என் மலர்
விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி மாவட்ட போலீசாரிடையே காட்டுத்தீ போல பரவியது.
- இன்று காலை டீக்கடை உரிமையாளரை அழைத்த போலீசார், அவரிடம் டீ குடித்த பாக்கித்தொகையான ரூ.7 ஆயிரத்தை வழங்கினர்.
கச்சிராயபாளையம்:
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் கரியாலூர் போலீஸ் நிலையம் உள்ளது. இங்கு பணி செய்யும் சப்-இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட போலீசார், அருகிலுள்ள டீக்கடையில் டீ குடிப்பது வழக்கம்.
ஒரு டீ ரூ.6-க்கு விற்கப்பட்டு வரும் இந்த கடைக்கு கரியாலூர் போலீசார் ரூ.7 ஆயிரம் கடன் வைத்துள்ளனர். இந்த தொகையை போலீசாரிடம் கேட்க முடியாமல், கடை உரிமையாளர் இருந்து வந்தார்.
இந்நிலையில் இது தொடர்பாக முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு புகார் சென்றது. இது அங்கிருந்து கள்ளக்குறிச்சி கலெக்டருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவர் இதனை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு அனுப்பி வைத்தார். இது தொடர்பாக விளக்கம் கோரி கரியாலூர் போலீசாருக்கு நேற்று மாலை கடிதம் அனுப்பப்பட்டது.
இந்த விஷயம் கள்ளக்குறிச்சி மாவட்ட போலீசாரிடையே காட்டுத்தீ போல பரவியது. இதனால் கலக்கமடைந்த கரியாலூர் போலீசார் கலந்தாலோசித்தனர்.
இன்று காலை டீக்கடை உரிமையாளரை அழைத்த போலீசார், அவரிடம் டீ குடித்த பாக்கித்தொகையான ரூ.7 ஆயிரத்தை வழங்கினர். மேலும், இனிமேல் தினமும் வழங்கும் டீக்கு அன்றைய தினமே பணத்தை வாங்கிக்கொள்ள கடை உரிமையாளரிடம் போலீசார் கூறினார்கள்.
இதனை படம் பிடித்து டீ பாக்கி கடைக்காரரிடம் வழங்கப்பட்டு விட்டது என்ற தலைப்பில் போலீசாரின் வாட்ஸ் அப் குரூப்பில் பரவவிட்டுள்ளனர்.
அதேசமயம், டீ பாக்கி குறித்து முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு புகார் மனு அனுப்பியது யார் என்பது குறித்தும் கரியாலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் போலீசார் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- ராஜாராம் அதே பகுதியில் எலக்ட்ரிக்கல் சர்வீஸ் சென்டர் நடத்தி வருகிறார்.
- எலக்ட்ரிக்கல் பொருட்கள் தீப்பிடித்து எரிந்து வெடித்து சிதறியது.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் கோட்டைமேடு பகுதியை சேர்ந்தவர் ராஜாராம். இவர் அதே பகுதியில் எலக்ட்ரிக்கல் சர்வீஸ் சென்டர் நடத்தி வருகிறார். நேற்று மாலை கடையில் வேலை செய்து கொண்டிருந்தார். இரவு 8.30 மணி அளவில் வீட்டிற்குள் இருந்து திடீரென கரும்புகை வந்தது. உள்ளே சென்று பார்த்தபோது எலக்ட்ரிக்கல் பொருட்கள் தீப்பிடித்து எரிந்து வெடித்து சிதறியது.
இதனையடுத்து திண்டிவனம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதில் ராஜாராம் வீட்டில் இருந்த டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், ஹோம் தியேட்டர் போன்ற எலக்ட்ரிகல் பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமானது. இதுகுறித்து திண்டிவனம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின் கசிவு ஏற்பட்டு தீ விபத்து நடந்திருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
- குல்பி ஐஸ் வாங்கி சாப்பிட்ட அனைத்து சிறுவர்களையும் அவர்களது பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர்.
