என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • சிஎஸ்கே-வுக்கு எதிராக 13 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகள் சாய்த்தார்.
    • பேட்டிங்கில் 18 பந்தில் 44 ரன்கள் விளாசினார்.

    ஐபிஎல் 2025 கிரிக்கெட்டில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற 25ஆவது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- கொல்கத்தா நைட் டைர்ஸ் அணிகள் மோதின. முதலில் விளையாடிய சிஎஸ்கே 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 103 ரன்கள் மட்டுமே அடித்தது. பின்னர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 10.1 ஓவரில் 2 விக்கெட்டை மட்டுமே இழந்து 107 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

    இந்த போட்டியில் 4 ஓவரில் 13 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்திய சுனில் நரைன், பேட்டிங்கில் 18 பந்தில் 44 ரன்கள் விளாசினார். இதனால் ஆட்ட நாயகன் விருதை வென்றார். இது அவரின் 16ஆவது ஆட்ட நாயகன் விருதாகும். இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை ஆட்ட நாயகன் விருது வென்ற வீரர்கள் வரிசையில் 6ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

    ஏபிடி வில்லியர்ஸ் 25 முறை ஆட்டநாயகன் விருதை வென்று முதல் இடத்தில் உள்ளார். கிறிஸ் கெய்ல் 22 முறை வென்றுள்ளார். ரோகித் சர்மா 19 முறையும், விராட் கோலி மற்றும் டேவிட் வார்னர் 18 முறையும், எம்.எஸ். தோனி 17 முறையும் ஆட்ட நாயகன் விருது வென்றுள்ளனர்.

    சுனில் நரைன், ஜடேஜா, ஷேன் வாட்சன், யுசுப் பதான் ஆகியோர் 16 முறை ஆட்ட நாயகன் விருதை வென்றுள்ளனர்.

    கே.எல். ராகுல், ரசல் 15 முறையும், ரெய்ானா, பொல்லார்டு 14 முறையும், பட்லர், கம்பீர், ரகானே 13 முறையும் ஆட்ட நாயகன் விருதை வென்றுள்ளனர்.

    • 200 ரன்களுக்கு மேல் விட்டுக்கொடுத்தால் நம்மால் சேஸிங் செய்ய முடியவில்லையே என நிருபர் கேள்வி.
    • பாபர் அசாம், ரிஸ்வான் பதில் கூறாமல் அமைதியாக இருந்த நிலையில், ஷாஹீன் அப்ரிடி பதில் அளித்தார்.

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, சொந்த நாட்டில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் மோசமாக விளையாடியது. அதைத்தொடர்ந்து நியூசிலாந்து சென்று டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடியது. 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 1-4 என இழந்தது. ஒருநாள் தொடரை 0-3 என இழந்தது.

    இந்த நிலையில் ஆறு அணிகள் விளையாடும் பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடர் நேற்று தொடங்கியது. இந்த போட்டி தொடங்குவதற்கு முன்னதாக ஆறு அணி கேப்டன்களும் ஒன்றாக பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

    அப்போது டி20 கிரக்கெட்டில் பாகிஸ்தான் தேசிய அணிக்கு 200 ரன்களை சேஸிங் செய்யக்கூடிய திறன் இல்லையே?. ஒட்டுமொத்த நாட்டின் மனஉறுதியை சீர்குலைத்துள்ளது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. 200 ரன்களுக்கு மேலான இலக்கை நோக்கி செல்லும்போது நமக்கு எங்கே குறைபாடு உள்ளது. மனநிலை அல்லது நோக்கத்தில் குறைபாடு உள்ளதா? என நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

    இதற்கு பாபர் அசாம் பதில் அளிக்காமல் அமைதியாக இருந்தார். ரிஸ்வானை பார்த்து நீங்கள் பதில் சொல்லுங்கள் என சைகை காட்டினார். அவரும் மவுனம் காத்தார். இதனால் இக்கட்டான நிலை ஏற்பட்டது.

