search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • நான் டி20 உலகக் கோப்பைக்கு தேர்வு ஆவேன் என இருந்தால், தேர்வு ஆவேன்.
    • ஆனால் தற்போது எனது கவனம் ஐபிஎல் கிரிக்கெட்டில்தான்.

    இந்திய அணியின் தலைசிறந்த இளம் வீரராக சுப்மன் கில் திகழ்ந்து வருகிறார். ஐபிஎல் தொடர் முடிந்த உடன் டி20 உலகக்கோப்பை தொடர் வர இருக்கிறது. இன்னும் ஒன்றிரண்டு நாட்களில் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட இருக்கிறது.

    இதில் சுப்மன் கில் போன்றோருக்கு இடம் கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில் உலகக் கோப்பை தேர்வு குறித்து சுப்மன் கில் கூறியதாவது:-

    இந்திய அணிக்காக விளையாடுவது மிகப்பெரிய விசயம். ஆனால், நான் உலகக் கோப்பை குறித்து யோசிக்க தொடங்கினால், அது தற்போதைய அணியான குஜராத் டைட்டன்ஸ்க்கு அநீதி இழைப்பதாகும். அதேபோல் எனக்கும் அநீதி இழைப்பதாகும்.

    நான் டி20 உலகக் கோப்பைக்கு தேர்வு ஆவேன் என இருந்தால், தேர்வு ஆவேன். ஆனால் தற்போது எனது கவனம் ஐபிஎல் கிரிக்கெட்டில்தான். என்னுடைய அணிக்கு சிறந்ததை பெற்றுக் கொடுப்பது, அணிக்காக சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்தி சக வீரர்களுக்கு உதவி செய்வது குறித்துதான் கவனம் செலுத்துகிறேன்.

    கடந்த ஆண்டு உலகக் கோப்பையில் விளையாடிய எனக்கு, எனது அனுபவங்கள் உண்டு. இன்னொரு உலகக் கோப்பையில் விளையாட முடிந்தால் நன்றாக இருக்கும். ஆனால் நான் இவ்வளவு தூரம் யோசிக்கவில்லை.

    நான் கடந்த சீசனில் கிட்டத்தட்ட 900 ரன்களை எடுத்துள்ளேன், என்னைத் தேர்வு செய்ய வேண்டியிருந்தால், நான் எடுக்கப்படுவேன். இல்லையென்றால் (அப்படியானால்) தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    இவ்வாறு சுப்மன் கில் தெரிவித்துள்ளார்.

    • ஆர்சிபி அணியில் படித்தார் 20 பந்தில் 50 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
    • ஐதராபாத் தரப்பில் உனத்கட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் ஐதராபாத்- பெங்களூரு அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி ஆர்சிபி அணியின் தொடக்க வீரர்களாக டுபிளிசிஸ்- விராட் கோலி களமிறங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 48 ரன்கள் எடுத்தது. டுபிளிசிஸ் 25 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வில் ஜாக் 6 ரன்னில் அவுட் ஆனார்.

    இதனையடுத்து கோலி- பட்டிதார் ஜோடி அணியின் ஸ்கோரை கணிசமாக உயர்த்தியது. அதிரடியாக விளையாடிய பட்டிதார் 20 பந்தில் 50 ரன்கள் விளாசி அவுட் ஆனார். மந்தமாக விளையாடிய விராட் கோலி 43 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

    இதனை தொடர்ந்து கேமரூன் க்ரீன்- தினேஷ் கார்த்திக் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார்.

    இதனால் ஆர்சிபி அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்கள் குவித்தது. ஐதராபாத் தரப்பில் உனத்கட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

    • உலகக் கோப்பையை வெல்ல வேண்டுமெனில் 5 சிறந்த பவுலர்களை தேர்ந்தெடுங்கள்.
    • இந்த பையன் கொஞ்சம் பேட்டிங் செய்வார், கொஞ்சம் பவுலிங் செய்வார் என்று நினைத்து எக்ஸ்ட்ரா பேட்ஸ்மேனை தேர்வு செய்ய சமரசம் செய்யாதீர்கள்.

    வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் வரும் ஜூன் மாதம் நடைபெற உள்ள 2024 டி20 உலகக் கோப்பை தொடரிலாவது இந்தியா வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது. வரலாற்றில் முதலும் கடைசியுமாக டோனி தலைமையில் இந்தியா 2007 டி20 உலகக் கோப்பையை வென்றது.

