என் மலர்
பாகிஸ்தான்
- இம்ரான்கான் சிறையில் வைத்து கொல்லப்பட்டு இருக்கலாம் என தகவல் பாகிஸ்தானில் பரவியது.
- இம்ரான்கான் சகோதரிகள் நோரீன் கான், அலீமா கான், உஸ்மா கான் ஆகியோர் சிறைக்கு வெளியே போராட்டம் நடத்தினர்.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு கடந்த 2023-ம் ஆண்டு முதல் ராவல்பிண்டி அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையே, கடந்த 3 வாரமாக இம்ரான்கானை சந்திக்க அவரது சகோதரிகள் மற்றும் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி நிர்வாகிகளுக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் இம்ரான்கான் சிறையில் வைத்து கொல்லப்பட்டு இருக்கலாம் என தகவல் பாகிஸ்தானில் பரவியது.
இம்ரான்கான் சகோதரிகள் நோரீன் கான், அலீமா கான், உஸ்மா கான் ஆகியோர் நேற்று அடியாலா சிறைக்கு வெளியே போராட்டம் நடத்தினார்கள் தகவலறிந்து ஏராளமான பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பிடிஐ) கட்சி ஆதரவாளர்கள் திரண்டனர். அவர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டினர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.
இந்நிலையில் இதுதொடர்பாக ராவல்பிண்டி அடியாலா சிறை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில்,"இம்ரான் கான் அடியாலா சிறையிலிருந்து மாற்றப்பட்டதாக வரும் செய்திகளில் எந்த உண்மையும் இல்லை. அவர் பூரண உடல்நலத்துடன் இருக்கிறார், அவருக்குத் தேவையான அனைத்து மருத்துவ வசதிகளும் வழங்கப்படுகின்றன" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பிடிஐ) இந்த வதந்திகள் குறித்து கவலை தெரிவித்துள்ளது. அரசாங்கம் உடனடியாக இந்த விஷயத்தை தெளிவுபடுத்த வேண்டும் என்றும், உடனடியாக இம்ரானுடன் அவரது குடும்ப உறுப்பினர்களின் சந்திப்பை ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் கோரியுள்ளது.
இதைத்தொடர்ந்து இம்ரான் கானை அவரது சகோதரிகள் சந்திக்க சிறை நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.
- இம்ரான்கான் ராவல்பிண்டி அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
- கடந்த 3 வாரமாக இம்ரான்கானை சந்திக்க அவரது சகோதரிகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு கடந்த 2023-ம் ஆண்டு முதல் ராவல்பிண்டி அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையே, கடந்த 3 வாரமாக இம்ரான்கானை சந்திக்க அவரது சகோதரிகள் மற்றும் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி நிர்வாகிகளுக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் இம்ரான்கான் சிறையில் வைத்து கொல்லப்பட்டு இருக்கலாம் என தகவல் பாகிஸ்தானில் பரவியது.
இந்நிலையில் இம்ரான்கான் சகோதரிகள் நோரீன் கான், அலீமா கான், உஸ்மா கான் ஆகியோர் நேற்று அடியாலா சிறைக்கு வெளியே போராட்டம் நடத்தினார்கள்.
தகவலறிந்து ஏராளமான பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி ஆதரவாளர்கள் திரண்டனர். அவர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டினர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.
- முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே 20 ஓவரில் 146 ரன்கள் எடுத்தது.
- அடுத்து ஆடிய இலங்கை 148 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.
ராவல்பிண்டி:
பாகிஸ்தான், இலங்கை மற்றும் ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிகள் இடையிலான முத்தரப்பு டி20 தொடர் பாகிஸ்தானில் நடந்து வருகிறது.
இதில் இன்று நடந்த 5-வது லீக் ஆட்டத்தில் ஜிம்பாப்வே, இலங்கை அணிகள் மோதின.
டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 146 ரன்கள் எடுத்தது.கேப்டன் சிக்கந்தர் ராசா 37 ரன்னில் அவுட்டானார். பிரியன் பென்னட் 34 ரன்னில் வெளியேறினார். ரியான் பர்ல் 26 பந்தில் 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இலங்கை சார்பில் மகேஷ் தீக்சனா, வஹிந்து ஹசரங்கா தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 147 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இலங்கை களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பதும் நிசங்க அதிரடியாக ஆடி அரை சதமடித்தார்.
அவருக்கு குசால் மெண்டிஸ் நன்கு ஒத்துழைப்பு அளித்தார்.
இறுதியில், இலங்கை அணி 16.2 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. பதும் நிசங்கா 98 ரன்னும், குசால் மெண்டிஸ் 25 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
இலங்கை அணி தான் ஆடிய 3 லீக் போட்டிகளில் ஒன்றில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது.
அடுத்து நடைபெறவுள்ள பாகிஸ்தானுடனான போட்டியில் இலங்கை அணி கண்டிப்பாக வெற்றிபெற வேண்டும். இல்லையேல் தனது ரன் ரேட்டை உயர்த்த வேண்டும் . இல்லையெனில் ரன்ரேட் அடிப்படையில் இறுதிப்போட்டிக்கு ஜிம்பாப்வே அணி நுழைந்துவிடும்.
- டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பேட்டிங் தேர்வு செய்தது.
- முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 146 ரன்கள் எடுத்தது.
ராவல்பிண்டி:
பாகிஸ்தான், இலங்கை மற்றும் ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிகள் இடையிலான முத்தரப்பு டி20 தொடர் பாகிஸ்தானில் நடந்து வருகிறது.
இதில் இன்று நடந்த 5-வது லீக் ஆட்டத்தில் ஜிம்பாப்வே, இலங்கை அணிகள் மோதின.
டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 146 ரன்கள் எடுத்தது.கேப்டன் சிக்கந்தர் ராசா 37 ரன்னில் அவுட்டானார். பிரியன் பென்னட் 34 ரன்னில் வெளியேறினார்.
ரியான் பர்ல் 26 பந்தில் 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இலங்கை சார்பில் மகேஷ் தீக்சனா, வஹிந்து ஹசரங்கா தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 147 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இலங்கை விளையாடி வருகிறது. இதில் ஜிம்பாப்வே அணி வெற்றி பெற்றால் இறுதிப்போட்டிக்கு முன்னேறிவிடும்.
மாறாக, இலங்கை அணி வெற்றி பெற்றால் நாளை பாகிஸ்தானுடனான போட்டியில் அதிக ரன் ரேட் வித்தியாசத்தில் வென்றால் மட்டுமே இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.
பாகிஸ்தான் அணி முத்தரப்பு தொடரின் இறுதிப்போட்டிக்கு ஏற்கனவே முன்னேறியுள்ளது.
- பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.
- இதையடுத்து அவர்கள் அப்பகுதியில் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இஸ்லாமாபாத்:
ஆப்கானிஸ்தான் எல்லையையொட்டிய கைபர் பக்துன்கவா மாகாணத்தின் பன்னு மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட தெஹ்ரிக் - இ - தலிபான் இயக்கத்தைச் சேர்ந்த பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாகிஸ்தான் பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து அவர்கள், தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது. இதில், 22 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இதுதொடர்பாக, ராணுவம் வெளியிட்ட அறிக்கையில், ஆப்கானிஸ்தான் எல்லையையொட்டிய பன்னு மாவட்டத்தின் வடக்கு வஜிரிஸ்தான் பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளும் இடையே நடந்த சண்டையில் 22 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என தெரிவித்துள்ளது.
- ஆக்கிரமிப்புவாத இந்துத்துவா அணுகுமுறையை வெளிப்படுத்துகின்றன.
