என் மலர்
சிவகங்கை
- முன்னாள் ராணுவத்தினர் குறைதீர்க்கும் முகாம் நடக்கிறது.
- மனுவாக நேரடியாக வழங்கி தீர்வு பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட முன்னாள் படைவீரர்கள், படை பணியாற்றுவோர், அவர்களை சார்ந்தோருக்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாம் சிவகங்கை கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் வருகிற 29-ந் தேதி (புதன்கிழமை) காலை 10 மணிக்கு நடக்கிறது. கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமை தாங்குகிறார். இதில் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள், படை பணியாற்றுவோர், அவர்களை சார்ந்தோர் பங்கேற்று குறைகளை மனுவாக நேரடியாக வழங்கி தீர்வு பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
- பெட்ரோல் குண்டு வீச்சில் இறந்த டாஸ்மாக் ஊழியர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதி உதவியை அமைச்சர் வழங்கினார்.
- முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முருகேசன், தகவல் தொழில்நுட்ப அணி அன்பரசன், கண்ணன் மற்றும் பலர் உடனிருந்தனர்.
இளையான்குடி
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள இண்டங்குளம் கிராமத்தைச் சேர்ந்த அர்ச்சுனன் என்பவர் காரைக்குடி டாஸ்மாக் மதுபான கடையில் பணிபுரிந்தார். அப்போது கடையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில் தீக்காயமடைந்த அர்ச்சுனன் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி இறந்த அர்ச்சுனனின் மனைவி மற்றும் 3 பெண் குழந்தைகளுக்கு அமைச்சர் பெரியகருப்பன் நேரில் சென்று ஆறுதல் கூறினார். அர்ச்சுனன் படத்திற்கு மாலை மரியாதை செலுத்தினார். தமிழக அரசு வழங்கிய ரூ.10 லட்சத்திற்கான காசோ லையை அர்்ச்சுனன் குடும்பத்தினரிடம் வழங்கினார்.
மேலும் முதலமைச்சர் அறிவிப்பின்படி அர்ச்சுனன் குடும்பத்தில் ஒருவருக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்தார்.
இந்த நிகழ்வின்போது கலெக்டர் மதுசூதன் ரெட்டி, மானாமதுரை எம்.எல்.ஏ. தமிழரசி, முன்னாள் எம்.எல்.ஏ. சுப.மதியரசன், இளையான்குடி பேரூராட்சி தலைவர் நஜுமுதீன், ஒன்றிய செயலாளர்கள் தமிழ்மாறன், வெங்கட்ராமன், கூட்டுறவு சங்க தலைவர் தமிழரசன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முருகேசன், தகவல் தொழில்நுட்ப அணி அன்பரசன், கண்ணன் மற்றும் பலர் உடனிருந்தனர்.
- ஒரே குடும்பத்தை ேசர்ந்த 3 குழந்தைகளும் பலியானதால் கிராமம் சோகத்தில் மூழ்கியது.
- குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிங்கம்புணரி
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா உலகம்பட்டி ஊராட்சி படமிஞ்சி கிராமத்தை சேர்ந்தவர்கள் லட்சுமணன், நாகராஜன். இவர்கள் இருவரும் சகோதரர்கள். இதில் லட்சுமணன் சமீபத்தில் இறந்துவிட்டார். அவரது மனைவி தனம் குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார். இவர்க ளின் குழந்தைகள் மகேந்தி ரன் (7), சந்தோஷ்(4), நாகராஜன் தம்பதியின் மகள் யாமினி என்ற மீனாட்சி (10).
இவர்களின் பெற்றோர் நேற்று வேலைக்கு சென்று விட்ட நிலையில் 3 குழந்தை களும் அருகில் உள்ள செட்டி ஊரணியில் குளித்த னர். அப்போது அடுத்தடுத்து 3 குழந்தைகள் தண்ணீரில் மூழ்கி விட்டனர்.
