search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "old lady Bali"

    • மகளின் வீட்டிற்கு சென்றார்.
    • சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையை கடந்தார்.

    விழுப்புரம்:

    திண்டிவனம் அடுத்த பெரமண்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுசிலா (வயது 62). இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மயிலம் அருகே உள்ள தென்பசாரில் உள்ள அவரது மகளின் இல்லத்திற்கு சென்றார். இந்நிலையில் இன்று பெர மண்டூருக்கு வருவதற்காக தென் பசாரில் உள்ள சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையை கடந்தார்.

    அப்போது விழுப்புரத்தி லிருந்து சென்னை நோக்கி சென்ற கார் மூதாட்டி மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சுசிலா பலத்த காயமடைந்து சம்பவ இடத்தில் பலியானார். இந்நிலையில் சுசிலா மீது மோதிய காரை, அங்கேயே நிறுத்திவிட்டு டிரைவர் தப்பியோடிவிட்டார்.

    இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்க்கு வந்த மயிலம் போலீசார் மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து ஏற்படுத்திய காரை பறிமுதல் செய்த போலீசார், அதன் உரிமையாளர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நடராஜன். இவரது மனைவி உண்ணாமலை (65). இவர் நேற்று மதியம் சூரமங்கலம் உழவர் சந்தை அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
    • அப்போது அந்த வழியாக வந்த ஒரு மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.

    சேலம்:

    சேலம் சூரமங்கலம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நடராஜன். இவரது மனைவி உண்ணாமலை (65). இவர் நேற்று மதியம் சூரமங்கலம் உழவர் சந்தை அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் கீழே விழுந்த உண்ணாமலைக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று இரவு உண்ணாமலை பரிதாபமாக இறந்தார். இது குறித்து சூரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சுசீலா (வயது 63). கூலித்தொழிலாளி மணியனூர் பகுதிக்கு, ஒரு வயலில் நிலக்கடலை அறுவடை வேலைக்காக வந்திருந்தார்.
    • அப்போது திருச்செங்கோட்டில் இருந்து பரமத்திவேலூர் நோக்கி அதிவேகமாக வந்த லாரி சுசீலா மீது மோதியது.

    பரமத்திவேலூர்:

    கரூர் மாவட்டம் பாகநத்தம் செல்வநகர் காலனி பகுதியை சேர்ந்தவர் ராசு. இவரது மனைவி சுசீலா (வயது 63). கூலித்தொழிலாளி. இவர் நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா மணியனூர் பகுதிக்கு, ஒரு வயலில் நிலக்கடலை அறுவடை வேலைக்காக வந்திருந்தார்.

    அப்போது உலகபாளையம் பஸ் நிறுத்தம் எதிரில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு தண்ணீர் பிடிக்க சென்றார். பின்னர் மீண்டும் திருச்செங்கோடு -பரமத்தி வேலூர் சாலையை கடந்தார். அப்போது திருச்செங்கோட்டில் இருந்து பரமத்திவேலூர் நோக்கி அதிவேகமாக வந்த லாரி சுசீலா மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழியிலேயே சுசீலா பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து சுசீலாவின் மகன் பிரகாஷ்(42) நல்லூர் போலீசில் அளித்த புகாரின் பேரில், லாரியை அதிவேகமாக ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்திய திருச்சி மாவட்டம் துறையூர் அருகே சித்திரப்பட்டி பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணி மகன் சக்திவேல் (33) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் லாரியை பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாணிக்கநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேல். கூலி தொழிலாளி. இவரது மனைவி செல்லம்மாள் (வயது 63).
    • கபிலர்மலையிலிருந்து பரமத்தி நோக்கி அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள், செல்லம்மாள் மீது மோதியது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, பரமத்தி அருகே உள்ள மாணிக்கநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேல். கூலி தொழிலாளி. இவரது மனைவி செல்லம்மாள் (வயது 63).

    இவர் நேற்று அப்பகு தியில் உள்ள தென்னை மட்டைகளை சேகரித்து தலையில் வைத்துக் கொண்டு, பரமத்தியில் இருந்து கபிலர்மலை செல்லும் வழியில், மாணிக்க நத்தம் பிரிவு சாலையை கடக்க முயன்றுள்ளார்.

    அப்போது கபிலர்மலையிலிருந்து பரமத்தி நோக்கி அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள், செல்லம்மாள் மீது மோதியது. இதில் செல்லம்மாள் பலத்த காயமடைந்தார்.

    அவரை அவ்வழியாக வந்தவர்கள் காப்பாற்றி, வேலூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்த னர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் செல்லம்மாள் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து பரமத்தி போலீ சில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, செல்லம்மாள் மீது மோதி விபத்து ஏற்படுத்தி விட்டு

    தப்பியோடிய மோட்டார் சைக்கிள் ஓட்டுனரை தீவிர மாக தேடி வருகின்றனர்.

    ×