித்தனர்.
81 வயதாகும் ஜோ பபைடன் வயது மூப்பின் காரணமாக சமீப காலங்களாக பொது நிகழ்ச்சிகளில் அவரது பேச்சிலும் நடையிலும் தடுமாற்றம் ஏற்படுவது வழக்கமாக உள்ளது. இது தொடர்பான வீடியோக்களும் வெளியாகி சமூக வலைத்தளங்களில் பரவின.
மேலும் நிகழ்ச்சிகளில் திடீரென அசைவுகள் ஏதுமின்றி பைடன் ஸ்தம்பித்து விடுவதும் வழக்கமாக உள்ளது. அந்த வகையில், இன்று டிரம்புடன் நடந்த விவாதத்தின்போது, கோவிட் பெருந்தொற்று குறித்து பேசுகையில், ஜோ பைடன் சற்று நேரம் அசைவின்றி ஸ்தம்பித்தார்.
அவர் என்ன செய்கிறார் என்று டிரம்ப் உற்று நோக்கினார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. மேலும் இந்த மொத்த விவாதத்த்திலும் ஜோ பைடன் பேச்சில் பலமுறை தடுமாற்றம் ஏற்பட்டது. அவரது குரல் தழுதழுத்திருநத்து. சில சமயம் அவர் என்ன பேசுகிறார் என்றே புரியாத சூழல் நிலவியது.
ஜோ பைடனின் இந்த தடுமாற்றம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் பைடனுக்கு பதில் அதிபர் வேட்பாளராக ஒபாமாவின் மனைவி மிச்செல் ஒபாமா போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வேகமாக பரவி வருகின்றன.
இந்நிலையில், ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக மிச்செல் ஒபாமா போட்டியிடுவார் என்று குடியரசு கட்சியின் வழங்கறிஞர் டெட் க்ரூஸ் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்திடம் நாசா ஒப்படைத்துள்ளது.
- ஒப்பந்தத்தின் மதிப்பு 843 மில்லியன் டாலர் ஆகும்.
வாஷிங்டன்:
சர்வதேச விண்வெளி நிலையத்தை அமெரிக்கா, ரஷியா, ஜப்பான், ஐரோப்பா, கனடா ஆகிய நாடுகள் இணைந்து உருவாக்கின.
விண்வெளி நிலையத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் 1998-ம் ஆண்டு தொடங்கப் பட்டு 2000-ம் ஆண்டு முதல் விண்வெளி வீரர்களின் குழு நடவடிக்கைகளுடன் இயங்கத் தொடங்கியது. பூமியில் இருந்து 400 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள விண்வெளி நிலையத்தின் ஆயுட்காலம் 2030-ம் ஆண்டு முடிகிறது.
அதன்பின்னர் விண் வெளியில் இருந்து அதனை பாதுகாப்பாக அப்புறப்படுத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. பூமியின் சுற்றுவட்டப்பாதையில் இருந்து சர்வதேச விண்வெளி நிலையத்தை அப்புறப்படுத்தி வளிமண்டலத்திற்கு கொண்டு வருவதற்காக பிரத்தியேக விண்கலம் உருவாக்கப்படுகிறது.
இந்த பணியை எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்திடம் நாசா ஒப்படைத்துள்ளது. இந்தப் பணிக்கான 843 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 7 ஆயிரம் கோடி) மதிப்பில் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது.
அடுத்த 10 ஆண்டுகளில், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் 4.5 லட்சம் கிலோ எடை கொண்ட சர்வதேச விண்வெளி நிலையத்தை பசிபிக் பெருங்கடலில் தள்ளக் கூடிய ஒரு வாகனத்தை உருவாக்க உள்ளது.
இதுதொடர்பாக நாசா கூறும்போது, யு.எஸ். டி.ஆர்.பிட் வாகனத்தை (விண் கலம்) உருவாக்கி வழங்குவதற்கு ஸ்பேஸ்எக்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தத்தின் மதிப்பு 843 மில்லியன் டாலர் ஆகும். இது விண்கலம் தயாரிப்புக்கான தொகை மட்டுமே.
