என் மலர்tooltip icon

    திருவள்ளூர்

    • கடந்த 10 நாட்களுக்கு முன்பு வளமீட்பு பூங்கா முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • குப்பை ஏற்றி வரும் வண்டிகள் எங்கள் பகுதியில் வரக்கூடாது என வாக்குவாதம் செய்தனர்.

    பொன்னேரி:

    மீஞ்சூர் பேரூராட்சி 2 வது வார்டு எவெரடி நகர் பகுதியில் வளமீட்பு பூங்கா 20 லட்சம் ரூபாய் மதிப்பில் சுற்று சுவர் கட்டப்பட்டு அதற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அதன் அருகே உள்ள ஜெகன் நகர் குடியிருப்பு பகுதியில் உள்ள 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வளமீட்பு பூங்கா என்ற பெயரில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் (குப்பைகளை தரம் பிரித்தல்) செயல்படுவதாக கூறி எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதனை சுற்றி 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளதாகவும், குடியிருப்பில் துர்நாற்றம் வீசுவதாகவும், நிலத்தடி நீர் மாசுபடுவதாகவும், தொற்று நோய் பரவுவதற்கு காரணமாக உள்ளதாகவும் கூறி, வளமீட்பு பூங்காவை மாற்று இடத்தில் அமைக்க வலியுறுத்தி கடந்த 10 நாட்களுக்கு முன்பு வளமீட்பு பூங்கா முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்து வந்த பேரூராட்சி செயல் அலுவலர் வெற்றியரசு, தலைவர் ருக்மணி மோகன்ராஜ் இதற்கான சமரச பேச்சுவார்த்தை மீஞ்சூர் தேர்வு நிலை பேரூராட்சியில் நடைபெறுவதாக தெரிவித்ததின் பெயரில் போராட்டம் கைவிடப்பட்டு அதற்கான சமரச பேச்சுவார்த்தை நேற்று மீஞ்சூர் பேரூராட்சி கூட்ட அரங்கில் செயல் அலுவலர் வெற்றி அரசு தலைமையில் நடைபெற்றது. இதில் மீஞ்சூர் பேரூராட்சி 2 வது வார்டு ஜெகன் நகர் குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    அப்போது பேரூராட்சி சார்பில், வளமீட்பு பூங்காவில் 2வது வார்டு குப்பைகளை மட்டும் தரம் பிரிப்பதாகவும், தற்காலிகமாகமாக செயல்படுவதாகவும், குப்பைகள் தரம் பிரிக்க வேறு இடத்திற்கு மாற்றப்படும் வரை பயன்படுத்துவதாகவும் தெரிவித்தனர். இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, வளமீட்பு பூங்கா என்ற பெயரில் பேரூராட்சி குப்பைகளை கொண்டு வந்து கொட்டி தரம் பிரிக்க விடமாட்டோம், குப்பை ஏற்றி வரும் வண்டிகள் எங்கள் பகுதியில் வரக்கூடாது எனவும், வளமீட்பு பூங்காவை அப்புறப்படுத்த வேண்டும் எனவும், ஒரு போதும் எங்கள் பகுதியில் அனுமதிக்க மாட்டோம், நோய் பரவுவதற்கு அனுமதிக்க விடமாட்டோம் எனவும், முதலாவது எங்கள் குடியிருப்பு பகுதியில் உள்ள டாஸ்மாக்கை அகற்ற நடவடிக்கை எடுங்கள் என கூறி பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அத்துடன் கூட்டத்தை புறக்கணித்து, திட்டத்தை செயல்படுத்த விட மாட்டோம் என எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் தெரிவிப்பதாக கூறி சென்றுவிட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    இதில் பேரூராட்சித் தலைவர் ருக்குமணி மோகன்ராஜ், துணைத் தலைவர் அலெக்சாண்டர், குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள் வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • கடந்த சில மாதங்களாக பெருமாளின் இடத்தையொட்டி மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது.
    • மழைநீர் கால்வாய் அமைக்கும் பணியின் போது ராட்சத கிரேன் மூலம் கிணற்றுக்குள் மணல் கொட்டி மூடி மாயமாகி இருப்பது தெரிந்தது.

    திருவொற்றியூர்:

    மணலிபுதுநகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு 5-வது பிளாக்கில் வசித்து வருபவர் பெருமாள். இவருக்கு சொந்தமான இடம் மணலி 200அடி சாலையோரம் சி.பி.சி.எல். தொழிற்சாலை மதில் சுவரையொட்டி உள்ளது.

