என் மலர்tooltip icon

    பிரிட்டன்

    • விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.
    • முதல் சுற்றில் கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் காயத்தால் விலகினார்.

    லண்டன்:

    கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. இதில் உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் களமிறங்குகின்றனர்.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், பிரான்சின் வேலன்டின் ரோயர் உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய ரோயர் முதல் செட்டை 6-3 என வென்றார். இரண்டாவது செட்டிலும் 6-2 என ரோயர் முன்னிலை பெற்றிருந்தார்.

    அப்போது காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகுவதாக சிட்சிபாஸ் விலகினார். இதன்மூலம் தரவரிசையில் 24-வது இடத்தில் உள்ள சிட்சிபாஸ் தொடரில் இருந்து வெளியேறினார்.

    • விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.
    • முதல் சுற்றில் ஸ்பெயின் வீராங்கனை படோசா தோல்வி அடைந்தார்.

    லண்டன்:

    கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. இதில் உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் களமிறங்குகின்றனர்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் ஸ்பெயின் வீராங்கனை பவுலா படோசா, பிரிட்டனின் கேடி பவுல்டர் உடன் மோதினார்.

    இதில் முதல் செட்டை 6-2 என பிரிட்டன் வீராங்கனை வென்றார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் பவுலா படோசா 2வது செட்டை 6-3 என கைப்பற்றினார்.

    வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை பவுல்டர் 6-4 என வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் தரவரிசையில் 9வது இடத்தில் உள்ள பவுலா படோசா தொடரில் இருந்து வெளியேறினார்.

    • விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் இன்று தொடங்குகிறது.
    • விம்பிள்டனில் அலகாரஸ் தொடர்ச்சியாக 2 முறை (2023, 2024) கோப்பை வென்றுள்ளார்.

    லண்டன்:

    கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் இன்று தொடங்குகிறது.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் உலகின் நம்பர் 1 வீரரான இத்தாலியின் ஜானிக் சின்னர், நடப்பு சாம்பியனான ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், 7 முறை கோப்பை வென்ற செர்பியாவின் நோவக் ஜோகோவிச், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் களமிறங்க உள்ளனர்.

    இந்நிலையில், விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் தொடர்ச்சியாக 2 முறை (2023, 2024) கோப்பை வென்ற அல்காரஸ், சமீபத்தில் பிரெஞ்சு ஓபனில் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார். இம்முறை அசத்தினால் விம்பிள்டனில் ஹாட்ரிக் பட்டத்தைக் கைப்பற்றலாம்.

    அதேபோல், இந்த ஆண்டு ஆஸ்திரேலிய ஓபனில் கோப்பை வென்ற சின்னர், பிரெஞ்சு ஓபனில் இறுதிப்போட்டி வரை சென்றிருந்தார்.

    சூப்பர் பார்மில் உள்ள இவர், இம்முறை சிறப்பாக செயல்படும் பட்சத்தில் விம்பிள்டனில் தனது முதல் பட்டத்தை வெல்லலாம் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

    • இரு அணிகள் மோதும் முதல் டி 20 போட்டி நேற்று நடந்தது.
    • டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    நாட்டிங்காம்:

    இந்திய மகளிர் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது.

    இரு அணிகள் மோதும் முதல் டி 20 போட்டி நேற்று நடந்தது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 210 ரன்கள் குவித்தது. கேப்டன் ஸ்மிருதி மந்தனா அதிரடியாக ஆடி சதம் கடந்தார். அவர் 62 பந்தில் 3 சிக்சர், 15 பவுண்டரி உள்பட 112 ரன்கள் குவித்தார். ஹர்லீன் தியோல் 43 ரன்னும், ஷபாலி வர்மா 20 ரன்னும் எடுத்தனர்.

    இங்கிலாந்து சார்பில் லாரன் பெல் 3 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. இந்திய அணியின் அற்புதமான பந்துவீச்சில் சிக்கி விரைவில் விக்கெட்களை இழந்தது இங்கிலாந்து.

    அந்த அணியின் கேப்டன் நாட் சீவர் பிரண்ட்42 பந்தில் 66 ரன்கள் குவித்தார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.

    இறுதியில், இங்கிலாந்து 14.5 ஓவரில் 113 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 97 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்று டி20 தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. ஆட்ட நாயகி விருது ஸ்மிருதி மந்தனாவுக்கு அளிக்கப்பட்டது.

    இந்தியா சார்பில் ஸ்ரீ சரணி 4 விக்கெட்டும், தீப்தி ஷர்மா, ராதா யாதவ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    • விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.
    • தகுதிச்சுற்றில் இந்திய வீரர் சுமித் நாகல் தோல்வி அடைந்தார்.

