என் மலர்tooltip icon

    சிவகங்கை

    • வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு-காப்பீடு தொகையை முழுமையாக வழங்க வேண்டும்.
    • அரசுக்கு காங்கிரஸ் கட்சி கோரிக்கை வைத்துள்ளார்.

    தேவகோட்டை

    தமிழக காங்கிரஸ் கட்சியின் சட்ட ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் முன்னாள் எம்.எல்.ஏ. ராமசாமி தேவகோட்டையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அரசு இழப்பீடு, காப்பீடு தொகையை முழுமையாக வழங்க வேண்டும். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தேவகோட்டை அருகே கண்ணங்கோட்டை கிராமத்தில் தாய், மகளை கொலை செய்து 60 பவுன் நகை கொள்ளை யடிக்கப்பட்டது.

    இந்த சம்பவம் தொடர்பாக 2 பேரை கைது செய்த தங்கநகை, வெள்ளி பொருட்களை கைப்பற்றியதாக போலீசார் தெரிவித்தனர். ஆனால் சம்பந்தபட்டவர்கள் போலீசார் கைப்பற்றிய பொருட்கள் தங்கள் வீட்டில் திருடப்பட்டது இல்லை என கூறியுள்ளனர்.

    இதனால் வழக்கின் உண்மை தன்மை கேள்விக்குறியாகியுள்ளது. வழக்கு குறித்து போலீசாரும் சரியான பதிலளிக்கவில்லை. சிவகங்கை மாவட்டத்தில் கொலை, கொள்ளை சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன.

    கண்ணங்கோட்டை இரட்டை கொலை வழக்கை முதல்-அமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்வேன். தேவைப்பட்டால் இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டுமென கோரிக்கை வைப்போம். காவல்துறை உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வாகனம் மோதி மான் பரிதாபமாக இறந்தது.
    • நெடுஞ்சாலையில் எச்சரிக்கை பலகைகள் வைக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    தேவகோட்டை

    தேவகோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதியில் அதிக அளவில் மான்கள் நடமாட்டம் உள்ளது. நகரின் எல்லை பகுதியில் தற்போது புதிதாக அமைக்கப்பட்ட திருச்சி-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது.இதில் வாகன ஓட்டிகள் அதிவேகமாக செல்கின்றனர்.

    அமராவதி புதூரில் இருந்து புளியால் வரை உள்ள காட்டுப் பகுதிகளில் மான்கள் அதிகமாக உள்ளது. இந்தப் பகுதியில் இருந்து கிராமப் பகுதிகளுக்கு தண்ணீர் குடிப்பதற்காக மான்கள் நெடுஞ்சாலையைக் கடந்து வருவது வழக்கம்.

    அப்படி கடந்து வரும் போது வேகமாக வரும் வாகனங்களில் அடிபட்டு இறப்பது தொடர் கதையாகி வருகிறது. இந்த நிலையில், இன்று காலை தேவகோட்டை அருகே திருச்சி-ராமேசு வரம் தேசிய நெடுஞ்சாலையில் மாரிச்சான்பட்டி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஆண் மான் ஒன்று இறந்து கிடந்தது.

    இதனை கண்ட அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். வனத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மானின் உடலை மீட்டுச் சென்றனர்.

    மான்கள் வாகனங்களில் அடிபட்டு இறப்பது தொடர்ச்சியாக நடந்து வரும் நிலையில், நெடுஞ்சாலை ஓரங்களில் மான்கள் நடமாட்டம் குறித்தும், வேகக்கட்டுபாடுடன் வாகனங்களை இயக்க அறிவுறுத்தும் வகையிலும் எச்சரிக்கை போர்டுகள் வைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பொதுமக்களின் எதிர்ப்பை மீறி பஸ் நிலையம் அமைக்கும் பணியை நிறுத்த வேண்டும்
    • மனிதநேய ஜனநாயக கட்சியினர் வலியுறுத்துகின்றனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் மனித நேய ஜனநாயக கட்சியின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடந்தது. பொதுச செயலாளர் ஹாரூன் ரசீது சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார். மாநில துணைச் செயலாளர் சைபுல்லா முன்னிலை வகித்தார்.

