என் மலர்
விளையாட்டு
- இங்கிலாந்துடன் மோதிய 24 டி20 ஆட்டத்தில் இந்தியா 13 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
- இரு அணிகளும் கடைசியாக மோதிய ஆட்டத்தில் இந்திய அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஜாஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஐந்து டி20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டி20 போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நாளை (ஜனவரி 22-ம் தேதி) நடைபெற இருக்க்கிறது.
இந்தியா இங்கிலாந்து ஆகிய இரு அணிகளும் நாளை மோதுவது 25-வது 20 ஓவர் போட்டியாகும். இதுவரை நடந்த 24 டி20 ஆட்டத்தில் இந்தியா 13 போட்டிகளிலும் இங்கிலாந்து 11 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.
இங்கிலாந்துக்கு எதிரான 25 ஆவது டி20 போட்டியில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி வெற்றி பெற்று தனது ஆதிக்கத்தை தக்க வைக்குமா என்ற ஆவல் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இரு அணிகளும் கடைசியாக கடந்த ஜூன் மாதம் நடந்த டி20 உலக கோப்பை தொடரின் அரை இறுதி போட்டியில் மோதின. இந்த போட்டியில் இந்திய அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்திய அணி விவரம்:
சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அக்சர் படேல் (துணை கேப்டன்), அபிஷேக் சர்மா, அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, துருவ் ஜூரெல், முகமது சமி, நிதிஷ் குமார் ரெட்டி, ஹர்திக் பாண்ட்யா, ரவி பிஷ்னோய், சஞ்சு சாம்சன், ரிங்கு சிங், திலக் வர்மா, வருண் சக்கரவர்த்தி மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகிய வீரர்கள் அணியில் உள்ளனர்.
- ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது.
- கலப்பு இரட்டையர் பிரிவில் போபண்ணா ஜோடி அதிர்ச்சி தோல்வி அடைந்தது.
மெல்போர்ன்:
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதி சுற்று போட்டிகள் மெல்போர்னில் நடந்து வருகின்றன.
இதில் ஆண்கள் கலப்பு இரட்டையர் பிரிவு காலிறுதி சுற்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா-சீனாவின் ஷுவாய் ஜாங் ஜோடி, ஆஸ்திரேலியாவின் ஜான் பியர்ஸ்-ஒலிவியா ஜோடியுடன் மோதியது.
இதில் போபண்ணா ஜோடி முதல் செட்டை 6-2 என வென்றது. ஆனால் அடுத்த இரு செட்களை 4-6, 9-11 என இழந்து தோல்வி அடைந்து, தொடரில் இருந்து வெளியேறியது.
- இத்தொடருக்கான தொடக்க நிகழ்ச்சியை அடுத்த மாதம் 16 மற்றும் 17-ம் தேதிகளில் நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது.
- தொடக்க விழாவில் அனைத்து அணி கேப்டன்களும் பங்கேற்பது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது.
ஐசிசியின் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 19-ந்தேதி பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்க உள்ளது. இத்தொடரில் பங்கேற்கும் 8 அணிகள் இரு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன.
இதில் குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து மற்று வங்கதேச அணிகளும், குரூப் பி பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம்பிடித்துள்ளன.
இத்தொடருக்கான தொடக்க நிகழ்ச்சியை அடுத்த மாதம் 16 மற்றும் 17-ம் தேதிகளில் நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது. மேலும் ஐசிசி நிகழ்வுகளில் வழக்கமான நடைமுறையான தொடக்க விழாவில் அனைத்து அணி கேப்டன்களும் பங்கேற்பது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது.
