என் மலர்tooltip icon

    ஐ.பி.எல்.(IPL)

    • பெங்களூருவில் மழை பெய்ததால் டாஸ் சுண்டுவதில் தாமதம் ஏற்பட்டது.
    • தொடர்ந்து மழை பெய்ததால் ஆட்டம் கைவிடப்பட்டது.

    பெங்களூரு:

    இந்தியா-பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றம் காரணமாக கடந்த 8-ம் தேதி ஐபிஎல் போட்டி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. அதன்பின், ஒரு வாரம் கழித்து (மே 17-ம் தேதி) போட்டிகள் மீண்டும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது.

    பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஆர்சிபி-கேகேஆர் இடையிலான போட்டி இன்று தொடங்க இருந்தது. ஆனால் பெங்களூருவில் மழை பெய்து வருவதால் டாஸ் சுண்டுவதில் தாமதம் ஏற்பட்டது.

    இந்நிலையில், மழை தொடர்ந்து பெய்ததால் போட்டி கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் ஆர்சிபி, கேகேஆர் அணிகளுக்கு தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.

    இதையடுத்து, நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தொடரில் இருந்து வெளியேறியது. புள்ளிப்பட்டியலில் ஆர்.சி.பி. அணி முதலிடத்தில் நீடிக்கிறது.

    ஏற்கனவே சென்னை, ராஜஸ்தான், ஐதராபாத் அணிகள் தொடரில் இருந்து வெளியேறின.

    • கொல்கத்தா ஈடன் கார்டனில் இறுதிப் போட்டி நடைபெறும் என தொடக்கத்தில் அறிவிப்பு.
    • தற்போது போட்டி அட்டவணை மாற்றப்பட்டுள்ளதால் பிளேஆஃப் போட்டிக்கான தேதி அறிவிக்கப்படவில்லை.

    ஐபிஎல் 2025 சீசன் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் மாதம் 22ஆம் தேதி தொடங்கி சிறப்பாக நடைபெற்று கொண்டிருந்தது. லீக் ஆட்டங்கள் முடிவடைய இருந்த நிலையில் பிளேஆஃப் சுற்றின் குவாலிஃபையர்-1, எலிமினேட்டர் ஆகிய போட்டிகள் ஐதராபாத்திலும், குவாலிஃபையர்-2, இறுதிப் போட்டி கொல்கத்தாவிலும் நடைபெறும் வகையில் போட்டி அட்டவணை வெளியிடப்பட்டிருந்தது.

    ஆனால் இந்தியா- பாகிஸ்தான் இடையில் போர் பதற்றம் ஏற்பட கடந்த 8ஆம் தேதி ஐபிஎல் போட்டிக்கு தடை ஏற்பட்டது. தேதி குறிப்பிடாமல் ஐபிஎல் 2025 சீசன் எஞ்சிய போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டது. 10ஆம் தேதி இந்தியா- பாகிஸ்தான் இடையில் சண்டை நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது.

    இதனைத் தொடர்ந்து இன்று முதல் (17ஆம் தேதி) எஞ்சிய போட்டிகள் நடைபெறும் என போட்டி அட்டவணை திருத்தி அமைக்கப்பட்டது. ஆனால் பிளேஆஃப் சுற்று போட்டிகள் எங்கு நடத்தப்படும் என அறிவிக்கப்படவில்லை.

    இந்த நிலையில் கொல்கத்தாவில்தான் இறுதிப் போட்டி நடைபெறும் என கங்குலி நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில் "நாங்கள் முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். பிசிசிஐ-யிடம் பேசிக் கொண்டிருக்கிறோம். இறுதிப் போட்டியை மாற்றுவது அவ்வளவு எளிதானதா?. இது ஈடன் கார்டனின் பிளேஆஃப் போட்டிகள். எல்லாம் சரி செய்யப்படும். எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது.

    இறுதிப் போட்டி கொல்கத்தாவில் நடைபெற வேண்டும் என ரசிகர்கள் போராட்டம் நடத்தினர். போராட்டம் உதவி செய்யாது. பெங்கால் கிரிக்கெட் சங்கத்துடன் பிசிசிஐ மிகச் சிறந்த நட்புறவு கொண்டுள்ளது" என்றார்.

    கடந்த சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் சாம்பியன் பட்டம் வென்றது. இதனால் இறுதிப் போட்டியை நடத்தும் வாய்ப்பை கொல்கத்தா ஈடன் கார்டன் பெற்றது குறிப்பிடத்தக்கது.