- கலெக்டர் பழனி, புகழேந்தி எம்.எல்.ஏ., ஆகியோர் இன்று காலை மருத்துவமனைக்கு விரைந்து வந்தனர்.
விழுப்புரம்:
விக்கிரவாண்டி ஒன்றியம் முட்டத்தூர் கிராமத்தில் நேற்று மாலை 5.30 மணி அளவில் அக்கிராம சிறுவர்கள் குல்பி ஐஸ் வாங்கி சாப்பிட்டனர். இதனைத் தொடர்ந்து நேற்று இரவு 10 மணிக்கு குல்பி ஐஸ் சாப்பிட்ட பெரும்பாலான சிறுவர்கள் வாந்தி மயக்கம் ஏற்பட்டு வயிற்றுப் போக்கில் அவதிப்பட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சிறுவ ர்களை அனுமதித்தனர். இத்தகவல் பரவியதால், குல்பி ஐஸ் வாங்கி சாப்பிட்ட அனைத்து சிறுவர்களையும் அவர்களது பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அதன்படி 3 வயது குழந்தைகள் முதல் 15 வயது சிறியவர்கள் வரை மொத்தம் 87-க்கும் மேற்பட்ட குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இதில் பெரும்பா லான சிறுவர்களை மருத்து வமனையில் அனுமதித்த டாக்டர்கள், அவர்களை தொடர் கண்காணிப்பில் வைத்துள்ளனர்.
இத்தகவல் அறிந்த விக்கிரவாண்டி போலீசார், குல்பி ஐஸ் விற்ற ஏழு செம்பொன் கிராமத்தை சேர்ந்த கண்ணன் (வயது 45) என்பவரை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், விக்கிரவாண்டி தாசில்தார் ஆதிசக்தி சிவகுமரி மன்னன் மருத்துவ மனைக்கு விரைந்து வந்தார். சிகிச்சை பெற்று வந்த சிறுவர்கள் மற்றும் அவரது பெற்றோர்க ளுக்கு ஆறுதல் கூறினார். இந்நிலையில் தகவல் அறிந்த விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி, புகழேந்தி எம்.எல்.ஏ., ஆகியோர் இன்று காலை மருத்துவமனைக்கு விரைந்து வந்தனர். அங்கு சிகிச்சை பெற்று வரும் சிறுவர்களிடம் நலம் விசாரித்தனர். தொடர்ந்து சிகிச்சை குறித்து டாக்ட ர்ளிடம் கேட்டறிந்தனர். ஆய்வின் போது மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயச்சந்திரன், மருத்துவக் கல்லூரி முதல்வர் கீதாஞ்சலி, நிலைய மருத்துவ அலுவலர் ரவிக்குமார். துறைத் தலைவர் புகழேந்தி. ஒன்றிய செயலாளர்கள் வேம்பி ரவி, ஜெய ரவிதுரை, ஜெயபாலன் விக்கிரவாண்டி தாசில்தார் ஆதிசக்தி சிவகுமாரி மன்னன் மற்றும் அரசு அதிகாரிகள் நிர்வாகிகள் உடன் இருந்தனர். மேலும், குல்பி ஐஸ் வியாபாரி எங்கிருந்து வாங்கி வந்து விற்பனை செய்தார் என விசாரித்து, அங்கு சென்று சோதனை நடத்த போலீசார் மற்றும் உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது
- ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை முன்வைத்தனர்.
