என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய டிராவிஸ் ஹெட் சதம் அடித்து அசத்தினார்.
    • கிளாசன் 67 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    ஐபிஎல் தொடரின் 30-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றனர். இதில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி களமிறங்கிய டிராவிஸ் ஹெட் - அபிஷேக் சர்மா தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். அபிஷேக் 34 ரன்களில் வெளியேறினார். தொடர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய டிராவிஸ் ஹெட் சதம் அடித்து அசத்தினார். தொடர்ந்து ஆடிய அவர் 41 பந்தில் 102 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன்மூலம் ஐபிஎல் தொடரில் அதிவேக சதம் அடித்தவர்கள் பட்டியலில் ஹெட் 4-வது இடத்தில் உள்ளார்.

    இதனை தொடர்ந்து கிளாசன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய அரை சதம் விளாசினார். அவர் 67 ரன்னில் ஆட்டமிழந்தார். அதனை தொடர்ந்து மார்க்ரம் - சமத் ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். மார்க்ரம் 32 ரன்னிலும் சமத் 37 ரன்னிலும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    இதனால் 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து சன்ரைசர்ஸ் அணி 278 ரன்கள் குவித்தது. இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் விளாசிய ஐதராபாத் சாதனையை அவர்களே முறியடித்தனர். மும்பை அணிக்கு எதிராக ஐதராபாத் அணி 277 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது. அதனை தற்போது முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளனர்.

    முதல் இரண்டு இடங்களில் ஐதராபாத் அணியும் 3-வது இடத்தில் கேகேஆர் (272) அணியும் 4-வது இடத்தில் ஆர்சிபி (263) அணியும் உள்ளது.

    • அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய டிராவிஸ் ஹெட் சதம் அடித்து அசத்தினார்.
    • ஆர்சிபி தரப்பில் ரீஸ் டாப்லே 4 ஓவர்களில் 68 ரன்கள் விட்டுகொடுத்து 1 விக்கெட்டை விழ்த்தினார்.

    ஐபிஎல் தொடரின் 30-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றனர். இதில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி களமிறங்கிய டிராவிஸ் ஹெட் - அபிஷேக் சர்மா தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். அபிஷேக் 34 ரன்களில் வெளியேறினார். தொடர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய டிராவிஸ் ஹெட் சதம் அடித்து அசத்தினார்.

    39 பந்துகளில் இந்த சதத்தை அவர் பதிவு செய்தார். தொடர்ந்து ஆடிய அவர் 41 பந்தில் 102 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன்மூலம் ஐபிஎல் தொடரில் அதிவேக சதம் அடித்தவர்கள் பட்டியலில் ஹெட் 4-வது இடத்தில் உள்ளார்.

    இதனை தொடர்ந்து கிளாசன் மற்றும் மார்க்ரம் தங்கள் பங்குக்கு அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய கிளாசன் அரை சதம் விளாசினார். அவர் 67 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இறுதியில் சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 287 ரன்கள் எடுத்தது. ஆர்சிபி தரப்பில் ரீஸ் டாப்லே 4 ஓவர்களில் 68 ரன்கள் விட்டுகொடுத்து 1 விக்கெட்டை விழ்த்தினார்.

    • ஐபிஎல் தொடரில் அதிவேகமாக சதம் அடித்தவர்களில் முதல் இடத்தில் கிறிஸ் கெய்ல் உள்ளார்.
    • 2-வது இடத்தில் யூசப் பதான் உள்ளார்.

    ஐபிஎல் தொடரின் 30-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றனர். இதில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி களமிறங்கிய டிராவிஸ் ஹெட் - அபிஷேக் சர்மா தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். அபிஷேக் 34 ரன்களில் வெளியேறினார். தொடர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய டிராவிஸ் ஹெட் சதம் அடித்து அசத்தினார். 39 பந்துகளில் இந்த சதத்தை அவர் பதிவு செய்தார்.

