என் மலர்
விளையாட்டு
வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணியில் இருந்து சஞ்சு சாம்சன் நீக்கப்பட்டதால், தேர்வாளர்களை மாற்றுக என கங்குலியிடம் ஹர்பஜன் சிங் வலியுறுத்தியுள்ளார்.
வங்காளதேச அணிக்கெதிரான டி20 கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சன் இடம் பிடித்திருந்தார். ஆனால், அவர் மூன்று போட்டிகளிலும் களம் இறக்கப்படவில்லை. வரவிருக்கும் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி சில தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது.
15 பேர் கொண்ட இந்திய அணியில் சஞ்சு சாம்சனுக்கு இடம் கிடைக்கவில்லை. இதனால் தேர்வுக்குழு மீது முன்னாள் வீரர்கள் மற்றும விமர்சகர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இதற்கு ஹர்பஜன் சிங் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘அவர்கள் சஞ்சு சாம்சனின் இதயத்தை சோதிக்கிறார்கள் என்று யூகிக்கிறேன். தேர்வுக்குழு மாற்றப்பட்டு வலுவான நபர்கள் அங்கே இருக்க வேண்டும். கங்குலி தேவையானவைகளை செய்வார் என்று நம்புகிறேன்’’ என்று பதில் அளித்துள்ளார்.
15 பேர் கொண்ட இந்திய அணியில் சஞ்சு சாம்சனுக்கு இடம் கிடைக்கவில்லை. இதனால் தேர்வுக்குழு மீது முன்னாள் வீரர்கள் மற்றும விமர்சகர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சசி தரூர், அவரது டுவிட்டர் பக்கத்தில் ‘‘வாய்ப்பு ஏதும் கொடுக்காமல் சஞ்சு சாம்சன் நீக்கப்பட்டது மிகப்பெரிய ஏமாற்றமாக இருக்கிறது. அவர் மூன்று போட்டிகளில் தண்ணீர் பாட்டில்தான் சுமந்து சென்றார்.
அதன்பின் உடனடியாக நீக்கப்பட்டுள்ளார். அவர்கள் சஞ்சு சாம்சனின் பேட்டிங்கை சோதிக்கிறார்களா? அல்லது அவருடைய இதயத்தையா?’’ என பதிவிட்டுள்ளார்.
இதற்கு ஹர்பஜன் சிங் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘அவர்கள் சஞ்சு சாம்சனின் இதயத்தை சோதிக்கிறார்கள் என்று யூகிக்கிறேன். தேர்வுக்குழு மாற்றப்பட்டு வலுவான நபர்கள் அங்கே இருக்க வேண்டும். கங்குலி தேவையானவைகளை செய்வார் என்று நம்புகிறேன்’’ என்று பதில் அளித்துள்ளார்.
I guess they r testing his heart 💔 #selectionpanelneedtobechanged need strong people there.. hope dada @SGanguly99 will do the needful https://t.co/RJiGVqp7nk
— Harbhajan Turbanator (@harbhajan_singh) November 25, 2019
ஐபிஎல் 2020 சீசனில் எம்எஸ் டோனி எவ்வாறு விளையாடுகிறார் என்பதை பொறுத்துதான் இந்திய அணிக்கு திரும்புவது குறித்து முடிவு செய்யப்படும் என ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் சாதனைக் கேப்டனாக திகழ்ந்த எம்எஸ் டோனி, இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடருக்குப்பின், ராணுவத்தில் பணிபுரிய இருப்பதால் சிறிது காலம் ஓய்வு எடுத்திருந்தார். அவரது ஓய்வுக் காலம் முடிந்த பின்னரும் அணியில் சேர்க்கப்படாமல் இருக்கிறார்.
இதனால் அடுத்த வருடம் ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பை அணியில் அவர் விளையாடுவாரா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. அணி நிர்வாகம் மற்றும் முக்கிய வீரர்களிடம் இதுகுறித்து கேட்டால், அது எம்எஸ் டோனியின் முடிவு. அவரது ஓய்வு முடிவை அவர்தான் எடுப்பார் என்று தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் அவர் 2020 ஐபிஎல் தொடரில் எப்படி விளையாடுகிறார் என்பதை சார்ந்துதான் அணிக்கு திரும்பும் முடிவு எடுக்கப்படும் என தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
எம்எஸ் டோனி குறித்து ரவி சாஸ்திரி கூறுகையில் ‘‘எம்எஸ் டோனி மீண்டும் கிரிக்கெட் விளையாடும்போது, அவர் 2020 ஐபிஎல் தொடரில் எப்படி விளையாடுகிறார் என்பதை பொறுத்துதான் இந்திய அணிக்கு திரும்புவது குறித்து முடிவு செய்யப்படும். விக்கெட் கீப்பராக மற்ற வீரர்கள் எப்படி செயல்படுகிறார்கள். டோனியின் ஃபார்முக்கு சவாலாக யார் இருக்கிறார்கள் என்பதை பார்க்க வேண்டும்.
ஐபிஎல் மிகப்பெரிய தொடர், ஏனென்றால் ஏறக்குறைய உலகக்கோப்பைக்கான 15 பேர் கொண்ட அணியை தேர்வு செய்தபிறகு நடக்கும் கடைசி தொடராகும்’’ என்றார்.
