என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • மழையானது புதுவையில் உள்ள நீர்நிலைகள் நிரம்புவதற்கு பெருமளவில் கைகொடுத்தது.
    • நீர்நிலைகள் நிரம்பி வழிவதால் இந்த ஆண்டு குடிநீர் பற்றாக்குறை இருக்காது.

    புதுச்சேரி:

    புதுவையில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாத இறுதியில் தொடங்கி தொடர்ச்சியாக பெய்து வருகிறது. தொடக்கத்தில் மழை சற்று குறைவாக பெய்த நிலையில் ஃபெஞ்சல் புயல் அதிக மழையை தந்தது.

    புயல் கரையை கடந்தபோது புதுவையில் இதுவரை இல்லாத அளவாக 54 செ.மீ. மழை பதிவானது. இதனிடையே சாத்தனூர், வீடூர் அணைகளும் திறக்கப்பட்டதால் தென்பெண்ணை ஆறு, சங்கராபரணி ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் புதுச்சேரி முழுவதும் வெள்ளக்காடானது.

    இந்த மழையானது புதுவையில் உள்ள நீர்நிலைகள் நிரம்புவதற்கு பெருமளவில் கைகொடுத்தது. புதுவையின் மிகப்பெரிய ஏரிகளான ஊசுடு, பாகூர், கிருமாம்பாக்கம் ஏரிகள் உள்பட 84 ஏரிகள் உள்ளன. இந்த ஏரிகள் அனைத்தும் தற்போது நிரம்பி வழிகின்றன.

    இதேபோல் புதுவையில் ஆறுகளின் குறுக்கே 27 படுகை அணைகள் உள்ளன. அதில் செல்லிப்பட்டு படுகை அணை ஏற்கனவே உடைந்துவிட்டது. தற்போது படுகை அணைகள் உள்ளன. இந்த அணைகளும் நிரம்பி வழிகின்றன.

    கடந்த காலங்களில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் சராசரியாக 68 செ.மீ. மழை பொழியும். ஆனால் இந்த ஆண்டு 76.50 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. அதாவது இதுவரை 11 சதவீதம் மழை அதிகமாக பெய்துள்ளது.

    நீர்நிலைகள் நிரம்பி வழிவதால் இந்த ஆண்டு குடிநீர் பற்றாக்குறை இருக்காது. மேலும் விவசாய தேவைகளுக்கும் போதுமான நிலத்தடி நீர் கிடைக்கும்.

    இதுதொடர்பாக பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-

    புதுச்சேரி பகுதியில் உள்ள 84 ஏரிகளும் நிரம்பிவிட்டன. கடந்த 2020-ம் ஆண்டுக்குப் பிறகு அதாவது 4 ஆண்டுகளுக்குப் பின் அனைத்து ஏரிகளும் தற்போது முழுமையாக நிரம்பி உள்ளது.

    கடந்த காலங்களில் பாகூர் ஏரி நிரம்பினால், ஊசுடு ஏரி நிரம்பாமல் இருக்கும். கடந்த ஆண்டு ஏரிகள் 70 சதவீதம்தான் நிரம்பின. ஆனால் இந்த ஆண்டு இரு பெரிய ஏரிகளும் நிரம்பிவிட்டன.

    இந்த ஏரிகளில் தற்போது 1.73 டி.எம்.சி. தண்ணீர் உள்ளது. ஏரிகள் அனைத்தும் நிரம்பி உள்ளதால் நிலத்தடி நீர் உயர்ந்து கடல் நீர் உட்புகாமல் இருக்கும். மேற்கில் இருந்து வரும் தண்ணீர் உழந்தை ஏரி, வேல்ராம்பட்டு ஏரி வழியாக திருப்பப்பட்டதால் இந்திராகாந்தி சதுக்கத்தில் ஓரளவுக்கு சேதம் தடுக்கப்பட்டது.