    அந்த இடத்தில் சுமார் 25 அடி ஆழத்தில் உறை கிணறு ஒன்று இருந்தது. கடந்த சில மாதங்களாக பெருமாளின் இடத்தையொட்டி மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த பணிகள் முடிந்த நிலையில் பெருமாள் தனது இடத்தை பார்க்க வந்தார்.

    அப்போது அங்கு இருந்த கிணற்றை காணவில்லை. மழைநீர் கால்வாய் அமைக்கும் பணியின் போது ராட்சத கிரேன் மூலம் கிணற்றுக்குள் மணல் கொட்டி மூடி தரையோடு தரையாக மாயமாகி இருப்பது தெரிந்தது. இதைத்தொடர்ந்து பெருமாள், மாயமான தனது கிணற்றை கண்டு பிடித்து, பயன்படுத்தும் வகையில் சீரமைத்து தரவேண்டும் என்று மாநகராட்சி மணலி மண்டல உதவி ஆணையரிடம் கோரிக்கை மனு அளித்தார். அதில் மழைநீர் வடிகால்வாய் பணியில் ஈடுபட்ட ஒப்பந்ததாரர் மீதும் குற்றம் சாட்டியுள்ளார்.

    இதனால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். தரையோடு தரையான கிணற்றை எப்படி மீட்பது என்பது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் ஆலோசித்து வருகிறார்கள்.

    • உணவு முறை மற்றும் உணவு அளவினை ஆண்டுக்கு ரூ.26 கோடி கூடுதல் செலவினத்தில் மாற்றியமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
    • கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி இந்த புதிய உணவு திட்டத்தை புழல் சிறையில் அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்.

    தமிழகத்தில் 9 மத்திய சிறை, 3 பெண்கள் தனிச்சிறை மற்றும் மாவட்ட சிறைகள், கிளை சிறைகள் என 138 சிறைகள் உள்ளன.

    சிறைகளில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். சிறைகளில் உள்ள கைதிகள் இதுவரை ஏ பிரிவு கைதிகள், பி பிரிவு கைதிகள் என பிரிக்கப்பட்டு அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது.

    கைதிகளுக்கு வாரத்தில் ஒரு நாள் சிக்கன் கறி வழங்கப்பட்டு வந்தது. முட்டையும், காய்கறி உணவுகளுடன், காலையில் பொங்கல், உப்புமா, கஞ்சி சட்னியும் வழங்கப்பட்டு வந்தது.

    இந்நிலையில் சட்டசபையில் மானிய கோரிக்கையின் போது சிறைவாசிகள் நலனுக்காக நிபுணர் குழுவினர் அறிக்கையின் படி உணவு முறை மற்றும் உணவு அளவினை ஆண்டுக்கு ரூ.26 கோடி கூடுதல் செலவினத்தில் மாற்றியமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. உணவுக்கு ஒரு நபருக்கு ரூ.96-ல் இருந்து ரூ.135 ஆக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது

    இதைத்தொடர்ந்து முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி இந்த புதிய உணவு திட்டத்தை புழல் சிறையில் அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்.

    இதில் சிறைத்துறை டி.ஜி.பி. அமரேஷ் புஜாரி உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த திட்டத்தின் படி றைவாசிகளுக்கு வழங்கப்படும் உணவு முறைகள்:-



    • வருவாய்த்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து சிலர் அதில் உழுது நாற்று நட முயற்சித்தனர்.
    • ஊராட்சி தலைவியின் கணவர் காளிதாஸ் தடுத்தார். மேலும் ஆக்கிரமிப்பாளர்களை கண்டித்தார்.

    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டை அருகே உள்ள சூளைமேனி ஊராட்சிமன்ற தலைவர் சாந்தி. இவரது கணவர் காளிதாஸ் (45). சூளைமேனி கிராம எல்லையில் சுமார் 40 ஏக்கர் நிலப்பரப்பில் மேய்க்கால் புறம்போக்கு நிலம் உள்ளது.

    வருவாய்த்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து சிலர் அதில் உழுது நாற்று நட முயற்சித்தனர்.

