என் மலர்
விழுப்புரம்
- முதிர்வடைந்து அந்த வங்கியின் மூலம் 23 ஆயிரத்து 645 ரூபாய்க்கான காசோலை தபால் மூலம் அனுப்பி உள்ளனர்.
- உங்கள் அனைத்து ஆவணங்களையும் ஏ.டி.எம்.கார்டையும் எடுத்து வரச்சொல்லி இருக்கிறார்.
விழுப்புரம்:
மேல்மலையனூர் அருகே சிறுதலைப் பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் தேவராஜ் (வயது 50) விவசாயி. இவர் தன் மனைவி சாரதா பெயரில் தனியார் நிறுவனத்தில் இன்சூரன்ஸ் கட்டி உள்ளார். இது 6.7.2018 அன்று முதிர்வடைந்து அந்த வங்கியின் மூலம் 23 ஆயிரத்து 645 ரூபாய்க்கான காசோலை தபால் மூலம் அனுப்பி உள்ளனர். இதை தெரிந்து தெரிந்து கொண்ட சிறுதலைப் பூண்டி தபால்காரர் விஜயன், அதை அபகரிக்க நினைத்து சென்னைக்கு சென்றிருந்த தேவராஜை போன் மூலம் தொடர்பு கொண்டு மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தின் மூலம் சமையல் கியாஸ் வந்துள்ளதால் உங்கள் அனைத்து ஆவணங்களையும் ஏ.டி.எம்.கார்டையும் எடுத்து வரச்சொல்லி இருக்கிறார்.
இதை நம்பிய தேவராஜ் தன் மனைவி சாரதா மூலம் அனைத்தையும் கொடுக்கச் சொல்லி இருக்கிறார்.பின்பு ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி 23 ஆயிரத்து 645 ரூபாயையும் விஜயன் எடுத்துவிட்டார். இது குறித்து தேவராஜ் பலமுறை கேட்டும் விஜயன் தரமறுத்திருக்கிறார். இதுகுறித்து தேவராஜ் வளத்தி போலீஸ் நிலையத்தில் தபால்காரர் விஜயன் மீது நடவடிக்கை எடுக்குமாறு புகார் அளித்துள்ளார். இதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விழுப்புரம் மாவட்ட விளையாட்டு மைதானத்தில், கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.
- சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அமைச்சர் பொன்முடி விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்து கபடி வீரர்களுடன் கபடி விளையாடினார்.
விழுப்புரம்:
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் விழுப்புரம் மாவட்ட விளையாட்டு மைதானத்தில், கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.
விழாவிற்கு விழுப்புரம் கலெக்டர் பழனி தலைமை தாங்கினார். விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ., புகழேந்தி முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அமைச்சர் பொன்முடி விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்து கபடி வீரர்களுடன் கபடி விளையாடினார்.
இதில் மாவட்ட விளையாட்டு அலுவலர் வேல்முருகன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ஹரிதாஸ் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
- தென்நெற்குணம் பகுதி யைச் சேர்ந்த சேகர்திண்டிவனம் நோக்கி அதே வழியாக வந்து கொண்டிருந்தார்.
- இந்த பகுதியில் தொடர்ந்து விபத்துக்கள் நடந்த வண்ணம் உள்ளன.
விழுப்புரம்:
திண்டிவனம் அருகே எண்டியூர் பகுதியை சேர்ந்த வர் அய்யனார் (வய32) இவரது நண்பர் லோகப்பி ரியன் (29) இவர்கள்2 பேரும் மோட்டார் சைக்கி ளில் எண்டியூர் கிரா மத்தில் இருந்து திண்டி வனம் நோக்கி வந்து கொண்டி ருந்தனர். அதே போல் தென்நெற்குணம் பகுதி யைச் சேர்ந்த சேகர் (60) திண்டிவனம் நோக்கி அதே வழியாக வந்து கொண்டிருந்தார். அப்பொழுது திண்டி வனத்தில் இருந்து மரக்கா ணம் சென்ற கார் இவர்கள் 3 பேர் மீதும் மோதி விபத்துக்குள்ளானது.விபத்து ஏற்படுத்தி விட்டு டிரைவர் காரை ரோட்டில் நிறுத்திவிட்டு தப்பி சென்று விட்டார்.
இதில் அய்யனார் மற்றும் லோகப்பிரியன் ஆகிய 2 பேரும் படுகாயங்களுடன் திண்டிவனம் அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைக் கப்பட்டு மேல் சிகிச்சைக் காக முண்டியம்பாக்கம் மருத்துவ மனை மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சேகர் திண்டிவனம் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து அறிந்த அந்த பகுதி பொதுமக்கள் திண்டிவனம்- மரக்காணம் சாலையில் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். சாலை மறியலில் ஈடுபட முயன்ற பொது மக்களிடம் பிரம்ம தேசம் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர்.
