என் மலர்
புதுச்சேரி
- நடந்த சம்பவம் குறித்து தனது தாயாரிடம் கூறி சிறுமி அழுதுள்ளார்.
- அதிர்ச்சியடைந்த பெண்ணின் தாய் முத்தியால்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
புதுச்சேரி:
முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்த 45 வயது மீனவர் ஒருவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.
அவருக்கு வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்தது. அந்த பெண்ணுக்கு 16 வயதில் ஒரு மகள் உள்ளார். அவர் 10-ம் வகுப்பு தேர்வு எழுதி முடித்துள்ளார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் கள்ளக்காதலியின் மகள் மட்டும் இருந்துள்ளார். அப்போது வீட்டுக்கு சென்ற அவர் அச்சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
பின்னர் அவர் அங்கிருந்து சென்று விட்டார். நடந்த சம்பவம் குறித்து தனது தாயாரிடம் கூறி சிறுமி அழுதுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த பெண்ணின் தாய் இது குறித்து முத்தியால்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
சப்-இன்ஸ்பெக்டர் சிவ பிரகாசம் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தார். இதற்கிடையே சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது உறுதியானது.
இந்த நிலையில் நேற்று முத்தியால்பேட்டை பகுதியில் பதுங்கி இருந்த அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.
- குழந்தை திருமணம் நடத்துவது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.
- குழந்தை திருமணம் நடைபெறுவது தெரியவந்தால் 1098 என்ற குழந்தைகள் நல உதவி எண்ணிற்கு தெரிவிக்கலாம்.
புதுச்சேரி:
புதுச்சேரி கலெக்டர் குலோத்துங்கன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
குழந்தை திருமணம் நடத்துவது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும். அட்சய திருதியை போன்ற விழா காலங்களில் அதிக எண்ணிக்கையில் குழந்தை திருமணம் நடப்பது தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் கவனத்திற்கு வருவதால் அதை தடுக்குமாறு அறிவுறுத்துகிறது.
18 வயதுக்கு மேற்பட்ட ஆணாக இருந்து குழந்தை திருமணத்தை ஒப்பந்தம் செய்வது, எந்தவொரு குழந்தை திருமணத்தையும் நடத்துபவர், இயக்குபவர் அல்லது தூண்டுபவர், பெற்றோர் அல்லது பாதுகாவலர் அல்லது சட்டப் பூர்வமாக தூண்டுபவர், பெற்றோர் அல்லது பாதுகாவலர் அல்லது சட்ட விரோதமான வேறு எந்த நபரும், திருமணத்தை ஊக்குவிக்கும் எந்தவொரு செயலையும் செய்பவர் அல்லது அதை நடத்த அனுமதிப்பவர், குழந்தை திருமணத்தில் கலந்து கொள்வது அல்லது பங்கேற்பது குற்றமாகும்.
குழந்தை திருமணம் நடத்துவதை தடுக்க தவறினால் 2 ஆண்டுகள் வரை கடுமையான ஜெயில் தண்டனை விதிக்கப்படும். மேலும் ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.
எனவே அட்சய திருதியை முன்னிட்டு குழந்தை திருமணம் நடைபெறுவது தெரியவந்தால் 1098 என்ற குழந்தைகள் நல உதவி எண்ணிற்கு தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உமாசங்கர் காங்கிரசில் இருந்தபோதே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டுள்ளார்.
- சி.பி.ஐ.க்கு விசாரித்தால்தான் உண்மையான பின்னணி தெரியவரும்.
புதுச்சேரி:
புதுவை முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுச்சேரி காவல்துறையிலும் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. பா.ஜ.க. சேர்ந்த உமாசங்கர் கோரமான முறையில் கொல்லப்பட்டுள்ளார்.
அவர் தனது உயிருக்கு பாதுகாப்பு இல்லை என லாஸ்பேட்டை போலீஸ் நிலையத்தில் கடந்த 22-ந் தேதி புகார் தந்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
உமாசங்கரின் பெற்றோர் முதலமைச்சர் ரங்கசாமியை 4 முறை சந்தித்து பாதுகாப்பு தரக்கோரியும் நடவடிக்கை இல்லை. இந்த நிலையில் 26-ந் தேதி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
காவல்துறைக்கு அழுத்தம் தந்தது யார்? ஏன் காவல்துறை விசாரணை செய்யவில்லை என கேள்வி எழுகிறது.