    உடனே, வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அப்ரிடி "இது நம்முடைய அணி, இது பாகிஸ்தான் அணி. நீங்கள் 200 ரன் சேஸிங் பற்றி பேசிக் கொண்டிருக்கிறீர்கள். உண்மையிலேயே, இது பேட்ஸ்மேன்களை மட்டும் பற்றியது கிடையாது. பந்து வீச்சாளர்களின் பொறுப்பும் உள்ளது. அவர்கள் 200 ரன்கள் விட்டுக்கொடுக்கக் கூடாது.

    ஆடுகளங்கள் பேட்டிங்கிற்கு நன்றாகத்தான் இருக்கிறது. 200 அல்லது அதற்கு மேல் விட்டுக்கொடுத்தாலும், அதை சேஸிங் செய்ய நம்மால் முடிந்ததை செய்ய வேண்டும். நாங்க ஒரு அணி. நாங்க ஒரு குடும்பம். சமீப காலமாக நம்மோட ஆட்டம் நன்றாக இல்லை என்றால், பாகிஸ்தான் கிரிக்கெட்டை மீண்டும் உச்சத்துக்கு கொண்டு வருவது நம்ம வேலை" என்றார்.

    • சிஎஸ்கே 4 போட்டிகளில் 3-ல் தோல்வியடைந்துள்ளது.
    • கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 3 போட்டிகளில் இரண்டில் தோல்வியடைந்துள்ளது.

    ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் லீக் தொடர் கடந்த மாதம் 22ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதல் 10 அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. ஒவ்வொரு அணிக்கும் சொந்த மைதானங்கள் உள்ளன. சிஎஸ்கே அணிக்கு சேப்பாக்கம், ஆர்சிபி-க்கு பெங்களூரு சின்னசாமி, கொல்கத்தாவுக்கு ஈடன் கார்டன், மும்பை இந்தியன்ஸ்க்கு வான்கடே சொந்த மைதானம் ஆகும். இதேபோல் மற்ற அணிகளுக்கும் சொந்த மைதானம் உள்ளது.

    ஒவ்வொரு அணியும் 14 லீக் போட்டிகளில் விளையாட வேண்டும். இதில் ஏழு போட்டிகள் சொந்த மைதானத்திலும், ஏழு போட்டிகள் வேறு மைதானத்திலும் நடைபெறும்.

    சொந்த மைதானங்கள் அந்தந்த அணிகளுக்கு சாதகமாக இருக்கும். ஆனால் இந்த சீசனில் சொந்த மைதானத்தில் அணிகள் வெற்றி பெற திணறி வருகின்றன.

    இந்த தடுமாற்றத்திற்கு தங்களுக்கு ஏற்றவகையில் ஆடுகளம் தயாரிக்கப்படவில்லை என கொல்கத்தா அணி கேப்டன் ரகானே, ஆர்சிபி அணி பயிற்சியாளர் தினேஷ் கார்த்திக் வெளிப்படையாக தங்களது விரக்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.

    1. சென்னை சூப்பர் கிங்ஸ்

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்போது வரை சென்னை சேப்பாக்கத்தில் 4 போட்டிகளில் விளையாடியுள்ளது. மும்பை இந்தியன்ஸ்க்கு எதிரான முதல் போட்டியில் மட்டும் 156 இலக்கை எட்டி வெற்றி பெற்றது. அதன்பின் ஆர்சிபிக்கு எதிராக 50 ரன்னிலும், டெல்லிக்கு எதிராக 25 ரன்னிலும், நேற்று கொல்கத்தாவுக்கு எதிராக 8 விக்கெட் வித்தியாசத்திலும் தோல்வியடைந்துள்ளது.

    2. ஆர்சிபி

    ஆர்சிபி அணி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இதுவரை இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ளது. இரண்டிலும் தோல்வியடைந்துள்ளது. குஜராத் அணிக்கெதிராக 8 விக்கெட் வித்தியாசத்திலும், டெல்லிக்கு எதிராக 6 விக்கெட் வித்தியாசத்திலும் தோல்வியடைந்துள்ளது.