இது குறித்து பொதுமக்கள் கூறும் போது, இந்த பகுதியில் தொடர்ந்து விபத்துக்கள் நடந்த வண்ணம் உள்ளன. இந்த பகுதியில் அதிக அளவில் கிரஷர்கள் உள்ளதால் லோடு லாரிகளும் மற்றும் டீசல் எடுத்துக்கொண்டு கார்களும் அதிக வேகமாக சென்று வருகிறது. இதனால் விபத்து நடந்த பகுதியில் ஹமாஸ் விளக்கு அமைக்க வேண்டும் . இந்த பகுதியில் சாலை அகலப் படுத்தும் பணி மந்தமாக நடைபெற்று வருகிறது. உடனடியாக சாலை அகலப்படுத்தும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்.விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பிச்சென்ற கார் டிரைவரை கைது செய்ய வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்தனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் விபத்து ஏற்படுத்திய காரை அங்கிருந்து எடுக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- நேற்று பகலில் இவரது வீட்டு பின்பக்கத் தோட்டத்தில் மலைப்பாம்பு வந்ததை கண்டு அலறியடித்து ஓடி வந்தார்
- சுமார் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை பிடித்து செஞ்சி காப்பு காட்டில் விட்டனர்.
விழுப்புரம்:
செஞ்சியை அடுத்த சின்ன பொன்னம்பூண்டி யை சேர்ந்தவர் ராமசாமி. விவசாயி. நேற்று பகலில் இவரது வீட்டு பின்பக்கத் தோட்டத்தில் மலைப்பாம்பு வந்ததை கண்டு அலறியடித்து ஓடி வந்தார். அதை பொதுமக்களுக்கு தெரிவிக்க பொதுமக்கள் செஞ்சி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் ராதாகிருஷ்ணன் தலைமையிலான தீயணைப்புபடை வீரர்கள் விரைந்து சென்று ராமசாமி யின் வீட்டுத் தோட்டத்தில் இருந்த சுமார் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை பிடித்து செஞ்சி காப்பு காட்டில் விட்டனர்.
- ஸ்ரீராம் கடந்த 23-ந்தேதி துலக்கம்பட்டில் உள்ள பாட்டி வீட்டிற்கு சென்றார்.
- போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.
விழுப்புரம்:
உளுந்தூர்பேட்ட வட்டம் கீழ்குப்பம்வேலூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வம் மகன் ஸ்ரீராம் (வயது 15). அதே ஊரில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் கடந்த 23-ந்தேதி துலக்கம்பட்டில் உள்ள பாட்டி வீட்டிற்கு சென்றார். அங்கு இரவு படுத்து உறங்கியபோது, ஸ்ரீராமை பாம்பு கடித்துள்ளது. இதில் அலறி துடித்த மாணவனை, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்நிலையில் மாணவன் ஸ்ரீராம் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் திருவெண்ணைநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார். பாம்பு கடித்து மாணவன் பலியான சம்பவம் கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- அரசு பஸ்சில் படிக்கட்டில் தொங்கிக் கொண்டு வந்து அட்டகாசத்தில் ஈடுபடுவதாக ரோஷனை இன்ஸ்பெக்டர் அன்னகொடிக்கு தகவல் வந்தது.
- உறுதி மொழி எடுக்கச் சொல்லி இன்ஸ்பெக்டர் நூதன முறையில் தண்டனை வழங்கினார்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் திண்டி வனம் மேல் பேட்டை பகுதியில் இருந்து திண்டி வனத்திற்கு அரசு பஸ்சில் படிக்கட்டில் தொங்கிக் கொண்டு வந்து அட்டகா சத்தில் ஈடுபடுவதாக ரோஷ னை இன்ஸ்பெக்டர் அன்ன கொடிக்கு தகவல் வந்தது.
இதையடுத்து அங்கு சென்ற ரோசனை இன்ஸ்பெக்டர் படிக்கட்டில் தொங்கிகொண்டு வந்த மாணவர்களை கீழே இறங்க சொல்லி இனி நாங்கள் படிக்கட்டில் தொங்க மாட்டோம் எனவும், படிக் கட்டில் தொங்கி அட்டகா சத்தில் ஈடுபட மாட்டோம் என உறுதி மொழி எடுக்கச் சொல்லி இன்ஸ்பெக்டர் நூதன முறையில் தண்டனை வழங்கினார். இனி இது போல் ெதாங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இன்ஸ்பெக்டர் தெரிவித்தார்.
