என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • மார்ஷ் 4 ரன்னிலும், நிக்கோலஸ் பூரன் 11 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
    • மார்கிராம், ஆயுஷ் பதோனி அரைசதம் அடித்தனர்.

    ஐபிஎல் 2025 சீசனின் 36ஆவது ஆட்டம் ஜெய்ப்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ்- லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி கேப்டன் ரிஷப் பண்ட் பேட்டிங் தேர்வு செய்தார்.

    அதன்படி அந்த அணியின் மிட்செல் மார்ஷ், நிக்கோலஸ் பூரன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். மிட்செல் மார்ஷ் 3ஆவது ஓவரின் 2ஆவது பந்தில் ஆட்டமிழந்தார். 4 ரன்கள் எடுத்த நிலையில் ஆர்ச்சர் பந்தில் வெளியேறினார்.

    அடுத்து வந்த நிக்கோலஸ் பூரன் 11 ரன்னிலும், ரிஷப் பண்ட் 9 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 4ஆவது விக்கெட்டுக்கு மார்கிராம் உடன் ஆயஷ் பதோனி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பாக விளையாடியது. மார்கிராம் 45 பந்தில் 66 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஆயுஷ் பதோனி 34 பந்தில் 50 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

    கடைசி ஓவரை சந்தீப் சர்மா வீசினார். இந்த ஓவரில் அப்துல் சமத் 4 சிக்சர்கள் விளாச, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்துள்ளது. டேவிட் மில்லர் 7 ரன்னுடனும், அப்துல் சமாத் 10 பந்தில் 30 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    • குஜராத், டெல்லி, பஞ்சாப் அணிகள் தலா 5 வெற்றிகள் பெற்றுள்ளன.
    • ஆர்சிபி, லக்னோ தலா 4 வெற்றிகள் பெற்றுள்ளன.

    ஐபிஎல் 2025 சீசன் கடந்த மாதம் 22ஆம் தேதி தொடங்கியது. இன்று நடைபெற்ற முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. இதில் குஜராத் அணி வெற்றி பெற்றது.

    இந்த போட்டியுடன் 10 அணிகளும் தலா 7 போட்டிகளில் விளையாடி விட்டன. இதன்மூலம் முதல் பாதி சீசன் முடிவடைந்துள்ளது.

    குஜராத் டைட்டன், டெல்லி கேப்பிட்டல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் ஆகிய மூன்று அணிகளும் தலா 5 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. ரன்ரேட் அடிப்படையில் புள்ளிகள் பட்டியில்ல் குஜராத் அணி முதல் இடம் வகிக்கிறது. டெல்லி கேப்பிட்டல்ஸ் குஜராத் லக்னோ மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு எதிராக தோல்வியை சந்திததுள்ளது.

    டெல்லி கேப்பிட்டல்ஸ் 2ஆவது இடம் பிடித்துள்ளது. குஜராத் டைட்டன்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு எதிராக தோல்வியடைந்துள்ளது.

    பஞ்சாப் கிங்ஸ் 3ஆவது இடம் பிடித்துள்ளது. சன்ரைசர்ஸ் ஐதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு எதிராக தோல்வியடைந்துள்ளது.

    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் தலா 4 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. ரன்ரேட் அடிப்படையில் ஆர்சிபி 4ஆவது இடத்தையும், லக்னோ 5ஆவது இடத்தையும் பிடித்துள்ளன.

    கொல்கத்தா, மும்பை இந்தியன்ஸ் தலா 3 வெற்றி பெற்று முறையே 6 மற்றும் 7ஆவது இடங்களை பிடித்துள்ளனர்.

    தலா இரண்டு வெற்றிகளுடன் ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், சென்னை சூப்பர் கிங்ஸ் முறையே 8 முதல் 10 இடங்களை பிடித்துள்ளன.

    • சுப்மன் கில் 7 ரன்னிலும், சாய் சுதர்சன் 36 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
    • மிட்செல் ஸ்டார்க் ஓவரில் தொடர்ந்து ஐந்து பவுண்டரிகள் விளாசினார் பட்லர்.

    ஐபிஎல் தொடரின் 35ஆவது போட்டி அகமதாபாத்தில் இன்று நடைபெற்றது. இதில் குஜராத் டைட்டன்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் களம் இறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் குவித்தது. அந்த அணியின் முதல் 6 வீரர்களும் இரட்டை இலக்க ரன்கள் அடித்தனர். அதிகபட்சமாக அக்சர் படேல் 32 பந்தில் 39 ரன்களும், அஷுடோஸ் சர்மா 19 பந்தில் 37 ரன்களும் சேர்த்தனர்.