அந்த வகையில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா இந்த நிகழ்வில் பங்கேற்க பாகிஸ்தான் செல்ல உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
இந்த நிலையில், இந்திய அணியின் ஜெர்சியில் தொடரை நடத்தும் பாகிஸ்தான் பெயரை அச்சிட பிசிசிஐ மறுத்ததாக கூறப்படுகிறது. இது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இதுதொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறுகையில், பி.சி.சி.ஐ கிரிக்கெட்டில் அரசியலைக் கொண்டுவருகிறது, இது விளையாட்டுக்கு நல்லதல்ல. அவர்கள் பாகிஸ்தானுக்கு பயணம் செய்ய மறுத்துவிட்டனர். தொடக்க விழாவிற்கு தங்கள் கேப்டனை (பாகிஸ்தானுக்கு) அனுப்ப அவர்கள் விரும்பவில்லை. இப்போது அவர்கள் தங்கள் ஜெர்சியில் நாட்டின் (பாகிஸ்தான்) பெயரை அச்சிட விரும்பவில்லை என்று தகவல்கள் வந்துள்ளன. சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐ.சி.சி.) இதை அனுமதிக்காது, பாகிஸ்தானை ஆதரிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்," என்று தெரிவித்தார்.
சாம்பியன்ஸ் டிராபி தொடங்க இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், இந்தத் தொடர் குறித்த சர்ச்சைகள் தொடர்ந்து எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது.
- கார்ல்சனை தோற்கடித்ததாக கூறுகிறார்.
- புல்லட் பிரால் முறையில் நடந்ததாக கூறப்படுகிறது.
ஐந்து முறை உலக செஸ் சாம்பியன் மேக்னஸ் கார்ல்சன், ஆன்லைன் போட்டி ஒன்றில் 9 வயது வங்கதேச பள்ளி மாணவனிடம் தோல்வியடைந்ததாக கூறப்படுகிறது. வங்கதேச நாளிதழில் வெளியான செய்தியின்படி, FIDE மாஸ்டரான பயிற்சியாளர் நைம் ஹக், தனது மாணவன் கார்ல்சனை தோற்கடித்ததாக கூறுகிறார்.
டாக்காவைச் சேர்ந்த மூன்றாம் வகுப்பு மாணவர் ரியான் ரஷீத் முக்தாவுக்கும் கார்ல்சனுக்கும் இடையில் ஆன்லைனில் நடந்ததாக கூறப்படும் போட்டி ஜனவரி 18-ம் தேதி புல்லட் பிரால் முறையில் நடந்ததாக தி பிசினஸ் ஸ்டாண்டர்ட் தெரிவித்துள்ளது.
செஸ் வலைதளத்தில் (chess.com) உள்ள தனது அக்கவுண்ட் மற்றும் ப்ரோபைலை தனது மாணவர் ரியான் ரஷீத்-க்கு வழங்கியதாக நைம் தெரிவித்துள்ளார். செஸ் வலைதளத்தில் விளையாடும் போது, ஆன்லைனில் அதிர்ஷ்டவசமாக சிறுவன் கார்ல்சனுடன் விளையாடும் சூழல் ஏற்பட்டது. புல்லட் பிரால் முறையில் விளையாடும் போது, வீரர்கள் தங்கள் நகர்வுகளை முடிக்க ஒரு நிமிடம் மட்டுமே வழங்கப்படுகிறது.
இது குறித்து பேசிய நைம், "நான் முக்தாவுக்கு சதுரங்கம் கற்று கொடுக்கிறேன். அவருக்கும் எப்பவும் ஆன்லைனில் விளையாட மட்டுமே பிடிக்கும். இதனால் நான் அவருக்கு என் செஸ் ஐடியைப் பயன்படுத்த அனுமதி அளித்து இருந்தேன்."
"பிறகு, அவர் திடீரென்று என்னை அழைத்து கார்ல்சனை தோற்கடித்ததாகக் கூறினார். முதலில், என்னால் அதை நம்ப முடியவில்லை. பின்னர் அவர் எனக்கு ஸ்கிரீன்ஷாட்கள் மற்றும் அனைத்து விளையாட்டு விவரங்களையும் அனுப்பினார். நான் ஆச்சரியப்பட்டேன்," என்று தெரிவித்தார்.
- இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது.
