என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • பாகிஸ்தானுக்கு எதிரான நேற்றைய போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
    • இந்தியா- பாகிஸ்தான் போட்டியின் போது இரு நாட்டு கேப்டன்களும் கைகுலுக்க மறுத்துவிட்டனர்.

    கொழும்பு:

    20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் விளையாடிய இந்தியா 7 விக்கெட் இழப்புக்கு 175 ரன் எடுத்தது.

    இதனையடுத்து விளையாடிய பாகிஸ்தான் 18 ஓவரில் 114 ரன்னில் சுருண்டது. இதனால் இந்தியா 61 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 20 ஓவர் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியாவின் மிகப்பெரிய வெற்றியாகும். மேலும் உலக கோப்பையில் தொடர்ச்சியாக 11-வது வெற்றியை பெற்றது.

    கிரிக்கெட் போட்டியின்போது டாஸ் நிகழ்வில் இரு அணிகளின் கேப்டன்கள் கை குலுக்கி கொள்வது வழக்கமானது. இதே போல போட்டி முடிந்த பிறகும் வீரர்கள் கைகுலுக்கி கொள்வார்கள்.

    பகல்காம் தாக்குதல் சம்பவம் எதிரொலியாக பாகிஸ்தான் வீரர்களிடம் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய வீரர்கள் ஆசிய கோப்பை போட்டியின்போது கைகுலுக்க மறுத்துவிட்டனர்.

    அதேபோல நேற்றைய போட்டியின் போது இருநாட்டு கேப்டன்கள் மீண்டும் கை குலுக்கலை தவிர்த்து கடந்து சென்றனர்.

    இந்நிலையில் இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கு முன்னதாக இந்திய டி20 அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் வாசிம் அக்ரம் இருவரும் மைதானத்தில் சந்தித்து கொண்டனர். அப்போது இருவரும் கட்டியணைத்து சிரித்த முகத்துடன் கைகுலுக்கி கொண்டனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    இந்த வீடியோவுக்கு சில ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும் பல ரசிகர்கள் இதுதான் ஸ்போர்ட்மேன்ஷிப் என கருத்து தெரிவித்து வருகின்றனர். மைதானத்தில் அரசியல் இருக்க கூடாது எனவும் கருத்து தெரிவித்தனர்.

    • உலகின் தலைசிறந்த பவுலர் என்பதை பும்ரா வெளிப்படுத்தினார்.
    • பந்துவீச்சில் அனைவரும் வழங்கிய பங்களிப்பை பார்த்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்.

    கொழும்பு:

    20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியுடன் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது.

    கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய இந்தியா 7 விக்கெட் இழப்புக்கு 175 ரன் எடுத்தது.

    இஷான் கிஷன் 40 பந்தில் 77 ரன்னும் (10 பவுண்டரி , 3 சிக்சர்) , கேப்டன் சூர்யகுமார் யாதவ் 29 பந்தில் 32 ரன்னும் (3 பவுண்டரி), ஷிவம் துபே 17 பந்தில் 27 ரன்னும் (3 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். சைம் அயூப் 3 விக்கெட்டும், கேப்டன் சல்மான் ஆகா, சகின் ஷா அப்ரிடி, உஸ்மான் தாரிக் தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    பின்னர் ஆடிய பாகிஸ்தான் 18 ஓவரில் 114 ரன்னில் சுருண்டது. இதனால் இந்தியா 61 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 20 ஓவர் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியாவின் மிகப்பெரிய வெற்றியாகும். மேலும் உலக கோப்பையில் தொடர்ச்சியாக 11-வது வெற்றியை பெற்றது.

