என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • ஸ்பெயினில் நடந்து வரும் கார் ரேசில் நடிகர் அஜித் பங்கேற்றார்.
    • கார் விபத்துக்கு உள்ளானதில் அஜித் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

    வாலென்சியா:

    நடிகர் அஜித்குமாரின் குட் பேட் அக்லி படம் வரும் ஏப்ரல் மாதம் 10-ம் தேதி வெளியாக உள்ளது. சினிமாவில் நடித்து வரும் அஜித்குமார் கடந்த சில தினங்களாக கார் ரேசில் பங்கேற்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்.

    சமீபத்தில் துபாயில் நடந்த கார் ரேசில் அஜித்குமாரின் அணி 3-வது இடத்தைப் பிடித்தது. இந்த ரேசில் அஜித்குமாரின் கார் விபத்தில் சிக்கியது. அதில் அதிர்ஷ்டவசமாக காயமின்றி அவர் தப்பினார்.

    இந்நிலையில், ஸ்பெயினின் வாலென்சியா நகரில் நடந்த கார் ரேசில் அஜித்குமார் பங்கேற்றார். கடந்த சில தினங்களாக பயிற்சியில் ஈடுபட்ட வந்த அவர், தற்போது ரேசில் பங்கேற்றார்.

    ரேசின் போது குறுக்கே வந்த ஒரு காரால் அஜித் ஓட்டிச்சென்ற கார் விபத்தில் சிக்கியது. இதில் அவரது கார் 3 முறை பல்டியடித்தது. ஆனாலும் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.

    அஜித்தின் கார் விபத்தில் சிக்கியது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    கார் ரேசில் விபத்தில் சிக்கிய அஜித்குமார் நலமுடன் உள்ளார் என தெரிவித்த அவரது தரப்பினர், இந்த ரேசில் அஜித்குமார் 14வது இடம் பிடித்தார் என தெரிவித்தனர்.

    • முதலில் ஆடிய உ.பி.வாரியர்ஸ் 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 177 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி 144 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.

    பெங்களூரு:

    மகளிர் பிரீமியர் லீக் தொடரில் இன்று நடைபெற்ற 8-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ், உ.பி.வாரியர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த உ.பி.வாரியர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 177 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் சினேலி ஹென்றி அதிரடியாக ஆடி 23 பந்தில் 8 சிக்சர், 2 பவுண்டரி உள்பட 62 ரன்கள் குவித்து அவுட்டானார்.

    டெல்லி சார்பில் ஜெஸ் ஜோனாசென் 4 விக்கெட்டும், மரிஜான் காப், அருந்ததி ரெட்டி தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி டெல்லி கேப்பிடல்ஸ் களமிறங்கியது. அந்த அணியின் ஜெமிமா ரோட்ரிக்ஸ் போராடி அரை சதம் கடந்தார்.

    கடைசி கட்டத்தில் சிறப்பாக பந்து வீசிய கிரேஸ் ஹாரிஸ் ஹாட்ரிக் விக்கெட் எடுத்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.

    இறுதியில், டெல்லி அணி 19.3 ஓவரில் 144 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது. இதன்மூலம் நடப்பு தொடரில் உபி வாரியர்ஸ் அணி முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

    உ.பி.வாரியர்ஸ் அணி சார்பில் கிரேஸ் ஹாரிஸ், கிராந்தி கவுட் தலா 4 விக்கெட் வீழ்த்தினர்.

    • கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடந்தது.
    • ஆண்கள் இரட்டையரில் பிரிட்டன் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.

    தோஹா:

    கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் கத்தாரின் தோஹாவில் உள்ள கலீஃபாவில் நடைபெற்றது.

    இதில் இன்று நடந்த ஆண்கள் இரட்டையர் பிரிவு இறுதிச்சுற்றில் பிரிட்டனின் லாயிட் கிளாஸ்பூல்-ஜூலியன் கேஷ் ஜோடி, சக நாட்டின் ஜோ சாலிஸ்பெரி-நீல் கப்ஸ்கி ஜோடியுடன் மோதியது.