    இதன்மூலம் ஐபிஎல் தொடரில் அதிவேக சதம் அடித்தவர்கள் பட்டியலில் ஹெட் 4-வது இடத்தில் உள்ளார். முதல் இடத்தில் கிறிஸ் கெய்ல் 30 பந்தில் விளாசினார். 2-வது மற்றும் 3-வது இடங்கள் முறையே யூசப் பதான் 37 பந்திலும், டேவிட் மில்லர் 38 பந்திலும் சதம் விளாசினர். இவர்களுக்கு அடுத்தபடியாக டிராவிஸ் ஹெட் 39 பந்தில் 4-வது இடத்தில் உள்ளார்.

    • கடந்த ஆண்டு டெத் ஓவர்களில் சிறப்பாக பந்து வீசிய மத்வாலிற்கு இந்த முறை ஏன் வாய்ப்பு தரவில்லை.
    • ஸ்ரேயாஸ் கோபால் பந்துவீசி ஒரு விக்கெட் எடுத்தார். ஆனால் அதன் பிறகு அவருக்கு இரண்டாவது ஓவர் கிடைக்கவில்லை.

    ஐபிஎல் தொடரில் நேற்று மும்பை - சென்னை அணிகள் மோதின. இதில் சென்னை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் ஹர்திக் பாண்ட்யா கேப்டன்ஷிப் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் விமர்சித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் பேசியதாவது:-

    மும்பை இந்தியன்ஸ் அணி தங்கள் பந்துவீச்சை மேம்படுத்த முடியும். அவர்களின் கேப்டன் தனது பந்துவீச்சாளர்களை சிறப்பாக நிர்வகிக்க முடியும். ஸ்ரேயாஸ் கோபால் பந்துவீசி ஒரு விக்கெட் எடுத்தார். ஆனால் அதன் பிறகு அவருக்கு இரண்டாவது ஓவர் கிடைக்கவில்லை. அதிலும் குறிப்பாக அவர் ரச்சின் ரவீந்திராவை ஆட்டமிழக்க செய்தும், ஷிவம் தூபே பேட்டிங் செய்யும் போது ஏன் அவருக்கு பந்துவீச வாய்ப்பு கொடுக்கப்படவில்லை என்ற கேள்வி உள்ளது.

    அதன்பின் அவரது ஓவரை ஹர்திக் பாண்டியா வீச முன்வந்து, தனது முதல் ஓவரிலேயே15 ரன்கள் கொடுத்தார். பிறகு கடைசி ஓவரை வீசும் முறை வந்ததும் அவரே பந்து வீச வந்தார். அவர் ஆகாஷ் மத்வாலுக்கு பந்து வீச ஏன் வாய்ப்பு வழங்கவில்லை. கடந்த ஆண்டு டெத் ஓவர்களில் சிறப்பாக பந்து வீசிய மத்வாலிற்கு இந்த முறை ஏன் வாய்ப்பு தரவில்லை. ஒருவேளை அவர் பந்துவீசி இருந்தால் கூடுதலாக 20 ரன்கள் வராமல் இருக்கலாம்.

    இவ்வாறு பதான் கூறினார்.

    • பெங்களூரு அணி 6 போட்டிகளில் விளையாடி 1 வெற்றி 5-ல் தோல்வியடைந்துள்ளது.
    • சன்ரைசர்ஸ் அணி 5 போட்டிகளில் விளையாடி 3-ல் வெற்றி 2-ல் தோல்வியடைந்துள்ளது.

    பெங்களூரு:

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறும் 30-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்- ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிகள் மோதுகிறது.

    இதில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு பந்து வீச்சை தேர்வு செய்தது. ஆர்சிபி அணியில் மேக்ஸ்வெல் நீக்கப்பட்டுள்ளார்.