- ஆத்திரமூட்டும் பேச்சுக்களை தவிர்க்குமாறு ராஜ்நாத் சிங் மற்றும் பிற இந்தியத் தலைவர்களை கேட்டுக்கொள்கிறோம்.
சிந்து மாகாணம் இந்தியாவுக்கு சொந்தமாகலாம் என்று இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் டெல்லியில் பேசியதற்கு பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், பாகிஸ்தானின் சிந்து மாகாணம் குறித்து இந்திய பாதுகாப்பு அமைச்சரின் மாயையான மற்றும் ஆபத்தான கருத்துக்களை பாகிஸ்தான் வன்மையாகக் கண்டிக்கிறது.
இத்தகைய அறிக்கைகள் யதார்த்தத்தை சவால் செய்ய முயலும் ஆக்கிரமிப்புவாத இந்துத்துவா அணுகுமுறையை வெளிப்படுத்துகின்றன. மேலும் அவை சர்வதேச சட்டம், அங்கீகரிக்கப்பட்ட எல்லைகள் மற்றும் நாடுகளின் இறையாண்மையை மீறுகிறது" என்று தெரிவித்துள்ளது.
மேலும், பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலாக இருக்கும் ஆத்திரமூட்டும் பேச்சுக்களை தவிர்க்குமாறு ராஜ்நாத் சிங் மற்றும் பிற இந்தியத் தலைவர்களை கேட்டுக்கொள்வதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தொடர்ந்து, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்கள் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீர் மக்களின் விருப்பங்களுக்கு இணங்க, ஜம்மு காஷ்மீர் பிரச்சினைக்கு உண்மையான தீர்வு காண நம்பகமான நடவடிக்கைகளை எடுக்க இந்தியாவை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.
நீதி, சமத்துவம் மற்றும் சர்வதேச சட்ட விதிமுறைகளின் அடிப்படையில் இந்தியாவுடனான அனைத்து மோதல்களுக்கும் அமைதியான தீர்வு காண பாகிஸ்தான் உறுதிபூண்டுள்ளது. அதே நேரத்தில், கடந்த காலங்களைப் போலவே, பாகிஸ்தான் தனது பாதுகாப்பு, தேசிய சுதந்திரம் மற்றும் இறையாண்மையைப் பாதுகாப்பதில் உறுதியாக உள்ளது" என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- அதில் ஒருவன் தனது உடலில் கட்டியிருந்த குண்டை வெடிச்சக் செய்தான்.
- மற்ற 2 பயங்கரவாதிகளும் உள்ளே நுழைந்து துப்பாக்கிச்சூடு நடத்த முயன்றனர்.
பாகிஸ்தானின் கைபர் பக்துவா மாகாணத்தில் உள்ள பெஷாவரில் உள்ள துணை ராணுவப் படையின் தலைமையகத்தில் நடந்த தற்கொலை தாக்குதலில் 3 வீரர்கள் கொல்லப்பட்டனர்.
சதார் பகுதியில் அமைந்துள்ள துணை ராணுவப் படை தலைமையகத்தில் நேற்று காலை 8 மணியளவில் இந்தத் தாக்குதல் நடந்தது.
நேற்று காலை ராணுவ வீரர்கள் வழக்கமான படை அணிவகுப்பு நடத்தியபோது 3 பயங்கரவாதிகள் துப்பாக்கி, வெடிகுண்டு உள்ளிட்ட ஆயுதங்களுடன் பிரதான வாயிலின் வழியாக உள்ளே நுழைய முயன்றனர். அதில் ஒருவன் தனது உடலில் கட்டியிருந்த குண்டை வெடிச்சக் செய்தான். இதில் 3 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இதைத்தொடர்ந்து மற்ற 2 பயங்கரவாதிகளும் உள்ளே நுழைந்து துப்பாக்கிச்சூடு நடத்த முயன்றனர். அவர்கள் மீது ராணுவ வீரர்கள் எதிர் தாக்குதல் நடத்தினர்.