    இதில் தொடக்கம் முதலே சிறப்பாக ஆடிய லாயிட்-ஜூலியன் ஜோடி 6-3, 6-2 என எளிதில் வென்று சாம்பியன் பட்டம் பெற்று அசத்தியது.

    • முதலில் ஆடிய இங்கிலாந்து 50 ஓவரில் 351 ரன்கள் குவித்தது.
    • அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா 356 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

    லாகூர்:

    சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 351 ரன்கள் குவித்தது. பொறுப்புடன் ஆடிய பென் டக்கெட்சதமடித்து அசத்தினார். அவர் 165 ரன்களில் அவுட் ஆனார். ஜோ ரூட் அரை சதம் கடந்து 68 ரன்னில் அவுட் ஆனார்.

    ஆஸ்திரேலியா சார்பில் பென் துவார்ஷியஸ் 3 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 352 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் மேத்யூ ஷார்ட் அரை சதம் கடந்து 63 ரன்னில் அவுட்டானார். அலெக்ஸ் கேரி 69 ரன்னில் வெளியேரினார். அரை சதம் அடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் லபுசேன்47 ரன்னில் வெளியேறினார்.

    ஜோஷ் இங்கிலிஸ் அதிரடியாக ஆடி சதம் கடந்து அசத்தினார். இறுதிவரை நின்று அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.

    இறுதியில், ஆஸ்திரேலியா அணி 47.3 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 356 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. ஜோஷ் இங்கிலிஸ் 120 ரன்னும், மேக்ஸ்வெல் 32 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    • ஜியோஸ்டார் பொழுதுபோக்கு பிரிவின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருப்பவர் கெவின் வாஸ்
    • தென்னிந்திய ஊடகத் துறையின் வளர்ச்சி பிராந்தியத்திலிருந்து உலகளவில் செல்வதை கண்டு பெருமை

     ஃபிக்கி மீடியா மற்றும் பொழுதுபோக்கு குழுவின் தலைவர் மற்றும் ஜியோஸ்டார் பொழுதுபோக்கு பிரிவின் தலைமை நிர்வாக அதிகாரி கெவின் வாஸ் அவர்கள், மீடியா மற்றும் பொழுதுபோக்கு தொழில்துறை கருத்தரங்கில் உரையாற்றிய போது, தென்னிந்திய ஊடகத்துறை பிராந்திய அளவில் இருந்து உலகளாவிய செல்வாக்கை பெற்ற வரலாற்றுப் பயணத்தை பற்றி பேசினார். இந்த கருத்தரங்கத்தின் "எல்லைகளை தாண்டி முன்னேறுதல்" என்ற தலைப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.

    தன் பயணத்தை நினைவுகூர்ந்த கெவின் வாஸ், "இந்த நிகழ்வு எனக்குப் பெரும் உற்சாகம் அளிக்கிறது. 2016ல் தென்னிந்தியாவில் ஸ்டார் டிவியின் வணிகப் பிரிவுகளை வழிநடத்தி என் பயணம் தொடங்கியது. இந்த சந்தைகளை நெருக்கமாக அனுபவித்தவராக, தென்னிந்திய ஊடகத் துறையின் வளர்ச்சி பிராந்தியத்திலிருந்து தேசியம் வரை, தற்போது உலகளாவிய கவனத்தைப் பெறுவதைக் கண்டு பெருமை அடைகிறேன்" என்றார்.

    தென்னிந்திய சினிமாவின் முன்னேற்றம்

    கொரோனா பிந்தைய காலகட்டத்தில், RRR, KGF-2, மற்றும் காந்தாரா போன்ற தென்னிந்திய படங்கள் இந்தியாவைத் தாண்டி உலகளவில் பெரும் வரவேற்பைப் பெற்றதை அவர் சிறப்பித்தார். மேலும், "பொன்னியின் செல்வன்" மற்றும் "விக்ரம்" போன்ற தமிழ் படங்கள் கதைகளின் தனித்துவத்தால் தேசிய மற்றும் உலக அளவில் செல்வாக்கைப் பெற்றதாகக் கூறினார்.