    பெங்களூரு அணி 6 போட்டிகளில் விளையாடி 1 வெற்றி 5-ல் தோல்வியடைந்து புள்ளி பட்டியலில் 10-வது இடத்தில் உள்ளது. சன்ரைசர்ஸ் அணி 5 போட்டிகளில் விளையாடி 3-ல் வெற்றி 2-ல் தோல்வியடைந்து புள்ளி பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது.

    • துஷார் தேஷ்பாண்டே 4 ஓவர்கள் வீசி 29 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.
    • ஷர்துல் தாக்கூர் 4 ஓவர்கள் வீசி 35 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார்.

    மும்பை:

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 29-வது லீக் ஆட்டத்தில் மும்பை வான்கடே மைதானத்தில் சிஎஸ்கேவும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. இதில் சென்னை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்நிலையில் போட்டி முடிந்தவுடன் டெத் ஓவரில் சிறப்பாக பந்து வீசிய தேஷ்பாண்டே மற்றும் சர்துல் தாக்கூர் ஆகியோரை பிராவோ கட்டி அணைத்து தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

    துஷார் தேஷ்பாண்டே நான்கு ஓவர்கள் வீசி வெறும் 29 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். இதைப்போன்று ஷர்துல் தாக்கூர் நான்கு ஓவர்கள் வீசி வெறும் 35 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார்.

    குறிப்பாக 15-வது ஓவரை வீசிய சர்துல் தாக்கூர், இரண்டு ரன்களையும் 16-வது ஓவரை வீசிய தேஷ்பாண்டே மூன்று ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார். இதுதான் ஆட்டத்தில் பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக சமூக வலைத்தளத்தில் பிராவோ கூறியதாவது:-

    துசார் தேஷ்பாண்டே, சர்துல் தாகூர் ஆகியோர் வளர்வதை பார்க்கும் போது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. அப்பா மகன்களை கட்டி அணைப்பதுபோல உங்களை கட்டி அணைத்தேன். உங்கள் தந்தையை பெருமைப்படுத்தி விட்டீர்கள் என்று பதிவிட்டுள்ளார்.

    • எங்கே பந்து வீசினால் டோனி சிக்சர் அடிப்பார் என்று தெரிந்து கொண்டு ஹர்திக் பாண்ட்யா செயல்பட்டது போல் தெரிந்தது.
    • பாண்ட்யா அவருடைய ஹீரோவின் அரவணைப்பை பெறுவதற்காக வேண்டுமென்றே பந்து வீசியதுபோல் தெரிந்தது.

    மும்பை:

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்றைய ஆட்டத்தில் மும்பை- சென்னை அணிகள் மோதின. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற 29-வது லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி 206 ரன்கள் சேர்த்தது.

    19 ஓவரில் சிஎஸ்கே 180 ரன்கள் எடுத்தது. கடைசி ஓவரை பாண்ட்யா வீசினார். முதல் பந்தில் விக்கெட் கிடைத்தது. அடுத்து வந்த டோனி ஹாட்ரிக் சிக்சர் விளாசினார். இதனால் 20 ஓவர் முடிவில் சிஎஸ்கே 206 ரன்கள் குவித்தது. இது ஆட்டத்தில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் எங்கே பந்து வீசினால் டோனி சிக்சர் அடிப்பார் என்று தெரிந்து கொண்டு ஹர்திக் பாண்ட்யா செயல்பட்டது போல் தெரிந்தது என சுனில் கவாஸ்கர் கூறினார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இது நீண்ட காலத்திற்குப் பின் நான் பார்த்த மோசமான பந்து வீச்சாகும். அது பாண்ட்யா அவருடைய ஹீரோவின் அரவணைப்பை பெறுவதற்காக வேண்டுமென்றே பந்து வீசியதுபோல் தெரிந்தது.