    • கடந்த 8ஆம் தேதி ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்பட்டது.
    • பின்னர் 17ஆம் தேதி (இன்று) மீண்டும் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

    இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றம் காரணமாக கடந்த 8ஆம் தேதி டெல்லி- பஞ்சாப் இடையிலான போட்டி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. பின்னர் ஒருவாரம் கழித்து (மே 17ஆம் தேதி) போட்டிகள் மீண்டும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஆர்சிபி- கேகேஆர் இடையிலான போட்டியுடன் ஐபிஎல் தொடர் மீண்டும் தொடங்குகிறது.

    ஆனால் பெங்களூருவில் மழை பெய்து வருவதால் டாஸ் சுண்டுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. புள்ளிகள் பட்டியலில் ஆர்சிபி 2-ஆவது இடத்திலும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 6ஆவது இடத்திலும் உள்ளது.

    • ஆர்சிபி- கொல்கத்தா போட்டியில் மழை குறுக்கீட 50 சதவீதம் வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
    • இந்த போட்டியில் மழை வந்தாலும், கொல்கத்தா தோல்வி அடைந்தாலும் தொடரில் இருந்து வெளியேறி விடும்.

    10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 22-ந்தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வந்தது. இந்தியா- பாகிஸ்தான் இடையிலான சண்டை காரணமாக எல்லைப்பகுதியில் பதற்றம் அதிகரித்ததால் ஐ.பி.எல். தொடர் ஒருவாரம் தள்ளிவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

    இதற்கிடையே, இந்தியா- பாகிஸ்தான் சண்டை முடிவுக்கு வந்து இயல்பு நிலை திரும்பியதை தொடர்ந்து, எஞ்சிய ஐ.பி.எல். போட்டி இன்று முதல் தொடங்கி ஜூன் 3-ந் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில் 58-வது லீக் ஆட்டம் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று இரவு நடக்கிறது. இதில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்சை எதிர்கொள்கிறது.

    பெங்களூரு அணி 11 ஆட்டங்களில் ஆடி 8 வெற்றி, 3 தோல்வி என 16 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இருக்கிறது. அந்த அணி இன்னும் ஒரு வெற்றி பெற்றால் அடுத்த சுற்றுக்குள் அடியெடுத்து வைத்து விடும்.

    கொல்கத்தா அணி 12 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 6 தோல்வி, ஒரு முடிவில்லை (பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டம் மழையால் ரத்து) என 11 புள்ளிகளுடன் 6-வது இடத்தில் உள்ளது. அந்த அணி எஞ்சிய இரு ஆட்டங்களிலும் வெற்றி பெற்று நல்ல ரன்-ரேட்டுடன் இருப்பதுடன், மற்ற அணிகளின் முடிவும் சாதகமாக அமைந்தால் மட்டுமே அடுத்த சுற்றுக்கான கதவு திறக்கும்.

    இந்நிலையில் இன்று நடைபெறும் போட்டியில் மழை குறுக்கீட 50 சதவீதம் வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அப்படி மழை பெய்து ஆட்டம் கைவிடப்பட்டால் இரு அணிக்கும் தலா 1 புள்ளிகள் வழங்கப்படும்.

    இதனால் கொல்கத்தா அணியின் பிளே ஆப் கனவு கலைந்துவிடும். அப்படி ஒரு புள்ளி எடுக்கப்பட்டால் நடப்பு தொடரில் பிளே ஆப் சுற்றுக்கு கிட்டத்தட்ட ஆர்சிபி முன்னேறிவிடும்.

    • இதுவரை 57 லீக் ஆட்டங்கள் முடிந்து விட்டன.
    • சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிகள் வாய்ப்பை இழந்து வெளியேறி விட்டன.

    பெங்களூரு:

    திரில், பரபரப்பு என சுவாரஸ்யமாக சென்று கொண்டிருந்த ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியா- பாகிஸ்தான் சண்டையால் திடீரென ஒரு வாரம் நிறுத்தப்பட்டது. மீண்டும் அதே உத்வேகத்துடன் இன்று தொடங்கினாலும் ஆட்டம் முழுவீச்சில் சூடுபிடிக்க சில நாட்கள் ஆகலாம். மேலும் முக்கியமான வெளிநாட்டு வீரர்கள் சர்வதேச போட்டிக்காக கடைசி கட்டத்தில் கிளம்புவது அணிகளின் சரியான கலவையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். அதை எல்லாம் கணக்கு போட்டே சில அணிகள் தற்காலிகமாக மாற்று வீரர்களை சேர்த்து வியூகங்களை தீட்டுகின்றன.

    இதுவரை 57 லீக் ஆட்டங்கள் முடிந்து விட்டன. 13 லீக் மட்டுமே மிஞ்சியுள்ளது. ஆனால் இன்னும் எந்த அணியும் அடுத்த சுற்று வாய்ப்பை (பிளே-ஆப்) உறுதி செய்யவில்லை. முன்னாள் சாம்பியன்கள் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிகள் வாய்ப்பை இழந்து வெளியேறி விட்டன. மற்ற 7 அணிகள் பிளே-ஆப் சுற்றின் 4 இடத்துக்கு மல்லுக்கட்டுகின்றன.

