என் மலர்
திருவள்ளூர்
- விஜயின் பிரசார கூட்டத்திற்கு மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
- கூடும் கூட்டம் வாக்காக மாறாது என அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் தாடி பாலாஜி திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் உள்ள குமார சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார். பின்னர் அவர் கூறியதாவது:-
த.வெ.க. தலைவரும், நண்பருமான விஜயின் சுற்றுப் பயணம் வெற்றியடைய சாமி தரிசனம் செய்தேன். மக்கள் தீர்ப்பு மகேசன் தீர்ப்பு. வரும் கூட்டம் வாக்காக மாறும். நிச்சயமாக மாறும்.
இவ்வாறு தாடி பாலாஜி தெரிவித்தார்.
தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ளார். சனிக்கிழமை தோறும் இரண்டு மாவட்டங்களில் முக்கிய இடங்களில் தேர்தல் பிரசாரம் செய்கிறார். அவரது பிரசார கூட்டத்திற்கு மக்கள் அதிக அளவு திரண்டு வருகிறார்கள்.
இது மற்ற கட்சிகளுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. இருந்தபோதிலும், பிரசாரத்திற்கு கூடும் கூட்டம் வாக்காக மாறாது எனத் தெரிவித்து வருகின்றனர்.
இது சும்மா கூட்டம், இந்த கூட்டம் வாக்காக மாறாதமே எனக் கூறுகிறார்கள். இது உண்மையா? என திருவாரூரில் நடைபெற்ற கூட்டத்தின்போது தொண்டர்களை நோக்கி கேள்வி எழுப்பினார். அதற்கு தொண்டர்கள் உண்மையில்லை. வாக்காக மாறும் என குரல் எழுப்பினர்.
- மின் வாரிய ஊழியர்கள் விரைந்து வந்து டிரான்ஸ்பார்மர் மாயமான மினகம்பத்தை பார்வையிட்டனர்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து டிரான்ஸ்பார்ரை திருடிய கும்பல் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த குன்னவளம் கிராமத்தில் உள்ள வயல்வெளி அருகே மின்கம்பத்தில் டிரான்ஸ் பார்மர் புதிதாக அமைக்கப்பட்டு இருந்தது.
நேற்று இரவு வந்த மர்ம நபர்கள் மின் இணைப்பு துண்டித்து மின்கம்பத்தில் இருந்த டிரான்ஸ்பார்மரை தனியாக கழற்றி திருடி சென்றனர்.
சிறிது தூரத்தில் டிரான்ஸ்பார்மரின் மேல் பகுதியை வீசிவிட்டு அதில் இருந்த செம்புகம்பிகள் அனைத்தையும் தூக்கி சென்று விட்டனர்.
இன்று காலை அப்பகுதி மக்கள் வந்தபோது டிரான்ஸ்பார்மர் திருடு போய் இருந்ததும் அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மின் வாரிய ஊழியர்கள் விரைந்து வந்து டிரான்ஸ்பார்மர் மாயமான மினகம்பத்தை பார்வையிட்டனர்.
அங்கு புதிய டிரான்ஸ்பார்மர் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் டிரான்பார்மர் திருடு சம்பந்தபமாக மின்வாரிய அதிகாரிகள் திருவள்ளூர் தாலுக்காபோலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து டிரான்ஸ்பார்ரை திருடிய கும்பல் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- மலைக்கோவில் சாலையை சீரமைக்க கோவில் நிர்வாகம் சார்பில் ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
- ஏராளமான பக்தர்கள் படிக்கட்டு வழியாக நடந்து செல்கிறார்கள்.
திருத்தணி:
திருத்தணி முருகன் கோவிலுக்கு தினமும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கிறார்கள்.
பெரும்பாலான பக்தர்கள் மலைக்கோவிலுக்கு கார், பஸ், வேன், ஆட்டோ மற்றும் மோட்டார் சைக்கிள் மூலம் செல்வது வழக்கம். வாகனங்கள் மலைக்கோவிலுக்கு சென்று வருவதற்கு கோவில் நிர்வாகம் சார்பில், திருத்தணி -அரக்கோணம் சாலையில் இருந்து மலைப்பாதை உள்ளது.