    இதனை ஊராட்சி தலைவியின் கணவர் காளிதாஸ் தடுத்தார். மேலும் ஆக்கிரமிப்பாளர்களை கண்டித்தார். இதில் அவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. இந்த தகராறில் காளிதாஸ் தாக்கப்பட்டார். இதில் காயம் அடைந்த அவர் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

    இந்த நிலையில் காளிதாஸ் மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்து அவரது மனைவியும் ஊராட்சி தலைவியுமான சாந்தி தலைமையில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் சூளைமேனியில் ஊத்துக்கோட்டை- பெரியபாளையம் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    தகவல் அறிந்ததும் ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ் குமார் மற்றும் போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    இதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
    • விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.

    அம்பத்தூர்:

    வானகரம் அடுத்த நூம்பல் பகுதியை சேர்ந்தவர் ராமானுஜம்(வயது34). இவர் பாடியில் உள்ள தனியார் கம்பெனியில் மானேஜராக பணியாற்றி வந்தார். இன்று காலை 6.50 மணியளவில் ராமானுஜம் வழக்கம்போல் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டில் இருந்து வேலைக்கு புறப்பட்டார்.

    பாடி மேம்பாலம் அருகே வந்த போது பின்னால் அதிவேகமாக வந்த தண்ணீர் லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தண்ணீர் லாரியின் சக்கரத்தில் சிக்கிய ராமானுஜம் சம்பவ இடத்திலலேயே பரிதாபமாக இறந்தார். அப்போது அவர் தலையில் ஹெல்மெட் அணிந்து இருந்தார். ஆனாலும் ஹெல்மெட் அவரது உயிரை காப்பாற்ற வில்லை. லாரியின் சக்கரத்தில் சிக்கிய வேகத்தில் ஹெல்மெட்டும் நசுங்கி உடைந்து போனது. ராமனுஜம் ஹெல்மெட் அணிந்த நிலையிலேயே இறந்து போனார். விபத்து நடந்ததும் லாரியை நிறுத்திவிட்டு அதன் டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.

    தகவல் அறிந்ததும் செங்குன்றம் போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து ராமானுஜத்தின் உடலை கைப்பற்றி பிரேதபரி சோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவரை போலீசார் தேடி வருகிறார்கள். இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.

    • திருவள்ளூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் பல இடங்களில் மரங்கள் முறிந்து மின்கம்பங்களில் விழுந்தன.
    • மின்வாரிய ஊழியர்கள் மரங்களை அகற்றி சேதம் அடைந்த மின்கம்பங்களை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    திருவள்ளூர்:

    தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் முடிந்தும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. வெப்பத்தின் தாக்கம் இன்னும் குறையவில்லை. தொடர்ந்து பல இடங்களில் வெப்பத்தின் அளவு 100 டிகிரியை தாண்டி கொளுத்துகிறது. எனினும் அவ்வப்போது சில இடங்களில் லேசான மழை பெய்து வருகிறது.

    இந்தநிலையில் நேற்று மாலை திருவள்ளூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று மாலை திடீரென கருமேகங்கள் திரண்டு மழை பெய்தது. திருவள்ளூர், காக்களூர், பெரியகுப்பம், ஈக்காடு, மணவாளநகர், புட்லூர், ராமாபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த சூறைக்காற்றுடன் கன மழையாக கொட்டியது.

    சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பெய்த மழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. சூறைக்காற்று காரணமாக திருவள்ளூர் சி.வி.நாயுடு சாலை, ஜே.என்.சாலை உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரம் உள்ள கட்டிடங்களின் மேல் அமைக்கப்பட்ட விளம்பர பேனர்கள், போஸ்டர்கள் கிழிந்து பறந்தன. சில இடங்களில் மின் கம்பங்களில் கிழிந்த பேனர்கள் தொங்கியதால், வாகன ஓட்டிகள் மிகவும் அச்சத்துடன் சாலையில் பயணித்தனர்.

    மேலும் சூறைக்காற்று காரணமாக திருவள்ளூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் பல இடங்களில் மரங்கள் முறிந்து மின்கம்பங்களில் விழுந்தன. இதனால் மின்தடை ஏற்பட்டது. திருவள்ளூர் பகுதியில் மாலை 4 மணிக்கு ஏற்பட்ட மின்தடை மாலை 6 மணிக்கு சீரானது. ஆனால் மின்கம்பங்கள் சேதம் அடைந்த கிராமங்களில் விடிய, விடிய மின்தடையால் பொது மக்கள் தவித்தனர்.