    புள்ளி பட்டியலில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும். இதில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் மோதும். இதில் வெற்றி காணும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்குள் நுழையும். தோற்கும் அணிக்கு மற்றொரு வாய்ப்பு வழங்கப்படும்.

    3-வது, 4-வது இடத்தை பிடிக்கும் அணிகள் வெளியேற்றுதல் சுற்றில் மோதும். இதில் தோற்கும் அணி மூட்டையை கட்டும். வெற்றி பெறும் அணி, முதலாவது தகுதி சுற்றில் தோற்ற அணியுடன் இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதி சுற்றில் சந்திக்கும். இந்த ஆட்டத்தில் வெற்றியை வசப்படுத்தும் அணி 2-வது அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

    இனி பிளே-ஆப் சுற்றை எட்டுவதற்கு வாய்ப்புள்ள அணிகள் எவை என்பதை பார்க்கலாம்.

    குஜராத் டைட்டன்ஸ் (16 புள்ளி): புள்ளி பட்டியலில் முதலிடம் வகிக்கும் குஜராத் அணிக்கு மீதமுள்ள 3 ஆட்டங்களில் (டெல்லி, லக்னோ, சென்னைக்கு எதிராக) ஒன்றில் வென்றால் போதும். அடுத்து சுற்றை எட்டி விடும். மூன்றில் தோற்றால் கூட மற்ற அணிகளின் முடிவுகள் சாதகமாக அமைந்தால் வாய்ப்பு உண்டு. இதில் உள்ளூரில் இரு ஆட்டங்களில் ஆடுவது நிச்சயம் அனுகூலமாக இருக்கும். ஏனெனில் இந்த சீசனில் ஆமதாபாத்தில் ஆடிய 5 ஆட்டங்களில் 4-ல் வெற்றி பெற்றிருக்கிறது.

    பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் (16 புள்ளி): குஜராத் போன்றே பெங்களூரு அணியும் பிளே-ஆப் சுற்றை எட்டும் தூரத்தில் நிற்கிறது. அந்த அணிக்கு தேவை ஒரு வெற்றி. கொல்கத்தா, ஐதராபாத், லக்னோ அணிகளிடம் மோத வேண்டி இருக்கிறது. பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் வலுவாக இருப்பதால் பெங்களூரு அணி அடுத்த சுற்றை அடைவதில் பெரிய அளவில் சிக்கல் இருக்காது.

    பஞ்சாப் கிங்ஸ் (15 புள்ளி): தற்போதைய சூழலில் மீதமுள்ள 3 ஆட்டங்களில் (ராஜஸ்தான், டெல்லி, மும்பைக்கு எதிராக) பஞ்சாப் அணி 2-ல் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும். ஒன்றில் மட்டும் வெற்றி பெற்றால் மற்ற அணிகளின் முடிவை எதிர்நோக்கி இருக்க வேண்டும். மூன்றிலும் தோற்றால் ஏறக்குறைய அவுட் தான். 2014-ம் ஆண்டுக்கு பிறகு பஞ்சாப் அணி பிளே-ஆப் சுற்றுக்கு வந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    மும்பை இந்தியன்ஸ் (14 புள்ளி): ஐந்து முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி தனது கடைசி இரு லீக்கில் டெல்லி, பஞ்சாப்பை பதம் பார்த்தால் கம்பீரமாக பிளே-ஆப் சுற்றுக்குள் பயணிக்கலாம். ஒன்றில் மட்டும் வெற்றி பெற்றால் மற்ற அணிகளின் தயவை தேட வேண்டி இருக்கும். ரன்ரேட்டில் (+1.156) நல்ல நிலையில் இருப்பது பலமாகும். இரண்டிலும் தோற்றால் அத்துடன் வெளியேற வேண்டியது தான்.

    டெல்லி கேப்பிட்டல்ஸ் (13 புள்ளி): கடைசி 5 ஆட்டங்களில் ஒன்றில் மட்டுமே வெற்றி கண்டுள்ள அக்ஷர் பட்டேல் தலைமையிலான டெல்லி அணி எழுச்சி பெற்றால் தான் தப்பிக்க முடியும். எஞ்சிய 3 ஆட்டத்திலும் (குஜராத், மும்பை, பஞ்சாப்புக்கு எதிராக) வாகை சூடினால் பிளே-ஆப் கனவு நனவாகும். மாறாக இரண்டில் மட்டும் வெற்றி கிடைத்தால் 17 புள்ளியை அடையும். அப்போது மற்ற அணிகளின் முடிவுக்காக காத்திருக்க வேண்டி இருக்கும்.

