என் மலர்tooltip icon

    திருச்சிராப்பள்ளி

    • பா.ஜ.க.வினர்.,அ.தி.மு.க. உள்ளிட்ட கூட்டணி கட்சியினரும் திரண்டு நின்று உற்சாகமாக கையசைத்தனர்.
    • சுமார் 7 கிலோமீட்டர் தூரம் சாலையின் இருபுறமும் நின்ற மக்களைபார்த்து கையசைத்தபடி சென்றார்.

    திருச்சியில் நட்சத்திர விடுதியில் தங்கி இருந்த பிரதமர் மோடி இன்று காலை 11 மணி அளவில் கங்கைகொண்ட சோழபுரத்துக்கு புறப்பட்டார். காரில் விமான நிலையத்துக்கு சென்ற பிரதமர் மோடி விடுதியில் இருந்து ரோடு ஷோவாக மக்களை பார்த்து கையசைத்தபடி சென்றார்.

    அப்போது சாலையில் இருபுறமும் ஏராளமான பொதுமக்கள் மற்றும் பா.ஜ.க.வினர்.,அ.தி.மு.க. உள்ளிட்ட கூட்டணி கட்சியினரும் திரண்டு நின்று உற்சாகமாக கையசைத்தனர்.

    மேலும் பாஜகவினர் மோடியை வாழ்த்தி கோஷம் எழுப்பினார்கள்.

    வரவேற்பை உற்சாகமாக ஏற்றுகொண்ட பிரதமர் மோடி திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக சாலை, கண்டோன்மென்ட், மாநகராட்சி அலுவலகம், ஒத்தக்கடை , தலைமை தபால் நிலைய சிக்னல் கடந்து டி.வி.எஸ். டோல்கேட், சுப்பிரமணியபுரம், மத்திய சிறை பகுதி சாலை வழியாக சுமார் 7 கிலோமீட்டர் தூரம் சாலையின் இருபுறமும் நின்ற மக்களைபார்த்து கையசைத்தபடி சென்றார்.

    திருச்சி மாநகராட்சி அலுவலகம் அருகே ஒத்தக்கடையில் பாரதிய ஜனதா கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் திரண்டு நின்று பிரதமருக்கு வரவேற்பு அளித்தனர். இப்பகுதியில் அ.தி.மு.க. சார்பில் பிரதமரை வரவேற்று பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. அதில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி படங்களும் இடம்பெற்று இருந்தது.

    விமான நிலையம் வந்ததும் அங்கிருந்து ஹெலிகாப்டரில் கங்கைகொண்ட சோழபுரத்துக்கு புறப்பட்டார். 

    • தமிழ்நாட்டின் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து அளிக்கப்பட வேண்டிய கோரிக்கை மனுவிற்கு முதலமைச்சர் ஒப்புதல் அளித்தார்.
    • திருச்சியில் பிரதமரிடம் முதலமைச்சரின் கோரிக்கை மனுவை வழங்கிய அமைச்சர் தங்கம் தென்னரசு.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 21-ந் தேதியன்று தலை சுற்றல் காரணமாக அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். டாக்டர்களின் பரிந்துரையின்படி அவருக்கு பல்வேறு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டன. இதையடுத்து டாக்டர்களின் ஆலோசனையின்பேரில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதைதொடர்ந்து, மருத்துவமனையில் இருந்தபடியே அரசு பணிகளில் ஈடுபட்டு வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,

    தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடியிடம், தமிழ்நாட்டில் நிறைவேற்றப்பட வேண்டிய பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து கோரிக்கை மனு அளிக்கஆலோசனை நடத்தினார்.

    பின்னர், தமிழ்நாட்டின் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து அளிக்கப்பட வேண்டிய கோரிக்கை மனுவிற்கு முதலமைச்சர் ஒப்புதல் அளித்தார்.