- 15 பேர் அடங்கிய இந்திய அணி அறிவிப்பு.
ஜாஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஐந்து டி20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டி20 போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நாளை (ஜனவரி 22-ம் தேதி) நடைபெற இருக்க்கிறது. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி வெற்றியுடன் கணக்கை தொடங்குமா என்று ஆவல் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
கடைசியாக கடந்த நவம்பர் மாதம் தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதனால் இங்கிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெறும் போட்டியை இந்திய அணி நம்பிக்கையுடன் விளையாடும்.
இரு அணிகளும் கடைசியாக கடந்த ஜூன் மாதம் நடந்த டி20 உலக கோப்பை தொடரின் அரை இறுதி போட்டியில் மோதின. இந்த போட்டியில் இந்திய அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்திய அணி விவரம்:
சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அக்சர் படேல் (துணை கேப்டன்), அபிஷேக் சர்மா, அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, துருவ் ஜூரெல், முகமது சமி, நிதிஷ் குமார் ரெட்டி, ஹர்திக் பாண்ட்யா, ரவி பிஷ்னோய், சஞ்சு சாம்சன், ரிங்கு சிங், திலக் வர்மா, வருண் சக்கரவர்த்தி மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகிய வீரர்கள் அணியில் உள்ளனர்.
- அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்ன் நகரில் நடைபெறுகிறது.
- நோவாக் ஜோகோவிச் மற்றும் கார்லோஸ் அல்காரஸ் மோதுகின்றனர்.
கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்று போட்டியில் உலகின் முன்னணி வீரர் நோவாக் ஜோகோவிச் மற்றும் கார்லோஸ் அல்காரஸ் மோதுகின்றனர்.
பத்து முறை சாம்பியன் பட்டம் வென்ற ஜோகோவிச் ஸ்பெயினை சேர்ந்த நட்சத்திர வீரர் அல்காரஸ்-ஐ எதிர்த்து மோதும், இந்தப் போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. எட்டாவது முறையாக அல்காரஸ்-ஐ எதிர்கொள்கிறார். மறுபுறம் அல்காரஸ் இளம் வயதில் அனைத்து விதமான டென்னிஸ் போட்டிகளிலும் வெற்றி பெற்ற வீரர் என்ற பெருமையை பெற போட்டியிடுகிறார்.
விம்பில்டென், பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர்களில் அல்காரஸ் ஏற்கனவே சாம்பியன் பட்டம் வென்றுள்ள நிலையில், ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் மட்டும் அல்காரஸ் இதுவரை சாம்பியன் பட்டம் பெறாமல் இருக்கிறார்.
- கோகோ கவூப்- ஸ்பெயின் நாட்டை சேர்ந்த பவுலா படோசா மோதினர்.
- முதல் முறையாக கிராண்ட் ஸ்லாம் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி இருக்கிறார்.
கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான டென்னிஸ் தொடர் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று காலை நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் 3-ம் நிலை வீராங்கனையும், அமெரிக்காவை சேர்ந்த கோகோ கவூப்- ஸ்பெயின் நாட்டை சேர்ந்த பவுலா படோசா மோதினர்.
இந்த போட்டியில் கவூப் அதிர்ச்சிகரமாக தோல்வியை தழுவினார். 11-வது வரிசையில் உள்ள படோசா 7-5, 6-4 என்ற நேர் செட் கணக்கில் கவூப்பை வீழ்த்தி அரை இறுதிக்கு தகுதி பெற்றார். இந்த வெற்றியை பெற அவருக்கு 1 மணி 43 நிமிட நேரம் தேவைப்பட்டது.
27 வயதான பவுலா படோசா முதல் முறையாக கிராண்ட் ஸ்லாம் தொடரின் அரைஇறுதி சுற்றுக்கு முன்னேறி இருக்கிறார். இதற்கு முன்பு இவர் காலிறுதி வரை முன்னேறி இருக்கிறார். அரையிறுதி சுற்றில் படோசா சபலெங்கா அல்லது பாவ்லிசென்கோவாவுடன் மோதுவார்.