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (11 புள்ளி): நடப்பு சாம்பியனான கொல்கத்தா அணிக்கு பிளே-ஆப் வாய்ப்பு நூலிழை அளவுக்கு ஒட்டிக் கொண்டிருக்கிறது. முதலில் அந்த அணி தனது கடைசி இரு லீக்கிலும் (பெங்களூரு, ஐதராபாத்துக்கு எதிராக) வெற்றி பெற வேண்டும். அதன் பிறகு மும்பை அணி தனது கடைசி இரு ஆட்டங்களிலும் மண்ணை கவ்வ வேண்டும். டெல்லி அணி 3 ஆட்டங்களில் 2-ல் அடங்க வேண்டும். லக்னோ அணி 3-ல் ஒன்றில் தோற்க வேண்டும். இவ்வாறு நிகழ்ந்தால் கொல்கத்தா, டெல்லி அணிகள் தலா 15 புள்ளிகளுடன் 4-வது இடத்துக்கு போட்டியிடும். அப்போது ரன்ரேட்டில் வலுவாக இருந்தால் கொல்கத்தாவுக்கு அதிர்ஷ்டம் அடிக்கும்.

    லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (10 புள்ளி): உத்வேகத்தை இழந்து தடுமாறிக் கொண்டிருக்கும் லக்னோ அணி கடைசி 3 ஆட்டங்களில் வரிசையாக தோல்வியை தழுவியது. தங்களுக்குரிய இறுதி 3 ஆட்டங்களிலும் (ஐதராபாத், குஜராத், பெங்களூருவுக்கு எதிராக) வெற்றி பெற்றால் மட்டுமே பிளே-ஆப் சுற்றை நினைத்து பார்க்க முடியும். அதுவும் மற்ற அணிகளின் முடிவுகள் கைகொடுக்கவேண்டும். ஒன்றில் தோற்றாலும் அம்பேல் தான்.

    • இவ்விரு அணிகளும் இதுவரை 35 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன.
    • கொல்கத்தா 20 ஆட்டங்களிலும், பெங்களூரு 15 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

    10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 22-ந்தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வந்தது. இதில் ஒவ்வொரு அணியும் 14 லீக் ஆட்டங்களில் மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறும்.

    நடப்பு தொடரில் இதுவரை எந்த அணியும் அடுத்த சுற்றுக்கு (பிளே-ஆப்) தகுதி பெறவில்லை. 5 முறை சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், முன்னாள் சாம்பியன்களான ராஜஸ்தான் ராயல்ஸ், ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிகள் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டன. 4 பிளே-ஆப் இடங்களுக்கு 7 அணிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

    இந்தியா- பாகிஸ்தான் இடையிலான சண்டை காரணமாக எல்லைப்பகுதியில் பதற்றம் அதிகரித்ததால் இமாச்சலபிரதேச மாநிலத்தில் உள்ள தர்மசாலாவில் கடந்த 8-ந்தேதி இரவு நடந்த பஞ்சாப் கிங்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் இடையிலான ஆட்டம் (58-வது லீக் ஆட்டம்) பாதியில் கைவிடப்பட்டது. அத்துடன் ஐ.பி.எல். தொடர் ஒருவாரம் தள்ளிவைக்கப்படுவதாக அடுத்த நாளில் அறிவிக்கப்பட்டது.

    இதற்கிடையே, இந்தியா- பாகிஸ்தான் சண்டை முடிவுக்கு வந்து இயல்பு நிலை திரும்பியதை தொடர்ந்து, அணி நிர்வாகிகள், ஒளிபரப்புதாரர்கள், பாதுகாப்பு முகமை உள்ளிட்ட சம்பந்தப்பட்டவர்களிடம் ஆலோசனை நடத்திய இந்திய கிரிக்கெட் வாரியம் எஞ்சிய ஐ.பி.எல். போட்டி இன்று (சனிக்கிழமை) தொடங்கி ஜூன் 3-ந் தேதி வரை நடைபெறும் என்று கடந்த 12-ந் தேதி அறிவித்தது. எஞ்சிய ஆட்டங்களுக்கான திருத்தி அமைக்கப்பட்ட அட்டவணையும் வெளியிடப்பட்டது.