    2024ஆம் ஆண்டிலும், "புஷ்பா 2" ஹிந்தி டப்பிங் மூலம் மட்டுமே ஹிந்தி பாக்ஸ் ஆஃபீஸ் வசூலில் 20% அளவுக்கு பங்களித்ததையும், "மண்டேலா," "கடைசி விவசாயி," மற்றும் "சர்பட்ட பரம்பரை" போன்ற படங்கள் கதையின் ஆழத்தால் பாராட்டுப் பெற்றதையும் குறிப்பிட்டார்.

    "தொலைக்காட்சி தற்போதும் மீடியா மற்றும் பொழுதுபோக்கு சந்தையில் 30% மொத்த பகுதியைப் பெற்றுள்ளது. குறிப்பாக தென்னிந்தியாவில் உள்ளூர் மொழி உள்ளடக்கங்கள் மக்கள் மனதில் ஆழமாகப் பதிந்துள்ளன" என்றார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • ஈஷா அறக்கட்டளையின் மண்டல ஒருங்கிணைப்பாளர் சுவாமி பாரகா கலந்து கொண்டு பேசினார்.
    • ‘மிராக்கிள் ஆப் தி மைண்ட்’ எனும் இலவச செயலியை சத்குரு அறிமுகப்படுத்த உள்ளார்.

    கோவை ஈஷா யோக மையத்தில் மகா சிவராத்திரி பெருவிழா கொண்டாட்டங்கள் வரும் பிப்.26ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது.

    இவ்விழாவில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்க உள்ளனர்.

    இது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று கோவை பிரஸ் கிளப்பில் நடைபெற்றது. இதில் ஈஷா அறக்கட்டளையின் மண்டல ஒருங்கிணைப்பாளர் சுவாமி பாரகா கலந்து கொண்டு பேசினார். அவருடன் ஈஷா தன்னார்வலர் கணேஷ் ரவீந்தரன் மற்றும் சரவணன் ஆகியோர் உடனிருந்தனர்.

    அப்போது, சுவாமி பாரகா கூறியதாவது:-

    நம் பாரத ஆன்மீக மரபில் மாசி மாதத்தில் வரும் சிவராத்திரி நாள் மகாசிவராத்திரி திருநாளாக கொண்டாடப்படுகிறது. இந்நாளில் கோள்களின் அமைப்பு இயற்கையாகவே மனிதர்களின் உயிர் சக்தி மேல்நோக்கி எழுவதற்கு உதவும் வகையில் இருக்கின்றது.

    இந்த ஆன்மீக சாத்தியத்தை மனிதர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளும் நோக்கில், நம் கலாச்சாரத்தில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக மகாசிவராத்திரி நாளில் இரவு முழுவதும் விழிப்புணர்வுடன் இருக்கும் வகையில் கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகிறது.

    அந்த வகையில் ஈஷாவில் 31-ஆவது மகாசிவராத்திரி கொண்டாட்டங்கள் வரும் 26-ஆம் தேதி மிக பிரம்மாண்டமான அளவில் நடைபெற இருக்கிறது. இதில் சிறப்பு விருந்தினராக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே. சிவகுமார் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

    ஈஷாவில் மகாசிவராத்திரி விழா ஆதியோகி முன்பு 26-ஆம் தேதி மாலை 6 மணிக்கு தொடங்கி மறுநாள் காலை 6 மணி வரை கொண்டாடப்பட உள்ளது.