    உஸ்மான் கான் அதிகபட்சமாக 34 பந்தில் 44 ரன்னும் (6 பவுண்டரி, 1 சிக்சர்), சகின்ஷா அப்ரிடி 19 பந்தில் 23 ரன்னும் (2 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். ஹர்திக் பாண்ட்யா, பும்ராஅக்ஷர் படேல் வருண் சக்கரவர்த்தி தலா 2 விக்கெட்டும், குல்தீப் யாதவ், திலக் வர்மா, தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    இந்நிலையில் இந்த வெற்றியை நாட்டுக்கு அர்ப்பணிப்பதாக இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    இந்த வெற்றி இந்தியாவுக்கானது. நாங்கள் ஆட விரும்பிய அதே வகையான கிரிக்கெட்டை ஆடினோம். இந்த மைதானத்தில் முதலில் பேட்டிங் செய்தது சிறந்த முடிவாக அமைந்தது.

    இஷான் கிஷன் புதுமையான சிந்தனையுடன் செயல்பட்டார். 0/1 என்ற நிலையில் யாராவது பொறுப்பேற்க வேண்டி இருந்தது, அதை அவர் அற்புதமாக செய்தார். கொஞ்சம் சரிவு இருந்தது. திலக்வர்மா, துபே, ரிங்கு ஆகியோர் பேட்டிங் செய்த விதம் பாராட்டத்தக்கது.

    முதலில் பேட்டிங் செய்யும் போது பனிப்பொழிவு அல்லது ஆடுகளம் எப்படி இருக்கும் என்று யூகிக்க முடியாது. நாங்கள் எடுத்த ஸ்கோர் சராசரியை விட 15 ரன்கள் அதிகம் என உணர்ந்தோம். 155 ரன்கள் என்பது போட்டியை நெருக்கடியாக மாற்றி இருந்திருக்கும்.

    ஹர்திக் பாண்டியா சிறப்பான பந்துவீச்சு தொடக்கத்தை கொடுத்தார். உலகின் தலைசிறந்த பவுலர் என்பதை பும்ரா வெளிப்படுத்தினார். பந்துவீச்சில் அனைவரும் வழங்கிய பங்களிப்பை பார்த்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். நாங்கள் ஒரு அணியாக நல்ல நேரம் செலவிட்டு, அகமதாபாத் பயணத்தின் போது அடுத்த ஆட்டங்களை பற்றி சிந்திப்போம்.

    இவ்வாறு சூர்யகுமார் யாதவ் கூறினார்.

    இந்திய அணி கடைசி லீக் ஆட்டத்தில் நெதர்லாந்தை வருகிற 18-ந் தேதி அகமதாபாத்தில் எதிர் கொள்கிறது. 

    • உஸ்மான் தாரிக் 4 ஓவர்களில் 2 பவுண்டரி மட்டுமே அடிக்கப்பட்டது.
    • உலகக் கோப்பையில் ஒரு இன்னிங்சில் அதிக சுழற்பந்து வீச்சாளர் வீசிய வகையில் முந்தைய சாதனை சமன் செய்யப்பட்டது.

    டி20 உலகக் கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் இந்திய அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.

    இந்நிலையில் இந்த போட்டியில் அரங்கேறிய சாதனைகள் குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

    பாகிஸ்தான் தனது இன்னிங்சில் மொத்தம் 18 ஓவர்களில் சுழற்பந்து வீச்சாளர்களையே பயன்படுத்தியது. இதன் மூலம் உலகக் கோப்பையில் ஒரு இன்னிங்சில் அதிக சுழற்பந்து வீச்சாளர் வீசிய வகையில் முந்தைய சாதனை சமன் செய்யப்பட்டது. இதற்கு முன்பு 2012-ம் ஆண்டு உலகக் கோப்பையில் இதே மைதானத்தில் நடந்த பாகிஸ்தான்- ஆஸ்திரேலியா ஆட்டத்தில் 18 ஓவர்களை சுழற்பந்து வீச்சாளர்கள் வீசியிருந்தனர்.

