என் மலர்
விளையாட்டு
- 17 வருடத்திற்குப் பிறகு இந்திய அணி 2-வது முறையாக டி20 உலகக்கோப்பையை வென்றுள்ளது.
- உலகக்கோப்பையை வென்றதும் மைதானத்தின் புற்களை ரோகித் சுவைத்து பார்ப்பார்.
இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 இறுதிப் போட்டியில் இந்தியா 7 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அறிமுகமான 2007-ல் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. அதன்பின் இந்தியா டி20 உலகக் கோப்பையை வெல்ல முடியாமல் இருந்தது. இந்த நிலையில் 17 வருடத்திற்குப் பிறகு இந்திய அணி 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
பிரபல கால்பந்து வீரரான மெஸ்ஸி ஸ்டைலில் டி20 உலகக் கோப்பையை ரோகித் சர்மா வாங்குவார். இது சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகி வருகிறது.
இந்நிலையில் மெஸ்ஸி ஸ்டைலில் ரோகித் சர்மா உலகக்கோப்பை வாங்கும் புகைப்படத்தை FIFA உலகக்கோப்பை அமைப்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அந்த இன்ஸ்டா பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
பிபாவை தொடர்ந்து பிரபல டென்னிஸ் போட்டியான விம்பிள்டன் தனது இன்ஸ்டகிராம் பக்கமும் ரோகித் - நோவக் ஜோகோவிச் படத்தை பகிர்ந்துள்ளது.
உலகக்கோப்பையை வென்றதும் மைதானத்தின் புற்களை ரோகித் சுவைத்து பார்ப்பார். அந்த புகைப்படத்துடன் டென்னிஸ் மைதானத்தின் புற்களை நோவக் ஜோகோவிச் சுவைக்கும் படத்தோடு இணைத்து விம்பிள்டன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இந்த புகைப்பாம் தற்போது வைரலாகி வருகிறது.
- கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நாளை தொடங்குகிறது.
- ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் சுமித் நாகலுக்கு முதல் சுற்றே கடினமாக அமைந்துள்ளது.
லண்டன்:
டென்னிசில் ஆண்டுதோறும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் என 4 வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற போட்டிகள் நடத்தப்படுகின்றன.
இந்நிலையில், விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நாளை தொடங்குகிறது. இந்தப் போட்டியில் யார்- யாருடன் மோதுவது என்பது குலுக்கல் மூலம் சமீபத்தில் முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, ஆண்கள் ஒற்றையர் பிரிவில் தகுதிபெற்ற ஒரே இந்தியரான சுமித் நாகலுக்கு முதல் சுற்றே கடினமாக அமைந்துள்ளது. அவர் 53-ம் நிலை வீரர் செர்பியாவின் மியோமிர் கெச்மனோவிச்சுடன் முதல் சுற்றில் நாளை மோதுகிறார்.
நடப்பு சாம்பியன் கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெயின்), எஸ்தோனியா வீரர் மார்க் லாஜலை எதிர்கொள்கிறார். முன்னாள் நம்பர் ஒன் வீரர் நோவக் ஜோகோவிச் (செர்பியா), செக் குடியரசின் தகுதி நிலை வீரர் விட் கோபிரிவாவுடன் மோதுகிறார்.
- டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அறிமுகமான 2007-ல் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.
- இந்திய அணி டி20 உலகக்கோப்பையை வென்றதற்கு கே.எல். ராகுல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 இறுதிப் போட்டியில் இந்தியா 7 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அறிமுகமான 2007-ல் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. அதன்பின் இந்தியா டி20 உலகக் கோப்பையை வெல்ல முடியாமல் இருந்தது. இந்த நிலையில் 17 வருடத்திற்குப் பிறகு இந்திய அணி 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
இந்நிலை இந்திய அணி டி20 உலகக்கோப்பையை வென்றதற்கு கே.எல். ராகு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில்
"போட்டி முழுவதும் இந்திய அணி புத்திசாலித்தனமாக இருந்தது. இந்த அணி தோற்கடிக்கப்படாத மற்றும் விரிவானது.