    பின்னர் 204 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் டைட்டன்ஸ் களம் இறங்கியது. சாய் சுதர்சன், சுப்மன் கில் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். சுப்மன் கில் 7 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரன்அவுட் ஆனார்.

    அடுத்து சாய் சுதர்சன் உடன் ஜாஸ் பட்லர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமாக விளையாடியது. அணியின் ஸ்கோர் 7.3 ஓவரில் 74 ரன்னாக இருக்கும் போது சாய் சுதர்சன் 21 பந்தில் 36 ர்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    3ஆவது விக்கெட்டுக்கு பட்லர் உடன் ரூதர்போர்டு ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியும் அபாரமாக விளையாடியது. குறிப்பாக பட்லர் பட்டையை கிளப்பினார். 32 பந்தில் அரைசதம் அடித்தார். குஜராத் அணி 11.2 ஓவரில் 100 ரன்னையும், 14.3 ஓவரில் 150 ரன்னையும் தொட்டது.

    15ஆவது ஓவரை மிட்செல் ஸ்டார்க் வீசினார். இந்த ஓவரின் முதல் ஐந்து பந்துகளையும் பவுண்டரிக்கு விரட்டினார் பட்லர். கடைசி பந்தில் ரன் அடிக்கவில்லை. குஜராத் 17 ஓவரில் முடிவில் 179 ரன்கள் குவித்திருந்தது.

    18ஆவது ஓவரில் குஜராத் 10 ரன்கள் அடித்தது. இதனால் கடைசி 2 ஓவரில் 15 ரன்கள் தேவைப்பட்டது. 19ஆவது ஓவரை முகேஷ் குமார் வீசினார். இந்த ஓவரின் 5ஆவது பந்தில் ரூதர்போர்டு ஆட்டமிழந்தார். அவர் 34ஆவது பந்தில் 43 ரன்கள் எடுத்தார். பட்லர்-ரூதர்போர்டு ஜோடி 3ஆவது விக்கெட்டுக்கு 119 ரன்கள் குவித்தது. அடுத்து ராகுல் டெவாட்டியா களம் இறங்கினார். இந்த ஓவரில் முகேஷ் குமார் 5 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.

    இதனால் கடைசி ஓவரில் குஜராத் அணிக்கு 10 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரை ஸ்டார்க் வீசினார். முதல் பந்தில் டெவாட்டியா சிக்ஸ் விளாசினார். அடுத்த பந்தை பவுண்டரிக்கு விரட்டினார். இதனால் குஜராத் டைட்டன்ஸ் 19.2 ஓவரில் 204 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. பட்லர் 54 பந்தில் 97 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    • ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டனாக ரியான் பராக் செயல்படுகிறார்.
    • லக்னோ 5ஆவது இடத்திலும், ராஜஸ்தான் ராயல்ஸ் 8ஆவது இடத்திலும் உள்ளன.

    ஐபிஎல் 2025 சீசனின் 36ஆவது ஆட்டம் ஜெய்ப்பூரில் நடைபெறுகிறது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ்- லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் லக்னோ அணி கேப்டன் ரிஷப் பண்ட் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் கேப்டன் சஞ்சு சாம்சன் இடம் பெறவில்லை. இதனால் ரியான் பராக் கேப்டனாக செயல்படுகிறார்.

    லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்:-

    மார்கிராம், மிட்செல் மார்ஷ், நிக்கோலஸ் பூரன், ரிஷப் பண்ட், டேவிட் மில்லர், அப்துல் சமாத், ரவி பிஷ்னோய், ஷர்துல் தாகூர், பிரின்ஸ் யாதவ், திக்வேஷ் ரதி, ஆவேஷ் கான்.

    ராஜஸ்தான் ராயல்ஸ்:-

    ஜெய்ஸ்வால், ஷுபம் துபே, ரியான் பராக், நிதிஷ் ராணா, துருவ் ஜூரேல், ஹெட்மையர், ஹசரங்கா, ஆர்ச்சர், தீக்ஷனா, சந்தீப் சர்மா, துஷார் தேஷ்பாண்டே

    • டெல்லி அணியின் முதல் 6 பேட்ஸ்மேன்களும் இரட்டை இலக்க ரன்களை கடந்தனர்.
    • அஷுடோஸ் சர்மா 19 பந்தில் 37 ரன்கள் விளாசினார்.