    பாகிஸ்தானின் புதிய சுழல் வரவு உஸ்மான் தாரிக் 4 ஓவர்களில் 24 ரன் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் கைப்பற்றினார். அவரது ஓவரில் 2 பவுண்டரி மட்டுமே அடிக்கப்பட்டது.

    இந்திய அதிரடி பேட்ஸ்மேன் அபிஷேக் ஷர்மா இந்த உலகக் கோப்பையில் இதுவரை ஆடியுள்ள இரு ஆட்டங்களிலும் டக்-அவுட் ஆகியுள்ளார்.

    2024-ம் ஆண்டு 20 ஓவர் 5 உலகக் கோப்பையை இந்தியாவுக்கு வென்றுத் தந்த கேப்டன் ரோகித் சர்மா போட்டியை பார்க்க கொழும்பு சென்றிருந்தார். ஆட்டத்திற்கு முன்பாக இந்திய வீரர்களுக்கு நிறைய ஆலோசனைகளை வழங்கினார்.

    இலங்கை அதிபர் அனுர குமார திசநாயகே. சர்வ தேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர் ஜெய் ஷா, இந் திய கிரிக்கெட் வாரிய -தலைவர் மிதுன் மன் ஹாஸ், துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மொசின் நக்வி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் இந்த ஆட்டத்தை நேரில் கண்டு களித்தனர்.

    20 ஓவர் உலகக் கோப்பையில் இந்திய அணி பாகிஸ்தானுடன் 9-வது முறையாக மோதி அதில் பெற்ற 8-வது வெற்றியாகும். 20 ஓவர் உலகக் கோப்பையில் குறிப்பிட்ட ஒரு அணிக்கு எதிராக அதிக வெற்றிகளை குவித்த அணியாக இந்தியா திகழ்கிறது.

    • 2வது அரையிறுதிப் போட்டியில் பெங்கால், ஜம்மு காஷ்மீர் அணிகள் மோதுகின்றன.
    • முதல் நாள் முடிவில் பெங்கால் அணி 5 விக்கெட்டுக்கு 249 ரன்கள் எடுத்துள்ளது.

    கொல்கத்தா:

    ரஞ்சி டிராபி தொடருக்கான போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

    இந்நிலையில், ரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டிக்கான அரையிறுதி ஆட்டங்கள் நேற்று தொடங்கின.

    பெங்காலில் உள்ள கல்யாணியில் நடக்கும் 2வது அரையிறுதிப் போட்டியில் பெங்கால், ஜம்மு காஷ்மீர் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற ஜம்மு காஷ்மீர் பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, பெங்கால் அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் கேப்டன் அபிமன்யு ஈஸ்வரன் 49 ரன்னில் அவுட்டானார்.

    சுதீப் சாட்டர்ஜி, சூரஜ் சிந்து ஜெய்ஸ்வால் டக் அவுட்டாகினர். ஷபாஸ் அகமது 42 ரன்னில் வெளியேறினார்.

    பொறுப்புடன் ஆடிய சுதீப் குமார் கராமி சதமடித்து 136 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இறுதியில், முதல் நாள் முடிவில் பெங்கால் அணி 5 விக்கெட்டுக்கு 249 ரன்கள் எடுத்துள்ளது.

    • முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவரில் 175 ரன்கள் குவித்தது.
    • இஷான் கிஷன் அதிரடியாக ஆடி 40 பந்தில் 77 ரன்கள் குவித்தார்.

    புதுடெல்லி:

    டி20 உலகக் கோப்பை தொடரின் 27-வது லீக் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் பவுலிங் தேர்வு செய்தது.

    முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 175 ரன்கள் குவித்தது. இஷான் கிஷன் அதிரடியாக ஆடி 40 பந்தில் 77 ரன்கள் குவித்தார்.

    அடுத்து ஆடிய பாகிஸ்தான் 18 ஓவரில் 114 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 61 ரன் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன் விருது இஷான் கிஷனுக்கு அளிக்கப்பட்டது.

