search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி பலி
    X

    மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி பலி

    • மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நடராஜன். இவரது மனைவி உண்ணாமலை (65). இவர் நேற்று மதியம் சூரமங்கலம் உழவர் சந்தை அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
    • அப்போது அந்த வழியாக வந்த ஒரு மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.

    சேலம்:

    சேலம் சூரமங்கலம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நடராஜன். இவரது மனைவி உண்ணாமலை (65). இவர் நேற்று மதியம் சூரமங்கலம் உழவர் சந்தை அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் கீழே விழுந்த உண்ணாமலைக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று இரவு உண்ணாமலை பரிதாபமாக இறந்தார். இது குறித்து சூரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×