விண்வெளி நிலையத்தை வளிமண்டலத்திற்குள் கொண்டு வருவது மட்டுமல்லாமல், மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு ஆபத்தை தவிர்ப்பதையும் இந்த விண்கலம் உறுதி செய்யும். டிஆர்பிட் விண்கலத்தின் மூலம், சர்வதேச விண்வெளி நிலையம் பூமியின் சுற்று வட்டப்பாதையில் இருந்து அப்புறப்படுத்தப்படும்.
அதன் பின்னர் அந்த விண்கலமும், சர்வதேச விண்வெளி நிலைய பாகங்களும் வளிமண்ட லத்தில் நுழையும்போது, அவை இரண்டும் உடைந்து எரியும் என்று தெரிவித்தது. விண்வெளி நிலையத்தின் கட்டமைப்பு இன்னும் நல்ல நிலையில் இருந்தாலும், அதனை அகற்றுவதற்கான எதிர்கால திட்டங்களை இப்போதே உருவாக்க வேண்டும் என்றும் எந்த உதவியும் வழங்கப்படாவிட்டால் அது இறுதியில் தானே பூமியின்மேல் விழுந்து மக்களுக்கு குறிப்பிடத்தக்க ஆபத்தை ஏற்படுத்தும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
- நியூயார்க்கின் டைம்ஸ் சதுக்கத்தில் விராட் கோலியின் தங்க சிலை அமைக்கப்பட்டுள்ளது.
- இதுதொடர்பான புகைப்படங்கள் இணைய தளங்களில் வைரலாகி வருகின்றன.
நியூயார்க்:
அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் உள்ள டைம்ஸ் சதுக்கத்தில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான விராட் கோலியின் தங்க சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான புகைப்படங்கள் இணைய தளங்களில் வைரலாகி வருகின்றன. விசாரணையில், அந்தச் சிலை போலி என தெரிய வந்துள்ளது.
இந்நிலையில், விராட் கோலியின் உருவச் சிலை டைம்ஸ் சதுக்கத்தில் அமைக்கப்படவில்லை என்ற உண்மை கண்டறியப்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், நாளை நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பையில் விராட் கோலி நன்றாக விளையாடக் கோரி சிலை அமைத்துள்ளோம் டுயூரோபிளக்ஸ் மெத்தை கம்பெனி தெரிவித்துள்ளது.
இதுதொடர்பான வீடியோவில் விராட் கோலியின் நல்ல உறக்கத்துக்கு டுயூரோபிளக்ஸ் மெத்தை என விளம்பரமும் செய்திருந்தது.
கம்ப்யூட்டர் அனிமேஷன் மூலம் விராட் கோலியின் சிலை உருவாக்கப்பட்டது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
டுயூரோபிளக்ஸ் மெத்தை கம்பெனியின் விளம்பர தூதராக கடந்த ஆண்டு விராட் கோலி நியமனம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
- டிரம்புக்கு பதிலளித்த ஜோ பைடன், My son is not a sucker.. you are a sucker, you are a loser என்று குறிப்பிட்டார்
- ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக்கொண்ட அவர்களில் கோல்ப் விளையாட்டில் யார் சிறந்தவர் என்றும் விவாதித்துக்கொண்டனர்.
அமெரிக்காவில் வரும் நவம்பர் 5-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில், ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டிரம்ப் போட்டியிடுகிறார். இந்த தேர்தலின் முக்கிய அம்சமாக, வேட்பாளர்கள் பல்வேறு கட்டங்களில் நேருக்கு நேர் விவாதிப்பது வழக்கம்.
அந்த வகையில் முதலாவது நேரடி விவாத நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. மொத்தம் 90 நிமிடம் விவாதம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. ஜார்ஜியா தலைநகர் அட்லாண்டாவில் நடைபெற்ற நிகழ்வில் ஜோ பைடனும், டொனால்ட் டிரம்பும் நேருக்கு நேர் சந்தித்து விவாதித்தனர்.
பொருளாதார பிரச்சனையை மையமாக வைத்து விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தின் போது தான் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை பட்டியலிட்டு ஜோ பைடனும், டொனால்ட் டிரம்பும் வாக்காளர்களிடம் ஆதரவு கேட்டனர். தங்களின் செயல்பாடுகள் எப்படி இருக்கும்? என்பது குறித்தும் விளக்கம் அளித்தனர்.
