என் மலர்tooltip icon

    பிரிட்டன்

    • குயின்ஸ் கிளப் சாம்பியன்ஷிப் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.
    • இதில் கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரிபாகினா வெற்றி பெற்றார்.

    லண்டன்:

    குயின்ஸ் கிளப் சாம்பியன்ஷிப் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.

    இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரிபாகினா, பிரிட்டனின் ஹீதர் வாட்சன் உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய ரிபாகினா 6-4, 6-2 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் மேடிசன் கீஸ் 6-3, 6-2 என்ற செட் கணக்கில் ரஷியாவின் ஜகாரோவாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

    • தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 138 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
    • ஆஸ்திரேலியாவின் பாட் கம்மின்ஸ் 6 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

    லண்டன்:

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 212 ரன்னில் ஆல் அவுட்டானது.

    தென் ஆப்பிரிக்காவின் ரபாடா 5 விக்கெட்டும், மார்கோ யான்சென் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    தொடர்ந்து ஆடிய தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் ஆரம்பம் முதலே திணறியது. இதனால் தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 138 ரன்னில் சுருண்டது. இதன்மூலம் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 74 ரன்கள் முன்னிலை பெற்றது.

    ஆஸ்திரேலியா சார்பில் பாட் கம்மின்ஸ் 6 விக்கெட்டும், மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட்டும், ஹேசில்வுட் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்சை தொடங்கியது. ரபாடா, நிகிடியின் துல்லியமான பந்துவீச்சில் விரைவில் விக்கெட்கள் வீழ்ந்தன.

    ஒரு கட்டத்தில் 75 ரன்கள் எடுப்பதற்குள் 7 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது ஆஸ்திரேலியா. 8வது விக்கெட்டுக்கு இணைந்த அலெக்ஸ் கேரி- மிட்செல் ஸ்டார்க் ஜோடி பொறுப்புடன் ஆடியது. இந்த ஜோடி 61 ரன்கள் சேர்த்த நிலையில் அலெக்ஸ் கேரி 43 ரன்னில் அவுட்டானார்.

    இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுக்கு 144 ரன்கள் எடுத்து, 218 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

    இன்னும் 3 நாள் மீதமுள்ள நிலையில் வெற்றி பெறுவது ஆஸ்திரேலியாவா, தென் ஆப்பிரிக்காவா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    • முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா அணி 212 ரன்களுக்கு ஆல் அவுட்டானது
    • இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய ஸ்டீவ் ஸ்மித் 66 ரன்கள் அடித்தார்.

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இங்கிலாந்தில் உள்ள லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி தென் ஆப்பிரிக்காவின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாத அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 212 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக வெப்ஸ்டர் 72 ரன்களும் ஸ்டீவ் ஸ்மித் 66 ரன்களும் அடித்தனர்.

    தென் ஆப்பிரிக்கா தரப்பில் ரபாடா 5 விக்கெட்டும் யான்சன் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதனையடுத்து பேட்டிங் ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. முதல் நாள்முடிவில் தென் ஆப்பிரிக்கா 4 விக்கெட் இழப்பிற்கு 43 ரன்கள் அடித்துள்ளது. கேப்டன் பவுமா 3 ரன்களுடனும் பெடிங்ஹாம் 8 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

    இப்போட்டியில் அரைசதம் அடித்ததன் மூலம் சச்சினின் மிக முக்கியமான சாதனையை ஸ்டீவ் ஸ்மித் முறியடித்துள்ளார்.

    ஐசிசி நாக் அவுட் போட்டிகளில் அதிக அரைசதம் அடித்தவர்களின் பட்டியலில் சச்சினை ஸ்டீவ் ஸ்மித் முந்தியுள்ளார்.

    ஐசிசி நாக் அவுட் போட்டிகளில் சச்சின் 6 அரைசதங்கள் நடித்துள்ள நிலையில், ஸ்டீவ் ஸ்மித் 7 அரைசதங்கள் அடித்து சச்சினின் சாதனையை முறியடித்துள்ளார்.

    அதே சமயம் இப்பட்டியலில் 10 அரைசதங்களுடன் யாரும் நெருங்க முடியாத உயரத்தில் விராட் கோலி உள்ளார்.