இந்த நிலையில் வீடு திரும்பிய பெற்றோர்கள் குழந்தைகளை தேடினர். அப்போது ஊரணியில் மூழ்கி 3 குழந்தைகளும் பலியானது தெரியவந்தது. பின்னர் பலியான 3 குழந்தைகளின் உடல்களும் மீட்கப்பட்டன.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் உலகம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பலியான 3 குழந்தைகளின் உடல்களையும் கைப்பற்றி பொன்னமராவதியில் உள்ள வலையப்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் 3 குழந்தைகளின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஒரே குடும்பத்தை சேர்ந்த அண்ணன்-தம்பியின் குழந்தைகள் 3 பேர் பலியான சம்பவம் படமிஞ்சி கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உளளது.
பாதிக்கப்பட்ட குழந்தை களின் குடும்பங்களுக்கு அரசு நிதி உதவி வழங்குவ தோடு பாதிக்கப்பட்ட குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகளின் சர்வதேச மதிப்பு ரூ.35 லட்சமாகும்.
- கைதான இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
தேவகோட்டை:
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள கட்டானியங்கல் கண்மாய் பகுதியில் டி.ஆலங்குடியை சேர்ந்த மணிகண்டன் (வயது48) என்பவருக்குச் சொந்தமான தோப்பு உள்ளது. இங்கு ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி, நம்புதாளை, காரங்காடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கடல் அட்டைகளை கடத்தி வந்து பதுக்கி வைத்திருப்பதாக ராமநாதபுரம் ஒருங்கிணைந்த புலனாய்வு போலீசுக்கு தகவல் கிடைத்தது.
போலீசார் அந்த பகுதியில் சோதனை செய்தனர். அப்போது 700 கிலோ கடல் அட்டைகளை சிலர் பதப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர். கடல் அட்டைகளை பறிமுதல் செய்த போலீசார் ராமநாதபுரம் மாவட்டம் செக்கன்திடலைச் சேர்ந்த கார்த்திக்(24), சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலைச் சேர்ந்த பூமிநாதன்(53) ஆகியோரை கைது செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகளின் சர்வதேச மதிப்பு ரூ.35 லட்சமாகும். இதை சிவகங்கை வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு அழிக்கப்பட்டன. கைதான இருவரிடம் விசாரணை நடத்தியதில் வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்காக கடல் அட்டைகளை தயார்படுத்தியது தெரியவந்தது.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர். கைதான இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
- சிவகங்கை நகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
- ரூ.80 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் நகர்நல மையத்தின் கட்டுமான நிலை குறித்தும் ஆய்வு செய்தார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் கட்டப்பட உள்ள கூடுதல் கட்டிடத்திற்கான இடம் தேர்வு செய்தல் பணி மற்றும் சிவகங்கை ஊராட்சி ஒன்றியம் சிவகங்கை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து, மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சிவகங்கை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட காஞ்சிரங்கால் ஊராட்சி யில் தோட்டக்கலைத்துறை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் கலைஞ ரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டம் 2021-22ன் கீழ் காளான் வளர்ப்புக்கூடம் அமைப்பதற்கென ரூ.1 லட்சம் மானியத்தொகை பெற்று சிப்பி காளான் பண்ணை வைத்துள்ள பயனாளியை நேரில் சந்தித்து, திட்டச் செயல் பாடுகள் மற்றும் பயன்கள் குறித்து மாவட்ட கலெக்டர் கேட்டறிந்து, விற்பனையை மேலும் விரிவுபடுத்து வதற்கென துறை சார்ந்த அலுவலர்களை தொடர்பு கொண்டு பயன்பெறும்படி பயனாளியிடம் கேட்டுக்கொண்டார்.
மேலும் காஞ்சிரங்கால் ஊராட்சிக்குட்பட்ட காமராஜர் காலனியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம், குழந்தைகளின் எடை, உயரம் மற்றும் செயல்பாடு கள் குறித்து அவர் ஆய்வு செய்தார்.