    அதேபோல் பூமியான்பேட்டை பகுதியில் பாலம் பெரியதாக அமைக்கப்பட்டதால் தண்ணீரை எளிதாக உள்வாங்கியது. இதனால் பூமியான்பேட்டை, ஜவகர் நகர் பகுதியில் தேங்கிய தண்ணீர் விரைவாக வடிந்தது. பொதுப்பணித்துறை மூலம் 44 பம்புகள் வைத்து தண்ணீர் இறைக்கப்பட்டது.

    வெள்ளத்தால் ஏற்படும் உடைப்புகளை தடுக்க 15 ஆயிரம் மண் மூட்டைகள் பயன்படுத்தப்பட்டன. இன்னும் 25 ஆயிரம் மூட்டைகள் தயார் நிலையில் உள்ளன.

    நகரப் பகுதியில் தண்ணீர் செல்லும் வாய்க்கால்களில் பிளாஸ்டிக் பொருட்கள், வீட்டு கழிவுகளான மெத்தை, தலையணை போன்றவற்றை போட்டு வைத்துள்ளனர். இதனால் வாய்க்காலில் தண்ணீர் செல்வதில் சிரமம் ஏற்பட்டது. அதை ஊழியர்கள் உடனடியாக சரி செய்தனர்.

    சாத்தனூர், வீடூர் அணைகள் திறக்கப்பட்டு சங்கராபரணி, தென்பெண்ணை ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் தண்ணீர் வடிவதில் பிரச்சினை ஏற்பட்டது. அந்த வெள்ளமும் ஊருக்குள் புகுந்ததால் கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நேற்று பிற்பகலுக்கு பிறகு கடலூர் சாலையில் போக்குவரத்து சீரானது.
    • பாலத்தின் இருபுறமும் தடுப்புகள் அமைக்கப்பட்டு வாகனங்கள் செல்ல மீண்டும் தடை விதிக்கப்பட்டது.

    தவளக்குப்பம்:

    ஃபெஞ்சல் புயல் காரணமாக புதுச்சேரியில் கடந்த 30-ந் தேதி கனமழை பெய்தது. இதன் காரணமாக சங்கராபரணி, தென்பெண்ணை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சாலைகளில் தண்ணீர் பாய்ந்து சென்றதால், புதுச்சேரி- கடலூர் சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. பாகூர் புறவழிச்சாலை வழியாக வாகனங்கள் மாற்றி விடப்பட்டன.

    நேற்று பிற்பகலுக்கு பிறகு கடலூர் சாலையில் போக்குவரத்து சீரானது. இந்தநிலையில் தவளக்குப்பம் அருகே இடையார்பாளையத்தில் உள்ள சிறிய பாலத்தின் மேற்கு பகுதி இணைப்பு சாலை நேற்று இரவு 10 மணியளவில் திடீரென்று பள்ளம் ஏற்பட்டது. அந்த வழியாக கனரக வாகனங்கள் சென்றபோது பாலத்தில் அதிர்வு ஏற்பட்டது.

    இது பற்றி தகவல் அறிந்த தவளக்குப்பம் சப்-இன்ஸ்பெக்டர் சண்முக சத்தியா மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று பாலத்தின் குறுக்கே மோட்டார் சைக்கிளை நிறுத்தி போக்குவரத்தை தடை செய்தனர்.

    தகவல் அறிந்த முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், பாஸ்கர் என்கிற தட்சணாமூர்த்தி எம்.எல்.ஏ., ஆகியோரும் அங்கு வந்து பாலத்தில் ஏற்பட்ட சேதத்தை பார்வையிட்டனர். இதையடுத்து பாலத்தின் இருபுறமும் தடுப்புகள் அமைக்கப்பட்டு வாகனங்கள் செல்ல மீண்டும் தடை விதிக்கப்பட்டது.

    புதுச்சேரியில் இருந்து கடலூர் செல்லும் வாகனங்கள் முருங்கப்பாக்கம், வில்லியனூர், உறுவையாறு, பாகூர் வழியாக திருப்பி விடப்பட்டுள்ளன. இதேபோல் கடலூரில் இருந்து புதுவை வரும் வாகனங்கள் தவளக்குப்பத்தில் இருந்து அபிஷேகப்பாக்கம், கரிக்கலாம்பாக்கம், வில்லியனூர் வழியாக மாற்றி விடப்பட்டுள்ளது.