    ஐபிஎல் 2025 தொடரில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெறுகின்றன. அகமதாபாத்தில் நடைபெற்று வரும் முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி டெல்லி அணியின் அபிஷேக் பொரேல், கருண் நாயகர் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். பொரேல் தொடக்கம் முதல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 9 பந்தில் 3 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து கே.எல். ராகுல் களம் இறங்கினார். இவர் 14 பந்தில் 4 பவுண்டரி, 1 சிக்சருடன் 28 ரன்கள் விளாசினார். 3ஆவது விக்கெட்டுக்கு கருண் நாயர் உடன் அக்சர் படேல் ஜோடி சேர்ந்தார்.

    பவர்பிளேயில் டெல்லி கேப்பிட்டல்ஸ் 73 ரன்கள் குவித்தது. இந்த சீசனில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் அதிகபட்ச பவர்பிளே ரன் இதுவாகும். டெல்லி பேட்ஸ்மேன்கள் தங்கள் பங்கிற்கு குறைந்த பந்தில் அதிக ரன்கள் அடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் களம் இறங்கினர். இதனால் விக்கெட் வீழ்ந்தாலும் ரன் வேகத்தில் தொய்வு ஏற்படவில்லை.

    கருண் நாயர் 18 பந்தில் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 4ஆவது விக்கெட்டுக்கு அக்சர் படேல் உடன் ஸ்டப்ஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமாக விளையாடியது. இதனால் ஒவருக்கு 10 ரன்கள் என்ற அடிப்படையில் ஸ்கோர் உயர்ந்து கொண்டே வந்தது.

    டெல்லி கேப்பிட்டல்ஸ் 10 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 105 ரன்கள் குவித்தது. 14ஆவது ஓவரை ரஷித் கான் வீசினார். இவர் இந்த ஓவரில் 2 சிக்சருடன் 15 ரன்கள் விட்டுக்கொடுத்தார். 15ஆவது ஓவரை சிராஜ் வீசினார். இந்த ஓவரின் 2ஆவது பந்தில் ஸ்டப்ஸ் 21 பந்தில் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அப்போது டெல்லி 14.2 ஓவரில் 146 ரன்கள் எடுத்திருந்தது.

    5ஆவது விக்கெட்டுக்கு அக்சர் படேல் உடன் அஷுடோஸ் சர்மா ஜோடி சேர்ந்தார். டெல்லி 15 ஓவரில் 150 ரன்கள் எடுத்தது.

    16ஆவது ஓவரில் 13 ரன்களும், 17ஆவது ஓவரில் 10 ரன்கள் சேர்த்தது டெல்லி கேப்பிட்டல்ஸ். 18ஆவது ஓவரின் முதல் பந்தில் அக்சர் படேல் ஆட்டமிழந்தார். அவர் 32 பந்தில் 39 ரன்கள் சேர்த்தார். அப்போது டெல்லி கேப்பிட்டல்ஸ் 17.1 ஓவரில் 173 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்த பந்தில் விப்ராஜ் நிகம் ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார். ஆனால் இதே ஓவரில் அஷுடோஸ் சர்மா 4ஆவது மற்றும் 5ஆவது பந்தில் அடுத்தடுத்து சிக்சர் விளாசினார். இதனால் டெல்லிக்கு இந்த ஓவரில் 15 ரன்கள் கிடைத்தது.

    19ஆவது ஓவரில் ஒரு விக்கெட்டை இழந்து 6 ரன்கள் மட்டுமே அடித்தது. 19ஆவது ஓவர் முடிவில் டெல்லி 7 விக்கெட் இழப்பிற்கு 194 ரன்கள் எடுத்திருந்தது.

    கடைசி ஓவரை சாய் கிஷோர் வீசினார். இந்த ஓவரில் ஒரு விக்கெட்டை இழந்து 9 ரன்கள் அடிக்க டெல்லி கேப்பிட்டல்ஸ் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் குவித்தது. அஷுடோஸ் சர்மா 19 பந்தில் 37 ரன்கள் விளாசினார். டெல்லி அணியின் முதல் 6 பேட்ஸ்மேன்களும் இரட்டை இலக்க ரன்களை கடந்தனர்.

    • தமிழகத்தில் டிஎன்பிஎல் போல மும்பையில் டி20 மும்பை லீக் தொடர் அறிமுகமாகிறது.
    • இந்த தொடர் மே 26-ந் தேதி தொடங்கி ஜூன் 5-ந் தேதி வரை நடக்கிறது.