அதனைத்தொடர்ந்து சிவகங்கை நகராட்சிக் குட்பட்ட பகுதியில் ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் நகர்நல மையத்தின் கட்டுமான நிலை குறித்து ஆய்வு செய்தார். அதனை தரமான முறையில் விரைந்து கட்டிட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
சிவகங்கையை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து பிரசவத்திற்கென சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கர்ப்பிணி பெண்கள் வருகை புரிந்து அவர்களுக்கு தரமான சிகிச்சை அளிக்கப்பட்டு, அதன் மூலம் சராசரியாக மாதந்தோறும் 400 முதல் 500 பிரசவங்கள் நடை பெற்று, தாய் சேய் நலன் காக்கப்பட்டு வருகிறது.
தற்போது செயல்பட்டு வரும் தாய் சேய் நல மையக் கட்டிடத்தை தொடர்ந்து, அதனை விரிவுப்படுத்திடும் நோக்கில் அவ்வளாகத்தில் ரூ.10.50 கோடி மதிப்பீட்டில் புதிதாக தாய் சேய் நலன் கட்டிடம் கட்டுவதற்கென இடம் தேர்வு செய்தல் பணி தொடர்பாகவும் மற்றும் ரூ.20 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட உள்ள அவசர விபத்து மற்றும் சிகிச்சை மைய கட்டிடத்திற்கான இடங்கள் தேர்வு செய்தல் பணிகள் தொடர்பாகவும் கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வுகளின்போது சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் ரேவதி, பொதுப் பணித்துறை செயற் பொறியாளர் (கட்டிடம்) செந்தில்குமார், துணை இயக்குநர்கள் விஜய்சந்திரன் (பொது சுகாதாரம்), அழகுமலை (தோட்டக் கலைத்துறை), சிவகங்கை நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) பாண்டீஸ்வரி மற்றும் பலர் உடன் இருந்தனர்.
- கடந்த ஒரு ஆண்டாக ரவிச்சந்திரனை கண்காணித்து இந்த கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி உள்ளனர்.
- ஹவாலா பணத்தை கொள்ளையடிப்பதை வாடிக்கையாக வைத்திருந்ததாக தெரிகிறது.
காரைக்குடி:
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி முத்துப்பட்டிணம் சோமு தெருவைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 50). இவர் காரைக்குடி நகைக்கடை பஜாரில் நகைக்கடை வைத்திருப்பவர்களிடம் 1 கிலோ 200 கிராம் தங்க கட்டிகளை வாங்கிக்கொண்டு கடந்த 11-ந்தேதி சென்னை சென்றார்.
அந்த தங்க கட்டிகளை சென்னை சவுகார்கேட்டையில் உள் நகை தொழிற்சாலையில் கொடுத்தார். அப்போது ஏற்கனவே அவர்கள் தயார் செய்து வைத்திருந்த தங்க நகைகள் மற்றும் ரூ. 2 கோடியே 2 லட்சம் ஆகியவற்றை ரவிச்சந்திரன் வாங்கிக்கொண்டு சென்னையில் இருந்து தனியார் பஸ்சில் புறப்பட்டார். அவர் 12-ந்தேதி அதிகாலை காரைக்குடி கழனிவாசல் பஸ் நிலையம் வந்தார்.
அப்போது அங்கு காரில் வந்த 3 பேர் ரவிச்சந்திரனை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றினர். பின்னர் காட்டுப்பகுதிக்கு சென்று அவர் வைத்திருந்த தங்க நகை, வெள்ளி பொருட்கள் மற்றும் ரொக்கப்பணம் ஆகியவற்றை பறித்து கொண்டு கீழே இறக்கி விட்டு விட்டு தப்பி சென்று விட்டனர்.