    நேற்று இரவு நடந்த இந்த சம்பவம் இந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க முன்னுரிமை அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • காரைக்கால் மற்றும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டதால் மிகுந்த துயரத்திலும் மனவேதனையிலும் உள்ளனர்.

    புதுச்சேரி:

    ஃபெஞ்சல் புயல் காரணமாக ஒரு வாரமாக தொழிலுக்குச் செல்லாமல் இருந்த புதுச்சேரி மாநில காரைக்கால் மாவட்ட மீனவர்கள், டிசம்பர் 1-ந்தேதி மீண்டும் கடலுக்குள் மீன் பிடிக்க சென்றனர்.

    அதுபோல் காரைக்கால் மாவட்டம் கீழகாசாகுடிமேடு மீனவ கிராமத்தைச் சேர்ந்த பால்மணி என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில், பால்மணியின் சகோதரர் கலைமணி மற்றும் அதே கிராமத்தை சேர்ந்த சிலம்பரசன், சுதின், பொன்னையன், ராமன், பூவரசன், மாணிக்கவேலு, ஆகாஷ், சக்திவேல், வினித் குமார், கமலேஷ், சிவக்குமார், ஜெயமணி, மோகன்குமார், ஆறுமுகம் (காரைக்கால்மேடு), நாகை மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ்மணி, ரத்தினவேலு, மயிலாடுதுறை செல்வநாதன் ஆகிய 18 மீனவர்கள் காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு சென்றனர்.

    கோடியக்கரைக்கு அருகே மீன்பிடித்த போது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் 18 மீனவர்கள் சிறைபிடித்து விசைபடகை பறிமுதல் செய்தனர்.

    இந்த நிலையில் காரைக்கால் மீனவர்களை மீட்க கோரி முதல்-அமைச்சர் ரங்கசாமி மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

    புதுச்சேரி காரைக்கால் பிராந்தியத்தில் இருந்து எந்திரப்படகில் 15 காரைக்கால் மீனவர்கள் மற்றும் 3 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் படகை கைப்பற்றி மீனவர்களை சிறைபிடித்து காவலில் வைத்துள்ளனர்.

    சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க முன்னுரிமை அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறிப்பிட்டுள்ளார்.

    அதேபோல் டெல்லியில் மத்திய மந்திரி ஜெய்சங்கரை நேரில் சந்தித்து வைத்திலிங்கம் எம்.பி. அளித்த மனுவில், காரைக்கால் மற்றும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டதால் மிகுந்த துயரத்திலும் மனவேதனையிலும் உள்ளனர். மீனவர்களுடன் மீன்பிடி படகை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

    • 21 பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
    • பாகூர் கொம்யூனில் உள்ள அனைத்து அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    ஃபெஞ்சல் புயலால் புதுச்சேரியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு கடந்த 27-ந்தேதி முதல் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டது.

    ஒரு வார கால விடுமுறைக்கு பிறகு இன்று (புதன்கிழமை) பள்ளி மற்றும் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டது. மாணவர்கள் உற்சாகத்தோடு பள்ளிக்கு வந்தனர்.

    அதேநேரத்தில் தண்ணீர் தேங்கிய, முகாம்களாக மாறிய தவளக்குப்பம், காக்காயன்தோப்பு, மூலகுளம், கூனிச்சம்பட்டு, கரையாம்புத்தூர், சின்ன கரையாம்புத்தூர், கடுவனூர், கிருஷ்ணாபுரம், மணமேடு ஆகிய 9 அரசு தொடக்கப்பள்ளிகள், பண்டசோழநல்லூர், மணலிப்பட்டு, பூரணாங்குப்பம், டி.என்.பாளையம், பனையடிக்குப்பம் அரசு நடுநிலை பள்ளிகள், உறுவையாறு, மங்கலம், திருக்கனூர், பனித்திட்டு, அரசு உயர்நிலைப்பள்ளிகள், கரையாம்புத்தூர் அரசு மேல்நிலை பள்ளி, முத்தியால்பேட்டை சின்னாத்தா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கூனிச்சம்பேட் அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய 21 பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    மேலும் தென்பெண்னை ஆற்றின் வெள்ளநீர் சூழ்ந்துள்ள பாகூர் கொம்யூனில் உள்ள அனைத்து அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

