என் மலர்tooltip icon

    ஐ.பி.எல்.(IPL)

    காயம் காரணமாக குஜராத் டைட்டன்ஸ் அணியில் இருந்து கிளென் பிலிப்ஸ் விலகல்
    X

    காயம் காரணமாக குஜராத் டைட்டன்ஸ் அணியில் இருந்து கிளென் பிலிப்ஸ் விலகல்

    • ரபாடா ஏற்கனவே சொந்த காரணத்திற்கான அவசரமாக நாடு திரும்பியுள்ளார்.
    • தற்போது காயம் காரணமாக கிளென் பிலிப்ஸ் அணியில் இருந்து விலகியுள்ளார்.

    குஜராத் டைட்டன்ஸ் அணியில் ரபாடா, கிளென் பிலிப்ஸ், ரூதர்போர்டு, பட்லர், கரிம் ஜனத், கோயட்சீ, ரஷித் கான் ஆகிய வெளிநாட்டு வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.

    முதல் இரண்டு போட்டிகளில் விளையாடிய ரபாடா, சொந்த காரணத்திற்கான உடனடியாக தென்ஆப்பிரிக்கா புறப்பட்டார். அவர் எப்போது அணிக்கு திரும்புவார் எனக் கூறப்படவில்லை.

    இந்த நிலையில் நியூசிலாந்தை சேர்ந்த கிளென் பிலிப்ஸ்-க்கு காயம் ஏற்பட்டுள்ளதால் அணியில் இருந்து விலகியுள்ளது. இந்த தொடர் முழுவதும் விளையாடமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இரண்டு முன்னணி வீரர்கள் விலகியது அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. ரபாடா ஆடும் லெவனில் இருந்தபோதிலும், கிளென் பிலிப்ஸ் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை.

    குஜராத் அணி இதுவரை 5 போட்டிகளில் விளையாடு நான்கில் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் முதலிடம் வகிக்கிறது.

    கடந்த 6ஆம் தேதி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிராக மாற்று வீரராக களம் இறங்கி பீல்டிங் செய்யும்போது காயம் ஏற்பட்டது. இதனால் ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார்.

    Next Story
    ×