என் மலர்tooltip icon

    டென்னிஸ்

    விம்பிள்டன் டென்னிஸ்: 3வது சுற்றுக்கு முன்னேறினார் ரிபாகினா
    X

    விம்பிள்டன் டென்னிஸ்: 3வது சுற்றுக்கு முன்னேறினார் ரிபாகினா

    • விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.
    • 2வது சுற்றில் ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா வெற்றி பெற்றார்.

    லண்டன்:

    கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. இதில் உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் விளையாடி வருகின்றனர்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது கஜகஸ்தானின் எலினா ரிபாகினா, கிரீசின் மரியா சக்காரி உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய ரிபாகினா 6-3, 6-1 என்ற செட் கணக்கில் வென்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் ஜப்பானின் நவோமி ஒசாகா 6-3, 6-2 என்ற செட் கணக்கில் செக் குடியரசைச் சேர்ந்த கடரினா சினியாகோவை வீழ்த்தி 3வது சுற்றுக்கு முன்னேறினார்.

    Next Story
    ×