    • ஃபெஞ்சல் புயலையொட்டி தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.
    • தொடர் கனமழையால் காய்கறி உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி, டிச.4 -

    புதுச்சேரிக்கு தேவை யான காய்கறிகள் திருச்சி, ஒசூர், பெங்களூரு, கோலார் உள்ளிட்ட பகுதிகளில் இறக்குமதி செய்யப்படுகிறது.

    இதேபோல், சென்னை கோயம்பேடு மார்க்கெட்டிலிருந்து புதுச் சேரி பெரிய மார்க்கெட்டிற்கு காய்கறிகள் விற்பனைக்காக லாரிகள் மூலம் கொண்டு வரப்படுகிறது.

    பெஞ்ஜல் புயலையொட்டி தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் பல பகுதிகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் தொடர் கனமழையால் காய்கறி உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது.

    இதன் காரணமாக புதுச் சேரிக்கான காய்கறி வரத்து வெகுவாக குறைந்து, அவற் றின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

    புதுச்சேரி பெரிய மார்க்கெட்டில் நேற்று முன்தினம் வரை கிலோ தக்காளி ரூ.40 முதல் ரூ.45 வரை விற்பனை செய்யப் பட்டது ஆனால், நேற்று ஒரு கிலோ தக்காளி ரூ.55 முதல் ரூ.60 வரை விற்பனை செய்யப்பட்டது.

    கேரட் ரூ.70-ல் இருந்து ரூ.90 ஆகவும், ஊட்டி கேரட் ரூ.70-ல் இருந்து ரூ.100 ஆகவும். முள்ளங்கி ரூ.35-ல் இருந்து ரூ.60 ஆகவும், பீட்ரூட் ரூ.45-ல் இருந்து ரூ.70 ஆகவும். சுரைக்காய் ரூ.25-ல் இருந்து ரூ.50 ஆகவும், பாகற்காய் ரூ.50-ல் இருந்து ரூ.60 ஆகவும், மாங்காய் ரூ.50-ல் இருந்து ரூ.60 ஆகவும், பச்சைமிளகாய் ரூ.55-ல் இருந்து ரூ.60 ஆகவும் சோளம் ரூ.35-ல் இருந்து ரூ.40ஆகவும், ஜாம் தக்காளி ரூ.50-ல் இருந்து ரூ.60 ஆகவும் விலை உயர்ந்துள்ளது. மேலும், வரி கத்திரிக்காய் கிலோவுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.50க்கும், நாட்டு கத்திரிக்காய் ரூ.80-க்கும் அவரைக்காய் ரூ.80-க்கும், வெங்காயம் ரூ.60 முதல் ரூ.70 வரையும், சின்ன வெங்காயம் ரூ.75-க்கும், கொத்தவரங்காய் ரூ.60-க்கும். இஞ்சி ரூ.70-க்கும், கோஸ் ரூ.40-க்கும். பீன்ஸ் ரூ.60-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இன்றும் பெரும்பாலான காய்கறிகள் ரூ.5 முதல் ரூ.20 வரை விலை உயர்ந்துள் ளது. காய்கறி விலை கிடுகிடு உயர்வால் இல்லதரசிகள் வேதனையடைந்துள்ளனர்.இதுபோல் பூக்கள் விலையும் உயர்ந்துள்ளது.

    புதுச்சேரி பெரிய மார்க் கெட்டுக்கு திருவண்ணாமலை, திண்டுக்கல், கடலூர், ஓசூர், பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பூக்கள் விற்பனைக்கு வருகிறது. கனமழை காரணமாக பூக்களின் வரத்தும் குறைந்து, அவற்றின் விலையும் உயர்ந்துள்ளது.