    3. கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

    கொல்கத்தா அணி ஈடன் கார்டனில் 3 போட்டிகளில் விளையாடியுள்ளது. ஆர்சிபி-க்கு எதிராக 7 விக்கெட் வித்தியாசத்திலும், லக்னோவிற்கு எதிராக 4 ரன்னிலும் தோல்வியடைந்துள்ளது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிராக 80 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    4. குஜராத் டைட்டன்ஸ்

    குஜராத் டைட்டன்ஸ் தனது சொந்த மைதானமான நரேந்திர மோடி மைதானத்தில் 3 போட்டிகளில் விளையாடி 2-ல் வெற்றி பெற்றுள்ளது.

    5. சன்ரைசர்ஸ் ஐதராபாத்

    சன்ரைசர்ஸ் ஐதராபாத் ராஜஸ்தானுக்கு எதிராக 44 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதன்பின் லக்னோ, குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு எதிராக தோல்வியை சந்தித்துள்ளது.

    6. ராஜஸ்தான் ராயல்ஸ்

    ராஜஸ்தான் ராயல்ஸ் ஜெய்ப்பூர் மற்றும் கவுகாத்தி ஆகிய இரண்டு மைதானங்களை சொந்த மைதானமாக கொண்டுள்ளது. கவுகாத்தியில் இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ளது. ஒன்றில் தோல்வியடைந்துள்ளது. ஒன்றில் வெற்றி பெற்றுள்ளது.

    7. மும்பை இந்தியன்ஸ்

    மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் ஆர்சிபிக்கு எதிராக தோல்வியடைந்தது. கொல்கத்தாவுக்கு எதிராக வெற்றி பெற்றது.

    8 டெல்லி கேப்பிட்டல்ஸ்

    டெல்லி கேப்பிட்டல்ஸ் டெல்லி மற்றும் விசாகப்பட்டினம் ஆகியவற்றை சொந்த மைதானமாக கொண்டுள்ளது. விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இரண்டு போட்டிகளிலும் டெல்லி வெற்றி பெற்றுள்ளது.

    9. பஞ்சாப் கிங்ஸ்

    சண்டிகார், தரம்சாலா ஆகிய இரண்டு மைதானங்களை சொந்த மைதானமாக கொண்டுள்ளது. ராஜஸ்தானுக்கு எதிராக 50 ரன்னில் தோல்வியடைந்துள்ளது. சிஎஸ்கே-வுக்கு எதிராக 18 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

    10. லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்

    பஞ்சாப் அணிக்கெதிராக 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராக 12 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

    • லக்னோ அணியில் மிட்செல் மார்ஷ் இடம் பெறவில்லை.
    • புள்ளிகள் பட்டியலில் லக்னோ 6ஆவது இடத்திலும், குஜராத் முதல் இடத்திலும் உள்ளது.

    ஐபிஎல் 2025 கிரிக்கெட்டில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன. மதியம் 3.30 மணிக்கு லக்னோவில் நடைபெறும் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்- குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    இந்த போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டதில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி கேப்டன் ரிஷப் பண்ட் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். லக்னோ அணியில் மிட்செல் மார்ஷ் இடம்பெறவில்லை.

    குஜராத் டைட்டன்ஸ்:-

    சாய் சுதர்சன், சுப்மன் கில், பட்லர், வாஷிங்டன் சுந்தர், ரூதர்போர்டு, ஷாருக் கான், ராகுல் டெவாட்டியா, அர்ஷத் கான், ரஷித் கான், சாய் கிஷோர், முகமது சிராஜ்.

    லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்:-

    நிக்கோலஸ் பூரன், மார்கிராம், ரிஷப் பண்ட், ஹிம்மத் சிங், டேவிட் மில்லர், திக்வேஷ் ரதி, அப்துல் சமாத், ஷர்துல் தாகூர், ஆகாஷ் தீப், ஆவேஷ் கான், ரவி பிஷ்னோய்

    • ரபாடா ஏற்கனவே சொந்த காரணத்திற்கான அவசரமாக நாடு திரும்பியுள்ளார்.
    • தற்போது காயம் காரணமாக கிளென் பிலிப்ஸ் அணியில் இருந்து விலகியுள்ளார்.