- ஓட்டலில் இருந்து புறப்பட்ட இளங்கோவன், ஓட்டல் உரிமையாளரிடம் ரூ.200 முன்பணமாக வாங்கி சென்றார்.
- ஆம்புலன்ஸ் ஊழியர்கள் இளங்கோவனை பரிசோதித்து, அவர் இறந்து விட்டதை உறுதி செய்தனர்.
விழுப்புரம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதிைய சேர்ந்தவர் இளங்கோவன் (வயது 45). இவர் விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகேயுள்ள திருச்சிற்றம்பலம் கூட்ரோடு பகுதியில் தங்கி, தனியார் ஓட்டலில் பணி செய்து வந்தார். நேற்று இரவு வேலையை முடித்துவிட்டு ஓட்டலில் இருந்து புறப்பட்ட இளங்கோவன், ஓட்டல் உரிமையாளரிடம் ரூ.200 முன்பணமாக வாங்கி சென்றார். அங்கிருந்து டாஸ்மாக் மதுபானக் கடைக்கு சென்ற அவர், மதுபானத்தை வாங்கி குடித்துள்ளார். பின்னர், வீட்டிற்கு சென்ற அவர் உறங்கிவிட்டார். இன்று காலை நெடுநேரமாகியும் அவர், வீட்டை விட்டு வெளியில் வரவில்லை. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் உள்ளே சென்று பார்த்தபோது, இளங்கோவன் மூச்சு பேச்சின்றி கிடந்தார்.
இது குறித்த தகவலின் பேரில் ஆரோவில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. ஆம்புலன்ஸ் ஊழியர்கள் இளங்கோவனை பரிசோதித்து, அவர் இறந்து விட்டதை உறுதி செய்தனர். இதையடுத்து இளங்கோவன் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக, புதுவை மாநிலம் கனகசெட்டிக்குளத்தில் உள்ள பிம்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மர்மமான முறையில் இறந்து போன இளங்கோ வன், மதுவில் விஷம் கலந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது போலி மதுபானம் குடித்ததால் இறந்து போனாரா? என்பது குறித்து ஆரோவில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பார்த்திபனும் பிளம்பர் வேலை செய்து வருகின்றனர்.
- முண்டியம்பாக்கம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த சத்தியமங்கலம் பகுதியை சேர்ந்தவர் தேவா (வயது 19). இவரும் இவரது நண்பர் பார்த்திபனும் பிளம்பர் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் 2 பேரும் வேலையை முடித்துவிட்டு புதுவையில் இருந்து செஞ்சி நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்பொழுது விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மரக்காணம் சாலையில் வரும்போது முன்னாள் சென்ற லாரி மீது இவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் தேவா படு காயங்களுடன் திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மேலும் அவருடன் வந்த பார்த்திபன் சிறு காயங்களுடன் திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் லாரியை நடுரோட்டில் விட்டுவிட்டு டிரைவர் தப்பிச் சென்றதால் நடுரோட்டில் நின்ற லாரியால் சென்னை-புதுவை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் அரை மணி நேரம் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. திண்டிவனம் போலீசார் போக்குவரத்தை சரி செய்து விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ரெயில் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது.
- ரெயில்வே போலீசார் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் குவிக்கப்பட்டனர்.
விழுப்புரம்:
நெல்லை ரெயில் நிலையத்திலிருந்து நேற்று வந்தே பாரத் ரெயில் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த ரெயிலில் அரியலூரில் இருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மற்றும் பாரதீய ஜனதா எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் ஆகியோரும் தனித்தனியே அமர்ந்து வந்தனர். இந்த ரெயிலை வரவேற்க விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் ெரயில் நிலை யத்தில் பா.ஜ.க.வினர் மற்றும் விடுதலை சிறுத்தை கள் கட்சியினர் ஒரே நேரத்தில் குவிந்ததால், திண்டிவனம் போலீசார் மற்றும் ரெயில்வே போலீ சார் சுமார் 100-க்கும் மேற் பட்டோர் குவிக்கப்பட்டனர்.
இதில் விழுப்புரம் எம்.பி. துரை. ரவிக்குமார், பா.ஜ.க.மாவட்ட தலைவர் ராஜேந்திரன்,பா.ஜ.க. மாநில வர்த்தக அணி நிர்வாகி தரம் குழுமம் சின்ராஜ், பா.ஜ.க. நகரத் தலைவர் வெங்கடேச பெருமாள்,மாவட்ட பொது செயலாளர் எத்திராஜ், மாநில நிர்வாகி வக்கீல் பாலசுப்ரமணியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.முன்னதாக பா.ஜ.க.வினர் பொது மக்களுக்கு இனிப்பு கள் வழங்கி கொண்டாடினர். மேலும் ராகபைரவி கலைக் கூடத்தின் கலை நிகழ்ச்சியும் திண்டிவனம் ரயில்வே நிலையத்தில் நடைபெற்றது. வந்தே பாரத் ரெயில் முன் நின்று பொது மக்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
- பணத்தை செலுத்தவும் ஏ.டி.எம்.எந்திரங்கள்உள்ளன.
- போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நேரு வீதியில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா என்ற வங்கி இயங்கி வருகிறது. இந்த வங்கி அருகே அதே வங்கியில் பணம் எடுக்கவும் பணத்தை செலுத்தவும் ஏ.டி.எம்.எந்திரங்கள்உள்ளன. இந்த நிலையில் நேற்று இரவு ஏ.டி.எம்.எந்திரத்தில் சாவி இருந்ததை கண்டு ஏ.டி.எம்.- க்கு வந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் அங்கு வந்து சாவியை போலீஸ் நிலையம் எடுத்துச் சென்றனர். கொள்ளையர்கள் யாரேனும் ஏ.டி.எம். எந்திரத்தில் சாவியை வைத்து அதில் இருக்கும் பணத்தை கொள்ளையடிக்க முயற்சி செய்தார்களா, அல்லது ஏ.டி.எம்.எந்திரத்தில் பணத்தை வைத்துவிட்டு சாவியை அங்கேயே ஊழியர்கள் விட்டு சென்றார்களா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
- குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக வாதிட இந்திய பிரதிநிதியான அனைவருக்கும் உரிமை உள்ளது.
- மனு மீதான விசாரணை கடந்த வாரம் நீதிபதி பூர்ணிமா முன்னிலையில் நடந்தது.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள பூத்துறை கிராமத்தில் செம்மண் குவாரி உள்ளது. இங்கு அளவுக்கு அதிகமாக மண் எடுத்து அரசுக்கு 24 கோடி ரூபாய் இழப்பீடு ஏற்படுத்தியதாக அப்போது கனிம வளத்துறை அமைச்சராக இருந்த பொன்முடி மீது அப்போதைய வானூர் தாசில்தாராக இருந்த குமாரபாலன் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.
இதனை தொடர்ந்து அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதமசிகாமணி எம்.பி. உள்ளிட்ட 8 பேர் மீது கடந்த 2017-ல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இவ்வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. விசாரணையின்போது சில சாட்சிகள் பிறள் சாட்சிகளாக மாறினர்.
இந்த வழக்கில் விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், வக்கீல் சீனிவாசன் மூலமாக மனுதாக்கல் செய்துள்ளார்.
அதில், அரசு தரப்புக்கு உதவியாக விசாரணைக்கு எங்களையும் அனுமதிக்க வேண்டும். குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக வாதிட இந்திய பிரதிநிதியான அனைவருக்கும் உரிமை உள்ளது. இதுபோன்ற வழக்குகளில் வேறு மாநிலங்களில் மனுதாக்கல் செய்து விசாரணை நடந்து வருகிறது என குறிப்பிட்டு இருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை கடந்த வாரம் நீதிபதி பூர்ணிமா முன்னிலையில் நடந்தது. அப்போது, மனுவை விசாரணைக்கு ஏற்பதாக அறிவித்த நீதிபதி, இன்று (திங்கட்கிழமை) ஜெயக்குமார் நேரில் ஆஜராகும்படி உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து விழுப்புரம் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று காலை ஆஜரானார்.
முன்னதாக அவர் விழுப்புரத்தில் உள்ள அ.தி.மு.க. அலுவலகத்திற்கு சென்றார். அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
- மக்கள் குடியேறி வருவதால் விழுப்புரம் நகரில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
- இதற்கு வாகன ஓட்டிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்
விழுப்புரம்:
விழுப்புரம் மற்றும் அதனை சுற்றியுள்ள விரிவாக்கப் பகுதிகளில் மக்கள் குடியேறி வருவதால் விழுப்புரம் நகரில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக விழுப்புரம் - புதுவை சிக்னலில் இருந்து கம்பன் நகர் வரை போக்குவரத்து நெரிசல் அதிகளவில் ஏற்பட்டு வந்தது. இந்த சாலையின் நடுவில் வைக்கப்பட்ட ரிப்லெக்ஸ் தடுப்பு கட்டை சேதமடைந்ததால், போக்குவரத்து நெரிசல் அதிகமானது. இதையடுத்து விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் வசந்த் மற்றும் போலீசார், புதிய இரும்பினால் ஆன தடுப்புகளை அமைக்கும் பணிகளை தொடங்கியுள்ளனர். இதற்கு வாகன ஓட்டிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.