    நிர்வாகிகள் சலீம், அபூபக்கர், சிராஜுதீன், அசாருதீன், உஸ்மான், அல்லாபிச்சை, முஜிபுர் ரகுமான் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    சிவகங்கை மாவட்டத்தில் பேரூர்களை இணைக்கும் வகையில் சிவகங்கை, திருப்புவனம், மானா மதுரை, இளையான்குடி, காளையார் கோயில், சிவகங்கை வழித்தட ங்களில் இரு மார்க்கங்களிலும் வட்ட பஸ்கள் இயக்க வேண்டும்.

    சிவகங்கை மாவட்டத்தில் அதிகரித்துள்ள கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த காவல்துறை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சிவகங்கை நேரு பஜாரில் குடியிருப்புகளுக்கு அருகில் மதுக்கடை மற்றும் மதுக்கூடம் மீண்டும் திறக்க முயற்சி நடப்பதை மாவட்ட நிர்வாகம் தடுத்து நிறுத்த வேண்டும்.

    இளையான்குடியில் பொதுமக்கள், அரசியல் கட்சியினர், அமைப்புகளின் எதிர்ப்புகள், போராட் டங்களை மீறி நகருக்கு வெளியே பொதுமக்களுக்கு பயன் தராத வகையில் கட்டப்பட்டு வரும் பஸ் நிலைய கட்டுமான பணி களை ஆரம்ப நிலையில் உடனே நிறுத்தி தற்போ துள்ள பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்பது உள்ளி ட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

    இளையான்குடியில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் பல இடங்களில் ஆட்டோ சங்கங்கள் மற்றும் பெயர் பலகைகளை திறந்து வைத்து கட்சி கொடிகளை பொதுச் செயலாளர் ஹாருன்ரசீது ஏற்றி வைத்தார்.

    • பால் உற்பத்தியாளர்களுக்கு போனஸ் தொகையை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்.
    • 45 பயனாளிகளுக்கு ரூ. 4 லட்சத்து 85 ஆயிரத்திற்கான காசாசோலையை வழங்கப்பட்டது.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் கீழச்சிவல் பட்டி அருகே இளையாத்தங்குடியில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் பொது பேரவை கூட்டம் நடைபெற்றது. இதில் பால் உற்பத்தியாளர் களுக்கு போனஸ் தொகை மற்றும் கூடுதல் கொள்முதல் விலை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    அமைச்சர்கள் பெரியகருப்பன், செஞ்சி மஸ்தான் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் 45 பயனாளிகளுக்கு ரூ. 4 லட்சத்து 85 ஆயிரத்திற்கான காசாசோலையை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர் பால்துரை, வட்டாட்சியர் வெங்க டேஷன், மண்டல துணை வட்டாட்சியர் செல்லமுத்து, வடக்கு ஒன்றிய செயலாளர் விராமதி மாணிக்கம், துணை செயலாளர் இளங்கோ, ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்ட மைப்பு தலைவர் மாணிக்க வாசகம், மகிபாலன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பாஸ்கரன், துவார் ஊராட்சி மன்ற தலைவர் சரவணன், மற்றும் பால் உற்பத்தி யாளர்கள் கூட்டுறவு சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

    • பொதுமக்களின் தேவைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என கண்காணிப்பு அலுவலர் தெரிவித்தார்.
    • வருவாய் கோட்டாட்சியர்கள் சுகிதா (சிவகங்கை), பால்துரை (தேவகோட்டை) மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டத்தில் அனைத்துத் துறைகளின் சார்பில் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ள ப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்ப ணிகள் தொடர்பாக மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் உணவு பாதுகா ப்புத்துறை ஆணையர் லால்வேனா, அனைத்து துறை முதல்நிலை அலுவ லர்களுடன் ஆலோசனை நடத்தினார். கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமை தாங்கினார்.