- ஹர்திக் பாண்டியாவை துணை கேப்டனாக அறிவித்து இருக்கலாம்.
- துணை கேப்டன் விவகாரம் குறித்து கருத்து தெரிவித்து இருக்கிறார்.
சாம்பியன்ஸ் கோப்பை 2025 தொடருக்கான இந்திய அணியின் துணை கேப்டனாக சுப்மன் கில் அறிவிக்கப்பட்டுள்ளார். பி.சி.சி.ஐ.-இன் இந்த முடிவு ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்களிடையே பேசு பொருளாகியுள்ளது. சிலர் இது சரியான முடிவு என்றும், சிலர் ஹர்திக் பாண்டியாவை துணை கேப்டனாக அறிவித்து இருக்கலாம் என்றும் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணியின் துணை கேப்டன் விவகாரம் குறித்து கருத்து தெரிவித்து இருக்கிறார். அப்போது, சுப்மன் கில் தேர்வு எதிர்காலத்தை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டு இருக்கலாம் என்று தெரிவித்தார்.
இது குறித்து பேசிய அவர், "தற்போதைய அணியில் வேறு யாரை துணை கேப்டனாக அறிவிக்கலாம் என்று யோசித்து பாருங்கள். சுப்மன் கில் நியமனம் சரி அல்லது தவறு என்று என்னால் எந்த முடிவையும் கூற முடியாது. ஆனால், அவர் தான் கடந்த சீரிசிலும் துணை கேப்டனாக இருந்தார் என்ற விளக்கம் சரியாக தெரிகிறது."
"நான் தவறாகவும் இருக்கலாம், ஆனால் அவர் டெஸ்ட் போட்டிகளில் கூட துணை கேப்டனாக செயல்பட்டு இருக்கிறார் என்று நினைக்கிறேன். எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, யார் அணியின் தலைவராக இருக்கலாம் என்பதை பொருத்து நிர்வாகம் இந்த முடிவை எடுத்து இருக்கலாம் என்று நினைக்கிறேன்."
"ரிஷப் பண்ட் மற்றும் கேல்.எல். ராகுல் என இருவரில் யார் வேண்டுமானாலும் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டு இருக்கலாம், ஆனால் அவர்கள் இந்த பொறுப்பை ஆடும் லெவனில் உறுதி செய்யப்பட்ட வீரரிடம் துணை கேப்டன்சி பதவியை வழங்கியுள்ளார்கள். எதிர்காலத்தில் சுப்மன் கில் அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டால், அவர் விராட் கோலி மற்றும் ஜஸ்பிரித் பும்ராவிடம் உதவிகளை பெறலாம்," என்று கூறினார்.
- வீரர்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க கோரிக்கைகள் எழுந்தன.
- ரஞ்சி கோப்பை தொடரில் விளையாடுவதாக தெரிவித்தார்.
நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி இழந்தது பல்வேறு முன்னாள் வீரர்கள், ரசிகர்கள் கடும் விமர்சனங்களை முன்வைத்தனர். மேலும், அணியில் பல்வேறு மாற்றங்களை கொண்டுவர வேண்டும் என்றும் வீரர்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்கவும் கோரிக்கைகள் எழுந்தன.
இதையடுத்து இந்திய அணி வீரர்களுக்கு பி.சி.சி.ஐ. ஏராளமான கட்டுப்பாடுகளை விதித்தது. அதில் இந்திய அணி வீரர்கள் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வேண்டும் என்பதும் இடம்பெற்று இருந்தது. இதையடுத்து, இந்திய கேப்டன் ரோகித் சர்மா ரஞ்சி கோப்பை தொடரில் விளையாடுவதாக தெரிவித்தார்.