இந்த விவாதத்தில் பொருளாதாரம், வேலையின்மை, சட்டவிரோத குடியேற்றம், வெளியுறவுக் கொள்கை, கருக்கலைப்பு உரிமைகள், இஸ்ரேல் பாலஸ்தீன போர், கொரோனா தொற்றைக் கையாண்ட விதம் உள்ளிட்ட பலவற்றைக் குறித்தும் அவர்கள் விவாதகித்தனர். பைடன் சீனாவிடம் பணம் பெற்றுக்கொண்டு அமேரிக்காவில் பற்றாக்குறையை உண்டாக்குகிறார் என்று கூறும் அளவுக்கு டிரம்ப் சென்றார். மேலும் ஜோ பைடனின் மகன் சட்டவிரோதமாக ஆயுதம் வைத்திருந்த வழக்கில் சிக்கியுள்ளதை குறிப்பிட்ட டிரம்புக்கு, My son is not a sucker.. you are sucker, you are a loser என்று டிரம்ப் பாலியல் வழக்கில் சிக்கியுள்ளதை குறிப்பிட்டு ஜோ பைடன் பதிலளித்தார்.
ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக்கொண்ட அவர்களில் கோல்ப் விளையாட்டில் யார் சிறந்தவர் என்றும் விவாதித்துக்கொண்டனர். 81 வயதாகும் ஜோ பபைடன் வயது மூப்பின் காரணமாக சமீப காலங்களாக பொது நிகழ்ச்சிகளில் அவரது பேச்சிலும் நடையிலும் தடுமாற்றம் ஏற்படுவது வழக்கமாக உள்ளது. இது தொடர்பான வீடியோக்களும் வெளியாகி சமூக வலைத்தளங்களில் பரவின.
மேலும் நிகழ்ச்சிகளில் திடீரென அசைவுகள் ஏதுமின்றி பைடன் ஸ்தம்பித்து விடுவதும் வழக்கமாக உள்ளது. அந்த வகையில், இன்று டிரம்புடன் நடந்த விவாதத்தின்போது, கோவிட் பெருந்தொற்று குறித்து பேசுகையில், ஜோ பைடன் சற்று நேரம் அசைவின்றி ஸ்தம்பித்தார்.

அவர் என்ன செய்கிறார் என்று டிரம்ப் உற்று நோக்கினார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. மேலும் இந்த மொத்த விவாதத்த்திலும் ஜோ பைடன் பேச்சில் பலமுறை தடுமாற்றம் ஏற்பட்டது. அவரது குரல் தழுதழுத்திருநத்து. சில சமயம் அவர் என்ன பேசுகிறார் என்றே புரியாத சூழல் நிலவியது.
- அமெரிக்காவில் போதைப்பொருள் புழக்கம் பைடன் ஆட்சியில் அதிகரித்துள்ளது.
- அமெரிக்க வரலாற்றிலேயே மோசமான அதிபராக இருந்தவர் டிரம்ப்.
அமெரிக்காவில் வரும் நவம்பர் 5-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில், ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டிரம்ப் போட்டியிடுகிறார். இந்த தேர்தலின் முக்கிய அம்சமாக, வேட்பாளர்கள் பல்வேறு கட்டங்களில் நேருக்கு நேர் விவாதிப்பது வழக்கம்.
அந்த வகையில் முதலாவது நேரடி விவாத நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. மொத்தம் 90 நிமிடம் விவாதம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. விவாதத்தில் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தக்கூடாது உள்ளிட்ட கடுமையான விதிமுறைகள் உள்ளன. பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை.
ஜார்ஜியா தலைநகர் அட்லாண்டாவில் நடைபெற்ற நிகழ்வில் ஜோ பைடனும், டொனால்ட் டிரம்பும் நேருக்கு நேர் சந்தித்து விவாதித்தனர்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் பொருளாதார பிரச்சனையை மையமாக வைத்து விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தின் போது தான் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை பட்டியலிட்டு ஜோ பைடனும், டொனால்ட் டிரம்பும் வாக்காளர்களிடம் ஆதரவு கேட்டனர். தங்களின் செயல்பாடுகள் எப்படி இருக்கும்? என்பது குறித்தும் விளக்கம் அளித்தனர்.