    மின்வாரிய ஊழியர்கள் மரங்களை அகற்றி சேதம் அடைந்த மின்கம்பங்களை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    • சோழவரம் ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு தண்ணீர் 250 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.
    • பூண்டி ஏரியின் மொத்த கொள்ளவு 3231 மி.கனஅடி. இதில் 1268 மி.கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது.

    திருவள்ளூர்:

    சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் முக்கிய ஏரிகளாக பூண்டி, புழல், செம்பரம் பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரிகள் உள்ளன.

    இந்த 5 ஏரிகளிலும் மொத்தம் 11,757 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். இன்று காலை நிலவரப்படி ஏரியில் 6857 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது.

    கிருஷ்ணா நதி நீர் ஒப்பந்தப் படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு 265 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

    இந்நிலையில் சோழவரம் ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு தண்ணீர் 250 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவு 1081 மி. கனஅடி ஆகும். இதில் 693மி.கனஅடி மட்டுமே தண்ணீர் உள்ளது.

    தற்போது கோடை வெயில் அதிகரித்து உள்ள நிலையில் ஏரியில் உள்ள தண்ணீர் வெப்பத்தின் காரணமாக வீணாவதை தடுக்கும் வகையில் சோழவரம் ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு தண்ணீர் அனுப்பப்படுகிறது.

    பூண்டி ஏரியின் மொத்த கொள்ளவு 3231 மி.கனஅடி. இதில் 1268 மி.கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. புழல் ஏரியில் மொத்த கொள்ளளவான 3300 மி.கனஅடியில் 2173 மி.கனஅடி தண்ணீரும், செம்பரம்பாக்கம் ஏரியில் 3645 மி.கனஅடியில் 2268 மி.கனஅடியும் தண்ணீர் உள்ளது.

    கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது குடிநீர் ஏரிகளில் நீர் இருப்பு குறைந்த அளவில் தான் உள்ளது. கடந்த ஆண்டு இதே நாளில் 7768 மி.கனஅடி தண்ணீர் இருந்தது. தற்போது 6875மி.கன அடி மட்டுமே உள்ளது குறிப்பிடத்தக்கது.

    எனினும் இப்போது பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நீர் வந்து கொண்டு இருப்பதால் சென்னையில் குடிநீர் தேவையில் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    • சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சண்முக சுந்தரம் இறந்தார்.
    • புழல் இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    செங்குன்றம்:

    ஆவடி அடுத்த அண்ணனூர் பகுதியைச் சேர்ந்தவர் மீனாட்சி சுந்தரம் (வயது66). இவர் திருமுல்லைவாயலில் நடந்த ஒரு கொலையில் கடந்த 2022-ம் ஆண்டு முதல் ஆயுள் தண்டனை கைதியாக புழல் தண்டனை சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.

    இவருக்கு ரத்த அழுத்த நோய் இருந்தது. இதையடுத்து அவரை சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சண்முக சுந்தரம் இறந்தார்.

    இது குறித்து புழல் இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • 5 பேர் மர்ம கும்பல் ராஜேசை வழிமறித்து திடீரென சரமாரியாக வெட்டினர்.
    • கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    போரூர்:

    சென்னை, மதுரவாயலை அடுத்த நெற்குன்றம், ஜெயராம் நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் என்கிற திருட்டு ராஜேஷ் (வயது23). ரவுடியான இவர் மீது கொலை, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. நேற்று இரவு 8.30மணி அளவில் ராஜேஷ், மதுரவாயல் கந்தசாமி நகர் 5-வது தெரு வழியாக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அவ்வழியே 4 மோட்டார் சைக்கிளில் வந்த 5 பேர் மர்ம கும்பல் ராஜேசை வழிமறித்து திடீரென சரமாரியாக வெட்டினர். இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜேஷ் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். ஆனால் அவரை பின் தொடர்ந்து ஓட ஓட விரட்டி சென்ற கும்பல் ராஜேசை கொடூரமாக வெட்டி படுகொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும்,கோயம்பேடு துணை கமிஷனர் குமார், மதுரவாயல் இன்ஸ்பெக்டர் சிவ ஆனந்த் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    இதில் கொலையுண்ட ராஜேசுக்கும், திருவள்ளூர் கூடப்பாக்கம் பகுதியை சேர்ந்த ரவுடி சுரேஷ் என்பவருக்கும் இடையே கடந்த 6 மாதத்துக்கு முன்பு மோதல் ஏற்பட்டு உள்ளது. இதன் தொடர்ச்சியாக நேற்று காலை நெற்குன்றம் பகுதியில் உள்ள நண்பர் ஒருவரின் தங்கையின் காது குத்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த ராஜேஷ் மற்றும் சுரேஷ் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

    அப்போது சுரேசை, ராஜேஷ் சரமாரியாக அடித்து உதைத்து உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுரேஷ் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து ராஜேசை தீர்த்துக்கட்டியது விசாரணையில் தெரிய வந்தது.