இதனால் அடுத்த வருடம் ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பை அணியில் அவர் விளையாடுவாரா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. அணி நிர்வாகம் மற்றும் முக்கிய வீரர்களிடம் இதுகுறித்து கேட்டால், அது எம்எஸ் டோனியின் முடிவு. அவரது ஓய்வு முடிவை அவர்தான் எடுப்பார் என்று தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் அவர் 2020 ஐபிஎல் தொடரில் எப்படி விளையாடுகிறார் என்பதை சார்ந்துதான் அணிக்கு திரும்பும் முடிவு எடுக்கப்படும் என தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
எம்எஸ் டோனி குறித்து ரவி சாஸ்திரி கூறுகையில் ‘‘எம்எஸ் டோனி மீண்டும் கிரிக்கெட் விளையாடும்போது, அவர் 2020 ஐபிஎல் தொடரில் எப்படி விளையாடுகிறார் என்பதை பொறுத்துதான் இந்திய அணிக்கு திரும்புவது குறித்து முடிவு செய்யப்படும். விக்கெட் கீப்பராக மற்ற வீரர்கள் எப்படி செயல்படுகிறார்கள். டோனியின் ஃபார்முக்கு சவாலாக யார் இருக்கிறார்கள் என்பதை பார்க்க வேண்டும்.
ஐபிஎல் மிகப்பெரிய தொடர், ஏனென்றால் ஏறக்குறைய உலகக்கோப்பைக்கான 15 பேர் கொண்ட அணியை தேர்வு செய்தபிறகு நடக்கும் கடைசி தொடராகும்’’ என்றார்.
பிக் பாஷ் டி20 லீக்கில் விளையாடும் மெல்போர்ன் ரெனேகட்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக மைக்கேல் கிளின்கர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
பிக் பாஷ் டி20 லீக்கில் விளையாடும் அணிகளில் ஒன்று மெல்போர்ன் ரெனேகட்ஸ். இந்த அணி தற்போது மைக்கேல் கிளின்கரை தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அந்த அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த மெக்டொனால்டு ஆஸ்திரேலியா அணியின் துணைப் பயிற்சியாளராக சென்றுள்ளதால், கிளின்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.
கிளின்கர் 206 டி20 போட்டிகளில் விளையாடி 5960 ரன்கள் அடித்துள்ளார். பிக் பாஷ் லீக்கில் அதிக ரன்கள் அடித்துள்ள அவர், கடந்த சீசனோடு ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த மெக்டொனால்டு ஆஸ்திரேலியா அணியின் துணைப் பயிற்சியாளராக சென்றுள்ளதால், கிளின்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.
கிளின்கர் 206 டி20 போட்டிகளில் விளையாடி 5960 ரன்கள் அடித்துள்ளார். பிக் பாஷ் லீக்கில் அதிக ரன்கள் அடித்துள்ள அவர், கடந்த சீசனோடு ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாங்காக்கில் நடைபெற்று வரும் ஆசிய சாம்பியன்ஷிப் வில்வித்தையில் ஆண்களுக்கான ரீ-கர்வ் பிரிவில் இந்திய வீரர் அட்டானு தாஸ் வெண்கல பதக்கம் வென்றார்.
ஹாங்காக்கில் ஆசிய சாம்பியன்ஷிப் வில்வித்தை நடைபெற்று வருகிறது. நேற்று கலப்பு இரட்டையர் ரீ-கர்வ் பிரிவில் அட்டானு தாஸ் - தீபிகா குமாரி ஜோடி வெண்கல பதக்கம் வென்றது.
இன்று ஆண்கள் ஒற்றையருக்கான ரீ-கர்வ் போட்டி நடைபெற்றது. இதில் அட்டானு தாஸ் கொரியாவைச் சேர்ந்த ஜின் ஹயேக்-ஐ 6-5 என வீழ்த்தி வெண்கல பதக்கம் வென்றார்.
இன்று ஆண்கள் ஒற்றையருக்கான ரீ-கர்வ் போட்டி நடைபெற்றது. இதில் அட்டானு தாஸ் கொரியாவைச் சேர்ந்த ஜின் ஹயேக்-ஐ 6-5 என வீழ்த்தி வெண்கல பதக்கம் வென்றார்.
நான்கு ரன்களில் யாசிர் ஷா பந்தில் ஸ்டம்பை பறிகொடுத்தது உத்வேகத்தை கொடுத்துள்ளது என்கிறார் ஸ்டீவ் ஸ்மித்.
ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் பிரிஸ்பேனில் நடைபெற்றது. ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், ஆஷஸ் தொடரில் 774 ரன்கள் குவித்த ஸ்டீவ் ஸ்மித் யாசிர் பந்தில் நான்கு ரன்கள் எடுத்த நிலையில் க்ளீன் போல்டானார்.
இந்த அவுட் மூலம் யாசிர் ஷா ஸ்மித்தை 6 டெஸ்ட் போட்டிகளில் 7 முறை வீழ்த்தியுள்ளார். ஸ்மித் வெளியேறும் போது ஏழு விரல்களை நீட்டி, ஸ்மித்தை ஏழு முறை வீழ்த்தியிருக்கிறேன் என்று வெளிப்படுத்தினார்.
யாசிர் ஷாவின் இந்த சைகை எனக்கு உத்வேகத்தை கொடுத்துள்ளது என ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஸ்டீவ் ஸ்மித் கூறுகையில் ‘‘இந்த போட்டியில் அவுட்டானது, அடுத்த போட்டியில் யாசிர் ஷா பந்தில் ஆட்டமிழக்கக் கூடாது என்ற உத்வேகத்தை கொடுத்தள்ளது. ஆகவே, அவருக்கு எதிராக கொஞ்சம் கூடுதலாக கவனமான முறையில் விளையாடுவேன்.