உமாசங்கர் புகாருக்கு லாஸ்பேட்டை போலீசார் நடவடிக்கை எடுத்திருந்தால் இறப்பு சம்பவம் நடந்திருக்காது. இது திட்டமிட்ட படுகொலை. இதில் அரசியல் பின்னணி உள்ளது. போலீசாரிடமும், முதலமைச்சரிடமும் புகார் தந்தும் நடவடிக்கை எடுக்காதது ஏன்?
இதில் புதுச்சேரி போலீஸ் விசாரித்தால் நீதி கிடைக்காது. ஆளுங்கட்சி முக்கிய புள்ளிகள் தலையீட்டால், காவல்துறை கைகள் கட்டப்பட்டுள்ளன. ரவுடிகள் வைத்து வழக்கை பூசிமுழுக பார்க்கிறார்கள். இந்த சூழல் தொடர்ந்தால் அரசியல் தலைவர்கள் யாரும் புதுச்சேரியில் நடமாடமுடியாது.
பா.ஜ.க.வில் இருப்போருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை இருந்தால் எதிர்க்கட்சியினருக்கும் மக்களுக்கும் என்ன பாதுகாப்பு இருக்கும்? முன்பு நடந்த செந்தில்குமார் கொலைக்கு உள்துறை அமைச்சரை பதவிவிலக கோரினோம். தற்போது நடந்த கொலைக்கு பொறுப்பேற்று அமைச்சர் பதவி விலக வேண்டும்.
போலீஸ் பாரபட்சமாக செயல்படுவதால் சி.பி.ஐ. விசாரணை தேவை. கவர்னர் கைலாஷ்நாதன் இதில் தலையிட்டு சி.பி.ஐ.க்கு அனுப்ப வேண்டும். இதுதொடர்பாக கவர்னரை சந்திப்போம்.
உமாசங்கர் காங்கிரசில் இருந்தபோதே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டுள்ளார். அதன்பிறகு பா.ஜ.க. சென்றார். பா.ஜ.க. யார் வேலை செய்கிறார்களோ, வேட்பாளராக முயற்சிக்கிறார்களோ அவர்கள் திட்டமிட்டு கொல்லப்படுகிறார்கள். அத்துடன் நிலப்பின்னணி பெரியளவில் இருக்கிறது.
சி.பி.ஐ.க்கு விசாரித்தால்தான் உண்மையான பின்னணி தெரியவரும். இல்லாவிட்டால் முதலமைச்சரும், உள்துறை அமைச்சரும் வழக்கை முடித்து விடுவார்கள். குற்றவாளிகளுக்கு அரசு துணைபோகிறது.
இவ்வாறு நாராயணசாமி கூறினார்.
- ஏற்கனவே முதலமைச்சர் ரங்கசாமி வீட்டுக்கு 2 முறை இமெயில் மூலம் மிரட்டல் வந்தது.
- பிரெஞ்சு தூதரகம், முல்லா வீதியில் உள்ள பள்ளிவாசலுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
புதுச்சேரி:
புதுவையில் கடந்த சில வாரங்களாக கவர்னர் மாளிகை, முதலமைச்சர் ரங்கசாமி வீடு, பிரெஞ்சு தூதரகம், ஜிப்மர் ஆஸ்பத்திரி மற்றும் அரசு அலுவலகங்கள், தனியார் விடுதிகளுக்கு தொடர்ந்து இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வருகிறது.
இமெயில் மூலம் மிரட்டல் விடுபவர் யார்? என்பதை கண்டறிவது சவாலாக உருவெடுத்துள்ளது. புதுவை சைபர் கிரைம் போலீசார் மத்திய சைபர் கிரமை் போலீசார் உதவியை நாடியுள்ளனர்.
மிரட்டல் புரளி என்றாலும், தொடர்ந்து போலீசார் மிரட்டல் வரும் இடங்களுக்கு சென்று வெடிகுண்டு நிபுணர்கள், மோப்பநாயுடன் சோதனை நடத்துகின்றனர். ஏற்கனவே முதலமைச்சர் ரங்கசாமி வீட்டுக்கு 2 முறை இமெயில் மூலம் மிரட்டல் வந்தது.