- விவசாய பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் பழனி தலைமையில் நடைபெற்றது.இதில் கலந்து கொண்ட விவசாயிகள், திண்டிவனத்தில் விதை சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும். மரவள்ளி தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வீடுர் அணைக்கட்டை சுற்றி மண் அணைப்பு செய்திருக்கும் இடத்தில் மண் சரிவு வராமல் பாதுகாக்க பனைக்கன்றுகள் நட வேண்டும். விவசாயிகளின் பாரம்பரிய நெல் விதைகளை வேளாண் உற்பத்தியா ளர்கள் நிறுவனத்தின் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அனைத்து ஏரிகள், குளங்கள், குட்டைகள் போன்றவற்றை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். நீர்நிலைகள், அரசாங்க புறம்போக்கு இடங்கள், சுடுகாடு, வழிப்பாதை போன்ற ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை முன்வைத்தனர். மாதந்தோறும் விவசாயிகள் தெரிவிக்கும் அனைத்து கோரிக்கைகளும் உரிய அலுவலர்கள் வாயிலாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. தற்பொழுது விவசாயிகள் வைத்த கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, விவசாயிகளின் கோரி க்கைகள் நிறைவேற்ற ப்படும் என மாவட்ட கலெக்டர் பழனி விவசாயிகளிடம் உறுதியளித்தார்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, தனி மாவட்ட வருவாய் அலுவலர் சரஸ்வதி, வேளாண்மை இணை இயக்குநர் சண்முகம், மேற்பார்வை பொறியாளர், தமிழ்நாடு மின்சார வாரியம் லட்சுமி, இணை பதிவாளர் கூட்டுறவு சங்கம் யசோதா தேவி, மேலாண்மை இயக்குநர், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இளஞ்செல்வி, செயற்பொறியாளர், பொதுப்பணித்துறை ஷோபனா, வேளாண்மை துணை இயக்குநர் பெரியசாமி, விவசாய பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- கடந்த 2 நாட்களுக்கு முன்பு விழுப்புரம் கோட்டாட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
- தகவல் கிடைத்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷசாங்சாய் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்தனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் அருகே மேல்பாதியில் திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த மே மாதம் திருவிழாவின்போது வழிபடுவதில் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து கோவில் பூட்டி சீல் வைக்கப்பட்டது. இது தொடர்பாக இருதரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு விழுப்புரம் கோட்டாட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. மேல்பாதியை சேர்ந்த ஒருவர் கோலியனூர் கூட்டுரோட்டில் உள்ள ஓட்டலுக்கு சாப்பிட வந்தார். அப்போது அதே ஊரை சேர்ந்த 5 பேர் ஓட்டலுக்கு வந்தனர்.
திடீரென அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து வளவனூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அங்கு வந்து ஒருதரப்பை சேர்ந்த பிரகாஷ், பிரபு உள்ளிட்ட சிலரை விசாரணைக்காக போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர்.
இதனால் அந்த தரப்பை சேர்ந்த பொதுமக்கள் ஆத்திரம் அடைந்தனர். அவர்கள் 500-க்கும் மேற்பட்டோர் சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். நள்ளிரவு 11.30 மணியளவில் இந்த மறியல் நடந்தது. இதனால் அந்த சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
சென்னையில் இருந்து கும்பகோணம் செல்லும் பஸ்களும், கும்பகோணத்தில் இருந்து சென்னை வரும் பஸ்களும் நீண்ட வரிசையில் நின்றன. தகவல் கிடைத்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷசாங்சாய் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்தனர்.
அவர்கள் சாலைமறியலில் ஈடுபட்டிருந்த பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதையடுத்து மறியலை கைவிட்டனர். அதன் பின்னர் போக்குவரத்து சீரானது.
ஏற்கனவே மேல்பாதியில் கோவிலில் வழிபடுவது தொடர்பாக இருதரப்பினரிடையே மோதல் இருந்து வரும் நிலையில் தற்போது இருதரப்பினரிடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் மேல்பாதியில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருவதால் அங்கு அதிரடிப்படை போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.
- குல்பி ஐஸ் சாப்பிட்ட 40 பேருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது.
- இதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
விழுப்புரம்:
விக்கிரவாண்டி ஒன்றியத்துக்குட்பட்ட முட்டத்தூர் கிராமத்தில் நேற்று மாலை மொபட்டில் வந்த நபரிடம் அப்பகுதியை சேர்ந்த சிறுவர், சிறுமிகள் சிலர் குல்பி ஐஸ் வாங்கி சாப்பிட்டனர். பின்னர் இரவு 10 மணியளவில் ஐஸ் சாப்பிட்ட சிறுவர், சிறுமிகளுக்கு திடீரென வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு ஏற்பட்டது.