    இந்நிலையில் டி20 உலகக் கோப்பையை வெல்ல இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கு முன்னாள் வீரர் நவ்ஜோத் சித்து ஆலோசனை கொடுத்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    உலகக் கோப்பையை வெல்ல வேண்டுமெனில் 5 சிறந்த பவுலர்களை தேர்ந்தெடுங்கள் என்பதே ராகுல் டிராவிட்டுக்கு என்னுடைய நேரடியான ஆலோசனையாகும். அணியின் சரிவு என்பது கேரக்டரில் இருந்து தான் உருவாகிறது. எனவே உங்கள் கேரக்டரில் நீங்கள் சமரசம் செய்யும் போது வெற்றி கிடைக்கிறது.

    உங்களிடம் ரவீந்திர ஜடேஜா, குல்தீப், ரவி பிஸ்னோய் ஆகிய 3 ஸ்பின்னர்கள் இருக்கின்றனர். அவர்களுடன் 3 வேகப்பந்து வீச்சாளர்களை தேர்ந்தெடுங்கள். ஃபிட்டாக இருக்கும் பட்சத்தில் மயங் யாதவை தேர்வு செய்யலாம். கலீல் அகமது, மோசின் கான், முகேஷ் குமார் உட்பட இந்தியாவுக்காக விக்கெட் டேக்கிங் பவுலர்கள் ஏராளமாக இருக்கின்றனர். எனவே இந்த பையன் கொஞ்சம் பேட்டிங் செய்வார், கொஞ்சம் பவுலிங் செய்வார் என்று நினைத்து எக்ஸ்ட்ரா பேட்ஸ்மேனை தேர்வு செய்ய சமரசம் செய்யாதீர்கள்.

    இம்ரான் கான் அல்லது ஸ்டீவ் வாக் போன்ற மகத்தான கேப்டன்கள் எப்போதுமே விக்கெட் எடுக்கும் பவுலர்களுக்கு முன்னுரிமை கொடுத்தனர். அது தான் வெற்றிக்கான ரகசியமாகும். ஆனால் இந்த டெம்ப்ளேட்டை நம்முடைய அணி புறக்கணிக்கிறது. 6 பேட்ஸ்மேன்கள் உங்களுக்கு போட்டியை வென்று கொடுக்காமல் போனால் 7-வது பேட்ஸ்மேனாலும் வெற்றியை பெற்றுக் கொடுக்க முடியாது.

    என்று சித்து கூறினார்.

    • ஐதராபாத் அணி இதுவரை 7 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 2 தோல்வியுடன் புள்ளி பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது.
    • பெங்களூரு அணி 8 போட்டிகளில் விளையாடி 1-ல் வெற்றியும் 7-ல் தோல்வியும் அடைந்து கடைசி இடத்தில் உள்ளது.

    ஐதராபாத்:

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இன்றைய 41-வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    ஐதராபாத் அணி இதுவரை 7 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 2 தோல்வியுடன் புள்ளி பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது. பெங்களூரு அணி 8 போட்டிகளில் விளையாடி 1-ல் வெற்றியும் 7-ல் தோல்வியும் அடைந்து கடைசி இடத்தில் உள்ளது. இந்த போட்டி ஆர்சிபி அணிக்கு முக்கியமான போட்டியாகும்.

    • இது ஒரு நம்பமுடியாத பயணம், சவால்கள், வெற்றிகள் மற்றும் மறக்க முடியாத நினைவுகள் நிறைந்தது.
    • பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் ஆதரவு விலைமதிப்பற்றது.

    பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் பிஸ்மா மரூப், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 32 வயதான அவர் பாகிஸ்தான் அணிக்காக 136 ஒருநாள் போட்டி மற்றும் 140 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார்.

    அவர் சர்வதேச கிரிக்கெட்டில் சதத்தைப் பதிவு செய்யத் தவறிய போதிலும், பாகிஸ்தானுக்காக இரண்டு வடிவங்களிலும் அதிக ரன்கள் எடுத்தவர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் 21 அரை சதங்களுடன் 3369 ரன்களும் டி20 போட்டிகளில் 12 அரை சதங்களுடன் 2893 எடுத்துள்ளார்.