அதன்படி, ரோகித் சர்மா மும்பை அணிக்காக ரஞ்சி கோப்பை போட்டியில் விளையாட இருக்கிறார். இந்த வரிசையில், இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியும் ரஞ்சி கோப்பை தொடரில் விளையாட இருக்கிறார். இது தொடர்பான தகவல் வெளியாகி உள்ள நிலையில், விராட் கோலி டெல்லி அணிக்காக ரஞ்சி கோப்பை போட்டியில் விளையாடுகிறார்.
வருகிற ஜனவரி 30-ம் தேதி ரெயில்வே அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணிக்காக விராட் கோலி களமிறங்க உள்ளார். முன்னதாக இந்திய கேப்டன் ரோகித் சர்மா மற்றும் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் மும்பை அணிக்காக ரஞ்சி கோப்பை தொடரில் விளையாடுவார்கள் என்று தகவல் வெளியானது.
பி.சி.சி.ஐ. புதிய விதிமுறையை அடுத்து இந்திய அணியின் முன்னணி வீரர்களான ரோகித் சர்மா, சுப்மன் கில், ரிஷப் பண்ட், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரவீந்திர ஜடேஜா ஆகியோரும் ரஞ்சி கோப்பை போட்டிகளில் விளையாட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஐ.பி.எல். 2025 தொடருக்கான பயிற்சியை துவங்கியுள்ளார்.
- தோனி ஓய்வை அறிவிப்பார் என்று கூறினர்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி. இவர் தற்போது ஐ.பி.எல். தொடரில் மட்டும் விளையாடி வருகிறார். ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் எம்.எஸ். தோனி 2025 ஐ.பி.எல். தொடருக்கான பயிற்சியை துவங்கியுள்ளார்.
எம்.எஸ். தோனி பேட்டிங் பயிற்சி செய்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு ஐ.பி.எல். தொடரோடு கிரிக்கெட்டில் இருந்து எம்.எஸ். தோனி ஓய்வு பெறுவதாக தகவல்கள் வெளியாகி வந்தன. பலரும் விரைவில் எம்.எஸ். தோனி ஓய்வை அறிவிப்பார் என்று கூறினர்.
கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற ஐ.பி.எல். மெகா ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எம்.எஸ். தோனியை அன்கேப்டு வீரராக தக்க வைத்துக் கொள்ள முடிவு செய்தது. இதன் மூலம் எம்.எஸ். தோனி ஐ.பி.எல். 2025 தொடரில் விளையாடுவது உறுதியானது. இது எம்.எஸ். தோனி ரசிகர்களை மகிழ்ச்சி அடைய செய்தது.
இந்த நிலையில், எம்.எஸ். தோனி ஐ.பி.எல். 2025 தொடருக்கான பயிற்சியை துவங்கி இருப்பது அவரது ரசிகர்களை உற்சாகம் கொள்ள வைத்துள்ளது. மார்ச் மாதம் ஐ.பி.எல். தொடர் துவங்கவுள்ள நிலையில், கிரிக்கெட் ரசிகர்கள் வரவிருக்கும் சீசனில் எந்த அணி கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.
- மும்பை கிரிக்கெட் கூட்டமைப்பு மைதானத்தில் நடைபெற இருக்கிறது.
- மும்பை அணியை அனுபவம் மிக்க அஜிங்க்யா ரகானே வழிநடத்துகிறார்.
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா விளையாடுகிறார். ஜம்மு-காஷ்மீர் அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை தொடரில் மும்பை அணிக்காக ரோகித் சர்மா மற்றும் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இடம்பெற்றுள்ளனர். இந்தப் போட்டி வருகிற ஜனவரி 23-ம் தேதி மும்பை கிரிக்கெட் கூட்டமைப்பு மைதானத்தில் நடைபெற இருக்கிறது.