    குஜராத் டைட்டன்ஸ் அணியில் ரபாடா, கிளென் பிலிப்ஸ், ரூதர்போர்டு, பட்லர், கரிம் ஜனத், கோயட்சீ, ரஷித் கான் ஆகிய வெளிநாட்டு வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.

    முதல் இரண்டு போட்டிகளில் விளையாடிய ரபாடா, சொந்த காரணத்திற்கான உடனடியாக தென்ஆப்பிரிக்கா புறப்பட்டார். அவர் எப்போது அணிக்கு திரும்புவார் எனக் கூறப்படவில்லை.

    இந்த நிலையில் நியூசிலாந்தை சேர்ந்த கிளென் பிலிப்ஸ்-க்கு காயம் ஏற்பட்டுள்ளதால் அணியில் இருந்து விலகியுள்ளது. இந்த தொடர் முழுவதும் விளையாடமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இரண்டு முன்னணி வீரர்கள் விலகியது அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. ரபாடா ஆடும் லெவனில் இருந்தபோதிலும், கிளென் பிலிப்ஸ் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை.

    குஜராத் அணி இதுவரை 5 போட்டிகளில் விளையாடு நான்கில் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் முதலிடம் வகிக்கிறது.

    கடந்த 6ஆம் தேதி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிராக மாற்று வீரராக களம் இறங்கி பீல்டிங் செய்யும்போது காயம் ஏற்பட்டது. இதனால் ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார்.

    • சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் நேற்று மோதின
    • கொல்கத்தா அணி 10.1 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 107 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

    நடப்பு ஐபிஎல் தொடரின் 25-வது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    முதலில் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 103 ரன்கள் எடுத்தது. இதனை தொடர்ந்து ஆடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 10.1 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 107 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

    இப்போட்டியில் வெற்றியை குட் பேட் அக்லி பட ஸ்டைலில் கொண்டாடி கே.கே.ஆர். அணி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • ஐபிஎல் சீசனில் தொடர்ந்து 5 தோல்விகளை முதல் முறையாக சி எஸ் கே அணி பெற்றுள்ளது
    • சி.எஸ்.கே. அணியின் ப்ளே ஆப் வாய்ப்பு கடினமாகியுள்ளது.

    நடப்பு ஐபிஎல் தொடரின் 25-வது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    முதலில் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 103 ரன்கள் எடுத்தது. இதனை தொடர்ந்து ஆடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 10.1 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 107 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

    இந்நிலையில், ஐபிஎல் சீசனில் தொடர்ந்து 5 தோல்விகளை முதல் முறையாக சி எஸ் கே அணி பெற்று மோசமான சாதனை படைத்துள்ளது.

    இந்நிலையில், தொடர் தோல்விகள் குறித்து பேசிய சி.எஸ்.கே. அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹசி "நடப்பு சீசனில் நாங்கள் இன்னமும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்ற உண்மையை ஒப்புக்கொள்கிறோம். எனினும் ஒரு வெற்றி எங்களது மனநிலையை முற்றிலும் மாற்றிவிடும் என நம்புகிறேன் அணியில் உள்ள இளம் வீரர்களுக்கு விரைவில் வாய்ப்புகள் வழங்கப்படும். ப்ளே ஆப் சுற்றை எட்டிப் பிடிப்பதற்கு நீண்ட தூரம் செல்ல வேண்டும். அதை செய்ய முடியும் என நம்புகிறேன்" என்று தெரிவித்தார். 

    • சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் நேற்று மோதின.
    • ஐபிஎல் சீசனில் தொடர்ந்து 5 தோல்விகளை முதல் முறையாக சி எஸ் கே அணி பெற்றுள்ளது.