    ஐபிஎல் தொடர் கடந்த மாதம் 22-ந் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடர் அடுத்த மாதம் 25-ந் தேதி முடிவடைகிறது. இந்த தொடர் முடிவடைந்த பிறகு இந்திய அணி ஜூன் மாதம் 20-ந் தேதி தொடங்கும் இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.

    இந்நிலையில் தமிழகத்தில் டிஎன்பிஎல் போல மும்பையில் டி20 மும்பை லீக் தொடர் அறிமுகமாகிறது. இந்த தொடர் மே 26-ந் தேதி தொடங்கி ஜூன் 5-ந் தேதி வரை நடக்கிறது.

    டி20 மும்பை லீக்கில் மும்பையின் அனைத்து வீரர்களும் விளையாட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் மும்பை வீரர்கள் டி20 மும்பை லீக்கில் பங்கேற்க மும்பை கிரிக்கெட் சங்கம் உத்தரவிட்டுள்ளது. ரோகித் சர்மா தவிர ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ் மற்றும் சிவம் துபே போன்ற வீரர்கள் லீக்கில் பங்கேற்க வேண்டும்.

    இது கட்டாயமாகும். இந்திய அணியில் விளையாடுபவர்கள் மற்றும் காயம் தொடர்பான பிரச்சினைகள் உள்ளவர்கள் தவிர மற்ற அனைத்து மும்பை அணி வீரர்கள் இந்த தொடரில் பங்கேற்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஐபிஎல் தொடரில் இதுவரை 34 லீக் ஆட்டங்கள் நிறைவடைந்துள்ளன.
    • இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

    10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை 34 லீக் ஆட்டங்கள் நிறைவடைந்துள்ளன. இந்நிலையில், இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

    அதில் மாலை 3.30 மணிக்கு அகமதாபாத்தில் நடைபெறும் 35-வது லீக் ஆட்டத்தில் அக்சர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணி, சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்து விச்சை தேர்வு செய்துள்ளது. 

    • ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று இரண்டு ஆட்டங்கள் அரங்கேறுகின்றன.
    • நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் மாலை 3.30 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் குஜராத்- டெல்லி அணிகள் மோதுகிறது.

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று இரண்டு ஆட்டங்கள் அரங்கேறுகின்றன. இதில் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் மாலை 3.30 மணிக்கு நடக்கும் 35-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்சுடன் மோதுகிறது.

    இந்நிலையில் இந்த போட்டியை நேரில் காண வரும் ரசிகர்களுக்கு இலவசமாக தண்ணீர், சன்ஸ்கிரீன் மற்றும் ORS ஆகியவற்றை குஜராத் அணி வழங்குவதாக அறிவித்துள்ளது. வெயிலை சமாளிக்க இந்த சலுகை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

    இதேபோல் சிஎஸ்கே நிர்வாகமும் சென்னையில் நடக்கும் 3.30 போட்டிக்கு இத்தகைய சலுகை வழங்குமா என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

    • பஞ்சாப்க்கு எதிரான போட்டியில் டிம் டேவிட் 26 பந்தில் 50 ரன்கள் விளாசினார்.
    • இந்த போட்டியில் ஆட்டநாயகன் விருதுக்கு டிம் டேவிட் தேர்வு செய்யப்பட்டார்.

    ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் ஆர்சிபி- பஞ்சாப் அணிகள் மோதின. மழை காரணமாக போட்டி 14 ஓவர்களாக மாற்றப்பட்டது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் விளையாடிய ஆர்சிபி 42 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து திணறியது. இதனையடுத்து அதிரடியாக விளையாடிய டிம் டேவிட் 26 பந்தில் 50 ரன்கள் விளாசினார். இதனால் ஆர்சிபி அணி 14 ஓவர்களில் 95 ரன்கள் எடுத்தது.

    இதனையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ஆட்டநாயகன் விருது தோல்வியடைந்த ஆர்சிபி அணி வீரர் டிம் டேவிட்டுக்கு வழங்கப்பட்டது.

    இதன்மூலம் தோல்வியடைந்த அணியின் இருந்து ஆட்டநாயகன் விருதை வென்ற முதல் வெளிநாட்டு வீரர் என்ற சாதனையை டிம் டேவிட் படைத்துள்ளார்.