இந்த போட்டியில் நான்கு ரன்னிலேயே ஆட்டமிழந்துள்ளேன். பெரும்பாலான நேரத்தில் நான் 2-வது இன்னிங்சில் தேவையில்லாத ஷாட் மூலம் அவுட்டாகியுள்ளேன். ஆகவே, இதுபற்றி நான் பெரிய அளவில் கவலைப்படவில்லை’’ என்றார்.
இந்த அவுட் மூலம் யாசிர் ஷா ஸ்மித்தை 6 டெஸ்ட் போட்டிகளில் 7 முறை வீழ்த்தியுள்ளார். ஸ்மித் வெளியேறும் போது ஏழு விரல்களை நீட்டி, ஸ்மித்தை ஏழு முறை வீழ்த்தியிருக்கிறேன் என்று வெளிப்படுத்தினார்.
யாசிர் ஷாவின் இந்த சைகை எனக்கு உத்வேகத்தை கொடுத்துள்ளது என ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஸ்டீவ் ஸ்மித் கூறுகையில் ‘‘இந்த போட்டியில் அவுட்டானது, அடுத்த போட்டியில் யாசிர் ஷா பந்தில் ஆட்டமிழக்கக் கூடாது என்ற உத்வேகத்தை கொடுத்தள்ளது. ஆகவே, அவருக்கு எதிராக கொஞ்சம் கூடுதலாக கவனமான முறையில் விளையாடுவேன்.
இந்த போட்டியில் நான்கு ரன்னிலேயே ஆட்டமிழந்துள்ளேன். பெரும்பாலான நேரத்தில் நான் 2-வது இன்னிங்சில் தேவையில்லாத ஷாட் மூலம் அவுட்டாகியுள்ளேன். ஆகவே, இதுபற்றி நான் பெரிய அளவில் கவலைப்படவில்லை’’ என்றார்.
ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் ஸ்மித்திற்கும் விராட் கோலிக்கும் இடையில் கடும் போட்டி நிலவி வரும் நிலையில், முதல் 10 இடத்திற்குள் நான்கு இந்தியர்கள் இடம் பிடித்துள்ளனர்.
இந்திய அணி கேப்டன் விராட் கோலி ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்தில் இருந்தார். ஆஷஸ் தொடரில் சிறப்பாக விளையாடியதன் மூலம் விராட் கோலியை பின்னுக்குத் தள்ளி முதல் இடம் பிடித்தார்.
தென்ஆப்பிரிக்கா தொடரில் விராட் கோலி மிகப்பெரிய அளவில் சாதிக்கவில்லை. இதனால் இருவருக்கும் இடையிலான புள்ளிகள் வித்தியாசம் 25-க்கு மேல் இருந்தது.
இந்நிலையில் இந்தியா - வங்காளதேசம், ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் டெஸ்ட் தொடர் நடைபெற்றது.
வங்காளதேசம் அணிக்கெதிரான 2-வது டெஸ்டில் விராட் கோலி சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். அதேவேளையில் ஸ்மித் பிரிஸ்பேன் டெஸ்டில் ஏமாற்றம் அளித்தார்.

இருவருக்கும் இடையில் மூன்று புள்ளிகளே வித்தியாசம். 29-ந்தேதி தொடங்கும் 2-வது போட்டியிலும் ஸ்மித் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் விராட் கோலி முதல் இடத்தை பிடிக்க வாய்ப்புள்ளது.
வங்காளதேச அணிக்கெதிராக இரட்டை சதம் அடித்ததன் மூலம் 700 புள்ளிகளுடன் மயங்க் அகர்வால் 10-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். புஜாரா 791 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும், 759 புள்ளிகளுடன் ரகானே 5-வது இடத்திலும் உள்ளனர். இந்திய பேட்ஸ்மேன்கள் நான்கு பேர் முதல் 10 இடத்திற்குள் உள்ளனர்.
தென்ஆப்பிரிக்கா தொடரில் விராட் கோலி மிகப்பெரிய அளவில் சாதிக்கவில்லை. இதனால் இருவருக்கும் இடையிலான புள்ளிகள் வித்தியாசம் 25-க்கு மேல் இருந்தது.
இந்நிலையில் இந்தியா - வங்காளதேசம், ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் டெஸ்ட் தொடர் நடைபெற்றது.
வங்காளதேசம் அணிக்கெதிரான 2-வது டெஸ்டில் விராட் கோலி சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். அதேவேளையில் ஸ்மித் பிரிஸ்பேன் டெஸ்டில் ஏமாற்றம் அளித்தார்.
இந்நிலையில் இன்று வெளியிடப்பட்டுள்ள ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் ஸ்டீவ் ஸ்மித் 931 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் உள்ளார். விராட் கோலி 928 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளார்.

இருவருக்கும் இடையில் மூன்று புள்ளிகளே வித்தியாசம். 29-ந்தேதி தொடங்கும் 2-வது போட்டியிலும் ஸ்மித் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் விராட் கோலி முதல் இடத்தை பிடிக்க வாய்ப்புள்ளது.
வங்காளதேச அணிக்கெதிராக இரட்டை சதம் அடித்ததன் மூலம் 700 புள்ளிகளுடன் மயங்க் அகர்வால் 10-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். புஜாரா 791 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும், 759 புள்ளிகளுடன் ரகானே 5-வது இடத்திலும் உள்ளனர். இந்திய பேட்ஸ்மேன்கள் நான்கு பேர் முதல் 10 இடத்திற்குள் உள்ளனர்.
