என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • ஆன்லைன் கேம்களை தடை செய்யும் புதிய கேமிங் மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
    • வரும் காலங்களில் இதுபோன்ற நிறுவனங்களுடன் BCCI உறுதியாக தொடர்பு வைத்துக்கொள்ளாது.

    சூதாட்டம் மற்றும் பணம் வைத்து விளையாடும் ஆன்லைன் கேம்களை தடை செய்யும் புதிய கேமிங் மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டு சட்டமானது.

    பணம் கட்டி விளையாடும் ஆன்லைன் கேமிங்கிற்கு தடை விதிக்கப்பட்டதால் Dream 11 மற்றும் MPL ஆகிய நிறுவனங்கள் தங்கள் தளத்தில் நிஜ பணம் வைத்து விளையாடும் ஆட்டங்களை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

    இந்த சட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ள ட்ரீம் 11 நிறுவனம், இந்திய அணியின் ஜெர்சி ஸ்பான்சர்ஷிப்பில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியது.

    இந்நிலையில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை அரசு கொண்டு வந்துள்ளதால் DREAM11-உடனான உறவை முறித்துக் கொள்கிறோம். வரும் காலங்களில் இதுபோன்ற நிறுவனங்களுடன் BCCI உறுதியாக தொடர்பு வைத்துக்கொள்ளாது என பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைக்கியா தெரிவித்துள்ளார்.

    ஆசிய கோப்பைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், ஜெர்சி ஸ்பான்சர்ஷிப் உரிமைக்கான புதிய ஏலங்களை விட பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    • இந்திய அணிக்காக இவ்வளவு காலம் விளையாடியது மிகவும் அதிர்ஷ்டமே.
    • 2018-19-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றியது எனது சிறந்த சாதனைகளில் ஒன்றாகும்.

    ராஜ்கோட்:

    இந்தியாவின் முன்னணி பேட்ஸ்மேனான புஜாரா சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார். 37 வயதான அவர் கடைசியாக 2023-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் விளையாடி இருந்தார்.

    டிராவிட்டுக்கு அடுத்து 'இந்தியாவின் சுவர்' என்று ரசிகர்களால் அழைக்கப்பட்ட அவருக்கு சரியான வாய்ப்பு கிடைக்காமல் இருந்ததால் ஓய்வு பெற்றதாக தகவல் வெளியானது.

    இந்த நிலையில் ஓய்வு பெற்றதால் எந்த வருத்தமும் இல்லை என்று புஜாரா தெரிவித்து உள்ளார். சொந்த ஊரான குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இது தொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஓய்வு பெற்றதில் எந்த வருத்தமும் இல்லை. இந்திய அணிக்காக இவ்வளவு காலம் விளையாடியது மிகவும் அதிர்ஷ்டமே. பல வீரர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. எனவே எனக்கும், எனது குடும்பத்துக்கும், ஆதரவளித்த மக்களுக்கும் நான் நன்றி தெரிவிக்கிறேன்.

    கிரிக்கெட்டை முடித்துக் கொண்டதில் மகிழ்ச்சிதான். அதே நேரத்தில் அதன் தொடர்பில் இருக்க விரும்புகிறேன். டெலிவிஷன் வர்ணனை செய்கிறேன். எனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் பல சிறந்த தருணங்கள் இருந்தது. 2018-19-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றியது எனது சிறந்த சாதனைகளில் ஒன்றாகும். 2010-ம் ஆண்டு நான் டெஸ்டில் அறிமுகம் ஆனேன். இது எனது கிரிக்கெட் பயணத்தின் பெருமைமிக்க தருணங்களில் ஒன்றாகும்.

    ராகுல் டிராவிட், டெண்டுல்கர், வி.வி.எஸ். லட்சுமணன், ஷேவாக், கவுதம் காம்பீர் போன்ற வீரர்களின் பெயர்களை நான் இன்னும் நினைவில் வைத்து உள்ளேன். அவர்களை பார்த்து நான் வளர்ந்தேன்.

    இவ்வாறு புஜாரா கூறியுள்ளார்.

    • ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 9 ஒருநாள் தொடர்களை தென் ஆபிரிக்க கைப்பற்றியுள்ளது.
    • ஆஸ்திரலியாவுக்கு எதிரான 5 ஒருநாள் தொடர்களை தென்னாப்பிரிக்கா தொடர்ந்து கைப்பற்றி சாதனை

    தென் ஆப்பிரிக்கா அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரை 2 - 1 என்ற கணக்கில் கைப்பற்றி தென் ஆப்பிரிக்கா வரலாறு படைத்தது.