    இந்நிலையில், இந்திய அணி தான் ஆடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்றதன் மூலம் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது. ஏற்கனவே வெஸ்ட் இண்டீஸ் அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது.

    நமீபியா, ஓமன் மற்றும் நேபாளம் ஆகிய அணிகள் தான் ஆடிய 3 ஆட்டங்களில் தோல்வி அடைந்ததால் டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறின.

    • டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பவுலிங் தேர்வு செய்தது.
    • அதன்படி, முதலில் ஆடிய இந்தியா 20 ஓவரில் 175 ரன்கள் குவித்தது.

    கொழும்பு:

    டி20 உலகக் கோப்பை தொடரின் 27-வது லீக் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 175 ரன்கள் குவித்தது. இஷான் கிஷன் அதிரடியாக ஆடி 40 பந்தில் 77 ரன்கள் குவித்தார். சூர்யகுமார் யாதவ் 32 ரன்னும், ஷிவம் துபே 27 ரன்னும் எடுத்தனர்.

    பாகிஸ்தானின் சயீம் அயூப் 3விக்கெட் வீழ்த்தினார்.

    176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது. ஆரம்பம் முதலே இந்தியா அசத்தலாக பந்து வீசியது. உஸ்மான் கான் ஒரளவு தாக்குப் பிடித்து 44 ரன்கள் எடுத்தார். மற்றவர்கள் நிலைத்து நிற்கவில்லை.

    இறுதியில், பாகிஸ்தான் 18 ஓவரில் 114 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 61 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

    இந்தியா சார்பில் பும்ரா, பாண்ட்யா, வருண் சக்கரவர்த்தி, அக்சர் படேல் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். ஆட்ட நாயகன் விருது இஷான் கிஷனுக்கு அளிக்கப்பட்டது.

    இந்நிலையில், பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றியை நாடு முழுவதிலும் ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் உற்சாகமாக கொண்டாடினர்.

    • முதல் அரையிறுதிப் போட்டியில் உத்தரகாண்டும், கர்நாடகாவும் மோதுகின்றன.
    • முதல் நாள் முடிவில் கர்நாடக 355 ரன்கள் குவித்தது.

    லக்னோ:

    ரஞ்சி டிராபி தொடருக்கான போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

    இந்நிலையில், ரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டிக்கான அரையிறுதி ஆட்டங்கள் இன்று தொடங்கின. லக்னோவில் நடக்கும் முதல் அரையிறுதிப் போட்டியில் உத்தரகாண்ட், கர்நாடகா அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற உத்தரகாண்ட் பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் கர்நாடக அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால் 5 ரன்னில் அவுட்டானார்.

    அடுத்து கே எல் ராகுலுடன், தேவ்தத் படிக்கல் இணைந்தார். இருவரும் பொறுப்புடன் ஆடி சதமடித்து அசத்தினர். 2-வது விக்கெட்டுக்கு 278 ரன்கள் சேர்த்த நிலையில் கே.எல்.ராகுல் 141 ரன்களுக்கு அவுட்டானார்.

    தொடர்ந்து சிறப்பாக ஆடிய தேவ்தத் படிக்கல் 148 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இறுதியில், முதல் நாள் முடிவில் கர்நாடக அணி 5 விக்கெட்டுக்கு 355 ரன்கள் குவித்தது. தேவ்தத் படிக்கல் 148 ரன்னுடனும், கருண் நாயர் 37 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    • ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ் தொடர் நெதர்லாந்தில் நடந்தது.
    • இறுதிப்போட்டியில் கனடாவின் பெலிக்ஸ் ஆகர் பெலிசம் தோல்வி அடைந்தார்.

    ஆம்ஸ்டர்டாம்:

    ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ் தொடர் நெதர்லாந்தில் நடக்கிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

    இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார், கனடாவின் பெலிக்ஸ் ஆகர் பெலிசம் உடன் மோதினார்.

