என் மலர்
தூத்துக்குடி
- விசாகத் திருவிழா வசந்த திருவிழா நாளை முதல் தொடங்கி 10 நாள்கள் நடைபெறுகிறது.
- சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடைபெறுகிறது.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வரும் ஜூன் 9ஆம் தேதி வைகாசி விசாகத் திருவிழா நடைபெறுகிறது.
முன்னதாக, விசாகத் திருவிழா வசந்த திருவிழா நாளை முதல் தொடங்கி 10 நாள்கள் நடைபெறுகிறது.
பத்தாம் நாளான ஜூன் 9ஆம் தேதி வைகாசி விசாகத் திருவிழா நடைபெறுகிறது. இதை முன்னிட்டு, கோயிலில் அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம் மற்றும் தீபாராதனை உள்ளிட்டவை நடைபெறுகிறது.
தொடர்ந்து, சுவாமி ஜெயந்திநாதர் திருக்கோயிலிலிருந்து சப்பரத்தில் எழுந்தருளி சண்முக விலாசம் மண்டபம் சேர்கிறார்.
பிறகு அன்று மாலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடைபெறுகிறது.
விழாவின் முக்கிய நிகழ்வான முனிக்குமாரர்களுக்கு சாப விமோசனம் அளிக்கும் வைபவம் நடைபெறுகிறது. பின்னர், மகா தீபாராதனையாகி, சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானையுடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
இந்நிலையில், திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயில், விசாகத் திருவிழாவை ஒட்டி வரும் 9ம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்படும் என மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் அறிவித்துள்ளார்.
- அமாவாசை தினம் என்பதால் கடல் சுமார் 60 அடி தூரம் வரை உள்வாங்கி காணப்படுகிறது.
- கோவிலுக்கு வரும் பக்தர்கள் அச்சமின்றி கடலில் இறங்கி புனித நீராடி வருகின்றனர்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் இன்று காலையில் இருந்து சுமார் 60 அடிக்கு மேல் உள்வாங்கி காணப்படுகிறது.
பொதுவாக திருச்செந்தூர் கடல் அமாவாசை, பவுர்ணமி போன்ற நாட்களில் உள்வாங்குவதும், வெளியே வருவதும் இயல்பான ஒன்றாகும். அந்த வகையில் இன்று அமாவாசை தொடங்கி நாளை வரை உள்ளது.
இந்த நிலையில் இன்று காலையில் திருச்செந்தூர் கடல் சுமார் 60 அடியில் இருந்து 100அடி வரை உள்வாங்வதும் வெளியே வருவதுமாக உள்ளது.
ஆனாலும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அச்சமின்றி கடலில் இறங்கி புனித நீராடி வருகின்றனர்.
- வருகிற ஜூலை மாதம் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதால் அதற்கான வேலைகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
- இன்று வழக்கம் போல் கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலிலுக்கு நாள்தோறும் பல்லாயிரகணக்கான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர்.
கோவிலில் ரூ.300 கோடியில் பெருந்திட்ட வளாகப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் வருகிற ஜூலை மாதம் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதால் அதற்கான வேலைகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
தற்போது கோடை விடுமுறை என்பதால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் குடும்பத்துடன் திருச்செந்தூர் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். விடுமுறை நாளான இன்று மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் தங்கள் கார், வேன், மற்றும் பஸ்களில் குடும்பத்துடன் வந்து கடல் மற்றும் நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
பக்தர்கள் கூட்டம் அலைமோதியதால் சுமார் 4 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். இன்று வழக்கம் போல் கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூபம், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.
- காயமடைந்த சிந்துஜா தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.
- சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முத்தையாபுரம் அருகே உள்ள சுந்தர்நகர் 1-வது தெருவை சேர்ந்தவர் நிஷாந்த். இவருடைய பக்கத்து வீட்டில் வசித்து வரும் கந்தசாமி (வயது91) என்பவர் நிஷாந்தின் வீட்டு காம்பவுண்டை ஒட்டி வாழை மரத்தை வளர்த்து வந்துள்ளார். வாழை மரத்தின் காய்ந்த இலைகள் நிஷாந்தின் வீட்டிற்குள் விழுந்து வந்ததாக கூறப்படுகிறது. எனவே வாழை மரத்தின் காய்ந்த கிளைகளை அகற்றுமாறு நிஷாந்த் கூறியுள்ளார். இதனால் இரு குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில் சம்பவத்தன்று காலையில் நிஷாந்தின் மனைவி சிந்துஜா (வயது 30) வீட்டின் வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்தார். அப்போது அரிவாளுடன் அங்கு வந்த கந்தசாமி வாழை மரத்தின் இலைகளை ஏன் வெட்டினாய்? என்று சொல்லி திடீரென்று சிந்துஜாவின் கையில் வெட்டினார். இதில் காயமடைந்த அவர் அலறியவாறு தெருவில் ஓடினார். ஆனாலும், ஆத்திரம் தீராத முதியவர் அரிவாளுடன் அவரை துரத்தி சென்று வெட்டியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த சிந்துஜாவின் அலறல் சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவருவதை பார்த்த முதியவர் வீட்டுக்குள் சென்றுவிட்டார்.
இதில் காயமடைந்த சிந்துஜா தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். அவர் கொடுத்த புகாரின் பேரில் முத்தையாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- தூத்துக்குடி புதிய பஸ் நிலைய பகுதியில் மர்ம நபர் ஒருவர் ஆயுதங்களுடன் சுற்றித் திரிவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- அந்தோணி மைக்கேல் சுகந்தன் மீது கொலை வழக்கு உட்பட 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகி உள்ளது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் குற்ற செயல்களை தடுக்கும் வகையில் சரித்திர பதிவேடு குற்றவாளிகளின் செயல்பாடுகளை கண்காணிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் உத்தரவிட்டுள்ளார்,
அதன் அடிப்படையில் தனிப்படை போலீசார் மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தூத்துக்குடி புதிய பஸ் நிலைய பகுதியில் மர்ம நபர் ஒருவர் ஆயுதங்களுடன் சுற்றித் திரிவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனைத்தொடர்ந்து தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜபிரபு, வடபாகம் இன்ஸ்பெக்டர் பால முருகன், சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் அப்பகுதி தெருக்கள் மற்றும் முக்கிய சாலை பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது புதிய பஸ் நிலையம் பகுதியில் வாள், அரிவாள், கத்திகள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி நின்ற தூத்துக்குடி ஆரோக்கிய புரத்தை சேர்ந்த அந்தோணி மைக்கேல் சுகந்தன் (வயது 40) என்பவரை போலீசார் துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்து தப்பி ஓடாதபடி எச்சரிக்கை செய்து கைது செய்தனர். பின்னர் அவரிடம் இருந்த ஆயு தங்களை பறிமுதல் செய்தனர்.
தாளமுத்து நகர் போலீஸ் நிலையத்தில் சரித்திர குற்றவாளி பதிவேட்டில் உள்ள இவர் மீது கொலை வழக்கு உட்பட 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகி உள்ளது.
வெடிகுண்டு வீசியும், பழிக்குப் பழியாகவும் நடைபெற்ற கொலை வழக்குகளில் தொடர்புடைய இவர் தற்போது யாரை கொலை செய்ய திட்டமிட்டு பதுங்கி இருந்தார்? அந்த முக்கிய நபர் யார் ? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அமலாக்கத்துறை சோதனையில் உண்மை நிலை என்ன என்பது மக்களுக்கு தெரிய வேண்டும்.
- தி.மு.க. அரசு இன்னும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இருக்கிறார்கள்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இன்றும் 8, 9 மாதத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. வருகிற ஜனவரி 9-ந் தேதி கடலூரில் தே.மு.தி.க. சார்பில் மாநாடு நடத்தப்பட உள்ளது. அதற்குள் கூட்டணி உள்ளிட்டவை எல்லாம் முடிவு செய்து மிகப்பெரிய அறிவிப்பாக இந்த மாநாடு இருக்கும்.
அமலாக்கத்துறை சோதனை நடப்பது ஒன்றும் புதிதல்ல, எப்போதும் நடக்க கூடியது தான். தப்பு செய்தவர்கள் தண்டனையை அனுபவித்து தான் ஆக வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. மக்கள் வரிப்பணத்தை ஊழல் செய்து லஞ்சமாக பெற்றால் தண்டனை அனுபவித்து தான் ஆக வேண்டும்.