சையத் முஷ்டாக் அலி டிராபியில் சூர்யகுமாரின் அதிரடியால் கர்நாடகாவை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது மும்பை.
சையத் முஷ்டாக் அலி டிராபி 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் சூப்பர் லீக் சுற்று ஆட்டம் குஜராத் மாநிலம் சூரத்தில் நடந்து வருகிறது. இதற்கு முன்னேறிய 10 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதி வருகின்றன.
சூரத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் ‘பி’ பிரிவில் இடம் பிடித்துள்ள கர்நாடகா - மும்பை அணிகள் மோதின.
டாஸ் வென்ற மும்பை பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி கர்நாடகா அணியின் லோகேஷ் ராகுல், படிகல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். கேஎல் ராகுல் ஆட்டத்தின் 2-வது பந்தில் டக்அவுட் ஆனார்.
படிகல் சிறப்பாக விளையாடி 34 பந்தில் நான்கு பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 57 ரன்கள் விளாசினார். மணிஷ் பாண்டே (4), கருண் நாயர் (8) சொற்ப ரன்களில் வெளியேற, அடுத்து வந்த ரோஷன் கடம் 47 பந்தில் 71 ரன்கள் அடிக்க, கர்நாடகா 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் சேர்த்தது.
பின்னர் 172 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணியின் பிரித்வி ஷா, ஆதித்யா தாரே ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். பிரித்வி ஷா 30 ரன்களும், ஆதித்யா தாரே 12 ரன்களும் சேர்த்தனர்.
ஷ்ரேயாஸ் அய்யர் 14 ரன்னில் ஏமாற்றம் அளித்தார். அதன்பின் வந்த சூர்யகுமார் யாதவ் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 53 பந்தில் 11 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 94 ரன்கள் விளாச மும்பை 19 ஓவரில் 3 விக்கெட்டுக்களை இழந்து 174 ரன்கள் அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் ‘பி’ பிரிவில் மும்பை 2 வெற்றிகள் மூலம் 3-வது இடத்தை பிடித்துள்ளது. கர்நாடகா நான்கில் மூன்றில் வெற்றி பெற்று முதல் இடத்தில் உள்ளது.
சூரத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் ‘பி’ பிரிவில் இடம் பிடித்துள்ள கர்நாடகா - மும்பை அணிகள் மோதின.
டாஸ் வென்ற மும்பை பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி கர்நாடகா அணியின் லோகேஷ் ராகுல், படிகல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். கேஎல் ராகுல் ஆட்டத்தின் 2-வது பந்தில் டக்அவுட் ஆனார்.
படிகல் சிறப்பாக விளையாடி 34 பந்தில் நான்கு பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 57 ரன்கள் விளாசினார். மணிஷ் பாண்டே (4), கருண் நாயர் (8) சொற்ப ரன்களில் வெளியேற, அடுத்து வந்த ரோஷன் கடம் 47 பந்தில் 71 ரன்கள் அடிக்க, கர்நாடகா 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் சேர்த்தது.
பின்னர் 172 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணியின் பிரித்வி ஷா, ஆதித்யா தாரே ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். பிரித்வி ஷா 30 ரன்களும், ஆதித்யா தாரே 12 ரன்களும் சேர்த்தனர்.
ஷ்ரேயாஸ் அய்யர் 14 ரன்னில் ஏமாற்றம் அளித்தார். அதன்பின் வந்த சூர்யகுமார் யாதவ் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 53 பந்தில் 11 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 94 ரன்கள் விளாச மும்பை 19 ஓவரில் 3 விக்கெட்டுக்களை இழந்து 174 ரன்கள் அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் ‘பி’ பிரிவில் மும்பை 2 வெற்றிகள் மூலம் 3-வது இடத்தை பிடித்துள்ளது. கர்நாடகா நான்கில் மூன்றில் வெற்றி பெற்று முதல் இடத்தில் உள்ளது.
மார்ஷ் கோப்பை இறுதிப் போட்டியில் ஷான் மார்ஷ் சதம் அடிக்க குயின்ஸ்லாந்தை வீழ்த்தி வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டம் வென்றது.
ஆஸ்திரேலியாவின் உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடரான மார்ஷ் கோப்பையின் இறுதிப் போட்டி பிரிஸ்பேனில் இன்று நடைபெற்றது.
இதில் குயின்ஸ்லாந்து - வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி குயின்ஸ்லாந்து முதலில் பேட்டிங் செய்தது.
வெஸ்டர்ன் ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் குயின்ஸ்லாந்து அடுத்தடுத்து விக்கெட்டுக்களை இழந்தது. விக்கெட் கீப்பர் ஜிம்மி பெய்ர்சன் மட்டும் தாக்குப்பிடித்து 83 பந்தில் 79 ரன்க்ள சேர்க்க குயின்ஸ்லாந்து 49.3 ஓவரில் 205 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது. வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா சார்பில் ரிச்சார்ட்சன், கவுல்டர்-நைல் தலா மூன்று விக்கெட்டுக்கள் வீழ்த்தினர்.
