search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெண் குழந்தைகளின் நலனிற்காக பாடுபட்டவர்கள் தேசிய பெண் குழந்தை விருது பெற விண்ணப்பிக்கலாம் மாவட்ட கலெக்டர் அறிவிப்பு
    X

    பெண் குழந்தைகளின் நலனிற்காக பாடுபட்டவர்கள் தேசிய பெண் குழந்தை விருது பெற விண்ணப்பிக்கலாம் மாவட்ட கலெக்டர் அறிவிப்பு

    • விருதுக்கு ரூ.1 லட்சத்திற்கான காசோலை யும், பாராட்டு பத்திரமும் வழங்கி சிறப்பிக்கப்பட்டு வருகிறது.
    • பெண்க ளாலும் சாதிக்க முடியும் என்று சாதித்திருத்தல்.

    விழுப்புரம்:

    ஒவ்வொரு ஆண்டும் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கவும், அனைத்து பெண் குழந்தைகளும் 18 வயது வரை கல்வி பயில உறுதி செய்யவும், பெண் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்கவும், குழந்தை திருமணங்களைத் தடுக்கவும் பாடுபட்டு, வீர தீர செயல் புரிந்த 5 வயதிற்கு மேல் 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் தேசிய பெண் குழந்தை தினத்தில் (ஜனவரி 24) "தேசிய பெண் குழந்தை விருது" வழங்கப்பட்டு வருகிறது.

    இவ்விருதுக்கு ரூ.1 லட்சத்திற்கான காசோலை யும், பாராட்டு பத்திரமும் வழங்கி சிறப்பிக்கப்பட்டு வருகிறது. இவ்விருதுக்கு தகுதியுடையவர் தமிழ் நாட்டை பிறப்பிட மாகவும், விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 5 வயதிற்கு மேல் 18 வயதிற்குட்ட பெண் குழந்தையாக இருக்க வேண்டும். இவ்விருத்திற்கு தகுதிக ளான கீழ்கண்டவற்றில் வீர தீர செயல் புரிந்திருக்க வேண்டும், பிற பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவுதல், பெண் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண் குழந்தை திருமணத்தை தடுத்தல் மற்றும் தவிர்த்தல், வேறு ஏதாவது வகையில் சிறப்பான-தனித்துவமான செய்திருத்தல், சாதனை பெண்களுக்கு எதிரான சமூக அவலங்கள், மூட நம்பிக்கைகள் ஆகிய வற்றிற்கு தீர்வு காண்ப தற்கு ஓவியங்கள், கவிதைகள் மற்றும் கட்டுரைகள் மூல மாகவோ விழிப்பு ணர்வை எற்படுத்தியிருத்தல், ஆண்கள் மட்டுமே சாதிக்க முடியும் என்ப தை போன்ற செயல்களை பெண்க ளாலும் சாதிக்க முடியும் என்று சாதித்திருத்தல்.

    விருதுக்கான விண்ணப் பங்களை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலு வலர், மாவட்ட திட்ட அலுவலர், காவல்துறை, தொண்டு நிறுவனங்கள் உட்பட்ட சம்பந்தப்பட்ட அலுவலர்கள் வாயிலாக உரிய முன்மொழி களுடன் மாவட்ட சமூகநல அலு வலரிடம் சமர்ப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பங்கள் மாவட்ட கலெக்டர் பரிந்துரையுடன் சமூகநல ஆணையரகத்துக்கு பரிசீ லனைக்கு அனுப்பி வைக்க ப்படும். மாவட்டங்களி லிருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் மாநில அளவில் தேர்வுகுழு மூலம் பரிசீலனை செய்யப்ப ட்டு அனைத்து தகுதிகள் பெற்ற பெண் குழந்தை தேர்வு செய்யப்பட்டு வரும் ஜனவரி 24-ந் தேதி மாநில விருது வழங்கப்படும்.

    இவ்விருதிற்கான விண்ணப்பங்கள் மாவட்ட கலெக்டர் வளாகத்தில் செயல்படும் அறை எண்.26 மாவட்ட சமூக நல அலு வலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பம் சமர்பிக்க இறுதி நாள் 20.11.2023 ஆகும். இறுதி நாளிற்குப் பிறகு பெறப் படும் விண்ணப்பங்கள் ஏற்று கொள்ளப்பட மாட்டாது என மாவட்ட கலெக்டர் டாக்டர் பழனி தெரி வித்துள்ளார்.

    Next Story
    ×