    அப்போது கனிமொழி எம்.பி. மற்றும் முதல்-அமைச்சரின் செயலாளர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

    தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைத்தள பதிவில்,"மருத்துவமனையில் இருப்பதால், பிரதமரிடம் வழங்குவதற்கான கோரிக்கைகள் அடங்கிய மனுவை தலைமைச் செயலாளர் மூலமாக கொடுத்து அனுப்பியுள்ளேன். நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, அதை பிரதமரிடம் வழங்குவார்' என்று குறிப்பிட்டிருந்தார்.

    இந்நிலையில், தமிழ்நாட்டிற்கு வந்துள்ள பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

    முதலமைச்சரின் இந்த கோரிக்கை மனுவை திருச்சியில் பிரதமர் நரேந்திர மோடியிடம் அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கினார்.

    அதில், சமக்ர சிக்ஷா திட்டத்தின் கீழ் ரூ.2,151.59 கோடியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

    PM SHRI புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதை நிபந்தனை ஆக்காமல் நிதியை விடுவிக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டுக்கான ரெயில்வே திட்ட்ஙகளுக்கு உடனடியாக நிதியை விடுவிக்க வேண்டும். மேலும், கோயம்புத்தூர் மற்றும் மதுரை மெட்ரோ ரெயில் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க கோரிக்கை அளிக்கப்பட்டுள்ளது.



    • தூத்துக்குடி நிகழ்வை முடித்துக்கொண்டு திருச்சி சென்றார் பிரதமர் மோடி.
    • ரூ.4,900 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

    பிரதமர் மோடி தனது 4 நாட்கள் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களை முடித்த நிலையில், நேற்று மாலை தூத்துக்குடி வந்தடைந்தார்.

    அப்போது பிரதமர் மோடி தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்து விமானத்தில் இருந்து இறங்கினார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    பிரதமர் மோடியை ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் வரவேற்றனர்.

    தொடர்ந்து, தூத்துக்குடி விமான நிலைய வளாகத்தில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

    விழாவில் தமிழக அரசு சார்பில் தூத்துக்குடி எம்பி கனிமொழி, அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, டிஆர்பி ராஜா ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

    நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, பிரதமர் மோடிக்கு வள்ளுவர் கோட்டம் மாதிரியை நினைவுப் பரிசாக வழங்கினார்.

    இந்நிலையில், பிரதமர் மோடி தூத்துக்குடில் பல்வேறு திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார். குறிப்பாக, ரூ.4,900 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

    ரூ.450 கோடி மதிப்பில் கட்டப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தில் புதிய முனையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

    இந்நிகழ்வை முடித்துக்கொண்டு திருச்சி சென்றார் பிரதமர் மோடி. இதையடுத்து அவரை, அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார். சில நிமிடங்கள் இந்த சந்திப்பு நடந்தது.

    அப்போது அ.தி.மு.க. துணை பொதுச் செயலாளர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி.வேலுமணி மற்றும் முன்னாள் அமைச்சர் காமராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்

    இந்த சந்திப்பின் போது கோரிக்கை மனு ஒன்றையும் எடப்பாடி பழனிசாமி , பிரதமர் மோடியிடம் அளித்துள்ளார். அந்த கோரிக்கை மனுவில் இடம் பெற்று இருப்பதாவது:-

    *விவசாய கடன் வழங்குவதற்கு சிபில் ஸ்கோர் கேட்பதில் இருந்து வங்கிகள் விவசாயிகளுக்கு விதிவிலக்கு வழங்க வேண்டும் .

    *கோதாவரி - காவிரி இணைப்பு திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்து உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

    *தமிழ்நாட்டில் ராணுவ தளவாட உற்பத்திக்கு வழிவகுக்கும் பிரத்யேக ராணுவ வழித்தடம் ஒன்றை சென்னை, கோவை, ஓசூர், சேலம், திருச்சியை இணைத்து செயல்படுத்த வேண்டும்

    ஆகிய கோரிக்கைகள் இடம் பெற்றுள்ளன.

    இந்த மனுவை பெற்றுக் கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, கோரிக்கை மனுவை பரிசீலித்து ஆவண செய்வதாக உறுதி அளித்துள்ளார்.