பின்னர் 206 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா அணியின் பான்கிராஃப்ட், ஷார்ட் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் முறையே 8 மற்றும் 5 ரன்னில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
3-வது வீரராக களம் இறங்கிய ஷான் மார்ஷ் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். அவர் 132 பந்தில் 101 ரன்கள் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருக்க வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா 48 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 210 ரன்கள் அடித்து வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
இதில் குயின்ஸ்லாந்து - வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி குயின்ஸ்லாந்து முதலில் பேட்டிங் செய்தது.
வெஸ்டர்ன் ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் குயின்ஸ்லாந்து அடுத்தடுத்து விக்கெட்டுக்களை இழந்தது. விக்கெட் கீப்பர் ஜிம்மி பெய்ர்சன் மட்டும் தாக்குப்பிடித்து 83 பந்தில் 79 ரன்க்ள சேர்க்க குயின்ஸ்லாந்து 49.3 ஓவரில் 205 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது. வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா சார்பில் ரிச்சார்ட்சன், கவுல்டர்-நைல் தலா மூன்று விக்கெட்டுக்கள் வீழ்த்தினர்.
பின்னர் 206 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா அணியின் பான்கிராஃப்ட், ஷார்ட் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் முறையே 8 மற்றும் 5 ரன்னில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
3-வது வீரராக களம் இறங்கிய ஷான் மார்ஷ் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். அவர் 132 பந்தில் 101 ரன்கள் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருக்க வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா 48 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 210 ரன்கள் அடித்து வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜாப்ரா ஆர்சரை ரசிகர் ஒருவர் இனவெறியுடன் திட்டியதாக எழுந்த புகாரை தொடர்ந்து நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் மன்னிப்பு கேட்டுள்ளது.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் மவுண்ட் மவுங்கானுயில் நேற்று முடிந்த முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 65 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது.
இந்த போட்டி முடிந்ததும் பெவிலியன் திரும்பிய இங்கிலாந்து அணிக்காக விளையாடும் வெஸ்ட் இண்டீஸில் பிறந்த வேகப்பந்து வீச்சாளரான ஜாப்ரா ஆர்சரை நோக்கி ரசிகர் ஒருவர் இனவெறியுடன் அவமரியாதையாக திட்டியதாக கூறப்படுகிறது. அவர் ஜாப்ரா ஆர்சரின் நிறத்தை குறிப்பிட்டு வசைபாடி இருக்கிறார்.
இதுகுறித்து ஜாப்ரா ஆர்சர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், ‘‘எனது அணியை காப்பாற்ற பேட்டிங் செய்து போராடி விட்டு ஆட்டம் இழந்து வெளியேறுகையில் எனக்கு தொந்தரவு அளிக்கும் வகையில் இன ரீதியான விமர்சனத்தை எதிர்கொண்டேன். அந்த ஒருவரை தவிர ரசிகர்கள் அனைவரும் அருமையாக நடந்து கொண்டனர். வழக்கம் போல் இங்கிலாந்து ரசிகர்கள் நல்ல ஊக்கம் அளித்தனர்’’ என்று தெரிவித்து இருந்தார்.
இந்த சம்பவம் குறித்து நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
முதல் டெஸ்ட் போட்டியில் ஜாப்ரா ஆர்சரை ரசிகர் ஒருவர் வார்த்தையால் அவமரியாதை செய்ததாக எழுந்துள்ள புகார் எங்களுக்கு அதிர்ச்சியும், ஏமாற்றமும் அளிக்கிறது. இங்கிலாந்து கிரிக்கெட்டில் எங்களுக்கு எதிரியாக இருக்கலாம். ஆனாலும் அவர்கள் எங்களது நண்பர்கள். இன ரீதியான அவமரியாதையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இதற்காக ஜாப்ரா ஆர்சரிடம் மன்னிப்பு கோருகிறோம். நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் ஜாப்ரா ஆர்சரை நாளை தொடர்பு கொண்டு நடந்த சம்பவத்துக்காக மன்னிப்பு கேட்கும்.
இந்த குற்றத்தை செய்த ரசிகர் மைதானத்தை விட்டு உடனடியாக வெளியேறி விட்டதால் அவர் யார்? என்பதை பாதுகாவலர்களால் கண்டறிய முடியவில்லை. நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் ஸ்டேடியத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவின் பதிவுகளை ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட நபர் யார்? என்பதை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கும்.
மைதானங்களில் அவமரியாதையான மற்றும் மோசமான வார்த்தையில் திட்டுவதை துளியும் அனுமதிக்க முடியாது. இந்த விசாரணையின் முன்னேற்றம் குறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்படும். ஜாப்ரா ஆர்சருக்கு ஏற்பட்ட அனுபவம் ஏற்றுக்கொள்ள முடியாததாகும். ஹாமில்டனில் நடைபெறும் அடுத்த டெஸ்ட் போட்டியில் இந்த விவகாரத்தில் கூடுதல் விழிப்புணர்வுடன் செயல்படுவோம் என்று உறுதி அளிக்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த போட்டி முடிந்ததும் பெவிலியன் திரும்பிய இங்கிலாந்து அணிக்காக விளையாடும் வெஸ்ட் இண்டீஸில் பிறந்த வேகப்பந்து வீச்சாளரான ஜாப்ரா ஆர்சரை நோக்கி ரசிகர் ஒருவர் இனவெறியுடன் அவமரியாதையாக திட்டியதாக கூறப்படுகிறது. அவர் ஜாப்ரா ஆர்சரின் நிறத்தை குறிப்பிட்டு வசைபாடி இருக்கிறார்.