    இதையடுத்து சுரேஷ் மற்றும் அவனது கூட்டாளிகள் உட்பட மொத்தம் 5 பேரை மதுரவாயல் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்து தொடர்ந்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

    • இன்று காலை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு 25 டன் பீன்ஸ் மட்டுமே விற்பனைக்கு வந்தது.
    • கடந்த மாதம் மொத்த விற்பனையில் ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.50-க்கும் குறைவாகவே விற்கப்பட்டது.

    போரூர்:

    கோயம்பேடு மார்க்கெட்டுக்கு ஊட்டி மற்றும் கர்நாடகா மாநிலத்தில் இருந்து தினசரி 70 டன் அளவுக்கு பீன்ஸ் விற்பனைக்கு வருவது வழக்கம்.

    ஆனால் தற்போது அதன் வரத்து பாதியாக குறைந்ததால் பீன்ஸ் விலை திடீரென அதிகரித்தது. அதன் விலை மீண்டும் உச்சத்தை எட்டி உள்ளது .

    இன்று காலை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு 25 டன் பீன்ஸ் மட்டுமே விற்பனைக்கு வந்தது. இதனால் மொத்த விற்பனையில் ஒரு கிலோ பீன்ஸ் ரூ.90-க்கும், சில்லரை விற்பனை கடைகளில் ரூ.120 வரையும் விற்கப்படுகிறது.

    இதேபோல் வரத்து குறைவால் அவரைக்காய் கத்தரிக்காய், முருங்கைக்காய் உள்ளிட்ட காய்கறிகளின் விலையும் உச்சம் அடைந்து உள்ளன.

    கடந்த மாதம் மொத்த விற்பனையில் ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.50-க்கும் குறைவாகவே விற்கப்பட்டது. ஆனால் திண்டுக்கல், தேனி, ஜெயங்கொண்டம், அரியலூர் ஆகிய பகுதிகளில் பெய்த கோடை மழையால் அங்கு பயிரிடப்பட்டிருந்த பெரும்பாலான முருங்கை மரங்கள் சேதமடைந்தன.

    இதனால் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரும் முருங்கைக்காய் வரத்து பாதியாக குறைந்து விலை அதிகரித்து உள்ளது. இன்று மொத்த விற்பனையில் ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.90-க்கு எகிறி உள்ளது. சில்லரை விற்பனை கடையில் ரூ.120 வரை விற்பனை செய்யப்படுகிறது. ஒரு முருங்கைக்காய் ரூ.20-க்கும் விற்கப்படுகிறது.

    வரத்து குறைவால் அவரைக்காய் விலையும் அதிகரித்து உள்ளது இன்று மொத்த விற்பனையில் ஒரு கிலோ அவரைக்காய் ரூ.80-க்கும், சில்லரை விற்பனை கடையில் ரூ.100-க்கும் விற்பனை ஆகிறது.

    இதேபோல் நாட்டு தக்காளி ரூ.30-க்கும், இஞ்சி-ரூ.200, உஜாலா கத்தரிக்காய்-ரூ.80, வரி கத்தரிக்காய்-ரூ.60, வெண்டைக்காய்-ரூ.60, ஊட்டி கேரட்-ரூ.70 க்கும் விலை உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.

    • நடைமேம்பாலத்தை அகற்றிவிட்டு மாற்று ஏற்பாடுகள் செய்ய ரெயில்வே அதிகாரிகள் முடிவு செய்தனர்.
    • அம்பத்தூரில் இருந்து இந்த பகுதிகளுக்கு எளிதாகவும், விரைவாகவும் செல்ல வழிவகை ஏற்படும்.

    சென்னை:

    அம்பத்தூர் ரெயில் நிலையத்தின் 6-வது லெவல்-கிராசிங் பகுதியில் நடைமேம்பாலம் கட்டப்பட்டு இருந்தது.

    நீண்ட ஆண்டுகளாக மக்களால் அந்த நடைமேம்பாலம் பயன்படுத்தப்பட்டு வந்தது. சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த நடை மேம்பாலத்தில் பழுது ஏற்பட்டது.