    இதன்மூலம், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிக முறை ஒருநாள் தொடரை வென்ற அணி என்ற புதிய சாதனையை தென் ஆப்பிரிக்கா படைத்தது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 9 ஒருநாள் தொடர்களை தென் ஆபிரிக்க கைப்பற்றியுள்ளது. இதற்கு அடுத்த இடங்களில் இங்கிலாந்து (8)இந்தியா (6) உள்ளன.

    மேலும், 2016 முதல் தற்போது வரை ஆஸ்திரலியாவுக்கு எதிரான 5 ஒருநாள் தொடர்களை தொடர்ந்து கைப்பற்றி தென்னாப்பிரிக்கா சாதனை படைத்துள்ளது.

    • சஞ்சு சாம்சனை கொச்சி ப்ளூ டைகர்ஸ் 26.8 லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கியது.
    • கேரள கிரிக்கெட் லீக்கில் இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய தொகைக்கு சஞ்சு சாம்சன் ஏலம் எடுக்கப்பட்டார்.

    ஐபிஎல் (இந்தியன் பிரீமியர் லீக்) டி20 தொடர் பிரபலமான நிலையில் ஒவ்வொரு மாநில கிரிக்கெட் சங்கங்களும் டி20 கிரிக்கெட் லீக்கை தொடங்க ஆரம்பித்தன.

    அவ்வகையில் கேரளா கிரிக்கெட் லீக் தற்போது நடைபெற்று வருகிறது. நேற்று கொல்லம் - கொச்சி அணிகள் மோதின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்லம் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 236 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக விஷ்ணு வினோத் 94 ரன்களும் சச்சின் பேபி 91 ரன்களும் அடித்தனர்.

    இதனையடுத்து 237 அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொச்சி அணி கடைசி பந்தில் சிக்ஸ் அடித்து திரில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய சஞ்சு சாம்சன் 51 பந்துகளில் 121 ரன்கள் குவித்து அவுட்டனார். சதம் விளாசிய சஞ்சு சாம்சன் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    • கரீபியன் பிரிமியர் லீக் தொடரில் 200 சிக்சர் விளாசினார் பொல்லார்டு.
    • இந்தியாவின் ஐ.பி.எல். தொடரில் மும்பை அணிக்காக 223 சிக்சர் அடித்துள்ளார்.

    செயின்ட்லூசியா:

    வெஸ்ட் இண்டீசில் கரீபியன் பிரிமியர் லீக் 13-வது சீசன் நடந்து வருகிறது.

    செயின்ட்லூசியாவில் நடந்த போட்டியில் டிரிபாகோ அணி, செயின்ட்லூசியா அணியை சந்தித்தது. முதலில் ஆடிய டிரிபாகோ 183 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அடுத்து ஆடிய செயின்ட் லுசியா 6 விக்கெட்டுக்கு 165 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 18 ரன் வித்தியாசத்தில் டிரிபாகோ அணி வெற்றி பெற்றது.

    இந்தப் போட்டியில் 29 பந்தில் 6 சிக்சர், 4 பவுண்டரி உள்பட 65 ரன் விளாசிய டிரிபாகோ அணியின் வெஸ்ட் இண்டீஸ் வீரர் போலார்டு, ஆட்ட நாயகன் விருது வென்றார்.

    இந்நிலையில், கரீபியன் பிரிமியர் லீக் தொடரில் 200 சிக்சர் விளாசிய 2-வது வீரர் மற்றும் அதிக சிக்சர் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார் பொல்லார்டு.

    பொல்லார்டு இதுவரை 128 போட்டியில் 203 சிக்சர் பறக்கவிட்டுள்ளார்.

    ஏற்கனவே செயின்ட் கிட்ஸ் அண்ட் நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணியின் எவின் லீவிஸ் 200 சிக்சர் அடித்திருந்தார்.

    ஒட்டுமொத்த டி 20 லீக் வரலாற்றில் இரு அணிகள் சார்பில் தலா 200 சிக்சர் அடித்த முதல் வீரர் என்ற சாதனை படைத்தார் பொல்லார்டு. இவர் இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக 223 சிக்சர் (189 போட்டி) அடித்துள்ளார்.