    நடப்பு ஐபிஎல் தொடரின் 25-வது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    முதலில் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 103 ரன்கள் எடுத்தது. இதனை தொடர்ந்து ஆடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 10.1 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 107 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

    இந்நிலையில், ஐபிஎல் சீசனில் தொடர்ந்து 5 தோல்விகளை முதல் முறையாக சி எஸ் கே அணி பெற்று மோசமான சாதனை படைத்துள்ளது.

    தோல்விக்கு பிறகு சி.எஸ்.கே. அணி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் "இன்னும் நீண்ட தூரம் போக வேண்டியுள்ளது" என்று புகைப்படம் வெளியிட்டு தெரிவித்துள்ளது.

    அந்த பதிவின் கீழே கமெண்ட் செய்துள்ள கே.கே.ஆர். அணி "சே.எஸ்.கே. ஒரு சாம்பியன் அணி. நீங்கள் வலுவாக மீண்டு வருவீர்கள்" என்று ஆறுதல் கூறியுள்ளது.

    • சில இரவுகள் உங்களுக்கு சாதகமாக இருக்காது, இதுவும் அப்படித்தான்.
    • பார்ட்னர்ஷிப் சரியாக அமையவில்லை. தொடக்க வீரர்கள் தரமானவா்கள்.

    சென்னை:

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தோல்வி தொடர்கிறது. சேப்பாக்கம் மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்சிடம் 103 ரன்னில் சுருண்டு 8 விக்கெட் வித்தியாசத்தில் மிகவும் மோசமாக தோற்றது.

    இந்த மோசமான தோல்வியால் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி மிகுந்த ஏமாற்றம் அடைந்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது;-

    சில இரவுகள் உங்களுக்கு சாதகமாக இருக்காது, இதுவும் அப்படித்தான். நாம் அடிப்படைகளுக்குத் திரும்ப வேண்டும், நாம் எங்கு தடுமாறுகிறோம் என்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும், சவாலை நேரடியாக ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்த ஆட்டத்தில் போதுமான ரன்னை எடுக்கவில்லை.

    பார்ட்னர்ஷிப் சரியாக அமையவில்லை. தொடக்க வீரர்கள் தரமானவா்கள். அவர்கள் சோர்வடைய தேவையில்லை. தொடக்கத்திலேயே விக்கெட் சரிவதால் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களால் அதை நிவர்த்தி செய்ய முடியவில்லை. இந்த தோல்வி எனக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. மேலும் விரக்தி அடையாமல் இருப்பது முக்கியம். போட்டியில் நாங்கள் செய்த தவறுகளை ஒப்புக்கொள்கிறேன்.

    இவ்வாறு தோனி கூறி உள்ளார்.

    • 10-வது பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 லீக் தொடர் நேற்று தொடங்கியது
    • தீ விபத்து தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்தியா ஐபிஎல் டி20 லீக் தொடரை நடத்துவது போல் பாகிஸ்தானும் பிஎஸ்எல் (பாகிஸ்தான் சூப்பர் லீக்) என்ற பெயரில் டி20 தொடரை நடத்துகிறது.

    இந்த வருடம் 10-வது பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 லீக் தொடர் நேற்று தொடங்கியது. இந்நிலையில், இஸ்லாமாபாத்தில் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் விளையாடும் வீரர்கள் தங்கியிருந்த ஓட்டலில் தீ விபத்து ஏற்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால், கிரிக்கெட் வீரர்கள் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

    • குஜராத் அணி தனது தொடக்க ஆட்டத்தில் பஞ்சாப்பிடம் தோல்வியை தழுவியது.
    • மும்பை, பெங்களூரு, ஐதராபாத், ராஜஸ்தான் அணிகளை அடுத்தடுத்து துவம்சம் செய்து புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. இதில் மாலை 3.30 மணிக்கு லக்னோவில் அரங்கேறும் 26-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி, முன்னாள் சாம்பியனான குஜராத் டைட்டன்சை எதிர்கொள்கிறது.