    • 2-வது டி20யில் 37 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி இங்கிலாந்து வெற்றி பெற்றது
    • டி20 தொடரில் ஜாஸ் பட்லர் தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

    டி20 தொடரிலும் வெஸ்ட் இண்டீசை ஒயிட்வாஷ் செய்தது இங்கிலாந்து / England whitewashed West Indies in T20

    ஒருநாள் தொடரை தொடர்ந்து டி20 தொடரிலும் வெஸ்ட் இண்டீசை ஒயிட்வாஷ் செய்தது இங்கிலாந்து

    வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி, 3 டி20 போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் இங்கிலாந்து 3-0 என முழுமையாகக் கைப்பற்றியது. முதல் 2 டி 20 போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று 2-0 என தொடரை கைப்பற்றியது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3 ஆவது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 248 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக பெண் டக்கெட் 84 ரன்கள் விளாசினார்.

    இதனை தொடர்ந்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் மட்டுமே எடுத்து 37 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

    வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரைத் தொடர்ந்து, டி20 தொடரிலும் அனைத்து போட்டிகளில் வென்று ஹாரி ப்ரூக் தலைமையிலான இங்கிலாந்து அணி அதிரடி காட்டியுள்ளது.

    ஒருநாள் தொடரில் ஜோ ரூட் தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்ட நிலையில் டி20 தொடரில் ஜாஸ் பட்லர் தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    • சச்சின், யுவராஜ், புஜாராவுக்கு பிறகு இந்த கிளப்பிற்கு ருதுராஜ் விளையாடவுள்ளார்.
    • ஜூலை மாதம் ருதுராஜ் கெய்க்வாட் யார்க்ஷயர் அணியுடன் இணைவார்

    இங்கிலாந்தின் கவுண்டி சாம்பியன்ஷிப்பில் விளையாட அந்நாட்டின் பிரபல யார்க்ஷயர் (Yorkshire) கிளப்பில் இந்திய வீரர் ருதுராஜ் கெய்க்வாட் இணைந்துள்ளார்.

    இதன் மூலம் சச்சின், யுவராஜ், புஜாராவுக்கு பிறகு இந்த கிளப்பிற்கு விளையாடும் 4வது இந்தியர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

    ஜூலை மாதம் ருதுராஜ் கெய்க்வாட் யார்க்ஷயர் அணியுடன் இணைவார் என்றும் இந்த சீசன் முடியும் வரை அவர் அணியில் இருப்பார் என்று யார்க்ஷயர் கிளப் தெரிவித்துள்ளது.

    • கடந்த இரு சீசன்களிலும் இந்திய அணி இரண்டாவது இடம் பெற்றது.
    • கேப்டனாக டெம்பா பவுமா இதுவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் தோல்வியே அடையவில்லை.

    லார்ட்ஸ்:

    ஐ.சி.சி. எனும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கடந்த 2019-ம் ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் என்ற தொடரை உருவாக்கியது. இதன் முதலாவது சீசனில் நியூசிலாந்து அணியும், 2-வது சீசனில் ஆஸ்திரேலிய அணியும் கோப்பையைக் கைப்பற்றின. இந்த இரு சீசன்களிலும் இந்திய அணி 2-வது இடம் பெற்றது.

    தற்போது நடைபெற உள்ள 3-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி லண்டன் லார்ட்சில் நாளை (இந்திய நேரப்படி) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது.

    கடந்த ஒரு வாரமாக இரு அணி வீரர்களும் பயிற்சி மேற்கொண்டனர். ஐ.சி.சி. கோப்பையை வெல்ல நீண்ட காலமாக போராடி வரும் தென் ஆப்பிரிக்க அணியும், கோப்பையை தக்க வைக்க ஆஸ்திரேலிய அணியும் மோத உள்ளதால் இந்த ஆட்டம் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

    தென் ஆப்பிரிக்க அணி டெம்பா பவுமா கேப்டன்சிக்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் புத்தெழுச்சி பெற்றுள்ளது. கேப்டனாக டெம்பா பவுமா இதுவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் தோல்வியே அடையவில்லை. அந்த பெருமையுடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் டெம்பா பவுமா தலைமையில் தென் ஆப்பிரிக்க அணி களமிறங்குகிறது.

    இந்நிலையில், நாளை தொடங்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான ஆடும் லெவன் அணியை தென்னாப்பிரிக்கா அறிவித்துள்ளது.

    தென் ஆப்பிரிக்க அணி வீரர்களின் விவரம் வருமாறு:

    ஐடன் மார்க்ரம், ரியான் ரிக்கெல்டன், வியான் முல்டர், டெம்பா பவுமா (கே), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டேவிட் பெடிங்ஹாம், கைல் வெர்ரின் (விக்கெட்கீப்பர்), மார்கோ ஜான்சன், கேசவ் மகாராஜ், ககிசோ ரபாடா, லுங்கி நிகிடி

    • இந்திய ஏ அணி முதல் இன்னிங்சில் 348 ரன்களில் ஆல் அவுட்டானது.
    • இங்கிலாந்து லயன்ஸ் அணி முதல் இன்னிங்சில் 327 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.