    எங்கே பந்து வீசினால் டோனி சிக்சர் அடிப்பார் என்று தெரிந்து கொண்டு ஹர்திக் பாண்ட்யா செயல்பட்டது போல் தெரிந்தது. ஒரு சிக்சர் அடிக்கவிட்டால் பரவாயில்லை ஆனால் தொடர்ந்து லென்த் பாலாக வீசி டோனி சிக்ஸர் அடிப்பதற்கு ஏற்ற வகையில் ஹர்திக் பாண்டியா பந்து வீசி இருக்கிறார். மூன்றாவது பந்து, அதைவிட மோசம். லெக்சைடில் பந்து ஃபுல் டாஸ் ஆக வந்தது.

    அதை டோனி எளிதாக சிக்சருக்கு விரட்டினார். இது நிச்சயம் ஒரு மோசமான பந்துவீச்சு. ஒரு மோசமான கேப்டன்சி. என்னை கேட்டால் ருதுராஜ், ஷிவம் துபேவின் அதிரடிக்கு பின்பு சென்னை அணியை 185 - 190 ரன்களுக்குள் மும்பை கட்டுப்படுத்தியிருக்க வேண்டும்.

    இவ்வாறு கவாஸ்கர் கூறினார்.

    சுனில் கவாஸ்கரின் இந்த கருத்து பெரும் சர்ச்சை ஏற்படுத்தி இருக்கிறது. 

    • சிஎஸ்கே அணிக்கு எதிராக ரோகித் சர்மா சதம் அடித்து அசத்தினார்.
    • 20 ரன்கள் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது சென்னை அணி.

    மும்பை:

    ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் 20 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது.

    வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 206 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக கெய்க்வாட் 69 ரன்களும், ஷிவம் துபே 66 ரன்களும் எடுத்தனர்.

    இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை அணிக்கு முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா சதமடித்து அசத்தினார். ஆனால் மற்ற வீரர்கள் சொதப்பியதால் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்கள் மட்டுமே அடித்து தோல்வியை தழுவியது.

    மும்பையில் நடந்த இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களுக்கு இணையாக சிஎஸ்கே ரசிகர்களும் மைதானத்தில் இருந்தனர். இறுதியில் வெற்றி சென்னை பக்கம் தான் என கிட்டத்தட்ட முடிவாகியது. அந்த சமயத்தில் ரோகித் சர்மா சதம் அடித்தார்.

    உடனே சுற்றியிருந்த மும்பை ரசிகர்கள் உள்பட சிஎஸ்கே ரசிகர்கள் ரோகித் சர்மாவுக்கு ஆதரவாக முழக்கமிட்டனர். குறிப்பாக சிஎஸ்கே அணியின் ஜெர்சி அணிந்திருந்த ஒரு ரசிகர் மும்பை சா ராஜா ரோகித் சர்மா என முழக்கமிட்டார். மேலும் ரோகித் சர்மாவுக்கு ஆதரவாக சிஎஸ்கே ரசிகை மும்பை இந்தியன்ஸ் கொடியை அசைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

    சென்னை ரசிகர்கள் மும்பை அணியின் முன்னாள் கேப்டனுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • பெண்கள் பிரிவில் பிரக்ஞானந்தாவின் சகோதரி வைஷாலி சீன வீராங்கனை டான் ஜோங்கிடம் தோற்றார்.
    • மற்றொரு இந்திய வீராங்கனை ஹம்பி ரஷியாவை சேர்ந்த கத்ரினா லாங்கோவுடன் டிரா செய்தார்.

    டொராண்டோ:

    உலக சாம்பியனுடன் மோதும் வீரர், வீராங்கனை யார்? என்பதை முடிவு செய்யும் கேண்டிடேட் செஸ் போட்டி கனடாவில் உள்ள டொரான்டோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா சார்பில் 5 பேர் பங்கேற்றுள்ளனர். 14 ரவுண்டுகளை கொண்ட இந்த போட்டி தொடரின் 9-வது சுற்று நேற்று நடந்தது.