    இதன்படி பாதியில் ரத்து செய்யப்பட்ட பஞ்சாப்- டெல்லி அணிகள் இடையிலான மோதல் உள்ளிட்ட 13 லீக் ஆட்டங்கள் பெங்களூரு, ஜெய்ப்பூர், டெல்லி, லக்னோ, மும்பை, அகமதாபாத் ஆகிய நகரங்களில் அரங்கேறுகிறது. லீக் சுற்று வருகிற 27-ந் தேதி நிறைவு பெறுகிறது. முதலாவது தகுதி சுற்று 29-ந்தேதியும், வெளியேற்றுதல் சுற்று 30-ந்தேதியும், இரண்டாவது தகுதி சுற்று ஜூன் 1-ந் தேதியும், இறுதிப்போட்டி ஜூன் 3-ந்தேதியும் நடைபெறுகிறது. 'பிளே-ஆப்' சுற்று நடைபெறும் இடங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

    இந்த நிலையில், 8 நாள் இடைவெளிக்கு பிறகு திருத்தி அமைக்கப்பட்ட புதிய அட்டவணையின்படி 58-வது லீக் ஆட்டம் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று இரவு நடக்கிறது. இதில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்சை எதிர்கொள்கிறது.

    ரஜத் படிதார் தலைமையிலான பெங்களூரு அணி 11 ஆட்டங்களில் ஆடி 8 வெற்றி, 3 தோல்வி என 16 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இருக்கிறது. அந்த அணி தனது கடைசி 4 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வெற்றியை ருசித்து வீறுநடை போடுகிறது. அந்த அணி இன்னும் ஒரு வெற்றி பெற்றால் அடுத்த சுற்றுக்குள் அடியெடுத்து வைத்து விடும்.

    சென்னைக்கு எதிரான முந்தைய ஆட்டத்தின் போது கைவிரலில் காயம் அடைந்த கேப்டன் ரஜத் படிதார் முழு உடல் தகுதியை எட்டி இருப்பது பெங்களூரு அணியின் நம்பிக்கையை அதிகரிக்கும். போட்டி ஒத்திவைக்கப்படாமல் இருந்திருந்தால் அவர் இரண்டு ஆட்டங்களை தவறவிட வேண்டிய நிலை ஏற்பட்டு இருக்கும். அதே சமயம் போட்டி தள்ளிவைக்கபட்டதால் தாயகம் திரும்பிய ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஹேசில்வுட் இந்தியா வரவில்லை. 18 விக்கெட்டுகள் (10 ஆட்டம்) வீழ்த்திய அவர் ஒதுங்கி இருப்பது அந்த அணிக்கு பெருத்த பின்னடைவாகும்.

    பெங்களூரு அணியில் பேட்டிங்கில் விராட்கோலி (505 ரன்) சூப்பர் பார்மில் இருக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு அவர் ஆடும் முதல் ஆட்டம் என்பதால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. கேப்டன் ரஜத் படிதார், டிம் டேவிட், ஜேக்கப் பெத்தேல் ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர். பந்து வீச்சில் குருணல் பாண்ட்யா, புவனேஷ்வர் குமார், யாஷ் தயாள், லுங்கி இங்கிடி, சுயாஷ் ஷர்மா பலம் சேர்க்கின்றனர்.

    கொல்கத்தா அணி 12 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 6 தோல்வி, ஒரு முடிவில்லை (பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டம் மழையால் ரத்து) என 11 புள்ளிகளுடன் 6-வது இடத்தில் உள்ளது. அந்த அணி எஞ்சிய இரு ஆட்டங்களிலும் வெற்றி பெற்று நல்ல ரன்-ரேட்டுடன் இருப்பதுடன், மற்ற அணிகளின் முடிவும் சாதகமாக அமைந்தால் மட்டுமே அடுத்த சுற்றுக்கான கதவு திறக்கும்.

    கொல்கத்தா அணியில் பேட்டிங்கில் கேப்டன் ரஹானே, அங்கிரிஷ் ரகுவன்ஷி, ரிங்கு சிங் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். வெங்கடேஷ் அய்யரின் பேட்டிங் மெச்சும்படி இல்லை. ஆல்-ரவுண்டர்களாக சுனில் நரின், ஆந்த்ரே ரஸ்செல் அவ்வப்போது கைகொடுக்கிறார்கள். பந்து வீச்சில் வருண் சக்ரவர்த்தி, வைபவ் அரோரா, ஹர்திஷ் ராணா மிரட்டக்கூடியவர்கள். சுழற்பந்து வீச்சாளர் மொயீன் அலி (இங்கிலாந்து) விலகி இருப்பது பாதகமான அம்சமாக பார்க்கப்படுகிறது.

    கொல்கத்தாவுக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்த பெங்களூரு அணி தனது ஆதிக்கத்தை தொடர்ந்து அடுத்த சுற்றுக்கு முதல் அணியாக நுழைய தீவிரம் காட்டும். அதேநேரத்தில் பதிலடி கொடுத்து அடுத்த சுற்று வாய்ப்பை இழக்காமல் இருக்க கொல்கத்தா அணி எல்லா வகையிலும் போராடும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.