    2006-ல் 15 வயதில் சர்வதேச அரங்கில் அறிமுகமான அவர், 2016-ல் டி20 மற்றும் ஒரு வருடத்திற்குப் பிறகு ஒருநாள் போட்டிகளில் பாகிஸ்தான் அணியின் கேப்டனாக பொறுப்பேற்றார். கேப்டனாக 34 ஒருநாள் போட்டி (16 வெற்றி), 62 (27 வெற்றி) டி20 போட்டிகளில் அணியை வழிநடத்தி உள்ளார். பாகிஸ்தான் பெண்கள் கேப்டன்களில் சிறந்த வெற்றி சதவீதத்தை இவர் படைத்துள்ளார்.

    பல காயங்களுடன் போராடிய போதிலும், பிஸ்மா மரூப் எட்டு உலகக் கோப்பைகளில் இடம்பெற்றார். மேலும் 2010 மற்றும் 2014-ம் ஆண்டுகளில் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கங்களை வென்ற அணியில் ஒரு அங்கமாகவும் இருந்தார்.

    மரூப் தனது லெக்ஸ்பின் மூலம் 80 சர்வதேச விக்கெட்டுகளையும் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    நான் மிகவும் விரும்பும் விளையாட்டிலிருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன். இது ஒரு நம்பமுடியாத பயணம், சவால்கள், வெற்றிகள் மற்றும் மறக்க முடியாத நினைவுகள் நிறைந்தது. ஆரம்பத்தில் இருந்து இப்போது வரை எனது கிரிக்கெட் பயணம் முழுவதும் எனக்கு உறுதுணையாக இருந்த எனது குடும்பத்தினருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    "என்னை நம்பி, எனது திறமையை வெளிப்படுத்தும் தளத்தை வழங்கிய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் ஆதரவு விலைமதிப்பற்றது.

    • உலக டி20 கிரிக்கெட் போட்டி வருகிற ஜுன் 1-ந் தேதி முதல் 29-ம் தேதி வரை நடக்கிறது.
    • இந்த தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் நடைபெற உள்ளது.

    உலக டி20 கிரிக்கெட் போட்டி வருகிற ஜுன் 1-ந் தேதி முதல் 29-ம் தேதி வரை நடக்கிறது. இந்த தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் நடைபெற உள்ளது.

    இந்நிலையில் ஐசிசி 2024-ம் ஆண்டுக்கான ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான தூதராக ஜமைக்காவின் உசைன் போல்ட் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் இவர் பல்வேறு சமூக வலைத்தளங்களில் இடம்பெறும் விளம்பரங்களில் இடம் பெறுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து உசைன் போல்ட் கூறியதாவது:-

    கிரிக்கெட் எனது வாழ்வின் ஒரு அங்கமாகும். விளையாட்டு போட்டிகள் எப்போதும் எனது மனதில் சிறப்பு இடத்தை கொண்டுள்ளன.

    தற்போது எனக்கு ஒரு சிறந்த பதவி கிடைக்கப் பெற்றுள்ளமை தொடர்பில் மகிழ்ச்சியடைகிறேன். பெருமை கொள்கிறேன். இந்த டி20 உலக கோப்பை போட்டிகளை உலகளாவிய ரீதியில் வளர்ச்சியடைய செய்ய என்னால் முடிந்த பங்களிப்பை வழங்குவேன்.

    என அவர் தெரிவித்துள்ளார்.

    • பெங்களூரு அணியில் பேட்டிங்கில் அபாரமாக செயல்பட்டுள்ள விராட் கோலி 379 ரன்கள் குவித்து ஆரஞ்சு நிற தொப்பியை தக்க வைத்துள்ளார்.
    • இன்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்- பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகிறது.

    ஐதராபாத்:

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 41-வது லீக் ஆட்டத்தில் இன்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்- பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகிறது. இந்த ஆட்டம் ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் அரங்கேறுகிறது.

    பெங்களூரு அணி இனி எஞ்சிய 6 ஆட்டங்களிலும் முழுமையாக வெற்றி பெற்று, மற்ற ஆட்டங்களின் முடிவு மற்றும் ரன்ரேட் சாதகமாக அமைந்தால் மட்டுமே அந்த அணி அடுத்த சுற்று வாய்ப்பு குறித்து கொஞ்சமாவது நினைத்து பார்க்க முடியும். இன்றைய ஆட்டத்திலும் சறுக்கினால், கதை முடிந்து விடும்.