    லண்டன்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் மிக உயரியதான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் வரும் 30-ம் தேதி தொடங்கி, ஜூலை 13-ம் தேதி வரை லண்டனில் நடக்கிறது. இந்தப் போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.620 கோடியாகும். இது சென்ற ஆண்டை விட 7 சதவீதம் அதிகம். ஒற்றையர் பிரிவில் பட்டம் வெல்லும் வீரர், வீராங்கனைகள் தலா ரூ.34 கோடியை பரிசுத்தொகையாக பெறுவார்கள்.

    இந்நிலையில், விம்பிள்டன் தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன.

    இதில் இந்தியாவின் சுமித் நாகல், இத்தாலியின் ஜிபேரி உடன் மோதினார்.

    இதில் முதல் செட்டை ஜிபேரி 6-2 என கைப்பற்றினார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சுமித் நாகல் 2வது செட்டை 6-4 என வென்றார்.

    வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை இத்தாலி வீரர் 6-2 என வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    • இந்திய அணி முதல் இன்னிங்சில் 471 ரன்கள் குவித்தது.
    • இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 465 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    லண்டன்:

    இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 'ஆண்டர்சன்-தெண்டுல்கர்' கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

    இந்தியா-இங்கிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லீட்சில் நடந்து வருகிறது. முதலில் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 471 ரன்கள் குவித்தது. கேப்டன் சுப்மன் கில் 147 ரன்னும், ரிஷப் பண்ட் 134 ரன்னும், ஜெய்ஸ்வால் 101 ரன்னும் அடித்தனர்.

    அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 465 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இந்திய அணி சார்பில் பும்ரா 5 விக்கெட்டும், பிரசித் கிருஷ்ணா 3 விக்கெட்டும், சிராஜ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இந்நிலையில், டெஸ்ட் அரங்கில் 14-வது முறையாக 5 விக்கெட் (46 போட்டி) வீழ்த்தினார் ஜஸ்பிரீத் பும்ரா.

    அந்நிய மண்ணில் அதிக முறை 5 விக்கெட் வீழ்த்திய இந்திய பவுலர்களில் முதலிடத்தை பகிர்ந்து கொண்டார்.

    ஏற்கனவே கபில் தேவ் 66 போட்டிகளில் 12 முறை 5 விக்கெட் வீழ்த்தியுள்ளார். பும்ரா 34 போட்டிகளில் 12 முறை 5 விக்கெட் வீழ்த்தினார்.

    • இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 465 ரன்கள் எடுத்தது.
    • இந்தியாவின் பும்ரா 5 விக்கெட் வீழ்த்தினார்.

    லீட்ஸ்:

    இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 'ஆண்டர்சன்-தெண்டுல்கர்' கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

    இந்தியா-இங்கிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லீட்சில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, இந்திய அணி முதல் இன்னிங்சில் 113 ஓவரில் 471 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. கேப்டன் சுப்மன் கில் 147 ரன்னும், ரிஷப் பண்ட் 134 ரன்னும், ஜெய்ஸ்வால் 101 ரன்னும் அடித்தனர்.

    இங்கிலாந்து சார்பில் பென் ஸ்டோக்ஸ், ஜோஷ் டங் ஆகியோர் தலா 4 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் களமிறங்கியது. ஜாக் கிராலே 4 ரன்னில் வெளியேறினார். அடுத்து, பென் டக்கெட்டுடன் ஒல்லி போப் ஜோடி சேர்ந்தார். இருவரும் அரை சதம் கடந்தனர். பென் டக்கெட் 62 ரன்னில் வெளியேறினார்.

    ஜோ ரூட் 28 ரன்னில் ஆட்டமிழந்தார். சிறப்பாக ஆடிய ஒல்லி போப் சதத்தை பதிவுசெய்து அசத்தினார். இரண்டாம் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 49 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 209 ரன்கள் எடுத்திருந்தது. ஒல்லி போப் 100 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இறுதியில், இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 465 ரன்கள் எடுத்தனர்.

    இந்திய அணி சார்பில் பும்ரா 5 விக்கெட்டும், பிரசித் கிருஷணா3 விக்கெட்டும், சிராஜ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கியது. ஜெய்ஸ்வால் 4 ரன்னில் அவுட்டாகினர். சாய் சுதர்சன் 30 ரன்னில் வெளியேறினார்.

    மூன்றாம் நாள் முடிவில் இந்தியா 2 விக்கெட் இழப்புக்கு 90 ரன்கள் எடுத்துள்ளது. கே.எல்.ராகுல் 47 ரன்னுடன் அவுட்டாகாமல் உள்ளார்.

    • இந்தியா முதல் இன்னிங்சில் 471 ரன்கள் குவித்தது.
    • இரண்டாம் நாள் முடிவில் இங்கிலாந்து 3 விக்கெட்டுக்கு 209 ரன் எடுத்தது.