இந்நிலையில் இன்று காலையில் டி.ஜி.பி. அலுவலக மெயிலுக்கு முதலமைச்சர் ரங்கசாமியின் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் வந்தது.
இதையடுத்து கோரிமேடு போலீசார் திலாசுப்பேட்டை மற்றும் கோரிமேடு அப்பா பைத்தியம் சுவாமிகள் கோவில் வளாகத்தில் உள்ள முதலமைச்சர் ரங்கசாமியின் வீடுகளில் சோதனை நடத்தினர். வெடிகுண்டு நிபுணர்கள், மோப்பநாய் வரவழைக்கப்பட்டு இந்த சோதனை நடந்தது. இதில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை.
இதனிடையே ஜிப்மர் மருத்துவமனைக்கும் இமெயில் மூலம் மிரட்டல் வந்தது. இதுதொடர்பாக ஜிப்மர் நிர்வாகம் கோரிமேடு போலீசுக்கு தகவல் கொடுத்தது. போலீசார் ஜிப்மரில் சோதனை நடத்தினர்.
இதேபோல பிரெஞ்சு தூதரகம், முல்லா வீதியில் உள்ள பள்ளிவாசலுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இங்கும் போலீசார் சோதனை நடத்தினர். இந்த தொடர் வெடிகுண்டு மிரட்டலை விடுக்கும் நபரை கண்டு பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.
- விசா ஏற்கனவே காலாவதியானதும் தெரியவந்துள்ளது.
- லாஸ்பேட்டை மற்றும் மாகி போலீசார் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
புதுச்சேரி:
காஷ்மீர் மாநிலம் பகல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரி ழந்தனர். இந்த சம்பவத்துக்கு பதிலடியாக பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளை இந்தியா எடுத்து வருகிறது.
பல்வேறு விசாக்களில் இந்தியா வந்த பாகிஸ்தானியர் வெளியேற காலக்கெடு நிர்ணயித்தது. 'சார்க்' விசாவில் வந்தவர்கள் ஏப்ரல் 26-ந் தேதிக்குள்ளும், இதர விசாக்களில் வந்தவர்கள் 27-ந்தேதிக்குள்ளும், மருத்துவ விசாவில் வந்தவர்கள் 29-ந் தேதிக்குள்ளும் வெளியேறகெடு விதிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் புதுச்சேரி மாநிலத்தில் 2 பாகிஸ்தானியர்கள் தங்கி வசித்து வந்தது தெரியவந்தது. புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஹனீப்கான் (வயது 39). இவருக்கும் பாகிஸ்தானை சேர்ந்த உறவினரான பஷியா பானு (38) என்பவருக்கும் கடந்த 2013-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். திருமணத்துக்கு பின் பஷியா பானு புதுச்சேரியில் கணவருடன் வசித்து வந்தார்.
இதேபோல் புதுச்சேரி பிராந்தியமான மாகிக்கு பாகிஸ்தானை சேர்ந்த பஷீர் (65) என்பவர் 2016-ம் ஆண்டு மருத்துவ சிகிச்சைக்கான விசாவில் வந்தார். அதன்பின் அவர் மாகியில் தங்கிவிட்டார்.
இந்த நிலையில் பஷியா பானு, பஷீர் ஆகியோர் இந்தியாவில் இருந்து வெளியேற புதுச்சேரி வெளிநாட்டினர் பதிவு அலுவலக அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இது தொடர்பாக அவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் இவர்களின் விசா ஏற்கனவே காலாவதியானதும் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக லாஸ்பேட்டை மற்றும் மாகி போலீசார் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- கொலை கும்பலை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
- சந்தேகபடும்படியாக சிலரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி சாமி பிள்ளைத் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் உமாசங்கர் (வயது38). பா.ஜ.க. இளைஞரணி முன்னாள் துணைத்தலைவரான இவர் தற்போது காமராஜர் நகர் பா.ஜ.க. பொறுப்பாளராக இருந்து வந்தார்.
இந்நிலையில் இன்று (27-ந் தேதி) தொழிலதிபர் சார்லஸ் மார்ட்டின் பிறந்த நாள் விழா கருவடிக்குப்பம் பகுதியில் உள்ள தனியார் திருமண நிலையத்தில் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
அவரது பிறந்த நாள் விழா ஏற்பாடுகளை உமா சங்கர் கவனித்து வந்தார்.