    • பிரதமர் மோடியை ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் வரவேற்றனர்.
    • கோவிலில் பிரதமர் மோடிக்கு திருவாவடுதுறை ஆதீனம் தலைமையில் பூர்ண கும்ப மரியாதை வழங்கப்படுகிறது.

    பிரதமர் மோடி தனது 4 நாட்கள் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களை முடித்த நிலையில், நேற்று மாலை தூத்துக்குடி வந்தடைந்தார்.

    அப்போது பிரதமர் மோடி தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்து விமானத்தில் இருந்து இறங்கினார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    பிரதமர் மோடியை ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் வரவேற்றனர்.

    தொடர்ந்து, தூத்துக்குடி விமான நிலைய வளாகத்தில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

    விழாவில் தமிழக அரசு சார்பில் தூத்துக்குடி எம்பி கனிமொழி, அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, டிஆர்பி ராஜா ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

    நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, பிரதமர் மோடிக்கு வள்ளுவர் கோட்டம் மாதிரியை நினைவுப் பரிசாக வழங்கினார்.

    இந்நிலையில், பிரதமர் மோடி தூத்துக்குடில் பல்வேறு திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார். குறிப்பாக, ரூ.4,900 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

    ரூ.450 கோடி மதிப்பில் கட்டப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தில் புதிய முனையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

    இந்நிகழ்வை முடித்துக்கொண்டு திருச்சி சென்ற பிரதமர் மோடி,

    தனியார் நட்சத்திர விடுதியில் தங்கியுள்ளார். கங்கைகொண்ட சோழபுரத்தில் ஆடி திருவாதிரை விழாவில் பங்கேற்பதற்காக இன்று காலை 11 மணிக்கு ஓட்டலில் இருந்து கார் மூலம் விமான நிலையத்திற்கு செல்கிறார்.

    செல்லும் வழியில் கண்டோன்மெண்ட், பாரதிதாசன் சாலை ஆகிய இடங்களில் மக்களை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக பாரதிதாசன் சாலையின் ஒரு பகுதியில் ரோடு- ஷோ நடத்துவதற்கு வசதியாக இரும்பு தடுப்புகள் வைக்கப்பட்டு உள்ளது. பின்னர் பிரதமர் மோடி திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கங்கை கொண்ட சோழபுரத்திற்கு செல்கிறார். அங்கு நடைபெறும் ரோடு ஷோவில் மக்களை சந்திக்கிறார்

    கோவிலில் பிரதமர் மோடிக்கு திருவாவடுதுறை ஆதீனம் தலைமையில் பூர்ண கும்ப மரியாதை வழங்கப்படுகிறது. பின்னர், வாரணாசியில் இருந்து கொண்டு வரப்படும் கங்கை நீரை கொண்டு பிரகதீஸ்வரருக்கு மகா அபிஷேகம் நடைபெறுகிறது. பிரதமர் மோடி, சாமி தரிசனம் செய்த பின்னர் 3 நிமிடங்களுக்கு கோவிலில் அமர்ந்து தியானம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

    தொடர்ந்து கோவில் சிற்பங்களையும், தொல்லியல் துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள புகைப்பட கண்காட்சியையும் பார்வையிடுகிறார்.

    இதைத்தொடர்ந்து அங்கு நடைபெறும் விழாவில், ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார். விழாவில் இசையமைப்பாளர் இளையராஜாவின் சிம்பொனி இசை நிகழ்ச்சி நடக்கிறது. இசையை கேட்டு ரசிக்கும் பிரதமர் மோடி, பின்னர் மதியம் சுமார் 1.45 மணியளவில் அங்கிருந்து ஹெலிகாப்டரில் புறப்படுகிறார். பிற்பகல் 2.25 மணிக்கு அந்த ஹெலிகாப்டர் திருச்சி விமான நிலையத்தில் தரை இறங்கியதும், 2.30 மணிக்கு விமானம் மூலம் நேரடியாக டெல்லிக்கு புறப்படுகிறார்.

    • ரூ.450 கோடியில் கட்டப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தின் புதிய முனையத்தை பிரதமர் மோடி திறந்துவைத்தார்.
    • தூத்துக்குடி நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி தனி விமானம் மூலம் திருச்சி வந்தடைந்தார்.