    • 90 தேசிய பேரிடர் மீட்பு படையினர், 140 ராணுவ வீரர்கள், 4000 அரசு ஊழியர்கள் 4-வது நாளாக மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
    • 500-க்கும் மேற்பட்ட மரங்கள், 400 மின் கம்பங்கள, 55 படகுகள் சேதமாகி உள்ளது.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் ஃபெஞ்சல் புயல் மற்றும் கனமழையால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    புயலால் 35 வருவாய் கிராமங்களைச் சேர்ந்த 3 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 90 தேசிய பேரிடர் மீட்பு படையினர், 140 ராணுவ வீரர்கள், 4000 அரசு ஊழியர்கள் 4-வது நாளாக மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

    இதுவரை 30 ஆயிரம் பேர் மீட்கப்பட்டுள்ளனர். புதுச்சேரி முழுவதும் உள்ள 208 முகாம்களில் 15 ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டனர். இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

    ஒருவர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டுள்ளார். அவர்கள் குறித்த விபரம் சேகரிக்கப்பட்டு வருகிறது. மேலும் 361 பேர் புயல் வெள்ளத்தில் சிக்கி காயமடைந்தனர்.

    கனமழைக்கு 5 பசு மாடுகள், ஒரு எருமை மாடு, 29 கன்றுகள், 8 ஆடுகள் இறந்துள்ளது. கோழி, வாத்து உள்ளிட்ட 5 ஆயிரம் பறவைகள் இறந்துள்ளன. புதுச்சேரியில் மட்டும் நெற்பயிர், வாழை, மணிலா, காய்கறி என 5 ஆயிரத்து 527 ஹெக்டேர் பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதமடைந்தது.

    500-க்கும் மேற்பட்ட மரங்கள், 400 மின் கம்பங்கள, 55 படகுகள் சேதமாகி உள்ளது. 27 வீடுகள் முழுமையாகவும், 10 வீடுகள் பகுதியாகவும் சேதமடைந்துள்ளன. 200 குடிசை வீடுகள் இடிந்து விழுந்துள்ளது.

    இதுதவிர 12 பள்ளி கட்டிடங்கள், 4 கல்லூரி கட்டிடங்கள், 9 ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடங்கள், 4 மாட்டு கொட்டகைகளும் சேதமடைந்துள்ளன.

    இதுவரை மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் மூலம் 3 லட்சம் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர அரசியல் கட்சி பிரமூகர்கள், தொண்டு நிறுவனங்கள் மூலம் 50 ஆயிரம் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளது

    இவை புதுச்சேரி மாவட்ட வருவாய் மற்றும் பேரிடர் துறையின் முதல் கட்ட சேத மதிப்பீட்டில் தெரியவந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • சங்கராபரணி ஆற்றின் கரையோரம் அமைக்கப்பட்டிருந்த 3 கோழிப்பண்ணைகள் நீரில் மூழ்கியது.
    • சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுச்சேரியை ஃபெஞ்சல் புயல் தாக்கி கோர தாண்ட வம் ஆடியது.

    சூறை காற்றுடன் வரலாறு காணாத வகையில் ஒரே நாளில் 50 செ.மீ. கனமழை பெய்ததால் புதுச்சேரி நகரம் மற்றும் கிராமப்புற பகுதிகளில் உள்ள சாலைகள், வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. ஆயிரக்கணக்கான வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. மறுநாள் மழை பெய்யாததால் தேங்கிய நீர் நகர பகுதியில் வடிய தொடங்கியது.

    நேற்று முதல் நகர பகுதியில் இயல்பு வாழ்க்கை திரும்ப தொடங்கியது. அதே நேரத்தில் கிராமப்பகுதிகளில் வயல்வெளி, வீடுகளில் புகுந்த மழைநீர் வெளியேறவில்லை. இதை வெளியேற்றும் பணி நடந்து வந்தது. இதனிடையே புயல் புதுச்சேரியை கடந்து தமிழகத்தின் அண்டை மாவட்டங்களில் நுழைந்தது. செல்லும் இடமெல்லாம் 50 செ.மீ. மழையை கொட்டியபடி சென்றது.