    பெங்களூரு அணியில் பேட்டிங்கில் அபாரமாக செயல்பட்டுள்ள விராட் கோலி (ஒரு சதம், 2 அரைசதம் உள்பட 379 ரன்கள்) ஆரஞ்சு நிற தொப்பியை தக்க வைத்துள்ளார்.

    இந்நிலையில் ஆர்.சி.பி. ரசிகர்கள் பற்றி எளிமையாக சொல்ல வேண்டுமென்றால் விசுவாசம்தான் என விராட் கோலி தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    ஆர்.சி.பி. ரசிகர்கள் பற்றி எளிமையாக சொல்ல வேண்டுமென்றால் விசுவாசம்தான். அளவுகடந்த ஆதரவு, அர்ப்பணிப்பு, அன்பிற்கு அவர்கள் எடுத்துக்காட்டாக உள்ளனர். எங்கள் ரசிகர்கள் குடும்பத்தின் அங்கமாக உள்ளனர்.

    இவ்வாறு கோலி கூறினார்.

    • ஐ.பி.எல் போட்டியில் குஜராத்தை மீண்டும் வீழ்த்தி டெல்லி அணி 4-வது வெற்றியை பெற்றது.
    • ஒவ்வொரு ஆட்டத்திலும் எனது சிறந்ததை வெளிப்படுத்தவே விரும்புகிறேன்.

    டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 224 ரன்கள் குவித்தது.

    கேப்டன் ரிஷப்பண்ட் 43 பந்தில் 88 ரன்னும் (5 பவுண்டரி, 8 சிக்சர்), அக்ஷர் படேல் 43 பந்தில் 66 ரன்னும் (5 பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்தனர். சந்தீப் வாரியர் 3 விக்கெட்டும் நூர் முகம்மது 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    பின்னர் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 220 ரன் எடுத்தது. பரபரப்பான இந்த ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 4 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    சாய் சுதர்ஷன் 39 பந்தில் 65 ரன்னும் (7 பவுண்டரி, 2 சிக்சர்), டேவிட் மில்லர் 23 பந்தில் 55 ரன்னும் (6 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தனர்.

    ரஷிக்சலாம் 3 விக்கெட்டும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டும், ஆன்ரிச் நோர்க்யா, முகேஷ் குமார், அக்ஷர் படேல் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    டெல்லி கேப்பிட்டல்சுக்கு 4-வது வெற்றி கிடைத்தது. அந்த அணி குஜராத்தை மீண்டும் தோற்கடித்தது. அகமதாபாத்தில் கடந்த 17-ந் தேதி நடந்த ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்று இருந்தது.

    இந்த வெற்றி குறித்து டெல்லி அணி கேப்டன் ரிஷப்பண்ட் கூறியதாவது:-

    நாங்கள் ஒரு கட்டத்தில் 44 ரன்னில் 3 விக்கெட் இழந்தோம். அப்போது நானும், அக்ஷர்படேலும் மதன்மை சுழற்பந்து வீரர் களை அடித்து ஆட வேண்டும் என்று திட்ட மிட்டோம். முதல் சிக்சர் அடித்ததும் தன்னம்பிக்கை அதிகரித்தது. எனது அதிரடியான ஆட்டம் மகிழ்ச்சியை அளித்தது.

    20 ஓவர் போட்டி என்பது வேடிக்கையான விளையாட்டாகும். 2-வது பேட்டிங் செய்யும்போது 15 ஓவருக்கு பிறகு பந்து ஆடுவதற்கு ஏற்ற வகையில் நன்றாக அமைந்தது. 19-வது ஓவரை ரஷிக் சலாம் மீது நம்பிக்கை வைத்து கொடுத்தோம். ஒவ்வொரு ஆட்டத்திலும் எனது சிறந்ததை வெளிப்படுத்தவே விரும்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    மொகித் சர்மா வீசிய ஆட்டத்தின் கடைசி ஓவரில் ரிஷப்பண்ட் 30 ரன்கள் (2,6,4,6,6,6) குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    குஜராத் அணி 5-வது தோல்வியை தழுவியது. இந்த தோல்வி குறித்து அந்த அணி கேப்டன் சுப்மன்கில் கூறும்போது, 'நாங்கள் சிறந்த கிரிக் கெட்டை வெளிப்படுத்தி னோம். இறுதியில் தோற்றது ஏமாற்றம் அளிக்கிறது. டெல்லி அணியை 200 முதல் 210 ரன் வரை கட்டுப் படுத்தலாம் என்று நினைத்தேன். ஆனால் கடைசி 2 ஓவரில் அதிக ரன்களை கொடுத்து விட்டோம். பேட்டிங்குக்கு சாதகமான இந்த ஆடுகளத் தில் பந்து வீச்சாளர்கள் யார்க்கர்களை பயன்படுத்தி இருக்க வேண்டும்' என்றார்.

