search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வானூர் அருகே வாகன சோதனையில் 1 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் பறிமுதல்
    X

    மதுபாட்டில்களை கடத்தி வந்த மல்லி, ராம்மோகன்.

    வானூர் அருகே வாகன சோதனையில் 1 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் பறிமுதல்

    • போலீசார் நேற்று தீவிர சோதனை நடத்தி வந்தனர்.
    • தீவிர சோதனை

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் கிளியனூர் சோதனை சாவடியில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையிலான போலீசார் நேற்று தீவிர சோதனை நடத்தி வந்தனர். அப்போது அந்த வழியாக சொகுசு கார் ஒன்று வந்தது. அந்த காரை போலீசார் மடக்கி சோதனை செய்தனர்.

    அதில் சுமார் 1 லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்கள் பெட்டி பெட்டியாக கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து இந்த மது பாட்டில்களை கடத்தி வந்த ஆந்திர மாநிலம் கடப்பா பகுதியை சேர்ந்த மல்லி (வயது 35), இவரது நண்பர் ராம்மோகன் (45) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் போலீசார் சொகுசு கார் மற்றும் மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×