    மேலும் முதல் இன்னிங்சில் மிகக் குறைந்த ரன்கள் குவித்த அணியில் அரை சதம் எடுத்த வீரர்கள் பட்டியலில் டிம் டேவிட் முதல் இடத்தை பிடித்துள்ளார்.

    முதல் இன்னிங்ஸில் மிகக் குறைந்த அரைசதம் அடித்த வீரர்கள் அணி மொத்தம்

    டிம் டேவிட் ராயல் (சேலஞ்சர்ஸ் பெங்களூரு) vs பஞ்சாப் கிங்ஸ் 26 பந்துகளில் 50* - 95/9 பெங்களூரு 2025

    விராட் கோலி (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு) vs சென்னை சூப்பர் கிங்ஸ் 29 பந்துகளில் 56 * - 106/2 பெங்களூரு 2013

    ஆண்ட்ரே ரசல் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்) vs சென்னை சூப்பர் கிங்ஸ் 44 பந்துகளில் 50* - 108/9 சென்னை 2019

    ரியான் மெக்லாரன் (மும்பை இந்தியன்ஸ்) கிங்ஸ் லெவன் பஞ்சாப் 43 பந்துகளில் 51* - 112/8 நவி மும்பை 2011

    சாம் கரன் (சென்னை சூப்பர் கிங்ஸ்) vs மும்பை இந்தியன்ஸ் 47 பந்துகளில் 52 -114/9 ஷார்ஜா 2020

    • ஐதராபாத் அணி இதுவரை 7 ஆட்டங்களில் ஆடி 2 வெற்றி, 5 தோல்வியுடன் உள்ளது.
    • டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தயாராவதற்காக நாடு திரும்புகிறாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

    புதுடெல்லி:

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கடந்த ஆண்டு 2-வது இடம் பிடித்த முன்னாள் சாம்பியனான ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிக்கு இந்த சீசன் திருப்திகரமாக அமையவில்லை. ஐதராபாத் அணி இதுவரை 7 ஆட்டங்களில் ஆடி 2 வெற்றி, 5 தோல்வியுடன் புள்ளி பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது.

    இந்த நிலையில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் பேட் கம்மின்சின் (ஆஸ்திரேலியா) மனைவி ரெபேக்கா விமான நிலையத்தில் மூட்டை முடிச்சுகளுடன் கம்மின்சும் இருக்கும் இரண்டு புகைப்படத்தை பகிர்ந்து, அதில் 'இந்தியாவில் இருந்து விடைபெறுகிறேன். இந்த அழகான நாட்டுக்கு வருவதை நாங்கள் மிகவும் விரும்பினோம்' என்று குறிப்பிட்டுள்ளார்.

    இதனால் கம்மின்ஸ் எஞ்சிய ஐ.பி.எல். தொடரில் இருந்து விலகி, டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தயாராவதற்காக நாடு திரும்புகிறாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஆனால் இது குறித்து ஐதராபாத் நிர்வாகம் தரப்பில் அதிகாரபூர்வமாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

    • குறைந்த போட்டியில் ஆயிரம் ரன்கள் விளாசிய சச்சின், ருதுராஜ் சாதனையை படிதார் முறியடித்துள்ளார்.
    • இந்திய வீரர்களில் குறைந்த போட்டியில் ஆயிரம் ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமையை சாய் சுதர்சன் பெற்றிருக்கிறார்.

    ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் ஆர்சிபி மற்றும் பஞ்சாப் அணிகள் மோதிய 34-வது லீக் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது. இதனால் போட்டி 14 ஓவராக குறைக்கப்பட்டது.

    இந்த போட்டியில் முதலில் களமிறங்கிய ஆர்சிபி அணி 95 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய பஞ்சாப் அணி 98 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த நிலையில் ரஜத் பட்டிதார் 23 ரன்கள் அடித்திருந்த போது ஒரு மகத்தான சாதனையை முறியடித்து இருக்கிறார். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் குறைந்த இன்னிங்ஸில் ஆயிரம் ரன்கள் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் மற்றும் ருதுராஜ் ஆகியோரை ரஜத் பட்டிதார் பின்னுக்கு தள்ளி உள்ளார்.

    சச்சின் டெண்டுல்கரும், ருதுராஜூம் 31 இன்னிங்சில் ஆயிரம் ரன்களை கடந்தனர். ஆனால் தற்போது ரஜத் 30 இன்னிங்ஸ்லே ஆயிரம் ரன்களை கடந்து அசத்தி இருக்கிறார்.