இந்திய அணிக்கு எனது வாழ்த்துக்கள். இந்த வெற்றிக்கு உறுதுணையாக இருந்தவர்கள், ரசிகர்கள் மற்றும் இந்தியர்கள் என ஒட்டு மொத்த தேசமும் உங்களுடன் சேர்ந்து வெற்றியை கொண்டாடுகிறது" என்று கூறியுள்ளார்.
Sheer brilliance from this team throughout the competition.
— K L Rahul (@klrahul) June 30, 2024
Unbeaten and comprehensive.
Congratulations team ??
The support staff, the fans and all Indians ?
The whole nation celebrates with you guys ? pic.twitter.com/dk6LghMVOV
- 17 வருடத்திற்குப் பிறகு இந்திய அணி 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
- பும்ரா மற்றும் எனது அணியினருக்கு வெற்றிக்கான பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 இறுதிப் போட்டியில் இந்தியா 7 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அறிமுகமான 2007-ல் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. அதன்பின் இந்தியா டி20 உலகக் கோப்பையை வெல்ல முடியாமல் இருந்தது. இந்த நிலையில் 17 வருடத்திற்குப் பிறகு இந்திய அணி 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
இது குறித்து பாண்ட்யா கூறியதாவது:-
மிகவும் உணர்வுபூர்வமாக இருக்கிறது. இதற்காக நாங்கள் கடினமாக உழைத்தோம். சில நேரங்களில் அது கிளிக் ஆகாது. ஆனால் மொத்த தேசமும் விரும்பியதை இன்று நாங்கள் சாதித்துள்ளோம். எனக்கு இன்னும் இது அதிக ஸ்பெஷலானது. ஏனெனில் கடந்த 6 மாதங்களாக எனக்கு மோசமாக சென்றது. அப்போது நான் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.
இருப்பினும் கடினமாக உழைத்தால் என்னால் ஜொலிக்க முடியும் என்பது எனக்குத் தெரியும். இது போன்ற வாய்ப்புகள் தான் ஸ்பெஷலாக்குகிறது. எங்களுடைய திட்டத்தை செயல்படுத்தி அமைதியாக இருந்து அழுத்தத்தை எதிரணி பக்கம் கொண்டு சென்றால் சாதிக்க முடியும் என்று நாங்கள் நம்பினோம். பும்ரா மற்றும் எனது அணியினுக்கு வெற்றிக்கான பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒவ்வொரு பந்திலும் 100% கமிட்டாக விரும்பினேன். ராகுல் டிராவிட்டுகாக மகிழ்ச்சி. அற்புதமான மனிதரான அவருடன் வேலை செய்தது மகிழ்ச்சியாக இருந்தது. அவருக்கு நாங்கள் அற்புதமான வழியனுப்புதலை செய்துள்ளோம். நாங்கள் நல்ல நண்பர்கள். அனைத்து துணை பயிற்சிகளுக்காகவும் மகிழ்ச்சியாடைகிறேன். என்று கூறினார்.
- டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அறிமுகமான 2007-ல் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.
- 17 வருடத்திற்குப் பிறகு இந்திய அணி 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 இறுதிப் போட்டியில் இந்தியா 7 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அறிமுகமான 2007-ல் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. அதன்பின் இந்தியா டி20 உலகக் கோப்பையை வெல்ல முடியாமல் இருந்தது. இந்த நிலையில் 17 வருடத்திற்குப் பிறகு இந்திய அணி 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
பிரபல கால்பந்து வீரரான மெஸ்ஸி ஸ்டைலில் டி20 உலகக் கோப்பையை ரோகித் சர்மா வாங்குவார். இது சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகி வருகிறது.
இந்நிலையில் மெஸ்ஸி ஸ்டைலில் ரோகித் சர்மா உலகக்கோப்பை வாங்கும் புகைப்படத்தை FIFA உலகக்கோப்பை அமைப்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அந்த இன்ஸ்டா பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
- இந்திய அணி வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை தட்டி சென்றது.
- காட்சிகளை பார்த்த பயனர்கள் வீடியோவை லைக் செய்தனர்.
டி-20 உலககோப்பை கிரிக்கெட்டில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்திய அணி தென்ஆப்ரிக்காவை வீழ்த்தி வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை தட்டி சென்றது. இந்திய அணியின் வெற்றியை நாடு முழுவதும் ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.