    ஒட்டுமொத்த டி 20 வரலாற்றில் கிறிஸ் கெய்லுக்கு (14,562 ரன், 1056 சிக்சர்) பிறகு அதிக ரன்கள் மற்றும் அதிக சிக்சர் அடித்த வீரரானார் பொல்லார்டு (13,181 ரன், 941 சிக்சர்).

    கெயில் 1056 சிக்சர்கள் உள்பட 14,562 ரன்கள் குவித்துள்ளார். இவரை தொடர்ந்து பொல்லார்டு 941 சிக்சர் உள்பட 13181 ரன்கள் அடித்துள்ளார்.

    • அனைத்து வகை இந்திய கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக புஜாரா அறிவித்துள்ளார்.
    • டெஸ்ட் போட்டியில் ராகுல் டிராவிட்டுக்குப் பிறகு 3-வது வீரராக நீண்டகாலமாக விளையாடினார்.

    அகமதாபாத்:

    அனைத்து வகை இந்திய கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக புஜாரா அறிவித்துள்ளார். இவர் இந்திய டெஸ்ட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர்

    ராகுல் டிராவிட் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றதும், 3-வது வீரராக நீண்டகாலமாக விளையாடினார். புஜாரா ஓய்வு குறித்து பலரும் ஆதரவும், எதிர்ப்புமாக தங்களது கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், குஜராத் முதல் மந்திரி பூபேந்திர படேல் புஜாராவுக்கு வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார்.

    இதுதொடர்பாக, பூபேந்திர படேல் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், குஜராத்தின் பெருமைக்குரிய செதேஷ்வர் புஜாராவின் ஒரு குறிப்பிடத்தக்க கிரிக்கெட் பயணம். உங்கள் அமைதியான இருப்பு, குறைபாடற்ற நுட்பம் மற்றும் அசைக்க முடியாத மன உறுதி - குறிப்பாக இந்தியாவின் வரலாற்று வெளிநாட்டு வெற்றிகளில் - தேசத்திற்கு போற்றுவதற்கு எண்ணற்ற தருணங்களை அளித்துள்ளன. ராஜ்கோட்டிலிருந்து உலக அரங்கம் வரை குஜராத்தின் கிரிக்கெட் உணர்வை நீங்கள் உண்மையிலேயே வெளிப்படுத்தி உள்ளீர்கள். நீங்கள் தொடர்ந்து வெற்றி பெறவும், எதிர்காலத்திற்கு நல்வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.

    • 50 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு ஆஸ்திரேலியா அணி 431 ரன்கள் குவித்தது.
    • அதிரடியாக விளையாடிய கிரீன் 47 பந்துகளில் அதிவேக சதம் அடித்து அசத்தினார்.

    தென் ஆப்பிரிக்கா அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் இதுவரை 2 போட்டிகள் முடிந்துள்ளது. அந்த 2 போட்டிகளிலும் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற தென் ஆப்பிரிக்கா 2 - 0 (3) என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவை அதனுடைய சொந்த மண்ணில் தோற்கடித்து தொடரை கைப்பற்றியது.

    இன்று தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3 ஆவது ஒருநாள் போட்டி நடைபெற்றது.

    இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து ஆஸ்திரேலிய அணியில் டிராவிஸ் ஹெட் மற்றும் மிட்சல் மார்ஸ் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.

    ஆரம்பம் முதல் அதிரடியாக விளையாடிய ஹெட் - மார்ஸ் ஜோடி தென் ஆப்பிரிக்க அணியின் பந்துவீச்சை நாலாப்பக்கமும் சிதறவிட்டனர். அதிரடியாக விளையாடி சதம் அடித்த டிராவிஸ் ஹெட் 103 பந்துகளில் 142 ரன்கள் அடித்து அவுட்டானார்.

    250 ரன்கள் அடித்தநிலையில் தான் ஆஸ்திரேலிய அணி தனது முதல் விக்கெட்டை இழந்தது. மறுபக்கம் பொறுப்புடன் விளையாடிய மார்ஸ் சதம் அடித்து 100 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    இதனையடுத்து கேமரூன் கிரீன் - அலெக்ஸ் கேரி ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தது. அதிரடியாக விளையாடிய கிரீன் 47 பந்துகளில் அதிவேக சதம் அடித்து அசத்தினார். இறுதியில் 50 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு ஆஸ்திரேலியா அணி 431 ரன்கள் குவித்தது.