    தொடக்கம் முதலே அதிரடியாக ஆடிய அலெக்ஸ் டி மினார் 6-3, 6-2 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

    • பாபர் அசாம் 5 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.
    • உஸ்மான் கான் அதிகபட்சமாக 34 பந்தில் 44 ரன்கள் அடித்தார்.

    டி20 உலகக் கோப்பையில் இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போட்டி கொழும்பில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் சேர்த்தது. இஷான் கிஷன் 40 பந்தில் 77 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 29 பந்தில் 32 ரன்களும், ஷிவம் துபே 17 பந்தில் 27 ரன்களும் அடித்தனர். ரிங்கு சிங் 4 பந்தில் 11 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். பாகிஸ்தான் அணியில் சயீம் ஆயுப் 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

    பின்னர் 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களம் இறங்கியது. ஹர்திக் பாண்ட்யா முதல் ஓவரை வீசினார். முதல் ஓவரின் 4-வது பந்தில் சஹிப்சதா ஃபர்ஹான் ரிங்கு சிங்குடன் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இந்த ஓவரை ஹர்திக் பாண்ட்யா மெய்டன் ஓவராக வீசினார்

    2-வது ஓவரை பும்ரா வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தை ஆயுப் சிக்சருக்கு தூக்கினார். 2-வது பந்தில் எல்.பி.பி.டபிள்யூ ஆனார். 5-வது பந்தில் பவுண்டரி அடித்த சல்மான் ஆகா, கடைசி பந்தில் ஹர்திக் பாண்ட்யாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதனால் பாகிஸ்தான் 13 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது. அடுத்த வந்த பாபர் அசாம் 5 ரன்னில் அக்சர் படேல் பந்தில் வெளியேறினார்.

    விக்கெட் கீப்பர் உஸ்மான் கான் சிறப்பாக விளையாடி 34 பந்தில் 44 ரன்கள் எடுத்து அக்சர் படேல் பந்தில் ஸ்டம்பிங் ஆனார்.

    அதன்பின் பாகிஸ்தான விக்கெட்டுகள மளமளவென சரிந்தது. இதனால் பாகிஸ்தான் 18 ஓவரில் 114 ரன்களில் ஆல்அவுட் ஆகி 61 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. பும்ரா, அக்சர் படேல், வருண் சக்ரவர்த்தி, ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீழ்த்தினர்.

    இந்த வெற்றியின் மூலம் இந்தியா 3 போட்டிகளில் வெற்றி பெற்று சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது.

    • ஹர்திக் பாண்ட்யா முதல் ஓவரில் ரன் கொடுக்காமல் ஒரு விக்கெட் வீழ்த்தினார்.
    • பும்ரா 2-வது ஓவரில் 13 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

    டி20 உலகக் கோப்பையில் இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போட்டி கொழும்பில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா இஷான் கிஷனின் (77) அபார ஆட்டத்தால் 175 ரன்கள் குவித்தது.

    பின்னர் 176 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணியின் சகிப்சதா ஃபர்ஹான், சயீம் ஆயுப் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரை ஹர்திக் பாண்ட்யா வீசினார். இந்த ஓவரின் 4-வது பந்தில் ஃபர்ஹான் ரன்ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

    அடுத்து சல்மான் ஆகா களம் இறங்கினார். 2-வது ஓவரை பும்ரா வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் சயீம் ஆயுப் சிக்சர் அடித்தார். அந்த பந்தில் எல்.பி.டபிள்யூ மூலம் வெளியேறினார். அடுத்து பாபர் அசாம் களம் இறங்கினார். 5-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டிய சல்மான் ஆகா, அடுத்த பந்தில் ஹர்திக் பாண்ட்யாவிடம் கேடச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

    பாகிஸ்தான் 2 ஓவரில் 13 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது.

    • ஷாஹீன் அப்ரிடி 2 ஓவரில் 31 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.
    • உஸ்மான் தாரீக் 4 ஓவரில் 24 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தினார்.