    இதனால் தமிழகத்தில் உள்ள வீடூர், சாத்தனூர் அணைகள் நிரம்பியது. இந்த அணைகளை திறந்துள்ளனர். 2 அணைகளில் இருந்தும் பல ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. வீடூர் அணை வெள்ளம் புதுச்சேரி சங்கராபரணி ஆற்றின் வழியாகவும், சாத்தனூர் அணை வெள்ளம் புதுச்சேரி தென்பெண்ணை ஆற்று வழியாகவும் கடலில் கலக்கும்.

    திடீரென 2 அணைகளிலும் பல ஆயிரம் கன அடி தண்ணீரை திறந்து விட்டதால் ஆற்றின் இருபுறமும் உள்ள கரையோர கிராமங்களில் நீர் புகுந்தது. தென்பெண்ணை ஆற்றின் வெள்ளத்தால் புதுச்சேரி, கடலூர் சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. சுமார் 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் தண்ணீரில் மூழ்கி தத்தளித்து வருகிறது. மழை நின்றாலும், அணை திறப்பால் புதுச்சேரி கிராம மக்கள் வெள்ளத்தில் சிக்கி தவித்து வருகின்றனர்.



    தென்பெண்ணையாற்று வெள்ளத்தால் புதுச்சேரியின் பாகூர், இருளஞ்சந்தை, குருவிநத்தம், சோரியாங்குப்பம், கொமந்தான்மேடு, ஆராய்ச்சிக்குப்பம் கிராமங்களை சேர்ந்த 5 ஆயிரம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இவர்கள் வீடுகளை விட்டு வெளியேறி முகாம், உறவினர்கள் வீடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். தீயணைப்பு வீரர்கள், தேசிய பேரிடர் மீட்பு படை, போலீசார், இளைஞர்கள் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டு பாதுகாப்பாக தங்க வைத்தனர்.

    மீட்பு பணிகளை செந்தில் குமார் எம்.எல்.ஏ. பார்வையிட்டு உணவு பொருட்களை வழங்கினார். பாகூர் ஏரிக்கு அதிக நீர் வருவதால் உடையும் அபாயம் நிலவுகிறது. புதுச்சேரி- கடலூர் சாலையில் கங்கணாங்குப்பத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து தடை செய்யப்பட்டு, நாகை புறவழிச்சாலை வழியாக திருப்பிவிடப்பட்டது.

    பாகூர் பகுதி வெள்ள பாதிப்புகளை கவர்னர் கைலாஷ்நாதன், முதல்-அமைச்சர் ரங்கசாமி, பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், கலெக்டர் குலோத்துங்கன் ஆகியோர் தனித்தனியே ஆய்வு செய்து ஆறுதல் கூறினர்.

    சங்கராபரணி ஆற்றின் வெள்ளப்பெருக்கால் மணலிப்பட்டு, கூனிச்சம் பட்டு கிராமங்களுக்கு இடையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. கொடுக்கூர், திருவக்கரை செல்லும் சாலையிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    சங்கராபரணி ஆற்றின் கரையோரம் அமைக்கப்பட்டிருந்த 3 கோழிப்பண்ணைகள் நீரில் மூழ்கியது. சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.

    அணைகள் திறப்பு குறித்து புதுச்சேரி பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் தீனதயாளன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    52 ஆண்டுக்கு பின் தென்பெண்ணை ஆற்றில் 2 லட்சம் கன அடி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. சாத்தனூர் அணையிலிருந்து வினாடிக்கு 76 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்தாலும், பெண்ணையாறு நீர்பிடிப்பு பகுதியிலிருந்து மேலும் ஒரு லட்சத்து 24 ஆயிரம் கன அடி தண்ணீர் என மொத்தமாக வினாடிக்கு 2 லட்சம் கனஅடி தண்ணீர் பெண்ணையாறில் வருகிறது.