இந்த ஒரே பாதையில் அனைத்து வாகனங்களும் மலைக்கோவிலுக்கு சென்று வருவதால் கடந்தசில மாதங்களாக சாலை சேதமடைந்து காணப்பட்டது. இதனை சரிசெய்ய வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில் மலைக்கோவில் சாலையை சீரமைக்க கோவில் நிர்வாகம் சார்பில் ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து மலைக்கோவில் பாதையில் சாலை அமைக்கும் பணி இன்று தொடங்கியது. நெடுஞ்சாலைத் துறை மூலம் நடைபெறும் இந்த பணி நாளை வரை நடக்கிறது.
இதனால் மலைக் கோவிலுக்கு வாகனங்கள் செல்ல இன்றும், நாளையும் என 2 நாட்கள் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
கோவில் சார்பில் இயக்கப்படும் பஸ்கள் மூலம் மட்டும் பக்தர்கள் மலைக்கோவிலுக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள்.
இதனால் கோவில் பஸ்சில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. ஏராளமான பக்தர்கள் படிக்கட்டு வழியாக நடந்து செல்கிறார்கள். நாளை (செவ்வாய்க்கிழமை) மலைக்கோவிலுக்கு மோட்டார் சைக்கிள்கள் மட்டும் அனுமதிக்கப்படும் என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
பக்தர்கள் வசதிக்காக 4 பஸ்கள் மட்டும் மலைக்கோவிலுக்கு இயக்கப்படுகிறது. பிற எந்தவித வாகனங்களுக்கும் மலைப்பாதையில் செல்வதற்கு இன்றும் நாளையும் அனுமதி இல்லை என்று கோவில் நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர்.
- ரெயில் அத்திப்பட்டு ரெயில் நிலையத்திற்குள் நுழைந்தபோது மாடு ஒன்று சிக்கியதால் ரெயில் நிறுத்தம்.
- ரெயிலில் சிக்கிய மாட்டை அப்புறப்படுத்தும் பணியில் ரெயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம், அத்திப்பட்டு ரெயில் நிலையத்தில் புறநகர் ரெயிலில் மாடு சிக்கியதால் சென்னை- கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் புறநகர் ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை நோக்கி சென்ற ரெயில் அத்திப்பட்டு ரெயில் நிலையத்திற்குள் நுழைந்தபோது மாடு ஒன்று சிக்கியதால் ரெயில் நிறுத்தப்பட்டுள்ளது.
ரெயிலில் சிக்கிய மாட்டை அப்புறப்படுத்தும் பணியில் ரெயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை நோக்கி செல்லும் ரெயில்கள் ஆங்காங்கே ஒன்றன் பின் ஒன்றாக நிறுத்தப்பட்டுள்ளதால் ரெயில் பயணிகள் அவதிப்பட்டுள்ளனர்.
- திருவள்ளூரில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார்.
- சசிகாந்த் செந்தில் சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டிற்கு கல்வி நிதி வழங்காத மத்திய அரசை கண்டித்து திருவள்ளூர் எம்.பி சசிகாந்த் செந்தில் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் நேற்று முன்தினம் திருவள்ளூரில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார்.
தொடர்ந்து நேற்று 2-வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் அவர் ஈடுபட்டு வந்தார்.
காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்ட திருவள்ளூர் எம்.பி. சசிகாந்த் செந்திலுக்கு ரத்த அழுத்தம் அதிகரித்ததால் நேற்று அம்மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், சசிகாந்த் செந்தில் சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சசிகாந்த் செந்திலின் இதய துடிப்பில் மாற்றம் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மூன்றாவது நாளாக உண்ணாவிரதத்தை தொடர்ந்து வரும் நிலையில் சென்னை மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தற்போது சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சசிகாந்த் செந்தில் சிகிச்சை பெற்று வருகிறார்.
- திருவள்ளூரில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார்.
- இன்று 2 ஆவது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் அவர் ஈடுபட்டு வந்தார்.