அடுத்தடுத்து ஒவ்வொருவராக மயங்கி விழுந்ததால் அதிர்ச்சி அடைந்த அவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவர்களை சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். 3 வயது முதல் 15 வயதுக்குட்பட்ட மொத்தம் 35 சிறுவர், சிறுமிகளுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
குல்பி ஐசில் ஏதேனும் மயக்க மருந்து கலந்துள்ளதா? அல்லது கெட்டுப்போன ஐசை வாங்கி சாப்பிட்டதால் வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டதா? என்பது குறித்து சுகாதாரத்துறை மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் குல்பி ஐஸ் விற்பனை செய்த மர்ம நபரை விக்கிரவாண்டி போலீசார் தேடி வருகிறார்கள். இச்சம்பவம் முட்டத்தூர் கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- இன்று காலை காட்டுச் சிவிரி ஏரிக்கரையில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் 300-க்கும் மேற்பட்ட பெண்கள் பணிபுரிந்து வந்துள்ளனர்.
- அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள காட்டுச்சிவிரி கிராமத்தில் ஏராளமான பெண்கள் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர். இன்று காலை காட்டுச் சிவிரி ஏரிக்கரையில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் 300-க்கும் மேற்பட்ட பெண்கள் பணிபுரிந்து வந்துள்ளனர். அப்போது புதர் பகுதியை தூய்மை செய்ய முயன்றுள்ளனர். அந்த நேரத்தில் எதிர்பாராத விதமாக அங்கு இருந்து வெளியேறிய விஷ தேனீக்கள் அங்கு பணிபுரிந்து வந்த பெண்களை விரட்டி விரட்டி கொட்ட ெதாடங்கியது.இதில் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் தேனீக்கள் கொட்டியதால் காயமடைந்துள்ளனர்.இதன் காரணமாக அவர்கள் வலி தாங்க முடியாமல் அலற தொடங்கினர்.
சில பெண்கள் மயக்கம் அடைந்து விழுந்தனர்.இதையடுத்து உடனடியாக அருகில் இருந்தவர்கள் அனைவரையும் மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச் சம்பவம் தொடர்பாக வருவாய் துறையினர் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.திண்டிவனம் அரசு மருத்துவமனையில் போதிய படுக்கை வசதி இல்லாததால் படுக்கை கிடைக்காமல் காயமடைந்தவர்கள் அவதி அடைந்து வருகின்றனர். 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றிய 50-க்கும் மேற்பட்ட பெண்கள் விஷத்தேனீக்கள் கொட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- வீர தீர செயல்புரிந்த குழந்தைகள் பிரதம மந்திரி ராஷ்டிரிய பால் புரஸ்கார் விருது பெற விண்ணப்பிக்கலாம்.
- மத்திய அரசால் பதக்கம், சான்றிதழ், மற்றும் 1,00,000 ரொக்கப்பரிசுடன் வழங்கப்படுகிறது.
விழுப்புரம்:
புதிய கண்டுபிடிப்பு, கல்வி, விளையாட்டு, கலை மற்றும் பண்பாடு, சுற்றுச்சூழல், சமூகசேவை போன்ற துறைகளில் வீர தீர செயல்புரிந்த குழந்தைகள் பிரதம மந்திரி ராஷ்டிரிய பால் புரஸ்கார் விருது பெற விண்ணப்பிக்கலாம். மத்திய அரசின் மூலம் வழங்கப்படும் 2024-ம் ஆண்டிற்கான பிரதம மந்திரி ராஷ்டிரிய பால் புரஸ்கார் விருது பெற புதிய கண்டுபிடிப்பு, கல்வி, விளையாட்டு, கலை மற்றும் பண்பாடு, சுற்றுச்சூழல், சமூகசேவை போன்ற துறைகளில் வீர தீர செயல்புரிந்த குழந்தைகளுக்கு மத்திய அரசால் பதக்கம், சான்றிதழ், மற்றும் 1,00,000 ரொக்கப்பரிசுடன் வழங்கப்படுகிறது. எனவே தகுதியுள்ள 18 வயதிற்குட்பட்ட இந்திய குடிமகனாக இருக்கும் குழந்தைகள் இணையதளம் வாயிலாக ஆகஸ்ட் 31-ந்தேதி மாலைக்குள் ஆன்லைனில் பதிவு செய்திட மாவட்ட கலெக்டர் பழனி வெளியிட்டுள்்ள செய்தி க்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
- ஒழுங்குபடுத்துதல் தொடர்பான கூட்டம் கலெக்டர் பழனி தலைமையில் நேற்று நடைபெற்றது.
- பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது குறித்து விவாதிக்கப்பட்டது.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், விழுப்புரம் நகராட்சியில் பொதுக்கூட்டங்கள் நடத்துவது, பொது போக்கு வரத்தை ஒழுங்குபடுத்துதல் தொடர்பான கூட்டம் கலெக்டர் பழனி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், எம்.எல்.ஏ.க்கள் எம்.சக்கரபானி, அர்ஜுனன், மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் ஜெயச்சந்திரன், போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய், மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, உதவி ஆணையர் (கலால்) சிவா உட்பட அனைத்து கட்சி பிரதிநிதிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். விழுப்புரம் நகரத்தில் உள்ள பழைய பஸ் நிலையம் அருகில் அரசியல் கட்சியினர், ஊழியர் சங்கங்கள் மற்றும் பொதுநல அமைப்பினர்கள் பொது கூட்டங்கள், ஊர்வலங்கள், ஆர்பாட்டங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்துவதால், பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது குறித்து விவாதிக்கப்பட்டது. இதற்கு மாறாக மேற்படி நிகழ்ச்சிகளை நடத்திட உரிய இடத்தினை தெரிவு செய்வது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
இதில் விழுப்புரம் பழைய பஸ் நிலைய வளாகத்தில் மேற்படி நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்குவதில்லை எனவும், விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் நிகழ்ச்சிகளை நடத்திட அனுமதி வழங்கிட போலீஸ் துறைக்கு பரிந்துரை செய்யப்பட்டது. புதிய இடத்தில் மேற்படி நிகழ்ச்சிகளை நடத்துவதில் இடர்பாடுகள் ஏதேனும் ஏற்படின் அவற்றை களைவ தற்கான உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் கலெக்டர் பழனி உறுதியளித்தார்.
- கொலை வழக்காக மாற்ற உறவினர்கள் இன்று சாலை மறியல்
- அந்த பகுதி முழுவதும் பெரும் பரபரப்பாக உள்ளது.
விழுப்புரம்:
செஞ்சி அருகே உள்ள பரதன் தாங்கள் என்ற ஊரை சேர்ந்தவர் கன்னியப்பன். இவரது மகள் ஜனனி (வயது 16). ஆலம்பூண்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாலை பள்ளியிலிருந்து வீடு திரும்பியவர் மீண்டும் வெளியே சென்றவர் வெகு நேரமாகியும் வீட்டுக்கு திரும்பாததால் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். இந்நிலையில் மாணவி ஜனனி பள்ளி சீருடையுடன் ஏரியில் உள்ள பொதுக் கிணற்றில் பிணமாக மிதந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தகவல் அறிந்த பெற்றோர் சத்தியமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுத்ததின் பேரில் போலீசார் மற்றும் செஞ்சி தீயணைப்பு படையினர் விரைந்து வந்து கிணற்றில் மிதந்த மாணவியின் உடலை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதானைக்காக அனுப்பி வைத்தனர். மேற்படி மாணவி தானாக கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா அல்லது யாராவது கொலை செய்து கிணற்றில் வீசீனார்களா என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் இறந்த ஜனனியின் உறவினர்கள் இன்று காலை சுமார் 50-க்கும் மேற்பட்ேடார் செஞ்சி - திருவண்ணாமலை சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த சத்தியமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சாலை மறியல் குறித்து அவர்கள் கூறியதாவது:- பள்ளிக்கு சென்ற ஜனனி பள்ளி சீருடையுடன் கிணற்றில் பிணமாக மீட்ட வழக்கை ேபாலீசார் கொலை வழக்காக பதிவு செய்ய வேண்டும் என்று கூறி இந்த சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாத வண்ணம் போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் உள்ளனர். இதனால் அந்த பகுதி முழுவதும் பெரும் பரபரப்பாக உள்ளது.