    சென்னையை சேர்ந்த கிராண்ட்மாஸ்டர்கள் டி.குகேஷ்- பிரக்ஞானந்தா இந்த சுற்றில் மோதினார்கள். இதில் குகேஷ் கறுப்பு நிற காய்களுடனும், பிரக்ஞானந்தா வெள்ளை நிற காய்களுடனும் விளையாடினார்கள்.41-வது நகர்த்தலுக்கு பிறகு இந்த ஆட்டம் டிரா ஆனது.

    இருவரும் இந்த தொடரில் ஏற்கனவே மோதிய ஆட்டத்தில் குகேஷ் வெற்றி பெற்று இருந்தார். இந்த டிரா மூலம் அவர் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.

    மற்றொரு இந்திய வீரர் விதித் குஜராத்தி 9- வது சுற்றில் வெற்றி பெற்றார். வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய அவர் அமெரிக்காவின் ஹிகாரு நகமுராவை 36-வது நகர்த்தலுக்கு பிறகு வீழ்த்தினார். 2-வது முறையாக விதித் குஜராத்தி அவரை தோற்கடித்துள்ளார்.

    இயன் நெபோம்னியாச்சி (ரஷியா)-அலிரேசா பிரவுசியா (பிரான்ஸ்) மற்றும் பேபியானோ (அமெரிக்கா)-நிஜத் அப்சோவ் (அஜர்பைஜான்) ஆகியோர் மோதிய ஆட்டங்களும் டிரா ஆனது.

    9 சுற்றுகள் முடிவில் இயன் நெபோம்னியாச்சி, குகேஷ் ஆகியோர் தலா 5.5 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளனர். பிரக்ஞானந்தா 5 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் இருக்கிறார். விதித் குஜாராத்தி 4.5 புள்ளிகளுடன் 4 முதல் 6-வது இடத்தில் உள்ளார்.

    பெண்கள் பிரிவில் பிரக்ஞானந்தாவின் சகோதரி வைஷாலி சீன வீராங்கனை டான் ஜோங்கிடம் தோற்றார். மற்றொரு இந்திய வீராங்கனை ஹம்பி ரஷியாவை சேர்ந்த கத்ரினா லாங்கோவுடன் டிரா செய்தார்.

    9-வது ரவுண்டு முடிவில் ஹம்பி 4 புள்ளிகளுடன் 5 முதல் 6-வது இடத்திலும், வைஷாலி 2.5 புள்ளியுடன் கடைசி இடத்திலும் உள்ளனர்.

    • ஐ.பி.எல். 2024 டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது
    • ஹர்திக் பாண்ட்யா கேப்டன்சி குறித்து இங்கிலாந்து முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் கருத்து தெரிவித்துள்ளார்

    ஐ.பி.எல். 2024 டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மும்பை அணிக்கு ஐ.பி.எல். தொடரில் பல கோப்பைகளை வென்று கொடுத்த ரோகித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ஹர்திக் பாண்ட்யா மும்பை அணியின் புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டார்.இதனை மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

    போட்டி நடைபெறும்போது ஹர்திக் பாண்ட்யாவுக்கு எதிராக ரசிகர்கள் கோஷம் எழுப்பினர். தற்போதும் எழுப்பி வருகின்றனர். அணி நிர்வாகம், ரோகித் சர்மா மற்றும் ஹர்திக் பாண்ட்யா ஆகியோரால் சரி செய்ய முடியவில்லை. இது அணிக்கு பின்னடைவை ஏற்படுத்துவதாக உள்ளது.

    நடப்பு ஐ.பி.எல். தொடரில் ஹர்திக் பாண்ட்யா தலைமையில் விளையாடி வரும் மும்பை இந்தியன்ஸ் அணி முதல் 3 போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்வியை தழுவியது. ஆனால் அதற்கு அடுத்த 2 போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று வெற்றி பாதைக்கு அணி திரும்பியது. ஆனால் மீண்டும் நேற்று நடைபெற்ற சென்னை அணிக்கு எதிரான போட்டியில் மும்பை தோல்வியடைந்தது. அந்த தோல்விக்கு கடைசி ஓவரில் டோனிக்கு எதிராக பாண்டியா 20 ரன்கள் கொடுத்ததே முக்கிய காரணமாக அமைந்தது என்ற விமர்சனம் எழுந்துள்ளது.