    நார்த்தம்டான்:

    இந்தியா ஏ, இங்கிலாந்து லயன்ஸ் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நார்த்தம்டானில் நடந்து வருகிறது.

    முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 89.3 ஓவரில் 348 ரன்களில் ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 116 ரன்கள் அடித்தார்.

    இங்கிலாந்து சார்பில் கிறிஸ் வோக்ஸ் 3 விக்கெட்டும், ஜோஷ் டாங், ஜார்ஜ் ஹில் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து லயன்ஸ் அணி முதல் இன்னிங்சில் 327 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக எமிலோ ஹே 71 ரன் எடுத்தார்.

    இந்தியா ஏ சார்பில் கலீல் அகமது 4 விக்கெட்டும், துஷார் தேஷ்பாண்டே, கம்போஜ் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து 21 ரன் முன்னிலையுடன் இந்திய அணி 2வது இன்னிங்சை ஆடியது. கே.எல்.ராகுல் அரை சதமடித்து 51 ரன்னில் அவுட்டானார். கேப்டன் அபிமன்யு ஈஸ்வரன் பொறுப்புடன் ஆடி 80 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    மூன்றாம் நாள் முடிவில் இந்திய ஏ அணி 4 விக்கெட்டுக்கு 163 ரன்கள் எடுத்துள்ளது. இதன்மூலம் இந்திய ஏ அணி 184 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

    • முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவரில் 196 ரன்கள் குவித்தது.
    • அதிகபட்சமாக கேப்டன் ஷாய் ஹோப் 49 ரன்கள் எடுத்தார்.

    லண்டன்:

    வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி, 3 டி20 போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் இங்கிலாந்து 3-0 என முழுமையாகக் கைப்பற்றியது. முதல் டி 20 போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 196 ரன்கள் குவித்தது.

    கேப்டன் ஷாய் ஹோப் 49 ரன்னும், ஜான்சன் சார்லஸ் 47 ரன்னும், ரோவ்மன் பாவெல் 34 ரன்னும் எடுத்தனர்.

    இங்கிலாந்து சார்பில் லூக் வுட் 2 விக்கெட் வீழ்த்தினார்.

    தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து 18.3 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 199 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. ஜோஸ் பட்லர் 36 பந்தில் 47 ரன்கள் எடுத்தார். ஹாரி புரூக் 34 ரன்னும், பென் டெக்கெட், டாம் பாண்டன் தலா 30 ரன்கள் எடுத்தனர். இதனால் 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இங்கிலாந்து டி20 தொடரை 2-0 என கைப்பற்றியது. லூக் வுட் ஆட்ட நாயகன் விருது வென்றார்.

    • இங்கிலாந்தின் முதல் பெண் எம்.பி.யாக இருந்தவர் நான்சி ஆஸ்டர்.
    • இவர் அணிந்திருந்த வைரக் கிரீடம் சுமார் ரூ.10 கோடிக்கு ஏலம் விடப்பட்டது.

    லண்டன்:

    இங்கிலாந்தின் முதல் பெண் எம்.பி. நான்சி ஆஸ்டர். அமெரிக்க வம்சாவளியான இவர் 1919-ல் இங்கிலாந்தின் பிளைமவுத் தொகுதியில் இருந்து எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார்.

    அங்கு மது அருந்தும் வயதை 14-ல் இருந்து 18 ஆக உயர்த்துதல், பெண்களின் வாக்குரிமை வயதை 30-ல் இருந்து 21 ஆக குறைப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கையில் இவரது பங்கு அளப்பரியது.

    எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்ட பிறகு அவரது கணவர் லார்ட் வால்டோர்ப் ஆஸ்டர் நான்சிக்கு ஒரு கிரீடத்தைப் பரிசாக வழங்கினார். வைரத்தால் செய்யப்பட்ட அந்தக் கிரீடம் காண்போரின் கண்ணை கவரும் வகையில் இன்றும் அழகுடன் மிளிர்கிறது.

    இதனை 1931-ம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற திரைப்பட விழாவில் முதன்முறையாக அணிந்திருந்தார். அப்போது பலரது கவனத்தையும் இந்த கிரீடம் ஈர்த்தது.