நேற்று இரவு கருவடிக்குப்பம் தனியார் மண்டபத்தில் நடந்து வரும் பிறந்த நாள் விழா பணிகளை பார்த்து விட்டு இரவு 11.30 மணியளவில் வெளியே வந்தார்.
அப்போது அங்கு 5 பைக்குகளில் வந்த 10-க்கும் மேற்பட்ட கும்பல் உமாசங்கரை சுற்றி வளைத்தது. இதனை கண்ட உமாசங்கர் தன்னை தீர்த்து கட்ட கும்பல் வந்துள்ளதை அறிந்து அவர்களிடமிருந்து தப்பிக்க ஓடினார். ஆனால் அந்த கும்பல் ஓடஓட விரட்டி உமாசங்கரை கத்தியால் சரமாரியாக வெட்டியது. இதில் உமாசங்கர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். உமாசங்கர் இறந்து போனதை உறுதி செய்த பின்னரே அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது.
தகவலறிந்து அங்கு வந்த உமாசங்கரின் தாய், அவரது மனைவி மற்றும் உறவினர்கள் படுகொலை செய்யப்பட்டு கிடந்த உமாசங்கரின் உடலை பார்த்து கதறி அழுதனர்.
இதுகுறித்து தகவலறிந்ததும் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு கலைவாணன் தலைமையில் லாஸ்பேட்டை போலீசார் சம்பவ இடத் திற்கு விரைந்தனர். அப்போது அவரது தாய், உறவினர்கள் மற்றும் பொது மக்கள் கொலையாளிகளை கைது செய்யும் வரை உமாசங்கரின் உடலை எடுக்கக்கூடாது என கூறி போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து டி.ஐ.ஜி. சத்தியசுந்தரம் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தினார். குற்றவாளிகளை கண்டறிந்து உடனடியாக கைது செய்வதாக உறுதி அளித்தார். அதன் பின்னரே நள்ளிரவு 1.30 மணிக்கு மேல் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பா.ஜ.க. பிரமுகர் கொலை செய்யப்பட்ட சம்பவம் காரணமாக லாஸ்பேட்டை, கருவடிக்குப்பம், சாமிபிள்ளைத் தோட்டம் பகுதியில் பதட்டம் நிலவி வருகிறது. அங்கு அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க அப்பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து லாஸ்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கொலை கும்பலை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தனர். இதில் சந்தேகபடும்படியாக சிலரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் கொடுத்த தகவலின் படி கொலையாளிகள் குறித்த அடையாளங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர்.
- பாஜகவும், பாமகவும் இருக்கும் அணியில் விசிக ஒருபோதும் இடம்பெறாது.
- ஆட்சி அதிகாரத்தில் பங்கு, துணை முதல்வர் பதவி என்று ஆசை வார்த்தைகள் கூறி என்னை வீழ்த்தி விட முடியாது.
புதுச்சேரி:
புதுச்சேரி மாநிலம் திருபுவனையில் அம்பேத்கர் சிலையை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் திறந்து வைத்தார். இதன்பின்னர் பேசிய திருமாவளவன்,
திமுகவில் தொடர்ந்து பயணிக்கிறோம் என்பதையே கேலி பேசுகிறார்கள். பாஜக, பாமக கட்சியுடன் கூட்டணி இல்லை. பாஜகவும், பாமகவும் இருக்கும் அணியில் விசிக ஒருபோதும் இடம்பெறாது.
இப்போது புதிதாக கட்சி தொடங்கியுள்ள நண்பர் விஜயுடன், புத்தக வெளியீட்டு விழாவிற்கு எனக்கு அழைப்பு விடுத்த போது, அது தவறான யூகத்தை ஏற்படுத்தும் என்றும், இப்போது உள்ள அணி பாதிக்கப்பட்டு அது பாஜகவிற்கு சாதகமாக மாறிவிடுமோ என்பதால் அந்த விழாவைக்கூட தவிர்த்தேன். அவருடைய மனது நம்முடன் இருக்கும் என்று அப்போது விஜய் கூறினார். நான் நினைத்திருந்தால் விஜய்க்கான கூட்டணி கதவுகள் திறந்துள்ளது என்று கூறியிருக்க முடியும். ஆனால் அந்த கூட்டணி கதவையும் மூடினேன்.