தமிழ்நாட்டிற்கு கல்வி நிதி வழங்காத மத்திய அரசை கண்டித்து திருவள்ளூர் எம்.பி சசிகாந்த் செந்தில் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் நேற்று திருவள்ளூரில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார்.
தொடர்ந்து இன்று 2 ஆவது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் அவர் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில், காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்ட திருவள்ளூர் எம்.பி. சசிகாந்த் செந்திலுக்கு ரத்த அழுத்தம் அதிகரித்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- மாநாட்டில் கட்சி நிர்வாகிகள், பொது மக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- சுற்றுச்சூழல் உறுதிமொழியை வெளியிட்டார்.
திருத்தணி:
நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை சார்பில் மரங்களோடு பேசுவோம், மரங்களுக்காகப் பேசுவோம் என்ற தலைப்பில் திருத்தணி அருகே அருங்குளம் கிராமத்தில் மரங்களின் மாநாடு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. சமீபத்தில் மாநாடு நடைபெறும் இடத்தை நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் சென்று பார்வையிட்டார்.
இந்த நிலையில் அருங்குளம் கிராமத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் சீமான் தலைமையில் இன்று மரங்களின் மாநாடு நடந்தது. மாநாட்டில் கட்சி நிர்வாகிகள், பொது மக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், நம்மாழ்வார், சுந்தர்லால் பகுகுணா, மிரா அல்பாசா, வங்காரி மாத்தாய், நடிகர் விவேக் ஆகியோர் படங்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அவர்களின் நினைவாக மரக்கன்றுகளை நட்டார்.
மேலும் சுற்றுச்சூழல் உறுதிமொழியை வெளியிட்டார். மாநாட்டு ஏற்பாடுகளை செய்தவர்களுக்கு புத்தகங்கள் கொடுத்து சீமான் பாராட்டினார். மரங்கள் தொடர்பான கவிதை புத்தகங்களை சீமான் வெளியிட்டார். பின்னர் மரங்களோடு பேசுவோம்; மரங்களுக்காக பேசுவோம் என்ற தலைப்பில் பேசினார்.
- ஆந்திர மாநிலத்தில் உள்ள கிளினிக்கில் சிறுமி சண்முகபிரியாவின் 5 மாத கர்ப்பத்தை கலைத்ததாக தெரிகிறது.
- சிறுமியுடன் பழகிய உறவினரான சிறுவனிடமும் விசாரிக்க முடிவு செய்து உள்ளனர்.
திருவள்ளூர்:
திருத்தணியை அடுத்த ஆர்.கே.பேட்டை அருகே உள்ள கொடிவலசா கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகள் சண்முகபிரியா (வயது 19) டிப்ளமோ நர்சிங் படித்து வந்தார்.
இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த உறவினரான சிறுவன் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நெருங்கி பழகியதால் சண்முகபிரியா 5 மாத கர்ப்பம் அடைந்தார். இது பற்றி ஆரம்பத்தில் சண்முகப்பிரியா பெற்றோரிடம் தெரிவிக்காமல் மறைத்தார்.
இந்த நிலையில் அவர் கர்ப்பமாக இருப்பதை அறிந்து பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆந்திர மாநிலத்தில் உள்ள கிளினிக்கில் சிறுமி சண்முகபிரியாவின் 5 மாத கர்ப்பத்தை கலைத்ததாக தெரிகிறது. பின்னர் வீட்டுக்கு வந்த அவருக்கு தொடர்ந்து உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு உடல்நிலை மிகவும் மோசம் அடைந்ததால் சண்முகபிரியாவை திருத்தணியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சண்முகபிரியா பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து திருத்தணி மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமிக்கு கர்ப்பத்தை கலைத்த நர்சு மற்றும் உதவியாளர் ஆகிய 2 பேரையும் போலீஸ்நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் சிறுமியுடன் பழகிய உறவினரான சிறுவனிடமும் விசாரிக்க முடிவு செய்து உள்ளனர்.
- சிறுமியின் காதலை ஏற்காத பெற்றோர் தனியார் மருத்துவமனையில் கருக்கலைப்பு செய்துள்ளனர்.