    • பெங்களூரு அணி முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்க தீவிரம் காட்டும்.
    • வெற்றி உத்வேகத்துடன் ஆதிக்கம் செலுத்த ஐதராபாத் எல்லா வகையிலும் வரிந்து கட்டும்.

    ஐதராபாத்:

    ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில், இன்று (வியாழக்கிழமை) ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் அரங்கேறும் 41-வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் சன் ரைசர்ஸ் - பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மல்லுகட்டுகின்றன.

    முன்னாள் சாம்பியனான ஐதராபாத் அணி இதுவரை 7 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி (மும்பை, சென்னை, பஞ்சாப், பெங்களூரு, டெல்லி அணிகளுக்கு எதிராக), 2 தோல்வி (கொல்கத்தா, குஜராத் அணிகளிடம்) அடைந்துள்ளது. முதல் 3 ஆட்டங்களில் 2-ல் தோல்வியை சந்தித்த அந்த அணி அதன் பிறகு தொடர்ச்சியாக 4 ஆட்டங்களில் வெற்றியை ருசித்து எழுச்சி கண்டுள்ளது.

    ஐ.பி.எல். வரலாற்றில் அதிக ரன் குவித்த அணி (பெங்களூருவுக்கு எதிராக 287 ரன்கள்) என்ற சாதனையை படைத்த ஐதராபாத் அணி தொடர்ந்து ரன்வேட்டையில் மிரட்டுகிறது. நடப்பு தொடரில் 3 முறை 260 ரன்களுக்கு மேல் சேர்த்து வியக்க வைத்துள்ள ஐதராபாத் அணியில் டிராவிஸ் ஹெட் (ஒரு சதம், 2 அரைசதம் உள்பட 324 ரன்), ஹென்ரிச் கிளாசென் (268), அபிஷேக் ஷர்மா (257) ஆகியோர் சூப்பர் பார்மில் உள்ளனர். பந்து வீச்சில் நடராஜன், கேப்டன் கம்மின்ஸ், மயங்க் மார்கண்டே வலுசேர்க்கிறார்கள்.

    பெங்களூரு அணி இந்த சீசனிலும் பெருத்த ஏமாற்றத்தை சந்தித்துள்ளது. தனது 2-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப்பை பதம் பார்த்த பெங்களூரு அணி 7 ஆட்டங்களில் தோல்வியை சந்தித்து புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் தத்தளிக்கிறது. கொல்கத்தாவுக்கு எதிரான கடந்த ஆட்டத்தில் 223 ரன் இலக்கை நோக்கி ஆடிய பெங்களூரு அணி 221 ரன்கள் எடுத்து ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை கோட்டை விட்டது. இதனால் அந்த அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு மங்கியது.

    இனி எஞ்சிய 6 ஆட்டங்களிலும் முழுமையாக வெற்றி பெற்று, மற்ற ஆட்டங்களின் முடிவு மற்றும் ரன்ரேட் சாதகமாக அமைந்தால் மட்டுமே அந்த அணி அடுத்த சுற்று வாய்ப்பு குறித்து கொஞ்சமாவது நினைத்து பார்க்க முடியும். இன்றைய ஆட்டத்திலும் சறுக்கினால், கதை முடிந்து விடும்.

    பெங்களூரு அணியில் பேட்டிங்கில் அபாரமாக செயல்பட்டுள்ள விராட் கோலி (ஒரு சதம், 2 அரைசதம் உள்பட 379 ரன்கள்) ஆரஞ்சு நிற தொப்பியை தக்க வைத்துள்ளார். கேப்டன் பாப் டு பிளிஸ்சிஸ் (239), ரஜத் படிதார், தினேஷ் கார்த்திக் ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர். ஆனால் அந்த அணியின் பந்து வீச்சு தான் தொடர்ந்து சொதப்புகிறது. அதிகபட்சமாக யாஷ் தயாள் 7 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார். முகமது சிராஜ், கேமரூன் கிரீன், கரண் ஷர்மா உள்ளிட்ட பவுலர்களின் பந்து வீச்சு எதிர்பார்த்தபடி இல்லை. கடைசி 2 ஆட்டங்களில் அந்த அணியினர் 220 ரன்களுக்கு மேல் வாரி வழங்கியதில் இருந்தே புரிந்து கொள்ளலாம். எனவே பெங்களூரு பந்து வீச்சில் ஏற்றம் காண வேண்டியது அவசியம்.