    திருச்சி:

    பிரதமர் நரேந்திர மோடி தனது வெளிநாட்டு சுற்றுப்பயணங்களை முடித்த நிலையில், இன்று மாலை தூத்துக்குடி வந்தார். தமிழக பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்து விமானத்தில் இருந்து இறங்கினார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    பிரதமர் மோடியை ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் வரவேற்றனர்.

    தூத்துக்குடி விமான நிலைய வளாகத்தில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அப்போது, பிரதமர் மோடி தூத்துக்குடியில் ரூ.4,900 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்தார். மேலும், ரூ.450 கோடி மதிப்பில் கட்டப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தில் புதிய முனையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

    இந்நிலையில், தூத்துக்குடி நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி தனி விமானம் மூலம் திருச்சி வந்தடைந்தார். அப்போது விமான நிலையத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தார். இந்தச் சந்திப்பின் போது தமிழ்நாடு கோரிக்கைகள் தொடர்பான மனுவை எடப்பாடி பழனிசாமி அளித்தார்.

    இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி கூறுகையில், இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என தெரிவித்தார்.

    • திருச்சி விமான நிலையம் முதல் பிரதமர் தங்கும் ஓட்டல் வரை செல்லும் பாதையில் நேற்று பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது.
    • முதலில் பிரதமர் மோடி டி.வி.எஸ். டோல்கேட் பகுதியில் உள்ள சுற்றுலா மாளிகையில் தங்குவதாக இருந்தது.

    திருச்சி:

    அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் நாளை மத்திய தொல்லியல்துறை சார்பாக மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்த நாளான ஆடி திருவாதிரை நிறைவு நாள் உள்ளிட்ட முப்பெரும் விழா நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

    இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் சுற்றுப்பயணமாக இன்று (சனிக்கிழமை) தூத்துக்குடி வருகிறார். பின்னர் அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அவர் தூத்துக்குடியில் இருந்து விமானம் மூலம் இன்று இரவு 10:30 மணிக்கு திருச்சி வருகிறார்.

    பின்னர் விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள கோர்ட் யார்டு மாரியாட் ஹோட்டலில் இரவு தங்கி ஓய்வு எடுக்கிறார். நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 11:30 மணியளவில் திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்துக்கு செல்கிறார்.

    அங்கு மத்திய அரசின் கலாச்சாரத்துறை அமைச்சகத்தின் சார்பில் நடைபெறும் மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்த நாளான ஆடி திருவாதிரை நிறைவு நாள் விழாவில் கலந்து கொள்கிறார்.

    முன்னதாக நாளை காலை காரில் விமான நிலையம் செல்லும்போது, கோர்ட்டு யார்டு ஹோட்டலில் இருந்து மேஜர் சரவணன் ரவுண்டானா, எம்ஜிஆர் சிலை, நீதிமன்றம், பாரதிதாசன் சாலை, தலைமை தபால் நிலையம், குட் ஷெட் மேம்பாலம், டிவிஎஸ் டோல்கேட், புதுக்கோட்டை சாலை, விமான நிலையம் வரை சுமார் 8 கிலோமீட்டர் தொலைவிற்கு பிரதமர் மோடி ரோடு ஷோவாக சென்று மக்களை சந்திக்கிறார்.

    பின்னர் விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டரில் கங்கைகொண்ட சோழபுரம் புறப்பட்டு செல்கிறார். அங்கு பைபாஸ் சாலையை ஒட்டி பொன்னேரி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடில் இறங்குகிறார்.

    பின்னர் அங்கும் 1 கிலோ மீட்டர் தொலைவுக்கு விழா நடைபெறும் கங்கை கொண்ட சோழபுரம் கோவில் வரை ரோடு ஷோ மூலம் மக்களை சந்திக்கிறார். ரோடு ஷோ நடைபெறும் பகுதிகளில் இரும்பு பேரிக்கார்டுகள் வைக்கப்பட்டுள்ளது.