    சத்குரு முன்னிலையில் நடைபெறும் இவ்விழாவில் சக்திவாய்ந்த தியானங்கள், மந்திர உச்சாடனைகள், தலைசிறந்த கலைஞர்களின் இசை நிகழ்ச்சிகள் உட்பட பல்வேறு அம்சங்கள் இடம்பெற உள்ளன.

    ஒவ்வொரு ஆண்டும் சத்குரு அவர்கள் வழிநடத்தும் நள்ளிரவு தியானத்தில் மட்டும் உச்சரிக்கப்படும் திருவைந்தெழுத்து மஹாமந்திரத்தை இந்தாண்டு விழாவில் பங்கேற்கும் அனைவருக்கும் தீட்சையாக சத்குரு வழங்கவுள்ளார்.

    இதன் மூலம் தீட்சைப் பெறும் அனைவரும் அவரவர் இல்லங்களில் இனி திருவைந்தெழுத்து மத்திரத்தை தினமும் உச்சாடணை செய்ய முடியும். இதனுடன் 'மிராக்கிள் ஆப் தி மைண்ட்' எனும் இலவச செயலியை சத்குரு அறிமுகப்படுத்த உள்ளார்.

    மேலும் மகாசிவராத்திரி விழாவிற்கு நேரில் வரும் மக்களின் வசதிக்காக தேவையான பார்கிங், சுத்திகரிக்கப்பட குடிநீர், சுகாதாரமான கழிவறைகள், உடனடி மருத்துவ வசதி உள்ளிட்டவைகள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

     

    விழாவிற்கு பல்வேறு நாடுகளில் இருந்து மக்கள் வருகை தரவுள்ளனர், இருப்பினும் தமிழக மக்களுக்கு முன்னுரிமை வழங்கும் வகையில் சிறப்பு தனி இருக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    மேலும் விழாவிற்கு முன்பதிவின்றி நேரடியாக வருகை தரும் மக்கள் இலவசமாக கலந்து கொள்ளவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. விழாவில் கலந்து கொள்ளும் லட்சக்கணக்கான மக்களுக்கு மகா அன்னதானம் வழங்கப்பட உள்ளது.

    மஹாசிவராத்திரி விழா இந்தியா முழுவதிலும் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.

    அந்த வகையில் தமிழ்நாட்டில் 50 இடங்களிலும், கேரளாவில் 25 இடங்களிலும் நேரலை செய்யப்பட உள்ளது. இதனுடன் தமிழ், மலையாளம், ஓடியா, அசாமி, பெங்காலி உள்ளிட்ட 11 இந்திய மொழிகள் மற்றும் அரபிக், இத்தாலி, பிரெஞ்சு, ஜெர்மன் உள்ளிட்ட 11 அயல் மொழிகள் என மொத்தம் 22 மொழிகளில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.

    மேலும் 150-க்கும் அதிகமான தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் டிஜிட்டல் தளங்களிலும், இந்தியா முழுவதும் 100-க்கும் அதிகமான PVR-INOX திரையரங்குகளிலும், ஜியோ ஹாட்ஸ்டார், ZEE5 ஆகிய OTT தளங்கள் மற்றும் BIG 92.7, ஃபீவர் ஆகிய பண்பலை வானொலிகளிலும் விழா நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.

    இவ்விழாவில் பங்கேற்கும் கோடிக்கணக்கான மக்கள் இரவு முழுவதும் விழிப்பாக இருக்க உதவும் வகையில் இசை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளன.

    இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபல பாடகர் சத்ய பிரகாஷ், கர்நாடகாவை சேர்ந்த பாடகி சுபா ராகவேந்திரா, 'பாரடாக்ஸ்' என அழைக்கப்படும் தனிஷ் சிங், மராத்தி இசை சகோதரர்கள் அஜய் - அதுல், குஜராத் நாட்டுப்புற கலைஞர் முக்திதான் காத்வி மற்றும் இந்திய மொழிகளில் ஆன்மீகப் பாடல்களை பாடி சமூக ஊடகங்களில் வைரலான ஜெர்மன் பாடகி கசான்ட்ரா மே ஆகியோர் இசை நிகழ்ச்சிகளை நடத்தவுள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் சௌந்தரராஜா.
    • அஞ்சலை அம்மாள் நினைவு நாளை ஒட்டி அவரது படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் சௌந்தரராஜா. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ள இவர் தமிழ் அல்லாத மற்ற மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