    இதனால், புதுச்சேரி கிராமப்புற பகுதியான கொமந்தான்மேடு, பெரிய ஆராய்ச்சிக்குப்பம், மணமேடு, கரையாம்புத்தூர், கடுவனூர், பாகூர், பரிக்கல் பட்டு, சோரியாங்குப்பம், குருவிநத்தம், ஆகிய பகுதிகளில் வெள்ள நீர் புகுந்துள்ளது.

    இக்கிராமங்களில் தாழ்வான பகுதியில் உள்ள மக்களை அரசுக்கு சொந்தமான கட்டடங்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த நீர் பிடிப்பு பகுதிகளில் தற்போது மழை குறைந்து இருப்பதால் ஆற்றில் செல்லும் தண்ணீர் குறைய வாய்ப்புள்ளது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ஃபெஞ்சல் புயல் முன்னெச்சரிக்கையாக கடந்த 27-ந்தேதி முதல் புதுச்சேரி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், இன்று 3-ந்தேதி பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் என கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்தார்.

    பின்னர் முதல்-அமைச்சருடன் அவர் தீவிர ஆலோசனை நடத்தினார். வீடூர், சாத்தனூர், அணைகள் திறப்பால் கிராமப்புற பகுதிகளில் வெள்ளப்பெருக்கு அதிகமாக காணப்படுவதால் பாதுகாப்பு கருதி, புதுச்சேரியில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று 3-ந்தேதி விடுமுறை அளிக்கப்படுவதாக முதல்-அமைச்சர் ரங்கசாமி, கல்வி அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் அறிவித்தனர்.

    • ஃபெஞ்சல் புயலால் தமிழ்நாட்டில் வடமாவட்டங்களில் அதி கனமழை பெய்தது
    • முன்னதாக புதுச்சேரியில் நாளை பள்ளி, கல்லூரிகள் செயல்படும் என்று அரசு அறிவித்திருந்தது.

    வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் புதுச்சேரி அருகே காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே கரையை கடந்தது.

    இதன் எதிரொலியால், தமிழ்நாட்டில் வடமாவட்டங்களில் அதி கனமழை பெய்தது. குறிப்பாக புதுச்சேரி, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரியில் வரலாறு காணாத அளவிற்கு கனமழை பெய்ததால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது

    கனமழையால் கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், தொடர் கனமழை காரணமாக புதுச்சேரியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (டிச.03) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக புதுச்சேரியில் நாளை பள்ளி, கல்லூரிகள் செயல்படும் என்று அரசு அறிவித்திருந்த நிலையில் அந்த அறிவிப்பு விமர்சனத்துக்குள்ளானது. இதனையடுத்து பள்ளி கல்லூரிகளுக்கு புதுச்சேரி அரசு விடுமுறை அறிவித்துள்ளது.

    • புதுச்சேரி, மயிலம் பகுதிகளில் ஆயிரக்கணக்கான வீடுகளில் வெள்ளம் புகுந்தது.
    • புதுச்சேரியில் உள்ள அனைத்து ரேசன் கார்டுகளுக்கு ரூ.5 ஆயிரம் வெள்ள நிவாரணம் வழங்கப்படும்.

    ஃபெஞ்சல் புயல் புதுச்சேரி அருகே மாமால்லபுரம்- மரக்காணம் இடையே கரையை கடந்தது. இதனால், புதுச்சேரி, விழுப்புரம் மாவட்டம் மயிலம் சுற்று வட்டார பகுதிகளில் அதி கனமழை கொட்டி தீர்த்தது.