    மேலும் இந்த ரோடு ஷோவில் பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்களும் பங்கேற்பதாக கூறப்படுகிறது. பிரதமர் தங்கும் ஓட்டலுக்கு 6 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. எல்பிஜி அதிகாரிகள், எல்.பி.ஜி. பாதுகாப்பு அதிகாரிகள், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், தமிழக காவல்துறையினர், வெடிகுண்டு கண்டறியும் நிபுணர் குழுவினர் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள். மேலும் மத்திய மாநில அரசுகளின் உளவுத்துறை அதிகாரிகளும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    திருச்சி விமான நிலையம் முதல் பிரதமர் தங்கும் ஓட்டல் வரை செல்லும் பாதையில் நேற்று பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது. மேலும் அரியலூர் கங்கைகொண்ட சோழபுரத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காக முதலில் அமைக்கப்பட்ட பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்ட ஹெலிபேட் பொன்னேரி பகுதிக்கு மாற்றப்பட்டது.

    அதேபோன்று முதலில் பிரதமர் மோடி டி.வி.எஸ். டோல்கேட் பகுதியில் உள்ள சுற்றுலா மாளிகையில் தங்குவதாக இருந்தது. அதுவும் பாதுகாப்பு காரணங்களால் கடைசி நேரத்தில் நேற்று கலெக்டர் அலுவலகம் அருகாமையில் உள்ள தனியார் தங்கும் விடுதிக்கு மாற்றப்பட்டது. பிரதமர் வருகையை முன்னிட்டு திருச்சி மாநகர் மற்றும் அரியலூர் கங்கைகொண்ட சோழபுரம் பகுதியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

    • வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு பயணிகளை வரவேற்க வரும் உறவினர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
    • மாநகர் மற்றும் விமானநிலைய பகுதிகளில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    திருச்சி:

    பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு திருச்சியில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. சிறப்பு பாதுகாப்புக்குழு (எஸ்.பி.ஜி.) டி.ஐ.ஜி. விமுக்த் நிரஞ்சன் தலைமையிலான அதிகாரிகள், திருச்சி விமானநிலையம், பிரதமர் தங்கும் தனியார் ஓட்டல் ஆகியவற்றை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர்.

    திருச்சி விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இங்கு வாகனங்கள், பயணிகள் உடைமைகள் தீவிர பரிசோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றன.

    விமான நிலையத்தின் கார் பார்க்கிங், பயணிகள் வருகை, புறப்பாடு ஆகிய பகுதிகளில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தி வருகின்றனர். வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு பயணிகளை வரவேற்க வரும் உறவினர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

    மேலும் பிரதமர் வந்து செல்லும் பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். எஸ்.பி.ஜி. அதிகாரிகள் விமானம் மூலம் விமான நிலையத்தை சுற்றியுள்ள பகுதியில் வானில் வட்டமடித்தபடி ரோந்து சென்று கண்காணித்தனர்.

    விமான நிலைய நுழைவு வாயில் பகுதியில் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டு உள்ளதால் தேவையில்லாத வாகனங்கள் மற்றும் ஆட்கள் செல்வது தடுத்து நிறுத்தப்படுகிறது. விமான நிலைய ஊழியர்கள் அடையாள அட்டை இருந்தால் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.

    இதே போல பிரதமர் தங்கும் தனியார் ஓட்டலிலும், பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு, வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் எஸ்.பி.ஜி. அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்னர். இங்கு 6 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. பிரதமர் வந்து செல்லும் திருச்சி-புதுக்கோட்டை சாலை, பாரதிதாசன் சாலை, கலெக்டர் அலுவலக சாலை, குட்ஷெட் மேம்பாலம் 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

    மாநகர் மற்றும் விமானநிலைய பகுதிகளில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரதமர் வருகைக்காக ராணுவ விமானங்கள், ஹெலிகாப்டர்கள் திருச்சி விமான நிலையம் வந்திறங்கின. பிரதமர் பாதுகாப்பு மற்றும் வரவேற்பு உள்ளிட்டவைகள் குறித்த ஒத்திகை நடந்தது. திருச்சி-புதுக்கோட்டை சாலையில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட பகுதி மற்றும் கடை வீதிகளில் இரும்பு தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளது. கொட்டப்பட்டு இலங்கை அகதிகள் முகாம் முகப்பு சாமியானா பந்தல் மூலம் மூடி மறைக்கப்பட்டுள்ளது.