    லக்னோ அணி இதுவரை 5 ஆட்டங்களில் ஆடி 3-ல் வெற்றி (ஐதராபாத், மும்பை, கொல்கத்தாவுக்கு எதிராக), 2-ல் தோல்வி (டெல்லி, பஞ்சாப்புக்கு எதிராக) கண்டுள்ளது. முந்தைய கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் லக்னோ அணி 238 ரன்கள் குவித்து மலைக்க வைத்தது. அந்த அணியில் நிகோலஸ் பூரன் (3 அரைசதத்துடன் 288 ரன்), மிட்செல் மார்ஷ் (4 அரைசதம் உள்பட 265 ரன்) சூப்பர் பார்மில் உள்ளனர். ரூ.27 கோடிக்கு வாங்கப்பட்ட கேப்டன் ரிஷப் பண்ட் தொடர்ந்து ஏமாற்றம் அளித்து வருகிறார். 4 ஆட்டங்களில் ஆடி 19 ரன் மட்டுமே எடுத்து இருக்கும் அவர் தனது திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். பந்து வீச்சில் ஷர்துல் தாக்குர், ஆகாஷ் தீப், திக்வேஷ் ரதி, ரவி பிஷ்னோய் பலம் சேர்க்கிறார்கள்.

    குஜராத் அணி தனது தொடக்க ஆட்டத்தில் பஞ்சாப்பிடம் தோல்வியை தழுவியது. அதன் பிறகு மும்பை, பெங்களூரு, ஐதராபாத், ராஜஸ்தான் அணிகளை அடுத்தடுத்து துவம்சம் செய்து புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

    பேட்டிங்கில் சாய் சுதர்சன் (3 அரைசதத்துடன் 273 ரன்), ஜோஸ் பட்லர் (202), கேப்டன் சுப்மன் கில், ரூதர்போர்டு நம்பிக்கை அளிக்கின்றனர். பந்து வீச்சில் முகமது சிராஜ், சாய் கிஷோர், பிரசித் கிருஷ்ணா சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். கடந்த ஆட்டத்தில் 2 விக்கெட் வீழ்த்தி சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் பார்முக்கு திரும்பி இருப்பது புதிய தெம்பை கொடுக்கும்.

    மொத்தத்தில் இரு அணிகளில் யாருடைய வெற்றிப்பயணத்துக்கு முட்டுக்கட்டை விழும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இவ்விரு அணிகளும் இதுவரை 5 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இதில் 4-ல் குஜராத்தும், ஒன்றில் லக்னோவும் வெற்றி பெற்றுள்ளன.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    லக்னோ: மார்க்ரம், மிட்செல் மார்ஷ், நிகோலஸ் பூரன், அப்துல் சமத், டேவிட் மில்லர், ரிஷப் பண்ட் (கேப்டன்), ஆயுஷ் பதோனி, ஷர்துல் தாக்குர், ஆகாஷ் தீப், ஆவேஷ் கான், திக்வேஷ் ரதி, ரவி பிஷ்னோய்,

    குஜராத்: சாய் சுதர்சன், சுப்மன் கில் (கேப்டன்), ஜோஸ் பட்லர், ரூதர்போர்டு, ராகுல் திவேதியா, ஷாருக்கான், ரஷித் கான், அர்ஷத் கான், சாய் கிஷோர், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, குல்வந்த் கெஜ்ரோலியா.



    ஐதராபாத் -பஞ்சாப் மோதல்

    இதைத்தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் நடக்கும் மற்றொரு லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான ஐதராபாத் சன் ரைசர்ஸ், பஞ்சாப் கிங்சுடன் மல்லுக்கட்டுகிறது.

    ஐதராபாத் அணி தனது தொடக்க ஆட்டத்தில் ராஜஸ்தானுக்கு எதிராக 286 ரன்கள் குவித்ததுடன் 44 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதன் பிறகு அவர்களது பலமான அதிரடி ஜாலமே ஆபத்தாக மாறி விட்டது அதிரடியை தொடர முயற்சித்து லக்னோ, டெல்லி, கொல்கத்தா, குஜராத் அணிகளிடம் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்து பரிதாபமான நிலையில் இருக்கிறது.