    இந்நிலையில், அவர் அணிந்திருந்த வைர கிரீடத்தை ஏலத்துக்கு விட முடிவு செய்யப்பட்டது. அதன்படி லண்டன் அருங்காட்சியகம் சார்பில் பல்வேறு பொருட்கள் ஏலத்துக்கு விடப்பட்டன.

    இதில் நான்சி ஆஸ்டர் அணிந்திருந்த வைர கிரீடம் சுமார் ரூ.10 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டது. இது எதிர்பார்த்ததை விட 3 மடங்கு அதிகம் ஆகும்.

    • முதலில் ஆடிய இங்கிலாந்து 20 ஓவரில் 188 ரன்கள் குவித்தது.
    • ஜோஸ் பட்லர் அதிரடியாக ஆடி 59 பந்தில் 96 ரன்கள் குவித்தார்.

    லண்டன்:

    வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி, 3 டி20 போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் இங்கிலாந்து 3-0 என முழுமையாகக் கைப்பற்றியது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து நிர்ணயிக்கபட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 188 ரன்கள் குவித்தது. ஜோஸ் பட்லர் அதிரடியாக ஆடி 59 பந்தில் 96 ரன்கள் குவித்தார். ஜேமி ஸ்மித் 38 ரன் எடுத்தார்.

    தொடர்ந்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 167 ரன்கள் மட்டுமே எடுத்தது. முன்னணி வீரர்கள் யாரும் நிலைத்து நிற்கவில்லை. இதனால் 21 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இங்கிலாந்து டி20 தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

    இங்கிலாந்து சார்பில் டாசன் 4 விக்கெட்டும், மேத்யூ பாட்ஸ், ஜேக்கப் பெத்தேல் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    • டாஸ் வென்ற இங்கிலாந்து லயன்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • கே.எல்.ராகுல் பொறுப்புடன் ஆடி சதம் விளாசி 116 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

    நார்த்தம்ப்டன்:

    இந்தியா ஏ மற்றும் இங்கிலாந்து லயன்ஸ் அணிகள் மோதும் 2-வது பயிற்சி ஆட்டம் நார்த்தம்ப்டனில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து லயன்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, இந்திய ஏ அணி முதலில் களமிறங்கியது. ஜெய்ஸ்வால் 17 ரன்னும், கேப்டன் அபிமன்யு ஈஸ்வரன் 11 ரன்னும் எடுத்தனர். கே.எல்.ராகுல் பொறுப்புடன் ஆடி சதம் விளாசி 116 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதில் 15 பவுண்டரியும், ஒரு சிக்சரும் அடங்கும்.

    கருண் நாயர் 40 ரன்னில் அவுட்டானார். நடுவரிசையில் சிறப்பாக ஆடி அதிரடி காட்டிய துருவ் ஜூரல் 52 ரன்னில் வெளியேறினார்.

    இறுதியில், முதல் நாள் முடிவில் இந்தியா ஏ அணி முதல் இன்னிங்சில் 81 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 319 ரன்கள் எடுத்துள்ளது.

    • உச்சநீதிமன்றத்தின் 52-ஆவது தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் பொறுப்பேற்றார்.
    • அரசியலமைப்பு சட்டத்தின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தி பி.ஆர். கவாய் பேசி வருகிறார்.

    கடந்த மாதம் உச்சநீதிமன்றத்தின் 52-ஆவது தலைமை நீதிபதியாக பூஷன் ராமகிருஷ்ண கவாய் பொறுப்பேற்றார்.

    உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றத்தில் இருந்து அரசியலமைப்பு சட்டத்தின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தி பேசி வருகிறார்.

    இந்நிலையில், நான் ஓய்வுக்குப்பின் ஒருபோதும் அரசுப்பதவிகளை ஏற்க மாட்டேன் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தெரிவித்துள்ளார்.

    இங்கிலாந்து உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற வட்டமேசை விவாதத்தில் பேசிய பி.ஆர்.கவாய், "நீதிபதிகள் ஓய்வு பெற்றவுடன் அரசுப் பதவிகளை ஏற்றுக்கொள்வது, தேர்தலில் போட்டியிடுவது போன்ற செயல்கள் நீதித்துறையின் மீதான மக்களின் நம்பிக்கையை குறைக்கிறது. நான் ஓய்வுக்குப்பின் ஒருபோதும் அரசுப்பதவிகளை ஏற்க மாட்டேன் என உறுதி எடுத்துள்ளேன்" என்று தெரிவித்தார்.

    ×