    நடிப்பு மட்டுமின்றி சமூக பணிகள் சார்ந்து பல்வேறு முன்னெடுப்புகளில் சௌந்தரராஜா தீவிரமாக செயல்பட்டு வருகிறார். அந்த வரிசையில் தனது மண்ணும் மக்களுக்கும் அறக்கட்டளை சார்பில் புதுச்சேரியில் நடைபெற்ற அஞ்சலை அம்மாள் நினைவு நாளை ஒட்டி அவரது படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளையை சேர்ந்தவர்களுடன் நடிகர் சௌந்தரராஜா மற்றும் தமிழக வெற்றிக் கழகம் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் சௌந்தரராஜா, "மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை சார்பில் அண்ணன் த.வெ.க. தலைவர் விஜய் வழியில் புதுச்சேரியில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் கொள்கை தலைவர்களில் ஒருவரான அஞ்சலை அம்மாள் நினைவு நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி. இந்த நாளில் மரக்கன்றுகள் நட்டு, அன்னதானம் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வுக்கு மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை பொறுப்பாளர் பரத் ஏற்பாடு செய்து இருந்தார்.

    இந்த நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி. இதில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் பொதுச் செயலாளர் அண்ணன் ஆனந்த் கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால் வேலை பளு காரணமாக அவர் கலந்து கொள்ள முடியாமல் போனது. அவருக்கும் அண்ணன் விஜய்க்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். புதுச்சேரிக்கு வருவதில் எப்போதும் மகிழ்ச்சி தான்.

    2026 தேர்தலை சந்திக்க தயாராக இருக்கிறோம். மக்களை சந்திப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது, கூட்டணி விவகாரங்கள் பற்றி கட்சியின் தலைவர் மற்றும் நிர்வாகிகள் அறிவிப்பார்கள். நான் ஒரு தம்பி மற்றும் தொண்டனாக இருக்கிறேன். கட்சி பொறுப்பாளர்களை நியமிக்கும் பணிகள் இன்னும் பத்து நாட்களில் முடியும் என்று கேள்விப்பட்டேன்.

    ஆரம்பத்தில் இருந்து அண்ணன் தளபதிக்காக பணியாற்றியவர்கள் ஏராளமானோர் உள்ளனர். இதனால் இந்த விஷயத்தில் பலர் வருந்தும் படி எதுவும் நடக்கக்கூடாது என்பதில் பொதுச் செயலாளர் அண்ணன் ஆனந்த் கவனமுடன் ஒவ்வொருத்தரையும் தேர்வு செய்து வருகிறார். இன்னும் 15 நாட்களுக்குள் பொறுப்பாளர்களை நியமிக்கும் பணிகள் நிறைவடையும் என்று கேள்விப்பட்டேன்.

    தமிழக வெற்றிக் கழகம் மற்றும் அதன் தலைவர் விஜய்யை தமிழ் நாடு மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவும் உன்னிப்பாக கவனித்து வருகிறது. அவர் போடும் ஒரு எக்ஸ் (முன்பு டுவிட்டர்) பதிவு கூட சில நொடிகளில் செய்தியாகி விடுகிறது. அண்ணன் விஜய்க்கு உலக தமிழர்களிடம் பெரிய வரவேற்பு உள்ளது. சமீபத்தில் நான் படித்த தகவலின் படி தமிழக வெற்றிக் கழகம் மற்றும் தலைவர் விஜய் என எக்ஸ் தளத்தில் பதிவிட்டால் அதனை மிக குறுகிய காலத்தில் கிட்டத்தட்ட 80 லட்சம் பேர் தொடர்ச்சியாக பின் தொடர்ந்து வருகின்றனர்.