ஆட்சி அதிகாரத்தில் பங்கு, துணை முதல்வர் பதவி என்று ஆசை வார்த்தைகள் கூறி என்னை வீழ்த்தி விட முடியாது என்றார்.
- விபத்தில் குடோனுக்குள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 12 பைக்குகளும் எரிந்து சேதமடைந்தன.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுச்சேரி:
புதுச்சேரி வாழைக்குளம் குடியிருப்பை சேர்ந்தவர் மணிவண்ணன் (வயது34). இவர் புதுச்சேரி பட்டேல் சாலை-செஞ்சி ரோடு சந்திப்பில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு வரும் வெளிமாநில சுற்றுலா பயணிகளுக்கு பைக்குகளை வாடகை விடும் தொழிலும் செய்து வருகிறார்.
இதற்காக கேண்டின் வீதியில் உள்ள மனோன்மணி அம்மன் கோவில் பின்புறம் குடோனில் பைக்குகளை நிறுத்தி வைத்திருந்தார்.
நள்ளிரவு 2 மணிக்கு குடோன் எரிவதாக புதுச்சேரி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர்.
அப்போது குடோனுக்குள் ஒருவர் தீக்காயங்களுடன் கிடந்தார். அவரை பெரியக்கடை போலீசார் மீட்டு புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் பிளாட் பாரத்தில் வசிக்கும் சுரேஷ் (26) என்பதும், நள்ளிரவில் சாலையோரங்களில் நிறுத்தப்படும் பைக்குகளில் இருந்து பெட்ரோல் திருடும் அவர் மணிவண்ணன் வாகனம் நிறுத்தி வைத்திருந்த குடோனுக்கு பெட்ரோல் திருட சென்றதாக கூறப்படுகிறது.
அங்கு அவர் பைக்குகளில் பெட்ரோல் திருடிய படி சிகரெட் பிடித்துள்ளார். அப்போது பெட்ரோல் மீது நெருப்பு பட்டு குடோன் தீப்பிடித்தது தெரிய வந்தது. இந்த விபத்தில் குடோனுக்குள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 12 பைக்குகளும் எரிந்து சேதமடைந்தன. தீக்காயமடைந்த சுரேஷ் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் குறித்து சுரேஷ் மீது பெரியக் கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- போலீஸ் சூப்பிரண்டு ரகுநாயகம், இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் தலைமையில் போலீசார் ஆளுநர் மாளிகையில் சோதனை நடத்தினர்.
- ஆளுநர் மாளிகை தற்காலிகமாக இடம் பெயருகிறது.
புதுச்சேரி:
புதுச்சேரியில் கடந்த சில வாரங்களாக அரசு அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் தொடர்ந்து வருகிறது.
ஆளுநர் மாளிகை, முதலமைச்சர் வீடு, பிரெஞ்சு தூதரகம், கலெக்டர் அலுவலகம் ஆகிய இடங்களுக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது.
தொடர்ந்து கடந்த வாரத்தில் நட்சத்திர விடுதிகள், ரெஸ்டாரண்ட்டுகள் ஆகியவற்றுக்கும் வெடிகுண்டு மிரட்டல் இமெயில் மூலம் வந்தது.
போலீசார் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்தினர். ஆனால் இதில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரிய வந்தது. இருப்பினும் மிரட்டல் தொடர் கதையாகி உள்ளது.
வெடிகுண்டு மிரட்டல் நபரை போலீசார் கண்டறிய முடியவில்லை. புதுவை சைபர் கிரைம் போலீசாரால் துப்புதுலக்க முடியவில்லை. இதனையடுத்து மத்திய சைபர் கிரைம் போலீசார் உதவியை நாடியுள்ளனர்.
இந்த நிலையில் இன்று புதுச்சேரி ஆளுநர் மாளிகைக்கு இமெயிலில் ஒரு தகவல் வந்தது. அதில், ஆளுநர் மாளிகையில் வெடிகுண்டு இருப்பதாகவும் சிறிது நேரத்தில் வெடிக்கும் என தகவல் இருந்தது.