- கருக்கலைப்பு செய்தபோது சிறுமிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே சகோதரர் உறவுமுறை உள்ளவரை காதலித்த சிறுமி (17) 5 மாதம் கர்ப்பமாக இருந்துள்ளார்.
சிறுமியின் காதலை ஏற்காத பெற்றோர் தனியார் மருத்துவமனையில் கருக்கலைப்பு செய்துள்ளனர். கருக்கலைப்பு செய்தபோது சிறுமிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
சிறுமியின் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டதால் அவர் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சம்பவம் தொடர்பாக சிறுமியின் பெற்றோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கட்டுப்பாட்டை இழந்த கண்டெய்னர் லாரி, சுங்கச்சாவடி மீது பயங்கரமாக மோதியது.
- விபத்தில் இன்னோவா கார் ஒன்று சேதம் அடைந்தது.
திருவள்ளூரை அடுத்த பட்டறை பெரும்புதூர் தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடி உள்ளது. சென்னை- திருத்தணி இடையிலான இந்த சுங்கச்சவாடி எப்போதும் பரபரப்பானதாக காணப்படும்.
இன்று மதியம் கண்டெய்னர் ஏற்றிச் செல்லும் சரக்கு லாரி, கண்டெய்னர் இல்லாமல் வந்து கொண்டிருந்தது. சுங்கச்சாவடியில் Fastag பதிவிடுவதற்கான சற்று குறைவான வேகத்தில் வந்தது. அப்போது திடீரென டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து, வசூல் செய்யும் நபர் இருக்கும் கூண்டு மீது பயங்கரமாக மோதியது.
கண்ணிமைக்கும் நேரத்திற்குள் ஊழியர் வெளியேறியதால் அதிர்ஷ்டவமாக உயிர்தப்பினார். கட்டுப்பாட்டை இழந்த லாரி நின்று கொண்டிருந்த இன்னோவா கார் மீது பயங்கரமாக மோதியது. இதில் கார் சேதம் அடைந்தது. இருந்தபோதிலும், காரில் இருந்த 3 பேருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. லாரி மோதியதால் சுங்கச்சாவடி சேவை சிறிது நேரம் பாதித்தது.
- நள்ளிரவு முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.
- சென்னை உள்ளிட்ட வட தமிழ்நாட்டில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு.
மேற்கு திசைக் காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், நள்ளிரவு முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.
சென்னை உள்ளிட்ட வட தமிழ்நாட்டில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திருவள்ளூர் மாவட்ட நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக புழல், சோழவரம் ஏரிகளுக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது.
அதன்படி, புழல் ஏரிக்கு நேற்று 278 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று 880 கன அடியாக அதிகரித்துள்ளது.
சோழவரம் ஏரிக்கு 122 கன அடி நீர்வரத்து வர தொடங்கியது.
- திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையம் போலீஸ் நிலையத்தில் நடைபெற்றது.
- விநாயகர் சதுர்த்தி விழா ஏற்பாட்டாளர்கள் 50 பேரும், ஆரணி பகுதியை சேர்ந்த 20 பேரும் கலந்து கொண்டனர்.
பெரியபாளையம்:
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 27-ந்தேதி (புதன்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தெருக்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடுவது வழக்கம். இவ்வாறு வைக்கப்படும் விநாயகர் சிலைகள் எந்த அளவில் இருக்க வேண்டும், அதனை கண்காணிக்க தன்னார்வலர்களை நியமிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் பற்றி விழா ஏற்பாட்டாளர்களுக்கு போலீசார் ஆலோசனை வழங்கும் கூட்டம் திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையம் போலீஸ் நிலையத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில் பெரியபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீ பப்பி விநாயகர் சதுர்த்தி விழா ஏற்பாட்டாளர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். இக்கூட்டத்தில், பெரியபாளையம் பகுதியை சேர்ந்த விநாயகர் சதுர்த்தி விழா ஏற்பாட்டாளர்கள் 50 பேரும், ஆரணி பகுதியை சேர்ந்த 20 பேரும் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் ஆரணி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முரளிதரன் கலந்து கொண்டார்.