    இன்றைய ஆட்சியில் மக்களுக்கு நிறைய பிரச்சினைகள் உள்ளன. மக்கள் மாற்றத்தின் பக்கம் தான் உள்ளனர். உதாரணத்திற்கு மின் கட்டணத்தை எடுத்துக் கொள்ளலாம். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு செலுத்தியதை விட தற்போது மின் கட்டணம் பலமடங்கு அதிகரித்துள்ளது. முன்பு 500 ரூபாய் செலுத்திய நிலையில் தற்போது 2500 முதல் 3000 வரை நானே செலுத்தி வருகிறேன். இது மட்டுமின்றி விவசாயிகள் பிரச்சினை உள்ளது. மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். எல்லாவற்றுக்கும் போராட்டம் தான் நடத்த வேண்டும் என்றில்லை. அகிம்சை வழியில் பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம்," என்று கூறினார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ரெயில் எலக்ட்ரிக் போஸ்டில் மோதிய பிறகு ரயில் தடம் புரண்டதாக தகவல்.
    • விபத்தால் பயணிகளுக்கு ஏற்பட்டுள்ள சேதம் குறித்த தகவல் வெளியாகவில்லை.

    கொல்கத்தாவில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டு விபத்தை ஏற்படுத்தி உள்ளது.

    மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் இருந்து சென்னைக்கு ஜல்பைகுரி - சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் சென்னை நோக்கி வந்துக் கொண்டிருந்தபோது, ஒடிசா மாநிலத்தில் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

    ஒடிசா மாநிலம் பலாசோர் மாவட்டத்தில் உள்ள சோரோ ரெயில் நிலையம் அருகே ரெயில் தடம் புரண்டுள்ளது. ரெயில் விபத்து, தண்டவாளத்தை ஒட்டி இருந்த எலக்ட்ரிக் போஸ்டில் மோதிய பிறகு ரயில் தடம் புரண்டதாக கூறப்படுகிறது.

    சம்பவ இடத்திற்கு விரைந்த ரெயில்வே மூத்த அதிகாரிகள் விபத்து குறித்து ஆய்வு செய்துள்ளனர். மேலும் அங்கு மீட்பு பணிகளும் நடைபெற்று வருகிறது. இருப்பினும், இந்த விபத்தால் பயணிகளுக்கு ஏற்பட்டுள்ள சேதம் குறித்த தகவல் வெளியாகவில்லை. 

    • மிஸ்டர் எக்ஸ் என்ற படத்தை மனு ஆனந்த் இயக்கியுள்ளார்.
    • (MrX) படத்தின் அறிமுக காட்சிக்காக நடிகர் ஆர்யா கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டுள்ளார்.

    F.I.R படத்தை தொடர்ந்து ஆர்யா, கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் மிஸ்டர் எக்ஸ் என்ற படத்தை மனு ஆனந்த் இயக்கியுள்ளார்.

    இந்தப் படத்தில் சரத்குமார் மற்றும் மஞ்சு வாரியர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். இவர்களுடன் அதுல்யா ரவி, ரைஸா வில்சன், அனாகா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. மிஸ்டர் எக்ஸ் (MrX) படத்தின் அறிமுக காட்சிக்காக நடிகர் ஆர்யா கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டுள்ளார்.

    மிஸ்டர் எக்ஸ் படத்தின் ஆடியோ உரிமையை சோனி நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்தப் படத்திற்கு திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார்.

    இந்த நிலையில் படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தியாவிற்காக வேலை செய்த ஸ்பை அதிகாரி அமைப்பை மையமாக கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. ஆர்யா ஒரு ஸ்பை அதிகாரியாக நடித்துள்ளார். படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பை அதிகரித்துள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சிக்னல் சீரமைப்பு பணிகள் காரணமாக சென்னை புறநகர் ரெயில்கள் ரத்து.
    • சென்னை சென்ட்ரல்- பொன்னேரி வரை மட்டும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என அறிவிப்பு.