இதுகுறித்து பெரியக்கடை போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர். போலீஸ் சூப்பிரண்டு ரகுநாயகம், இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் தலைமையில் போலீசார் ஆளுநர் மாளிகையில் சோதனை நடத்தினர். வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் ஆகியவற்றுடன் சோதனை நடந்தது. இறுதியில் வெடிகுண்டு புரளி என்பது தெரிய வந்தது.
இதனிடையே ஆளுநர் மாளிகை தற்காலிகமாக இடம் பெயருகிறது. இதற்கான கணபதி ஹோமம் இன்று அதிகாலை கடற்கரை சாலையில் உள்ள கலாச்சார மையத்தில் நடந்தது.
இதனால் ஆளுநர் கைலாஷ்நாதன் மற்றும் அவரது குடும்பத்தினர், ஆளுநர் மாளிகை அதிகாரிகள் தற்காலிக ஆளுநர் மாளிகையில் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- உச்சநீதி மன்றத்தை பா.ஜ.க. எம்.பி.க்கள் மிரட்டுகின்றனர்.
- துணை ஜனாதிபதி உச்சநீதி மன்றம் செயல்பாடு குறித்து கருத்து தெரிவித்திருப்பது வேதனை.
புதுச்சேரி:
புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக அரசுக்கு சாதகமாக கவர்னர் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை பா.ஜ.க.வினர் கண்டிக்கின்றனர். உச்சநீதி மன்றத்தை பா.ஜ.க. எம்.பி.க்கள் மிரட்டுகின்றனர். அரசியல் அமைப்பு சட்டத்தையே சிதைக்க வேண்டும் என்பதற்கான முயற்சிகளை எடுத்து கொண்டிருக்கிறார்கள்.
பாராளுமன்றம் பெரியதா அல்லது உச்சநீதி மன்றம் பெரியதா என்ற கேள்வியை எழுப்பு கின்றார்கள். அது பேசும் பொருளாக மாறியுள்ளது. துணை ஜனாதிபதி உச்சநீதி மன்றம் செயல்பாடு குறித்து கருத்து தெரிவித்திருப்பது வேதனையானது.
இதை கண்டித்தும், அரசியலமைப்பை பாதுகாக்கவும் மே 1-ந் தேதி புதுச்சேரியில் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும்.
மே 3-ந் தேதி முதல் 10-ம் தேதி வரை மாவட்ட ரீதியில் நேஷனல் ஹெரால்டு நாளிதழ் வழக்கு விபரத்தை தெரிவிக்கும் வகையில் போராட்டம் நடத்தப்படும். மே 11-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை வேலை வாய்ப்பின்மை, விலைவாசி உயர்வை கண்டித்து தொகுதிதோறும் போராட்டம் நடத்தப்படும். மே 21-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை வீடுகள் தேடிச்சென்று மக்களை சந்திப்பு நடத்தப்படும்
இவ்வாறு வைத்திலிங்கம் எம்.பி. கூறினார்.
- சிறுமியின் தாய் முத்தியால்பேட்டை போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் போக்சோ வழக்கு பதிந்து பூவரசனை வலைவீசி தேடி வருகின்றனர்.
- பெண் பிள்ளைகளுக்கு போதிய பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவி வருவதால் பெற்றோர்கள் அச்சமடைந்துள்ளனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி முத்தியால்பேட்டை வைத்திக்குப்பத்தை சேர்ந்தவர் பூவரசன் (வயது 45). இவர் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 2 பிள்ளைகள் உள்ளனர்.
இந்நிலையில் இவர் அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவருடன் தொடர்பில் இருந்து வந்துள்ளார். அந்த பெண்ணுக்கு 16 வயதில் மகள் உள்ளார். அவர் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிவிட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார். பூவரசன் அடிக்கடி அந்த பெண் வீட்டுக்கு வந்து செல்வது வழக்கம்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு பூவரசன் வழக்கம் போல் அந்த பெண் வீட்டுக்கு சென்றார். அப்போது அந்த பெண் வீட்டில் இல்லை. அவருடைய மகள் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது பூவரசன் அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றார்.
நீண்ட நேர போராட்டத்துக்கு பிறகு அந்த சிறுமி வீட்டில் இருந்து வெளியே ஓடிவந்து பக்கத்து வீட்டில் தஞ்சம் புகுந்தார். அக்கம் பக்கத்தினர் திரண்டு வரவே பூவரசன் அங்கிருந்து சென்று விட்டார்.