    மாநகராட்சி சார்பில் தூய்மைப்பணிகள் மற்றும் சாலைகளில் இருந்த குழிகள் சீரமைக்கப்பட்டுள்ளது.

    பாதுகாப்பு காரணங்களுக்காக பிரதமர் வந்து செல்லும் வழித்தடத்தில் உள்ள கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் நாளை மதியம் வரை மூட போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். மேலும் விமான நிலையம் மற்றும் கலெக்டர் அலுவலக சாலையில் சுற்றியுள்ள குடியிருப்புகள் மற்றும் ஓட்டல்களை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். விமானநிலையம் மற்றும் பகுதி முழுவதிலும் 2 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. 

    • இபிஎஸ் மக்கள் கூட்டத்திற்கு முன் ஏதாவது பேச வேண்டும் என பேசிக் கொண்டிருக்கிறார்.
    • எங்கள் கட்சியில் நடக்கும் விவகாரங்கள் குறித்து எடப்பாடி பழனிச்சாமி கவலைப்பட தேவையில்லை.

    திருச்சியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    உங்களுடன் ஸ்டாலின் முகாம் அனைத்து இடங்களிலும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலமுடன் உள்ளார். இன்னும் 2 நாட்களில் அவர் வீடு திரும்புவார்.

    ஓரணியில் தமிழ்நாடு திட்டம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதை பொறுத்துக் கொள்ள முடியாமல் தான் சிலர் நீதிமன்றம் சென்று உள்ளார்கள். எது எப்படி இருந்தாலும் நீதிமன்ற உத்தரவை பின்பற்றி நாங்கள் செயல்படுவோம்.

    திட்டத்தின் பெயரை வைத்தும் சிலர் அரசியல் செய்து வருகிறார்கள். தமிழகத்தில் இந்த கல்வி ஆண்டுக்கான பள்ளி பொது தேர்வு கால அட்டவணைகள் இன்னும் ஒரு வாரத்தில் வெளியிடப்படும்.

    எடப்பாடி பழனிச்சாமி தற்போது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி விட்டார். மக்கள் கூட்டத்திற்கு முன் ஏதாவது பேச வேண்டும் என பேசிக் கொண்டிருக்கிறார். ஆனால் அது எதுவும் எடுபடவில்லை.

    அவர் மற்ற கட்சிகளை கூட்டணிக்கு அழைக்கிறார். ஆனால் அவருடைய அழைப்பை அனைவரும் நிராகரித்து வருகிறார்கள்.

    உதயநிதி ஸ்டாலின் தி.மு.க.வில் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட இளம் தலைவராக இருக்கிறார். எங்கள் கட்சியில் நடக்கும் விவகாரங்கள் குறித்து எடப்பாடி பழனிச்சாமி கவலைப்பட தேவையில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வாழவந்தான் கோட்டை துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
    • புதுக்குளம், இடையப்பட்டி, மேலபாகனூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

    திருச்சி:

    வாழவந்தான் கோட்டை துணை மின் நிலையத்தில் நாளை (புதன் கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற் கொள்ளப்பட உள்ளன. இதையொட்டி ஜெய் நகர், திருவேங்கடநகர், கணேசபுரம்,

    கணபதிநகர், கீழ குமரேசபுரம், மேலகுமரேசபுரம், கூத்தைப்பார், கிருஷ்ணசமுத்திரம், பத்தாளப்பேட்டை, கிளியூர், தமிழ்நகர், பெல் டவுன்ஷிப் சி மற்றும் டி செக்டாரில் ஒரு பகுதி, சொக்கலிங்கபுரம், இமானுவேல் நகர், வ.உ.சிநகர், எழில் நகர், அய்யம்பட்டி,

    வாழவந்தான் கோட்டை, தொண்டைமான்பட்டி, திருநெடுங்குளம், வாழவந்தான்கோட்டை சிட்கோ தொழிற்பேட்டை, பெரியார்நகர், ரெட்டியார்தோட்டம், ஈச்சங்காடு, பர்மாநகர், மாங்காவனம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும்.