இதுகுறித்து ஜாப்ரா ஆர்சர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், ‘‘எனது அணியை காப்பாற்ற பேட்டிங் செய்து போராடி விட்டு ஆட்டம் இழந்து வெளியேறுகையில் எனக்கு தொந்தரவு அளிக்கும் வகையில் இன ரீதியான விமர்சனத்தை எதிர்கொண்டேன். அந்த ஒருவரை தவிர ரசிகர்கள் அனைவரும் அருமையாக நடந்து கொண்டனர். வழக்கம் போல் இங்கிலாந்து ரசிகர்கள் நல்ல ஊக்கம் அளித்தனர்’’ என்று தெரிவித்து இருந்தார்.
இந்த சம்பவம் குறித்து நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
முதல் டெஸ்ட் போட்டியில் ஜாப்ரா ஆர்சரை ரசிகர் ஒருவர் வார்த்தையால் அவமரியாதை செய்ததாக எழுந்துள்ள புகார் எங்களுக்கு அதிர்ச்சியும், ஏமாற்றமும் அளிக்கிறது. இங்கிலாந்து கிரிக்கெட்டில் எங்களுக்கு எதிரியாக இருக்கலாம். ஆனாலும் அவர்கள் எங்களது நண்பர்கள். இன ரீதியான அவமரியாதையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இதற்காக ஜாப்ரா ஆர்சரிடம் மன்னிப்பு கோருகிறோம். நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் ஜாப்ரா ஆர்சரை நாளை தொடர்பு கொண்டு நடந்த சம்பவத்துக்காக மன்னிப்பு கேட்கும்.
இந்த குற்றத்தை செய்த ரசிகர் மைதானத்தை விட்டு உடனடியாக வெளியேறி விட்டதால் அவர் யார்? என்பதை பாதுகாவலர்களால் கண்டறிய முடியவில்லை. நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் ஸ்டேடியத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவின் பதிவுகளை ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட நபர் யார்? என்பதை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கும்.
மைதானங்களில் அவமரியாதையான மற்றும் மோசமான வார்த்தையில் திட்டுவதை துளியும் அனுமதிக்க முடியாது. இந்த விசாரணையின் முன்னேற்றம் குறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்படும். ஜாப்ரா ஆர்சருக்கு ஏற்பட்ட அனுபவம் ஏற்றுக்கொள்ள முடியாததாகும். ஹாமில்டனில் நடைபெறும் அடுத்த டெஸ்ட் போட்டியில் இந்த விவகாரத்தில் கூடுதல் விழிப்புணர்வுடன் செயல்படுவோம் என்று உறுதி அளிக்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சையத் முஸ்தாக் அலி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த ஆட்டத்தில் தமிழக அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப்-ஐ வீழ்த்தியது.
சையத் முஷ்டாக் அலி டிராபி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் சூப்பர் லீக் சுற்று ஆட்டம் குஜராத் மாநிலம் சூரத்தில் நடந்து வருகிறது. இதற்கு முன்னேறிய 10 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதி வருகின்றன.
இதில் ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ள தமிழக அணி நேற்று நடந்த தனது 3-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணியை எதிர்கொண்டது. ‘டாஸ்’ ஜெயித்த தமிழக அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் பீல்டிங்கை தேர்வு செய்தார்.
இதன்படி முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி, தமிழக வீரர்களின் மாயாஜால சுழற்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் திணறியதுடன், விரைவில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
20 ஓவர்களில் பஞ்சாப் அணி 8 விக்கெட் இழப்புக்கு 94 ரன்களே எடுத்தது. அதிகபட்சமாக மயங்க் மார்கண்டே 26 பந்துகளில் 3 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 33 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். குர்கீரத் சிங் 25 ரன்னில் ஆட்டம் இழந்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். தமிழக அணி தரப்பில் சுழற்பந்து வீச்சாளர்கள் சாய் கிஷோர், சித்தார்த் தலா 3 விக்கெட்டும், பாபா அபரஜித் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
பின்னர் 95 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் ஆடிய தமிழக அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஹரி நிஷாந்த் 16 ரன்னிலும், ஷாருக்கான் 7 ரன்னிலும், அடுத்து வந்த பாபா அபராஜித் ரன் எதுவும் எடுக்காமலும், கேப்டன் தினேஷ் கார்த்திக் 4 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தனர்.
இதனால் தமிழக அணி 48 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 3-வது வீரராக களம் கண்ட ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் நிலைத்து நின்று ஆடி அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார். விஜய் சங்கர் 20 ரன்னிலும், முகமது ரன் எதுவும் எடுக்காமலும் அவுட் ஆனார்கள்.
தமிழக அணி 19.3 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 98 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வாஷிங்டன் சுந்தர் 44 பந்துகளில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சருடன் 45 ரன்னும், சித்தார்த் 2 பந்துகளில் ஒரு ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். பஞ்சாப் அணி தரப்பில் ஹர்பிரீத் பிரார், மயங்க் மார்கண்டே, அபிஷேக் ஷர்மா தலா 2 விக்கெட் கைப்பற்றினார்கள்.
இந்த வெற்றியின் மூலம் தமிழ்நாடு 3 போட்டிகளில் இரண்டில் வெற்றி பெற்று 2-வது இடத்தில் உள்ளது.
இதில் ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ள தமிழக அணி நேற்று நடந்த தனது 3-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணியை எதிர்கொண்டது. ‘டாஸ்’ ஜெயித்த தமிழக அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் பீல்டிங்கை தேர்வு செய்தார்.