அப்போது, டிரம்ப் நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டவர் என பைடன் கூறியதற்கு, ஜெயிலுக்கு போக வேண்டியது யார் என்பதை கமிட்டி முடிவு செய்யும். பைடனின் மகனும் நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்ட குற்றவாளி தான். பைடன் கூறும் குற்றச்சாட்டுகள் பொய்யானவை என நிரூபிக்கப்பட்டுள்ளன. நாளுக்கு நாள் எனக்கு மக்கள் ஆதரவு அதிகரித்து வருகிறது. வேலையை ஒழுங்காக செய்யாதவர்களை பணிநீக்கம் செய்துவிடுவேன்.
குற்றவாளிகளை அனுமதிப்பவர்களை வேலையை விட்டு நீக்கி இருக்கிறீர்களா? எல்லையை திறந்து அன்னியர்களை அனுமதிக்க நினைக்கிறார் பைடன். அவர் மீண்டும் அதிபரானால் அமெரிக்காவை யாராலும் காப்பாற்ற முடியாது. அமெரிக்க வரலாற்றிலேயே மோசமான அதிபர் டைபன் தான். மிகப்பெரிய நிதி பற்றாக்குறை பைடன் ஆட்சியல் தான் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவை சீனா அழித்து கொண்டிருப்பதை அனுமதிக்கிறார் பைடன். எல்லையில் சட்ட விரோத குடியேற்றங்களால் போதைப் பொருள் புழக்கம் அதிகரிப்பு. அமெரிக்காவில் போதைப்பொருள் புழக்கம் பைடன் ஆட்சியில் அதிகரித்துள்ளது. நான் ஆட்சிக்கு வந்தவுடன் ரஷியாவில் உள்ள பிணைக்கைதிகள் விடுவிக்கப்படுவார்கள். மனதளவிலும், உடல் அளவிலும் நான் நல்ல நிலையில் தான் இருக்கிறேன் என்று டிரம்ப் கூறினார்.
இதனிடையே, மகனின் மறைவுக்கு பிறகு அரசியலுக்கு வரவேண்டாம் என நினைத்தேன். அமெரிக்க வரலாற்றிலேயே மோசமான அதிபராக இருந்தவர் டிரம்ப். போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்துவதில் முழு கவனம் செலுத்தி வருகிறோம். மிக மிக மோசமான பொருளாதாரத்தை என்னிடம் விட்டுச்சென்றார் டிரம்ப். அமெரிக்காவில் தற்போதைய பொருளாதாரம் மாறி உள்ளது. எத்தனை பிரச்சனை இருந்தாலும் உலகின் முன்னணி நாடாகாவை தற்போதும் திகழ்ந்து வருகிறது என்று பைடன் கூறினார்.
- குழந்தைகளுக்கு எதிராக பாகிஸ்தானில் தொடர்ந்து கடுமையான மீறல்கள் உள்ளன.
- அதன் கவனத்தை திசை திருப்புவதற்கான வழக்கமான மற்றொரு முயற்சி.
ஐ.நா.வின் பாதுகாப்பு கவுன்சிலில் குழந்தைகள் மற்றும் ஆயுதங்கள் விதிமீறல் தொடர்பான விவாதம் நடைபெற்றது. அப்போது பாகிஸ்தான் தூதர் காஷ்மீர் குறித்து பேசினார். அதற்கு இந்தியாவுக்கான ஐ.நா.வின் துணை நிரந்தர பிரதிநிதி ஆர். ரவீந்திரா கடும் கண்டனம் தெரவித்ததுடன், தக்க பதிலடி கொடுத்தார்.
குழந்தைகளுக்கு எதிராக பாகிஸ்தானில் தொடர்ந்து கடுமையான மீறல்கள் உள்ள நிலையில், அதன் கவனத்தை திசை திருப்புவதற்கான வழக்கமான மற்றொரு முயற்சி. எந்த தடையுமின்றி பாகிஸ்தானில் தொடர்ந்து மீறல்கள் நடைபெற்று வருகிறது.