    இவ்விரு அணிகளும் இதுவரை 35 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் கொல்கத்தா 20 ஆட்டங்களிலும், பெங்களூரு 15 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

    பெங்களூருவில் நேற்று மழை பெய்தது. இதேபோல் இன்றும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அங்குள்ள வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் இந்த ஆட்டம் மழையால் பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. ஒரு வேளை மழையால் ஆட்டம் கைவிடப்பட்டு இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்து அளிக்கப்பட்டால் கொல்கத்தாவின் அடுத்த சுற்று கனவு தகர்ந்து விடும்.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    பெங்களூரு: விராட் கோலி, பில் சால்ட், ஜேக்கப் பெத்தேல் அல்லது மயங்க் அகர்வால், ரஜத் படிதார் (கேப்டன்), ஜிதேஷ் ஷர்மா, டிம் டேவிட், ரொமாரியோ ஷெப்பர்டு, குருணல் பாண்ட்யா, புவனேஷ்வர் குமார், லுங்கி இங்கிடி, யாஷ் தயாள், சுயாஷ் ஷர்மா.

    கொல்கத்தா: ரமனுல்லா குர்பாஸ், சுனில் நரின், அஜிங்யா ரஹானே (கேப்டன்), வெங்கடேஷ் அய்யர், அங்கிரிஷ் ரகுவன்ஷி அல்லது மனிஷ் பாண்டே ,ரிங்கு சிங், ஆந்த்ரே ரஸ்செல், ரமன்தீப் சிங், வைபவ் அரோரா, ஹர்ஷித் ராணா, வருண் சக்ரவர்த்தி, அன்ரிச் நோர்டியா அல்லது ஸ்பென்சர் ஜான்சன்.

    இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    • ஐபிஎல் தொடரில் விளையாட வேண்டும் என்று சொன்னால், நான் நிச்சயமாக 'முடியாது' என்று சொல்லி இருப்பேன்.
    • பணமா? பாதுகாப்பா? என்ற கேள்வி வந்தால் பாதுகாப்பு தான் முக்கியம் என்பேன்.

    இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றம் காரணமாக நடப்பு ஐபிஎல் சீசனின் ஆட்டங்கள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்த சீசனில் எஞ்சியுள்ள ஆட்டங்கள் வரும் நாளை முதல் மீண்டும் தொடங்குகிறது.

    இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதற்கு ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாட்டு வீரர்கள் இந்தியா செல்லக்கூடாது என ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரரும் மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் வீரருமான மிட்செல் ஜான்சன் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    என்னிடம் மீண்டும் இந்தியாவுக்குச் சென்று ஐபிஎல் தொடரில் விளையாட வேண்டும் என்று சொன்னால், நான் நிச்சயமாக 'முடியாது' என்று சொல்லி இருப்பேன். அது மிகவும் எளிதான முடிவாக இருந்திருக்கும். வாழ்க்கையும் பாதுகாப்பும் மிகவும் முக்கியமானவை. நமது சம்பளம் அல்ல. இது தனிப்பட்ட முடிவு. யாரையும் கட்டாயப்படுத்தியோ, அழுத்தத்தை உணர வைத்தோ மீண்டும் போய் விளையாட வேண்டும் எனச் சொல்ல முடியாது.

    பணமா? பாதுகாப்பா? என்ற கேள்வி வந்தால் பாதுகாப்பு தான் முக்கியம் என்பேன். இது எனது தனிப்பட்ட முடிவு. எந்தவொரு வீரரும் ஐபிஎல் அல்லது பாகிஸ்தான் சூப்பர் லீகில் விளையாடியாக வேண்டுமென்ற அழுத்தத்தை எதிர்கொள்ள கூடாது.

    மேலும், ஐபிஎல் சீசனின் இறுதிப் போட்டி ஜுன் 3-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. அதற்கடுத்த ஒரு வார காலத்தில் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நடைபெறுகிறது. இதற்காக வீரர்கள் தயாராக வேண்டி உள்ளது. அதையும் நாம் கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

    என ஜான்சன் கூறியுள்ளார்.

    • மிட்செல் ஸ்டார்க் மீண்டும் ஐ.பி.எல். தொடருக்கு திரும்ப மாட்டார் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    • நடப்பு ஐ.பி.எல். 12 போட்டிகளில் விளையாடி 14 விக்கெட்டுகள் வீழ்த்தி இருந்தார்.

    சிட்னி:

    இந்தியா- பாகிஸ்தான் சண்டையால் பாதியில் நிறுத்தப்பட்ட 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நாளை (சனிக்கிழமை) மீண்டும் தொடங்குகிறது. இதில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் மோதுகின்றன.