    டி20 உலகக் கோப்பையில் இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போட்டி கொழும்பில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச்சை தெர்வு செய்தது. அதன்படி இந்தியாவின் அபிஷேக் சர்மா மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

    யாரும் எதிர்பார்க்காத வகையில் சல்மான் ஆகா முதல் ஓவரை வீசினார். இந்த ஓவரின் கடைசி பந்தில் அபிஷேக் சர்மா ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.

    அடுத்து இஷான் கிஷன் உடன் திலக் வர்மா ஜோடி சேர்ந்தார். திலக் வர்மா நிதானமாக விளையாட, இஷான் கிஷன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் இந்தியா பவர்பிளேயில் 1 விக்கெட் இழப்பிற்கு 52 ரன்கள் எடுத்தது.

    7-வது ஓவரை அப்ரார் வீசினார். இந்த ஓவரின் முதல் இரண்டு பந்துகளை பவுண்டரிக்கு விரட்டி 27 பந்தில் அரைசதம் விளாசினார் இஷான் கிஷன். அத்துடன் அடுத்த பந்தையும் பவுண்டரி தூக்கினார். அவர் 2 சிக்ஸ், 7 பவுண்டரியுடன் அரைசதம் விளாசினார்.

    9-வது ஓவரை சயீம் ஆயுப் வீசினார். இந்த ஓவரின் 3-வது பந்தில் பவுண்டரி அடித்த இஷான் கிஷன் அடுத்த பந்தில் க்ளீன் போல்டானார். அவர் 40 பந்தில் 77 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அப்போது இந்தியா 8.4 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 88 ரன்கள் எடுத்திருந்தது.

    3-வது விக்கெட்டுக்கு திலக் வர்மா உடன் சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்தார். 12-வது ஓவரை முகமது நவாஸ் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தை திலக் வர்மா சிக்சருக்கு தூக்கினார். இதன் மூலம் இந்தியா 11.1 ஓவரில் 100 ரன்களை கடந்தது.

    11.1 ஓவரில் 100 ரன்னைக் கடந்த இந்தியா 14 ஓவரில் 125 ரன்னைத் தொட்டது. 15-வது ஓவரை சயீம் ஆயுப் வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் திலக் வர்மா ஆட்டமிழந்தார். அவர் 24 பந்தில் 25 ரன்கள் எடுத்தார்.

    4-வது விக்கெட்டுக்கு சூர்யகுமார் யாதவ் உடன் ஹர்திக் பாண்ட்யா ஜோடி சேர்ந்தார். ஹர்திக் பாண்ட்யா முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். இந்தியா அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இதனால் இந்தியா 14.3 ஓவரில் 126 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுக்களை இழந்தது.

    5-வது விக்கெட்டுக்கு சூர்யகுமார் யாதவ் உடன் ஷிவம் துபே ஜோடி சேர்ந்தார். 15 ஓவரில் இந்தியா 127 ரன்கள் எடுத்திருந்தது. இந்த ஓவரில் சயீம் ஆயுப் 2 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். 16-வது ஓவரை நவாஸ் வீசினார். இந்த ஓவரில் 9 ரன்கள் விட்டுக்கொடுத்தார். 17-வது ஓவரை உஸ்மான் தாரீக் வீசினார். இந்த ஓவரி் 4 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். இதனால் இந்தியா 17 ஓவரில் 140 ரன்கள் எடுத்திருந்தது.

    18-வது ஓவரை அப்ரார் வீசினார். இந்த ஓவரில் இந்தியாவுக்கு தலா ஒரு பவுண்டரி, சிக்சர் கிடைத்தது. இதனால் இந்தியா 154 ரன்கள் எடுத்தது.