    இதன் காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு முதல் அந்த நடைமேம்பாலத்தை மக்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. கடந்த 3 ஆண்டுகளாக அந்த நடைமேம்பாலம் பயன்படுத்தப்படாமல் இருந்தது.

    அந்த நடைமேம்பாலத்தை அகற்றிவிட்டு மாற்று ஏற்பாடுகள் செய்ய ரெயில்வே அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி 2 வாரங்களுக்கு முன்பு அந்த நடைமேம்பாலம் இடித்து அகற்றப்பட்டது. இதனால் அந்த பகுதியில் தண்டவாளத்தை மக்கள் கடப்பதற்கு கடும் சிரமத்தை சந்தித்து வருகிறார்கள்.

    இதையடுத்து அம்பத்தூர் ரெயில் நிலையத்தில் நடைமேம்பாலம் இருந்த இடத்தில் புதிதாக சுரங்கப்பாதை கட்ட ரெயில்வே உயர் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதற்காக அதிகாரிகள் அந்த பகுதியில் ஆய்வு செய்து முடித்து விட்டனர்.

    அதன்படி புதிதாக கட்டப்பட இருக்கும் சுரங்கப்பாதையில் மக்கள் சிரமமின்றி நடந்து செல்லும் வகையில் அனைத்து வசதிகளையும் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அந்த சுரங்கப் பாதையின் ஒரு பகுதியில் இருசக்கர வாகனங்கள் மட்டும் செல்ல அனுமதிக்கலாம் என்றும் முடிவு செயப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் அந்த சுரங்க பாதையை சற்று பெரிதாக கட்ட வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அம்பத்தூர் ரெயில் நிலையத்தின் அருகில் மார்க்கெட் உள்ளது. இதனால் கனரக வாகனங்கள் அதிகம் வருகின்றன. சிறிய பஸ்களும் அங்கு இயக்கப்படுகின்றன.

    இந்த வாகனங்கள் அனைத்தும் சுரங்க பாதை வழியாக இயக்கப்படும் வகையில் வசதி செய்ய வேண்டும் என்று அம்பத்தூர் பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அத்தகைய வசதிகள் செய்யப்படும் பட்சத்தில் அம்பத்தூரில் இருந்து வெங்கடாபுரம், கள்ளிக்குப்பம், கருக்கு, விஜயலட்சுமிபுரம் மற்றும் மேனாம்பேடு பகுதிகளுக்கு செல்பவர்கள் மிக மிக எளிதாக செல்ல முடியும்.

    அம்பத்தூரில் இருந்து இந்த பகுதிகளுக்கு எளிதாகவும், விரைவாகவும் செல்ல வழிவகை ஏற்படும்.

    தற்போது காலை, மாலை நேரத்தில் அம்பத்தூர் கனரக வங்கி பஸ் நிறுத்தம் முதல் அம்பத்தூர் ஓ.டி. வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது உண்டு. அம்பத்தூர் ரெயில் நிலையத்தில் கட்டப்படும் புதிய சுரங்கப் பாதையை பெரிதாக கட்டினால் நிறைய வாகனங்கள் அந்த பாதையை பயன்படுத்தும்.

    இதனால் அம்பத்ரிதூல் போக்குவரத்து நெரிசல் கணிசமாக குறையும். இதை கருத்தில் கொண்டு அம்பத்தூர் ரெயில் நிலைய சுரங்கப் பாதையை பெரிய வாகனங்கள் செல்லும் வகையில் கட்ட வேண்டும் என்று கோரிக்கை வலுத்துள்ளது.

    • மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டில் வடசென்னை அனல்மின் நிலையம் உள்ளது.
    • தொழில் நுட்பகோளாறை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

    பொன்னேரி:

    மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டில் வடசென்னை அனல்மின் நிலையம் உள்ளது. இங்குள்ள இரு நிலைகளில் முதல் நிலையின் 3 அலகுகளில் தலா 210 வீதம் 630 மெகாவாட், 2-வது நிலையில் உள்ள இரு அலகுகளில் தலா 600 வீதம் 1200 மெகாவாட் என மொத்தம் நாளொன்றுக்கு 1830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

    இந்த நிலையில் 1-வது நிலையின் 2, 3-ம் அலகுகளில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதன்காரணமாக 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. தொழில் நுட்பகோளாறை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

    ×