அமலாக்கத்துறை சோதனையில் உண்மை நிலை என்ன என்பது மக்களுக்கு தெரிய வேண்டும். விஜயகாந்த் சொன்னது போல் லஞ்ச ஊழல் இல்லாத நல்லாட்சி அமைய வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம்.
தனி நபருடைய விஷயத்தை அரசுக்குள் கொண்டு போக கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு ஒரு தீர்ப்பு கூறி உள்ளது. விசாகன் ராஜா என்ற தனி நபர் மீது ரூ.1000 கோடி ஊழல் வழக்கு கொண்டு வரப்படுகிறது. அது தனி நபரை சார்ந்ததா? அல்லது டாஸ்மாக் துறையை சார்ந்ததா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
தி.மு.க. அரசு இன்னும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இருக்கிறார்கள். ஆயிரம் ரூபாய் போன்ற திட்டங்களால் பெண்களை மூளைச்சலவை செய்து வாக்குகளை பெற முயற்சிக்கிறார்கள். பெண்கள் மிகப்பெரிய அளவில் டாஸ்மாக்கினால் பாதிக்கப்படுகிறார்கள். எங்கு பார்த்தாலும் குடியாக இருக்கிறது.
இளைஞர்களிடம் மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துவது டாஸ்மாக், கள்ளச்சாராயம், போதைப் பொருட்கள் தான். அதனால்தான் இன்று பலவிதமான கொலைகள், கொள்ளைகள், கற்பழிப்புகள் தொடர்ந்து தமிழ்நாட்டில் நடந்து கொண்டு உள்ளது. அவர்கள் கொடுத்த வாக்குறுதிகள் நீட்டாக இருந்தாலும், டாஸ்மாக் ஒழிப்போம் என்பதாக இருந்தாலும், விலைவாசியை குறைப்போம் என்பதாக இருந்தாலும் அவற்றை நிறைவேற்றவில்லை. பல்வேறு விஷயங்கள் செயல்படுத்த வேண்டும். இன்னும் 8, 9 மாதங்கள் உள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம். மக்கள் தான் இறுதி எஜமானர்கள். அவர்கள் 2026-ல் நல்ல தீர்ப்பை கொடுப்பார்கள்.
அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி அமைந்த பிறகு சலசலப்புகள் வந்தால் பிரிவதற்கு வாய்ப்பு உள்ளது. அதனால் அவர்கள் கண்ட்ரோல் செய்கிறார்கள். யாரும் தனிப்பட்ட கருத்துக்களையோ எதிர் கருத்துக்களையோ திணிக்க வேண்டாம். பொறுமையாக இருந்து இந்த கூட்டணியை வலுப்படுத்த வேண்டும். அடுத்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற நிலைப்பாடை தான் எடுப்பார்கள். அந்த நிலைப்பாட்டை அவர்கள் எடுத்துள்ளனர்.
பொள்ளாச்சி வழக்கில் தீர்ப்பு வந்தது போன்று, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கும் நீதிபதிகள் விரைவில் உறுதியான தீர்ப்பை கால தாமதம் செய்யாமல் வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- துப்பாக்கிச் சூடு சம்பவத்தை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு மூடி சீல் வைத்தது.
- துப்பாக்கிச் சூட்டில் பலியானோர் சமாதிகளில் நினைவஞ்சலி நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
தூத்துக்குடி:
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018-ம் ஆண்டு மே 22-ந் தேதி நடைபெற்ற போராட்டம் பயங்கர வன்முறையில் முடிந்தது.
அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூடு மற்றும் தடியடியில் 13 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இச்சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு மூடி சீல் வைத்தது.
இது தொடர்பான வழக்கில் தமிழக அரசின் உத்தரவை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்தது. இதனால் ஸ்டெர்லைட் ஆலை கடந்த 7 ஆண்டுகளாக மூடப்பட்டுள்ளது.
இந்நிலையில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் 7-ம் ஆண்டு நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு துப்பாக்கி சூடு சம்பவத்தில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி இன்று காலை தூத்துக்குடி பாத்திமா நகரில் நடைபெற்றது.
இதில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு துப்பாக்கி சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் புகைப்படங்களுக்கு மலர்தூவி மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
இதைத் தொடர்ந்து, ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு சார்பில் ஸ்டெர்லைட் ஆலைக்கு வழங்கப்பட்ட நிலத்தை அரசே திரும்பப் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட 8 கோரிக்கைகளை தமிழக அரசுக்கு முன் வைத்தனர்.