இதுகுறித்து காரைக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை பிடிக்க தென் மண்டல ஐ.ஜி. அஸ்ராகார்க் உத்தரவிட்டார். அதன்பேரில் ராமநாதபுரம் டி.ஐ.ஜி. துரை, சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் மேற்பார்வையில், சிவகங்கை சைபர் கிரைம் கூடுதல் சூப்பிரண்டு நமச்சிவாயம், காரைக்குடி டி.எஸ்.பி. ஸ்டாலின் உள்ளிட்டோர் தலைமையில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
இந்த தனிப்படையினர் நடத்திய விசாரணையில், ரவிச்சந்திரனை கடத்திய கார், சென்னை அமைந்த கரையை சேர்ந்த சூரியா என்ற நாகேந்திரன் (57) என்பவர் வாடகைக்கு எடுத்து சென்ற கார் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த காரின் பதிவு எண் மாற்றப்பட்டபோதிலும், அதில் ஒட்டப்பட்டிருந்த ஸ்டிக்கர் மூலம் போலீசார் கண்டுபிடித்தனர். மேலும் அந்த காரை கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையை சேர்ந்த பால்ராஜ் என்பவர் ஓட்டிச்சென்றதும் தெரிய வந்தது.
தனிப்படை போலீசார் நாகேந்திரனை பிடித்து விசாரணை நடத்தியபோது அவனது தலைமையில் இந்த கொள்ளை சம்பவம் அரங்கேறியது தெரி யவந்தது.
இதையடுத்து நாகேந்திரன், பால்ராஜ், விஜயகுமார், சாமுவேல், சென்னை சிந்தாரிபேட்டையை சேர்ந்த சதீஷ்குமார், சூளைமேடு பெருமாள் ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.2 கோடியே 2 லட்சம் ரொக்கம், 1 கிலோ 471 கிராம் எடையுள்ள தங்க நகைகள், 1 கிலோ 90 கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய சரவணன் என்பவரை தனிப்படை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட நாகேந்திரன், ஊர்க்காவல் படை கமாண்டராக பணிபுரிந்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர். அதேபோல் சதீஷ்குமாரும் ஊர்க்காவல் படையினர் பணிபுரிந்து தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டவர். சாமுவேல் தற்போது சென்னையில் ஊர்க்காவல் படை வீரராக பணியாற்றி வருகிறார்.
இந்த கும்பல் கடந்த ஒரு ஆண்டாக ரவிச்சந்திரனை கண்காணித்து இந்த கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி உள்ளனர்.
இவர்கள் ஹவாலா பணத்தை கொள்ளையடிப்பதை வாடிக்கையாக வைத்திருந்ததாக தெரிகிறது.
ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரூ.1½ கோடி ஹவாலா பணத்தை கொள்ளையடித்துள்ளனர். இதில் ரூ.75 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். பிடிப்பட்ட கொள்ளையர்களிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 23-ந்தேதி அம்பாள் திரு வீதி உலா நடக்கிறது.
- இரவு 10 மணிக்கு தொடங்கி 12.30 மணிக்கு கோவிலில் வந்து நேர்த்திக்கடனை செலுத்தினார்.
காரைக்குடி மீனாட்சிபுரத்தில் இந்து சமய அறநிலையத்திற்குட்பட்ட பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் மாசி-பங்குனி திருவிழா கடந்த 14-ந்தேதி கொடியேற்றம் மற்றும் காப்புக்கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதையொட்டி தினந்தோறும் அம்பாளுக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. வருகிற 21-ந்தேதி இரவு முத்தாலம்மன் கோவிலில் இருந்து கோவில் கரகம் மற்றும் பக்தர்கள் மது, முளைப்பாரி எடுக்கும் நிகழ்ச்சியும், 22-ந் தேதி பால்குடம், காவடி மற்றும் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியும், மாலையில் கோவில் கரகம், மது மற்றும் முளைப்பாரி புறப்படுதல் நிகழ்ச்சியும் இரவு காப்பு பெருக்குதல் நிகழ்ச்சியும் நடக்கிறது.