    லீட்ஸ்:

    இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 'ஆண்டர்சன்-தெண்டுல்கர்' கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

    இந்தியா-இங்கிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லீட்சில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, இந்திய அணி முதல் இன்னிங்சில் 113 ஓவரில் 471 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. கேப்டன் சுப்மன் கில் 147 ரன்னும், ரிஷப் பண்ட் 134 ரன்னும், ஜெய்ஸ்வால் 101 ரன்னும் அடித்தனர்.

    இங்கிலாந்து சார்பில் பென் ஸ்டோக்ஸ், ஜோஷ் டங் ஆகியோர் தலா 4 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் களமிறங்கியது. ஜாக் கிராலே 4 ரன்னில் வெளியேறினார். அடுத்து, பென் டக்கெட்டுடன் ஒல்லி போப் ஜோடி சேர்ந்தார். இருவரும் அரை சதம் கடந்தனர். பென் டக்கெட் 62 ரன்னில் வெளியேறினார்.

    ஜோ ரூட் 28 ரன்னில் ஆட்டமிழந்தார். சிறப்பாக ஆடிய ஒல்லி போப் சதத்தை பதிவுசெய்து அசத்தினார்.

    இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 49 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 209 ரன்கள் எடுத்தது. ஒல்லி போப் 100 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். தற்போது இங்கிலாந்து அணி, இந்திய அணியை விட 262 ரன்கள் பின் தங்கி உள்ளது.

    இந்திய அணி சார்பில் பும்ரா 3 விக்கெட் வீழ்த்தினார்.

    • டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • முதல் நாள் முடிவில் இந்தியா 359 ரன்கள் குவித்தது.

    லீட்ஸ்:

    இங்கிலாந்து-இந்தியா இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி லீட்சில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, இந்திய அணி முதலில் களமிறங்கியது. தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால்- கே.எல்.ராகுல் களமிறங்கினர். முதல் விக்கெட்டுக்கு 91 ரன்கள் சேர்த்த நிலையில் கே.எல்.ராகுல் 42 ரன்னில் அவுட்டானார். அடுத்து அறிமுகப் போட்டியில் களமிறங்கிய சாய் சுதர்சன் டக் அவுட்டாகி வெளியேறினர்.

    3வது விக்கெட்டுக்கு ஜெய்ஸ்வாலுடன், சுப்மன் கில் இணைந்து பொறுப்புடன் ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெய்ஸ்வால் சதமடித்து அசத்தினார். இது அவரது 5-வது டெஸ்ட் சதம் ஆகும்.

    3வது விக்கெட்டுக்கு 129 ரன்கள் சேர்த்த நிலையில் ஜெய்ஸ்வால் 101 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து ரிஷப் பண்ட் இறங்கினார்.

    இந்த ஜோடி மேலும் விக்கெட் விழாமல் நிதானமாக ஆடியது. பொறுப்புடன் ஆடிய கேப்டன் சுப்மன் கில் அபாரமாக ஆடி சதமடித்தார். ரிஷப் பண்ட் அரை சதம் கடந்தார்.

    முதல் நாள் முடிவில், இந்திய அணி முதல் இன்னிங்சில் 3 விக்கெட் இழப்புக்கு 359 ரன்கள் குவித்துள்ளது. சுப்மன் கில் 127 ரன்னும், ரிஷப் பண்ட் 65 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    இங்கிலாந்து சார்பில் பென் ஸ்டோக்ஸ் 2 விக்கெட்டும், பிரைடன் கார்ஸ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    கேப்டனாக அறிமுகமான முதல் போட்டியில் சுப்மன் கில் சதமடித்து அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்திய அணி இங்கிலாந்தில் 5 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
    • இந்தியா, இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் இன்று தொடங்குகிறது.

    லண்டன்:

    இந்திய அணி இங்கிலாந்தில் 5 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இரு அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் இன்று தொடங்குகிறது.

    இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    ஒரு கேப்டனாக ஐ.பி.எல். கோப்பையை வெல்வது, இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரை கைப்பற்றுவது - இவற்றில் எது பெரிது என கேட்டால், டெஸ்ட் தொடர் என்றுதான் சொல்வேன்.

    ஏனெனில் ஒரு கேப்டனாக அடிக்கடி இங்கிலாந்துக்கு சென்று விளையாட வாய்ப்பு கிடைக்காது. அத்துடன், உங்களது தலைமுறை சிறந்த வீரர்கள் 2-3 சுற்றுப்பயணத்தில் மட்டுமே உங்களுடன் இருப்பார்கள். ஆனால் ஐ.பி.எல். கிரிக்கெட் அப்படி இல்லை. ஆண்டுதோறும் நடக்கிறது. அதில் ஒவ்வொரு சீசனிலும் கோப்பையை வெல்ல வாய்ப்பு கிடைக்கும். எனவே இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா மண்ணில் டெஸ்ட் தொடரை வசப்படுத்துவது, ஐ.பி.எல். கோப்பையை வெல்வதை விட பெரியது, கவுரவமிக்கது என்பதே எனது கருத்து.