இதேபோல் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டங்கள் நடைபெற்ற குமரெட்டியாபுரம், தெற்கு வீரபாண்டியபுரம், மடத்தூர், சில்வர்புரம், பாத்திமாநகர், தோமையார் கோவில் தெரு, பூபால ராயர்புரம், லயன்ஸ்டவுன் உள்ளிட்ட இடங்களிலும் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
மேலும் துப்பாக்கிச் சூட்டில் பலியானோர் சமாதிகளிலும் நினைவஞ்சலி நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்சிகளில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக் குழுக்களை சேர்ந்தவர்கள், பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தின் 7-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் தலைமையில் போலீசார் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
தொடர்ந்து இன்று காலை பாத்திமா நகர் சமுதாய நலக்கூடத்தில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தின் 7-ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
போராட்டக் குழு பெசில் கோஸ்தா தலைமை தாங்கினார். ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள் மகேஷ், மெரினா பிரபு, ஆனந்த் பாண்டியன், குணசீலன், ராஜ்குமார், சுந்தரமூர்த்தி, செல்வராஜ், மயில்சாமி, அமீர் ஜான், ஆதி ஆனந்த், அர்ஜுன், பிரபு, சுசிந்தரன், கார்த்தீபன், செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஜென்ரோஸ், மா.கிருஷ்ண மூர்த்தி வரவேற்று பேசினர்.
கெபிஸ்டன் நினைவேந்தல் நோக்கவுரையாற்றினார். நிகழ்ச்சியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு பேராசிரியை பாத்திமா பாபு, அரிராகவன் உள்ளிட்ட நிர்வாகிகள் பேசினர். இதில் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்கள், விசைப்படகு அனைத்து தொழிலாளர்கள் நலச்சங்கம் ஜவகர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகள், முக்கிய அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
- வாக்குவாதத்தில் கோபமடைந்த ஜவகர், ஜெகதீசை வெட்டியுள்ளார்.
- கொலை தொடர்பாக வழக்குபதிவு செய்த திருச்செந்தூர் தாலுகா போலீசார் ஜவகரை கைது செய்தனர்.
திருச்செந்தூர்:
தூத்துக்குடி பக்கில் புரத்தை சேர்ந்தவர் கணேஷ்குமார்(வயது 32). இவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இவரது மனைவி திருச்செந்தூர், அடைக்கலாபுரம் பிலோமிநகரை சேர்ந்த அந்தோணி பிச்சை என்பவருடன் கடந்த 3 நாட்களுக்கு முன்பு வந்து அவருடன் வாழ்ந்து வருகிறார்.
தன்னை பிரிந்து வேறொருவருடன் வாழும் மனைவி இருக்கும் இடத்தை கண்டறிய கணவர் கணேஷ்குமார் மற்றும் அவரது நண்பரான அதே பிலோமிநகரை சேர்ந்த கட்டிட தொழிலாளியான ஜெகதீஷ்(32) ஆகிய இருவரும் ஜெகதீஷின் சித்தி மகனான ஜவகர் வீட்டிற்கு சென்றுள்ளனர்.
அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் கோபமடைந்த ஜவகர், ஜெகதீசை வெட்டியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த ஜெகதீஷ் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டார். தொடர்ந்து அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் தூத்துக்குடிக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த கொலை தொடர்பாக வழக்குபதிவு செய்த திருச்செந்தூர் தாலுகா போலீசார் ஜவகரை கைது செய்தனர். இதில் கைது செய்யப்பட்ட ஜவகரின் தாயாரும், உயிரிழந்த ஜெகதீஷ் தாயாரும் உடன் பிறந்த சகோதரிகள் ஆவார்கள்.
- மீட்கப்பட்ட 5 பேரின் குடும்பத்தினருக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆறுதல் தெரிவித்தார்.
- போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
திருச்செந்தூர்:
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே உள்ள வெள்ளாளன்விளையை சேர்ந்தவர் மோசஸ் (வயது 50).இவர் கோவை துடியலூரில் மளிகை கடை நடத்தி வந்தார். இதனால் அங்கு அவர் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
இந்நிலையில் அவர் சொந்த ஊரில் உள்ள கிறிஸ்தவ ஆலய பிரதிஷ்டை விழாவில் பங்கேற்பதற்காக காரில் தனது குடும்பத்தினருடன் வந்தார்.