    போர் பதற்றத்தால் அவசரமாக தாயகம் திரும்பிய வெளிநாட்டு வீரர்கள் மீண்டும் இந்தியா வரத் தொடங்கியுள்ளனர். இருப்பினும் டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளரான மிட்செல் ஸ்டார்க் மீண்டும் ஐ.பி.எல். தொடருக்கு திரும்ப மாட்டார் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து டெல்லி அணி நிர்வாகத்திற்கு அவர் தெரிவித்து விட்டதாக கூறப்பட்டுள்ளது.

    பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற குறைந்தபட்சம் ஒரு வெற்றி பெற்றாக வேண்டும் என்ற சூழலில் முன்னணி வீரரான இவரது விலகல் டெல்லி அணிக்கு பலத்த பின்னடைவாக கருதப்படுகிறது.

    நடப்பு ஐ.பி.எல். 12 போட்டிகளில் விளையாடி 14 விக்கெட்டுகள் வீழ்த்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 2022 மெகா ஏலத்தில் எடுப்பதாக அணி நிர்வாகம் கூறியது.
    • ஆனால் ஏலத்தில் எடுக்காமல் காயத்திற்கான மாற்று வீரராக தேர்வு செய்தது.

    ஐபிஎல் 2025 சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் அணி சிறப்பாக விளையாடி வருகிறது. இந்த அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான ரஜத் படிதார் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இவரது தலைமையில் ஆர்சிபி இதுவரை 11 போட்டிகளில் விளையாடி 8-ல் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் 2ஆவது இடத்தில் உள்ளது. இன்னும் ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் பிளேஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை உறுதி செய்து விடும்.

    இந்த சீசனில் ரஜத் படிதார் 11 போட்டிகளில் 239 ரன்கள் அடித்துள்ளார். ஆர்சிபி அணி 2022 ஏலத்தின்போது தன்னை ஏலம் எடுப்பதாக உறுதி அளித்தது. ஆனால் ஏலம் எடுக்கவில்லை. காயம் காரணமாக ஒருவர் விலகியதால் மாற்று வீரருக்கு அழைப்பு விடுத்தது. இதனால் வருத்தம் அடைந்தேன். கோபமும் அடைந்தேன் என ரஜத் படிதார் தெரிவித்தார்.

    இது தொடர்பாக ரஜத் படிதார் கூறியதாவது:-

    ஐபிஎல் 2022 ஏலத்தின்போது, ஏலத்தில் உங்களை எடுக்க இருக்கிறோம். தயாராக இருக்கவும் என அணி நிர்வாகத்திடம் இருந்து தகவல் வந்தது. இதனால் ஆர்சிபி அணிக்காக விளையாடும் மற்றொரு வாய்ப்பை பெற இருக்கிறோம் என்ற சிறிய நம்பிக்கை எனக்குள் இருந்தது. ஆனால் மெகா ஏலத்தில் என்னை ஏலம் எடுக்கவில்லை. இதனால் சற்று வருத்தம் அடைந்தேன்.

    ஏலத்தில் எடுக்காததால், என்னுடைய உள்ளூர் போட்டிகளில் விளையாட ஆரம்பித்தேன். பின்னர், காயம் காரணமாக லவ்னித் சிசோடியா அணியில் இருந்து விலகியுள்ளார். இதனால் மாற்று வீரரான உங்களை தேர்வு செய்ய இருக்கிறோம் என என்கு அழைப்பு வந்தது. நான் வெளிப்படையாக கூற வேண்டுமென்றால், மாற்று வீரராக செல்ல விரும்பவில்லை. ஏனென்றால், எனக்கு வாய்ப்பு கிடைக்காது என்பது தெரியும். மேலும் வெளியில் உட்கார விருப்பம் இல்லை.

    விராட் கோலி போன்ற நட்சத்திர வீரர் அணியில் இருக்கும்போது ஆர்சிபி நிர்வாகம் கேப்டன் பதவியை தந்தபோது எனக்கு நெருக்கடி ஏற்பட்டது. ஆனால் விராட் கோலி எனக்கு நம்பிக்கை அளித்தார்.

    இவ்வாறு ரஜத் படிதார் தெரிவித்துள்ளார்.

    • சின்னசாமி ஸ்டேடியத்தில் நாளை பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகிறது.
    • போர் பதற்றத்தால் தாயகம் திரும்பிய வெளிநாட்டு வீரர்கள் மீண்டும் இந்தியா வரத் தொடங்கியுள்ளனர்.

    இந்தியா- பாகிஸ்தான் மோதலால் பாதியில் நிறுத்தப்பட்ட 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நாளை (சனிக்கிழமை) மீண்டும் தொடங்குகிறது. பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நாளை இரவு 7.30 மணிக்கு நடக்கும் 58-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்- நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் சந்திக்கின்றன.