முன்னதாக இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுவதற்காக ரசிகர்கள் செய்த பிரார்த்தனை தொடர்பான சில வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வகையில் பாட்னாவில் உள்ள வேதா வித்யாலயா மாணவர்கள் இந்திய கிரிக்கெட் வீரர்களின் புகைப்படங்களை கையில் வைத்துக்கொண்டு, இந்திய அணி வெற்றி பெற வேண்டி அனுமன் பாடல் பாடிய காட்சிகள் உள்ளது.
அந்த வீடியோவில், மாணவர்கள் தங்கள் கைகளில் ரோகித் சர்மா, விராட் கோலி, குல்திப் யாதவ், பும்ரா உள்ளிட்ட இந்திய வீரர்களின் புகைப்படங்களை கையில் வைத்து கொண்டு அனுமன் மந்திரம் பாடும் காட்சிகளை பார்த்த பயனர்கள் வீடியோவை லைக் செய்தனர்.
- பும்ரா 4 ஓவர் வீசி 18 ரன் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். அவர் 2 பேரை போல்டாக்கிய விதம் மிகவும் அற்புதமானது.
- வீராட்கோலியின் அரை சதம் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தது.
20 ஓவர் உலக கோப்பையை இந்திய அணி கைப்பற்றும் என்று யாரும் எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள். ஏனென்றால் கிளாசனின் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணியின் ஐ.சி.சி. கோப்பை கனவு நசுங்கி விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அக்ஷர் படேல் வீசிய 15-வது ஒவரில் கிளாசன் 2 சிக்சர், 2 பவுண்டரி அடித்தார். அந்த ஓவரில் 24 ரன் கிடைத்தது. இதனால் தென் ஆப்பிரிக்காவுக்கு 30 பந்தில் 30 ரன் தேவை என்ற எளிதான நிலை ஏற்பட்டது. கைவசம் 6 விக்கெட் இருந்தது.
16-வது ஓவரில் பும்ரா 4 ரன்னே கொடுத்தார். இதனால் 24 பந்தில் 26 ரன் என்ற நிலை இருந்தது. ஹர்திக் பாண்ட்யா வீசிய 17-வது ஓவரில் திருப்புமுனை ஏற்பட்டது. அவர் முதல் பந்திலேயே கிளாசனை அவுட் செய்தார். அந்த ஓவரில் 4 ரன் மட்டுமே கொடுக்கப்பட்டது. பும்ரா 18-வது ஓவரில் 2 ரன்னே கொடுத்து 1 விக்கெட்டை கைப்பற்றினார். இதனால் கடைசி 2 ஓவரில் 20 ரன் தேவைப்பட்டது. அர்ஷ்தீப்சிங் 19-வது ஓவரில் 4 ரன்னே கொடுத்தார். கடைசி ஓவரில் தென்ஆப்பிரிக்கா வெற்றிக்கு 16 ரன் தேவைப்பட்டது. ஹர்திக் பாண்ட்யா கடைசி ஓவரை வீசினார்.
முதல் பந்தில் மில்லர் பந்தை சிக்சருக்கு தூக்கி அடித்தார். எல்லையில் நின்ற சூர்யகுமார் யாதவ் மிகவும் அற்புதமாககேட்ச் பிடித்தார். இது ஆட்டத்தை இந்தியா பக்கம் கொண்டு வந்தது. ஹர்திக் பாண்ட்யா கடைசி ஓவரில் 8 ரன்னை கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தி வெற்றிக்கு காரணமாக திகழ்ந்தார். கடைசி கட்டத்தில் ஏற்பட்ட திருப்பத்தால் தென்ஆப்பிரிக்காவுக்கு செல்ல வேண்டிய 20 ஓவர் உலக கோப்பை இந்தியாவுக்கு கிடைத்தது.

