என் மலர்tooltip icon

    பிரிட்டன்

    • இரு அணிகள் மோதும் இரண்டாவது டி 20 போட்டி நேற்று நடந்தது.
    • டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    பிரிஸ்டோல்:

    இந்திய மகளிர் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. முதல் டி20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.

    இந்நிலையில், இரு அணிகள் மோதும் இரண்டாவது டி20 போட்டி நேற்று நடந்தது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 184 ரன்கள் குவித்தது.

    ஜெமிமா ரோட்ரிக்ஸ் அரை சதம் கடந்து 63 ரன்னில் அவுட்டானார்.

    அமன்ஜோத் கவுர் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்து 63 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். ரிச்சா கோஷ் 32 ரன்னுடன் ஆட்டம் இழக்காமல் உள்ளார்.

    இங்கிலாந்து சார்பில் லாரன் பெல் 2 விக்கெட்டும், லாரன் பைலர் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. இந்திய அணியின் அற்புதமான பந்துவீச்சில் சிக்கி முன்னணி வீராங்கனைகள் விரைவில் வெளியேறினர்.

    அந்த அணியின் டாமி பியூமாண்ட் 35 பந்தில் 54 ரன்கள் குவித்தார். சோபி எக்ளஸ்டோன் 35 ரன்னும், எமி ஜோன்ஸ் 32 ரன்னும் எடுத்தனர்.

    இறுதியில், இங்கிலாந்து 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 157 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 24 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்று டி20 தொடரில் 2-0 என முன்னிலை வகிக்கிறது. ஆட்ட நாயகி விருது அமன்ஜோத் கவுருக்கு அளிக்கப்பட்டது.

    இந்தியா சார்பில் ஸ்ரீ சரணி 2 விக்கெட்டும், தீப்தி ஷர்மா, அமன்ஜோத் கவுர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.
    • முதல் சுற்றில் செர்பியாவின் ஜோகோவிச் வெற்றி பெற்றார்.

    லண்டன்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது.

    24 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற சாதனையாளரும், உலகின் 6-ம் நிலை வீரருமான செர்பியாவின் ஜோகோவிச் முதல் சுற்றில் பிரான்சை சேர்ந்த அலெக்சாண்டர் முல்லரை எதிர்கொண்டார்.

    இதில் ஜோகோவிச் 6-1, 6-7 (7-9), 6-2, 6-2 என்ற செட் கணக்கில் வென்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார். இந்த வெற்றியைப் பெற அவருக்கு 3 மணி 19 நிமிடங்கள் தேவைப்பட்டது.

    • விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.
    • முதல் சுற்றில் போலந்து வீராங்கனை ஸ்வியாடெக் வெற்றி பெற்றார்.

    லண்டன்:

    கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. இதில் உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் களமிறங்குகின்றனர்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் போலந்தின் இகா ஸ்வியாடெக், ரஷியாவின் குடெர்மெடோவா உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய ஸ்வியாக்டெக் 7-5, 6-1 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் கிரீஸ் வீராங்கனை மரியா சக்காரி 6-4, 6-4 என்ற செட் கணக்கில் ரஷியாவின் அன்னா பிளின்கோவாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    • விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.
    • முதல் சுற்றில் நம்பர் 1 வீரர் சின்னர் வெற்றி பெற்றார்.

    லண்டன்:

    கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. இதில் உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் களமிறங்குகின்றனர்.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இத்தாலியின் ஜானிக் சின்னர், சக நாட்டு வீரர் லூகா நார்டி உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய சின்னர் 6-4, 6-3, 6-0 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    நாளை நடைபெறும் 2வது சுற்றில் சின்னர், ஆஸ்திரேலியாவின் அலெக்சாண்டர் வுகிக் உடன் மோதுகிறார்.

    • விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.
    • முதல் சுற்றில் கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் காயத்தால் விலகினார்.

    லண்டன்:

    கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. இதில் உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் களமிறங்குகின்றனர்.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், பிரான்சின் வேலன்டின் ரோயர் உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய ரோயர் முதல் செட்டை 6-3 என வென்றார். இரண்டாவது செட்டிலும் 6-2 என ரோயர் முன்னிலை பெற்றிருந்தார்.

    அப்போது காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகுவதாக சிட்சிபாஸ் விலகினார். இதன்மூலம் தரவரிசையில் 24-வது இடத்தில் உள்ள சிட்சிபாஸ் தொடரில் இருந்து வெளியேறினார்.

    • விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.
    • முதல் சுற்றில் ஸ்பெயின் வீராங்கனை படோசா தோல்வி அடைந்தார்.

    லண்டன்:

    கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. இதில் உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் களமிறங்குகின்றனர்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் ஸ்பெயின் வீராங்கனை பவுலா படோசா, பிரிட்டனின் கேடி பவுல்டர் உடன் மோதினார்.