    பெங்களூருவை அதன் சொந்த மண்ணில் நடந்த முந்தைய ஆட்டத்தில் ஐதராபாத் அணி 25 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இனிமேல் இழக்க எதுவுமில்லை என்ற மனநிலையில் உள்ள பெங்களூரு அணி முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்க தீவிரம் காட்டும். அதே நேரத்தில், வெற்றி உத்வேகத்துடன் ஆதிக்கம் செலுத்த ஐதராபாத் எல்லா வகையிலும் வரிந்து கட்டும்.

    மொத்தத்தில், பேட்டிங்கில் ருத்ரதாண்டவமாடும் ஐதராபாத்தின் சவாலை பெங்களூரு சமாளிக்குமா? என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம். இவ்விரு அணிகளும் இதுவரை 23 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் ஐதராபாத் 13 ஆட்டத்திலும், பெங்களூரு 10 ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளன.

    போட்டிக்கான இவ்விரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    ஐதராபாத்: அபிஷேக் ஷர்மா, டிராவிஸ் ஹெட், ஹென்ரிச் கிளாசென், மார்க்ரம், அப்துல் சமத், ஷபாஸ் அகமது, கம்மின்ஸ் (கேப்டன்), புவனேஷ்வர் குமார், டி.நடராஜன், நிதிஷ் குமார் ரெட்டி, மயங்க் மார்கண்டே அல்லது வாஷிங்டன் சுந்தர்.

    பெங்களூரு: விராட் கோலி, பாப் டு பிளிஸ்சிஸ் (கேப்டன்), வில் ஜாக்ஸ், ரஜத் படிதார், கேமரூன் கிரீன், தினேஷ் கார்த்திக், மஹிபால் லோம்ரோர் அல்லது அனுஜ் ராவத், விஜய்குமார் வைஷாக் அல்லது கரண் ஷர்மா, ரீஸ் டாப்லே, லோக்கி பெர்குசன், யாஷ் தயாள்.

    இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. 

    • அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய மில்லர் 23 பந்தில் 55 குவித்து ஆட்டமிழந்தார்.
    • டெல்லி அணி தரப்பில் ராசிக் தார் சலாம் 3 விக்கெட்டும் குல்தீப் யாதவ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    ஐபிஎல் கிரிக்கெட்டில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ்- குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி டெல்லி அணியின் பிரித்வி ஷா, மெக்கர்க் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். மெக்கர்க் வழக்கும்போல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். என்றாலும் 14 பந்தில் 23 ரன்கள் எடுத்த நிலையில் சந்தீப் வாரியர் பந்தில் ஆட்டமிழந்தார்.

    அடுத்த சிறிது நேரத்தில் பிரித்வி ஷா 11 ரன்னிலும் ஷாய் ஹோப் 5 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.இதனையடுத்து ஜோடி சேர்ந்த அக்சர் பட்டேல் -ரிஷப் பண்ட் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் அரை சதம் விளாசினர்.

    இந்த ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்து கொடுத்தது. அக்சர் பட்டேல் 66 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து ஸ்டப்ஸ் மற்றும் ரிஷப் பண்ட் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர்.

    ரிஷப் பண்ட் 43 பந்தில் 88 ரன்கள் எடுத்தும், ஸ்டப்ஸ் 7 பந்தில் 26 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால் டெல்லி கேப்பிட்டல்ஸ் 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 224 ரன்கள் குவித்தது. குஜராத் அணி தரப்பில் மோகித் சர்மா 4 ஓவரில் 73 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.

    இதனையடுத்து குஜராத் அணியின் தொடக்க வீரர்களாக சுப்மன் கில்- சஹா களமிறங்கினர். சுப்மன் கில் 6 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனை தொடர்ந்து சஹா- சுதர்சன் ஜோடி பொறுப்புடன் ஆடி ரன்களை சேர்த்தனர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுதர்சன் அரை சதம் விளாசினார்.