    இந்நிலையில், ஹர்திக் பாண்ட்யா கேப்டன்சி குறித்து இங்கிலாந்து முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் கருத்து தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக பேசிய அவர் "ஹர்திக் பாண்ட்யா டாஸ் போடும்போதும் பேட்டிங் செய்ய வரும்போதும் அளவுக்கு அதிகமாக சிரித்த முகத்துடன் இருக்கிறார். மகிழ்ச்சியாக இருப்பதுபோல தன்னை காட்டிக்கொள்ள முயல்கிறார் ஆனால், அவர் உண்மையில் வருத்தத்தில் உள்ளார். ரசிகர்கள் BOO செய்து முழக்கமிடுவது போன்ற விஷயங்கள், ஹர்திக்கை காயப்படுத்தியுள்ளது. இது அவரது கேப்டன்சியை பாதிக்கிறது. அவரது இடத்தில் நானும் இருந்திருக்கிறேன். இது மிகவும் கடினமான சூழல்" என்று தெரிவித்துள்ளார்.

    "ஹர்திக் பாண்ட்யாவுக்கு என்ன நடக்கிறது. அவருக்கு எதிர்ப்பு தெரிவித்த ரசிகர்கள் தற்போது முன்னாள் சி.எஸ்.கே கேப்டன் டோனி பாண்ட்யாவை அடித்து நொறுக்குவதை பார்த்து மகிழ்ச்சியடைகிறார்கள். அது அவருக்கு வலியை கொடுக்கும். ஏனெனில் இந்திய வீரரான அவர் உணர்ச்சிவசப்படுகிறார். எனவே இப்படி நடக்கும் போது அது அவரை பாதிக்கிறது. இது நடக்காமல் இருக்க ஏதாவது நடக்க வேண்டும்" என்று கூறினார்.

    அத்துடன் வேகப்பந்து வீச்சாளர்கள் ரன்களை வாரி வழங்கும் போது உடனடியாக ஸ்பின்னர்களை பயன்படுத்தி எதிரணியை அட்டாக் செய்யும் யுக்தியை கேப்டனாக பாண்ட்யா பின்பற்றவில்லை என பீட்டர்சன் விமர்சித்தார். அந்த வகையில் மிகப்பெரிய அழுத்தத்திற்குள் தவிக்கும் பாண்ட்யா அடுத்து வரும் போட்டிகளில் மும்பையை வெற்றி பாதைக்கு கொண்டு வர வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்" என்று அவர் தெரிவித்தார்.

    • ஆர்சிபி ஆறு போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்று கடைசி இடம்.
    • பஞ்சாப், மும்பை, டெல்லி அணிகள் தலா இரண்டு வெற்றிகள் மூலம் முறையே 7 முதல் 9 இடங்களை பிடித்துள்ளன.

    ஐபிஎல் கிரிக்கெட்டில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன் ரைசர்ஸ் ஐதராபாத் ஆகிய அணைகளைத் தவிர மற்ற எட்டு அணியிகள் தலா 6 போட்டிகளில் விளையாடி முடித்து விட்டன.

    நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் சிஎஸ்கே 20 ரன் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியே வீழ்த்தி புள்ளிகள் பட்டியலில் 3-வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.

    இதுவரை நடந்துள்ள போட்டிகள் முடிவில் ஒவ்வொரு அணிகளும் புள்ளிகள் பட்டியலில் எந்த இடத்தில் உள்ளன என்பதை பார்ப்போம்...

    ராஜஸ்தான் ராயல்ஸ் 6 போட்டியில் ஐந்தில் வெற்றி பெற்று பத்து புள்ளிகளுடன் முதல் இடம் வகிக்கிறது.