    19-வது ஓவரை உஸ்மான் தாரீக் வீசினார். இந்த ஓவரின் 5-வது பந்தில் சூர்யகுமார் யாதவ் ஆட்டமிழந்தார். இவர் 29 பந்தில் 32 ரன்கள் எடுத்தார். அப்போது இந்தியா 5 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்திருந்தது. 19-வது ஓவரில் தாரீக் 5 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.

    கடைசி ஓவரை ஷாஹீன் அப்ரிடி வீசினார். முதல் பந்தை ஷிவம் துபே பவுண்டரிக்கு விரட்டினார். 2-வது பந்தில் ஒரு ரன் எடுத்தார். 3-வது பந்தை ரிங்கு சிங் பவுண்டரிக்கு விரட்டினார். 4-வது பந்தை சிக்கருக்கு தூக்கினார். 5-வது பந்தில் 2-வது ரன்னுக்கு ஓட முயன்றபோது ஷிவம் துபே ரன்அவுட் ஆனார். கடைசி பந்தை அக்சர் படேல் சந்தித்தார். அதில் ஆட்டமிழந்தார். இதனால் இந்தியா 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் குவித்துள்ளது.

    • ஹர்திக் பாண்ட்யா தான் சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார்.
    • திலக் வர்மா 24 பந்தில் 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    டி20 உலகக் கோப்பையில் இந்திய- பாகிஸ்தான் இடையிலான போட்டி கொழும்பில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச்சை தெர்வு செய்தது. அதன்படி இந்தியாவின் அபிஷேக் சர்மா மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

    யாரும் எதிர்பார்க்காத வகையில் சல்மான் ஆகா முதல் ஓவரை வீசினார். இந்த ஓவரின் கடைசி பந்தில் அபிஷேக் சர்மா ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.

    அடுத்து இஷான் கிஷன் உடன் திலக் வர்மா ஜோடி சேர்ந்தார். திலக் வர்மா நிதானமாக விளையாட, இஷான் கிஷன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் இந்தியா பவர்பிளேயில் 1 விக்கெட் இழப்பிற்கு 52 ரன்கள் எடுத்தது.

    7-வது ஓவரை அப்ரார் வீசினார். இந்த ஓவரின் முதல் இரண்டு பந்துகளை பவுண்டரிக்கு விரட்டி 27 பந்தில் அரைசதம் விளாசினார் இஷான் கிஷன். அத்துடன் அடுத்த பந்தையும் பவுண்டரி தூக்கினார். அவர் 2 சிக்ஸ், 7 பவுண்டரியுடன் அரைசதம் விளாசினார்.

    9-வது ஓவரை சயீம் ஆயுப் வீசினார். இந்த ஓவரின் 3-வது பந்தில் பவுண்டரி அடித்த இஷான் கிஷன் அடுத்த பந்தில் க்ளீன் போல்டானார். அவர் 40 பந்தில் 77 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அப்போது இந்தியா 8.4 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 88 ரன்கள் எடுத்திருந்தது.

    3-வது விக்கெட்டுக்கு திலக் வர்மா உடன் சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்தார். 12-வது ஓவரை முகமது நவாஸ் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தை திலக் வர்மா சிக்சருக்கு தூக்கினார். இதன் மூலம் இந்தியா 11.1 ஓவரில் 100 ரன்களை கடந்தது.

    11.1 ஓவரில் 100 ரன்னைக் கடந்த இந்தியா 14 ஓவரில் 125 ரன்னைத் தொட்டது. 15-வது ஓவரை சயீம் ஆயுப் வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் திலக் வர்மா ஆட்டமிழந்தார். அவர் 24 பந்தில் 25 ரன்கள் எடுத்தார்.

    4-வது விக்கெட்டுக்கு சூர்யகுமார் யாதவ் உடன் ஹர்திக் பாண்ட்யா ஜோடி சேர்ந்தார். ஹர்திக் பாண்ட்யா முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். இந்தியா அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இதனால் இந்தியா 14.3 ஓவரில் 126 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுக்களை இழந்தது.

    ×