எங்கள் நாட்டிற்கு எதிராக ஒரு பிரதிநிதி கூறிய குற்றச்சாட்டுக்கு காலத்தின் நலன் கருதி இது முற்றிலும் அரசியல் உள்நோக்கம் கொண்டது. ஆதாரமற்றது என குறுகிய பதில் அளிக்கிறேன். இந்த அடிப்படையற்ற கருத்துகளை நான் திட்டவட்டமாக நிராகரித்து அவர்களை கண்டிக்கிறேன் என்றார்.
மேலும், ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களைப் பொறுத்தவரை இந்த குறிப்பிட்ட பிரதிநிதி அல்லது அவரது நாடு எதை நம்பினாலும் அல்லது விரும்பினாலும், அவை இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதியாக இருந்தன, எப்போதும் இருக்கும் என்றார்.
- பொலிவியன் ராணுவத்தின் சில பிரிவுகளால் ஒழுங்கற்ற அணி திரட்டல்களை நாங்கள் கண்டிக்கிறோம்.
- சிறிது நேரத்தில் ராணுவ தளபதி ஜுவான் ஜோஸ் ஜூனிகாவை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து ஆட்சி கவிழ்ப்பு சதி முறியடிக்கப்பட்டது.
சுக்ரே:
தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் அதிபராக லூயிஸ் ஆர்ஸ் உள்ளார். இந்த நிலையில் அங்கு ராணுவ தளபதி ஜுவான் ஜோஸ் ஜூனிகா திடீரென்று ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியில் ஈடுபட்டார். அவரது உத்தரவின்பேரில் ராணுவத்தின் சில பிரிவினர் ராணுவ புரட்சிக்கு முயன்றனர்.
அதிபர் மாளிகை, பாராளுமன்றம் அமைந்துள்ள பிளாசா முரில்லோ வரலாற்று சதுக்கத்தில் ராணுவ வீரர்கள், டாங்கிகள் குவிக்கப்பட்டன. இதில் ஒரு டாங்கி மூலம் அதிபர் மாளிகையின் கதவை உடைக்க முயன்றனர். அதேபோல் அரசு கட்டிடங்களும் முற்றுகையிடப்பட்டன.இதனால் பெரும் பதற்றம் நிலவியது.
இதுதொடர்பாக ராணுவ தளபதி ஜுவான் ஜோஸ் ஜூனிகா கூறும்போது, ஜனநாயகத்தை ஆயுதப் படைகள் மறுசீரமைக்க விரும்புகின்றன. அதை உண்மையான ஜனநாயகமாக மாற்ற விரும்புகின்றன. நாங்கள் எங்கள் தாயகத்தை மீட்டெடுக்கப் போகிறோம். அதிபர் லூயிஸ் ஆர்சை மதிக்கிறேன்.
அதேவேளையில் அரசாங்கத்தில் மாற்றம் ஏற்படும். சிறையில் உள்ள முன்னாள் தலைவர் ஜீனைன் அனெஸ் உட்பட அரசியல் கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என்றார். சுமார் 5 மணி நேரத்துக்கு பிறகு ராணுவ வீரர்கள் பின்வாங்கினர். ராணுவ டாங்கிகளும் அங்கிருந்து புறப்பட்டு சென்றன. அதன்பின் சிறிது நேரத்தில் ராணுவ தளபதி ஜுவான் ஜோஸ் ஜூனிகாவை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து ஆட்சி கவிழ்ப்பு சதி முறியடிக்கப்பட்டது.
இதுகுறித்து அதிபர் லூயிஸ் ஆர்ஸ் கூறும்போது, பொலிவியன் ராணுவத்தின் சில பிரிவுகளால் ஒழுங்கற்ற அணிதிரட்டல்களை நாங்கள் கண்டிக்கிறோம். ஜனநாயகம் மதிக்கப்பட வேண்டும். மீண்டும் ஒரு முறை, பொலிவியர்களின் உயிரைப் பறிக்கும் சதி முயற்சிகளை நாம் அனுமதிக்க முடியாது.
ஜனநாயகத்தைப் பாதுகாக்க ஒரு தேசிய அணி திரட்டலுக்கு மக்களுக்கு நாங்கள் அழைப்பு விடுக்கிறோம் என்றார். ராணுவ தளபதி ஜூனிகா மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்தவர்களுக்கு எதிராக கிரிமினல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும் என்று அரசு தரப்பில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது.