    சிக்னல் சீரமைப்பு பணிகள் காரணமாக சென்னை சென்ட்ரல்- கும்மிடிப்பூண்டி ரெயில்கள் நாளை காலை 9.50- மதியம் 3.50 மணி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

    கணிசமான அளவில் சென்னை சென்ட்ரல்- பொன்னேரி வரை மட்டும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

    • சென்னை மற்றும் பெங்களூருவில் இருந்து பல்வேறு இடங்களுக்கு இயக்கப்படுகிறது.
    • சிறப்பு பஸ் இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பஸ் நிலையங்களிலும் போதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    சென்னை:

    அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் ஆர்.மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மிகவும் பிரசித்தி பெற்ற மகாசிவராத்திரி திருநாளை முன்னிட்டு தொலைதூர பயணிகள் திருநெல்வேலி, திருச்செந்தூர், செங்கோட்டை, மதுரை, காரைக்குடி, திண்டுக்கல், தேனி, கோயம்புத்தூர் என பல்வேறு இடங்களுக்கு சென்று வர ஏதுவாக தினசரி இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக சிறப்பு பஸ்கள் சென்னையில் இருந்தும், பெங்களூருவில் இருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலம் அதிநவீன சொகுசு பஸ், இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட குளிர்சாதன பஸ்கள் வருகிற 25-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) சென்னை மற்றும் பெங்களூருவில் இருந்து பல்வேறு இடங்களுக்கு இயக்கப்படுகிறது. அதே போன்று, மேற்கண்ட இடங்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூருக்கும் வருகிற 26-ந் தேதி(புதன்கிழமை) சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

    இச்சிறப்பு பஸ்களுக்கு www.tnstc.inஇணைதளம் மற்றும் டி.என்.எஸ்.டி.சி. அதிகாரப்பூர்வ செல்போன் செயலி(ஆப்) மூலமாக முன்பதிவு செய்து பயணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. சிறப்பு பஸ் இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பஸ் நிலையங்களிலும் போதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் மேற்படி பஸ் வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 'ஈரம்' படத்திற்கு பிறகு ஆதி- அறிவழகன் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.
    • தமன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    2009 ஆம் ஆண்டு அறிவழகன் இயக்கத்தில் வெளிவந்த 'ஈரம்' படத்தில் மிகச் சிறப்பான நடிப்பை ஆதி வெளிப்படுத்தி மக்கள் மனதை வென்றார். இயக்குனர் அறிவழகனுக்கு 'ஈரம்' திரைப்படம் நல்ல வரவேற்பைக் கொடுத்தது. அதற்கடுத்து நகுல் நடிப்பில் வெளிவந்த 'வல்லினம்' மற்றும் அருண் விஜய் நடிப்பில் வெளிவந்த 'பார்டர்', 'குற்றம் 23' திரைப்படத்தை அறிவழகன் இயக்கினார்.

    'ஈரம்' படத்திற்கு பிறகு ஆதி- அறிவழகன் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. அறிவழகன் இயக்கும் 'சப்தம்' படத்தில் ஆதி நடித்துள்ளார். ஹாரர் கதைக்களப் பின்னணியில் இத்திரைப்படம் அமைந்துள்ளது. இந்த படத்தில் லக்ஷ்மி மேனன் , சிம்ரன், லைலா மற்றும் ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் நடித்துள்ளனர். தமன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    இப்படத்தின் டீசர் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் அண்மையில் வெளியாகி மக்களிடம் அமோக வரவேற்பை பெற்றது. இத்திரைப்படம் வரும் பிப்ரவரி 28 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் இரண்டாம் பாடல் நாளை காலை 11 மணிக்கு வெளியாகவுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×