    அதிரடி ஆட்டக்காரர்கள் அதிகம் நிறைந்த ஐதராபாத் அணியில் முக்கியமான தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் முதல் 2 ஆட்டங்களுக்கு பிறகு நிலைத்து நிற்கவில்லை. மற்றொரு தொடக்க வீரர் அபிஷேக் ஷர்மா தொடர்ந்து சொதப்புகிறார். முதல் ஆட்டத்தில் சதம் அடித்து கலக்கிய இஷான் கிஷன் அதன் பிறகு வந்த வேகத்தில் நடையை கட்டுகிறார். நிதிஷ்குமார் ரெட்டி, ஹென்ரிச் கிளாசெனும் சோபிக்கவில்லை. மேலும் அந்த அணியின் பந்து வீச்சும் பாராட்டும் வகையில் இல்லை. முகமது ஷமி, கேப்டன் கம்மின்ஸ், ஹர்ஷல் பட்டேல் ஆகியோர் இருந்தும் பந்து வீச்சில் பெரிய அளவில் தாக்கம் இல்லாதது பின்னடைவாக உள்ளது.

    ஐதராபாத் அணி சரிவில் இருந்து மீண்டு எழுச்சி பெற வேண்டும் என்றால் அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் மட்டுமின்றி பந்து வீச்சாளர்களும் ஒருசேர ஜொலிக்க வேண்டியது அவசியமானதாகும்.

    பஞ்சாப் அணி 4 ஆட்டங்களில் ஆடி 3 வெற்றி (குஜராத், லக்னோ, சென்னைக்கு எதிராக), ஒரு தோல்வி (ராஜஸ்தானிடம்) என 6 புள்ளிகளுடன் இருக்கிறது. பஞ்சாப் அணியில் பேட்டிங்கில் கடந்த ஆட்டத்தில் 39 பந்தில் சதம் விளாசிய பிரியான்ஷ் ஆர்யா, கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர், நேஹல் வதேரா, ஷசாங் சிங்கும், பந்து வீச்சில் அர்ஷ்தீப் சிங், லோக்கி பெர்குசன், யுஸ்வேந்திர சாஹல், மார்கோ யான்செனும் வலுவூட்டுகிறார்கள்.

    சமபலம் வாய்ந்த அணிகள் களம் காணுவதால் அனல் பறக்கும் என்று நம்பலாம். இவ்விரு அணிகளும் இதுவரை 23 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 16-ல் ஐதராபாத்தும், 7-ல் பஞ்சாப்பும் வெற்றி கண்டுள்ளன.

    போட்டிகளை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    • சுனில் நரைன் வீசிய 16வது ஓவரின் மூன்றாவது பந்தில் தோனி எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.
    • பந்து பேட்டை கடக்கும்போது சிறிய அல்ட்ராஎட்ஜ் ஸ்பைக் வந்தது.

    நடப்பு ஐபிஎல் தொடரின் 25-வது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    முதலில் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 103 ரன்கள் எடுத்தது.

    இதனை தொடர்ந்து ஆடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 10.1 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 107 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

    இப்போட்டியில் சி.எஸ்.கே. கேப்டன் எம்.எஸ். தோனி எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டமிழந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    சுனில் நரைன் வீசிய 16வது ஓவரின் மூன்றாவது பந்தில் தோனி எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். நடுவரின் முடிவை தோனி மேல்முறையீடு செய்தார். அப்போது பந்து பேட்டை கடக்கும்போது சிறிய அல்ட்ராஎட்ஜ் ஸ்பைக் வந்தது. இதனை நீண்ட நேரம் பார்த்த மூன்றாவது நடுவர் இறுதியாக அவுட் கொடுத்தார்.

    தோனி ரன்களை குவிக்காமல் உடனடியாக ஆட்டமிழந்தது ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.

    ×