பொலிவியாவில் ஆட்சி கவிழ்ப்பு முயற்சிக்கு அமெரிக்கா, பிரேசில்,சிலி, ஈக்வடார், பெரு, மெக்சிகோ, கொலம்பியா,வெனிசுலா ஆகிய நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
- கலிபோர்னியா மாகாணத்தில் அதிகபட்சமாக தெலுங்கு பேசும் மக்கள் உள்ளனர்.
- அமெரிக்காவில் அதிகம் பேசப்படும் மொழிகளில் தெலுங்கு 11-வது இடத்தில் உள்ளது.
வாஷிங்டன்:
அமெரிக்காவில் இந்திய மாணவர்கள் பலர் படித்து வருகிறார்கள். ஏராளமானோர் தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் பணியாற்றி வருகிறார்கள்.
இந்த நிலையில் அமெரிக்காவில் தெலுங்கு மொழி பேசும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. 2016- ம் ஆண்டு அமெரிக்கா முழுவதும் தெலுங்கு பேசும் மக்கள் தொகை 3.2 லட்சமாக இருந்தது.
தற்போது 2024-ம் ஆண்டில் தெலுங்கு பேசும் மக்கள் தொகை 12.3 லட்சமாக உள்ளது. கடந்த 8 ஆண்டுகளில் நான்கு மடங்கு உயர்ந்துள்ளது. கலிபோர்னியா மாகாணத்தில் அதிகபட்சமாக தெலுங்கு பேசும் மக்கள் உள்ளனர். அங்கு 2 லட்சம் பேர் வசிக்கிறார்கள்.
டெக்சாசில் 1.5 லட்சம் பேர், நியூ ஜெர்சியில் 1.1 லட்சம் பேர், இல்லினாய்சில் 83 ஆயிரம் பேர், வர்ஜீனியாவில் 78 ஆயிரம் பேர், ஜார்ஜியாவில் 52 ஆயிரம் பேர் உள்ளனர்.
அமெரிக்காவில் அதிகம் பேசப்படும் மொழிகளில் தெலுங்கு 11-வது இடத்தில் உள்ளது.
இதுகுறித்து வட அமெரிக்காவின் தெலுங்கு சங்கத்தின் முன்னாள் செயலாளர் அசோக் கொல்லா கூறும்போது, ஒவ்வொரு ஆண்டும் 60 ஆயிரம் முதல் 70 ஆயிரம் மாணவர்கள் அமெரிக்காவிற்கு வருகிறார்கள். அவர்களுடன் 10 ஆயிரம் எச்1பி விசா வைத்திருப்பவர்களும் வருகிறார்கள்.
அமெரிக்காவில் தெலுங்கு பேசுபவர்களில் பழைய தலைமுறையினர் பெரும்பாலும் தொழில்முனைவோராக உள்ளனர். அதே–சமயம் 80 சதவீத இளைஞர்கள் தகவல் தொழில்நுட்பம் மற்றும் நிதித்துறையில் உள்ளனர் என்றார். இந்த தகவல் அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு பணியகம் வெளியிட்ட தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கடந்த 5-ந்தேதி சுனிதா வில்லியம்ஸ் மீண்டும் விண்வெளி பயணம் மேற்கொண்டார்.
- சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் விண்வெளிக்கு பயணித்தனர்.
நாசா:
இந்திய வம்சாவளியை சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ். அமெரிக்க கடற்படை அகாடமியில் படித்த இவர், 1998-ம் ஆண்டு நாசா விண்வெளி பயணத்திற்கு தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து 2006 மற்றம் 2012-ம் ஆண்டுகளில் சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் மேற்கொண்டிருக்கிறார்.
இதன்மூலம் அதிகநேரம், அதாவது 50 மணி நேரம் 40 நிமிடங்கள் விண்வெளியில் நடந்த இரண்டாவது பெண் என்ற பெருமையை பெற்றார். இந்நிலையில் கடந்த 5-ந்தேதி சுனிதா வில்லியம்ஸ் மீண்டும் விண்வெளி பயணம் மேற்கொண்டார்.