நேற்று முன்தினம் குற்றாலத்திற்கு சென்று விட்டு நெல்லை மூலைக் கரைப்பட்டி வழியாக வெள்ளாளன் விளைக்கு சென்றனர். காரை மோசஸ் ஓட்டி சென்றார்.
சாத்தான்குளம் அருகே உள்ள மீரான்குளம் பகுதியில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தரைமட்ட கிணற்றுக்குள் கார் பாய்ந்தது.
அப்போது கிணற்றில் தத்தளித்த மோசஸ் மகன் ஜெர்சோம், ரவி கோவில்பிச்சை மகள் ஜெனிபர் எஸ்தர், செர்சோம் மனைவி சைனி கிருபாகரன் (26) ஆகிய 3 பேரும் மீட்கப்பட்டனர்.
தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு போலீசார், தீயணைப்பு படையினர் சென்றனர். இதற்கிடையே தகவல் அறிந்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அங்கு சென்று மீட்பு பணிகளை துரிதப் படுத்தினார்.
சுமார் 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு கிணற்றில் இருந்து கார் வெளியே எடுக்கப்பட்டது. காரில் இருந்த மோசஸ், அவரது மனைவி வசந்தா(49), ரவி கோவில்பிச்சை, அவரது மனைவி கெத்சியாள் கிருபா, ஜெர்சோமின் பெண் குழந்தையான ஷாலின் (1½) ஆகிய5 பேர் பரிதாபமாக இறந்தனர்.
மீட்கப்பட்ட 5 பேரின் குடும்பத்தினருக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆறுதல் தெரிவித்தார். மேலும் மீட்கப்பட்டவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார்.
உயிரிழந்த 5 பேரின் உடல்கள் நேற்று நெல்லை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது இறந்தவர்களின் உடல்களுக்கு கனிமொழி எம்.பி. மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். இதைத்தொடர்ந்து அவர்களது உடல் சொந்த ஊரான வெள்ளாளன் விளைக்கு எடுத்து செல்லப்பட்டது.
அங்கு ஊர் மக்கள் முன்னிலையில் அங்குள்ள சி.எஸ்.ஐ. கல்லறை தோட்டத்தில் 5 பேர் உடல்களும் அருகருகே கிறிஸ்தவ முறைப்படி பிரார்த்தனை செய்யப்பட்டு அவர்களது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அப்போது ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ. ஊர்வசி அமிர்தராஜ் மற்றும் கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். இதையொட்டி இன்ஸ்பெக்டர் இன்னோசி குமார் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
- வெள்ளாவன்விளை பகுதியில் நடைபெறும் நிகழ்ச்சிக்காக 8 பேரும் வந்தபோது விபத்து ஏற்பட்டுள்ளது.
- கார் வேகமாக பாய்ந்ததில், கிணற்றுக்குள் வேன் இழுத்துச் சென்றுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே 8 பேருடன் 50 அடி ஆழ கிணற்றுக்குள் ஆம்னி வேன் பாய்ந்து விபத்துக்குள்ளானது.
வெள்ளாவன்விளை பகுதியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க ஆம்னி வேனில் ஒரு குழந்தை உள்பட 8 பேர் சென்றுக்கொண்டிருந்தபோது, சாலையோரம் கிணறு இருப்பது தெரியாமல் கட்டுப்பாட்டை இழந்து கிணற்றுக்குள் விழுந்தது.
வேன் வேகமாக பாய்ந்ததில், கிணற்றுக்குள் கார் இழுத்துச் செல்லப்பட்டுள்ளது.
இந்த வேனில் 8 பேர் பயணித்ததாகவும், அவர்கள் காருக்குள் சிக்கியிருப்பதாகவும் கூறப்பட்டது. இதில் 3 பேர் தண்ணீரில் நீந்தி தப்பியுள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் கிணற்றுக்குள் சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இதில், கிணற்றுக்குள் சிக்கியுள்ள 5 பேரின் நிலை என்ன என்பது கேள்விக் குறியாக இருந்து வந்தது.
கிரேன் கொண்டு மீட்கும் முயற்சி செய்து வந்த நிலையில், ஸ்கூபா டைவிக் வீரர்கள் வரவழைக்கப்பட்டு மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
பின்னர், 4 மணி நேர போராட்டத்திற்கு பிறகு கிரேன் மூலம் வேன் மீட்கப்பட்டது.