    இதன் காரணமாக புதுச்சேரி, மயிலம் பகுதிகளில் ஆயிரக்கணக்கான வீடுகளில் வெள்ளம் புகுந்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி மாநிலத்தில் ஏற்பட்ட மழை பாதிப்பு காரணமாக அனைத்து ரேசன் கார்டுகளுக்கு ரூ.5 ஆயிரம் வெள்ள நிவாரணம் வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

    இந்நிலையில், கனமழை பாதிப்புகள் காரணமாக புதுச்சேரி பல்கலைகழக தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    • புதுச்சேரியில் 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை பெய்துள்ளது.
    • வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால் புதுச்சேரியில் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஃபெஞ்சல் புயல் எதிரொலியால் புதுச்சேரியில் 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை பெய்துள்ளது. இதனால், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால் புதுச்சேரியில் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    புதுச்சேரி மாநிலத்தில் ஏற்பட்ட மழை பாதிப்பு காரணமாக அனைத்து ரேசன் கார்டுகளுக்கு ரூ.5 ஆயிரம் வெள்ள நிவாரணம் வழங்கப்படும்.

    மேலும், ஃபெஞ்சல் புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குதலா ரூ.4 லட்சம் வழங்கப்படும்.

    பாதிக்கப்பட்ட குடிசை வீடுகளுக்கு ₹20,000 மற்றும் வீடுகளுக்கு ₹10,000 வழங்கப்படும்.

    வெள்ளத்தால் பயிர் சேதம் ஏற்பட்ட நிலையில் ஒரு ஹெக்டேருக்கு 30,000 ரூபாய் நிவாரண தொகை வழங்கப்படும்.

    வெள்ளத்தால் உயிரிழந்த ஒரு மாட்டுக்கு ரூ.40,000, இளம் கன்றுக்கு ரூ. 30,000 நிவாரண தொகை வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • புயல் கரையை கடந்த நிலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்துள்ளது.
    • புதுச்சேரிக்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.

    ஃபெஞ்சல் புயல் புதுச்சேரி அருகே மாமால்லபுரம்- மரக்காணம் இடையே கரையை கடந்த நிலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்துள்ளது.

    இது, அடுத்த 12 மணி நேரத்தில் மேலும் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதனால், புதுச்சேரி, விழுப்புரம் மாவட்டம் மயிலம் சுற்று வட்டார பகுதிகளில் அதி கனமழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக புதுச்சேரி, மயிலம் பகுதிகளில் ஆயிரக்கணக்கான வீடுகளில் வெள்ளம் புகுந்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    மேலும், புதுச்சேரிக்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.

    இதனால், தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக புதுச்சேரியில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து கல்வித்துறை அமைச்சர் ஆ.நமசிவாயம் உத்தரவிட்டுள்ளார்.

    • புதுச்சேரி அரசின் கோரிக்கையை ஏற்று சென்னை காரிசன் பட்டாலியன் இந்திய ராணுவ படையினர் இன்று புதுச்சேரி வந்தனர்.
    • புதுச்சேரி நகரப் பகுதியில் உள்ள கிருஷ்ணா நகர் பகுதியில் 500க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் புகுந்துள்ளது.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் புயல் காரணமாக நேற்று முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

    நகரே வெள்ளக்காடாக மாறி உள்ளது. இதையடுத்து புதுச்சேரி அரசின் கோரிக்கையை ஏற்று சென்னை காரிசன் பட்டாலியன் இந்திய ராணுவ படையினர் இன்று புதுச்சேரி வந்தனர்.

    மேஜர் அஜய் சங்வான் தலைமையில்ஆறு ஜூனியர் அதிகாரிகள் மற்றும் 62 இதர ரேங்குகளை உள்ளடக்கிய பேரிடர் நிவாரண ராணுவ குழுவினர் புதுச்சேரியில் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    புதுச்சேரி நகரப் பகுதியில் உள்ள கிருஷ்ணா நகர் பகுதியில் 500க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் புகுந்துள்ளது. சுமார் 5 அடி வரை தண்ணீர் இருப்பதால் அந்த பகுதியில் தற்போது மீட்பு பணியை தொடங்கி உள்ளனர். சுமார் 100 பேர் வரை மீட்டுள்ளதாக ராணுவம் தரப்பில் தெரிவித்தனர்

    ×