என் மலர்
ஐ.பி.எல்.(IPL)

தொடர் தோல்வி... சி.எஸ்.கே அணிக்கு இன்ஸ்டாகிராமில் ஆறுதல் கூறிய கே.கே.ஆர். அணி
- சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் நேற்று மோதின.
- ஐபிஎல் சீசனில் தொடர்ந்து 5 தோல்விகளை முதல் முறையாக சி எஸ் கே அணி பெற்றுள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடரின் 25-வது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
முதலில் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 103 ரன்கள் எடுத்தது. இதனை தொடர்ந்து ஆடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 10.1 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 107 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில், ஐபிஎல் சீசனில் தொடர்ந்து 5 தோல்விகளை முதல் முறையாக சி எஸ் கே அணி பெற்று மோசமான சாதனை படைத்துள்ளது.
தோல்விக்கு பிறகு சி.எஸ்.கே. அணி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் "இன்னும் நீண்ட தூரம் போக வேண்டியுள்ளது" என்று புகைப்படம் வெளியிட்டு தெரிவித்துள்ளது.
அந்த பதிவின் கீழே கமெண்ட் செய்துள்ள கே.கே.ஆர். அணி "சே.எஸ்.கே. ஒரு சாம்பியன் அணி. நீங்கள் வலுவாக மீண்டு வருவீர்கள்" என்று ஆறுதல் கூறியுள்ளது.