இதுகுறித்து சிறுமியின் தாய் முத்தியால்பேட்டை போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் போக்சோ வழக்கு பதிந்து பூவரசனை வலைவீசி தேடி வருகின்றனர்.
இதற்கிடையே முத்தியால்பேட்டை சோலைநகர் பகுதியில் கடந்த 10 நாட்களில் 3 சிறுமிகள் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளனர். தற்போது மீண்டும் ஒரு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அப்பகுதியில் பெண் பிள்ளைகளுக்கு போதிய பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவி வருவதால் பெற்றோர்கள் அச்சமடைந்துள்ளனர்.
- ஓட்டலில் தங்கியிருந்த சுற்றுலா பயணிகள், ஊழியர்களை வெளியேற்றி அறை அறையாக சோதனை நடத்தினர்.
- போலீசார் 2 ஓட்டல்களுக்கும் இரு பிரிவாக பிரிந்து சென்று சோதனை நடத்தினர்.
புதுச்சேரி:
புதுவையில் கடந்த சில வாரங்களாக அரசு அலுவலகங்களுக்கு தொடர் வெடிகுண்டு மிரட்டல் வந்தது.
கவர்னர் மாளிகை, கலெக்டர் அலுவலகம், ஜிப்மர் மருத்துவமனை, பிரெஞ்சு துாதரகம் ஆகிய அலுவலகங்களுக்கு மின் அஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இந்த அலுவலகங்களில் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்பநாய் மூலம் அங்குலம், அங்குலமாக சோதனை நடத்தினர்.
சோதனையில் புரளி என தெரிய வந்தது. தொடர்ந்து வந்த மிரட்டலை அலட்சியம் செய்ய முடியாமல் போலீசார் தவித்தனர். மின் அஞ்சல் மூலம் வந்த வெடிகுண்டு மிரட்டலை அனுப்பியது யார்? என போலீசாரால் கண்டறிய முடியவில்லை.
இதனால் புதுவை சைபர் கிரைம் உதவியை நாடினர். அவர்கள் மத்திய சைபர் கிரைம் போலீசார் உதவியை நாடியுள்ளனர். இதில் மிரட்டல் விடுத்த நபரை கண்டறிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரை போலீசார் கைது செய்ய தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் இதுவரை அரசு அலுவலகங்களை குறிவைத்து மிரட்டல் விடுத்து வந்த மர்ம ஆசாமி தற்போது முதலமைச்சர் வீடு மற்றும் தனியார் நட்சத்திர ஓட்டல்களுக்கு மின் அஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் புதுச்சேரி கோரிமேட்டில் உள்ள முதலமைச்சர் ரங்கசாமி வீட்டுக்கு விரைந்து சென்றனர். அப்போது முதலமைச்சர் ரங்கசாமி வீட்டில் இல்லை.
தொடர்ந்து அந்த வீட்டில் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் அங்குலம், அங்குலமாக வெடி சோதனை நடத்தினர். ஆனால் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை.
இதுபோல் புதுவை கடற்கரை சாலையில் உள்ள புரோமனன்ட், அஜந்தா சந்திப்பில் உள்ள செண்பகா ஆகிய நட்சத்திர ஓட்டல்களுக்கும் இன்று காலை மின் அஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது.
இதையடுத்து போலீசார் 2 ஓட்டல்களுக்கும் இரு பிரிவாக பிரிந்து சென்று சோதனை நடத்தினர்.
ஓட்டலில் தங்கியிருந்த சுற்றுலா பயணிகள், ஊழியர்களை வெளியேற்றி அறை, அறையாகவும், சோதனை நடத்தினர். ரெஸ்டாரெண்ட், சமையல் அறை, பார், கார் பார்க்கிங் ஆகியவற்றில் அங்குலம், அங்குலமாக வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர்.
மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. 2 மணி நேரம் சோதனை நடத்தியும்வெடிகுண்டு ஏதும் கிடைக்கவில்லை. இது புரளி என தெரிய வந்தது. ஒருபுறம் போலீசார் நிம்மதியடைந்தாலும், இது போல தொடர் மிரட்டலால் போலீசார் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
முதலமைச்சர் ரங்கசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