    இதில் முதல் செட்டை 6-2 என பிரிட்டன் வீராங்கனை வென்றார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் பவுலா படோசா 2வது செட்டை 6-3 என கைப்பற்றினார்.

    வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை பவுல்டர் 6-4 என வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் தரவரிசையில் 9வது இடத்தில் உள்ள பவுலா படோசா தொடரில் இருந்து வெளியேறினார்.

    • விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் இன்று தொடங்குகிறது.
    • விம்பிள்டனில் அலகாரஸ் தொடர்ச்சியாக 2 முறை (2023, 2024) கோப்பை வென்றுள்ளார்.

    லண்டன்:

    கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் இன்று தொடங்குகிறது.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் உலகின் நம்பர் 1 வீரரான இத்தாலியின் ஜானிக் சின்னர், நடப்பு சாம்பியனான ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், 7 முறை கோப்பை வென்ற செர்பியாவின் நோவக் ஜோகோவிச், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் களமிறங்க உள்ளனர்.

    இந்நிலையில், விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் தொடர்ச்சியாக 2 முறை (2023, 2024) கோப்பை வென்ற அல்காரஸ், சமீபத்தில் பிரெஞ்சு ஓபனில் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார். இம்முறை அசத்தினால் விம்பிள்டனில் ஹாட்ரிக் பட்டத்தைக் கைப்பற்றலாம்.

    அதேபோல், இந்த ஆண்டு ஆஸ்திரேலிய ஓபனில் கோப்பை வென்ற சின்னர், பிரெஞ்சு ஓபனில் இறுதிப்போட்டி வரை சென்றிருந்தார்.

    சூப்பர் பார்மில் உள்ள இவர், இம்முறை சிறப்பாக செயல்படும் பட்சத்தில் விம்பிள்டனில் தனது முதல் பட்டத்தை வெல்லலாம் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

    • இரு அணிகள் மோதும் முதல் டி 20 போட்டி நேற்று நடந்தது.
    • டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    நாட்டிங்காம்:

    இந்திய மகளிர் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது.

    இரு அணிகள் மோதும் முதல் டி 20 போட்டி நேற்று நடந்தது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 210 ரன்கள் குவித்தது. கேப்டன் ஸ்மிருதி மந்தனா அதிரடியாக ஆடி சதம் கடந்தார். அவர் 62 பந்தில் 3 சிக்சர், 15 பவுண்டரி உள்பட 112 ரன்கள் குவித்தார். ஹர்லீன் தியோல் 43 ரன்னும், ஷபாலி வர்மா 20 ரன்னும் எடுத்தனர்.

    இங்கிலாந்து சார்பில் லாரன் பெல் 3 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. இந்திய அணியின் அற்புதமான பந்துவீச்சில் சிக்கி விரைவில் விக்கெட்களை இழந்தது இங்கிலாந்து.

    அந்த அணியின் கேப்டன் நாட் சீவர் பிரண்ட்42 பந்தில் 66 ரன்கள் குவித்தார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.

    இறுதியில், இங்கிலாந்து 14.5 ஓவரில் 113 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 97 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்று டி20 தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. ஆட்ட நாயகி விருது ஸ்மிருதி மந்தனாவுக்கு அளிக்கப்பட்டது.

    இந்தியா சார்பில் ஸ்ரீ சரணி 4 விக்கெட்டும், தீப்தி ஷர்மா, ராதா யாதவ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    • விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.
    • தகுதிச்சுற்றில் இந்திய வீரர் சுமித் நாகல் தோல்வி அடைந்தார்.

    லண்டன்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் மிக உயரியதான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் வரும் 30-ம் தேதி தொடங்கி, ஜூலை 13-ம் தேதி வரை லண்டனில் நடக்கிறது. இந்தப் போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.620 கோடியாகும். இது சென்ற ஆண்டை விட 7 சதவீதம் அதிகம். ஒற்றையர் பிரிவில் பட்டம் வெல்லும் வீரர், வீராங்கனைகள் தலா ரூ.34 கோடியை பரிசுத்தொகையாக பெறுவார்கள்.

    இந்நிலையில், விம்பிள்டன் தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன.

    இதில் இந்தியாவின் சுமித் நாகல், இத்தாலியின் ஜிபேரி உடன் மோதினார்.

    இதில் முதல் செட்டை ஜிபேரி 6-2 என கைப்பற்றினார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சுமித் நாகல் 2வது செட்டை 6-4 என வென்றார்.

    வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை இத்தாலி வீரர் 6-2 என வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    • இந்திய அணி முதல் இன்னிங்சில் 471 ரன்கள் குவித்தது.
    • இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 465 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    லண்டன்:

    இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 'ஆண்டர்சன்-தெண்டுல்கர்' கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

    இந்தியா-இங்கிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லீட்சில் நடந்து வருகிறது. முதலில் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 471 ரன்கள் குவித்தது. கேப்டன் சுப்மன் கில் 147 ரன்னும், ரிஷப் பண்ட் 134 ரன்னும், ஜெய்ஸ்வால் 101 ரன்னும் அடித்தனர்.

    அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 465 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இந்திய அணி சார்பில் பும்ரா 5 விக்கெட்டும், பிரசித் கிருஷ்ணா 3 விக்கெட்டும், சிராஜ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இந்நிலையில், டெஸ்ட் அரங்கில் 14-வது முறையாக 5 விக்கெட் (46 போட்டி) வீழ்த்தினார் ஜஸ்பிரீத் பும்ரா.

    அந்நிய மண்ணில் அதிக முறை 5 விக்கெட் வீழ்த்திய இந்திய பவுலர்களில் முதலிடத்தை பகிர்ந்து கொண்டார்.

    ஏற்கனவே கபில் தேவ் 66 போட்டிகளில் 12 முறை 5 விக்கெட் வீழ்த்தியுள்ளார். பும்ரா 34 போட்டிகளில் 12 முறை 5 விக்கெட் வீழ்த்தினார்.

    • இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 465 ரன்கள் எடுத்தது.
    • இந்தியாவின் பும்ரா 5 விக்கெட் வீழ்த்தினார்.

    லீட்ஸ்:

    இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 'ஆண்டர்சன்-தெண்டுல்கர்' கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

    இந்தியா-இங்கிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லீட்சில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, இந்திய அணி முதல் இன்னிங்சில் 113 ஓவரில் 471 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. கேப்டன் சுப்மன் கில் 147 ரன்னும், ரிஷப் பண்ட் 134 ரன்னும், ஜெய்ஸ்வால் 101 ரன்னும் அடித்தனர்.

    இங்கிலாந்து சார்பில் பென் ஸ்டோக்ஸ், ஜோஷ் டங் ஆகியோர் தலா 4 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் களமிறங்கியது. ஜாக் கிராலே 4 ரன்னில் வெளியேறினார். அடுத்து, பென் டக்கெட்டுடன் ஒல்லி போப் ஜோடி சேர்ந்தார். இருவரும் அரை சதம் கடந்தனர். பென் டக்கெட் 62 ரன்னில் வெளியேறினார்.

    ஜோ ரூட் 28 ரன்னில் ஆட்டமிழந்தார். சிறப்பாக ஆடிய ஒல்லி போப் சதத்தை பதிவுசெய்து அசத்தினார். இரண்டாம் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 49 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 209 ரன்கள் எடுத்திருந்தது. ஒல்லி போப் 100 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இறுதியில், இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 465 ரன்கள் எடுத்தனர்.

    இந்திய அணி சார்பில் பும்ரா 5 விக்கெட்டும், பிரசித் கிருஷணா3 விக்கெட்டும், சிராஜ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கியது. ஜெய்ஸ்வால் 4 ரன்னில் அவுட்டாகினர். சாய் சுதர்சன் 30 ரன்னில் வெளியேறினார்.

    மூன்றாம் நாள் முடிவில் இந்தியா 2 விக்கெட் இழப்புக்கு 90 ரன்கள் எடுத்துள்ளது. கே.எல்.ராகுல் 47 ரன்னுடன் அவுட்டாகாமல் உள்ளார்.

    • இந்தியா முதல் இன்னிங்சில் 471 ரன்கள் குவித்தது.
    • இரண்டாம் நாள் முடிவில் இங்கிலாந்து 3 விக்கெட்டுக்கு 209 ரன் எடுத்தது.

    லீட்ஸ்:

    இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 'ஆண்டர்சன்-தெண்டுல்கர்' கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

    இந்தியா-இங்கிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லீட்சில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, இந்திய அணி முதல் இன்னிங்சில் 113 ஓவரில் 471 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. கேப்டன் சுப்மன் கில் 147 ரன்னும், ரிஷப் பண்ட் 134 ரன்னும், ஜெய்ஸ்வால் 101 ரன்னும் அடித்தனர்.

    இங்கிலாந்து சார்பில் பென் ஸ்டோக்ஸ், ஜோஷ் டங் ஆகியோர் தலா 4 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் களமிறங்கியது. ஜாக் கிராலே 4 ரன்னில் வெளியேறினார். அடுத்து, பென் டக்கெட்டுடன் ஒல்லி போப் ஜோடி சேர்ந்தார். இருவரும் அரை சதம் கடந்தனர். பென் டக்கெட் 62 ரன்னில் வெளியேறினார்.

    ஜோ ரூட் 28 ரன்னில் ஆட்டமிழந்தார். சிறப்பாக ஆடிய ஒல்லி போப் சதத்தை பதிவுசெய்து அசத்தினார்.

    இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 49 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 209 ரன்கள் எடுத்தது. ஒல்லி போப் 100 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். தற்போது இங்கிலாந்து அணி, இந்திய அணியை விட 262 ரன்கள் பின் தங்கி உள்ளது.

    இந்திய அணி சார்பில் பும்ரா 3 விக்கெட் வீழ்த்தினார்.

    ×