    39 ரன்களில் இருந்த போது சஹா அவுட் ஆனார். உடனே சாய் சுதர்சனும் 65 ரன்னிலும் வெளியேறினார். அடுத்து வந்த உமர்சாய் 1, ஷாருக்கான் 8, தெவாடியா 4 என வெளியேறினார். இதனையடுத்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய மில்லர் (55) அரை சதம் விளாசி அவுட் ஆனார்.

    இதனால் கடைசி ஓவரில் குஜராத் அணிக்கு 19 ரன்கள் தேவைப்பட்டது. முதல் 2 பந்துகளை பவுண்டரிக்கு விரட்டிய ரஷித்கான் 3,4-வது பந்தை டாட் செய்தார். 5-வது பந்தை சிக்சர் பறக்கவிட்டார். இதனால் கடைசி பந்தில் 5 ரன்கள் தேவைப்பட்டது. அந்த பந்தை ரன் ஏதும் விட்டுக் கொடுக்கவில்லை.

    இதனால் டெல்லி அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. டெல்லி அணி தரப்பில் ராசிக் தார் சலாம் 3 விக்கெட்டும் குல்தீப் யாதவ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.
    • லக்னோ அணிக்கு எதிராக விளையாடிய 2 போட்டிகளிலும் சென்னை அணி தோல்வி அடைந்துள்ளது.

    ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் ருதுராஜ் தலைமையிலான சென்னை அணி விளையாடிய 8 போட்டிகளில் 4-ல் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 5 ஆவது இடத்தில உள்ளது.

    குறிப்பாக கடைசியாக லக்னோ அணிக்கு எதிராக விளையாடிய 2 போட்டிகளிலும் சென்னை அணி தோல்வி அடைந்துள்ளது. வரும் ஞாயிற்றுக்கிழமை சென்னையில் ஹைதராபாத் அணியை சென்னை அணி எதிர்கொள்கிறது.

    இந்நிலையில், சென்னை அணியின் வேகப்பந்து வீச்சாளர் துஷார் தேஷ்பாண்டே 'தல' அஜித்தை சந்தித்து பேசியுள்ளார்.

    இது தொடர்பான புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார். அதில் புத்திசாலித்தனமும் எளிமையும் நிறைந்தவர் அஜித் என அவர் பதிவிட்டுள்ளார். 

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 2018-ல் ஆர்சிபிக்கு எதிராக சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாடிய பாசில் தம்பி 70 ரன்கள் விட்டுக்கொடுத்ததுதான் இதுவரை அதிகபட்ச ரன்னாக இருந்தது.
    • 2023-ல் கேகேஆர் அணிக்கெதிராக யாஷ் தயாள் 69 ரன்கள் விட்டுக்கொடுத்து 3-வது இடத்தில் உள்ளார்.

    ஐபிஎல் கிரிக்கெட்டில் டெல்லியில் நடைபெற்று வரும் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ்- குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதலில் விளையாடிய டெல்லி அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 224 ரன்கள் குவித்தது.

    முதல் ஏழு ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 49 ரன்களும், 12-வது ஓவரை வரை 105 ரன்களும், 15 ஓவரில் 127 ரன்களும் எடுத்திருந்தது. கடைசி ஐந்து ஓவரில் மட்டும் 97 ரன்கள் குவித்தது.

    கடைசி ஓவரை மோகித் சர்மா வீசினார். இந்த ஓவரில் ரிஷப் பண்ட் 4 சிக்ஸ், ஒரு பவுண்டரி விளாசினார். ஒரு வைடு உடன் 31 ரன்கள் விட்டுக்கொடுத்தார். மேலும் மொத்தமாக 4 ஓவரில் 73 ரன்கள் விட்டுக்கொடுத்தார். இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் விட்டுக்கொடுத்த பந்து வீச்சாளர் என்ற மோசமான சாதனையை படைத்துள்ளார் மோகித் சர்மா.

    2018-ல் ஆர்சிபிக்கு எதிராக சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாடிய பாசில் தம்பி 70 ரன்கள் விட்டுக்கொடுத்ததுதான் இதுவரை அதிகபட்ச ரன்னாக இருந்தது.

    2023-ல் கேகேஆர் அணிக்கெதிராக யாஷ் தயாள் 69 ரன்கள் விட்டுக்கொடுத்து 3-வது இடத்தில் உள்ளார். சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிராக ஆர்சிபியின் ரீஸ் டாப்லே 68 ரன்கள் விட்டுக்கொடுத்துள்ளார்.

    ×