    இதற்கிடையே போர் பதற்றத்தால் அவசரமாக தாயகம் திரும்பிய வெளிநாட்டு வீரர்கள் மீண்டும் இந்தியா வரத் தொடங்கியுள்ளனர். ஆஸ்திரேலியாவின் டிம் டேவிட், வெஸ்ட் இண்டீசின் ரொமாரியோ ஷெப்பர்டு, இங்கிலாந்தின் ஜேக்கப் பெத்தேல், பில் சால்ட், லியாம் லிவிங்ஸ்டன், தென்ஆப்பிரிக்காவின் இங்கிடி உள்ளிட்டோர் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சுடன் இணைந்தனர்.

    இந்நிலையில் நேற்று பெங்களூருவில் கனமழை பெய்தது. இதனால் சின்னசாமி மைதானத்தில் மழை நீர் தேங்கி நின்றது. இதனை பார்த்த ஆர்சிபி வீரர் டிம் டேவிட் மைதானத்தில் இறங்கி மழையில் ஆனந்த குழியல் போட்டார். மேலும் குழந்தையாக மாறிய அவர் மைதானத்தில் விரிந்திருந்த தார்பாயில் சறுக்கி விளையாடினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்ளில் வைரலாகி வருகிறது.

    • மயங்க் யாதவுக்கு பதிலாக நியூசிலாந்தின் ரூர்கி லக்னோ அணியில் இடம் பெற்றுள்ளார்.
    • புதிய அட்டவணைப்படி இறுதிப்போட்டி மே 25-க்கு பதிலாக ஜூன் 3-ம் தேதி நடைபெறுகிறது.

    புதுடெல்லி:

    இந்தியா, பாகிஸ்தான் போர் பதற்றத்தால் பாதியில் நிறுத்தப்பட்ட 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நாளை மறுதினம் மீண்டும் தொடங்குகிறது.

    மாற்றப்பட்ட புதிய அட்டவணைப்படி இறுதிப்போட்டி மே 25-க்கு பதிலாக ஜூன் 3-ம் தேதி நடைபெறுகிறது.

    இதற்கிடையே, இந்த மாத இறுதியில் இருந்து மற்ற சர்வதேச கிரிக்கெட் தொடர்கள் தொடங்குகின்றன. தேசிய அணிக்கு முக்கியம் கொடுக்க வேண்டியுள்ளதால் பெரும்பாலான வெளிநாட்டு வீரர்கள் ஐ.பி.எல். தொடரில் முழுமையாக பங்கேற்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் மயங்க் யாதவ் காயம் காரணமாக நடப்பு ஐ.பி.எல். தொடரில் இருந்து விலகி உள்ளார்.

    அவருக்கு பதிலாக நியூசிலாந்து பந்துவீச்சாளர் வில் ரூர்கி லக்னோ அணியில் இடம் பெற்றுள்ளார்.

    ஐ.பி.எல். தொடரில் இன்னும் 13 லீக் ஆட்டம் உள்பட 17 ஆட்டங்கள் எஞ்சியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    • நாடு திரும்பிய வெளிநாட்டு வீரர்கள் தற்போது அவர்களது அணியில் இணைந்து வருகின்றனர்.
    • பில் சால்ட், லிவிங்ஸ்டன், ஜேக்கப் பெத்தேல் , டிம் டேவிட் , ஷெப்பர்ட் ஆகியோர் பெங்களூரு அணியில் இணைந்துள்ளனர்.

    பெங்களூரு:

    இந்தியா- பாகிஸ்தான் சண்டையால் பாதியில் நிறுத்தப்பட்ட 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் நாளை மறுதினம் (சனிக்கிழமை) மீண்டும் தொடங்குகிறது. அன்றைய தினம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் மோதுகின்றன.

    போர் பதற்றத்தால் நாட்டில் நிலவிய அசாதாரணமான சூழலால் பதற்றத்திற்கு உள்ளான வெளிநாட்டு வீரர்கள் உடனடியாக தாயகம் திரும்பினர். நாடு திரும்பிய வெளிநாட்டு வீரர்கள் தற்போது அவர்களது அணியில் இணைந்து வருகின்றனர். அந்த வகையில் பெங்களூரு அணியில் முக்கிய வீரர்களான பில் சால்ட், லியாம் லிவிங்ஸ்டன், ஜேக்கப் பெத்தேல் , டிம் டேவிட் , ரோமரியோ ஷெப்பர்ட் ஆகியோர் பெங்களூரு அணியில் இணைந்துள்ளனர்.

    இந்நிலையில் ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி ஆர்சிபி அணியில் இணைந்துள்ளார். அவர் பயிற்சிக்கு செல்லும் வீடியோ வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    ×