என் மலர்
டென்னிஸ்

விம்பிள்டன் டென்னிஸ்: 3வது சுற்றுக்கு முன்னேறினர் சின்னர், டிமித்ரோவ்
- விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.
- 2வது சுற்றில் நம்பர் 1 வீரர் சின்னர் வெற்றி பெற்றார்.
லண்டன்:
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது.
உலகின் நம்பர் 1 வீரரும், இத்தாலியை சேர்ந்த ஜானிக் சின்னர், ஆஸ்திரேலியாவின் வுகிக் உடன் மோதினார்.
இதில் அதிரடியாக ஆடிய ஜானிக் சின்னர் 6-1, 6-1, 6-3 என்ற செட் கணக்கில் வென்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் பல்கேரியாவின் கிரிகோர் டிமித்ரோவ் 7-5, 4-6, 7-5, 7-5 என்ற செட் கணக்கில் பிரான்ஸ் வீரர் கொரன்டின் மவூட்டை வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
Next Story