    இந்த கூட்டத்தில் கண்காணிப்பு அலுவலர் பேசியதாவது:-

    சிவகங்கை மாவட்ட த்தில் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து நலத்திட்ட ங்களும், மாவட்டத்தின் கடைக்கோடி பகுதியில் வசிக்கும் மக்களுக்கும் கிடைக்கப்பெறும் வகையில், மாவட்ட நிர்வாகத்தால் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணிகள் தொடர்பாக பொதுமக்களுக்கு தேவை யான அடிப்படை வசதி களை அனைத்துப்ப குதிகளிலும் மேம்படுத்தும் வகையிலும் நடைபெற்று வரும் பல்வேறு பணிகள் தொடர்பாகவும் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒவ்வொரு துறைகளின் சார்பில் இதுவரை மேற்கொண்ட திட்டப்ப ணிகள், மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள், தேவையான நிதிநிலை தொடர்பாக அலுவலர்கள் எடுத்துரைத்து, அவைகள் தொடர்பான விவரங்களை அறிக்கை யாக சமர்ப்பிக்கலாம். அவ்வாறு மேற்கொ ள்ளப்பட்ட ஆய்வு அறிக்கைகளுடன் தங்களது துறைகளின் சார்பில் மேற்கொ ள்ளப்பட வேண்டிய பணிகள் தொடர்பாக அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்று, பொதுமக்களின் தேவைகளை நிறைவே ற்றுவதற்கான நடவடி க்கைகள் மேற்கொ ள்ளப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவராமன், வருவாய் கோட்டாட்சியர்கள் சுகிதா (சிவகங்கை), பால்துரை (தேவகோட்டை) மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    • எடையளவுகள் முத்திரையிடும் முகாம் இன்று முதல் 31-ந் தேதி வரை நடக்கிறது.
    • முத்திரை முகாமிற்கு வணிகர்கள் தாங்கள் பயன்படுத்தும் எடையளவுகளை கொண்டு வந்து மறுபரிசீலனை செய்து முத்திரையிட்டு பயனடையலாம்.

    சிவகங்கை

    சிவகங்கை தொழிலாளர் உதவி ஆணையர் ராஜ்குமார் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சட்டமுறை எடை யளவுகள் சட்டம் 2009 மற்றும் தமிழ்நாடு சட்ட முறை எடையளவுகள் (அமலாக்கம்) விதிகள் 2011-ன்படி வணிகர்கள் பயன்படுத்தும் மின்னனு தராசுகள், மேடைதராசுகள், வில் தராசுகள் ஆகியவை வருடத்திற்கு ஒருமுறையும், மற்றும் பிற மேசை தராசுகள், விட்டதராசுகள், எடைகற்கள், நீட்டல் அளவைகள் போன்றவை 2 வருடத்திற்கு ஒருமுறையும் மறுபரிசீலனை செய்து அரசு முத்திரையிட்டு பயன்படுத்தப்பட வேண்டும். அவ்வாறு முத்திரையிடாமல் வணிகர்கள் எடை யளவுகளை பயன்படுத்தும் பட்சத்தில் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்க நேரிடும்.

    வணிகர்களுக்கு உதவும் வகையில் எடையளவுகளை மறுமுத்திரையிட முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் தற்போது மதுரை கூடுதல் தொழிலாளர் ஆணையர் மற்றும் மதுரை, தொழி லாளர் இணை ஆணையரின் உத்தரவுப்படி தேவகோட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள வணிகர்கள் பயனடையும் வகையில் வணிகர்கள் பயன்படுத்தும் எடையளவுக ளை காரைக்குடி கொண்டு வந்து முத்திரை யிடுவதால் ஏற்படும் சிரமங்களை கருத்தில் கொண்டு வணிகர்களின் நலனுக்காக தேவகோட்டை பகுதியில் காரைக்குடி, முத்திரை ஆய்வாளரால் இன்று (15-ந் தேதி) முதல் வருகிற 31-ந் தேதி வரை தொழிலாளர் உதவி ஆய்வாளர் அலு வலகம், 5ஏ, மேலவயல் குளக்கால் தெரு, வெள்ளையன்ஊரணி தெற்கு, தேவகோட்டை என்ற முகவரியில் முகா மிட்டு முத்திரைப் பணி மேற்கொள்ளப்படுகிறது.

    மேற்கண்ட முத்திரை முகாமிற்கு வணிகர்கள் தாங்கள் பயன்படுத்தும் எடையளவுகளை கொண்டு வந்து மறுபரிசீலனை செய்து முத்திரையிட்டு பயனடை யலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 75 சதவீத தீக்காயங்களுடன் கடந்த 2 வாரங்களாக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் ஆபத்தான நிலையில் அர்ஜூனன் சிகிச்சை பெற்று வந்தார்.
    • பெட்ரோல் குண்டு வீச்சில் டாஸ்மாக் ஊழியர் சிகிச்சை பலனின்றி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்டம் பள்ளத்தூர் பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர். ஆட்டோ டிரைவரான இவர் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி அடிக்கடி மது குடித்தார். இதனால் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டது.