பரபரப்பான இறுதிப் போட்டியில் இந்தியா கோப்பையை வெல்ல காரணமாக இருந்து திருப்புமுனை ஏற்படுத்திய 5 வீரர்கள் வருமாறு:-
பும்ராவின் மந்திர பந்துவீச்சு
இந்தியா 2-வது முறையாக 20 ஓவர் உலக கோப்பையை வெல்ல பும்ராவின் மேட்ச் வின்னிங் பந்து வீச்சு உதவியாக இருந்தது. அவர் மீது கேப்டன் ரோகித் சர்மா வைத்த நம்பிக்கையை பொய்யாக்கவில்லை. 16-வது ஓவரில் வெறும் 4 ரன்களே கொடுத்த அவர் 18-வது ஓவரில் ஜான்சென் விக்கெட்டை கைப்பற்றி 2 ரன்னே விட்டு கொடுத்தார். பும்ரா 4 ஓவர் வீசி 18 ரன் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். அவர் 2 பேரை போல்டாக்கிய விதம் மிகவும் அற்புதமானது.

சூர்யகுமார் யாதவின் அற்புத கேட்ச்
கடைசி ஓவரின் முதல் பந்தில் மில்லர் அடித்த பந்தை எல்லை கோட்டில் நின்ற சூர்யகுமார் யாதவ் மிகவும் அற்புதமாக கேட்ச் பிடித்தார். அவரது புத்தாலித்தனமான செயல்பாடு அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. அந்த பந்தை பிடிக்காமல் இருந்தால் சிக்சருக்கு சென்று இருக்கும். சூர்யகுமார் யாதவின் அபாரமான கேட்ச் சமூக வலைதள பகிரப்பட்டு பாராட்டப்பட்டு வருகிறது.

அக்ஷர் படேலின் ஆல்ரவுண்டு பங்களிப்பு
அக்ஷர் படேல் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சாதித்தார். 31 பந்தில் 47 ரன் எடுத்தார். இந்திய அணி 34 ரன்னில் 3 விக்கெட்டை இழந்த போது களத்துக்கு வந்தார். அவர் கோலியுடன் இணைந்து 72 ரன் எடுத்தார். அவரது ஸ்கோரில் ஒரு பவுண்டரியும், 4 சிக்சர்களும் அடங்கும். பந்து வீச்சில் முக்கிய விக்கெட்டான ஸ்டப்சை அவுட் செய்தார்.

வீராட்கோலியின் அரை சதம்
வீராட்கோலியின் அரை சதம் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தது. அவர் 76 ரன்கள் (56 பந்து) எடுத்து மற்றொரு மேட்ச் வின்னிங் பேட்டிங்கை வெளிப்படுத்தினார். அக்ஷர் படேல், ஷிவம் துபேபுடன் இணைந்த அவரது ஆட்டம் மிகவும் முக்கியமானது.

ஹர்திக்பாண்ட்யாவின் அபார பந்துவீச்சு
சுழற்பந்து வீரர்கள் சாதிக்காத போது ஹர்திக் பாண்ட்யா அபாரமாக பந்துவீசி அனைவரது பாராட்டையும் பெற்றார். முக்கிய விக்கெட்டான கிளாசனை அவர் வீழ்த்தியது மிகப்பெரிய திருப்புமுனையாகும். கடைசி ஓவரில் மில்லர், ரபடா ஆகிய 2 விக்கெட்டை கைப்பற்றியது அடுத்த திருப்புமுனையாகும்.

அவர் 3 ஓவர் வீசி 20 ரன் கொடுத்து 3 விக்கெட் கைப்பற்றினார். ஹர்திக் பாண்ட்யாவின் பந்து வீச்சு 17 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா 20 ஓவர் உலக கோப்பையை வெல்ல காரணமாக அமைந்தது.
- பல முறை இறுதிப் போட்டிக்கு வந்தும் ஐ.சி.சி. கோப்பையை வெல்ல முடியாத ஏக்கம் இருந்தது.
- அந்த கனவு நீண்ட இடைவெளிக்கு பிறகு நனவானது. வீரர்களால் உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியவில்லை.
இந்திய அணி வெற்றி பெற்றதும் வீரர்கள் மைதானத்தில் ஆனந்த கண்ணீர் வடித்தனர். பல முறை இறுதிப் போட்டிக்கு வந்தும் ஐ.சி.சி. கோப்பையை வெல்ல முடியாத ஏக்கம் இருந்தது. அந்த கனவு நீண்ட இடைவெளிக்கு பிறகு நனவானது. வீரர்களால் உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியவில்லை.