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஐந்து போட்டியில் நான்கில் வெற்றி பெற்று எட்டு புள்ளிகளுடன் இரண்டாம் இடம் பிடித்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் ஆறு போட்டிகளில் நான்கில் வெற்றி பெற்று 8 புள்ளிகள் உடன் 3-வது இடம் வகிக்கிறது.

    சன்ரைசர்ஸ் ஐதராபாத், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் தலா மூன்று வெற்றிகள் பெற்றுள்ளன. ரன் ரேட் அடிப்படையில் சன் ரைசர்ஸ் 4-வது இடத்தையும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஐந்தாவது இடத்தையும், குஜராத் ஆறாவது இடத்தையும் பிடித்துள்ளன.

    பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் ஆகிய மூன்று அணிகள் தலா இரண்டு வெற்றிகள் பெற்று ரன்ரேட் அடிப்படையில் முறையே 7 முதல் 9 இடங்களை பிடித்துள்ளன.

    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆறு போட்டியில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்று இரண்டு புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது.

    ஐபிஎல் தொடரில் ஒரு அணி பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேற வேண்டும் என்றால், 10 இடங்களில் வெற்றி பெற வேண்டும். ஒன்பது அல்லது எட்டு இடங்களில் வெற்றி பெற்றால் மற்ற அணிகளின் ரன்ரேட், வெற்றித் தோல்வி ஆகியவற்றை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்.

    தற்போதைய நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆறில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இன்று சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடன் மோதுகிறது. இந்த போட்டியில் இருந்து அந்த அணி மீதமுள்ள 8 போட்டிகளிலும் வெற்றி பெற்றே தீர வேண்டும்.

    இன்றைய போட்டியில் தோல்வியடைந்தால் ஏறக்குறைய போட்டியிலிருந்து வெளியேறும் நிலைக்கு தள்ளப்படும். ஆகவே ஆர்.சி.பி. அணிக்கு இன்றைய போட்டியிலிருந்து அனைத்து போட்டிகளும் சால்வா? சாவா? போட்டிகள் போன்றே கருதப்படும்.

    பஞ்சாப், மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் இன்னும் ஒரு போட்டியில் தோல்வியடைந்தால் கூட பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேற முடியும்.

    • நேற்று சிஎஸ்கே அணிக்கெதிராக ஐந்து சிக்ஸ் விளாசினார்.
    • கிறிஸ் கெய்ல் 1056 சிக்ஸ் உடன் முதல் இடத்தில் உள்ளார்.

    ரோகித் சர்மாவின் அதிரடியான சதம் நேற்று பலன் இல்லாமல் போனது. அவர் 63 பந்தில் 11 பவுண்டரி, 5 சிக்சர்களுடன் 105 ரன் எடுத்தார். இதன் மூலம் ரோகித் சர்மா ஒட்டு மொத்த 20 ஓவர் போட்டியில் 500 சிக்சர்களை கடந்மு சாதனை படைத்தார்.

    419 இன்னிங்சில் அவர் 502 சிக்சர்கள் அடித்துள்ளார். 20 ஓவர் போட்டிகளில் 500 சிக்சர்கள் எடுத்த முதல் இந்தியர் ஆவார்.

    ஒட்டுமொத்தமாக அதிக சிக்ஸ் அடித்தவர்கள் பட்டியலில், கிறிஸ் கெய்ல் (1,056 சிக்சர்கள்), பொல்லார்டு (860), ஆந்த்ரே ரஸல் (678), கொலின் முன்ரோ (548) ஆகியோருக்கு அடுத்தபடியாக ரோகித் சர்மா உள்ளார்.

    முதல் 3  இடங்களில் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் உள்ளனர். அதற்கு அடுத்தபடியாக நியூசிலாந்தை சேர்ந்தவர் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் முதலில் விளையாடிய சிஎஸ்கே 206 ரன்கள் குவித்தது. பின்னர் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியில் 186 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது.

    ×