    இதேபோல் அம்மாபேட்டை துணை மின்நிலையத்தில் நாளை (புதன் கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி நாளை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை ராம்ஜி நகர், கள்ளிக்குடி, அரியாவூர், சன்னாசிப்பட்டி, சத்திரப்பட்டி, அம்மாப்பேட்டை, இனாம்குளத்தூர், வெள்ளிவாடி, நவலூர்குட்டப்பட்டு,

    பூலாங்குளத்துப்பட்டி, சித்தாநத்தம், ஆலம்பட்டிபுதூர், கரையான்பட்டி, வடசேரி, புதுக்குளம், இடையப்பட்டி, மேலபாகனூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

    இந்த தகவலை திருச்சி கிழக்கு மின்வாரிய செயற்பொறியாளர் கணேசன் தெரிவித்துள்ளார்.

    • கோஷங்கள் எழுப்பியபடி ராஜா காலனியில் உள்ள திருச்சி சிவா வீட்டை நோக்கி ஊர்வலமாக புறப்பட்டனர்.
    • காமராஜர் ஆட்சி போன்று தமிழக மக்கள் ஒரு ஆட்சியை கண்டதில்லை.

    திருச்சி:

    பெருந்தலைவர் காமரஜர் குறித்த திருச்சி சிவா எம்.பி. பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். திருச்சி சிவா எம்.பி. பேச்சை காங்கிரஸ் கட்சியும் கண்டித்து உள்ளது.

    அவர் மன்னிப்பு கேட்காவிட்டால் அவரது வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்று காங்கிரஸ் கட்சி மாநில பொதுச் செயலாளர் வக்கீல் சரவணன் அறிவித்தார்.

    இதை தொடர்ந்து வக்கீல் சரவணன் தலைமையில், சிவாஜி பேரவை தலைவர் சிவாஜி சண்முகம், தமிழ்நாடு பாண்டிச்சேரி பார் கவுன்சில் உறுப்பினர் ராஜேந்திர குமார் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகாமையில் உள்ள வ.உ.சி. சிலை முன்பு திரண்டனர்.

    பின்னர் அங்கிருந்து கோஷங்கள் எழுப்பியபடி ராஜா காலனியில் உள்ள திருச்சி சிவா வீட்டை நோக்கி ஊர்வலமாக புறப்பட்டனர்.

    அப்போது அங்கு பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டிருந்த போலீசார் நீதிமன்ற நுழைவு வாயில் முன்பு சரவணன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோரை கைது செய்து வேனில் அழைத்து சென்றனர்.

    பின்னர் அவர்களை வெஸ்ட்ரி பள்ளி மைதானத்தில் உள்ள ஒரு அரங்கில் அடைத்து வைத்தனர். இந்தப் போராட்டம் காரணமாக திருச்சியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    முன்னதாக வக்கீல் சரவணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பெருந்தலைவர் காமராஜர் மனித கடவுள். அவரைப் பற்றி அவதூறான கருத்தை பரப்பிய திருச்சி சிவா எம்.பி. நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். காமராஜர் ஆட்சி போன்று தமிழக மக்கள் ஒரு ஆட்சியை கண்டதில்லை.

    மக்களுக்கு வழங்கிய ரேஷன் அரிசியை தானும் சாப்பிட்டு வந்த மகான் காமராஜர். தமிழ்நாடு அரசின் விடுதியில் காமராஜருக்காக ஏ.சி. பொருத்தப்பட்டதாக உண்மைக்கு புறம்பான செய்தியை தெரிவித்துள்ளார்.

