search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திண்டிவனம் அருகே   திருமணமாகாத விரக்தியால் வாலிபர் தற்கொலை
    X

    திண்டிவனம் அருகே திருமணமாகாத விரக்தியால் வாலிபர் தற்கொலை

    • குடித்துவிட்டு வந்து வீட்டில் சண்டை போட்டு வந்ததாகவும் கூறப்பட்டது.
    • சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த கொள்ளார் கிராமத்தை சேர்ந்தவர் பாரத் (வயது 37). இவருக்கு திருமணம் நடைபெறவில்லை என கூறப்படுகிறது.இந்த நிலையில் அவர் அடிக்கடி குடித்துவிட்டு வந்து வீட்டில் சண்டை போட்டு வந்ததாகவும் கூறப்பட்டது. இன்று திடீரென திருமணம் ஆகாத விரக்தியால் பாரத் திடீரென வீட்டிலிருந்த மண்எண்ணை ஊற்றி தற்கொலை செய்து கொள்ள செய்ய முயன்று ள்ளார். பின்னர் படுங்காயம் அடைந்த நிலையில் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திண்டிவனம் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி த்தனர். திண்டிவனம் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.முண்டியம்பாக்கம் பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார். இது குறித்து ரோசனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் ஆகாத விரக்தியால் வாலிபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டு சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×