    தற்போதைய இந்திய அணி போதிய அனுபவம் இல்லாதது என பேசுகிறார்கள். அதன் காரணமாக, எங்கள் மீது அதிக எதிர்பார்ப்பு இல்லை. அதுவே எங்களுக்கு சாதகமான ஒரு அம்சம்தான். எங்களது மூத்த வீரர்கள் கடந்த 10 ஆண்டுகளில் உலகில் எங்கு சென்று விளையாடினாலும் வெற்றி பெற முடியும் என்பதைக் காட்டியிருக்கிறார்கள். அதையே நாங்களும் பின்பற்றுவோம்.

    எனது கேப்டன்ஷிப் ஸ்டைல் எந்த மாதிரி இருக்கும் என்று கேட்கிறீர்கள். எனது கேப்டன்ஷிப் அணுகுமுறையை முழுமையாகப் பார்க்க ஆகஸ்டு வரை (கடைசி டெஸ்ட் நடக்கும் வரை) காத்திருங்கள் என தெரிவித்தார்.

    • இந்தியர்களுக்கு சொந்தமான 1194 நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
    • ஒருங்கிணைந்த மொத்த வருமானம் 72.17 பில்லியன் பவுண்ட் ஆக அதிகரிப்பு.

    பிரிட்டனில் இந்தியர்களுக்கு சொந்தமான நிறுவனங்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட 23 சதவீதம் அதிகரித்துள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்திய தொழில்துறை கூட்டமைப்புடன் இணைந்து பிராணட் தோர்ன்டன் என்ற உலகளாவிய நிதி ஆலோசனை நிறுவனம் மேற்கொண்ட இந்தியா மீட்ஸ் பிரிட்டைன் டிராக்கர் (India Meets Britain Tracker) வருடாந்திர ஆய்வறிக்கை மூலம் இந்த தகவல் தெரியவந்துள்ளது.

    இந்தியர்களுக்கு சொந்தமான நிறுவனங்கள் இந்த ஆண்டு 23 சதவீதம் உயர்ந்து 1,194 ஆக உள்ளது. ஒருங்கிணைந்த வருமானம் முந்தைய ஆண்டு 68.09 பில்லியன் பவுண்ட் ஆக இருந்த நிலையில், 2024-ல் 72.14 பில்லியன் பவுண்ட் ஆக அதிகரித்துள்ளது.

    இங்கிலாந்து முழுவதும் 1,26,720 பேர் பணிபுரிந்து வரும் நிலையில், கடந்த ஆண்டு 8 ஆயிரம் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளன.

    விப்ரோ ஐ.டி. சர்வீசஸ் நிறுவனம் 448 சதவீத வருவாய் வளர்ச்சியை பெற்றுள்ளது. ஜோஹோ கார்பரேசன் லிமிடெட்டின் வளர்ச்சி 197 சதவீதம் அதிகரித்துள்ளது.

    • இந்திய அணியின் விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் திடீரென ஓய்வு முடிவை அறிவித்தார்.
    • இந்தியா, இங்கிலாந்து அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 20-ம் தேதி தொடங்குகிறது.

    லண்டன்:

    இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி. இவர் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென ஓய்வு முடிவை அறிவித்தார். ஆனாலும், ஒருநாள் போட்டியில் தொடர்ந்து விளையாட இருக்கிறார்.

    ஓய்வுபெற்ற போதிலும் இங்கிலாந்து தொடரில் இந்திய அணியின் நடவடிக்கைகளை விராட் கோலி கண்காணிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், லீட்சில் தொடக்க ஆட்டத்திற்கு சில நாட்களுக்கு முன் புதிய டெஸ்ட் கேப்டன் சுப்மன் கில், துணை கேப்டன் ரிஷப் பண்ட், சிராஜ் மற்றும் சிலரை லண்டனில் உள்ள தனது வீட்டிற்கு விராட் கோலி அழைத்துள்ளார்.

    கென்ட்டில் நடந்த அணிகளுக்கு இடையேயான போட்டி முடிந்ததைத் தொடர்ந்து திங்கட்கிழமை இந்தியாவுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. எனவே வீரர்கள் கோஹ்லியுடனான சந்திப்பிற்கு தயாராக இருந்தனர். இந்தச் சந்திப்பில் வரவிருக்கும் தொடர் பற்றிய பேச்சுவார்த்தைகள் முதல் கில் மற்றும் பண்ட் இளம் அணியை எவ்வாறு அணிதிரட்ட முடியும் என்பது வரை விவாதம் நடைபெற்றது என்றும், இந்த விவாதம் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது எனவும் தெரிகிறது.

    இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 20-ம் தேதி லீட்சில் தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    ×