இந்தப் போட்டியில் மும்பை அணியை அனுபவம் மிக்க அஜிங்க்யா ரகானே வழிநடத்துகிறார். ரஞ்சி கோப்பை தொடரில் விளையாடுவது பற்றிய முடிவை ரோகித் சர்மா கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் அறிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நியூசிலாந்து அணிக்கு எதிராக கடந்த ஆண்டு இறுதியில் சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடர் மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக சமீபத்தில் நடைபெற்று முடிந்த தொடர் என கடைசி எட்டு டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி ஒரு போட்டியில் மட்டும் வெற்றி ஒரு போட்டியை சமன் செய்தது.
எட்டு போட்டிகளிலும் இந்திய கேப்டன் ரோகித் சர்மாவின் ஃபார்ம் குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. இதைத் தொடர்ந்து ஒப்பந்தத்தில் உள்ள அனைத்து இந்திய வீரர்களும் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பதை பி.சி.சி.ஐ. கடந்த வாரம் தான் கட்டாயமாக்கியது.
- இந்திய விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் ரூ.27 கோடிக்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி வாங்கியது.
- சுமார் 150 ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய பிறகும் அணியில் இடம் கிடைக்காமல் போனது அதிர்ச்சியளிக்கிறது.
இந்தியாவின் புகழ்பெற்ற வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் ஐபிஎல் 2025 ஏலத்தில் விலைபோகாத சோகத்தை வெளிப்படுத்தி உள்ளார். மிகுந்த மன உளைச்சலும், ஏமாற்றமும் அடைந்ததாக உமேஷ் கூறியுள்ளார்.
ஐபிஎல் 2025 க்கான மெகா ஏலம் கடந்த ஆண்டு நவம்பரில் நடந்தது. இதில் அனைத்து அணிகளும் பெரும் தொகையை செலவழித்தன.
இந்திய விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் ரூ.27 கோடிக்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி வாங்கியது. ஐபிஎல் ஏல வரலாற்றில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். ஆனால், ஐபிஎல்லில் பல போட்டிகளில் தனது அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்ற உமேஷ் யாதவை வாங்குபவர் கிடைக்கவில்லை.
உமேஷ் ஐபிஎல்லில் டெல்லி கேப்பிடல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய நான்கு அணிகளுக்காக விளையாடியுள்ளார். இப்போது இந்த 37 வயதான உமேஷ் தனது மனக்கஷ்டத்தை குறித்து பேசியுள்ளார்.

இன்சைட் ஸ்போர்ட்ஸிடம் பேசிய அவர், இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிக்கு நான் தேர்வு செய்யப்படவில்லை என்பது அனைவருக்கும் தெரியும். நான் 15 ஆண்டுகளாக இந்த லீக்கில் விளையாடி வருகிறேன். இந்த ஐபிஎல் எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.
நான் ஏன் பொய் சொல்ல வேண்டும்? நான் மோசமாக உணர்கிறேன். சுமார் 150 ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய பிறகும் அணியில் இடம் கிடைக்காமல் போனது அதிர்ச்சியளிக்கிறது.
இது உரிமையாளர்கள் முடிவை பொறுத்தது, மற்றும் ஏலத்தில் எனது பெயர் தாமதமாக வந்ததும் ஒரு காரணம். தாமதமாக பெயர் வந்ததால் என்னை வாங்க அவர்களிடம் பணம் இல்லை என்று எடுத்துக்கொள்ளலாம். ஆனால் இதையும் மீறி ஏதோ நடந்துள்ளது.
நான் மிகவும் ஏமாற்றமாகவும் வருத்தமாகவும் இருக்கிறேன். இருக்கட்டும் பரவாயில்லை. யாருடைய முடிவையும் என்னால் மாற்ற முடியாது என்று தெரிவித்துள்ளார்.
உமேஷ் 15 ஆண்டுகளில் 148 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 144 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். . என்னால் மணிக்கு 140 கிமீ வேகத்தில் பந்து வீச முடியும் என நினைக்கும் வரை தொடர்ந்து விளையாடுவேன் என்று அவர் தனது ஓய்வு கேள்விக்கும் பதிலளித்துள்ளார்.