    கிரீன் 118 ரன்களுடனும் அலெக்ஸ் கேரி 50 ரன்களுடனும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

    இதனையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 155 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக டேவால்ட் ப்ரீவிஸ் 49 ரன்கள் அடித்தார்.

    இதன்மூலம் 276 ரன்கள் வித்தியசாத்தில் ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா அணி தரப்பில் கூப்பர் கானோலி 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

    அதிரடியாக விளையாடி சதம் அடித்த ஹெட் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். தென் ஆப்பிரிக்காவின் கேசவ் மஹாராஜ் தொடர் நாயகன் விருதை வென்றார்.

    • 250 ரன்கள் அடித்தநிலையில் தான் ஆஸ்திரேலிய அணி தனது முதல் விக்கெட்டை இழந்தது.
    • அதிரடியாக விளையாடிய கிரீன் 47 பந்துகளில் அதிவேக சதம் அடித்து அசத்தினார்.

    தென் ஆப்பிரிக்கா அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் இதுவரை 2 போட்டிகள் முடிந்துள்ளது. அந்த 2 போட்டிகளிலும் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற தென் ஆப்பிரிக்கா 2 - 0 (3) என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவை அதனுடைய சொந்த மண்ணில் தோற்கடித்து தொடரை கைப்பற்றியது.

    இன்று தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3 ஆவது ஒருநாள் போட்டி நடைபெற்றது.

    இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து ஆஸ்திரேலிய அணியில் டிராவிஸ் ஹெட் மற்றும் மிட்சல் மார்ஸ் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.

    ஆரம்பம் முதல் அதிரடியாக விளையாடிய ஹெட் - மார்ஸ் ஜோடி தென் ஆப்பிரிக்க அணியின் பந்துவீச்சை நாலாப்பக்கமும் சிதறவிட்டனர். அதிரடியாக விளையாடி சதம் அடித்த டிராவிஸ் ஹெட் 103 பந்துகளில் 142 ரன்கள் அடித்து அவுட்டானார்.

    250 ரன்கள் அடித்தநிலையில் தான் ஆஸ்திரேலிய அணி தனது முதல் விக்கெட்டை இழந்தது. மறுபக்கம் பொறுப்புடன் விளையாடிய மார்ஸ் சதம் அடித்து 100 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    இதனையடுத்து கேமரூன் கிரீன் - அலெக்ஸ் கேரி ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தது. அதிரடியாக விளையாடிய கிரீன் 47 பந்துகளில் அதிவேக சதம் அடித்து அசத்தினார். இறுதியில் 50 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு ஆஸ்திரேலியா அணி 431 ரன்கள் குவித்து சாதனை படைத்தது. 

    கிரீன் 118 ரன்களுடனும் அலெக்ஸ் கேரி 50 ரன்களுடனும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

    • இந்திய அணிக்காக 103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 7,195 ரன்கள் குவித்துள்ளார்.
    • 2010 ஆண்டு அறிமுகமாகி, 2023ஆம் ஆண்டு வரை டெஸ்ட் போட்டிகளில் விளையாடினார்.

    அனைத்து வகை இந்திய கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக புஜாரா அறிவித்துள்ளார். இவர் இந்திய டெஸ்ட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர்.

    இந்திய அணிக்காக 103 டெஸ்ட் போட்டிகளிலும், 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 19 டெஸ்ட், 35 அரைசதங்களுடன் 7195 ரன்கள் அடித்துள்ளார். சராசரி 43.60 ஆகும்.

    ராகுல் டிராவிட் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றதும், 3ஆவது வீரராக நீண்டகாலமாக விளையாடினார். கடந்த 2010ஆம் ஆண்டு அறிமுகமான நிலையில், 2023ஆம் ஆண்டு ஜூன் 7ஆம் தேதிக்கு ஓவரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கடைசியாக விளையாடினார்.

    • ஆப்கானிஸ்தான் "பி" பிரிவில் இடம் பிடித்துள்ளது.
    • "பி" பிரிவில் வங்கதேசம், ஹாங்காங், இலங்கை அணிகள் இடம் பிடித்துள்ளன.