இதில் 2 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர். காயமடைந்த ராணுவ வீரர்கள் மருத்துவமனையில் அனுமதிகப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு 'தெஹ்ரிக் இ தலிபான் பாகிஸ்தான்' அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
- முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 195 ரன்கள் குவித்தது.
- அடுத்து ஆடிய ஜிம்பாப்வே அணி 19 ஓவரில் 126 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
ராவல்பிண்டி:
பாகிஸ்தான், இலங்கை மற்றும் ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிகள் இடையிலான முத்தரப்பு டி20 தொடர் பாகிஸ்தானில் நடந்து வருகிறது.
இதில் நேற்று நடந்த 4-வது லீக் ஆட்டத்தில் ஜிம்பாப்வே, பாகிஸ்தான் அணிகள் மோதின.
டாஸ் வென்று முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 195 ரன்கள் குவித்தது. பாபர் அசாம் 74 ரன்னிலும், பர்ஹான் 63 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கடைசி கட்டத்தில் பகர் ஜமான் 10 பந்தில் 27 ரன்கள் எடுத்தார்.
ஜிம்பாப்வே சார்பில் சிக்கந்தர் ராசா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதையடுத்து, 196 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்கை நோக்கி ஜிம்பாப்வே களமிறங்கியது. பாகிஸ்தான் அணியினரின் துல்லியமான பந்து வீச்சில் விக்கெட்கள் வீழ்ந்தன. உஸ்மான் தரிக் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தினார்.
ஜிம்பாப்வே அணியின் ரியான் பர்ல் தனி ஆளாகப் போராடி அரை சதம் கடந்து 67 ரன்னில் அவுட்டானார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.
இறுதியில், ஜிம்பாப்வே அணி 19 ஓவரில் 126 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 69 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் முத்தரப்பு தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
பாகிஸ்தான் சார்பில் உஸ்மான் தரிக் 4 விக்கெட்டும், முகமது நவாஸ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
- முதலில் பேட் செய்த இலங்கை அணி 20 ஓவரில் 128 ரன்கள் அடித்தது.
- அடுத்து ஆடிய பாகிஸ்தான் 15.3 ஓவரில் 131 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
ராவல்பிண்டி:
பாகிஸ்தான், இலங்கை மற்றும் ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு டி20 தொடர் பாகிஸ்தானில் நடந்து வருகிறது.
இன்று நடைபெற்ற 3-வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான், இலங்கை அணிகள் மோதின. டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட் செய்த இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 128 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியின் ஜெனித் லியாங்கே 41 ரன்கள் எடுத்தார்.
பாகிஸ்தான் சார்பில் மொகமது நவாஸ் 3 விக்கெட் வீழ்த்தினார்.
இதனையடுத்து, 129 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. அந்த அணியின் ஷாஹிப்ஜாதா பர்ஹான் அதிரடியாக ஆடி 45 பந்தில் 80 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இறுதியில், பாகிஸ்தான் அணி 15.3 ஓவரில் 131 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
முத்தரப்பு தொடரில் இலங்கை தான் ஆடிய 2 போட்டிகளிலும் தோல்வி அடைந்தது.
- லாகூரில் இருந்து 130 கி.மீ தொலைவில் உள்ள பைசலாபாத் மாவட்டத்தில் இன்று காலை இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
- வெடிப்பின் தீவிரம் காரணமாக அருகிலுள்ள கட்டிடங்களும் சேதமடைந்தன.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள ஒரு பசை தொழிற்சாலையில் பாய்லர் வெடித்ததில் 15 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 7 பேர் காயமடைந்தனர்.
லாகூரில் இருந்து 130 கி.மீ தொலைவில் உள்ள பைசலாபாத் மாவட்டத்தில் இன்று காலை இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
மீட்புப் பணிகள் நடந்து வரும் நிலையில் இடிபாடுகளுக்குள் மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என்று அதிகாரிகள் நம்புகின்றனர்.