இந்த மகிழ்ச்சியான தருணத்தில் கேப்டன் ரோகித் சர்மா, ஹர்திக் பாண்ட்யா, விராட்கோலி உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியாமல் கண்ணீர் விட்டு அழுதனர்.

ரோகித்சர்மா மைதானத்தில் குப்புற படுத்து கையால் தட்டி உற்சாகத்தை வெளிப்படுத்தினார். அதோடு தேசிய கொடியை தனது கைகளால் நிலை நிறுத்தினார். கோலியும், பாண்ட்யாவும் தனது குடும்பத்தினருடன் செல்போனில் வீடியோகால் மூலம் பேசி சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டனர்.
இது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- 2011-ம் ஆண்டு நடந்த ஒருநாள் போட்டி உலக கோப்பையை அவரது தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியது.
- 1983-ம் ஆண்டு ஒருநாள் போட்டிக்கான 50 ஓவர் உலக கோப்பையை அவரது தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியது.
இந்திய அணிக்கு முதல் முறையாக உலக கோப்பையை பெற்றுக் கொடுத்தவர் கபில்தேவ். 1983-ம் ஆண்டு ஒருநாள் போட்டிக்கான 50 ஓவர் உலக கோப்பையை அவரது தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியது.
28 ஆண்டுகளுக்கு பிறகு டோனி 2-வது முறையாக 50 ஓவர் உலக கோப்பையை வென்று கொடுத்தார். 2011-ம் ஆண்டு நடந்த ஒருநாள் போட்டி உலக கோப்பையை அவரது தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியது.
முன்னதாக டோனி தலை மையில் இந்திய அணி 2007-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட 20 ஓவர் உலக கோப்பையை வென்றது. தற்போது 17 ஆண்டுகளுக்கு பிறகு ரோகித் சர்மா 2-வது முறையாக 20 ஓவர் உலக கோப்பையை கைப்பற்றியுள்ளார். கபில்தேவ், டோனி வரிசையில் ரோகித் சர்மா இணைந்துள்ளார்.
டோனி 3 ஐ.சி.சி. கோப்பை யையும் (2007 இருபது ஓவர் உலக கோப்பை, 2011 ஒரு நாள் போட்டி உலக கோப்பை, 2013 சாம்பியன்ஸ் டிராபி), கபில்தேவ் (1983 ஒருநாள் போட்டி உலக கோப்பை), ரோகித் சர்மா (2024 இருபது ஓவர் உலக கோப்பை தலா ஒரு ஐ.சி.சி. கோப்பையை யும் பெற்றுக் கொடுத்தனர்.
சாம்பியன் பட்டம் இந்திய வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கு தெண் டுல்கர், டோனி உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
- தென் ஆப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியது.
- இதன் மூலம் 2-வது முறையாக டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்றுள்ளது.
இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 இறுதிப் போட்டியில் இந்தியா 7 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அறிமுகமான 2007-ல் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. அதன்பின் இந்தியா டி20 உலகக் கோப்பையை வெல்ல முடியாமல் இருந்தது. இந்த நிலையில் 17 வருடத்திற்குப் பிறகு இந்திய அணி 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
இந்நிலையில் பிரபலமான கால்பந்து வீரரான மெஸ்ஸி ஸ்டைலில் உலகக் கோப்பையை ரோகித் சர்மா வாங்குவார். இது சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது. ஆனால் அந்த மாதிரி வந்து கோப்பை வாங்குங்கள் என கூறியது சக வீரரான குல்தீப் யாதவ். இந்திய வீரர்கள் அனைவரும் வரிசையாக நின்று பதக்கங்களை வாங்கி கொண்டிருந்தார். அப்போது ரோகித் சர்மாவிடம் குல்தீப், மெஸ்ஸி ஸ்டைலில் கோப்பையை பெறுங்கள் என கூறியதும் அதற்கு ரோகித் சரி என்பது போல தலையை அசைப்பது அந்த வீடியோவில் பதிவாகி இருந்தது.
- டிராவிட்டுக்கு பிரியா விடை கொடுக்கும் விதமாக இந்திய வீரர்கள் செய்த செயல் வைரலாகி வருகிறது.