    திருச்சி சிவாவின் விளக்கம் ஏற்கும்படியாக இல்லை. அவர் காங்கிரஸ் தொண்டர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • தி.மு.க. அரசு தனது அதிகாரத்தை பயன்படுத்தி வாக்கு சேகரித்து வருகிறது.
    • தேர்தல் வரும்போது மட்டும் எப்படி தி.மு.க.வுக்கு மக்கள் மீது திடீர் திடீரென்று காதல் வருகிறது.

    திருச்சி:

    திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-

    உங்களோடு ஸ்டாலின் திட்டம் மூலமாக ஒரு அரசு தனது அரசு எந்திரத்தை முழுமையாக தேர்தல் பரப்புரைக்கு, கட்சி வேலைக்கு பயன்படுத்துகிறது.

    தி.மு.க. அரசு தனது அதிகாரத்தை பயன்படுத்தி வாக்கு சேகரித்து வருகிறது.

    குடும்பத் தலைவிக்கு ஆயிரம் என்று தேர்தலுக்கு முன்பு சொன்னார்கள். வென்று ஆட்சிக்கு வந்த பிறகு தகுதி வாய்ந்த பெண்களுக்கு என கூறினார்கள். இப்போது தேர்தலுக்கு ஆறு மாதம் இருக்கும் நிலையில் விடுபட்டவர்களுக்கு உரிமைத்தொகை தருவோம் என்று சொல்கிறார்கள்.

    தேர்தல் வரும்போது மட்டும் எப்படி தி.மு.க.வுக்கு மக்கள் மீது திடீர் திடீரென்று காதல் வருகிறது. பள்ளம் மூடப்படுகிறது?. சாலை போடப்படுகிறது.

    உங்களோடு முதல்வர் என பல திட்டங்களை கொண்டு வரும் தி.மு.க. அரசின் முதல்வர் இதுவரை எங்கே இருந்தார்?

    50 ஆண்டுகள் ஆட்சி அதிகாரத்தில் இருந்த தி.மு.க. பா.ஜ.க.வை பார்த்து எதற்கு பயப்பட வேண்டும்.

    மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்பது முந்தைய நிலைப்பாடு. இப்போது மத்தியில் கூட்டாட்சி. மாநிலத்தில் குடும்ப ஆட்சி என்று மாறி உள்ளது.

    எங்களுக்கு பல்லாயிரம் வழிகாட்டிகள் இருக்கிறார்கள். பெரியார் எங்களுக்கு தேவையில்லை.

    அடுத்த (ஆகஸ்ட்) மாதம் 17-ந்தேதி மரங்கள் மாநாடு நடத்த இருக்கிறோம். மரங்களோடு பேசுவோம் மரங்களுக்காக பேசுவோம். மரம் மண்ணின் வளம். மரம் நடுவது மனிதனின் அறம் என்பது எங்களுடைய கொள்கை.

    ஆடும் மாடும் இல்லாமல் ஒரு நாடு எப்படி வளம்பெறும். உயர்திணை சரியாக வாழ வேண்டும் என்றால் அகர்தினை வாழ வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.



    • சமூக நீதி எங்கு நிலைநாட்டப்பட்டுள்ளது? விடுதி கட்டிடத்திற்கு எதற்கு சமூக நீதி பெயர்?
    • வெற்று அறிக்கை... வெற்று விளம்பரங்கள்...

    திருச்சி:

    திருச்சியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * பா.ஜ.க.வுக்கும் தி.மு.க.வுக்கும் என்ன வேறுபாடு உள்ளது.

    * மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் குடும்ப ஆட்சி என தி.மு.க. செயல்படுகிறது.

    * சமூக நீதி எங்கு நிலைநாட்டப்பட்டுள்ளது? விடுதி கட்டிடத்திற்கு எதற்கு சமூக நீதி பெயர்?

    * 100 சதவீதம் இந்து என பா.ஜ.க. கூறினால் 90 சதவீதம் இந்து என தி.மு.க. கூறுகிறது. ஆன்மிக ஆட்சி நடக்கிறது என சேகர்பாபு கூறுகிறார்.

    * வெற்று அறிக்கை... வெற்று விளம்பரங்கள்... என்றார்

    ×