search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "In Dindivan"

    • மகளின் வீட்டிற்கு சென்றார்.
    • சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையை கடந்தார்.

    விழுப்புரம்:

    திண்டிவனம் அடுத்த பெரமண்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுசிலா (வயது 62). இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மயிலம் அருகே உள்ள தென்பசாரில் உள்ள அவரது மகளின் இல்லத்திற்கு சென்றார். இந்நிலையில் இன்று பெர மண்டூருக்கு வருவதற்காக தென் பசாரில் உள்ள சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையை கடந்தார்.

    அப்போது விழுப்புரத்தி லிருந்து சென்னை நோக்கி சென்ற கார் மூதாட்டி மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சுசிலா பலத்த காயமடைந்து சம்பவ இடத்தில் பலியானார். இந்நிலையில் சுசிலா மீது மோதிய காரை, அங்கேயே நிறுத்திவிட்டு டிரைவர் தப்பியோடிவிட்டார்.

    இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்க்கு வந்த மயிலம் போலீசார் மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து ஏற்படுத்திய காரை பறிமுதல் செய்த போலீசார், அதன் உரிமையாளர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×