- ரோகித் சர்மா விராட் கோலியிடன் ராகுல் டிராவிட்டை இப்படி செய்யலாம் என கூறினார்.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் இருந்து வருகிறார். அவரது பதவி காலம் இந்த 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியுடன் முடிவுக்கு வருகிறது.
அவர் பயிற்சியாளராக தனது கடைசி உலகக் கோப்பை போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார். இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான ராகுல் டிராவிட் டி20 உலகக் கோப்பையில் கைப்பற்றும் முதல் டிராபி இது தான். வீரராகவோ, கேப்டனாகவோ உலகக் கோப்பையை கையில் ஏந்தி சாதிக்க முடியாத ராகுல் டிராவிட் ஒரு பயிற்சியாளராக தனது உலகக் கோப்பை ஏக்கத்தை தணித்து இருக்கிறார்.
இந்நிலையில் அவருக்கு பிரியா விடை கொடுக்கும் விதமாக இந்திய வீரர்கள் செய்த செயல் வைரலாகி வருகிறது. அந்த வகையில் ராகுல் டிராவிட்டை இந்திய வீரர்கள் தலைக்கு மேலாக தூக்கி போட்டு கொண்டாடி மகிழ்ந்தனர். இதனை ரோகித் சர்மா விராட் கோலியிடம் கூறி இதனை செய்தனர். அவர்களது செயலை ராகுல் டிராவிட்டும் ஏற்றுக் கொண்டு அவர்களுடன் சந்தோசத்தை வெளிப்படுத்தினார்.
டிராவிட்டின் பயிற்சியில் கீழ் இந்திய அணி 2023-ம் ஆண்டு நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், 50 ஓவர் உலகக் கோப்பை ஆகியவற்றில் இறுதிப்போட்டியில் தோல்வி கண்டிருந்தது.
- இந்திய கிரிக்கெட்டுகாக அவர் ஏராளமானவற்றை செய்துள்ளார்
- இந்த வெற்றி பயிற்சியாளர் மற்றும் வீரர்கள் இடையிலான உறவை நாங்கள் வலுவாக பின்பற்றியதற்கான முடிவாகும்.
டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதின. இந்த போட்டியில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பதிவு செய்தது.
மேலும் 2007-ஆம் ஆண்டு டோனியின் தலைமையிலான இந்திய அணி டி20 உலக கோப்பையை வென்றதுக்கு பின்னர் தற்போது 17 ஆண்டுகள் கழித்து ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது மீண்டும் 2-வது முறையாக டி20 உலக கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்றது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இந்த வெற்றியை நாங்கள் ராகுல் டிராவிட்டுக்காக சாதித்ததில் மகிழ்ச்சியடைகிறேன் என ரோகித் சர்மா கூறியுள்ளார்.
இது குறித்து ரோகித் சர்மா கூறியதாவது:-
கடந்த 20 - 25 வருடங்களாக அவர் இந்திய கிரிக்கெட்டுக்கு ஆற்றிய பங்கு அபாரமானது. இந்த ஒரே ஒரு கோப்பை மட்டுமே அவருடைய அலமாரியில் தவறி இருந்ததாக நான் கருதுகிறேன். எனவே அவர் கோப்பையை வென்றதற்காக எங்கள் அனைவரது சார்பாக மகிழ்ச்சியடைகிறேன். அவருக்காக நாங்கள் இதை செய்துள்ளோம். தற்போது அவர் எந்தளவுக்கு பெருமையாகவும் ஆர்வமாகவும் இருக்கிறார் என்பதை நீங்களே பாருங்கள்.
இந்த வெற்றி பயிற்சியாளர் மற்றும் வீரர்கள் இடையிலான உறவை நாங்கள் வலுவாக பின்பற்றியதற்கான முடிவாகும். இதை நாங்கள் ராகுல் டிராவிட்டுக்காக சாதித்ததில் மகிழ்ச்சியடைகிறேன். இந்திய கிரிக்கெட்டுகாக அவர் ஏராளமானவற்றை செய்துள்ளார் என்று கூறினார்.
முன்னதாக எனக்காக வெல்லாமல் நாட்டுக்காக உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்று ஃபைனலுக்கு முன்பாக ட்ராவிட் சொன்னது குறிப்பிடத்தக்கது.