    பள்ளத்தூரில் டாஸ்மாக் கடை இருப்பதால் தான் தனது தந்தை குடிப்பதாக கருதிய ராஜசேகரின் மகன் ராஜேஷ்(வயது23) என்பவர் கடந்த 3-ந்தேதி இரவு 10 மணியளவில் பள்ளத்தூரில் உள்ள டாஸ்மாக் கடையில் பெட்ரோல் குண்டுகளை வீசினார். இந்த குண்டுகள் கடையில் வெடித்து அங்கிருந்த மதுபானங்கள், பொருட்கள் எரிந்து சேதமாகின.

    பெட்ரோல் குண்டு வீச்சின்போது கடையில் இருந்த சூப்பர்வைசர் பூமிநாதன், விற்பனையாளர் இளையான்குடி இரண்டான் குளம் கிராமத்தை சேர்ந்த அர்ஜூனன் (45) ஆகியோருக்கு தீக்காயம் ஏற்பட்டது.

    இந்த சம்பவம் தொடர்பாக பள்ளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேசை கைது செய்தனர்.

    75 சதவீத தீக்காயங்களுடன் கடந்த 2 வாரங்களாக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் ஆபத்தான நிலையில் அர்ஜூனன் சிகிச்சை பெற்று வந்தார். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை.

    இந்நிலையில் இன்று காலை அர்ஜூனன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி பள்ளத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பெட்ரோல் குண்டு வீச்சில் டாஸ்மாக் ஊழியர் சிகிச்சை பலனின்றி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. 

    • நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் காப்புக்கட்டி விரதமிருக்க தொடங்கினர்.
    • 21-ந்தேதி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடக்கிறது.

    காரைக்குடி மீனாட்சிபுரத்தில் இந்து சமய அறநிலையத்திற்குட்பட்ட பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி-பங்குனி திருவிழா சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டிற்கான விழா நேற்று முதல் கொடியேற்றம் மற்றும் காப்புக்கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

    முன்னதாக காலை கணபதி பூஜையும் பின்னர் கோவில் கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகமும் நடைபெற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து அம்பாளுக்கு காப்புக்கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் பின்னர் பால்குடம், அக்னி சட்டி எடுத்தல், பூக்குழி இறங்குதல், அலகு குத்துதல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் கையில் காப்பு கட்டி விரதம் இருக்க தொடங்கினர். நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று காப்புகட்டினர். மேலும் விழாவையொட்டி கோவில் முழுவதும் மின் விளக்கால் அலங்கரிக்கப்பட்டிருந்து.

    தினந்தோறும் காலை மற்றும் மாலை வேளைகளில் அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகம் நிகழ்ச்சி நடக்கிறது. வருகிற 21-ந்தேதி இரவு முத்தாலம்மன் கோவிலில் இருந்து பக்தர்கள் கோவில் கரகம், முளைப்பாரி, அக்னி சட்டி எடுத்தல் உள்ளிட்ட நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடக்கிறது.

    22-ந்தேதி காலை கோவில் பால்குடம், காவடி, பூக்குழி இறங்குதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அன்றைய தினம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.. 23-ந்தேதி இரவு அம்பாள் திருவீதி உலா நிகழ்ச்சியும், 24-ந்தேதி மாலை சந்தன காப்பு அலங்காரத்தில் அம்பாள் காட்சியளிக்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஞானசேகரன் தலைமையில் கோவில் செயல் அலுவலர் மகேந்திரபூபதி, கணக்கர் அழகுபாண்டி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    • தமிழகத்தில் சிறுபான்மையினரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
    • சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அமைச்சர்கள் பெரியகருப்பன், செஞ்சி மஸ்தான் பேசினர்.

    சிவகங்கை

    சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் சிறுபான்மையினர் மக்களுக்கான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் தமிழரசி, மாங்குடி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் அமைச்சர்கள் கே.ஆர்.பெரியகருப்பன், செஞ்சி மஸ்தான் ஆகியோர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவி களை வழங்கினர்.

    பின்னர் அமைச்சர் மஸ்தான் பேசியதாவது:-

    மாவட்டத்திற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட உதவும் சங்கங்கள் அமைத்து அதன்மூலம் பொது மக்களுக்கு உதவலாம் என்ற அடிப்படையிலும் மற்றும் ஒன்றிணைந்து அந்த உதவும் சங்கங்களின் பங்களிப்பு தொகையை பதிவு செய்வதன் மூலம் அரசின் சார்பில் வழங்கப்படும் அந்த தொகைக் கான 2 மடங்கு தொகையும் வழங்குவதற்கான வழிவகை யையும் முதல்-அமைச்சர் ஏற்படுத்தி உள்ளார்.

    பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் குறிப்பாக பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் புதுமைப்பெண் போன்ற திட்டங்களை அறிவித்து பெண்களின் உரிமையை நிலை நாட்டுகின்ற வகையில் திட்டங்கள் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இதேபோன்று தேவாலயங்கள், பள்ளிவாசல்கள், தர்க்காக்களை பராமரிப்பதற்காக முதற்கட்டமாக ரூ.6 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. அதன்மூலம் 77 பள்ளிவாசல்களில் பராமரிப்புப் பணிகள் தற்போது நடை பெற்று வருகிறது. தற்போது நடைபெற்ற கூட்டத்தொடரின் போது அதனை ரூ.10 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

    இதுபோன்று சிறுபான்மை யினர் மக்களின் வாழ்வாதா ரத்தை மேம்படுத்தும் வகையில் அவர்களுக்கான திட்டங்கள் தமிழகத்தில் செயல்படுத் தப்பட்டு, அவர்களின் நலன் காக்கும் அரசாக தி.மு.க. அரசு திகழ்ந்து வருகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் அமைச்சர் பெரியகருப்பன் பேசியதாவது:-

    கருணாநிதி வழியில் மக்களுக்கான ஆட்சியை தமிழகத்தில் வழங்கிக் கொண்டிருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து தரப்பு மக்களையும் பாதுகாத்து, குறிப்பாக சிறுபான்மை யினர் மக்களின் நலன் காக்கின்ற வகையில் அதற்கான திட்டங்களை அறிவித்து அவர்களின் நலனை காத்து வருகிறார்.

    குறிப்பாக தமிழகத்தில் சட்டம், ஒழுங்கை நிலைநாட்டும் வகையில் சிறப்பான நிர்வாகம் முதல்-அமைச்சர் தலைமையில் அரசில் நடைபெற்று கொண்டி ருக்கிறது. தமிழக மக்களின் பொருளாதாரம் மேம்பாடு அடையும் வகையிலும், அமை தியை நிலைநாட்டுகின்ற வகை யிலும் ஒரு சிறப்பான நிர்வாகம் தமிழகத்தில் நடைபெற்று வருகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த விழாவில் மொத்தம் 138 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 34 லட்சத்து 84 ஆயிரத்து 940 மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் வழங்கினர்.

    இதில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், கோட்டாட்சியர் சுகிதா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர்-மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் தனலட்சுமி, ஆவின் பால்வளத்தலைவர் சேங்கைமாறன், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் சரஸ்வதி, சிவகங்கை நகர்மன்றத் தலைவர் துரைஆனந்த், காஞ்சிரங்கால் ஊராட்சி மன்ற தலை வர் மணிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • எடப்பாடி பழனிசாமி மீது போடப்பட்ட வழக்கில் தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • சிவகங்கையில் நடந்த ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க எடப்பாடி பழனிசாமி மதுரை வந்தார்.

    சிவகங்கை

    சிவகங்கையில் நடந்த ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க சென்னையில் இருந்து விமானம் மூலம் முன்னாள் முதல்-அ மைச்சர் எடப்பாடி பழனி சாமி கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரை வந்தார். அப்போது அ.ம.மு.க. பிரமுகர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி மற்றும் சிலர்மீது மதுரை அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தி.மு.க. அரசை கண்டித்தும் சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன்பு அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் தி.மு.க. அரசை கண்டித்து கோஷமிட்டனர்.

    இதில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் நாகராஜன் குணசேகரன், நகரசெயலாளர் ராஜா, ஒன்றிய செயலாளர் சேவியர்தாஸ், கருணாகரன், ஸ்டீபன் அருள்சாமி, சிவாஜி, கோபி, செல்வமணி, ஜெகதீஸ்வரன், பழனிசாமி, ஸ்ரீதர், சோனைரவி, மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்கள் பில்லுர் ராமசாமி மாரிமுத்து, கோமதிதேவராஜ் மற்றும் நாலுகோட்டை ஊராட்சி மன்றதலைவர் மணிகண்டன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • ஏப்ரல் 5-ந்தேதி பொங்கல் வைபவம் நிகழ்ச்சி நடக்கிறது.
    • 8-ந்தேதி காலை தீர்த்தவாரி நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது.