அவருடன் புட்ச் வில்மோர் என்பவருடன் விண்வெளி பயணம் மேற்கொண்டிருந்தார். இருவரும் அமெரிக்காவின் கேப் கனாவெரல் ஏவுதளத்தில் இருந்து புறப்பட்டு சென்றனர். அவர்கள் கடந்த 7-ந்தேதி சர்வதேச விண்வெளி மையத்தை அடைந்தனர். இதன்மூலம் மூன்றாவது முறையாக விண்வெளி நிலையத்தை சுனிதா வில்லியம்ஸ் அடைந்தார்.
சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் விண்வெளி பயணத்தை முடித்துக்கொண்டு கடந்த 13-ந்தேதி பூமிக்கு திரும்பும் வகையில் பயண திட்டம் அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர்கள் திரும்ப இருந்த பயணம் திடீரென 26-ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. பின்பு அந்த தேதியிலும் அவர்கள் புறப்படவில்லை. அவர்கள் இருந்த விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சினை காரணமாக அவர்கள் திரும்பி வருவதில் பிரச்சினை ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. விண்வெளி துறையில் தனியாரின் பங்களிப்பு அதிகரித்து வருகிறது. அந்த வகையில் விமான தயாரிப்பு நிறுவனமான போயிங், ஸ்பேஸ் ஷிப்பை தயாரித்திருக்கிறது.
'ஸ்டார் லைனர்' என்றுபெயரிடப்பட்ட இந்த ஸ்பேஸ் ஷிப் சர்வதேச விண்வெளி மையத்திற்கு விண்வெளி வீரர்களை அழைத்துச் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது. இதற்கு முன்பு வரை இந்த பணிகளை நாசா தான் மேற்கொண்டு வந்தது. ஆனால் விண்வெளி துறையில் தனியாரை ஊக்குவிக்கும் விதமாக போயிங் நிறுவனத்துக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
போயிங் நிறுவனம் ஏற்கனவே எலான் மஸ்க்கின்ஸ் ஸ்பேஸ் ஷிப்களை வடிவமைத்திருக்கிறது. எனவே போயிங் தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி 'ஸ்டார் லைனர்' என்கிற ஸ்பேஸ ஷிப்பை வடிவமைத்தது. அதிலேயே சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் விண்வெளிக்கு பயணித்தனர்.

இந்த பயணத்தை தொடங்குவதற்கு முன்னரே பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் விண்வெளிக்கு சென்ற நிலையில் விண்கலத்தில் பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது. போயிங் 'ஸ்டார் லைனர்' விண்கலத்தில் ஹீலியம் வாயு கசிவு ஏற்பட்டிருக்கிறது. 5 முறை கசிவு ஏற்பட்டதன் காரணமாக விண்கலத்தை இயக்க முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இதனால் சுனிதா வில்லியம்ஸ் மற்றும புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் திரும்பி வருவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. விண்கலத்தில் உள்ள 28 த்ரஸ்டர்களில் பழுதடைந்த 14 த்ரஸ்டர்களை மீட்டெக்க வேண்டும். 'ஸ்டார் லைனர்' விண்கலத்தில் 45 நாட்கள் வரை தங்கியிருக்க முடியும், அதே நேரத்தில் பல்வேறு காப்பு பிரதி அமைப்புகளால் 75 நாட்கள் வரை இணைக்கப்பட்டிருக்கும்.
இந்த விவகாரத்தில் சிக்கலை சரிசெய்து சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து பூமிக்கு விண்கலம் திருப்பி அனுப்பப்படும் என்று நாசா நம்புகிறது. 'ஸ்டார் லைனர்' விண்கலம் மூலம் பத்திரமா திரும்ப முடியாவிட்டால் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகிய இருவரையும் காப்பாற்ற 'எலான் மஸ்க்' கேட்கப்படலாம் என்று தெரிகிறது. சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் பூமிக்கு திரும்பும் திட்டம் நேற்று இரவு இருக்கலாம் என்று கருதப்பட்ட நிலையில், அதுவும் கைவிடப்பட்டது. அது ஜூலை 2-ந்தேதிக்கு மாற்றப்படலாம் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.