இதில், வேனில் சிக்கியிருந்த 5 பேரும் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே, மீட்புப் பணி நடைபெற்ற இடத்திற்கு, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வருகை தந்துள்ளார்.
- வெள்ளாவன்விளை பகுதியில் நடைபெறும் நிகழ்ச்சிக்காக 8 பேரும் வந்தபோது விபத்து ஏற்பட்டுள்ளது.
- கார் வேகமாக பாய்ந்ததில், கிணற்றுக்குள் கார் இழுத்துச் சென்றுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே 8 பேருடன் கிணற்றுக்குள் ஆம்னி கார் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
வெள்ளாவன்விளை பகுதியில் நடைபெறும் நிகழ்ச்சிக்காக ஒரு குழந்தை உள்பட 8 பேரும் வந்தபோது விபத்து ஏற்பட்டுள்ளது.
கார் வேகமாக பாய்ந்ததில், கிணற்றுக்குள் கார் இழுத்துச் சென்றுள்ளது.
இந்த காரில் 8 பேர் பயணித்ததாகவும், அவர்கள் காருக்குள் சிக்கியிருப்பதாகவும் கூறப்பட்டது. இதில் 3 பேர் தண்ணீரில் நீந்தி தப்பியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் கிணற்றுக்குள் சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில், கிணற்றுக்குள் சிக்கியுள்ள 5 பேரின் நிலை என்ன என்பது குறித்து தகவல் இல்லை. அவர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
- மது போதையில் இருந்ததாக கூறப்படும் டாக்டர், ஆஸ்பத்திரியில் இருந்த கிரில் கேட்டை அடித்ததுடன், மற்றொரு கேட்டையும் உடைத்தாக கூறப்படுகிறது.
- மருத்துவர்கள் மது போதையில் சிகிச்சை அளித்தால் வரக்கூடிய நோயாளிகளுக்கு பாதிப்பு ஏற்படக்கூடிய சூழ்நிலை உள்ளது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் இன்று புற நோயாளிகள் சிகிச்சை பெறுவதற்காக காலை 6 மணிக்கு நோயாளிகள் வந்து காத்திருந்தனர். அப்போது ஆண்கள் மருத்துவப் பகுதியில் சிகிச்சை அளிக்கக்கூடிய பொது மருத்துவ பிரிவை சேர்ந்த டாக்டர் கண்ணன் என்பவர் காலை 6.30 மணிக்கு பணிக்கு வந்துள்ளார்.
அப்போது மது போதையில் இருந்ததாக கூறப்படும் டாக்டர், ஆஸ்பத்திரியில் இருந்த கிரில் கேட்டை அடித்ததுடன், மற்றொரு கேட்டையும் உடைத்தாக கூறப்படுகிறது. பின்னர் அவர் புற நோயாளிகள் பிரிவில் ஆண்கள் மருத்துவ பகுதிக்கு சென்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துள்ளார்.
இந்நிலையில் காலையில் தனது பக்கத்து வீட்டை சேர்ந்த முதியவர் ஒருவருக்கு ஸ்கேன் எடுப்பதற்காக தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு வந்திருந்த தூத்துக்குடி லூர்தம்மாள் புரம் பகுதியை சேர்ந்த சரோஜா என்ற பெண் இந்த சம்பவத்தை பார்த்து தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.
இது தொடர்பாக மருத்துவமனையில் பணியில் இருந்த சக டாக்டர்களிடம் புகார் தெரிவித்தார். இது பற்றி அவர் கூறுகையில், மருத்துவர்கள் மது போதையில் இருந்து சிகிச்சை அளித்தால் வரக்கூடிய நோயாளிகளுக்கு வழங்கப்படும் மாத்திரைகள் மற்றும் சிகிச்சையில் பாதிப்பு ஏற்படக்கூடிய சூழ்நிலை உள்ளது. எனவே இது தொடர்பாக தமிழக அரசு மற்றும் மருத்துவக் கல்லூரி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இதைத்தொடர்ந்து பணியில் இருந்த டாக்டர் கண்ணன் மாற்றப்பட்டு அந்த இடத்திற்கு வேறொரு டாக்டர் அமர்த்தப்பட்டு அவர் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறார்.