சம்பவம் நடந்த உடனேயே தொழிற்சாலை உரிமையாளர் தப்பி ஓடிவிட்டார். அதே நேரத்தில் மேலாளரை உள்ளூர் போலீசார் கைது செய்தனர்.
வெடிப்பின் தீவிரம் காரணமாக அருகிலுள்ள கட்டிடங்களும் சேதமடைந்துள்ளதாக பைசலாபாத் துணை ஆணையர் ராஜா ஜஹாங்கிர் அன்வர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
மீட்புக் குழுக்கள் இதுவரை இடிபாடுகளில் இருந்து 15 உடல்களை மீட்டுள்ளதாகவும், காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
- முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே அணி 20 ஓவரில் 162 ரன்கள் அடித்தது.
- அடுத்து ஆடிய இலங்கை அணி 20 ஓவரில் 95 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
ராவல்பிண்டி:
பாகிஸ்தான், இலங்கை மற்றும் ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு டி20 தொடர் பாகிஸ்தானில் நடந்து வருகிறது.
இன்று நடைபெற்ற 2-வது லீக் ஆட்டத்தில் இலங்கை, ஜிம்பாப்வே அணிகள் மோதின. டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 162 ரன்கள் அடித்தது. பென்னட் 49 ரன்னிலும், சிக்கந்தர் ராசா 47 ரன்னிலும் அவுட்டாகினர்.
இலங்கை சார்பில் வனிந்து ஹசரங்கா 3 விக்கெட்டும், ஈஷான் மலிங்கா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதனையடுத்து, 163 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. ஜிம்பாப்வே அணியினர் துல்லியமாக பந்து வீசி அசத்தினர். சீரான இடைவெளியில் விக்கெட்கள் வீழ்ந்தன.
இறுதியில், இலங்கை அணி 20 ஓவரில் 95 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
ஜிம்பாப்வே சார்பில் பிராட் ஈவன்ஸ் 3 விக்கெட்டும், ரிச்சர்ட் நகரவா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். ஆட்ட நாயகன் விருது சிக்கந்தர் ராசாவுக்கு அளிக்கப்பட்டது.
முத்தரப்பு தொடரில் ஜிம்பாப்வே தான் ஆடிய 2 போட்டிகளில் ஒரு வெற்றி, ஒரு தோல்வி அடைந்துள்ளது.
- சுப்ரீம் கோர்ட் சிவில் வழக்குகளை மட்டுமே விசாரிக்கும் வகையில் தரம் குறைக்கப்பட்டுள்ளது.
- இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் சிலர் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானில் 27-வது அரசியலமைப்பு திருத்த சட்டம் கூட்டாட்சி அரசியலமைப்பு நீதிமன்றம் உருவாக்க வழிவகை செய்கிறது. இதன்மூலம் வழக்குகளை தானாக முன்வந்து விசாரித்தல், நீதிபதிகள் இடமாற்றம் உள்ளிட்ட அனைத்து அதிகாரங்களும் கூட்டாட்சி அரசியலமைப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்படும். இதனால் சுப்ரீம் கோர்ட் சிவில் வழக்குகளை மட்டுமே விசாரிக்கும் வகையில் தரம் குறைக்கப்பட்டு உள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் மன்சூர் அலி ஷா, அத்தர் மினல்லா மற்றும் லாகூர் ஐகோர்ட் நீதிபதி ஷம்ஸ் மெஹ்மூத் மிர்சா ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.
இந்நிலையில், 27-வது அரசியலமைப்பு திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து லாகூரில் உள்ள வக்கீல்கள் கால வரையற்ற கோர்ட் புறக்கணிப்பை அறிவித்துள்ளனர். மேலும் மற்ற நீதிபதிகளும் எதிர்ப்பை காட்டும் விதமாக தங்களது பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.