இதன்படி முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி, தமிழக வீரர்களின் மாயாஜால சுழற்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் திணறியதுடன், விரைவில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
20 ஓவர்களில் பஞ்சாப் அணி 8 விக்கெட் இழப்புக்கு 94 ரன்களே எடுத்தது. அதிகபட்சமாக மயங்க் மார்கண்டே 26 பந்துகளில் 3 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 33 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். குர்கீரத் சிங் 25 ரன்னில் ஆட்டம் இழந்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். தமிழக அணி தரப்பில் சுழற்பந்து வீச்சாளர்கள் சாய் கிஷோர், சித்தார்த் தலா 3 விக்கெட்டும், பாபா அபரஜித் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
பின்னர் 95 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் ஆடிய தமிழக அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஹரி நிஷாந்த் 16 ரன்னிலும், ஷாருக்கான் 7 ரன்னிலும், அடுத்து வந்த பாபா அபராஜித் ரன் எதுவும் எடுக்காமலும், கேப்டன் தினேஷ் கார்த்திக் 4 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தனர்.
இதனால் தமிழக அணி 48 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 3-வது வீரராக களம் கண்ட ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் நிலைத்து நின்று ஆடி அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார். விஜய் சங்கர் 20 ரன்னிலும், முகமது ரன் எதுவும் எடுக்காமலும் அவுட் ஆனார்கள்.
தமிழக அணி 19.3 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 98 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வாஷிங்டன் சுந்தர் 44 பந்துகளில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சருடன் 45 ரன்னும், சித்தார்த் 2 பந்துகளில் ஒரு ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். பஞ்சாப் அணி தரப்பில் ஹர்பிரீத் பிரார், மயங்க் மார்கண்டே, அபிஷேக் ஷர்மா தலா 2 விக்கெட் கைப்பற்றினார்கள்.
இந்த வெற்றியின் மூலம் தமிழ்நாடு 3 போட்டிகளில் இரண்டில் வெற்றி பெற்று 2-வது இடத்தில் உள்ளது.
ஆஸ்திரேலியாவில் கார் வாடகை கட்டணத்தை வாங்க மறுத்த இந்திய டிரைவரை, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் இரவு உணவு விருந்திற்கு அழைத்து சென்றுள்ள சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது.
ஆஸ்திரேலியால் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா இன்னிங்ஸ் வெற்றி பெற்றது.
இதனையடுத்து இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் 29-ந்தேதி அடிலெய்டில் பகல்-இரவு போட்டியாக நடக்கிறது. இந்நிலையில், ஏபிசி வானொலி தொகுப்பாளர் அலிசன் மிட்செல் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான மிட்செல் ஜான்சனிடம் ஒரு சுவாரஷ்யமான சம்பவம் குறித்து பேசியுள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன் பாகிஸ்தான் வீரர்களான ஷாஹீன் ஷா அப்ரிடி, யாசிர் ஷா மற்றும் நசீம் ஷா ஆகியோர் ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய ஓட்டல் ஒன்றிற்கு உணவருந்த காரில் சென்றுள்ளனர்.
ஓட்டல் வந்தடைந்ததும் கார் டிரைவராக இருந்த இந்தியருக்கு, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் பணம் கொடுத்தனர். அவர் பணம் வாங்க மறுத்துள்ளார். உடனே அந்த வீரர்கள் தங்களுடன் உணவருந்துமாறு அந்த டிரைவரை விருந்துக்கு அழைத்து சென்று உள்ளனர்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஐந்து வீரர்களுடன் இந்திய டிரைவர் உணவகத்தின் மேஜையில் அமர்ந்திருந்த புகைப்படம் அவரது தொலைபேசியில் இருப்பதை காட்டினார்.
இதுகுறித்து யாசிர் ஷா கூறுகையில் ‘‘நாங்கள் இரவு உணவு அருந்த விரும்பினோம். எங்களுக்கு ரெஸ்டாரன்ட் எங்கு இருக்கிறது என்பது தெரியாததால், பாகிஸ்தான் அல்லது இந்தியா ரெஸ்டாரன்டிற்கு செல்லுமாறு கூறினோம். டாக்சி டிரைவர் இந்திய ரெஸ்டாரன்டிற்கு அழைத்துச் சென்றார்.
ரெஸ்டாரன்ட் வந்ததும் வாடகை பணத்தை கொடுத்தோம். அவர் வாங்க மறுத்து விட்டார். அப்படி என்றால் எங்களுடன் உணவு அருந்த வாருங்கள் என்றோம். அவர் சம்மதம் தெரிவித்து எங்களுடன் வந்து உணவு அருந்தினார்’’ என்றார்.
இதனையடுத்து இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் 29-ந்தேதி அடிலெய்டில் பகல்-இரவு போட்டியாக நடக்கிறது. இந்நிலையில், ஏபிசி வானொலி தொகுப்பாளர் அலிசன் மிட்செல் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான மிட்செல் ஜான்சனிடம் ஒரு சுவாரஷ்யமான சம்பவம் குறித்து பேசியுள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன் பாகிஸ்தான் வீரர்களான ஷாஹீன் ஷா அப்ரிடி, யாசிர் ஷா மற்றும் நசீம் ஷா ஆகியோர் ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய ஓட்டல் ஒன்றிற்கு உணவருந்த காரில் சென்றுள்ளனர்.