    இளையான்குடி அருகே உள்ளது தாயமங்கலம். இங்கு இந்து சமய அறநிலையத்திற்கு உட்பட்ட முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்தாண்டிற்கான திருவிழா வருகிற 29-ந் தேதி காப்புக்கட்டுதல் மற்றும் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முன்னதாக அன்று காலை 10.25 மணிக்கு நவசக்தி ஹோமத்துடன் விழா தொடங்கி மாலை லட்சார்ச்சனை விழாவும், இரவு 10 மணிக்கு ஸ்ரீவிக்னேஷ்வரர் பூஜை, துவஜாரோகனம் மற்றும் கொடியேற்றத்துடன் விழா தொடங்குகிறது. விழாவையொட்டி தினந்தோறும் இரவு சிம்ம வாகனம், குதிரை வாகனம், காமதேனு வாகனம், அன்ன வாகனம், பூதவாகனம் ஆகிய வாகனங்களில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி காட்சியளிக்கிறார்.

    விழாவின் சிகர நிகழ்ச்சியாக அடுத்த மாதம் 5-ந் தேதி பொங்கல் வைபவம் நிகழ்ச்சி நடக்கிறது. விழாவின் போது பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் வந்து கோவிலை சுற்றி ஆங்காங்கே பொங்கல் வைத்தும், ஆடு, கோழிகளை பலியிட்டும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவர். மறுநாள் 6-ந் தேதி இரவு 7.15 மணிக்கு மின்சார தீப அலங்காரத்துடன் தேரோட்டம் நிகழ்ச்சி நடக்கிறது. 7-ந் தேதி காலையில் பக்தர்கள் பால்குடம் மற்றும் அக்னி சட்டி எடுத்தல், அலகு குத்துதல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சியும், மாலையில் ஊஞ்சல் உற்சவமும், இரவு பூப்பல்லக்கு நிகழ்ச்சியும் நடக்கிறது. 8-ந் தேதி காலை தீர்த்தவாரி நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் மு.வெங்கடேசன் செட்டியார் செய்து வருகிறார்.

    • தேவகோட்டை அருகே உள்ள கண்டதேவி கிராமத்தில் மாட்டுவண்டி பந்தயம் நடந்தது.
    • பந்தயத்தை பார்ப்பதற்காக ஊரணியை சுற்றிலும் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டிருந்தனர்.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள கண்டதேவி கிராமத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அ.ம.மு.க. சார்பில் மாட்டு வண்டி பந்தயம் நடந்தது. பெரிய மாடு, சின்ன மாடு என 2 பிரிவுகளாக நடந்த போட்டி கண்ட தேவி ஊரணியை சுற்றி சுற்றுப்பந்தயமாக நடந்தது.

    இதில் சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களில் இருந்து 38 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. பெரிய மாட்டு வண்டிக்கு ஊரணியை 7 சுற்றுகளும், சின்ன மாட்டு வண்டிக்கு 5 சுற்றுகளும் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

    பெரிய மாட்டு வண்டி பந்தயத்தில் 16 ஜோடி வண்டிகள் கலந்து கொண்டதில் முதலாவதாக மதுரை மாவட்டம் வெள்ளலூர் நாடு பர்மா காளி, 2-வதாக புதுக்கோட்டை மாவட்டம் பரளி கணேஷ், 3-வதாக சிவகங்கை மாவட்டம் தானாவயல் வெங்கடாசலம், 4-வதாக சிவகங்கை மாவட்டம் சாத்திகோட்டை கருப்பையா, 5-வதாக தினையாகுடி சிவா மாடுகள் வெற்றி பெற்றன.

    சின்ன மாட்டுவண்டி பந்தயத்தில் 22 ஜோடிகளை 2 சுற்றுக்களாக பிரிக்கப்பட்டது. முதல் சுற்றில் முதலாவதாக தேவகோட்டை குறிஞ்சி மளிகை ஸ்டோர், 2-வதாக தேவகோட்டை மாணிக்கம் செட்டியார், 3-வதாக மாத்தூர் குமார், 2-வது சுற்றில் முதலாவதாக துறை யனூர், 2-வதாக மேலூர் சூரக்குண்டு, 3-வதாக பீர்க்கலை காடு மாடுகள் வெற்றி பெற்றன.

    வெற்றிபெற்ற மாடுகளுக்கு வேட்டி-துண்டு, மாலைகள் அணிவித்து ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. பந்தயத்தை பார்ப்பதற்காக ஊரணியை சுற்றிலும் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டிருந்தனர்.

    ×