    இந்திய வீரர்களில் குறைந்த போட்டியில் ஆயிரம் ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமையை குஜராத் அணியின் சாய் சுதர்சன் பெற்றிருக்கிறார். சாய் சுதர்சன் 25 இன்னிங்ஸ்களில் ஆயிரம் ரன்கள் கடந்து இருக்கிறார்.

    ஒட்டுமொத்தமான ஐபிஎல் இல் ஆஸ்திரேலிய வீரர் சேன் மார்ஸ் 21 இன்னிங்ஸில் ஆயிரம் ரன்களை கடந்தார். இந்த ரெக்கார்டை அவர் 2011 ஆம் ஆண்டு படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும் ஒரு தனித்துவமான சாதனையை படிதார் படைத்துள்ளார். ஐபிஎல் வரலாற்றில் 35-க்கும் மேற்பட்ட சராசரி மற்றும் 150-க்கும் மேற்பட்ட ஸ்ட்ரைக் ரேட்டுடன் 1000 ரன்களை எட்டிய முதல் இந்திய பேட்ஸ்மேன் என்ற சாதனையை படிதார் படைத்துள்ளார்.

    • வான்கடே மைதானத்தில் உள்ள ஒரு ஸ்டாண்டில் எனது பெயர் இருக்கிறது என்பதை என்னால் நம்ப கூட முடியவில்லை.
    • இந்த பெருமையை எனக்கு வழங்கிய அனைவருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.

    ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. 18-வது சீசனை முன்னிட்டு, பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி, ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் எம்.எஸ். தோனி ஆகியோருக்கு 18 தொடர்ச்சியான ஐபிஎல் சீசன்களில் விளையாடியதற்காகவும், இந்திய கிரிக்கெட்டுக்கு அவர்களின் பங்களிப்பிற்காகவும் சிறப்பு விருது வழங்கி கவுரவித்தார்.

    இந்த நிலையில் ரோகித் சர்மாவுக்கு பெருமை சேர்க்கும் விதமாக மும்பை வான்கடே மைதானத்தில் உள்ள ஒரு பகுதியை ரோகித் சர்மாவின் பெயர் சூட்டப்படுகிறது.

    இது குறித்து ரோகித் கூறியதாவது:-

    இப்படி ஒன்று நடக்கும் என்று நான் என் கனவில் கூட நினைத்தது கிடையாது. நான் இங்கு விளையாடிய முதல் போட்டி இன்னும் என் நினைவில் இருக்கின்றது. தற்போது என்னுடைய பெயர் இங்கு சூட்டப்படுவது நம்ப முடியவில்லை.

    என் பெயர் உள்ள ஸ்டேண்ட் முன் நான் விளையாட போகிறேன் என்று நினைத்துப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கின்றது. இந்த மைதானத்தில் எனக்கு பல நல்ல நினைவுகள் இருக்கின்றது.

    வான்கடே மைதானம் புதிதாக புனரமைக்கப்பட்ட பின் இங்குதான் நாம் உலக கோப்பையை வென்றோம். இங்கு நாம் அதிக போட்டிகளில் விளையாடிருகின்றோம். தற்போது இந்த மைதானத்தில் உள்ள ஒரு ஸ்டாண்டில் எனது பெயர் இருக்கிறது என்பதை என்னால் நம்ப கூட முடியவில்லை.

    நான் மிகவும் உணர்ச்சிவசப்பட்டேன் இந்த பெருமையை எனக்கு வழங்கிய அனைவருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.

    முதன் முதலில் கிரிக்கெட் விளையாடும்போது நாம் எவ்வளவு தூரம் எவ்வளவு நாள் விளையாட போகிறோம் என்று நமக்கு தெரியாது. ஆனால் நான் இந்த மைதானத்தில் ஒரு சாதாரண வீரராக வந்து தற்போது எனது பெயரிலே ஒரு ஸ்டாண்ட் அமைக்கப்படுகிறது என்பதில் நினைக்கும் போது உணர்ச்சி வசமாக இருக்கின்றது.

    என்று ரோகித் சர்மா கூறியுள்ளார்.

    தோனிக்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணிக்கு இரண்டு ஐசிசி கோப்பைகளை வென்று கொடுத்த கேப்டன் என்ற பெருமையை ரோகித் சர்மா படைத்திருக்கிறார். இந்திய அணியில் வீரராக நான்கு ஐசிசி கோப்பையை ரோகித் சர்மா வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    ×