23-ந்தேதி இரவு அம்பாள் திரு வீதி உலா, மறுநாள் மாலை சந்தனகாப்பு அலங்காரம் நிகழ்ச்சியும் நடக்கிறது. விழாவையொட்டி காப்புகட்டி பல்வேறு நேர்த்திக்கடன் எடுக்க உள்ள பக்தர்கள் தினந்தோறும் காலை மற்றும் இரவு நேரங்களில் கோவில் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இரவு கும்மி கொட்டுதல், கலை நிகழ்ச்சியும் நடந்து வருகிறது. இதுதவிர காலை மற்றும் இரவு நேரங்களில் பக்தர்கள் பால்குடம் எடுத்தல், அலகு குத்துதல், அக்னி சட்டி எடுத்தல், கும்பிடு தானம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன்களை செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு பக்தர் ஒருவர் முத்தாலம்மன் கோவிலில் இருந்து முத்துமாரியம்மன் கோவில் வரை சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவிற்கு அங்க பிரதட்சணம் மேற்கொண்டார். இரவு 10 மணிக்கு தொடங்கி 12.30 மணிக்கு கோவிலில் வந்து நேர்த்திக்கடனை செலுத்தினார்.
கோவில் திருவிழா நடைபெற்று வருவதையொட்டி தற்போது காரைக்குடி நகர் முழுவதும் பக்தர்கள் மஞ்சள் வேட்டி மற்றும் மஞ்சள் புடவையுடன் வலம் வருகின்றனர். விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஞானசேகரன், கோவில் செயல் அலுவலர் மகேந்திரபூபதி மற்றும் கோவில் கணக்கர் அழகுபாண்டி ஆகியோர் செய்து வருகின்றனர்.
- இளையான்குடி யூனியனில் ஊராட்சி மன்ற புதிய கட்டிடங்களை தமிழரசி எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
- அங்கன்வாடி, பள்ளி சமையலறை கட்டிடங்களையும் திறந்து வைத்தார்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஊராட்சி ஒன்றியத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஊராட்சி மன்ற கட்டிடங்கள் உள்ளிட்ட கட்டிடங்கள் திறப்பு விழா நடந்தது.
எஸ்.காரைக்குடி ஊராட்சியில் ரூ.28.56 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஊராட்சி மன்ற கட்டிடம் திறப்பு விழாவுக்கு மானாமதுரை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான தமிழரசி தலைமை தாங்கி கட்டிட த்தை திறந்து வைத்தார்.
ஊராட்சி மன்ற தலைவர் குழந்தை பாண்டியன் வரவேற்றார். இதில் முன்னாள் எம்.எல்.ஏ. சுப.மதியரசன், மேற்கு ஒன்றிய செயலாளர் வெங்கட் ராமன், கண்ணமங்கலம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் சுப. தமிழரசன், வட்டார வளர்ச்சி அலுவலர் ரஜினிதேவி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பாண்டி, ஊராட்சி துணைத் தலைவர் முத்தையா, தி.மு.க. விவசாய அணி காளிமுத்து, தெற்கு ஒன்றிய துணை செயலாளர் கருணாகரன், மாவட்ட பிரதிநிதிகள் சாரதி, அய்யாச்சாமி, வடக்கு சந்தனூர் கிளைச் செயலாளர் சடைமுனி, அவைத் தலைவர் சுப்பிரமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதைத்தொடர்ந்து தமிழரசி எம்.எல்.ஏ. மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.
பின்னர் முனைவென்றி யில் புதியஊராட்சி மன்றக் கட்டிடம், விஜயன்குடி, மெய்யனேந்தல் ஆகிய கிராமங்களில் அங்கன்வாடி, பள்ளி சமையலறை கட்டிடங்களையும் தமிழரசி எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
- தயாபுரம் முத்துமாரியம்மன் கோவிலில் பங்குனி பொங்கல் விழா தொடங்கியது.
- வருகிற 28ந்தேதி சிறப்பு அன்னதானம் நடைபெறுகிறது.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை-சிவகங்கை ரோட்டில் உள்ள காட்டுடை குளத்தில் உள்ளபிரசித்தி பெற்ற தயாபுரம் முத்து மாரியம்மன் கோவிலில் 41-ம் ஆண்டு பங்குனி பொங்கல் விழா நேற்று (வியாழக்கிழமை) காலை காப்புகட்டுதலுடன் தொடங்கியது.