ஓட்டல் வந்தடைந்ததும் கார் டிரைவராக இருந்த இந்தியருக்கு, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் பணம் கொடுத்தனர். அவர் பணம் வாங்க மறுத்துள்ளார். உடனே அந்த வீரர்கள் தங்களுடன் உணவருந்துமாறு அந்த டிரைவரை விருந்துக்கு அழைத்து சென்று உள்ளனர்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஐந்து வீரர்களுடன் இந்திய டிரைவர் உணவகத்தின் மேஜையில் அமர்ந்திருந்த புகைப்படம் அவரது தொலைபேசியில் இருப்பதை காட்டினார்.
இதுகுறித்து யாசிர் ஷா கூறுகையில் ‘‘நாங்கள் இரவு உணவு அருந்த விரும்பினோம். எங்களுக்கு ரெஸ்டாரன்ட் எங்கு இருக்கிறது என்பது தெரியாததால், பாகிஸ்தான் அல்லது இந்தியா ரெஸ்டாரன்டிற்கு செல்லுமாறு கூறினோம். டாக்சி டிரைவர் இந்திய ரெஸ்டாரன்டிற்கு அழைத்துச் சென்றார்.
ரெஸ்டாரன்ட் வந்ததும் வாடகை பணத்தை கொடுத்தோம். அவர் வாங்க மறுத்து விட்டார். அப்படி என்றால் எங்களுடன் உணவு அருந்த வாருங்கள் என்றோம். அவர் சம்மதம் தெரிவித்து எங்களுடன் வந்து உணவு அருந்தினார்’’ என்றார்.
டோக்கியோவில் அடுத்த ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கு பிறகு பஜ்ரங் புனியா- சங்கீதா போகட் திருமணம் நடைபெறுகிறது.
சோனிபட்:
இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீரர்களில் ஒருவர் பஜ்ரங் புனியா. ஆசிய மற்றும் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் தங்க பதக்கம் வென்ற இவர் டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதை இலக்காக கொண்டுள்ளார்.
அரியானாவை சேர்ந்த பஜ்ரங் புனியா, சக மல்யுத்த வீராங்கனையான சங்கீதா போகட்டை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தார். இவர்களது காதல் விவகாரம் இரு வீட்டாரின் பெற்றோருக்கு தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து இருவரது குடும்பத்தினரும் திருமணத்துக்கு சம்மதித்தனர்.
இந்த நிலையில் பஜ்ரங் புனியா-சங்கீதா போகட் திருமண நிச்சயதார்த்தம் அரியான மாநிலம் சோனிபட்டில் உள்ள பஜ்ரங் புனியா வீட்டில் நடந்தது. இதில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
டோக்கியோவில் அடுத்த ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கு பிறகு பஜ்ரங் புனியா- சங்கீதா போகட் திருமணம் நடைபெறுகிறது.
சங்கீதா பிரபல முன்னாள் மல்யுத்த வீரர் மகாவீர் போகட்டின் மகள் ஆவார். மகாவீரின் வாழ்க்கையை மையப்படுத்திதான் பாலிவுட் நடிகர் அமீர்கான் நடித்த ‘தங்கல்’ படம் உருவாக்கப்பட்டது. சங்கீதாவின் சகோதரி கீதாவும் மல்யுத்த வீரர் ஆவார்.
இந்த திருமண நிச்சயதார்த்தம் குறித்து சங்கீதாவின் தந்தையான மகாவீர் கூறும்போது, “எனது மகள்கள் தங்களது வாழ்க்கை துணையை தேர்வு செய்திருப்பதை நான் தடுக்கவில்லை. அவர்கள் விருப்பபடி வாழ சம்மதித்தேன்” என்றார்.
இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீரர்களில் ஒருவர் பஜ்ரங் புனியா. ஆசிய மற்றும் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் தங்க பதக்கம் வென்ற இவர் டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதை இலக்காக கொண்டுள்ளார்.
அரியானாவை சேர்ந்த பஜ்ரங் புனியா, சக மல்யுத்த வீராங்கனையான சங்கீதா போகட்டை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தார். இவர்களது காதல் விவகாரம் இரு வீட்டாரின் பெற்றோருக்கு தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து இருவரது குடும்பத்தினரும் திருமணத்துக்கு சம்மதித்தனர்.
இந்த நிலையில் பஜ்ரங் புனியா-சங்கீதா போகட் திருமண நிச்சயதார்த்தம் அரியான மாநிலம் சோனிபட்டில் உள்ள பஜ்ரங் புனியா வீட்டில் நடந்தது. இதில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
டோக்கியோவில் அடுத்த ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கு பிறகு பஜ்ரங் புனியா- சங்கீதா போகட் திருமணம் நடைபெறுகிறது.
சங்கீதா பிரபல முன்னாள் மல்யுத்த வீரர் மகாவீர் போகட்டின் மகள் ஆவார். மகாவீரின் வாழ்க்கையை மையப்படுத்திதான் பாலிவுட் நடிகர் அமீர்கான் நடித்த ‘தங்கல்’ படம் உருவாக்கப்பட்டது. சங்கீதாவின் சகோதரி கீதாவும் மல்யுத்த வீரர் ஆவார்.
இந்த திருமண நிச்சயதார்த்தம் குறித்து சங்கீதாவின் தந்தையான மகாவீர் கூறும்போது, “எனது மகள்கள் தங்களது வாழ்க்கை துணையை தேர்வு செய்திருப்பதை நான் தடுக்கவில்லை. அவர்கள் விருப்பபடி வாழ சம்மதித்தேன்” என்றார்.