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 9ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கியது. இந்த தொடருக்கான இந்தியா, பாகிஸ்தான், வங்கதேச அணிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் ரஷித் கான் தலைமையிலான அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

    ரஷித் கான் உடன் சேர்ந்து மொத்தம் 5 சுழற்பந்து வீச்சாளர்கள் அணியில் இடம் பிடித்துள்ளனர். நூர் அகமது, முஜீப் உர் ரஹ்மான், ஏ.எம். கசான்ஃபர், முகமது நபி ஆகியோர் அணியில் இடம் பிடித்துள்ளனர்.

    வேகப்பந்து வீச்சில் நவீன்-உல்-ஹக், பரூக்கி மற்றும் பரித்த மாலிக் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

    ஆப்கானிஸ்தான் குரூப் பி-யில் இடம் பிடித்துள்ளது. இந்த பிரிவில் வங்கதேசம், ஹாங்காங், இலங்கை அணிகள் இடம் பிடித்துள்ளன.

    வங்கதேசம் முதல் போட்டிகளில் செப்டம்பர் 9ஆம் தேதி ஹாங்காங்கை எதிர்கொள்கிறது.

    ஆப்கானிஸ்தான் அணி விவரம்:-

    ரஷித் கான் (கேப்டன்), ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் ஜத்ரன், தர்விஷ் ரசூலி, செதிக்குல்லா அடல், அஸ்மதுல்லா ஓமர்சாய், கரீம் ஜனத், முகமது நபி, குல்பதின் நைப், ஷரபுதின் அஷ்ரப், முகமது இஷாக், நூர் அகமது, முஜீப் உர் ரஹ்மான், ஏ.எம். கசான்ஃபர், பரித் அகமது மாலிக், பஜல்ஹக் பரூக்கி, நவீன் உல் ஹக்.

    • Dream 11 பணம் வைத்து விளையாடும் ஆட்டங்களை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
    • ஜெர்சி ஸ்பான்சர்ஷிப் உரிமைக்கான புதிய ஏலங்களை விட பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.

    சூதாட்டம் மற்றும் பணம் வைத்து விளையாடும் ஆன்லைன் கேம்களை தடை செய்யும் புதிய கேமிங் மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டு சட்டமானது.

    பணம் கட்டி விளையாடும் ஆன்லைன் கேமிங்கிற்கு தடை விதிக்கப்பட்டதால் Dream 11 மற்றும் MPL ஆகிய நிறுவனங்கள் தங்கள் தளத்தில் நிஜ பணம் வைத்து விளையாடும் ஆட்டங்களை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

    இந்நிலையில், புதிய ஆன்லைன் விளையாட்டுகள் சட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ள ட்ரீம் 11 நிறுவனம், இந்திய அணியின் ஜெர்சி ஸ்பான்சர்ஷிப்பில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ஆசிய கோப்பைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், ஜெர்சி ஸ்பான்சர்ஷிப் உரிமைக்கான புதிய ஏலங்களை விட பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    நிதி சார்ந்த நிறுவனங் களான ஜெரோகா, ஏஞ்சல் ஒன், குரோவ், ஆட்டோ மொபைல், எப்.எம்.சி.ஜி. செக்டார், ரிலையன்ஸ் மற்றும் அதானி குழுமம் போன்ற நிறுவனங்கள் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய ஸ்பான்சருக்கான போட்டியில் உள்ளன.

    • 24 வருடத்திற்குப் பிறகு ஆப்பிரிக்காவில் ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்.
    • தென்ஆப்பிரிக்காவில் 8 இடங்களில் 44 போட்டிகளை நடத்த திட்டம்.

    2027 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஆப்பிரிக்காவில் நடைபெறும் என ஐசிசி அறிவித்துள்ளது. ஆப்பிரிக்கா கண்டம் என்றாலும் பெரும்பாலான போட்டிகளில் தென்ஆப்பிரிக்காவில்தான் நடைபெறும். தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் அதற்கான பணிகளை செய்து வருகிறது.

    இந்த நிலையில் மொத்த போட்டிகளில் 44 போட்டிகள் தென்ஆப்பிரிக்காவில் நடைபெறும். 8 இடங்களில் போட்டி நடத்தப்படும். 10 போட்டிகளில் நமீபியா மற்றும் ஜிம்பாப்வே நாடுகளில் நடத்தப்படும் என உலகக்கோப்பை தொடருக்கான தங்களது திட்டங்களை தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் விவரித்துள்ளது.

    2003ம் ஆண்டு ஆப்பிரிக்கால் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. அதன்பின் 24 வருடங்கள் கழித்து தற்போது அங்கு நடைபெற இருக்கிறது.

    ×