இந்த திருவிழா 10 நாட்கள் நடைபெறும். முக்கிய நிகழ்ச்சி யான பங்குனி பொங்கல் விழா மற்றும் தீச்சட்டிகள், பால்குடங்கள், பூ கரகம் எடுக்கும் நிகழ்ச்சி வருகிற 24-ந்தேதி நடைபெறுகிறது.
அன்று கோவில் பூசாரி சுப்பிரமணியன் மற்றும் பக்தர்கள் மானாமதுரை வைகை ஆற்றில் இருந்து பூ கரகம், தீச்சட்டிகள், பால்குடம் எடுத்து முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக வலம் வந்து கோவில் முன்பு பூக்குழி இறங்குவர். வருகிற 28ந்தேதி சிறப்பு அன்னதானம் நடைபெறுகிறது.
பக்தர்கள் சார்பில் தினமும் மண்டகப் படிகளும், கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை கோவில் டிஸ்டிகள் சுப்பிரமணியன், நாகராஜன், முருகன் ஆகியோர் செய்து வருகின்றனர்.
- இளையான்குடி அருகே பெண் கவுன்சிலரின் பெயர் இல்லாததால் கல்வெட்டு உடைத்து நொறுக்கப்பட்டது.
- சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஒன்றியத்தில் சமையலறை கட்டிட திறப்பு விழா நடந்தது.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஒன்றியம் விஜயன்குடி கிராமத்தில் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் சமையலறைக் கட்டிட திறப்பு விழா நடந்தது. இதில் மானாமதுரை எம்.எல்.ஏ. தமிழரசி பங்கேற்று சமையலறை கட்டிடத்தை திறந்து வைத்தார்.
விழா தொடங்குவதற்கு முன்பு அந்த கட்டிடம் அமைந்துள்ள பகுதிக்கு வந்த அ.தி.மு.க. மாவட்ட கவுன்சிலர் மகேஸ்வரியின் கணவர் செல்வராஜ் விழா கல்வெட்டில் மனைவி பெயர் இல்லாததைக்கண்டு ஆத்திரம் அடைந்தார்.
அதன் பின்னர் அவர் அந்த கல்வெட்டை உடைத்து நொறுக்கினார். இதுகுறித்து விஜயன்குடி ஊராட்சி மன்ற தலைவர் மாரி லோகராஜ் இளையான்குடி போலீசில் புகார் செய்தார். போலீசார் செல்வராஜ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சிவகங்கை மாவட்டத்தில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட உள்ளது.
- இந்த தகவலை கலெக்டர் மதுசூதன் ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
உலக தண்ணீர் தினமான வருகிற 22-ந்தேதி அன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்தப்பட வேண்டும் என தமிழக அரசால் ஆணையிடப்பட்டு உள்ளது. அதன்படி கிராம சபை கூட்டத்தினை ஊராட்சியின் எல்லைக்குட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையை பின்பற்றி, உலக தண்ணீர் தினமான 22-ந்தேதி அன்று காலை 11 மணிக்கு அரசாணையில் குறிப்பிட்டுள்ளவாறு கிராமசபை கூட்டம் நடத்தப்பட உள்ளது.
அன்றைய தினம் நடை பெறும் கிராம சபை கூட்டத்தில் அந்த ஊராட்சியில் உலக தண்ணீர் தினத்தின் கருப்பொருளினை பற்றி விவாதிக்கவும், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதிக்கவும், கிராம ஊராட்சி தணிக்கை அறிக்கை, சுத்தமான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது குறித்து விவா தித்தல்.
அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட தேர்வு செய்யப்பட்ட பணிகளின் முன்னேற்ற விபரம், கிராம வளர்ச்சி திட்டம் 2023-2024 தூய்மை பாரத இயக்க தனிநபர் சுகாதார விழிப்புணர்வு ஏற்படுத்துதல், ஜல் ஜீவன் இயக்கம் ஆகிய கூட்டப்பொருட்கள் இந்த கிராம சபை கூட்டத்தில் விவாதிக் கப்பட உள்ளது. இந்த கிராமசபை கூட்டத்தில்
- குறைந்தபட்ச ஆதார விலையில் தேங்காய் கொப்பரையை அரசே கொள்முதல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
- இதற்கான கொள்முதல் விலை கிலோ ஒன்றுக்கு ரூ.108.60 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் விவசாய உற்பத்தியை அதிகரிக்கவும், விவசாயிகள் தங்கள் விளை பொருட்களுக்கு நல்ல விலை பெறுவதற்கும் தமிழ்நாடு அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. தற்போது, தேங்காய் கொப்பரைகளின் விலை குறைந்துள்ளதால் தென்னை விவசாயிகளுக்கு உதவும் வகையில் விலை ஆதரவுத் திட்டத்தில் குறைந்தபட்ச ஆதார விலையில் தேங்காய் கொப்பரையை அரசே கொள்முதல் செய்ய முடிவு செய்துள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் தென்னை சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு நல்ல வருமானம் கிடைக்கும் வகையில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை மூலம் கொப்பரை கொள்முதல் செய்யப்படுகிறது.
மத்திய அரசின் விலை ஆதரவுத் திட்டத்தின் கீழ் தென்னை விவசாயிகளிடம் இருந்து தேங்காய் கொப்பரை கொள்முதல் செய்ய சிவகங்கை மாவட்டத்திற்கு அனுமதி மற்றும் இலக்கீட்டை தமிழக அரசு நிர்ணயித்துள்ளது.
இதன்படி சிவகங்கை விற்பனைக் குழு விற்குட்பட்ட சிங்கம்புணரி ஒழுங்குமுறை விற்ப னைக்கூடத்தில் 400 மெட்ரிக் டன், சிவகங்கை ஒழுங்குமுறை விற்ப னைக்கூடத்தில் 100 மெட்ரிக் டன், திருப்புவனம் ஒழுங்குமுறை விற்ப னைக்கூடத்தில் 50 மெட்ரிக் டன் என மொத்தம் 550 மெட்ரிக் டன் அரவைக் கொப்பரை கொள்முதல் செய்யப்பட உள்ளது.
இதற்கான கொள்முதல் விலை கிலோ ஒன்றுக்கு ரூ.108.60 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளால் வழங்கப்பட வேண்டிய அரவைக் கொப்பரையின் தரம் அரசால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் ஈரப்பதம் 6 சதவீதத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
வைக்கோல், தூசு, நார் போன்ற அயல் பொருட்கள் அதிக பட்சம் 1 சதவீதம் மட்டுமே அனுமதிக்கப்படும். பூஞ்சாணம் மற்றும் கருமை நிறம் கொண்ட கொப்பரை, சுருக்கம் கொண்ட கொப்பரை மற்றும் சில்லு கொப்பரை ஆகியவை அதிகபட்சம் 10 சதவீதம் மட்டுமே இருக்கலாம்.
விவசாயிகள் தங்களது சிட்டா, பயிர்சாகுபடி அடங்கல், ஆதார் நகல் மற்றும் வங்கிக்கணக்கு புத்தக விபர நகல்களுடன் அருகாமையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் பதிவு செய்து கொப்பரையை ஒப்படைக்கலாம்.
அலுவலர்களால் தர ஆய்வு செய்து தேர்வு செய்யப்பட்ட கொப்பரை எடையிடப்பட்டு அதற்கான விலை அவர்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். இந்த கொள்முதல் பணி 1.4.2023 முதல் 30.9.2023 வரை மேற்கொள்ளப்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்ட தென்னை விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்களிடம் உள்ள கொப்பரையை சிங்கம்புணரி, திருப்புவனம் மற்றும் சிவகங்கை ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்களில் உரிய ஆவணங்களுடன் பதிவு செய்து விற்று பயனடையலாம்.
இது குறித்த தகவல்களை பெறுவதற்கு சிங்கம்புணரி- 97862 69851, திருப்புவனம்- 99447 66326 , சிவகங்கை- 70107 92414 எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