- பிஸ்கெட் லோடு ஏற்றிக்கொண்டு ஈச்சர் லாரி சென்றது.
- டிரைவரின் கட்டுப்பாட்டைஇழந்த லாரி ரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
விழுப்புரம்:
புதுவையில் இருந்து பெங்களூருக்கு பிஸ்கெட் லோடு ஏற்றிக்கொண்டு ஈச்சர் லாரி சென்றது. லாரியை தர்மபுரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியைச் சேர்ந்த வீரமணி ஓட்டி வந்தார். திண்டிவனம் அடுத்த பட்டணம் அருகே வளைவில் வேகமாக திரும்பிய போது டிரைவரின் கட்டுப்பாட்டைஇழந்த லாரி ரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் டிரைவர் அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். இந்த விபத்தால் திண்டிவனம் காஞ்சிபுரம் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது உடனடியாக அக்கம் பக்கத்தினர் லாரியிலிருந்து டிரைவரை மீட்டனர். லாரியை கிரேன் உதவியுடன் அப்புறப்படுத்தினர். விபத்து குறித்து ரோசனை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஊஞ்சல் உற்சவத்தை முன்னிட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
- தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
மேல்மலையனூர்:
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது.
இங்கு ஒவ்வொரு மாதமும் அமாவாசை அன்று ஊஞ்சல் உற்சவம் நடந்து வருகிறது. நேற்று இரவு ஆடி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.
இதை முன்னிட்டு அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு கருவறையில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கும் சிவபெருமானுக்கும் பால், தயிர், சந்தனம், மஞ்சள், விபூதி, இளநீர், பஞ்சாமிர்தம், தேன், பன்னீர் உள்ளிட்ட பூஜைப் பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தங்க கவச அலங்காரத்தில் அருள்பாலித்தனர்.
உற்சவர் அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு பலவித மலர்களை கொண்டு மகா சர்வ ராஜ்ய தாயினி அலங்காரம் செய்யப்பட்டு உட்பிரகாரத்தில் காட்சி அளித்தார். இரவு 10.30 மணிக்கு மேளதாளம் முழங்க வடக்கு வாசல் வழியாக உற்சவர் அங்காள பரமேஸ்வரி அம்மன் ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளினார். அப்போது ஊஞ்சல் மண்டபம் எதிரில் இருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் அங்காளம்மா... அங்காளம்மா... என கரகோஷத்துடன தீபம் ஏற்றி அம்மனை வழிபட்டனர்.
தொடர்ந்து கோவில் பூசாரிகள் பக்திப் பாடல்களைப் பாடினர். இரவு 11.30 மணியளவில் தாலாட்டுப் பாடல்கள் பாடி அம்மனுக்கு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. பின்னர் பூக்கள் மற்றும் குங்குமத்தால் அர்ச்சனை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதையடுத்து உற்சவர் அங்காள பரமேஸ்வரி அம்மனை கோவில் மண்டபத்திற்கு கொண்டு சென்றனர். ஊஞ்சல் உற்சவத்தில் மாவட்ட கலெக்ட பழனி, திண்டிவனம் சப்-கலெக்டர் கட்டா ரவிதேஜா மற்றும் விழுப்புரம், கடலூர், சேலம், வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, ஆகிய மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் மேல்மலையனூர் ஜீவானந்தம், அறங்காவலர் குழுத்தலைவர் செந்தில்குமார், பூசாரி, அறங்காவலர்கள் தேவராஜ் பூசாரி, ராமலிங்கம் பூசாரி, செல்வம் பூசாரி, சரவணன் பூசாரி, வடிவேல் பூசாரி, சந்தானம் பூசாரி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
ஊஞ்சல் உற்சவத்தை முன்னிட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.






